MaduraiV.Santanam, Freedom Fighter and News Editor Dinamani News paper, , passed away on the Independence Day 15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.
This is part two.
ஸ்வாமிஜி கிருஷ்ணாஜியுடனான தொடர்பு மிக நெருக்கமானது சந்தானம் குடும்பத்தினருக்கு.
இதனால் அடிக்கடி அதிசயங்களையும் அற்புதங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது.
சிலவற்றை இங்கு பார்ப்போம். நூற்றுக்கணக்கான சம்பவங்களில் எடுத்துக்காட்டுகளாக உள்ளவை இவை.
ஸ்வாமிஜி மதுரைக்கு விஜயம் செய்யும் போது அங்குள்ள பக்தர்களின் வீட்டில் அதிகாலையில் கணபதி ஹோமம் செய்வது வழக்கம்.
இந்த வகையில் எங்கள் வீட்டிலும் கணபதி ஹோமம் நடைபெற்றது.
ஸ்வாமிஜிக்கு எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ஹோம சமயத்தில் இருக்க வேண்டும் என்பது சங்கல்பம், ஆனால் ஒரு நண்பர் ஹோமம் நடப்பதை அறிந்து கொண்டு நிச்சயம் நான் வந்து விடுவேன் என்றார்.
ஹோம தினத்தன்று தீபாராதனை முடிந்தது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அந்த நண்பர் அரக்க பரக்க ஓடி வந்தார். கார் மக்கர் செய்து விட்டது நான் என்ன செய்வேன் என்றார் அவர்.
சின்ன சின்ன விஷயங்களிலில் கூட ஸ்வாமிஜியின் வாக்கு எப்படி பலிக்கும் என்பதைப் பேசுவது எங்களது அன்றாட வாடிக்கை ஆனது.
மதுரை கோட்ஸில் உள்ள மிகப் பெரிய அதிகாரிகள் ஸ்வாமிஜியின் பக்தர்கள் திரு எம்.கே இதில் முக்கியமானவர். அடுத்து சத்தியமூர்த்தியும் மதுரை கோட்ஸ் பெரிய அதிகாரி. இவர்கள் வீட்டில் நடக்கும் கணபதி ஹோமங்களுக்கு தவறாமல் சென்று விடுவோம்.
அடுத்து மதுரை கோட்ஸில் டாக்டராக இருந்தவர் ராமாராவ். இவரது மனைவி சாவித்திரி. இவர் கேரளாவில் அப்போது லேபர் மினிஸ்டராக இருந்த செல்வாக்கு மிக்க வி.வி.கிரியின் புதல்வி.
இவர்கள் அனைவருடனும் நல்ல நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.
சாவித்திரியின் தந்தையான வி.வி.கிரி ஸ்வாமிஜியின் அத்யந்த பக்தர்.
ஸ்வாமிஜி அவரிடம், “இதை விட பெரிய பதவி கிடைக்கும்” என்றார்.
இதைப் பற்றிய அன்றாட டிஸ்கஷனில் என்ன பதவியாக இருக்கும் என்று பேசுவது எங்களின் வழக்கம். அவர் கேரள கவர்னராக ஆனார்.
எங்கள் அனைவருக்கும் சந்தோஷம்.
“இல்லை, இன்னும் பெரிய பதவி கிடைக்கும்” என்றார் ஸ்வாமிஜி .V Santanam with Swamiji Krishna
எங்களுக்கு ஆச்சரியம்! இதை விட பெரிய பதவி எதாக இருக்க முடியும் என்று.
அவர் ராஷ்டிரபதி ஆனார். அப்போது தான் எங்களுக்குப் புரிந்தது பெரிய பதவி எது என்று!
ஸ்வாமிஜியின் அனுக்ரஹம் ஒருவரை எவ்வளவு உயரத்திற்கு ஏற்றிச் செல்லும் என்பதற்கான சரியான உதாரணம் இது.
நாங்கள் அடிக்கடி ஆய்க்குடி கிராமத்திற்குச் செல்வது வழக்கமானது.
நயினாரகரம் ஸ்டேஷனில் இறங்கினால் மாட்டு வண்டி ரெடியாக இருக்கும். அதில் ஏறி ஆய்க்குடி செல்வோம்.
எனது தந்தையாருக்கு கணபதி மஹாமந்திர உபதேசம் ஆனது. அவர் கணபதி ஹோமம் செய்யலானார். எனக்கும் என் அண்ணன் திரு சீனிவாசனுக்கும் உபதேசம் ஆனது.
இதில் ஒரு முக்கிய அம்சம் எனது அண்ணனை வேறுபக்கம் டைவர்ட் செய்த பல நண்பர்கள் காணாமல் போயினர்.
பின்னர் என் அண்ணனுக்கும் கணபதி ஹோமம் செய்யச் சொல்லி ஸ்வாமிஜி உத்தரவிட்டார்.
அதனால் நாள் செல்லச் செல்ல ஒருவரின் முகம் பாரத்தவுடனேயே அவரைப் பற்றி அனைத்தையும் அறியும் ஆற்றலை என் அண்ணன் பெற்றார். வருங்காலத்தைப் பார்க்கும் அவரது ஆற்றலுக்காக அவர் வீட்டில் தினமும் பலரும் வருவதுண்டு.
ஆய்க்குடியில் ஒரு நாள் மாலை நேரத்தில் ஸ்வாமிஜியுடன் பேசிக் கொண்டிருந்தோம்.
திடீரென்று அவர், “ராஜாராம் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். கார் ரிப்பேர். பசியோடு வருவார். அவரை சாப்பிடச் சொல். காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.
ஸ்வாமிஜியின் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டோம். எப்போது ராஜாராம் வரப் போகிறார் என்று ஆவலுடன் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாம். கடைசியில் இரவு கார் வந்தது. அதிலிருந்து மிகவும் சோர்வுடன் இறங்கிய ராஜாராமைப் பார்த்து நாங்கள் அனைவரும், “என்ன கார் ரிப்பேரா? மரத்தடியில் உட்கார்ந்திருந்தீர்களா? பசிக்கிறதா, வாருங்கள் சாப்பிடலாம். ஸ்வாமிஜியை காலையில் பார்க்கலாம்” என்றோம்.
உற்சாகமின்றி முக வாட்டத்துடன் இருந்த அவர் இதைக் கேட்டவுடன் துள்ளிக் குதித்தார். “ஸ்வாமிஜி சொல்லிட்டாரா? நடு வழியில் கார் பஞ்சர். யாருமே இல்லை. துணைக்கு ஆள் வந்து பஞ்சர் பார்க்கும் வரை மரத்தடியில் தாந்ன் உட்கார்ந்திருந்தேன்” என்றார் அவர்.
ஒரு கசப்பான அனுபவம் திடீரென்று இனிமையான ஒன்றாக மாறி விட்டது. அவரும் சாப்பிட்டார். மறு நாள் காலை கணபதி ஹோமத்தில் கலந்து கொண்டு ஸ்வாமிஜியின் முழு அனுக்ரஹத்தைப் பெற்றார்.
இப்படி பற்பல அனுபவங்கள்!
V Santanam with Mr K Kamaraj and Mr Bhaktavatsalam Santanam was in Vellore Jail with Kamaraj for six months during Freedom Struggle.
இவை எல்லாவற்றையும் எனது தந்தையார் நன்கு உணர்வார். ஸ்வாமிஜியைப் பற்றிய முக்கியமான செய்திகள் தினமணியில் அவ்வப்பொழுது வெளிவரச் செய்வார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பெரும்பாணாற்றுப்படை
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ்
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி
பொருளுரை:
காஞ்சிமா நகரமானது நீலநிற உருவம் கொண்ட திருமால் படுத்திருப்பது போலவும், திரையனின் அரண்மனையானது திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன் அமர்ந்திருக்கும் தாமரையின் பொகுட்டு போலவும் அமைந்திருக்கும்.
****
பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமாளை– , நாராயணனை– சங்கத் தமிழ்ப்புலவர்களும் காளிதாசனும் போற்றிப் புகழ்கின்றனர் அந்த நாராயணனின் கால்களை லெட்சுமி பிடித்துவிட்டு உபசரிப்பதும் நாராயணனின் தொப்புள் கொடியிலிரூந்து பிரம்மா தோன்றுவதும் புலவர்களால் பாடப்படுகிறது. பரிபாடலில் மற்றும் முல்லைக் கலியில் வரும் திருமால் பாடல்களை படித்தால் பாகவத புராணக் கதைகளின் சுருக்கத்தைக் காணலாம்.
பரிபாடல் 4-ல் பல அவதாரச் செய்திகளும் பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணனின் காட்சியும் காணப்படுகிறது
நரசிம்ம அவதாரம், வராக அவதாரம், கஜேந்திர மோட்சம் , விஷ்ணுவின் தோற்றம், அவருடைய பல ராமன், பரசுராமன் தோற்றம் எல்லாம் ஓரே பாடலில் வருகிறது. பாகவத புராணத்தையே சுருக்கித் தருகிறார் புலவர்
திருமால் அவரவர் மனத்தில் தோன்றும் உருவம் கொண்டுள்ளான். பிரகலாதனுக்கு இனியவனாகவும், அவன் தந்தை இரணியனுக்கு இன்னாதவனாகவும் நடந்துகொண்டான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Freedom Fighter and News Editor Dinamani News paper, MaduraiV.Santanam, passed away on the Independence Day 15-8-1998. after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 1
ச. நாகராஜன்
1.பல்துறை வித்தகர்!
சென்ற நூற்றாண்டு பாரதத்தைப் பொறுத்தவரை திருப்புமுனை தந்த நூற்றாண்டு.
1911 முதல் 1998 வரை உள்ள ஒரு முக்கியமான கால கட்டத்தில் வாழ்ந்தவர் திரு வெ. சந்தானம்.
சிறந்த ஆன்மீகவாதி. நாளும் கணபதிஹோமம் செய்த ஞானஸ்தர்.
பெரிய மகான்களின் அனுக்ரஹம் பெற்றவர். தேசீய போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் பெற்று தேச சுதந்திரத்திற்கு அடிகோலியவர். பெரிய எழுத்தாளர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். சிறந்த சாஹித்யகர்த்தா. நல்ல செய்திகளை லக்ஷக்கணக்கானோருக்கு அள்ளித் தந்த நல்ல பத்திரிகையாளர். சிறந்த குடும்பத் தலைவர். நண்பர்களுக்கு வழிகாட்டி உற்சாகம் ஊட்டியவர். இசையில் லயிப்புள்ளவர். விளையாட்டுக்களை ஊக்குவித்தவர். பக்தி யாத்திரைகளை மேற்கொண்டவர். பல்வேறு துறைகளில் நிபுணர். தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் விரும்பி நேசித்த தமிழறிஞர். பற்பல சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்தவர். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்று அவர்களுடன் நேசமாகப் பழகியவர்.
தொடர்ந்து நாள் முழுவதும் உழைப்பதில் சுகம் கண்டவர். சிறந்த பேச்சாளர். அகில இந்திய ரேடியோ, மாநாடுகள், திறப்புவிழாக்கள் உள்ளிட்டவற்றில் சிறப்புரை ஆற்றியவர்….. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் – அவரைப் பற்றி.
ஒரே வார்த்தையில் சொல்வதானால் மனதால் பெரியவர். உத்தமர்.
காலத்தின் வேகமான ஓட்டத்தில் அவரைப் பற்றிய நினைவுகள் மங்கி விடவில்லை. மாறாக அன்றாடம் மனதிலே எழுந்து ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.
SWAMIJI KRISHNA WITH COOLING GLASS.
அவரைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?
2
கணபதி ஹோமம் உபதேசித்த ஸ்வாமிஜி கிருஷ்ணாஜி!
திரு வெ. சந்தானம் அவர்களின் வாழ்வில் ஒரு பெரும் திருப்பத்தை ஆன்மீகத்தில் ஏற்படுத்தியவர் அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணாஜி.
வெளி உலகில் விளம்பரத்தை விரும்பாத மாபெரும் மகான் இவர்.
இவரைப் பற்றிச் சொல்ல ஒரு சின்ன சம்பவம் உண்டு.
காஞ்சி மஹாபெரியவாள் ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ஒரு சமயம் ஆய்க்குடியில் பயணமாக வந்த போது இவர் இல்லத்திற்கு வருகை தந்தார்.
அவரை தரிசித்த ஸ்வாமிஜி கிருஷ்ணா, “நானே உங்களைப் பார்க்க வந்திருப்பேனே!” என்று அவரிடம் சொல்ல, “நான் உங்களைப் பார்க்கவா வந்திருக்கிறேன். மஹாகணபதியை அல்லவா தரிசிக்க வந்திருக்கிறேன்” என்றார்.
அப்படி ஒரு கணபதியைத் தன்னுள்ளே உயிரோட்டமாக வைத்திருந்து அனைவருக்கும் அனுக்ரஹித்தவர் ஸ்வாமிஜி.
தினமும் காலையில் ஏழு வயதிலிருந்து கணபதி ஹோமம் செய்தவர்.
கணபதியிடம் பேசும் ஆற்றலும் உரிமையும் பெற்றவர்.
அச்சன்கோவிலுக்கு இன்று லக்ஷக் கணக்கானோர் சென்று ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று பக்தியுடன் முழங்குவதற்குக் காரணமாக அச்சன்கோவிலை ஸ்தாபித்தவர்.
பரசுராமர் ஸ்தாபித்த ஐயப்பன் விக்ரஹம் காலப் போக்கில் மிக ஆழமாக அச்சன்கோவில் காட்டில் புதைந்து கிடக்க இவர் கனவில் வந்து தோன்றிய ஐயப்பன் தான் இருக்கும் இடத்தை அவருக்குக் காட்டினார். காட்டிலிருந்த குறிப்பிட்ட இடத்தில் ஆழமாகத் தோண்டி அங்கிருந்த விக்ரஹத்தை எடுத்து அச்சன்கோவிலில் ஸ்தாபித்தார் ஸ்வாமிஜி.
அச்சன்கோவிலில் வருடாவருடம் புஷ்பாஞ்சலி நடக்கும். அந்தத் திருவிழாவில் கூடை கூடையாக பூக்களை நிரப்பி அர்ச்சனை நடக்கும். உலகில் வேறெங்கும் நடைபெறாத புஷ்பாஞ்சலியை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து நடைபெறச் செய்தவர் அவர்.
சிறந்த பக்தர்கள் வீட்டிலும் கணபதி ஹோமங்களை அவர் செய்வது உண்டு.
SWAMIJI KRISHNA SHOWING ARTI AND V SANATANAM WORSHIPPING.
ஒரு நாள் மதுரையில் கோவிலைச் சுற்றி இருந்த சித்திரை வீதியில் வாழ்ந்து வந்த ஐயப்ப பக்தரும் சிறந்த வக்கீலுமான திரு ராமாராவ் சந்தானம் அவர்களைச் சந்தித்தார்.
அடிக்கடி ஸ்வாமிஜி பற்றிய செய்திகளைத் தரும் அவர், “எனது வீட்டில் நடக்கும் கணபதி ஹோமத்திற்கு வர வேண்டும். ஸ்வாமிஜி அதை நடத்துகிறார்” என்றார்.
அப்போது ஆரம்பித்த ஸ்வாமிஜியுடனான சந்திப்பும் தரிசனமும் தொடரலாயிற்று.
SWAMIJI KRISHNA AND KANCHI PARAMACHARYA
பல ஆன்மீக அனுபவங்களையும் லௌகீக உலகில் அன்றாடம் அதிசய நிகழ்ச்சிகளையும் தர வல்லதாயிற்று அவரது மிக மிக நெருக்கமான தொடர்பு!
அவரது அருளால் அவர் உபதேசித்த கணபதி ஹோமத்தைத் தினமும் செய்யும் பாக்கியம் திரு வெ. சந்தானத்திற்குக் கிடைத்தது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
காளிதாசன் காவியங்களில் விஷ்ணு கொடி, வாகனம் !- Part 5
சங்கப்புலவர்களும் காளிதாசனும் விஷ்ணு பற்றியும் அவருடைய அவதாரங்கள், கொடி, வாகனம் அவனுக்குப் பிரியமான துளசி உதளியான பற்றி சொல்லும் விஷயங்களை மேலும் விரிவாக விஷ்ணு ஸஹஸ்ரநாம உரைகள் ஆழ்வார் பாடல்களில் மற்றுமுள்ள பக்தி இலக்கியங்களில் காண்கிறோம்.
பக்தி இயக்கம் என்பது ரிக் வேத காலத்திலியேயே துவங்கி விட்டது அப்போதிட்ட விதைகள் மரமாக வளர்ந்து பூத்துக்குலுங்கிப் பழங்களைக் கொடுத்தது காளிதாசன் காலத்தில்- பரிபாடல் பாடிய சங்க காலத்தில்– என்றால் மிகையாகாது . ராமாயணம் இயற்றிய வால்மீகி ராமனை அவதாரம் என்று சொல்லவில்லை ஆனால் காளிதாசன் அவன் விஷ்ணுவின் அவதாரம் என்றும் அவனது வாகனம் , கொடி, மனைவியர் இவை இவை என்றும் சொல்கிறான் . ரகு வம்ச காவியத்திலிருந்தும் சங்க இலக்கிய நூல்களிலிருந்தும் சில பாடல்களை மட்டும் காண்போம்.
अथात्मनः शब्दगुणम्गुणज्ञ्यः
पदम्विमानेन विगाहमानः।
रत्नाकरम्वीक्ष्य मिथः स जायाम्
रामाभिधानो हरिरित्युवाच॥ १३-१
athātmanaḥ śabdaguṇamguṇajñyaḥ
padamvimānena vigāhamānaḥ |
ratnākaramvīkṣya mithaḥ sa jāyām
rāmābhidhāno harirityuvāca || 13-1
ராமன் என்ற ஸ்ரீ ஹரி என்று சொல்லும் ஸ்லோகம் இது . ராமன் சிங்கையில் விமானத்தில் ஏறிக்கொண்டு கடலினை காண்பித்து சீதையிடம் பேசும் காட்சி இது
இந்துமதி சுயம்வர கட்டத்தில் ஒரு மன்னரை அறிமுகப்படுத்திய தோழி அந்த மன்னன் யமுனை நதியில் வாழும் காளியன் என்னும் பாம்பு கொடுத்த டீ ரத்தினத்தை மார்பில் அணிந்து விஷ்ணு கெளஸ்துப மணியை மார்பில் அணிந்து போல இருக்கிறது என்கிறாள் . இதை யமுனை, கிருஷ்ணன் அடக்கிய காளியன், விஷ்ணு அணியும் ரத்தினம் முதலியன வருவதைக் கவனிக்க வேண்டும்.
ராவணன் ஒரு அரக்கன் என்பதை புறநானூறு குறிப்பிட்டத்தை முந்தைய கட்டுரையில் கண்டோம் இந்த ரகுவம்ச பாடல் அவனை ராக்ஷஸன் என்றும் அவனது பத்தாவது தலை தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் வெட்டப்படும் என்றும் தேவர்களுக்கு விஷ்ணு உறுதி தருகிறார் முன்னொரு காலத்தில் கடும் தவம் இயற்றிய ராவணன் ஒன்பது தலைகளைத் தியாகம் செய்தபோது பிரம்மா தோன்றி வரம் கொடுத்து ஒன்பது தலைகளையும் மீண்டும் கொடுத்ததாக ஒரு வரலாறு உண்டு. இதில் ராவணன் ஒரு அரக்கன், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் ஆகியன வருவதைக் கவனிக்க வேண்டும்.
***
யாதவப் பெண்ணுக்கு காளை மாடு காட்டிய கணவன்!
கிருஷ்ணனும் தெய்வ மாலும் (திரு மால் /விஷ்ணு/ ஹரியும் ) ஒன்று என்பதைக் காட்டும் வருணனை கலித்தொகையில் முல்லைக்கு காலையில் வருகிறது ஆயர்கள் -அதாவது யாதவ இடையர் வீட்டுப் பெண்மணிகள் காளை அடக்கும் போட்டியில் (ஜல்லிக்கட்டு/ மஞ்சசுவிரட்டு) யார் வெல்கிறாரோ அவரையே
கல்யாணம் செய்வது வழக்கம் காளை அடக்கும் போட்டி, முதல் முதலில் பாகவதத்தில் வருகிறது
கலி .107-22
ஒரு யாதவ பெண் தான் வளர்த்த காளையை மைதானத்துக்குள் அனுப்பினாள்; அந்தக் காலத்தில் ஆண்களும் தலையில் பூக்களை அணிவது வழக்கம்; காளையை அடக்க வந்த ஆண்மகனின் பூ மாலை காளையின் கொம்பில் சிக்கிக்கொண்டது அதை யாதவ இளைஞன் அடக்கியபோது துள்ளிக்குதித்த காளையின் கொம்பில் சிக்கி இருந்த அந்தப் பூ மாலை , யார் அந்தக் காளையை வளர்த்து போட்டிக்கு அனுப்பினாளோ அவள் மீது போய் விழுந்தது உடனே தோழியர் அனைவரும் பாராட்டி விஷ்ணுவே/ திருமாலே உனது கணவனைக் காட்டிவிட்டார் என்று சொல்லி மகிழ்கிறார்கள் இதை முல்லைக் கலி பாடிய சங்கப்புலவர் சித்தரிக்கிறார் ; இதில் யாதவர்கள் வணங்கும் கிருஷ்ணனே மால் என்று வருவதைக்க கருத்திற்கொள்ள வேண்டும் .
வருந்தாதி மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன் 30 கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, ‘திண்ணிதா, தெய்வ மால், காட்டிற்று இவட்கு‘என, நின்னை அப் பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு
வருந்தவேண்டாம். உன் கூந்தலில் அவன் பூ விழுந்தது எனக் கேட்டு “இவளுக்குத் தெய்வம் காட்டிய வழி” என்று எண்ணிக்கொண்டு உன் தாய் தந்தையரும், அண்ணன்மாரும் திருமணம் செய்துதர உறுதி பூண்டுள்ளனர். உன் விருப்பம் நிறைவேறும்.
****
மார்பில் லெட்சுமி , கெளஸ்துப மணி கருடன்
பரிபாடல் 1
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை 10
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.
பொருள்
எரியும் தீ போலப் பூக்கும் தாமரை-மலர் போன்ற கண்ணை உடையவன்.
பூவை என்னும் காயாம்பூ பூத்திருப்பது போன்ற ஒளிர்-நீல-நிற மேனியை உடையவன்.
அந்த மேனியில் திருமகள் நிமிர்ந்து அமர்ந்திருக்கும் மார்பினை உடையவன்.
அந்த மார்பில் தெரிப்பாக மணி ஒளிரும் பூணினை (கவச-அணி, கௌவுத்துவ-மணி) உடையவன்.
பெரிய மலை பற்றி எரிவது போன்ற பொன்னிழையாலான உடுக்கை-ஆடை உடையவன்.
கருடச்சேவல் அழகு தரும் கொடியை வலப்புறம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பவன்.
உன் ஏவலின்படி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நாக்கு வல்லமை பெற்ற (வடமொழி மந்திரத்தை வளமாக ஓதும் வல்லமை) அந்தணர்கள். அவர்கள் ஓதும் அருமறையின் பொருளாக விளங்குபவன். இப்படி விளங்குபவனே!
****
தசரதன் மனைவியர் கர்ப்பமாக இருக்கும்போது கண்ட கனவுகள்
गुप्तम् ददृशुरात्मानम् सर्वाः स्वप्नेषु वामनैः।
जलजासिकदाशार्ङ्गचक्रलाञ्छितमूर्तिभिः॥ १०-६०
guptam dadṛśurātmānam sarvāḥ svapneṣu vāmanaiḥ।
jalajāsikadāśārṅgacakralāñchitamūrtibhiḥ || 10-60
விஷ்ணுவின் அவதாரத்தைக்கோடி காட்டும்
சங்கு சக்ர சாரங்க கதையுடன் உள்ள இளைஞர்களைக் கனவில் கண்டனர்.
हेमपक्षप्रभाजालम् गगने च वितन्वता।
उह्यन्ते स्म सुपर्णेन वेगाकृष्टपयोमुचा॥ १०-६१
hemapakṣaprabhājālam gagane ca vitanvatā।
uhyante sma suparṇena vegākṛṣṭapayomucā || 10-61
ஒளியை வீசிக்கொண்டு பறக்கும் கருடன் தங்களை சுமந்து செல்வதாகவும் மேகங்கள் பின் தொடர்வதாகவும் கனவு கண்டார்கள்.
बिभ्रत्या कौस्तुभन्यासम् स्तनान्तरविलम्बितम्।
पर्युपास्यन्त लक्ष्म्या च पद्मव्यजनहस्तया॥ १०-६२
bibhratyā kaustubhanyāsam stanāntaravilambitam।
paryupāsyanta lakṣmyā ca padmavyajanahastayā || 10-62
லட்சுமி தனது மார்பில் கெளஸ்துப மணி விளங்க தாமரைப்பூ விசிறி கொண்டு வீசி உபசரிப்பதாகவும் கனவில் தெரிந்தது.
அடுத்த ஸ்லோகத்தில் சப்த ரிஷிகள் உபசரித்த கனவு வருகிறது இதையெல்லாம் அவர்கள் கணவன் தசரத சக்கரவர்த்தியிடம் சொன்னவுடன் அவர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார்.
****
அகநானூறு 175
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் 10
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், 15
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
மண் பயம் பூப்பப் பாஅய்,
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?
இப்போது வானம் மின்னுகிறது. செழியன் கைவண்மை மிக்க வள்ளல். அவன் வலிமை மிக்க சக்கரம் கொண்ட தேரில் சென்று ஆலங்கானம் என்னுமிடத்தில் போரிட்டான். அப்போது அவன் வேல்கள் மின்னியது போல வானம் மின்னுகிறது. அப்போது அவன் முரசு முழங்கியது போல இடி முழங்குகிறது. சக்கரத்தைக் கையிலே கொண்ட திருமால் மார்பில் உள்ள ஆரம் போல வானவில்லை வளைத்துக் காட்டுகிறது. மண்ணெல்லாம் விளைச்சல் பயன் தருமாறு மழை பொழிகிறது. அவர் வருவேன் என்று சொன்ன காலம் இதுதானே?
நான்கு தெய்வங்களின் கொடிகள் வாகனங்கள் பற்றி சங்கப்புலவர் நக்கீரர்
புறநானூறு 56
காளைமாட்டு ஊர்தி,
தீ போன்று விரிந்த செஞ்சடை,
கையில் கணிச்சி ஆயுதப் படை,
கழுத்தில் நீலநிற நஞ்சுமணி
ஆகியவற்றை உடைய சிவபெருமான் (1)
இவன் கூற்றுவன் போல் சினம் கொண்டவன்.
கடலில் வளரும் சுழல்சங்கு போன்ற வெண்ணிற மேனி,
கலப்பை ஆயுதப் படை,
பனைமரக் கொடி
ஆகியவற்றை உடைய பலராமன் (2)
இந்தப் பலராமன் போல் வலிமை கொண்டவன்
கழுவிய மணிக்கல் போன்ற நீலநிற மேனி,
கருடப்பறவைக் கொடி
ஆகியவற்றை உடைய திருமால் (3)
திருமால் போல் இகழ்வாரை அழிக்கும் புகழ் கொண்டவன்
மயில் கொடி,
மயில் ஊர்தி
ஆகியவற்றுடன் வெற்றியாளனாக விளங்கும் முருகன் (4)
முருகன் போல் எண்ணியதை முடிக்கும் திறனாளன்.
இப்படி நான்கு பெருந் தெய்வம் போல்
ஆற்றல் மிக்க உனக்கு செய்யமுடியாதது என்று ஒன்று உண்டா?
இல்லை.எனவே
இரப்போருக்கு வேண்டிய பொருள்களைக் குறைவின்றி வழங்குவாயாக.
யவனர் தந்த பொன்-கிண்ணத்தில்
மகளிர் நாள்தோறும் ஊட்டும் தேறலை உண்டு
மகிழ்ந்து இனிதாக வாழ்வாயாக.
வாளோக்கிய மாறனே!
இருளகற்றும் சூரியன் போலவும்,
மேற்குத் திசையில் காணப்படும் வளர்பிறை நிலாப் போலவும்
நிலைபேற்றுடன் உலகில் வாழ்வாயாக.
பாடல்
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, 5
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும், 10
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே, வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும் 15
அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, 20
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்
தண் கதிர் மதியம் போலவும்,
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! 25
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
****
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை
மதுரை மருதன் இளநாகனார் பாடிய முந்தைய பாடலில் மன்னனை முருகனுக்கும் சிவனுக்கும் ஒப்பிடுகிறார் . இதிலிருந்து இன்னுமொரு விஷயம் தெளிவாகத்தெறிகிறது ; காளிதாசன் சங்க காலத்துக்கு முந்தையவன் ஏனெனில் அவன் மன்னர்களை வேத கால இந்திரன், அக்கினி, வருணன் , யமனுக்கு ஒப்பிடுகிறான் ; தமிழ் தெரியாத வடகத்தியர்களும் வெளிநாட்டுக்காரர்களும் காளிதாசனைக் குப்தர் காலத்தில் வைப்பது பொருந்தாது என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.
****
ஆதிசேஷன்படுக்கையில் விஷ்ணு
பிரம்மாவை வருணிக்கும் பாடலில் ஆதிசேஷன் என்னும் பாம்புப் படுக்கை வருகிறது அதை அடுத்ததாகக் காண்போம்
–subham–
Tags- காளிதாசன் காவியங்கள், விஷ்ணு கொடி, வாகனம் ,சங்கப்புலவர் நக்கீரர், அகநானூறு 175,யாதவப் பெண், காளை மாடு, கணவன், கலித்தொகை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
28-5-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
கிளி அலெக்ஸ் சொல்லும் – ‘I AM SORRY’ என்று!
ச. நாகராஜன்
காட்டிலும் சரி, வீட்டுத் தோட்டங்களிலும் சரி, கிளிகளின் கிக்கீ சத்தத்தைக் கேட்டு ஆனந்திக்கிறோம்.
ஆனால் அவை பற்றிய அதிசய உண்மைகளை நாம் அறிந்திருக்கிறோமா?
சந்தேகம் தான்!
எடுத்துக்காட்டிற்கு ஒன்று. கிளியின் அதிக பட்ச ஆயுள் எவ்வளவு தெரியுமா?.
நூறு ஆண்டுகள்! எழுபது, எண்பது வருடங்கள் என்பதெல்லம் பெரிய அளவில் உள்ள கிளிகளுக்கான சாதாரண ஆயுள் காலம்!
ஆயிரம் மிருகக்காட்சிசாலைகளில் 1,30,000 கிளிகளை ஆரய்ந்ததில் 217 கிளி வகைகளின் ஆயுட்காலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஃபிக் பேரட் இரண்டு வருடத்திலிருந்து 30 வருடங்கள் வரை வாழ்கின்றன. மற்ற பல வகைகள் மூளை பெரிதாக இருக்க இருக்க அதிக ஆண்டுகள் வாழ்கின்றன!!
சரி, அவை நாம் பேசுவதைப் புரிந்து கொள்கிறதா?
புரிந்து கொள்ள முடியாது என்பதே பெரும்பாலோருடைய பதில்
ஆனால் அவை நாம் பேசுவதைப் புரிந்து கொள்கின்றன!
அவை நம்மிடம் ‘சாரி’என்று கூடச் சொல்கின்றன.
கிளிகள் தமக்குள் ஒன்றுடன் ஒன்று சைகை தொடர்பு மொழியில் கூட பேசுகின்றன.
மனிதர்களுடன் வாழும் போது அவை தமது சூப்பர் மூளை திறனை உபயோகித்து மனிதன் பேசும் மொழியைப் புரிந்து கொள்கின்றன.
போஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுத் துறை பெண்மணியான ஐரீன் பெப்பர்பெர்க் (IRENE PEPPERBERG) லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்குப் பல தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
பெப்பர்பெர்க் வளர்க்கும் கிளிக்கு அலெக்ஸ் என்று பெயர். அலெக்ஸுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் நன்கு தெரியும். அந்த வார்த்தைகள் சுட்டிக் காட்டும் பொருள்கள், செயல்கள், வண்ணங்கள் ஆகியவற்றை அது சரியாகப் புரிந்து கொள்கிறது. ஒரு பொருளைத் தந்தால் அதன் வடிவம். வண்ணம், அந்தப் பொருள் எதனால் உருவாக்கப்பட்டது போன்ற அனைத்து விஷயங்களும் அதற்கு அத்துபடி. பெரியது, சிறியது, அதே மாதிரி உள்ளது, வேறு மாதிரியாக உள்ளது – இவை அனைத்தையும் அது உணர்கிறது.
ப்யூஜெட் ஸவுண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணைப்பேராசிரியரான எரின் கால்பெர்ட் ஒய்ட் (Erin Colbert-White, Associate Professor, University of Puget Sound) “கிளிகள் நிச்சயமாக அனைத்து பொருள்களைச் சுட்டிக் காட்டும் வார்த்தைகளை உணர்கின்றன” என்கிறார்.
“தாங்கள் கற்ற வார்த்தைகளை திறமையுடன் சமயத்திற்கேற்றபடி அவை பயன்படுத்துவது பிரமிப்பை ஊட்டும்” என்று கூறும் அவர், நீங்கள் அறைக்குள் நுழைந்து அதைப் பார்த்து ஹலோ என்றால் பதிலுக்கு அதுவும் ஹலோ என்று சொல்லும்” என்கிறார்!
பெப்பர்பெர்க்கின் ஒரு அனுபவம் இது : ஒரு சமயம் குறும்புக்கார ஆப்பிரிக்கப் பறவையான அலெக்ஸின் மூக்கில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு காபி கோப்பையை அவர் பிடுங்கினார். அவருக்குக் கோபம் வந்தது. ஏன் இதை எடுத்தாய் என்று கோபத்துடன அவர் கூறினார். பின்னர் அலெக்ஸ் வருத்தப்படக் கூடும் என்று எண்ணிய அவர் ஐ ஆம் சாரி என்றார். பதிலுக்கு அலெக்ஸும் ஐ ஆம் சாரி என்றது.
அன்றிலிருந்து எப்போதெல்லாம் பெப்பர்பெர்க் அலெக்ஸின் குறும்புத்தனங்களைச் சுட்டிக் காட்டுகிறாரோ அப்போதெல்லாம் அது ஐ ஆம் சாரி என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டது.
அன்போடு அதனிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல ஆரம்பித்தபோது அதுவும் பதிலுக்கு ஐ லவ் யூ சொல்ல ஆரம்பித்தது.
மனிதரின் மொழியை விலங்குகளும் பறவைகளும் புரிந்து கொள்கின்றனவா என்ற இந்த ஆராய்ச்சி ஐம்பது வருட காலமாகத் தொடர்கிறது. ஆனால் இன்னும் முழுமையாக வெற்றி கண்டபாடில்லை.
ஆனால் பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்று இனி பாட வேண்டிய அவசியம் இல்லை. (எம்ஜிஆர் சரோஜாதேவி பணத்தோட்டம் கண்ணதாசன் பாடல்)