Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்த வருடத்தின் (2025) ஆரம்பத்தில் ஜனவரியில் 27ம் அத்தியாயத்தை முடித்து விட்டுப் பல மாதங்கள் ஓடி விட்டன. மீண்டும் தொடரைத் தொடர்வோம்.
ராமாயணத்தில் வரங்கள் (28)
ராமாயணத்தில் வரங்கள் (28) பிரம்மா மயனுக்கு அளித்த வரம்!
ச. நாகராஜன்
.
கிஷ்கிந்தா காண்டத்தில் ஐம்பத்தோராவது ஸர்க்கமாக அமைவது ‘ஸ்வயம்பிரபை செய்த ஸத்காரம் என்ற ஸர்க்கமாகும்.
தென் திசையில் சீதாதேவியைத் தேடிச் சென்ற ஹனுமானும் மற்ற வீரர்களும் வாய்திறந்த ஒரு குகையைக் கண்டு அதனுள் நுழைந்தார்கள்.
ரிக்ஷபிலம் என்ற அந்த குகை பிரம்மாண்டமானதாக இருந்தது. அங்கு ஓரிடத்தில் பொன்மயமான மரங்களையும் தாமரை ஓடைகளையும் கண்டு அவர்கள் வியந்தனர்.
அங்கு ஒரு ஸ்திரீயைக் கண்டனர். மரவுரியையும் மான் தோலையும் உடுத்து தவக் கோலத்தில் இருந்த அவளைப் பார்த்த ஹனுமார் அவளிடம், “நீவீர் யார்? இந்த மாளிகையும் பிலமும் இந்த ரத்தினங்களும் யாருடையது. பதில் சொல்லி அருள்வீராக” என்று கேட்டார்.
அதற்கு அந்த தபஸ்வி பதில் கூறலானாள்:
மயோ நாம மஹாதேஜோ மாயாவீ தானவர்ஷப: |
தேனேதம் நிர்மிதம் சர்வ்ம் மாயயா காஞ்சனம் வனம் ||
தானவர்ஷப: – அசுர சிரேஷ்டனான
மய: நாம – மயன் என்பவன்
மஹா தேஜா: – மஹா தேஸஸ்வி.
மாயாவி – மாயைகளில் வல்லவம்
தேன – அவனால்
இதம் – இந்த
காஞ்சனம் – பொன் மயமான
வனம் – காடு
சர்வம் – மற்றுமுள்ள எல்லாம்
மாயயா – மாயையினாலேயே
நிர்மிதம் – சிருஷ்டிக்கப்பட்டது.
புரா தானவமுக்யானாம் விஸ்வகர்மா வபூவஹ: |
யேனேதம் காஞ்சனம் திவ்யம் நிர்மிதம் பவனோத்தமம் |\
புரா – முன்பு
இதம் – இந்த
காஞ்சனம் – பொன்மயமான
திவ்யம் – தேவர்களுக்குரிய
பவனோத்தமம் – சிறந்த மாளிகை
நிர்மிதம் – சிருஷ்டிக்கப்பட்டது
யேன – எவனாலோ அவன்
தானவ முக்யானாம் – சிறந்த அரக்கர்களுக்கெல்லாம்
விஸ்வகர்மா – விஸ்வகர்மாவாக
வபூவ ச – ஆனான்
ஸ து வர்ஷசஹஸ்ராணி தபஸ்தப்த்வா மஹாவனே |
பிதாமஹாத்வரம் லேபே சர்வமௌஷனஸம் தனம் ||
ஸ: – அவன்
மஹாவனே – பெரிய காட்டில்
வர்ஷ சஹஸ்ராணி – ஆயிரம் வருஷங்கள்
தப: – தவத்தை
தபத்வா – இயற்றி
பிதாமஹான் – பிரம்மதேவனிடமிருந்து
ஔஷனஸம் – உசனஸ் என்பவரால் செய்யப்பட்ட சிற்ப சாஸ்திரக் கல்வியாகிற
உசனஸ் என்பவரால் செய்யப்பட்ட அந்த வனத்தை பிரம்மாவிடமிருந்து மயன் பெற்று அனுபவித்து வந்தான். ஒரு சமயம் அவன் ஹேமை என்ற தெய்வப்பெண்ணைக் கண்டு அவள் மேல் ஆசை கொண்டான். இதை அறிந்த இந்திரன் அவனை வஜ்ராயுதத்தை பிரயோகித்துக் கொன்றான். பொன்மயமான வனத்தை இந்திரன் ஹேமைக்குத் தந்தான்.
இந்த வரலாற்றைச் சொன்ன அந்த பெண் தபஸ்வியானவள் தன்னை அந்த ஹேமையின் உயிர்த்தோழியாக அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அவள் பெயர் ஸ்வயம்பிரபை.
இங்கு பிரம்மாவிடமிருந்து மயன் பெற்ற வரம் பற்றிய விவரங்களை அறிகிறோம்.
Eighty-five thousand? Ninety thousand? Ninety-five? One? Ok. One lakh ten!
And, with that, the hammer came down on Mamata Banerjee’s donation of Rs 1,10,000 to each of the 45,000 pandals where Goddess Durga will be worshipped officially for five days this September-October across West Bengal, including 3000 in Kolkata. This donation, to be made from the coffers of the West Bengal government, was announced by the Chief Minister at Kolkata’s Netaji Indoor Stadium on Thursday and it brought the audience of Durga Puja organisers to their feet, hands in air, clapping and cheering.
But the noise drowned out a question that should worry anyone in a secular democracy: can the government directly or indirectly promote or even be associated with religion or a religious event?
It is a question that has hung in the air since 2018 when, for the first time, Mamata Banerjee declared a grant to the Durga Pujas. Then, the size of the donation or dole was Rs 10000 to around 2,800 pandals or a total of Rs 28 crore. In the last eight years, the number of pandals has grown and, with that, the size of the largesse, totting up this year to a very handsome Rs 495 crore. There is some debate that the number of pandals is 43,000 and not 45,000 and the payout not Rs 495 crore but 473 crore. But that’s just hair-splitting. Can the taxpayers’ money be spent quite like this?
Problematic but politically smart
It is a problematic question but politically brilliant. For Mamata Banerjee, the cost benefits are simple. For Rs 495 crore, she secures the loyalty of the clubs that organise the Durga Pujas. The clubs are powerful and influential in their local neighbourhoods; remember, West Bengal has a long history of para and club culture. Winning their support is a sure shot short cut to winning local and bigger electoral battles. And this year’s generous jump in largesse—from Rs 85,000 last year to Rs 1.10 lakh per Durga Puja club—surely has much to do with the fact that West Bengal goes to the polls next year.
BJP’s Catch 22
It is also a winner of a move as it puts the BJP in a spot. The Durga Puja donation or largesse—many call it dole—completely demolishes the BJP’s biggest ammunition against Mamata Banerjee: the charge of minority appeasement. The move is a thorn in BJP’s flesh for yet another reason—the BJP can’t oppose the dole to the Durga Pujas because it is, after all, donation to a Hindu religious festival. No wonder BJP leader Suvendu Adhikari fumed, “Let her give Rs 2 lakh or 10 lakh to the Durga Pujas. We are not complaining. But let her also pay DA arrears to government workers that is pending for ages and fill in vacancies in government.”
West Bengal has around 12 lakh employees including pensioners who are due DA totalling, according to some reports, a payout of Rs 10,000 crore. The court ordered on May that the DA arrears should be paid within three months which means by mid-August. So far, there have been no payments.
It’s the economy, honey
The strongest defence of the dole/donation/largesse by Mamata Banerjee’s Trinamool Congress party (TMC) is that the government intervention is meant to boost the local economy that has grown over the decades around the Durga Pujas.
According to a study in 2013, the size of the festival economy was about Rs 25,000 crore. In 2019, the British Council conducted a survey on the festival economy which was relabelled “creative economy” that goes on round the year. That survey put the size of the creative economy at Rs 32,377 crore.
Mamata Banerjee’s argument is that the state government payout is directed not at religious affairs but at improving the economics for thousands of people who make a living from the festival—idol makers, pandal makers, drummers, decorators and dozens of others. Economists have backed the model of economic development and given Mamata Banerjee a clean chit.
Politically fraught
This debate about whether the Durga Puja dole/donation is against secularism or not has been going on since it started being given in 2018. But it is in election years that the issue becomes particularly fraught and explosive. While Mamata Banerjee may have announced the donation and moved on, with the confidence that it will bring her political dividends, the BJP is desperately trying to launch an effective counter offensive.
Last heard, BJP’s Suvendu Adhikari has appealed to Durga Puja pandal committees to reject the dole as a protest against the rape and murder of the RG Kar doctor last year that had rocked Kolkata, and in fact, communities across the world. Last year, a handful of puja committees had set the example. All eyes are on how many will follow suit this year. But Adhikari’s strategy is clear: to enlarge the scope of opposition to Durga Puja donation by the state.
But for the last seven years, Mamata Banerjee has reaped huge benefits from this strategic intervention and there are very little signs of that changing in its eighth year or the foreseeable future. In fact, it is hard to imagine that should the BJP come to power in the state, it will roll back the dole to the goddess. The political ethics of the Durga Puja dole will always be debatable but the West Bengal Chief Minister is not turning a hair, as long as the dole earns her the people’s—and perhaps divine—blessings.
Kannur’s ‘two-rupee doctor’ AK Rairu Gopal passes away at 80For over 50 years, Dr Rairu Gopal stood as a beacon of hope for the common people—the poor and working class—charging just Rs 2 (later increased to Rs 10) for a consultation and often providing free medicine to those in financial distress.. Kannur’s ‘two-rupee doctor’ AK Rairu Gopal passes away at 80For over 50 years, Dr Rairu Gopal stood as a beacon of hope for the common people—the poor and working class—charging just Rs 2 (later increased to Rs 10) for a consultation and often providing free medicine to those in financial distress.Statesman News Service | THIRUVANANTHAPURAM | August 3, 2025 8:04 pm Dr AK Rairu Gopal, fondly known as Kannur’s “two-rupee doctor” for treating patients at a nominal fee when healthcare had become a business, passed away on Saturday due to age-related illness. For over 50 years, Dr Rairu Gopal stood as a beacon of hope for the common people—the poor and working class—charging just Rs 2 (later increased to Rs 10) for a consultation and often providing free medicine to those in financial distress. Driven by an unwavering sense of duty, he examined patients tirelessly from 4 am to 4 pm, later adjusting his schedule to 6 am to 4 pm. At the peak of his practice, he attended to over 300 patients a day.Despite his advancing age, he continued to see patients until 2024, when he put up a sign outside his home in Thana, Kannur, announcing that he was no longer conducting consultations due to health reasons.The sign read: “I don’t have the health to work anymore… so I’m stopping consultations and dispensing medicine.” Yet, despite this, he continued to serve whenever he could. Initially, Dr Rairu Gopal offered consultations from his home at Thalap in Kannur. The consultation fee was just two rupees. Those in financial distress were provided with free consultations and medicines. When he moved to Thana in Kannur, he increased the consultation fee to ten rupees, but the nickname “Two-Rupee Doctor” stayed with him. Born to Dr AG Nambiar and AK Lakshmikutty Amma, Dr Rairu Gopal was an epitome of service and compassion. He started charging a modest fee from patients after hearing his father’s words, “If you want to make money, there are plenty of other professions.” In his final days, Dr. Rairu Gopal stated he had treated 18 lakh patients throughout his lifetime. He leaves behind a lasting legacy of compassion and selfless service.—SUBHAM–
CHITRANNAM MADE FOR RIVER BANK DINING, சித்ரான்னம்
‘ஆடிப்பெருக்கு TAMIL RIVER FESTIVAL பொன்னியின் செல்வன்
POSTED BY LONDON SWAMINATHAN ON 3-8-25
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரிக் கரையில் மங்கலப்பொருட்கள் வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார். அம்மா படித்துறைக்கு வந்த புதுமண தம்பதியினர், காவிரி தாயை வணங்கி, புது மஞ்சள் கயிறை, கழுத்தில் கட்டிக் கொண்டனர். மேலும், திருமணமான சுமங்கலிகள் மற்றும் திருமணத்திற்காக காத்திருக்கும் இளம்பெண்கள் காவிரி தாயை நினைத்து மஞ்சள் கயிறை புதிதாக அணிந்து கொண்டனர்.
இதேபோன்று, மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நீராடிய பெண்கள், கரையில் மங்கலப் பொருட்களை படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதியினர், தாலி பிரித்து கட்டிக் கொள்ளும் பாரம்பரிய சம்பிரதாயத்தை, காவிரி கரையில் மேற்கொண்டனர்.
தஞ்வை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில், புதுமண தம்பதிகள் புனித நீராடி, பெரியோர்களிடம் ஆசி பெற்று, தங்கள் திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிப்பட்டனர். பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பு குறுக்குத் துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் பெண்கள் பல்வேறு பூஜைகளை மேற்கொண்டனர். புதுமண தம்பதியினர்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் தாலியை பெருக்கி கட்டி வழிபாடு நடத்தினர்.
கோவை மாவட்டம் பேரூர் நொய்யல் ஆற்றின் படித்துறையில் ஏராளமானோர் புனித நீராடி, பட்டீசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் அடிவார பகுதியில் மக்கள் புனித நீராடினர். புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்த மாலையை காவிரியில் விட்டு, புனித நீராடி காவிரி அன்னையை வழிபட்டனர்.
*****
‘ஆடிப்பெருக்கு ADIP PERUKKU , RIVER FESTIVAL OF INDIA
‘ஆடிப்பெருக்கு’ என்ற வார்த்தையை கேட்டவுடன் கல்கியின் ” பொன்னியின் செல்வன் ” கதை தான் எனக்கு ஞாபகம வருகிறது்.
அமரர் கல்கி அக்கால சோழ ராஜ்யத்தில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு பண்டிகை குறித்து
பொன்னியின் செல்வனில்
அத்தியாயம் 1 – ஆடித்திருநாள்
ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம்.
விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.
தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?
ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.
ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.
ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்? வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா? அதனால் ‘யானை மேல் துஞ்சிய தேவர்’ எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?
இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.
இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.
இந்த மனோகரமான தோற்றத்தின் இனிமையையும் குதூகலத்தையும் அதிகப்படுத்தும்படியான இன்னும் சில காட்சிகளை வந்தியத்தேவன் அங்கே கண்டான்.
அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்.
“வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள், பள்ளியரே!
வெள்ளாறு விரைந்து வருது
வேடிக்கை பாருங்கள், தோழியரே!
காவேரி புரண்டு வருது
காண வாருங்கள், பாங்கியரே!” </pre>
என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.
வேறு சிலர் சோழ குல மன்னர்களின் வீரப் புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முப்பத்திரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை ஆபரணங்களாகப் பூண்டிருந்த விஜயாலய சோழனின் வீரத்தைச் சில பெண்கள் பாடினார்கள். அவனுடைய மகன் ஆதித்த சோழனுடைய வீரத்தைப் போற்றி, அவன் காவேரி நதி உற்பத்தியாகுமிடத்திலிருந்து கடலில் சேரும் இடம் வரையில் அறுபத்து நாலு சிவாலயங்கள் எடுப்பித்ததை ஒரு பெண் அழகிய பாட்டாகப் பாடினாள்.
FROM FACE BOOK RAJAGOPAL NATARAJAN.
–SUBHAM–
TAGS- ‘ஆடிப்பெருக்கு , TAMIL RIVER FESTIVAL, பொன்னியின் செல்வன், சித்ரான்னம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
One Thousand Proverbs on Woman, Wife, Daughter– Part 3
41.A petted woman does not spin.
42.A house without a woman is a well without a pail.
43.A woman keeps secret only her age and what she does not know.
44.Woman opens up a home but does not close it down.
45.Beat the woman to drive Seven Devils out of her.
King James Version Mark 16:9 “…he appeared first to Mary Magdalene, out of whom he had cast seven devils.” In J.B. Phillips the interpretation of the seven devils are seven evil spirits.
(In Luke 8:2, the Bible mentions Mary Magdalene being delivered from “seven devils”. This has been interpreted in various ways, including: literal demon possession, severe mental or physical illnesses, or a symbolic representation of multiple vices or sins. Some interpretations link it to the seven deadly sins or the seven adversaries of the soul).
46.The pretty woman wants three husbands: one rich to support her; one handsome, to love her; one brigand to beat her.
47.A woman without a husband is a horse without a bit.
48.Do not trust the winter sun or a woman’s heart.
49.If women did not sin, there would be no priests to confess them
50.Water and women go as you direct them.
—Bulgarian proverbs
51.When girls whistle the devil laughs outright.
52.A good housewife’s skirt is longer than her petticoat.
–Jesey proverbs
53.Heaven has scattered on earth twelve ounces of honesty and woman has picked up eleven
–Corsican proverb
54.Confide in an aunt and the whole world will know.
(My comments: I worked with a woman in the BBC Bush House in London; My boss used to tell me, Swaminatha! tell this lady anything; you don’t need a mukkkat thuddu / 5 paisa letter. The whole bush house will know it. Now I laugh remembering it)
55.Comb your daughter’s hair until she is twelve; safeguard her until she is sixteen; after sixteen, say ‘thank you’ to whomsoever will wed her (take her off your hands)
56.Praise the horse after a month and a woman after a year.
57.Do not choose your wife at a dance, but on the field amongst harvesters.
58.Take a wife from near, but steal from afar.
59.Young wife, old husband – children a certainty; old wife, young husband- beating a certainty.
60. Smoke, a leaking roof, and a nagging wife—these three drive the farmer away from his home
To be continued………………..
–subham—
Tags- 1000 proverbs on woman, wife, daughter, aunt, part 3, beating,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விஷ்ணு – பொருள் – எங்கும் நிறைந்தவன்
மேக 15,59;
குமா.6-67; 7-44;
ரகு..13-5, 14-59.
கீழே பாடல்களின் பொருள் உள்ளன
***
இந்தப் பெயரை விண்ணந்தாயன் என்ற சங்கப்புலவர் பெயரில் காண்கிறோம்
விண்ணந்தாயன்= விஷ்ணு + தாசன்
ஆகாச என்பது தமிழில் ஆகாயம் என்று மாறுவது போல (ய=ச) தாசன் , தாயனானாக மாறுகிறது
சங்க காலத்திலியேயே லேடி மஹாபாரதத்தைத் தமிழாக்கிய செய்தி பாரதம் பாடிய மாதேவனார் (மஹாதேவன்) என்ற புலவர் மூலம் கிடைக்கிறது
கண்ணன் என்பதும் , கன்னையா என்பதும் ஆழ்வார் பாடல்கள், பாரதி பாடல்கள் மூலம் நாம் அறிந்ததே .
இந்த கண்ணன் பெயர் முது கண்ணன் , பாண்டரங் கண்ணன் தாயங்கண்ணன் (தாச +கண்ணா ) முதலிய பெயர்களில் வருகிறது ; தாமோதரனார், கேசவனார், வால்மீகி என்ற சங்கத் தமிழ் புலவர்களை நான் விளக்கத் தேவையே இல்லை.
***
ரகுவம்சம் 13-5 பாடலில் கடலுடன் விஷ்ணு ஒப்பிடப்பட்டதை முந்தைய கட்டுரையில் கண்டோம் . கடல் வண்ணன் என்றால் உடனே விஷ்ணு என்பது புரியக்கூடியதுதான் மாயோன் என்ற சொல்லால் தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும் இதைக் குறிப்பிடுகின்றனர் ; கருப்பு, நீலம் ஆகிய இரண்டு நிறங்களையும் இந்துக்கள் ஒரே பொருளில் பயன்படுத்துவர் ; கண்ணன் நிறமும் விஷ்ணு நிறமும் கருப்பு என்பது கிருஷ்ணா= கருப்பன் என்ற பெயரிலேயே உள்ளது.
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
—புறநானூறு -56
நீல்நிற உருவின், நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
—புறநானூறு -58
நீல நிற வண்ணன் (கலி .104-38),நெடியோன் (மது .வரி 763, பெரும் .வரி 402, பதிற்றுப் -15-39,
தேயா விழுப்புகழ்த் தெய்வம்;–கலி .103-75
தொல் கதிர்த் திகிரியான்;–கலி .104-78; 105-72
ஆடுகொள் நேமியான்;
(சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியவன் -நேமி , திகிரி)
தெய்வ மால்;–கலி .103 to 108 (Mal= Black; Melanesian Islands in the Pacific Ocen meant Black People)
வெள்ளைக்காரக் கொள்ளைக் காரர்கள், நாடு பிடிக்க உலகம் முழுதும் சென்றபோது கறுப்புத் தோல் உடையவர்களைக் கண்டவுடன் அந்த பசிபிக் மகா சமுத்திரத் தீவுகளுக்கு மேலனெசியா என்று பெயர் சூட்டினார்கள்.
Maal = Mala= Mela
****
रत्नच्छाया-व्यतिकर इव प्रेक्ष्यमेतत् पुरस्ताद्
वल्मीकाग्रात् प्रभवति धनुःखण्डमाखण्डलस्य ।
येन श्यामं वपुरतितरां कान्तिमापत्स्यते ते
बर्हेणेव स्फुरितरुचिना गोपवेषस्य विष्णोः ॥ 15
Kalidasa wrote first Travelogue in the world. He wrote the first Meteorological book showing the course of Southwest Monsoon, the most important weather factor in India.
மேகதூத காவியத்தில் உலகத்தின் முதல் பயண நூலைக் காளிதாசன் எழுதினான்; அது மட்டுமல்ல உலகின் முதல் வானிலையியல் நூலையும் எழுதி தென் மேற்குப் பருவக்காற்றின் போக்கினை வர்ணிக்கிறான்.
15–ஆவது பாடலில் “ஏ மேகமே கிழக்கே பார்! மலை முகட்டினின்று இந்திர தனுஷ் என்னும் வான வில்லினைக் காண். ரத்தினங்கள் அத்தனையின் ஒளியையும் ஒருங்கே உமிழ்வதைப் பார். உன்னுடைய கரு நிற உடலின் மீது அது பிரகாசிப்பது விஷ்ணுவானவர் இடையன் கோலத்தில் வந்த (கிருஷ்ணனின்) வனின் மயில் பீலி மீது பிரகாசிப்பது போல இருக்கிறது” என்கிறான் காளிதாசன்
இந்தப்பாடலில் மேகமும் கருப்பு; விஷ்ணுவும் கருப்பு; கிருஷ்ணனும் கருப்பு; விஷ்ணுதான் கிருஷ்ணாவதார ம் எடுத்தான் அவன் தலையிலுள்ள மயில் பீலி, வானவில் பொழப்பு பிரகாசிக்கிறது என்ற எல்லா செய்திகளும் உள.
****
प्रालेयाद्रेरुपतटमतिक्रम्य तांस्तान् विशेषान्
हंसद्वारं भृगुपति-यशोवर्त्म यत् क्रौञ्चरन्ध्रम् ।
तेनोदीचीं दिशमनुसरेस्तिर्यगायाम-शोभी
श्यामः पादो बलि-नियमनाभ्युद्यतस्येव विष्णोः ॥ 59॥
பாடல் 59 -ல் மூன்று சுவையான செய்திகளைத் தெரிவிக்கிறான் .
முருகனுக்கு கிரவுஞ்ச்சபேதனார் என்ற பெயர் உண்டு இந்த கிரவுஞ்ச்ச இடைவெளி- இமயமலைக் கணவாய் –இன்றும் நிதி கணவாய் என்ற பெயரில் உள்ளது;; அதன் வழியாகத்தான் ரஷ்யாவிலிருந்து பறவைகள் தமிழ்நாட்டிலுள்ள வேடந்தாங்கல் வரை இன்றும் வந்து கொண்டிருக்கின்றன; அதைக் குறிப்பிட்ட பின்னர் பலியின் கர்வத்தை அடக்குவதற்கு ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாமன- த்ரிவிக்ரமாவதாரத்தையும் குறிப்பிடுகிறான்
திருவள்ளுவரும் அடி அளந்தான் என்று குறளில் புகழ்கிறார் விஷ்ணுவை ; 1.ஆக பறவைகள் குடியேற்றம் என்ற ஆர்னிதாலஜி ORNITHOLOGY FACT விஷயம், 2.கிரவுஞ்சபேதம் என்னும் முருகன் விஷயம், 3. விஷ்ணுவின் வாமன அவதாரம் ஆகிய அத்தனையும் கொட்டிவிட்டான் .
பாடலின் பொருள் இதோ:–
ஏ மேகமே, இமயமலையின் சரிவிலுள்ள பல அற்புதங்களைப் பார்த்துக்கொண்டே போ ; குறுகிய கிரவுஞ்ச கணவாய் வழியாகச் செல்வாயாக! அதன் வழியாகத்தான் குள்ள வாத்துக்கள் வருகின்றன பிருகு வம்சத் தலைவனின் பெருமையைப் பாடும் இடம் அது . குறுக்கு நெடுக்காக விரிந்த அந்த மலைப்பகுதி விஷ்ணு தனது கருமை நிறப்பாதங்களால் மகாபலியை அடக்குவது போல இருக்கும்—59
Krauñca (क्रौञ्च)—Sanskrit word for a bird “crane”, “demoiselle crane” (Anthropoides virgo). This animal is from the group called Plava (‘those which float’ or ‘those move about in large flocks’). Plava itself is a sub-group of the group of animals known as Ānupa (those that frequent marshy places).
Krauñca [Kraunch] is the name of a mythical mountain said to be the grandson of Himālaya who was pierced by Kārtikeya and Paraśurāma.
முருகன் அல்லது பரசுராமன் பிளந்த மலை என்ற கதையும் உண்டு அதனால்தான் காளிதாசன் பிருகு தலைவன் என்று சொல்கிறான்.
கிரவுஞ்ச என்பது நாரை, குள்ள வாத்து வகைப் பறவைகள்.
****
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்; பரிபாடல் 4-6/7
****
Five in One
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
பரிபாடல் 13-42/43
****
மலையொடு மார்பு அமைந்த செல்வன்; Chest as wide as mountain or as strong as hill- – கலி.108-55
உன்னை விஷ்ணு என்று எல்லோரும் அழைப்பது பொருத்தமே ; அசையாமல் நீ இருக்கிறாய்! உன்னுடைய நடுப்பகுதியோ அசையும் அசையாப்பொருட்கள் அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ளது – குமார சம்பவம், 6-67
பர்வத ராஜ குமாரி= பார்வதி
****
காளிதாசன் மாபெரும் சிவ பக்தன் .ரகு வம்ச முதல் ஸ்லோகத்தில் இந்த ஜகத்துக்கு பார்வதி பரமேஸ்வரன் பெற்றோர்கள் என்கிறான் குமார சம்பவ 8-27 பாடலில் சிவ பெருமானை ஜகத் குரு என்கிறான் . ஆயினும் அத்வைதத்தின் உச்சநிலையை அடைந்த அவனுக்கு மூவரும் ஒருவரே என்றும் தெரியும் ; இதோ குமார சம்பவப் பாடல் :
ஒரே கடவுள் மூன்றாகப்பிரிந்து அருள்புரிகிறார் ; அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்பது மாறி மாறி வரும்; சில நேரங்களில் சிவனைவிடப்பெரியவர் விஷ்ணு என்றும் , மேலும் சில இடங்களில் விஷ்ணு வை விடப்பெரியவர் சிவன் என்றும் அல்லது இவ்விருவரை விடப்பெரியவர் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார்கள்- 7-44
பரிபாடலில் விஷ்ணுவைப் புகழும் பாடல்களில் எல்லாம் அவனே என்ற கருத்து வருகிறது ; பகவத் கீதையில் விபூதி யோகத்த்தில் கிருஷ்ண எதில் எதில் சிறந்ததோ, அது தனது உருவமே என்பது போன்றது இது; காளிதாசன் அதைக் குமார சம்பவத்தில் ஒரே ஸ்லோகத்தில் சுருக்கமாகச் சொல்லவிட்டான் ; இதோ பரிபாடல்
பரிபாடல்-4
உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35
****
பகையும் நட்பும் இன்மை
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்’ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60
அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65
பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73
****
பரிபாடல் 3-48/58
வனப்பும் வலியும்
நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
‘தி ஸ்பேஸ் கேர்ள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் எமிலி காலண்ட்ரெல்லி (Emily Calandrelli) இருபது வருடங்களுக்கு முன்னால் விண்வெளியில் பறக்க ஆசைப்பட்டார்.
சென்ற ஆண்டு அந்தக் கனவு நிறைவேறியது. தனது இந்தப் பயணத்தால் அனைத்துப் பெண்மணிகளுக்கும் உத்வேகம் ஊட்ட வேண்டும் என்பது அவரது ஆசை.
“விண்வெளியில் பறக்க வேண்டும்; பறந்து விடுவேன் என்ற நம்பிக்கை என்று நான் ஏரோ எஞ்ஜினியரிங் படிக்க ஆரம்பித்தேனோ அன்றே ஏற்பட்ட ஒன்று.
ப்ளு ஆரிஜினின் NS-28 கலமானது பூமியின் துணை சுற்றுப்பாதையில் 2024 நவம்பர் 22ம் தேதி அன்று பறக்க ஆரம்பித்தபோது அது நிறைவேறியது.
உடனடியாக பத்தாயிரம் பேர் தாங்களும் அவர் போலப் பறக்க ஆசைப்படுவதைத் தெரிவித்தனர்.
ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு சிறிய தொகையை நன்கொடையாகப் பெற்ற அவர் மேற்கு வர்ஜீனியாவின் மகவுக்கொடை பராமரிப்பு அமைப்பிற்கு 30000 டாலரை அளித்தார்.
விண்வெளிக்குச் செல்வது என்பது பிரமிக்க வைக்கும் ஒரு பெரிய வாய்ப்பு என்பதை உணர்ந்த அவர் இதுவரை 700 பேர்களே உலகில் இந்த வாய்ப்பைப் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
“இந்த வாய்ப்பு மட்டும் எனக்குக் கிடைத்தது என்றால் மற்ற எல்லோரையும் உயரத்தில் ஊக்கி விட இதைப் பயன்படுத்துவேன். மேற்கு வர்ஜீனியாவில் சிறுகுழந்தைகள் மற்ற எல்லா மாநிலங்களையும் விட நான்கு மடங்கு மகவுக்கொடை பராமரிப்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். இதற்காக எப்படி நன்கொடையைப் பெறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றார் அவர்..
ஸ்பேஸ் கேர்ள் என்ற செல்லப்பெயரால் அறியப்பட்ட அவர் தன் பெயருக்குத் தக்கபடி நூறாவது பெண்மணியாக விண்ணிற்கு ஏகியதோடு தான் நினைத்தபடியே குழந்தைகளுக்கு உதவி தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டார்.
“இந்த நூறாவது பெண்மணி என்பதில் உள்ள நூறு என்ற நம்பர் எனக்கு விசேஷமான ஒன்றாகும். ஏனெனில் முதல் நூறு பேருக்குள் நான் இடம் பெற வேண்டும் என்று துடித்தேன். அதற்காகக் கடுமையாக உழைத்தேன். வெற்றி பெற்றேன். குறிப்பாக விண்வெளிக்குச் சென்ற பெண்கள் பிரபலமாகவும் ஆகவில்லை; சமூகத்தால் அங்கீகரிக்கப்படவும் இல்லை. அந்த நிலையில் நான் நூறாவது பெண்மணியாக ஆனேன்.” என்றார் அவர்.
37 வயதான எமிலி கல்லூரியில் படிக்கும் போதே நாஸாவில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பல விண்வெளித்திட்டங்களை அறிந்து கொண்டார். கூகிள், பிக்ஸர் உள்ளிட்டவற்றில் அனைத்தையும் பற்றி விவரிக்கும் அவர் அனைவராலும் ஸ்பேஸ் கேர்ள் என்று அழைக்கப்படலானார். அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளைமாளிகைக்கும் கூட அவர் அழைக்கப்பட்டார்.
பல்வேறு துறைகளிலும் நிபுணரான அவர் ஒரு அறிவியல் பேச்சாளர், பொறியியல் வல்லுநர், எழுத்தாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
காளிதாசன் காவியங்களில் மஹா விஷ்ணு; சங்க இலக்கியத்துடன் ஒப்பீடு- PART 2
முந்தைய கட்டுரையில் விஷ்ணுவைக் கடல் என்று வருணித்த காளிதாசன் ராமனையும் ராவணனையும் கடலுடன் ஒப்பிடுகிறான் .
விஷ்ணுவுடன் ஒப்பிட்ட போது கடலின் ஆழம், வர்ணம், பரப்பு ஆகியவற்றை ஒப்பிட்டு பெருமைப்படுத்தினான்
ரகுவம்சத்தில் எல்லை மீறும் சுனாமி பேரலை போன்றவன் ராவணன் என்றும் ரத்தினங்கள் நிறைந்த கடல்போன்றவர் விஷ்ணு என்றும் வருணிக்கிறான் ; அப்போதுதான் ராமாவதாரம் எடுக்கப்போகும் செய்தியை விஷ்ணு அறிவிக்கிறார்.
stutibhyo vyatiricyante dūrāṇi caritāni te || 10-30
கடலிலுள்ள ரத்தினங்களைக் கணக்கிடமுடியாது ; சூரியனின் ஒளிக்கதிர்களை அளவிட முடியாது . அதைப்போல மனதிற்கும் வாக்கிறகும் எட்டாத உமது செயல்கள் தோத்திரங்களுக்குள் அடங்காது..
xxx
अनवाप्तमवाप्तव्यम् न ते किञ्चन विद्यते।
लोकानुग्रह एवैको हेतुस्ते जन्मकर्मणोः॥ १०-३१
anavāptamavāptavyam na te kiñcana vidyate।
lokānugraha evaiko hetuste janmakarmaṇoḥ || 10-31
விஷ்ணு ஏன் அவதாரம் எடுக்கிறார் ?
“இதுவரை உமக்கு அடையப்படாதது எதுவுமில்லை ; அடைய வேண்டியதும் எதுவுமில்லை உலகிற்கு நலம் செய்தல் ஒன்றே உமது பிறப்பிற்கும் செயலுக்கும் காரணம்” என்று சொல்லி விஷ்ணுவைத் தேவர்கள் துதித்தார்கள்
மும்மூர்த்திகளில் காக்கும் தொழில் விஷ்ணுவுடையது ஆகையால்தான் அவருக்கு மட்டும் அவதாரம் செய்யும் கட்டாயம் உள்ளது என்பதை கவிஞன் அழகாக எடுத்துரைக்கிறான்.
xxxx
துதிகள் தோத்திரங்கள் ஏன் ஒரு அளவோடு நின்றுவிடுகின்றன என்பதற்கு அடுத்த ஸ்லோகத்தில் காரணமும் சொல்கிறான் காளிதாசன் .உமது பெருமைகள் அனைத்தையும் யாராலும் முழுதும் சொல்லமுடியாது அதனால் மனிதர்கள் களைப்படைந்து உன்னைப்பு கழ்வதை நிறுத்திக்கொள்கிறார்கள்!
महिमानम् यदुत्कीर्त्य तव सम्ह्रियते वचः।
श्रमेण तदशक्त्या वा न गुणानामियत्तया॥ १०-३२
mahimānam yadutkīrtya tava samhriyate vacaḥ।
śrameṇa tadaśaktyā vā na guṇānāmiyattayā || 10-32
xxxx
தேவர்களின் புகழுரையைக்கேட்ட விஷ்ணு நீங்கள் எல்லோரும் செளக்கியமாக இருக்கிறீர்களா? என்று வினவினார் . இதைக்கேட்ட தேவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆஹா நமது கோரிக்கை நிறைவேறப்போகிறது என்று எண்ணி சொன்னார்கள் ,
“பிரளய காலம் வரும் முன்னரே (சுனாமி போல) கரை தாண்டி ஊருக்குள் நுழையும் ராக்ஷச கடல் ஒன்றுதான் அச்சம் தருகிறது என்று சொன்னார்கள்.
இது நல்ல ஒப்பீடு! விஷ்ணுவை வருணித்தபோது எல்லை தாண்டாத ரத்தினங்கள் நிறைந்த கடல் என்று புகழந்தார்கள் இப்போது எல்லை தாண்டி (சுனாமி) பேரழிவை உண்டாக்கும் ராக்ஷஸன் என்று திட்டுகிறார்கள்
விஷ்ணு அமைதியான கடல் என்றால் இராவணன் கொந்தளித்து எல்லை மீறும் சுனாமி அலைகள் போன்றவன் என்று காளிதாசன் வருணிப்பது மிகவும் பொருத்த்தமே
To him whose kindly feelings towards gods were manifested by his enquiry about gods’ welfare did the gods narrate the danger from the ocean called demon Ravana that had overflowed its shore at a time other than that of final destruction. [10-34]
தேவர்களின் கோரிக்கையைக் கேட்ட விஷ்ணு உரத்த குரலில் கடற்கரையிலுள்ள குகைகள் அனைத்தும் எதிரொலிக்கப் பேசத் தொடங்கினார்
இந்தப்பேச்சு முழுவதிலும் உவமைகளும் உருவகங்களும் வருவதைப் படித்து ரசிக்கலாம்
இங்கு விஷ்ணுவுக்குப் பகவான் என்ற பெயர் வருகிறது ; இது பகவத் கீதையின் தாக்கத்தைக் காட்டுகிறது பகவான் என்றால் நிறைந்த பெருமை, வீர்யம், யசஸ்/புகழ், செல்வம், அறிவு , வைராக்யம்/ திட உறுதி என்ற ஆறு பண்புகளைக் கொண்டவர் என்று பொருள்
பிறகு பகவான் கூறினார் -அவருடைய குரல் சமுத்ரக்கரையிலுள்ள மலைகளின் குகைகளில் எதிரொலி செய்து , கடலின் பேரொலியையும் வென்றது – ரகு வம்சம் 10-35
அடுத்த ஸ்லோகம்
பகவானால் பேசப்பட்டதால் வாக்கும் பயன் அடைந்தது ; ஏனெனில் அவர் எழுத்துக்களின் ஸ்தானங்களிலிருந்து உச்சரித்தார்
உரைகாரர் விளக்கம் – மார்பு, நெஞ்சு, தலை, நாவின் அடிப்பாகம், பல், மூக்கு, உதடு, அன்னம் என்ற எழுத்து பிறக்கும் 8 இடங்களை பயன்படுத்தி எழுத்துக்களை உச்சரித்தார்
இந்த 10-36 ஸ்லோகம் முக்கியமானது ஏனெனில் விஷ்ணுவை புராண கவி என்கிறார் ;அதாவது வேதங்கள் இறைவனிடமிருந்து தோன்றின.
மேலும் மொழிக்குப் பாரதி என்ற சொல்லப் பயன்படுத்திவிட்டு புராண கவி என்றார் .செம்மையான தூய்மையான மொழி என்பதை க்ருத ஸம்ஸ்காரா என்கிறார் ; இதிலிருந்து சம்ஸ்க்ருதம் என்பது உருவானது என்று கருதலாம்.