Stamps posted today include YEAR 1997, YEAR 1998, STAMPS,
Pictures of 2500 Indian Stamps, PART 55,
MINT (NOT USED) STAMPS;
Four Lion Stamps, Four water birds, Gulzarilal Nanda, Jijabai, Assam News papers, Press Trust of India, Sanskrit College, Calcutta, Birth of Khala,National Defence Academy, Khajuraho, Maritime Heritage, Dindhu Darsan, Kumaraswamy Raja
–subham—
Tags– Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முருகன் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .
1………….. பத்து மார்க்
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
விடைகள்
1.ஆறு முகம் – பத்து மார்க்
2.கையில் வேல் – 10
3.வள்ளி , தெய்வானை – 10
4.மயில் வாஹனம் -10
5.காவடி எடுத்தல், பால்குடம் -10
6. வைகாசி விசாகம் அல்லது சூர சம்ஹாரம் – 10
7.கந்த சஷ்டி விரதம் -10
8.கந்த சஷ்டிக் கவசம் அல்லது திருப்புகழ் (இதில் கந்தர் அத்தாதி, கந்தர் அனுபூதி எல்லாம் அடக்கம் ) -10
9.காளிதாசனின் குமார சம்பவம் (முருகன் பிறப்பு) அல்லது நக்கீரரின் திருமுருகாற்றுப்படை – 10
10. கீழேயுள்ள கோவில்களில் ஏதேனும் ஒன்று : 10
திருப்பரங்குன்றம், திருத்தணி திருச்செந்தூர், சுவாமி மலை, பழனி, பழமுதிர்ச்சோலை (ஒன்று சொன்னால் போதும்).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எத்தனையோ அகஸ்தியர் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம்; ரிக் வேதத்தில் லோபாமுத்ரா என்ற மஹாராணியைக் கல்யாணம் கட்டிக்கொண்ட குட்டையான அகஸ்தியர் முதல் மருத்துவ நூல்கள் எழுதிய பிறகால அகஸ்தியர் வரை நாம் அறிவோம்; குள்ளமான அகஸ்தியர் சிலைகள் இந்தியாவில் மட்டுமின்றி தென் கிழக்காசிய நாடுகளிலும் இருப்பதால் இந்து சமய மு னிவர்களில் பெரும் புகழ் படைத்தவர் அகஸ்தியர் ஒருவரே என்பதையும் உறுதிபட சொல்லலாம் . காளிதாசனின் ரகுவம்சம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அகஸ்தியர்- பாண்டியர் தொடர்பினைக் கூறிவிட்டது. கடைசியாக நாம க்கு கவிதை எழுதிய பாரதியாரும் சிவபெருமான் தமிழ் மொழியை உண்டாக்கினார் அதற்கு அகஸ்தியர் என்ற பிராமணன் இலக்கணம் செய்து கொடுத்தான் என்று பாடிவிட்டார்.
ஆகையால் சிவபெருமான் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமையானது தமிழ் மொழி என்பதில் எள்ளவும் சந்தேகம் வர முடியாது!
ஆனால் தமிழ் வெறியை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ் ஆர்வத்தோடு அணுகினால் சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்னால் அகஸ்தியர் தமிழ் நாட்டிற்கு வந்தார் என்று சிவராஜ் பிள்ளை முதலியோர் எழுதிய ஆராய்ச்சி நூல்களை ஒப்புக்கொண்டு அங்கிருந்து காலத்தைக் கணக்கிடலாம். அகஸ்தியரை தமிழ்நாட்டிற்கு சிவ பெருமான் பதினெட்டு குடிகளுடன் அனுப்பியதற்கு முக்கிய காரணம் POPULATION PROBLEM பாபுலேஷன் பிராப்ளம் என்பதையும் நமக்கு இலக்கியங்கள் தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளன. அதுதான் உலகத்தின் முதல் ஜனத்தொகைப் பெருக்க பிரச்சினை என்பதும் முதல் திட்டமிட்ட குடிப் பெயர்வு (Southward migration of Hindus) என்பதும் எனது ஆராய்ச்சியில் கண்ட முடிவு. இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய சங்க இலக்கிய உரையே சான்று.
அகத்தியம் என்ற இலக்கண நூல் நமக்கு கிடைக்காமற் போனது நமது துரதிருஷ்டமே.; நிற்க
****
கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம் என்ற சம்ஸ்க்ருத நூலினை எஸ் திருவேகடாசாரி அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பாக (1957) வெளியிட்டார் . இதில் கங்கா தேவி எந்தளவுக்கு கற்றவர் பேரறிஞர் என்பது தெரிகிறது அவர் புகழும் மிகப்பெரிய புலவன் காளிதாசன் .
சம்ஸ்க்ருதத்தில் கவிதை வடிவில் மதுரா விஜயம் நூல் எழுதிய கங்கா தேவி, மதுரையில் முஸ்லீம் ஆட்சியை வேரறுத்து இந்து ஆட்சியை நிறுவிய மாபெரும் விஜய நகர படைத் தளபதி குமார கம்பண்ணனின் மனைவி . அவர் இல்லாவிடில் தமிழ் நாட்டில் இந்து மதம் அழிந்திருக்கும் அவரது காலம் 1365- 1370 CE
அதில் கங்கா தேவி அகஸ்தியர் பற்றிக்கூறுவதாவது
முதல் ஸ்லோகத்தில் பிள்ளையாருக்கு வணக்கம்;
இரண்டாவதில் பார்வதி பரமேஸ்வரனுக்கு வணக்கம்;
மூன்றாவதில் சரஸ்வதி தேவிக்கு நமஸ்காரம்;
நாலாவது ஸ்லோகத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் குலகுருவுக்கு வணக்கம் ;அவர் பெயர் க்ரியா சக்தி.
ஐந்தாவது ஸ்லோகத்தில் வால்மீகி முனிவருக்கு வாழ்த்து.
ஆறாவது ஸ்லோகத்தில் வியாசருக்கு நமஸ்காரம்;
ஏழாவது ஸ்லோகத்தில் காளிதாசனுக்கு அடிமையாகாத புலவர் எவரேனும் உண்டா? இன்றும் கூட அவரது வழிகாட்டுதலில் அல்லவோ வாழ்கிறார்கள்! என்று புகழ்கிறார்
இந்த மஹாராணி மெத்தப் படித்தவர் என்பதற்கு இது ஒன்றே சான்று! ஆயிரம் ஸம்ஸ்க்ருதக் கவிஞர்கள் இருந்த திலும் கடலில் முத்து எடுப்பது போலப் புகழ்பெற்ற கவிஞர்களை கால வரிசைப்படி புகழ்ந்துள்ளார்!
அகஸ்தியர் என்ற கற்றறிந்த கவிஞனைக்கண்டு பொறாமைப்படாமல் யாராவது இருக்க முடியுமா ? அவர் 74 கவிதை (நூல்) களை எழுதியவர் ஆயிற் றே!
பின்னர் கங்காதர, விஸ்வநாத ஆகியோரைப் புகழ்ந்து விட்டு இலக்கியத் திறனாய்வு பற்றிப் பாடுகிறார்.
யார் இந்த 74 கவிதை நூல் அகஸ்தியர்? அவரை ஏன் கவி திக்கையாவுக்குப் பின்னாலும் கவி கங்காதரவுக்கு முன்னாலும் வைத்தார்? அவர் எழுதிய 74 கவிதைகளோ கவிதை நூல்களோ எங்கே ?
கால வரிசைப்படிப் பார்க்கையில் இவர் நாம் அறியாத வேறு ஒரு புதிய அகஸ்தியர் என்று தெரிகிறது
இதற்கு உரை எழுதியோர் வாரங்கல் பிரதாபருத்ரதேவரின் ஆஸ்தான கவிஞர் அகஸ்தியர் என்றும் கங்காதேவிக்கு சீனியர் என்றும் கூறுகின்றனர்
பிரதாபருத்ரன் என்ற மன்னர் பற்றி அவர் எழுதிய கவிதை நூலி லிருந்து இதை அறிய முடிகிறது; அவருக்கு வித்யாநாத என்ற பட்டமும் இருந்திருக்கலாம். அவர் எழுதிய 74 நூல்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன நமக்குக் கிடைத்தவை:
பால பாரத , கிருஷ்ண சரித, நள கிர்த்தி கெளமுதி, லட்சுமி ஸ்தோத்ர, சிவ ஸ்தவ, லலிதா சஹஸ்ரநாமம், மணீ பரீக்ஷ, சிவ சம்ஹிதா, சகலாதிகார.
இந்த அகஸ்தியர் சம்ஸ்க்ருத உரைநடையில் வல்லவர் என்றும் தெரிகிறது.
அகஸ்தியருடைய அண்ணண் மகன் கங்காதர மூன்று சம்ஸ்க்ருத நாடகங்களை எழுதியுள்ளார் அவை மஹாபாரத, சந்திர விலாச ராகவ அப்யுதயம். இவரை இரண்டாவது வியாசர் என்று கங்காதேவி புகழ்வதால் அந்த மஹாபாரத நாடகம் விரிவானதாகவும் மிகச் சிறந் ததாகயும் இருந்திருக்க வேண்டும்.
இப்படி ‘அநிர்வேதம்’ (மனம் தளராமை) என்ற சொல்லைக் கூறிக் கொண்டு உற்சாகம் அடைகிறான்; வெற்றி பெறுகிறான்.
கடவுளரின் குணத்தைக் கொண்ட அனுமனே வெற்றிக்கான வழியைக் காண்பிப்பவன்.
அன்று முதல் இன்று வரை இது தான் உண்மை.
ஆகாய விமானத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்த ரைட் சகோதரர்களை எள்ளி நகையாடினார்கள் – பறவையைப் போல பறக்கும் எந்திரம் தயாரிக்கப்போகிறார்களாம், இவர்கள் என்று!
எடிஸனைக் கேலி செய்தார்கள் – மெஷினை வைத்து பேசப்போகிறானாம் இவன் என்று!
ஃபோர்டை எள்ளி நகையாடினார்கள் – சாலையிலே ஓடுமாம் இவனது கார் என்று.
அவர்கள் அனைவரும் ஜெயித்தார்கள் – உற்சாகத்தை மேற்கொண்டு!
இது முடியாது என்ற எண்ணத்தை விட்டுவிட்டு இது எப்படி முடியும் என்று எண்ண வைப்பது உற்சாகமே!
“ஒவ்வொரு பிரச்சினையும் அதற்கான தீர்வை அந்தப் பிரச்சினைக்குள்ளேயே வைத்திருக்கிறது.”
“Every Problem contains within itself the seeds of its own solution” –
இந்த 11 வார்த்தை சூத்திரத்தை உலகிற்கு அளித்தவன் ஸ்டான்லி ஆர்னால்ட் என்ற சிறுவன்.
13 வயதான அவன் க்ளீவ்லாந்திலேயே மிக மோசமாகத் தாவுபவன் (Jumber) என்ற பெயரைப் பள்ளியில் எடுத்தான். உடல்பயிற்சி நிலையத்திற்குச் சென்ற அவன் ஏன் முன்னால் தாவ வேண்டும், பின்னால் தாவிப் பார்த்தால் என்ன என்று நினைத்தான். அனைவரும் அவனது இந்த எண்ணத்தைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
ஆனால் அவன் முயன்று பின்னால் தாவிப் பார்த்தான். அனைவரும் தாவுவதற்கு நின்ற போது ஜிம்மில் இருந்த கோச் தாவலாம் என்ற போது அவன் பின்னால் தாவினான்.
என்ன ஆச்சரியம்! அவனது சாதனையை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவனைப் பாராட்டினார். புதிய ஒரு விளையாட்டு வழியைக் காட்டி உற்சாகத்தை அவன் உலகில் ஊட்டினான்.
பேக்வேர்ட் ப்ராட் ஜம்பரில் (BackwardBroad Jumber) உலகின் முதல் சாம்பியனாக அவன் ஆனான்.
மிகப்பெரும் நிறுவனமான ஸ்டான்லி ஆர்னால்ட் & அசோஸியேட்ஸ் – STANLEY ARNOLD & ASSOCIATES – நிறுவனத்தை நிறுவி உலகப் புகழ் பெற்றான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கணபதி என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .
விடைகள்
1.யானை முகம் – பத்து மார்க்
2.வளைந்த துதிக்கை அல்லது ஐந்து கரம் – 10
3.மோதகம்/ கொழுக்கட்டை- 10
4.மூஷிக / மூஞ்சுறு வாஹனம் -10
5.மஞ்சள் / களிமண் பிள்ளையார் -10
6. எருக்க மாலை அல்லது அருகம் புல்- 10
7.பிள்ளையார்/ விநாயக/ கணேஷ் சதுர்த்தி -10
8.விநாயகர் அகவல் அல்லது மஹாபாரதம் எழுதினார் -10
9.விக்னங்களை/ தடைகளை உண்டாக்குபவனும் அவனே; நீக்குபவனும் அவனே; அதனால் விக்னேஸ்வரன்- 10
10.கணபதி ஹோமம் அல்லது கீழேயுள்ள கோவில்களில் ஏதேனும் ஒன்று : 10
வாதாபி கணபதி ,திருச்செங்காட்டங்குடி, பிள்ளையார்பட்டி, அஷ்ட விநாயகர் கோவில்கள், மும்பை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், மணக்குள விநாயகர் (புதுவை) பொல்லாப் பிள்ளையார், திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில், மதுரைக்கோவில் முக்குறுணி விநாயகர் (ஒன்று சொன்னால் போதும்).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது
பாண்டியர் வரலாறு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்குகிறது என்பதை மஹாவம்ச க் குறிப்புகளிலிருந்து அறிகிறோம் என்றும் அதற்குப் பின்னர் கல்வெட்டுக் குறிப்புகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே கிடைப்பதால் அந்த இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த குறைந்தது 50 அல்லது 60 அரசர்களைக் கண்டுபிடித்து கால வரிசைப்படுத்த வேண்டும் என்றும் கட்டுரையின் முதல் பகுதியில் கண்டோம்.
சம்பந்தரும் அப்பரும் தேவாரத்தில் மாணிக்கவாசகரின் லீலைகளைக் குறிப்பிட்ட பின்னரும் அதைக் கண்டுகொள்ளாமல் வரகுணன் என்ற ஒரே குறிப்பை மட்டும் வைத்து மாணிக்க வாசகரைப் பின்னுக்குத் தள்ளியது தவறு என்பதை இப்போது காண்போம் .
நரி பரி ஆன லீலை
மதுரைக் கோவிலுக்குச் சென்றோர் அனைவரும், கல்லில் ஆன வன்னி மரம், சிவலிங்கம், அருகில் ஒரு கிணறு இருப்பதை பிரகாரத்தில் கண்டிருப்பார்கள். வன்னி மரமும் கிணறும் சாட்சியாக வந்த ஸ்தல வரலாறு இது ; கண்ணகி ஏழு மாபெரும் பத்தினிகளைச் சொல்லும் சிலப்பதிகார வஞ்சினமாலைப் பகுதியில் இந்தக்கதை வருகிறது ; நல்ல அருமையான ஆராய்ச்சி உரை எழுதிய உ. வே சாமிநாத அய்யர் தஞ்சசைப் பிரதேசத்திலுள்ள (திருப்புறம்பியம் சாட்சிநாதர் , திருமருகல் ) ஓரிரு கோவில்களின் கதைகளில் இது இருப்பதாகச் சொல்லியுள்ளார் . ஆனால் சிலப்பதிகாரத்தை முதல் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வி ஆர் ராமசந்திர தீட்சிதர் , திருவிளையாடல் புராணத்திலும் (தி.வி.பு) இக்கதை இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார் ; சான்றுரைத்த திருவிளையாடல் என்பது கடைசி (64) திருவிளையாடல் ஆகும். சிலப்பதிகார காலம் இரண்டாம் நூற்றாண்டு என்றால் இந்த சம்பவம் அதற்கு முன்னால் நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா?
சம்பந்தர் தேவாரத்தில் வரும் திருவிளையாடல் நிகழ்ச்சிகளை ஏ.வி ஜெயச்சந்திரன் எழுதிய நூலில் பட்டியலிட்டுள்ளார் . அதில் ஆராய்ச்சிக்குரியவை நான்மாடக்கூடல், திரு ஆலவாய் ஆன படலங்கள் ஆகும். மிக முக்கியமானது திருமுகம் கொடுத்த குறிப்பு! சிவ பெருமான் பாணபத்திரருக்கு RECOOMENDATION LETTER ரெக்கமண்டேஷன் லெட்டர் கொடுத்து அனுப்பிய படலம் அது. உலகிலேயே இலக்கியத்தில் காணப்படும் முதல் சிபாரிசுக் கடிதம் இதுதான்; கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம் பெறவேண்டியது . இதை எல்லோரும் சேரமான் பெருமாள் காலம் என்ற பகுதியில் வைத்துப் பின்னுக்குத் தள்ளுகின்றனர் .
இதற்கு இன்னுமொரு உதாரணம் அப்பர் தேவாரத்தில் வருகிறது .
சங்கத் தமிழ் நூல்களில் மிகப்பெரிய HISTORIAN ஹிஸ்டோரியன்- வரலாற்று ஆசிரியர் பரணர் ; எழுபதுக்கும் மேலான சம்பவங்களை நமக்கு அளிக்கிறார் அதே போல 12 திருமுறைகளில் மிகப்பெரிய ஹிஸ்டோரியன் அப்பர் பெருமான்; வடக்கே பாடலிபுத்திரம் வரை சென்று , காளிதாசன் போல, இந்தியாவையே அளந்தவர் . அவர் சொல்லும் தி.வி.பு பட்டியலில் முக்கியமானவை:
தருமிக்குப் பொற்கிழி அளித்தது ;
நரி, பரியானது;
மண் சுமந்தது (சிவ பெருமானே புட்டுக்கு மண் சுமந்த நிகழ்சசி இன்றும் மதுரையில் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு புட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
நரி -பரி, புட்டுக்கு மண் சுமந்தது– இரண்டும் மாணிக்க வாசகர் கதைகள். இவ்வளவு தெளிவான சான்று இருந்தும் வீம்பு பிடிக்கும் பிடிவாதப் பேர்வழிகள் மாணிக்கத்தைப் பின்னுக்குத் தள்ளுவது ஏனோ தெரியவில்லை.
கூன் பாண் டியன் சுரம் தீர்த்த படலம் படலம்
பாவை பாடிய வாயால் கோவை பாடிய மாணிக்கம், திருக்கோவையில் இரண்டு முறை வரகுணநைக் குறிப்பிடுகிறார்; நமக்குத் தெரிந்தவரை 17ஆவது நூற்ரா ண்டு வரை 3 வரகுணன்ங்கள் இருக்கிறார்கள் சிவ பக்தர்களுக்கு எல்லாம் இப்பட்டம் கிடைத்திருக்கிறது; ஆகையால் இவர்களுக்கு எல்லாம் மூத்த ஒரு சிவ பக்த வரகுணன் இருந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து. அப்பரும் சம்மந்தரும் பொய் சொல்ல மாட்டார்கள்! இப்போது சுந்தரர் -பாணபத்திரன்- சேரமான் பெருமாள் நாயனார் – சிபாரிசுக் கடித புதிரை விடுவிக்க வேண்டும் ஒன்று, திருமுகம் கொடுத்த தேவார பாடல் தவறாக ச ம் பந்தர் தேவாரத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது பாணர்- சேரமான் பெருமாள் நாயனாரை முன்னுக்குத் தள்ள வேண்டும் ; இதற்கு ஆதாரங்கள் தேவை.
இந்திய வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியைவைத்து இன்னொருவர் காலத்தைக் கணிக்கும் அவல நிலை இருக்கிறது; மாண்டசோர் கல்வெட்டு ஒன்றினை வைத்து காளிதாஸருக்கு 700 ஆண்டு காலம் கற்பித்த கதை போன்றது இது !
கல்லாடம் என்னும் நூலில் 31தி வி பு சம்பவங்கள் வருகின்றன
அதிலும் திருமுகம், நரி- பரி, மண் சுமந்தது வருகின்றன
Picture-மண் சுமந்தது
சங்க லத்திலிருந்து பல கல்லாடர் இருந்த சான்று உள்ளது; ஆகையால் இந்தக் கல்லாடர் காலத்ததையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மாணிக்கவாசகருக்குப் பின்னர் 12 மன்னர்கள் இருந்ததைச் சொல்லி சம்பந்தர் கால கூன் பாண்டியனைக் குறிப்பிடுகிறார். ஆகவே குறைந்தது 200 ஆண்டு இடைவெளி; அதாவது மாணிக்க வாசகர் சம்பந்தருக்கு முந்தியவர்; மேலும் நின்ற சீர் நெடுமாறன் என்று போற்றப்படும் கூன் பாண்டியன் மட்டும் நெடுமாறன் அல்ல என்பது பெரியாழ்வார் குறிப்பிடும் நெடுமாறனால் தெரிகிறது. நம்மாழ்வார் வரகுணமங்கை என்ற ஊரைப்பாடுகிறார். அங்கோ சிவன் சம்பந்தமே இல்லை .
இதிலிருந்து தெரிவது என்ன வென்றால், ஒரு வரகுணன் மட்டும் இல்லை; ஒரு நெடுமாறன் மட்டும் இல்லை, ஒரு சேரமான் மட்டும் இல்லை; இந்த திறந்த மனத்தோடு தி வி பு. வை அலசி ஆராய வேண்டும்.
கடைசியாக ஒரு விஷயம். பரஞ்சோதி முனிவர் எழுதிய தி.வி.பு.வில் மிகத்தெளிவாக மன்னர் வரிசை உள்ளது.
நல்ல வேளையாக 64 திருவிளையாடல்களை ஆயிரம் ஆண்டுக்கு முந்தையவை என்பதை எல்லா சான்றுகளும் காட்டுகின்றன கரிகாலன் பெயர் கூட தி.வி.பு.வில் வருகிறது.
சுந்தர பாண்டியன் என்ற பெயரில் நாலைந்து பேர் இருந்ததை பரஞ்சோதியே சொல்கிறார். ஆதி சங்கரர் சொல்லும் சுந்தர பாண்டியன் யார் ?
காக்கைபாடினியார் எழுதியது காக்கைபாடினீயம்; அகத்தியர் எழுதியது அகத்தியம் ; தொல்காப்பியர் எழுதியது தொல்காப்பியம்; பாணினி எழுதியது பாணினீயம்; சுந்தர பாண்டியன் எழுதியது சுந்தர பாண்டியம் ; சங்கரர் காலம் 732CE என்று வாதிடுவோர், அவருக்கு முந்தையா சுந்தர பாண்டியனைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லவா ?
முன்னர் சொன்னபடி, கடுங்கோனுக்கு முன்னர் ஆண்ட ஐம்பது பாண்டியர்களைக் கண்டுபிடிக்க தி வி பு உதவும்.
மாணிக்கவாசகர் காலம் பற்றிய எனது பழைய கட்டுரைகளில் மேலும் பல தகவல்களைக் காணலாம்
*****
ஆதீனங்களுக்கு வேண்டுகோள்
திருமந்திர மகாநாடு, சைவ மகாநாடு கூட்டுவது போல தி வி பு மஹாநாட்டினைக் கூட்டி பல் துறை அறிஞர்களைக் கொண்டு ஆராயவேண்டும். ஏனெனில் தி. வி. பு. வில் பல சுனாமி அழிவுகள், தலைநகர் மாற்றங்கள் பாபுலேஷன் பிராப்ளம்/ மக்கட் தொகை பெருக்கம், 12ஆண்டு வறட்சி, பிராமணர் -செட்டியார் குடி பெயர்வு, இலங்கை முதல் இமயம் வரை ஜியாக்ரபி / புவியியல் ,பல நாடுகள், கத்திச் சண்டைப் போட்டி, சங்கீதப் போட்டி, வழக்காடுதல், சங்கப் புலவர் சண்டை என்று பல துறை விஷயங்கள் வருகின்றன.
விரைவில் மகாநாட்டில் சந்திப்போம்
–subham—
Tags பாண்டியர், வரலாற்றில், தீர்க்கப்படாத மர்மங்கள், புதிர்கள், PART 2, ஆதீனங்களுக்கு, வேண்டுகோள் ,மாணிக்கவாசகர் காலம், கல்லாடம்,முதல் சிபாரிசுக் கடிதம்,வரகுணன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Terrorists never change; they will never change. History repeats itself. In Pahalgam in Kashmir, Muslim terrorists checked the genital organs of male Hindus to find whether they had circumcised or not.
In Urdu, the removal of the foreskin, as practiced in Islam, is commonly referred to as خِتَن (Khatna) or ختان (Khitan). These terms are the direct translations of the Arabic words “Khatna” and “Khitan” respectively, which refer to circumcision. Circumcision is a widely accepted practice in Islam, often viewed as a sunnah (prophet’s tradition).
This is what happened in Madurai for 48 years according to MUSLIM WRITERS!
Two years ago jews were massacred in Israel.
So Pahalgam massacre is not new. It may happen again and again in India, in America or in Australia or Europe
Here is the report of Muslim Pilgrims from Madurai in 1341 CE.
The Muslim rule lasted for 48 years in Madurai between 1323 and 1371 CE. The suffering of people, especially non-Muslims during the period have been described by both Hindu and Muslim historians. One has only to read the frightful accounts of Ibn –Batuta, the Moorish traveller, and the Mathura Vijayam of Ganga Devi to get the details of the Muslim policy towards Hindus; inscriptions too refer to the terrible Musselman days.
The statements of Ibn –Batuta must be of special importance to us as they are records of his own personal experiences and not based on hearsay or previous chronicles. Ibn –Batuta, had himself, though reluctantly, to witness the ghastliest sights. Thus, he describes his experience when he went to
Ghiasudin in latter’s anti Hindu campaign:
“the country we had to traverse was an impenetrable jungle of trees and reeds. All the infidels (Hindus) found in the jungle were taken as prisoners. Each was accompanied by his wife and children, and they were thus held to the camp. It is the practice here to surround the camp with a palisade having four gates. There may be a second palisade round the king’s habitation. outside the principal enclosure they raise platforms three feet high and light fires on them at night.”
“Slaves and sentinels spend the night here, each holding in his hand, a bundle of very thin reeds. When the infidels approach for a night attack on the camp, all the sentries light their faggots, and thanks to the flames, the night becomes as bright as day and the cavalry sets out in pursuit of the idolators (Hindus). In the morning the Hindus who had been made prisoners the day before were divided into four groups and each of this was led to one of the four main gates of the main enclosure. There they were impaled on the posts they had themselves carried. Afterwards their wives were butchered and tied to the stakes by their hair. The children were massacred on the bosoms of their mothers and their corpses left there. Then they struck camp and started cutting down the trees in another forest and all the Hindus who were made captive were treated in the same manner. This is shameful practice, and I have not seen any other sovereign adopt it; it was because of this that God hastened the end of Ghiassuddin.”
This is the report of MUSLIM TRAVELLER.
More paining is the account that the traveller gives about the sultan’s treatment of his Hindu subjects in his day-to-day administration.
“one day the Qazi and he (the traveller) with the Sultan, the Qazi being to his right and he to his left. An idolator (Hindu who worships idols) was brought before the sultan, with his wife and son aged seven years. The sultan made a sign with his hand to the executioners to cut off the hands of the idolator. Then he said to them in Arabic, and “his son and wife”. They cut off their hands and at this traveller turned his eyes away. When he composed himself, he found their heads on the ground.
On another occasion he was with Sultan Ghiasuddin when a Hindu was brought to him. He spoke words that his guest (the traveller) could not understand and at once many of his followers drew their swords. Ibn –Batuta got up hurriedly and the Sultan asked “where do you go ?”
The guest replied “I go to my afternoon prayers”. He understood the guest’s motive, laughed and ordered the hands and feet of the idolator (Hindu) to be cut off. On his return Ibn –Batuta found that unhappy man was swimming in his blood .
More information is available in
K A Nilakanta Sastri’s FOREIGN NOTICES. Also Briggs:Ferishta’s Mohammedan Power Vol.I, pages 347-352. Also Elliot and Dowson Vo.II: Barni’s Turkish -i-firoz-sahipp 184-185.
MADHURA VIJAYAM OF GANGA DEVI , CANTO VIII
INSCRIPTION: Seventh Year Inscription of Raja Narayanan Sambuvaraya.
–subham—
NEWS PAPER REPORTS
ANI REPORT JUNE 2025.
When Aishanya and Shubham Dwivedi married in February, they began planning a vacation to Indian-controlled Kashmir to celebrate.
As the couple paused for a snack in its lush Pahalgam meadow surrounded by snow-capped Himalayan peaks, a man approached them from behind. He didn’t look threatening at first, Aishanya told The Associated Press. She thought he might be a local guide.She said the man looked at the couple with piercing eyes and asked one question: “Are you a Hindu or a Muslim?” If they were Muslim, he said, they should recite the Islamic declaration of faith.The couple froze. Aishanya thought it was perhaps some local performance. “We are Hindus,” her husband said.Without hesitation, the man pulled out a gun and shot him “point blank in the head,” Aishanya, 29, said, and sobbed. Her husband collapsed on her, soaking her in blood.***
Pahalgam massacre echoes global pattern of Islamist violence, say experts
Read more At:
****
‘Are you a Hindu?’: Kashmir attack survivors say gunmen asked their religion before opening fire
Asia / Pacific FRANCE 24
The attack, which targeted mostly Hindu tourists and left 26 people dead, is one of the deadliest in recent years in India-controlled Kashmir and has raised questions about security in the region. India has blamed Pakistan for supporting the massacre, which Pakistan denies.
Issued on: 30/04/2025 – 16:21
****
Tags- Hindu Massacre, Muslim Terrorists, Ganga Devi, Madhura Vijayam, Pahalgam Massacre, History Repeats, Madurai Sultan, Ghiasuddin Ibn Batuta account
7-6-25 மாலைமலர் இதழில் வெளி வந்த இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை! – 2
ச. நாகராஜன்
கன்யாகுமரி
பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது. இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.
முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா. மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார்.
சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர். அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்யாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.
கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர்.
ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவபிரான் ஏற்றார்.
மண நாளன்று தாணுமாலயன் கன்யா குமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார்.
சிவபிரான் விடிந்து விட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார். தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.
திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள்.
இதுவே கன்யாகுமரி கடற்கரை வண்ணமயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாணாசுரன் கன்யாகுமரியின் அழகில் மயங்கித் தன்னை மணக்குமாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவியானவள் வானுயரும் வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள்.
தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள். குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு.
தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அந்த மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. தூரத்தில் வரும் கப்பல்கள் மூக்குத்தி ஒளியால் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது.
கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள்.
இங்கிருந்து சூரியோதயத்தைக் கண்டு மகிழ்வது சிறப்பாகும்.
கன்யாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.
இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப்பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;
இங்கு தான் உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலையும் உள்ளது.
இப்படி தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு பயணம் மேற்கொள்பவர்கள் குற்றாலம், தென்காசி, திருச்செந்தூர், திருநெல்வேலி, சுசீந்திரம், கன்யாகுமரி ஆகிய புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்ல நல்லதொரு பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். புத்துணர்ச்சியோடு தெய்வ அருளையும் பெறலாம்.
தொடர் முடிகிறது
ஶ்ரீ நகர், ஜெய்பூர், கோவா, கோவளம், மைசூர், விசாகப்பட்டினம், வழியாக ஒரிஸா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீஹார், ஹிமாசல் ப்ரதேசத்தில் உள்ள பல இடங்களுக்கும் சென்று கைலைமலை நாதனை தரிசித்து, தேவி கன்யாகுமரியையும் தரிசித்ததோடு இந்தப் பயணத் தொடர் முடிவடைகிறது. ஊக்கமூட்டிய வாசகர்கள், மாலைமலர் நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.