DECCAN CHRONICLE CARTOONS UNTIL 30-7-2025

 BEST CARTOONS FROM AN INDIAN NEWSPAPER

POSTED BY LONDON SWAMINATHAN ON 30-7-25

THANKS TO DECCAN CHRONICLE 

——SUBHAM——

TAGS- deccan chronicle, 30-7-2025, cartoons

Tamil Quotes on Wisdom and Knowledge; August 2025 Calendar (Post No.14,813)

Written by London Swaminathan

Post No. 14,813

Date uploaded in London –  30 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Following are quotes from the book of Tamil proverbs by Percival. These are about wisdom, knowledge and the wise.

Festivals: 2-Adip Perukku River Festival in Tamil Nadu; ; 8-Varalakshmi Vrat; ; 9-Rik, Yajur Upakarma, Avani Avittam ,Raksha Bandan; 10Gayatri Japa; 15-Independence Day; 16-Janmashtami/ Lord Krishna’s Birth Day.

27-Vinayaka/ Ganesh  Chaturthy, 28-Rishi Panchami

Full Moon Day -9; New Moon Day-23; Ekadasi / Monthly Hindu Fasting Days- 5,19;

Auspicious Days- 20, 28, 29

August 1 Friday

69. அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?
Will one ignorant at five understand at fifty ?
Early instruction essential to future knowledge. The proverb may also suggest that growth in years will not make one, that is naturally dull, bright.

***

August 2 Saturday

221. அப்பியாசம் கூசாவித்தை .
Experience is knowledge that maketh not ashamed.

***

August 3 Sunday

222. அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை.
Thoroughly acquired knowledge does not fail.
Said in commendation of obvious efficiency.

***

August 4 Monday

265. அரங்கின்றி வட்டாடலும், நூலறிவின்றிப் பேசலும் ஒன்று.
To play draughts without a board and to speak without a knowledge of the shastras are alike.

***

August 5 Tuesday

488. அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்.
It is the merit of the wise to gain knowledge by meditation.

***

August 6 Wednesday
493. அறிய அறியக் கெடுவார் உண்டா ?
Do any become vicious by increasing knowledge ?

***

August 7 Thursday

505. அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.
Wisdom is regulated by knowledge, good conduct by love.

***

August 8 Friday

719. ஆமுடையான் கோப்பில்லாக் கூத்தும், குருவில்லா ஞானமும் போல் இருக்கிறான். The husband resembles a merry, making without food and knowledge without a competent teacher.

***

August 9 Saturday
1945. கசடான கல்வியினும் கல்வியீனம் நலம்.
Ignorance is better than imperfect knowledge.

***

August 10 Sunday

2492. காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது.
Dreams of bliss and premature wisdom are not lasting.

***

August 11 Monday

1319: உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.
To the world wisdom is folly, to wisdom the world is folly.

***

August 12 Tuesday

505. அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.
Wisdom is regulated by knowledge, good conduct by love.

***

August 13 Wednesday
507. அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்.
A mouth that instructs and a tongue uttering words of love.
Spoken of one characterized by wisdom and love.

***

August 14 Thursday

4937. பெற்றோர்க்கு இல்லைச் சுற்றமும் சினமும்.
The wise are not moved by relationship or anger.

***

August 15 Friday

5561. வருமுன் காப்பவன் சொன்ன புத்தியை வந்தபின் காப்பவன் தள்ளினதுபோல.
As the after-wise, rejected the advice of the fore-sighted.

***

August 16 Saturday

5739. விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர்.
There are few on the face of the wide world who are wise.

***

August 17 Sunday

5896. வெளிச்சம் இருள் ஆனால் இருள் என்னவாம், மெய்ஞ்ஞானி துர்மார்க்கனானால் அஞ்ஞானி எப்படி ஆவான்?

***

August 18 Monday
If light become darkness, what will the darkness be; if a wise man becomes wicked, what a great fool he will be?

***

August 19 Tuesday

502: அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்.
He that increaseth knowledge increaseth sorrow.

***

August 20 Wednesday

306. அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல்.
It is difficult indeed to comprehend the purport of the five letter,
The famous fire lettered incantation called the மூலமந்திரம் as being the foundation of all spiritual wisdom and all religion, and the means prescribed and proper for obtaining emancipation from births and all the evils thereunto belonging, and union with the supreme.

***

August 21 Thursday

1825. ஒரு தரம் விழுந்தால் தெரியாதா ?
Having fallen once are you not wiser ?

***

August 22 Friday

1781. ஐயம் ஏற்றும் அறிவே ஓது.
Though reduced to beggary, learn to be wise.

***

August 23 Saturday

810. ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.
Although each of you may cuff the fellow, he will not thereby become wiser.

***

August 24 Sunday

715. ஆமுடையான் செத்தபின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது.
The woman became wise after the death of her husband.

***

August 25 Monday

508. அறிவுடையாரை அரசனும் விரும்பும்.
Even a king will approve of wise men.

***

August 26 Tuesday
4480. பட்டு அறி கெட்டு அறி பத்து எட்டு இறுத்து அறி.
Be wise by suffering, by poverty, and by paying ten and eight fines.

***

August 27 Wednesday

4477. பட்டால் அறிவான் சண்டாளன், மழை பெய்தால் அறிவான் வெள்ளாளன்.
A rogue is wise when punished, the farmer when it rains.

***

August 28 Thursday
3520. ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லை.
A wise man and a fool do not associate.

***

August 29 Friday

3519 ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.
The wise are not affected by pleasure and pain.

***

August 30 Saturday

85. அடக்கமுடையார் அறிஞர், அடங்காதார் கல்லார்.
The well-ordered are wise; the disorderly are fools.

***

August 31 Sunday

421. அவிவேகி உறவிலும், விவேகி பகையே நன்று.
Better is the hatred of the wise than the friendship of fools.

***

BONUS QUOTES

509. அறிவுடையாரை அடுத்தாற் போதும்.
To obtain the favour of the wise is enough.

4662. பாரபுத்தி உள்ள பறவை பதரால் பிடிக்கப்பட்டது.
A wise bird has been caught with chaff.

—subham—

Tags- Tamil Proverbs, August 2025, calendar, wise, wisdom, knowledge, Quotations, QUOTES

அபிராமி அந்தாதி மேற்கோள்கள்! ஆகஸ்ட் 2025 காலண்டர் (Post No.14,812)

Written by London Swaminathan

Post No. 14,812

Date uploaded in London –  30 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதியின்  முதல் 31  பாடல்களுக்கு (உரை நடையில் ; பாடல் வடிவில் அல்ல) எளிய விளக்கத்தைக் கொடுத்துள்ளேன். இதைப் படித்துவிட்டு பட்டரின் பாடல்களைப் படித்தால் நன்றாகப் பொருள் விளங்கும் என்ற நம்பிக்கை எனக்குளது;  இந்த நூலுக்கு மாபெரும் தமிழ் அறிஞர் கி வா ஜகந்நாதன் எழுதிய அற்புதமான உரை இன்டெர் நெட்டில்  இலவசமாகக்  கிடைக்கிற்து ; எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அது .

பண்டிகைகள் 2-ஆடிப்பெருக்கு ; 8-வரலெட்சுமி விரதம் ; 9-யஜுர் ரிக் உபாகர்மா, ஆவணி அவிட்டம் ,ரக்ஷா பந்தன்; 10காயத்ரீ ஜபம்15-சுதந்திர தினம்; 16-ஜன்மாஷ்டமி/கிருஷ்ணன் பிறப்பு;

27-விநாயக சதுர்த்தி, 28-ரிஷி பஞ்சமி.

பெளர்ணமி -9; அமாவாசை-23; ஏகாதசி- 5,19;

சுப முகூர்த்த தினங்கள்- 20, 28, 29

ஆகஸ்ட் 1 வெள்ளிக்கிழமை

1.செங்கதிர், திலகம், மாணிக்கம், மாதுளம் பூ, மின்கொடி, குங்குமம் ஆகிய ஆறின் (6) நிறமுள்ள அன்னையே எனக்கு பெரிய துணையாவாள்.-1

***

ஆகஸ்ட் 2 சனிக்கிழமை

வேதமென் னும் விருட்சத்தின் கிளையும், அதன் முடிவிலுள்ள கொழுந்தும், கீழே பரவிப் பதிந்துள்ள அதன் வேரும் திரிபுரசுந்தரியே -2

***

ஆகஸ்ட் 3 ஞாயிற்றுக்கிழமை

வேறெவரும் அறிய முடியாத ரகசியத்தை நான் அறிந்து, அதன் காரணமாக உன் திருவடிகளை அடைந்தேன்.-3

***

ஆகஸ்ட் 4 திங்கட்கிழமை

மனிதர்களும் தேவர்களும்  முனிவர்களும் வந்து தலை தாழ்த்தி நின்று வணங்கிப் போற்றும்  திருவடிகளையும் மெல்லியல்பும் கொண்ட கோமளவல்லி அன்னையே!-4

***

ஆகஸ்ட் 5 செவ்வாய்க்கிழமை

நீள் சடைகொண்ட சிவபிரான் உண்ட நஞ்சைக் கழுத்தளவில் நிறுத்தி அமுதமாக்கிய அம்பிகையின் பொன்னடி என் தலையின் மீது பொருந்தியுள்ளது. அதை நான் வணங்குகிறேன்.,-5

***

ஆகஸ்ட் 6 புதன்கிழமை

என் நெஞ்சினுள்ளே உன் அழகிய திருமந்திரச் சொல் நிலை பெற்றுள்ளது. உன் அடியவ ர்களுடன் நான் பாராயணம் செய்வது, உன் பெருமைகளைக் கூறும் மேலான நூல்களையே !-6

***

ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை

பிரம்மாவிஷ்ணுசிவன் மூவரும்  வணங்கி எந்நாளும் துதித்து மகிழும்  அன்னையே! தயிர் கடையும் மத்தைப் போல, பிறவிக் கடலாம் சுழலில் சிக்கி அலையாமல், இருக்க அருள்புரி-7

***

 ஆகஸ்ட் 8 வெள்ளிக்கிழமை

மகிடன் என்னும் அசுரனின் சிரத்தின் மேல் நிற்கும் அந்தரி,பிரமதேவனின் கபாலத்தைத் தாங்கும் திருக்கரத்தைக் கொண்ட அபிராமி அன்னையே! உன் தாமரைத் திருவடிகள் என் உள்ளத்தில் என்றும் பொருந்தி நிற்கின்றன.-8

***

ஆகஸ்ட் 9 சனிக்கிழமை

அன்னையே!  அழுத பிள்ளையான ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பாலூட்டிய திருத்தனங்களும், அவற்றின்மேல் புரளும் முத்துமாலையும், கரத்திலுள்ள கரும்பு வில், மலர் அம்புகள் ஆகியனவும், அழகிய புன்னகையும் காட்டி, உன் முழுமையான காட்சியை  காட்டுவாயாக-9

^^^

ஆகஸ்ட் 10 ஞாயிற்றுக்கிழமை

நான் நின்றவாறும், இருந்தவாறும் படுத்தவாறும், நடந்தவாறும், தியானம் செய்வதும் உன்னை த்தான்-10

***

ஆகஸ்ட் 11 திங்கட்கிழமை

பஞ்சபூதங்களுக்கும் முடிவாக நிற்கும் தேவியின் திருவடித் தாமரை, நான்கு வேதங்களுக்கும் எல்லையாய் நிற்பது,  சிவபெருமானின் திருமுடியில் அணியப்பட்ட மாலையாயும் திகழ்கிறது.-11

***

ஆகஸ்ட் 12 செவ்வாய்க்கிழமை

நான் அல்லும் பகலும் கருதுவதெல்லாம் உன் புகழ்; கற்பதெல்லாம் உன் திருநாமம். எந்நேரமும் உள்ளமுருகப் பிரார்த்திப்பது உன் இரு திருவடித் தாமரைகளைத் தான்.  நான் இருப்பது  அடியவர்களின் கூட்டத்தில்தான். என்ன புண்ணியம் செய்தேனோ நான் அறியேன்.-12

***

ஆகஸ்ட் 13 புதன்கிழமை

14 உலகங்களையும் ஈன்றதுடன், பாதுகாப்பவளும், சம்காரம் செய்பவளுமான தாயே!  நீலகண்ட சிவனுக்கு முன் பிறந்தவளே!  திருமாலின் தங்கையே!  நான் உன்னையன்றி   இன்னொரு தெய்வத்தை வழிபட  இயலுமோ? (இயலாது)-13

***

ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை

எம் தலைவியான அபிராமி அன்னையே! தேவர்கள், அசுரர்கள்  உன்னை வழிபடுகிறார்கள். பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை எண்ணித் தியானம் செய்கின்றனர்.  சிவபெருமானோதம் உள்ளத்தினுள்ளே உன்னை அன்பினால் கட்டிவைப்பவர், இதனால் உன்னைத் தரிசிப்பவர் களுக்கு உன்குளிர்ச்சி மிக்க  தரிசனம் எளிதாக இருக்கிறது.-14

***

ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை

உன் பேரருளைப் பெற வேண்டுமென முற்பிறவிகளில் பல கோடி தவங்களைச் செய்தவர்கள்,  அரச போகத்தையும் ,வானுலகை ஆளும் அரிய செல்வத்தையும் மோட்சம் என்னும் வீட்டையும் பெற்று மகிழ்வர்.-15

***

ஆகஸ்ட் 16 சனிக்கிழமை

எண்ணிப் பார்த்திட வொண்ணாத எல்லை கடந்து நின்ற பரவெளியே! ஐம்பெரும் பூதங்களுமாகி விரிந்த தாயே! இத்துணை சிறப்பு மிக்க நீ  என் சிற்றறிவின் எல்லைக்குட்பட்டது வியப்பிற்குரியதுதான்!-16

***

ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை

வியப்பூட்டும் வடிவத்தைக் கொண்டவள், ரதிக்கு நாயகனான காமனைத் தோல்வியுறும்படி, நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்த சிவ பிரானை வெற்றி கொள்ள, அவரது இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டாயோ ?-17

***

ஆகஸ்ட் 18 திங்கட்கிழமை

அன்னையே! அர்த்தநாரீசுவரத் திருக்கோலமும்உங்கள் இருவரின் திருமணக் கோலமும்என் உள்ளத்தில் குடி கொண்டிருந்த ஆணவத்தை அகற்றியமன் வரும் போதுஎன்முன் தரிசனம் தந்தருளி நிற்பீராக!-18

****

ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை

ஒளி பொருந்தித் திகழும் நவகோணங்களை ஏற்று விரும்பித் தங்கியுள்ள அபிராமித் தாயே! உள்ளும் புறமும் உன்னைக்கண்டபோது ஏற்பட்ட இன்ப வெள்ளத்துக்குக் கரை காண இயலவில்லை. இத்தகைய பேரருளைச் செய்த உன் திருவுள்ளக் குறிப்பின் காரணம் யாதோ?-19

****

ஆகஸ்ட் 20 புதன்கிழமை

பேரருளின் நிறைவான நித்திய மங்கலையே! நீ உறைகின்ற ஆலயம் எது? பரமேசுவரனின் ஒரு பக்கமோ அல்லது உன் புகழை எப்போதும் முழங்குகின்ற நான்கு வேதங்களின் மூலமோ, அல்லது அவற்றின் திருமுடிகளாகிய உபநிடதங்களோ,  சந்திரனோ,  தாமரையோ அடியேனின் உள்ளமோ, கடலோ? இவற்றில் எது?-20

***

ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை

சிவபிரானின் இடப்பாகத்தை ஆட்கொண்டவள். பொன்நிறத்தி னளான பிங்கலை; நீல நிறத்தினாளான காளி; செந்நிறத்தினாளான லலிதாம்பிகை; வெண்ணிறத்தினளான வித்யா தேவி; பச்சை நிறத் தினாளான உமையன்னை யாவும் நீயே.-21

****

ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை

அபிராமி அன்னையே!  வேதமாகிய மலரின் நறு மணம் போன்றவளே! குளிர்ச்சிபொருந்திய இமாசலத்தில் விளை யாடி மகிழும் பெண் யானையே! பிரமன் போன்ற தேவர்களை ஈன்ற அன்னையே! நான்  மீண்டும் பிறவாதிருக்குமாறு ஓடிவந்து உதவி  செய் வாயாக!-22

****

ஆகஸ்ட் 23 சனிக்கிழமை

மூவுலகின் உள்ளேயும் உள்ள பரம் பொருளே! இருப்பினும் எல்லாப் பொருள்களுக்கும் புறம்பாயும் உள்ளாய். அடியவர்களின் உள்ளத்தில்  உள்ள இன்ப மென்னும் கள்ளே!  நான் என் உள்ளத்தில் தியானம் செய்யும் பொழுது உன்னு டைய திருக்கோலத்தைத் தவிர வேறு தெய்வம் எதனுடைய திருவுருவையும் நினையேன்.—23

****

ஆகஸ்ட் 24 ஞாயிற்றுக்கிழமை

மாணிக்கமே ! அந்த மாணிக்கத்தின் பிரகாசமே!  மாணிக்க  ஆபரணமே! அந்த ஆபரணங்களுக்கும் அழகூட்டுபவளே! உன்னை அணுகாமல் வீணாகப் பொழுது போக்கு வோருக்கு நோய் போன்றும்உன்னை அணுகியவர்களின் பிறவிப் பிணிக்கு மருந்து போன்றும் விளங்குபவளே! நான் வேறொருவரைப் பணியேன்.—24

****

ஆகஸ்ட் 25 திங்கட்கிழமை

மூவருக்கும் அன்னே!  அபிராமி என்னும் அருமருந்தே!

உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே-25

****

ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரிந்துவரும் மும்மூர்த்திகளும், உன்னைத் துதிக்கும் அடியவர்களாக உள்ளனர்.  எளிய வனாகிய என் நாவில் வெளிவந்த பொருளற்ற சொற்களையும் கூடத் துதிகளாக ஏற்றுக்கொண்டுமகிழ்வதைக் கண்டால் அந்தச் சொற்கள் பெற்ற ஏற்றம் உண்மையில் நகைப்புக் குரியதன்றோ?-26

****

ஆகஸ்ட் 27 புதன்கிழமை

என் நெஞ்சில் கப்பி யிருந்த ஆணவம் முதலிய அழுக்கு களையெல்லாம் உன் கருணை யென்னும் தூய நீரால் கழுவிப் போக்கினாய். இந்த உன் திருவருட் சிறப்பை நான் என்னவென எவ்விதம் எடுத்துக்கூறிப்பாராட்டுவேன்?-27

****

ஆகஸ்ட் 28 வியாழக்கிழமை

ஆனந்தத் தாண்டவம் ஆடி மகிழும் நடராசப் பெருமானுடன் – சொல்லும் பொருளும் போல – என்றும் இணைந்து நிற்கும் தாயே!  உன் திருவடிகளைத்  தொழும் அடி யவர்களுக்கெல்லாம் உயர்பதவியும்தவ வாழ்க்கையும்இறுதியில் சிவலோக பதவியும் சித்திப்பதாகும்.-28

****

ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை

எண்வகைச் சித்திகளும்அந்த சித்திகளை அளிக்கும்  பராசக்தியும், சக்தியைத் தம்மிடத் தில் தழைத்தோங்கச் செய்த பரமசிவமும் தவம் புரிபவர்கள் பெறும் மோட்சமும்  ஞானமும் ஆகிய அனைத்துமாயிருப்பவள்  திரிபுரசுந்தரியே!-29

****

ஆகஸ்ட் 30 சனிக்கிழமை

ஓருருவாகவும், பல உருவங்களையுடையவளாயும், உருவ மற்ற அருவமாயும் காட்சி தரும், தாயான உமா தேவியே! முன்னொரு நாள் என்னைத் தடுத்தாட் கொண்டு காத்தருள் புரிந்தாய்.  இனி நான் என்ன  பிழையைச் செய்தாலும்கடலில் விழுந்தாலும்என் குற்றத்தை மன்னித்துஎன்னைக் கரையேற்றிக் காப்பாயாகுக-30

****

ஆகஸ்ட் 31 ஞாயிற்றுக்கிழமை

அன்னையாம் உமையும், உமையைத்தம் இடப்பாகத்தில் கொண்ட அண்ணலாம் ஈசனும் இணைந்த அர்த்த நாரீசுவரக் கோலத்தில் எழுந்தருளி,  என் போன்றோரையும் நெறிப்படுத்தினார்.  இனி  பின்பற்ற த்தக்க வேறு சமயங்கள் ஏது மில்லை. என் பிறவிப் பிணி அகன்றுவிட்டது  இனி என்னை ஈன்றெடுக்கத்தக்க தாயும் இல்லை. மங்கையர் பால் கொண்டிருந்த மோகமும் இனி இல்லை.-31

–subham—

Tags அபிராமி அந்தாதி, மேற்கோள்கள், ஆகஸ்ட் 2025 காலண்டர்

காலத்தின் கட்டாயம் : பல்துறை அறிஞராகுங்கள்! (Post No.14,811)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,811

Date uploaded in London – 30 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 20-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

MOTIVATION 

காலத்தின் கட்டாயம் : பல்துறை அறிஞராகுங்கள்!

BECOME A POLYMATH! 

ச. நாகராஜன் 

கால ஓட்டத்தில் ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தலாம் என்றால் அது வெற்றியைத் தராது. 

பல்வேறு துறைகளையும் அறிந்து கொள்ள ஆவல் கொண்டு அதில் நிபுணத்வம் பெறுவதும் முக்கியமாகிற்து. 

அதாவது நீங்கள் ஒரு POLYMATH PERSONALITY யாக ஆக வேண்டும்.

 கடந்த காலத்திலும் பாலிமேத் நிபுணர்கள் இருந்ததை நம் வரலாறு கூறுகிறது.

சதாவதானி என்பவர் ஒரே சமயத்தில் நூறு விஷயங்களைக் கவனித்து கேட்ட கேள்விக்குப் பதில் அளிப்பார்.

ஒருவர் பாடலின் இறுதி வரியைச் சொல்லி இதற்கு ஒரு வெண்பா புனையுங்கள் என்பார். இன்னொருவர் மிளகை அவர் முதுகில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டிருப்பார். எத்தனை மிளகைப் போட்டேன் என்பார். இன்னொருவரோ ஒரு புதிரைச் சொல்லி அதை விடுவிக்கச் சொல்வார். இப்படி நூறு விஷயங்களைச் சதாவதானி கிரகித்து நிகழ்ச்சியின் போது ஒவ்வொன்றுக்கும் விடையளித்து சபையோரை அசத்தி விடுவார்.

இவ்வளவு பக்குவமும் திறமையும் இல்லாதவர்கள் அஷ்டாவதானி என்று எட்டு விஷயங்களில் ஒரே சமயத்தில் கவனத்தைச் செலுத்தும் நிபுணர்களாக இருந்தார்கள்.

இவர்கள் போல சதாவதானியாக ஆக முடியாவிட்டாலும் தேவையான சில துறைகளிலாவது நாம் கவனம் செலுத்தி பாலிமேத் ஆக வேண்டும்.

 இதற்கான வழிகள் இதோ: 

முதலில் எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிதுடிப்பும் ஆர்வமும் முனைப்பும் வேண்டும். கணினியின் தாக்கம் இல்லாமலோ செல் போன் இல்லாமலோ, ஏன் இப்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐயின் தாக்கம் இல்லாமலோ வாழ்க்கையைத் திறம்பட நடத்திச் செல்ல முடியாது.

ஆகவே நமக்கு என்று உள்ள திறமையை வளர்த்துக் கொள்வதோடு பல்வேறு துறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

கற்பது என்பது இறுதி மூச்சு வரை உள்ள ஒரு வாழ்க்கை முறை.

மூளை ஆற்றலை வளர்க்கும் குறுக்கெழுத்துப் போட்டி, மூளை புதிர்கள், மற்றும் விளையாட்டுகளை ஒரு பாலிமேத் ஆர்வமுடன் விளையாடுவார்.

எப்போதும் மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்; இயங்க வேண்டும்.

 ஒரு துறையை எடுத்துக் கொண்டால் அதில் ஆழமாக மூழ்கி முக்கியமானவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

சூழ்நிலை என்பது இதற்கு மிக மிக முக்கியம். நல்ல நிபுணர்கள், பெரியோர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

அல்லது பல்வேறு துறையில் உள்ள நிபுணர்களின் நூல்களைப் படிக்கலாம். புத்தகம் வாங்கப் பணம் இல்லையே என்ற பதிலே வேண்டாம். ஆங்காங்கே உள்ள பிரம்மாண்டமான நூலகங்கள் இருக்கவே இருக்கின்றன.

முக்கிய விஷயங்களைக் குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். அதற்கு நேரம் இல்லை என்றால் தேவையான பக்கங்களை மட்டும் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு படிக்கலாம்; பயன்படுத்தலாம்!.

இண்டெக்ஸ் என்பது வாழ்நாள் இறுதி வரை உங்களுடன் கூட இருக்கும் நண்பன். ஆமாம், குறிப்பு நோட்டு புத்தகங்கள் உங்களின் ஆயுட்கால நண்பன்.

 சிந்தனைப் பயிற்சி என்பதற்கு ஏராளமான முகாம்கள், உள்ளன.

 நினைவாற்றல் உத்தியை மேம்படுத்தவும் வழிகள் உள்ளன. டோனி புஜன், சகுந்தலா தேவி போன்றவர்களின் நூல்களும் இருக்கவே இருக்கின்றன.

 இதே முனைப்புடன் இருக்கும் நல்ல நண்பர்களுடன் சகவாசம், அவர்களுடன் கலந்துரையாடுவது போன்றவையும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும்.

 அட, நீங்கள் ஒரு பாலிமேத் என்பது தெரியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேனே.

 வணக்கம் பாலிமேத், சில கேள்விகளைக் கேட்கலாமா……..?

****

தலை கீழாகத் தொங்கிய முனிவர்கள்! காளிதாசன் தரும் அற்புதத் தகவல் (Post No.14,810)

Research Article Written by London Swaminathan

Post No. 14,810

Date uploaded in London –  29 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரிஷி முனிவர்கள் எப்படியெல்லாம் தவம் செய்தனர்? காளிதாசன் தரும் அற்புதத் தகவல்

காளிதாசன் எழுதிய ஏழு நூல்களில் உள்ள அதிசய விஷயங்களைத் தொடர்ந்து காண்போம் .

காளிதாசன் பாடிய ரிஷிகள் :

வால்மீகி , வசிஷ்டர், கண்வர், அகஸ்தியர் , சாதகர்ணி, சரபங்க , சுதீக்ஷ்ணர், மரீசி .

ரகுவம்சம் எட்டாவது சர்க்கத்தில் அஜன் என்ற மன்னனின் தந்தை ரகு எப்படி இருந்தார் என்று காளிதாசன் வருணிக்கிறார் . அவன் மோட்சத்தை அடைவதற்காக  அறிவுபெற்ற யோகிகளுடன் சேர்ந்தான் . ஐம்புலன்களை அடக்கினான் ; ஞானத் தீயினால் பிறப்புக்குக் காரணமான வினைகளை அழித்தான்

இதைப்  படிக்கும் போது மாணிக்கவாசகரின் சிவபுராணப் பாடலில் வரும் மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி என்பதும் திருமூலரின் முன்னை வினையை களையும் பாடல்களும் நினைவுக்கு வரும்

கடவுள் அருளால் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்-

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர்

***

स किलाश्रममन्त्यमाश्रितो निवसन्नावसथे पुराद्बहिः|

समुपास्यत पुत्रभोग्यया स्नुषयेवाविकृतेन्द्रियः श्रिया॥ ८-१४

sa kilāśramamantyamāśrito nivasannāvasathe purādbahiḥ|

samupāsyata putrabhogyayā snuṣayevāvikṛtendriyaḥ śriyā || 8-14

மன்னன் ரகு சன்யாசம் ஏற்ற பின்னர்,  நகருக்கு வெளியே வசித்தான்; நாட்டு விஷயங்களை காதில் போட்டுக்கொள்ளவில்லை. கானகத்திலுள்ள பழங்களையும் பூக்களையும் தண்ணீரையும் சேகரிப்பதில் பொழுதைச் செலவிட்டான் . ராஜ்யம் முன்னர் மனைவியின் ஸ்தானத்தில் இருந்தது இப்பொழுது நாட்டுப்பெண் ஸ்தானத்தை அடைந்துவிட்டது .

காளிதாசனின் அருமையான உவமைகளில் இது ஒன்று.  முன்னர் தான் அனுபவித்த நாட்டினை இப்பொழுது மருமகள் மாதிரி நினைத்து அவன் ஒதுங்கிவிட்டான் .

முனிவர்களின் வேலைகளில் ஒன்று, காய் கனிகளைத் திரட்டுவது, யாகத்துக்கான அரசமர, பலாச மரக்குச்சிகளைச் சேகரிப்பது, இங்குடி எண்ணெய் எடுப்பது ஆகியன ஆகும்.. மீதி நேரம் எல்லாம் தவத்தில் ஈடுபட்டனர்.

சாகுந்தல நாடகத்தில் மரீசி முனிவரின் தவத்தை வருணிக்கிறார் ;தனது உடலுக்கு என்ன நேர்ந்தது என்பதே அவருக்குத் தெரியாது; ஆழ்ந்த தவத்தில் இறங்கிய அவருடைய உடல் மரக்கட்டை போல இருந்தது. அவர் உடல் அசையாமல் இருந்ததால் அவரைச் சுற்றி எறும்புகள் புற்று எழுப்பி பாதி உடலை மறைத்தன. புற்றிலுள்ள பாம்புகள் அவர் மார்பில் பாம்புத் தோலை விட்டிருந்தன; தலையில் இருந்த ஜடாமு டியில் பறவைகள் கூடு கட்டின -சாகு.7-11

Matali. (Pointing by the hand) Where the sage unshaken like a post remains facing the Sun’s disc, with his body half buried in an ant-hill, with his chest having a snake’s slough stuck up, pressed very hard at the neck by the circular twine of dried creepers and bearing a load of matted hair hanging down to his shoulders and abounding in the nests of birds.

ரிஷி முனிவர்கள் செய்யும் தவங்களில் ஒன்று பஞ்சாக்னி எனும் ‘ஐந்து தீ தவம் ஆகும்; தன்னைச் சுற்றி நான்கு புறங்களிலும் தீயை மூட்டிவிட்டு சூரியனின் ஒளியை ஐந்தாவது தீயாகப் பாவித்து கடும் வெப்பத்தில் தவம் செய்வது பஞ்சாக்னி தவம் ஆகும். சிவ பெருமானை அடைவதற்காக உமாதேவி இந்த தவத்தைச் செய்தது குமார சம்பவ காவியத்தில் வருகிறது .

****

தலைகீழாகத் தொங்கிக்கொண்டு தவம் செய்யும் முனிவரின் வருணனை  ரகுவம்ச 15-49 பாடலில் உள்ளது.

अथ धूमाभिताम्राक्षम् वृक्षशाखावलम्बिनम्।

ददर्श कंचिदैक्ष्वाकस्तपस्यन्तमधोमुखम्॥ १५-४९

atha dhūmābhitāmrākṣam vṛkṣaśākhāvalambinam |

dadarśa kaṁcidaikṣvākastapasyantamadhomukham|| 15-49

****

மேலும் பல முனிவர்களின் வருணனை ரகுவம்சத்திலுள்ளது;

13–ஆவது சர்க்கத்தில் வரிசையாக வருகிறது.

पुरा स दर्भाङ्कुरमात्रवृत्तिः

चरन्मृगैः सार्धमृषिर्मघोना।

समाधिभीतेन किलोपनीतः

पञ्चाप्सरोयौवनकूटबन्धम्॥ १३-39

purā sa darbhāṅkuramātravṛttiḥ

caranmṛgaiḥ sārdhamṛṣirmaghonā |

samādhibhītena kilopanītaḥ

pañcāpsaroyauvanakūṭabandham || 13-39

தர்ப்பைப்புல் செடியின் குருத்துக்களை மட்டுமே உணவாகக் கொண்டார் சாதகர்ணி ; அவருடைய தவத்தைக் கலைக்க ஐந்து அப்சரஸ் அழகிகளை இந்திரன் அனுப்பினான்.

****

हविर्भुजामेधवताम्चतुर्णाम्

मध्ये ललाटंतपसप्तसप्तिः।

असौ तपस्यत्यपरस्तपस्वी

नाम्ना सुतीक्ष्णश्चरितेन दान्तः॥ १३-४१

havirbhujāmedhavatāmcaturṇām

madhye lalāṭaṁtapasaptasaptiḥ |

asau tapasyatyaparastapasvī

nāmnā sutīkṣṇaścaritena dāntaḥ || 13-41

இது சுதீக்ஷ்ண முனிவரின் ஆஸ்ரமம்; அவர் பஞ்சாக்கினி தவம் செயற்வதைப்பார் (விமானத்தில் இருந்தவாறே ராமபிரான், சீதைக்கு ஒவ்வொரு முனிவர் பற்றியும் சொல்லும் சர்கம் இது)

***

एषोऽक्षमालावलयम्मृगाणाम्

कण्डूयितारम्कुशसूचिलावम्।

सभाजने मे भुजमूर्ध्वबाहुः

सव्येतरम्प्राध्वमितः प्रयुङ्क्ते॥ १३-४३

eṣo’kṣamālāvalayammṛgāṇām

kaṇḍūyitāramkuśasūcilāvam |

sabhājane me bhujamūrdhvabāhuḥ

savyetaramprādhvamitaḥ prayuṅkte || 13-43

இதோ சுதீக்ஷ்ணர் எனக்கு மரியாதை தெரிவிக்க கையை உயரே தூக்குகிறார். அவர் கைகளில் ருத்ராக்ஷ வளையல் அணிந்துள்ளார் மான்களை சொரிந்து கொடுப்பதும் தர்ப்பபைப் புல் சேகரிப்பதும் அவர் செய்யும் பணி. 

****

அவர் மவுனத்தைக் கடைப்பிடிப்பதால் தலையை அசைத்து எனது வருகையைப் பார்த்தபின்னர் மீண்டும் சூரியனைப்பார்த்து தவம் செய்யத் துவங்கிவிட்டார்.

वाचंयमत्वात्प्रणतिम्ममैष

कम्पेन किञ्चित्प्रतिगृह्य मूर्ध्नः।

दृष्टिम्विमानव्यवधानमुक्ताम्

पुनः सहस्रार्चिषि संनिधत्ते॥ १३-४४

vācaṁyamatvātpraṇatimmamaiṣa

kampena kiñcitpratigṛhya mūrdhnaḥ |

dṛṣṭimvimānavyavadhānamuktām

punaḥ sahasrārciṣi saṁnidhatte || 13-44

***

சரபங்கர் தபோவனம்

अदः शरण्यम्शरभङ्गनाम्नः

तपोवनम्पावनमाहिताग्नेः।

चिराय संतर्प्य समिद्भिरग्निम्

यो मन्त्रपूताम्तनुमप्यहौषीत्॥ १३-४५

adaḥ śaraṇyamśarabhaṅganāmnaḥ

tapovanampāvanamāhitāgneḥ |

cirāya saṁtarpya samidbhiragnim

yo mantrapūtāmtanumapyahauṣīt || 13-45

छायाविनीताध्वपरिश्रमेषु

भूयिष्ठसंभाव्यफलेष्वमीषु।

तस्यातिथीनामधुनासपर्या

स्थिता सुपुत्रेष्विव पादपेषु॥ १३-४६

ChAyAvinItAdhvaparishrameShu

bhUyiShThasa.nbhAvyaphaleShvamIShu |

tasyAtithInAmadhunAsaparyA

sthitA suputreShviva pAdapeShu || 13-46

அடுத்த இரண்டு ஸ்லோகங்களில் சரபங்க முனிவரின் பெருமையை சீதைக்கு ராமன் சொல்வதாக காளிதாசன் பாடியுள்ளார் – அதோ பரிசுத்தமான சர்ப்பங்க முனிவரின் தபோவனம்! அவர் நீண்ட காலத்துக்கு அக்கினியில் சமித்துக் குச்சிகளைப்   போட்டு யாகம் செய்த பின்னர் தனது உடலையே அக்கினியில் ஆகுதி கொடுத்தார்;  அவர் எப்படி விருந்தாளிகளைக் கவனித்து உபசரித்தாரோ அதை அப்படியே அவரது  புதல்வர்கள் செய்கின்றனர்

****

ரகு சன்யாசியாகவே இறந்தான்

ரகு சந்நியாசி போல வாழ்ந்ததால் அவன் உடலை எரிக்காமல் அஜன் புதைத்தான் . அக்கினி சம்பந்தமில்லாத உத்தரக்கிரியைகளைச் செய்தான் சந்யாசிகள் இறந்தால் அவர்களுக்குப் பிண்டக்கிரியைகள் தேவை இல்லை என்றும் அவர்கள் இறந்தால் துக்கப்படக்கூடாதென்றும் சாஸ்த்ர விதிகளைக் காட்டி, இந்த ஸ்லோகங்களை உரை எழுதியோர் விளக்கி இருக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் மோட்சத்தை அடைந்துவிடுகிறார்கள். ஸ்லோகம் 18 முதல் 26 வரை இவை உள்ளது.

சந்யாசிகள் தரித்த உடைகளையும் காளிதாசன் விளக்குகிறான் .

வற்கலை என்னும் மரவுரியை அணிந்தார்கள் குமார சம்பவத்தில் உமாவும் இப்படி உடைகளை அணிந்து தவம் செய்ததைக் குறிப்பிட்டுள்ளான் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களும் தவம் செய்தனர் அவர்களும் ஏனைய சன்யாசிகளைப் போலவே விரதங்களை அனுஷ்டித்தனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது

மரவுரி பற்றி அவன் எழுதிய ஐந்து நூல்களில் குறைந்தது பத்து முறையாவது பாடுகிறான்:

ரகு12-8, 14-82. குமார. 5-8-30, 44 சாகு.1-17, 2-12 முதலியன.

ராமனைக்காட்டில் தரிசிக்க வந்த பரதனும் இப்படி வந்ததைக் கம்பன் பாடியிருக்கிறான்

                வற்கலையின் உடையானை,

     மாசு அடைந்த மெய்யானை,

நற் கலை இல் மதி என்ன

     நகை இழந்த முகத்தானை,

கல் கனியக் கனிகின்ற துயரானைக்

     கண்ணுற்றான்;

வில் கையினின்று இடை வீழ,

     விம்முற்று, நின்று ஒழிந்தான்.

****

சிவனுடைய பெயர்களில் ஒன்று கிருத்திவாஸஅதாவது யானைத்தோலை அணிந்தவன் . குமாரசம்பவத்தில் இந்த சொல் வருகிறது

சிவன் யானைத்தோல் அணிந்தவன் என்பதை சம்பந்தரின் தேவாரப்பாடலிலும் படிக்கிறோம்

போர்த்ததுவும் கரியின் உரி புலித்தோலுடை

கூர்த்ததோர் வெண்மழு ஏந்தி கோளரவம் அரைக்கு

ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.

பாடல் விளக்கம்:

போர்த்துள்ளது யானைத்தோல், உடுத்துள்ளது புலித்தோல், ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு, அரையில் கட்டியுள்ளது பாம்பு, பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம், அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.

***

துணியால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்த சந்யாசிகள் அவைகளைக் காவியில் நனைத்து காஷாய உடைகளை அணிந்தனர் ; இதை மாளவிகாக்நிமித்திரம் நாடகத்தில் காண்கிறோம் .

குச அல்லது முஞ்ஜ புற்களால் ஆன மெளஞ்சி என்பதைக் கச்சையாக ஒட்டியானமாக அணிந்தனர்  ; இதை குமா. 5-10; ரகு 9-21 நூல்களில் சொல்கிறான்.

ருத்ராக்ஷத்தைக் கையிலும் காதிலும் கழுத்திலும் மாலையாக அணிந்ததையும் கூறுகிறான்- குமா.3-46;, 5-11, 63 ரகு. 13-43 

பட்டினப்பாலை ,பெரும்பாணாற்றுப்படை நூல்களை எழுதிய சங்க புலவரின் பெயர் ருத்ராக்ஷ என்பதை முன்னரே கண்டோம்.

முனிவர்கள் கட்டாந்தரையிலோ,  குச புல்லால் ஆன பாயிலோ படுத்தார்கள் ரகு8-18, 1-95

கைகளில் தண்டத்தை ஏந்திச் சென்றனர் -குமா 5-12.

முக்கோல் அந்தணர் என்று தொல்காப்பியரும் இதைக் குறிப்பிட்டுள்ளார் .

இங்குடி என்னும் மரத்திலிருந்து எண்ணெய் எடுத்து தலைக்குத் தடவவும் விளக்கு எரிக்கவும் பயன்படுத்தினார்கள் -ரகு13-41, 43

இவ்வாறு ஒவ்வொரு ஸ்லோகத்திலும் நமக்குப் புதிய முனிவர்களை அறிமுகப்படுத்தி , புதிய விஷயங்களையும் காளிதாசன் சொன்னார்.

Hindu Sages and Hermitages in Kalidasa’s Works (Post …

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2017/04/01 › hindu-sages-…

1 Apr 2017 — Sakuntalam Act I. King:“Suta, urge the horses on and let us purify … [13-41]. Here that sage sutIkShna lifting up his right arm aloft 

–subham—

Tags—ரிஷி, முனிவர்கள், தவம் செய்தனர்,  காளிதாசன், அற்புதத் தகவல்

சிந்தனையாளர் சிலை! (THE THINKER) Post No.14,809

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,809

Date uploaded in London – 29 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-7-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை

MOTIVATION 

சிந்தனையாளர் சிலை! (THE THINKER) 

ச.நாகராஜன்

 உலகப் பிரசித்தி பெற்ற சிலைகள் பல உண்டு. அவற்றில் ஒன்று சிந்தனையாளர் THE THINKER   என்ற சிலை. இதை வடிவமைத்தவர் ரோடின் (RODIN) என்ற சிற்பி.

 அகஸ்ட் ரோடின் பாரிஸில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.

(பிறப்பு 12, நவம்பர் 1840; மறைவு :17, நவம்பர் 1917). ஓவியத்திலும் சிற்பத்திலும் ஆர்வம் கொண்ட அவர் கடுமையாக முயற்சி செய்தாலும் ஆரம்ப காலங்களில் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியதாய் இருந்தது. நாற்பதாம் வயதில் தான் அவரை உலகம் ஒரு சிறந்த சிற்பியாக அங்கீகரிக்க ஆரம்பித்தது.

  பாரிஸில் அமைக்கவிருந்த ஒரு கலை அருங்காட்சியகத்திற்கு அவர் இரு சிலைகளை வடிவமைத்தார். ஒன்று தி திங்கர் இன்னொன்று தி கிஸ்.

இரண்டுமே பிரபலமாகி விட்டன.

ஆழ்ந்த சிந்தனையில் நிர்வாண கோலத்தில் அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை தான் ‘தி திங்கர். ஆறு அடி ஒரு அங்குலம் உயரமுள்ள இந்தச் சிலை பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. 

ஆரம்பத்தில் இந்தச் சிலைக்கு ‘தி பொயட்’ (கவிஞன்) என்ற பெயரே இருந்தது. இது ‘தி கேட்ஸ் ஆஃப் ஹெல்” என்ற ஒரு காட்சியகத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இது உருவாவதில் தடை ஏற்படவே ரோடின் தன் சிலைக்கு சிந்தனையாளர் என்ற பெயரை அளித்து, அதைத் தானே காட்சிப்படுத்தலானார்.

மக்கள் இதைப் பெரிதும் வரவேற்றதோடு, ஒரு மகஜரை பிரான்ஸ் அரசுக்கு அனுப்பவே அரசாங்கம் 1906ம் ஆண்டு இதை வாங்கி பாரிஸ் நகருக்கு அன்பளிப்பாக வழங்கியது. பாந்தியன் என்ற கட்டிடத்தின் வெளியே இதை நிறுவியது.

 இந்தச் சிலை மனித சிந்தனையையும் அறிவார்ந்த முயற்சியையும் சித்தரிக்கிறது. ஆழ்ந்த சிந்தனையில் தீவிர யோசனையுடன் இருக்கும் சிந்தனையாளர்,  உண்மையான அறிவைத் தேடுபவராகக் காட்சி அளிக்கிறார். இதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தம் தம் பார்வையில் அறிவார்ந்த சிந்தனையைப் பெற ஊக்கம் கொள்கின்றனர். 

இன்னொரு விதமாகப் பார்த்தால் இது பிரபல கவிஞரான தாந்தேயின் டிவைன் காமடியுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. இது தாந்தேயின் நிலையைத் தான் சுட்டிக் காட்டுகிறது என்றும் அவரது தீவிர சிந்தனையை உணர்ந்து கொள்ள முடிகிறது என்றும் விமரிசகர்கள் கூறுகின்றனர்.

 நிர்வாணமாக ஏன் சிலை வடிவமைக்கப்பட்டது? ஆபாசமே இல்லாமல் அழகுறத் தோன்றும் இந்தச் சிலை தூய்மையான எண்ணத்தையும் மெய்யறிவு நாட்டத்தை தேடும் உலகளாவிய மனப்பான்மையையும் சுட்டிக் காட்டவே நிர்வாணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது பல அறிஞர்களின் கருத்தாகும். 

இதனால் ஊக்கம் பெற்றவர்கள் தங்கள் தங்கள் பங்கிற்கு சிந்தனையாளர் சிற்பங்களை அமைக்க ஆரம்பிக்கவே, இப்போது உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிந்தனையாளர் சிற்பங்கள் உள்ளன.

 ஒரு படைப்பாளியோ,  தத்துவ வித்தகரோ, ஒரு மாணவரோ, ஓவியரோ அல்லது சாமானிய மனிதரோ யாராக இருந்தாலும் சரி, இந்தச் சிலையிலிருந்து அவர் உத்வேகம் பெறலாம்; மேலே உயரலாம்!

இது மட்டும் நிச்சயம்!

***

காளிதாசன் காவியங்களில் சிவபெருமான்- 3 (Post No.14,808)

Written by London Swaminathan

Post No. 14,808

Date uploaded in London –  28 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART THREE OF MY RESEARCH ARTICLE

காளிதாசன் பயன்படுத்திய அதே பெயர்களை சங்கப்புலவர்கள்  பயன்படுத்தியதை காண்போம்.

சங்கப் புலவர்களில் முக்கியமானவர்கள் அம்மூவன்உருத்திரங்கண்ணனார் ஆகிய இருவரர் ஆவர் . இவர்களுடைய பெயர்கள் சிவனின் பெயர்கள் ;அங்கயற்கண்ணி என்றால் அழகிய மீன்போன்ற கண்களை  உடையவள் என்று பொருள் அதே போல அம்மூவன் என்றால் அழகிய மூன்று கண்ணுடையோன் என்பது பொருள் இது  சிவனின் பெயர்!

MR RUDRAKSHA

ருத்ர- Rudra +கண் /அக்ஷ Kan= Aksha= Eye MR RUDRAKSHA

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்க நூல்கள் பெரும்பாணாற்றுப்படை  மற்றும் பட்டினப்பாலை ஆகியவற்றை  எழுதிய பிராமணப் புலவர் ஆவார் .

உமா அக்ஷ மாலையைக் கையில் அணிந்திருந்த செய்தி குமார சம்பவத்தில் 5-11 வருகிறது

   இதே போல சங்கப்புலவர் காமக்கண்ணியார் என்பது காமாக்ஷி என்பதன் தமிழ் வடிவம் என்பதை காஞ்சி மஹா சுவாமிகளும் உ.வே சாமிநாத அய்யரும் உறுதிப்படுத்தியுள்ளனர் . அங்கும் காம + அக்ஷி   வருவதைக் கவனிக்க வேண்டும் ஆக, சிவன் அவனது பெயர்களைக் கண்டுவிட்டாம் 

மதுரைக் கவுண்டின்ய கோத்ர கவுணியன் பூதனார்  உள்பட பல பெயர்கள் பூத என்ற சொல்லுடன் இருக்கின்னறன. இவர்கள் அனைவரும் சைவர்கள் ; சிவன் பெயரை உடையவர்கள்

பூத  நாதன் ,பெரும் பூதன் பூதன் இளநாகன் பூதப்பாண்டியன் ,கருவூர்  பூதன் சாத்தனார்    த்து  பூதன்  தேவன் வெண்  பூதன் சேந்தன் பூதன்  ,குன்றம் பூதநார்  ; பூத என்பது சிவனை வழிபடுவோருக்கு  மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

சங்க இலக்கிய நூல்களில் சிவன் பற்றி வரும் பாடல்களும் பாடியோரும்

பரணர் -அகம் 181 – முக்கட் செல்வன்; புறம்198;

புறம் — காரி கிழார் – முக்கட் செல்வர் நகர் வலம்

புறம் –  மஹாதேவன்

புறம் 55 — இளநாகன் – முப்புரம் எரித்தவன் –

புறம் 56 – நக்கீரன்– சிவன், முருகன், கிருஷ்ணன், பலராமன் கொடிகள் வாகனங்கள்

புறம் 91 – அவ்வையார்

அவ்வையார் பாடல்

பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணிமிடற்று ஒருவன் போல

புறம் 198 – பேரி சாத்தனார் –ஆல் அமர் கடவுள் / தட்சிணாமூர்த்தி;  

புறம் 219 – பூதநாதனார்

புறம் 259 – பெரும்பூதன்

புறம்  276 – பூதன் இளநாகன்

ஐங்குறுநூறு 181 – சிவனும் நால்வேதமும்

கலித்தொகையில் எண்ணற்ற பாடல்களில் ராவணன் அடி  வாங்கியது
உமா தேவி
, ரிஷபக் கொடி முதலியன பாடப்பட்டுள்ளன.

முருகு256; சிறு.97  முதலிய நூல்களிலும் சிவன் பாடப்படுகிறார் ; இவை அனைத்தையும் ஒரே புலவரிடத்தில் காணவேண்டுமென்றால் சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன் நூல்களில் மட்டுமே காண முடியும் ; சிவ புராணம் மற்றும் சைவம் சம்பந்தமான புராணங்களை அறிஞர்கள் குப்தர் காலத்துக்கும் பின்னுக்கு வைக்கின்றனர் . காளிதாசன் சொன்ன விஷயங்கள் குப்தர் கால கல்வெட்டுகளிலும் குப்தர் கால சிற்பங்களிலும் காணப்படுவதால் காளிதாசன் அவைகளுக்கு முந்தியவன் என்பது கலை வரலாற்று மாபெரும் அறிஞர் சிவராம மூர்த்தியின் கருத்து. பெங்குவின் நிறுவனம் வெளியிட்ட காளிதாசனின் அத்தனை நூல்களையும் தற்கால ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சந்திரா ராஜனும் காளிதாசனை 2100 ஆண்டுகளுக்கு முன்னரே வைத்து அதற்கான காரணங்களையும் விளக்குகிறார்.

e)      சூல ப்ருத் ,சூலின்  (Trident bearer)

காளி : Ragu II 38, Kuma VII 40, III 57,IV 94 Mega 15, 19,

சங்கம்  : அகம்  1 (பாரதம்  பாடிய  மஹாதேவன் )

துர்கா தேவியை சூலி என்ற சொல்லால் குறுந்தொகை 218 குறிப்பிடுகிறது .சிவனுக்கும் துர்க்கைக்கு மட்டுமே சூலம் உண்டு

f)       Vrushanga (On the Bull mount, Bull flag)

Kali: Kuma III 23,14,62, VII 29,VIII 20, Ragu II 35, 36

Cankam : புறம் 56 ( நக்கீரன் ,  பிராமண  புலவர் )

g)      பார்வதி  பரமேஸ்வரன்

h)      Kali: Ragu I-1 = சங்கம்  அகம்  1, புறம்  166

i)        Purasasana

Kali :Kuma VII 30= புறம்  55 (மருதம்  இளநாகன் )

Tripura Thaganm (one who burnt three forts)

Kali :Mega 58= சங்கம் புறம்  55, பரி  5-2,கலி  2-1 to 8, 38-1,கலி  1

j)        Ardhanari (half siva half shakthi) அர்த்த நாரீ

Ragu 1, Kum VII 28 =Cankam : ‘மாதொரு பாதியான்  ’ (ஐங்குறுநூறு   கடவுள் வாழ்த்து r)

k)      Maheswaran (Great Lord)

Kali Ragu III 49= சங்கம்  புறம்  166, கலி  1

l)        ருத்ர  (angry towards bad)

Ragu II 54,Kuma II 26,III 76,Malavi I-4

சங்கம்  புறம்  56 (நக்கீரன் )

XXX

NEELAKANTA நீலகண்ட/ நீலமணிமிடற்று- பரிபாடல் 9

மணிமிடற்றண்ணற்கு

xxx

TRAYAMBAKA த்ரயம்பக-  முக்கண்ணான்.

xxx

ஈர்சடை அந்தணன்/ பிறைநுதல் Wet Hair and Crescent Moon

xxx

MR RED

Lord Siva is RED like dusk

வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து

உரு உடன் இயைந்த தோற்றம் போல,

அந்தி (RED COLOUR) வானமொடு கடல் அணி கொளாஅ,

வந்த மாலை பெயரின், மற்று இவள்

அகநானூறு  360

The sky in dusk looked like two great gods (Red like Siva, and dark like Vishnu)

அகநானுறு  கடவுள் வாழ்த்தில்  செவ்வான் அன்ன  மேனி– body like dusky red sky

புறநானூறு 56 எரி மருள் அவிர்சடை

****

பிறைநுதல்

மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்

முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,

கலித்தொகை 104-11

***

ARUDRA –STAR GOD–

Lord Siva is associated with the star Betelgeuse in the Orion constellation and so Siva is called Mr Arudra Star; the Kalittokai poet also says he is( golden red) like Shanbaga flower

அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த  20

பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்

பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்

மை ஈர் ஓதி மட மொழியோயே! –கலித்தொகை 150

In Indian astronomy, the star Betelgeuse is known as Ardra (आर्द्रा) or Thiruvathirai. It is a prominent red supergiant star in the constellation Orion. Ardra is also the name of the sixth nakshatra (lunar mansion) in Hindu astrology, which corresponds to the region of the sky encompassing Betelgeuse

****

சப்தரிஷி URSA MAJOR CONSTELLATION

ஏழு ரிஷிகளை பிராமணர்கள் இன்றும் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தனத்தில் வணங்குகிறார்கள் . அவர்கள் சொல்லும் அதே வரிசையில்  பாணினி  தனது சூத்திரத்தில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியுள்ளார் . அந்த எழுவர்தான் சிவனிடம் உமாவின் சார்பில் தூது சென்றதாக குமார சமிபத்தில் காளிதாசன் குறிப்பிடுகிறான் ; அந்த எழுவரையும் தமிழர்கள் கும்பிடுவது நற்றிணைப் பாடலில் 231 உள்ளது

கைதொழு மரபின் எழுமீன் போலப்  — பாடியவர் இளநாகனார்

ஐந்தாவது பரிபாடலில் சப்த ரிஷிகள் மற்றும் வர்களுடைய மனைவிமார் பற்றிய குறிப்பும் சிவபெருமான் முப்புரங்களை எரித்த செய்தியும் வருகிறது.

SAPTA RISHI — URSA MAJOR– GREAT BEAR– DIPPER CONSTELLATION

வளர்க காளிதாசன் புகழ் ! வாழ்க சங்கத் தமிழ்ப் புலவர்கள்

–SUBHAM—

TAGS- சப்தரிஷிகாளிதாசன் காவியங்களில், சிவபெருமான்- PART 3

GNANAMAYAM 27TH JULY 2025 BROADCAST SUMMARY

GNANAMAYAM 27TH JULY 2025 BROADCAST PROGRAMME SCHEDULE

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team.

***

Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil

****

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – THIRUVANCHIYAM Temple

****

Talk by Prof. S Suryanarayanan from Chennai

Topic- Natural Tourism In Tamil Literature

****

SPECIAL EVENT-

Talk by RAJU KANDASAMY fromCoimbatore  in Tamil.

Topic – AI Tamil

****** 

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 27-7 -2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —திருமதி ஜெயந்தி சுந்தர் குழு

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும்  வழங்கும் செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம்

திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்

சொற்பொழிவு — தலைப்பு-  திருவாஞ்சியம் ஆலயம் 

****

சொற்பொழிவு : சென்னையிலிருந்து பேராசிரியர் எஸ். சூர்யநாராயணன்

தலைப்பு — இலக்கிய இயற்கை இன்பச் சுற்றுலா- 2 ம்பகுதி

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு- கணினி அறிஞர் ராஜு கந்தசாமி அவர்கள்

தலைப்பு- AI Tamil

RAJU KANDASAMY

Innovative tech enthusiast and strategist with experience in Generative AI, XR, Digital Twins and industrial robotics. Vast experience in building and upscaling autonomous teams, setting up practices and product management. Tech innovator with 3 US patents granted in XR, 4 more patents filed. Built a tech start-up from the ground up and successfully handled assignments in setting up new product development teams. Skilled in real-time high-transaction rate enterprise systems and managing development teams. Specialized in setting up products and product teams from scratch and scaling them up.

  • Top skills

Generative AI • Large Language Models (LLM) • Extended Reality • Game Development • Reinforcement Learning

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham— 

Tags-Gnanamayam Broadcast, July 27, 2025, Programme, 

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்! (Post No.14,807)

ஞானமயம் வழங்கும் 27-7-2025  உலக இந்து செய்திமடல் (Post No.14,807)

Written by London Swaminathan

Post No. 14,807

Date uploaded in London –  28 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும்  லதா யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த்  வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 27-ம் தேதி 2025-ம் ஆண்டு .

(compiled from popular Newspapers of India)

முதலில் இந்தியச் செய்திகள்!

அமர்நாத் யாத்திரை

அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமர்நாத் யாத்திரை 2025 ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி முடிவடைகிறது. இந்த புனித யாத்திரை 37 நாட்கள் நடைபெறும். இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா பதிவிட்டுள்ளதாவது:

யாத்திரை தொடங்கியதிலிருந்து புனித குகை ஆலயத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இதன் மூலம் வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஒரு முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளது.

இந்த புனித பயணம் அனைவருக்கும் அமைதி, வலிமை மற்றும் நிறைவைக் கொண்டுவரட்டும் என்று மனோஜ் சின்ஹா பதிவிட்டுள்ளார்.

********

கன்வர் யாத்திரை

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

ச்ராவண மாதத்தை முன்னிட்டு ஹரித்வார் கங்கை நதியில் கன்வர் யாத்ரீகர்கள் புனித நீராடி வருகின்றனர்.

ச்ராவண  சிவராத்திரி மற்றும் கன்வர் யாத்திரையின் இறுதி நாளையொட்டி ஹரித்வாரில் ஏராளமான யாத்ரீகர்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கங்கை நதியில் புனித நீராடி வழிபாடு நடத்தினர். கங்கையில் சேமித்த புனித நீரை கன்வர் என்று அழைக்கப்படும் காவடியில் சுமந்து சென்று சொந்த ஊர்களிலுள்ள சிவன் கோவிலில் அபிஷேகம் செய்வது வழக்கம்

*****

இனி மாநிலச் செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு கோயில் நிலம் சொந்தமாக்கப்படும் என்றும், தங்களுடைய அரசு அமைந்தால் அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என்றும் சொல்லியிருப்பது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி யாகும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் ஒரு நெல் முனை அளவு கூட தமிழகத்தை ஆண்ட திராவிட அரசாங்கங்கள் கொடுத்தது அல்ல.

அந்தக்காலத்தில் அரசர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில்களுக்கு ஆறு கால பூஜை நடக்கவும், கோயில்களின் அன்றாட செலவுகளுக்காகவும் அந்தக் கோயில் நிலங்களில் இருந்து வருகின்ற வருமானத்தின் மூலமாக செலவு செய்ய கோயில்களுக்கு நிலங்களை எழுதி வைத்தனர்.

தற்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளது. நீதிமன்றங்கள் பலமுறை தலையிட்டு இதைப் பற்றி பேசியும் எந்த ஒரு அரசாங்கமும் கோயில் நிலங்களை மீட்க சரியான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பாளிடமிருந்து முறையான வாடகை கூட வசூல் செய்யப்படுவதில்லை.

நிலைமை இப்படி இருக்கையில் திரு. எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று உள்ளது.

பல்லாயிரம் ஆண்டு காலமாக நின்று நிலைத்திருப்பது நமது கோயில்களும், நமது கலாச்சாரமும் மட்டுமே. கோயிலையும், அதன் மூலமான கலாச்சாரத்தையும் அரசியல் சுயநலத்திற்காக காவு கொடுப்பதை எந்த விலை கொடுத்தும் பக்தர்கள் தடுத்தே தீருவார்கள்.

ஆகவே எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருப்பதை இந்து முன்னணி மிக வன்மையாக கண்டிக்கிறது.

அவர் சொல்லியிருப்பதை திரும்பப் பெற வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

ஆடி அமாவாசை.. நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்ட மக்கள்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசையை ஒட்டி பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த குவிந்ததால் ஸ்ரீரங்கம் பகுதிகள் திணறியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால் அவர்களின் ஆசியுடன் குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர்

ராமேஸ்வரத்தில் காலை முதலே ஏராளமான மக்கள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மக்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்தனர்.

திருவள்ளூரில் வைத்திய வீரராகவர் கோவில் அருகில் உள்ள ஹிருத்தாபநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே உள்ள ஏரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மாமல்லபுரம் கடற்கரை மற்றும் திருக்குளம் பகுதியில், ஏராளமானோர் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து வழிபடுவதற்காக அதிகாலையிலே நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்ததந்தனர்.

.கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கோதையார், பரளியார் ஆகிய நதிகள் இணைந்து தாமிரபரணியாக உருவெடுக்கும் “குமரி சங்கமான” மூவாற்று முகம் ஆற்றோரம் இன்றஆற்றோரம் இன்று ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.

*****

பிரதமர் நரேந்திர மோடி விஜயம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கை கொண்ட சோழபுரம் சிவன் கோவிலுக்கு விஜயம் செயதார்

சோழர்களின் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இந்து மன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்

. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவை இந்த ஆண்டு சிறப்பாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 23 முதல் 27 வரை 5 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. இதில் கடைசி நாளான ஜூலை 27ஆம் தேதி திருவாசகம் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்

****

1.50 லட்சம் விநாயகர் சிலைகள்: ஹிந்து முன்னணி தீவிரம்

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுதும், ஹிந்து முன்னணி சார்பாக, 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

-விநாயகர் சதுர்த்தி நாளில், வீதிகள் தோறும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். வரும் ஆக.,27ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில், தமிழகம் முழுதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டு, சிலை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இது குறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:

விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுசூழல் பாதிக்காத வகையில், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. வாட்டர் கலர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சிம்ம வாகனம், சிவ பார்வதி, முருக விநாயகர், சித்தி புத்தி விநாயகர், அன்ன வாகனம், விஸ்வரூப விநாயகர் என பல்வேறு வடிவங்களில், 3 அடி முதல், 11 அடி வரையில் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

****

சபரிமலையில் விமான நிலையம்.. 3500 அடி ரன்வேயுடன்.. விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கேரள மாநில அரசு,

 மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

பத்தனம்திட்டா அருகே செருவல்லியில் இந்த விமான நிலையம். அமையும்.

திட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

புதிய விமான நிலையத்தில் 3,500 மீட்டர் நீள ஓடுபாதை மற்றும் அதே அளவுள்ள டாக்ஸி பாதை இருக்கும்.

பயணிகள் முனையத்தின் வடிவமைப்பில் இரண்டு பல மாடி வளைவு அமைப்பு (Multiple Apron Ramp System) கொண்ட ஏரோபிரிட்ஜ்கள் இருக்கும்..

நீண்ட தூரம் செல்லும் பெரிய ரக விமானமான போயிங் 777-300 மாதிரி விமானமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய அளவிலான விமானங்களையும் கூட கையாளக் கூடிய வகையில் விமான நிலையம் அமையும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. பயணிகள் கட்டிடம் , தனி சரக்கு முனையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

*****

மதுரை ஆதீனத்துக்கு திராவிட போலீஸ் தொல்லை

பாரதீய ஜனதா  கட்சியின்  மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அன்று கூட விசாரணை நடத்திவிட்டு, தற்போது அவர்களது முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது  திமுக அரசு.

இப்படி தேவையற்ற மனுக்களைப் போட்டு இந்து மதத் தலைவர்களையும் நீதிமன்ற நேரத்தையும் அவமதிக்கும் வழக்கத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும், உடனடியாக மதுரை ஆதீனத்தின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் காவல்துறை மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

****

ஆடி அமாவாசை..

ஓணம் திருநாளை முன்னிட்டு 15 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு: கேரள அரசு அறிவிப்பு

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு  6 லட்சம் குடும்பங்களுக்கு 15 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

ஓணம் பண்டிகை. இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு கேரள அரசு சார்பில் 15 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும்

அதில் ½ லிட்டர் தேங்காய் எண்ணெய், ½ கிலோ சர்க்கரை, ½ கிலோ பாசிப்பருப்பு, சேமியா பாயசம் மிக்ஸ் பாக்கெட், மில்மா நெய் 200 கிராம், முந்திரி பருப்பு, சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மல்லி பொடி, தேயிலை, துவரம் பருப்பு, உப்பு தூள் உள்பட 15 பொருட்கள் அடங்கி இருக்கும்.

அத்துடன் மாநிலத்தில் பல இடங்களிலும் ஓண சந்தைகள் திறந்து காய்கறிகள், பழங்கள், நேந்திரங்காய் ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து உள்ளது.

****

அடுத்ததாக வெளிநாட்டுச் செய்தி .

ஆஸ்திரேலியாவில் ஹிந்துக் கோவிலில் இனவெறி வாசகம்: மர்ம நபர்கள் அட்டூழியம்

 ஆஸ்திரேலியாவில் ஹிந்துக் கோவில் மீது இனவெறியில் கருத்துகள் எழுதப்பட்ட சம்பவம் பக்தர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், கார் பார்க்கிங் பிரச்னையில் சரண்ப்ரீத் சிங் என்பவரை கும்பல் ஒன்று இனவெறி கருத்துக்கள் கூறி திட்டியபடி முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெல்போர்னின் போர்னியா பகுதியில் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சிவப்பு பெயின்ட்டில் இனவெறி ரீதியில் வாசகங்களை எழுதிச் சென்றுள்ளனர்.

மேலும், அந்த பகுதியில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் உணவகங்களிலும் இக்கும்பல் இதேபோன்ற செயலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

 இந்த தாக்குதல்,  வழிபாட்டுக்கான உரிமை மற்றும் மத சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்

 ****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை  லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam, World Hindu News, 27 July 2025, Broadcast

ஆலயம் அறிவோம்!  ஶ்ரீ வாஞ்சியம் (Post No.14,806)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 806

Date uploaded in London – 28 July  2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

20-7-2025 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை 

ஆலயம் அறிவோம்

ஶ்ரீ வாஞ்சியம்

ஆலயம் அறிவோம் நிகழ்ச்சி. வழங்குவது

பிரஹன்னாயகி சத்யநாராயணன்

புற்றில் ஆடு அரவோடு புனல் மதி

தெற்றுஞ் செஞ்சடைத் தேவர்பிரான் பதி

சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம்

பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே

திருநாவுக்கரசர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சோழமண்டலத்தில் தென்கரைத் தலங்களில் 70வது தலமாக அமைந்துள்ள திருவாஞ்சியம் திருத்தலமாகும்.

இந்தத் தலம்  திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இறைவனின் திருநாமங்கள் :  ஶ்ரீ வாஞ்சியேசுவரர், வாஞ்சிநாதேஸ்வரர், வாஞ்சிலிங்கேஸ்வரர்

அம்மன் : மங்களாம்பிகா, மங்களநாயகி, வாழவந்த நாயகி

தல விருட்சம் : சந்தனம்

தீர்த்தம் : குப்த கங்கை,  இமய தீர்த்தம்

ஆகமம் : காமிக ஆகமம்

காசியை விட வீசம் அதிகம் என்று புகழப்படும் இத்தலம் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

யமன், தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் அனைவராலும் வெறுக்கப்படுவதால் தனது பணி காரணமாக அமைந்துள்ள தோஷத்தை நீக்கவும் தான் மன அமைதி இழந்து தவிப்பதை நீக்கவும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். அவரும் மனம் இரங்கி யமனைத் திருவாஞ்சியம் சென்று வழிபடுமாறு கூறி அருளினார்.

உடனே யமனும் இங்கு வந்து தவமிருந்து சிவபெருமானிடம் தமது குறைகளை முறையிட்டு வழிபடவே சிவபிரான் யமனை இந்தத் தலத்தின் க்ஷேத்திரபாலகனாக நியமித்தார்.

அத்துடன் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்தத் தலத்திற்கு வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,இங்கு வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக் காலத்தையும் தருமாறும் யமனுக்கு உத்தரவிட்டார். இந்தத் தலத்தின் ஒரு சிறப்பு  முதலில் யமனை வழிபட்ட பின்னரே சிவபிரானை வழிபடும் மரபாகும்.

இங்கு யமன் அக்கினி மூலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். எதிரே யமதீர்த்தம் உள்ளது. மாசி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில் மகத்தில் தீர்த்தம் இருக்கும். இரண்டாம் நாள் பரணி அன்று ஸ்வாமி யமதீர்த்தத்தில் தீர்த்தம் கொடுப்பது மரபாகும்.

இத்தலம் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.

திருமால் பூமிதேவியைத் தழுவிக் கொண்டதால் அவருடன் ஊடல் கொண்ட லக்ஷ்மி அவரை விட்டுப் பிரிந்தாள். லக்ஷ்மியை அடைவதற்கு திருமால் தவம் செய்த இடம் நாரணமங்கலம் என்ற இடமாகும், இது ஊருக்கு மேற்கே இரண்டு மைலில் உள்ளது.

லக்ஷ்மி திருமாலை அடைவதற்குத் தவம் செய்த இடம் அச்சுதமங்கலம் ஆகும்.

திருமாலையும் லக்ஷ்மியையும் சேர வைத்த பெருமை இத்தலத்திற்கே உண்டு.

இங்குள்ள கருவறுத்தான் சந்நிதியில் நந்தி மட்டும் உண்டு.

பண்டைக் காலத்தில் இந்தத் தலம் மேற்கு முகமாக இருந்ததென்றும், ஒருவர் பொய் பிரமாணம் செய்ததால் ஸ்வாமி கிழக்கு முகமாகத் திரும்பி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

ராஜகோபுரத்தை அடுத்து கோவிலுக்குள் செல்லும் போது வலது புறத்தில் எமதர்மராஜாவின் சந்நிதி உள்ளது. மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் எம வாகனத்தில் சிவபிரான் ஊர்வலம் செல்கிறார்.

யமனுக்கும் பைரவருக்கும் அதிகாரம் இல்லாத தலம் இது.

கிரகண காலத்தில் அனைத்துத் தலங்களின் நடையும் அடைக்கப்படும்.

ஆனால் இங்கு மட்டும் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனுக்குச் சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெறும்.

எமதர்ம ராஜாவின் சந்நிதிக்கு முபாக பலிபீடமும் நந்தியும் உள்ளன.

அடுத்து வாயிலைக் கடந்து உள்ளே செல்லும் போது  வலது புறம் அபயங்கர விநாயகரும் இடது புறம் பால முருகனும் உள்ளனர்.

இடது புறத்தில் அம்மன் சந்நிதி உள்ளது. கொடி, பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து உள்ளே செல்லும் போது அடுத்த வாயிலின் வலது புறம் விநாயகரும் இடது புறம் சுப்ரமண்யரும் உள்ளனர்.

மூலவரின் கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்கள் உள்ளனர்.

இடது புறம் நடராஜர் சந்நிதி உள்ளது.

இந்தத் தலத்தில் ஶ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி, சோமாஸ்கந்த மூர்த்தி, வெண்ணெய்ப் பிள்ளையார், அறுபத்து மூவர், தக்ஷிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், சந்திர மௌலீஸ்வரர், சந்திரசேகரர், பிருத்வி லிங்கம்,அப்பு லிங்கம், மஹாலக்ஷ்மி, தேயு லிங்கம், வாயு லிங்கம், ஆகாய லிங்கம், தக்ஷிண கைலாஸ நாதர், ஸரஸ்வதி, சனீஸ்வர பகவான், ஷட் லிங்கம், சண்டிகேஸ்வரர், துர்க்கையம்மன், ஆனந்த கூபம், பைரவர், நட்டுவன் பிள்ளையார், மங்களநாயகி அம்மன், வாழவந்தாள் என்னும் உற்சவ மூர்த்தி சந்நிதிகளையும், தல விருட்சமான சந்தன மரங்கள்,, தேரடி மண்டபங்கள், சந்தியாவந்தன மண்டபம் ஆகியவற்றையும் காணலாம்; முறைப்படி வழிபடலாம்.

ஶ்ரீ வாஞ்சியத்தில் யமதர்மன் ஸ்திரமாய் இருக்கிறார். யம பயம் நீங்க இந்தத் திருத்தல வழிபாடு சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் ஒவ்வொரு திருப்பதிகம் பாடி அருளியுள்ளனர்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மங்களாம்பிகையும், ஶ்ரீவாஞ்சியேஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

 –subham—

 tags-ஆலயம் அறிவோம்!  ஶ்ரீ வாஞ்சியம்