ஆலயம் அறிவோம்! சிந்த்பூரணி ஆலயம் (Post No.14,582)


WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 582

Date uploaded in London –2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1-6-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை 

ஆலயம் அறிவோம் 

வழங்குவது பிரஹண்நாயகி சத்யநாராயணன் 

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

    நிறைந்த சுடர்மணிப் பூண்

பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் – இவள்

    பார்வைக்கு நேர் பெருந்தீ

வஞ்சனை இன்றிபகை இன்றி,  சூதின்றி,

    வையக மாந்தர் எல்லாம்

தஞ்சம் என்றே உரைப்பீர் “சக்திஓம் சக்தி

    ஓம் சக்திஓம் சக்திஓம்!

                 – மகாகவி பாரதியார் புகழ் ஓங்குக

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது ஹிமாசல ப்ரதேசத்தில் அமைந்துள்ள, 108 சக்தி பீடங்களில் ஒன்றான, சிந்த்பூரணி ஆலயம் ஆகும். மாதா ஜ்வாலாமுகியின் அம்சமே சிந்த்பூரணி தேவியாகும்.

இமயத்தின் மேற்குப் பகுதி வடக்கிலும், ஷிவாலிக் மலைத் தொடர் கிழக்கிலும், சூழ்ந்திருக்க இது பஞ்சாப் மாநிலத்தை எல்லையாகக் கொண்டு ஹிமாசல ப்ரதேசத்தில் அமைந்துள்ளது.

உனா  மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் டெல்லியிலிருந்து 420 கிலோமீட்டர் தூரத்திலும், ஜலந்தரிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்திலும் சண்டிகரிலிருந்து 150 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

இங்கு எழுந்தருளியுள்ள துர்கா தேவியின் அம்சமான தேவியை சின்னமஸ்திகா தேவி என்று அனைவரும் அழக்கின்றனர். இந்த தேவிக்கு தலை கிடையாது. இப்படி தேவி எழுந்தருளியுள்ளதைப் பற்றிய மார்க்கண்டேய புராணம் கூறும் வரலாறு ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் தேவர்களை அசுரர்கள் மிகவும்  துன்புறுத்தினர். தேவர்கள் துர்க்கையை வேண்டவே, சண்டி தேவியாக அவதாரம் எடுத்து தேவி அசுரர்களை அழித்தாள்.. ஆக்ரோஷமான அந்த தேவி அசுரரை வதம் செய்த பின் தன்னுடன் இருந்த தனது காவல் தேவதைகளான யோகினிகள் ஜயா மற்றும் விஜயா ஆகியோரின் பசி தீராமல் இருக்கக் கண்டாள். அவர்களின் பசியைத் தீர்க்கத் தனது தலையை வெட்டி அதிலிருந்து வெளிவந்த ரத்தத்தை அவர்களுக்குக் கொடுத்தாள். தன்னை அண்டி இருப்போருக்குத் தன்னை அழித்தும் கூட அருள் புரியும் தேவி சின்னமஸ்திகா தேவி என்பது இதன் தாத்பரியம்.

இந்தத் தலத்தைப் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு. 

தட்சன் செய்த யாகத்தில் தேவி பார்வதியின் உடல் வெட்டப்படவே, தேவியின் உடல் பாகங்கள் பாரதமெங்கும் விழுந்தன. அவை சக்தி பீடங்கள் என்று அறியப்படுகின்றன. அந்த பாகங்களில் தேவியின் பாதம் விழுந்த இடம் இது தான். இங்கு தான் இந்த ஆலயம் எழுந்துள்ளது. 

தேவியின் சிலை ஒரு உருண்டையான கல்லாகவே இங்கு  உள்ளது. ஆலயத்தின் பின்னால் ஒரு ஆலமரமும் உள்ளது.

இந்த ஆலயம் எழுந்ததைப் பற்றியும் ஒரு வரலாறு உள்ளது.

இதை நிறுவியவர் பண்டிட் மாய் தாஸ் என்பவர். இவர் ஒரு சரஸ்வத் பிராமணர். அவரது வமிசாவளியினரே இருபத்தியாறு வம்சங்களாக இங்கு பூஜை செய்து வருகின்றனர்.

ஒரு நாள் காட்டின் வழியே சென்று கொண்டிருந்த அவர் ஆலமரம் ஒன்றின் அடியில் இருந்து இளைப்பாறி சற்றே கண்ணயர்ந்தார். அப்போது துர்க்கா தேவி அவரது கனவில் தோன்றி அந்த இடத்தில் தான் ஒரு கல்லாக தங்கி உள்ளதாகவும் அதை உரியபடி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வருமாறும் கூறி அருளினாள். அவரும் ஒரு ஆலயத்தை எழுப்ப அங்கே உரிய முறையில் பூஜைகள் நடைபெறலாயின.

 ‘சின்னமஸ்திகா தாம்’ என்று அழைக்கப்படும் இந்தக் கோவிலின் எல்லா திசைகளிலும் சிவபிரானுக்குக் கோவில்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும், கிழகே காலேஸ்வர் மஹாதேவர் ஆலயமும், மேற்கே நாராயண மஹாதேவர் ஆலயமும், வடகே மச்சகந்த மஹாதேவர் ஆலயமும் தெற்கே சிவ்பாரி ஆலயமும் அமைந்துள்ளன,

 940 மீட்டர் உயரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் உண்டு. ஆலயத்தின் அருகே பண்டிட் மாய்தாஸின் சமாதியும் உள்ளது.

அனைத்து விதமான நலன்களைப் பெறவும் எதிரிகள் தொல்லை தீரவும் இந்த தேவியை வழிபட திரளாக பக்தர்கள். வருகை புரிகின்றனர். குளிர்காலத்தில் உஷ்ணநிலை பூஜ்யம் டிகிரிக்கு கீழாகச் செல்வதால் பக்தர்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இங்கு வருகின்றனர்.

 இங்கு நவராத்திரி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் நவராத்திரி காலத்தில் இங்கு திரளாகக் கூடுகின்றனர். 

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சின்னமஸ்திகா தேவி என அழைக்கப்படும் சிந்த்பூரணி தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

உலக இயல்பு இது தானோ? (Post No.14,581)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,581

Date uploaded in London – –2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதம்

உலக இயல்பு இது தானோ?

ச. நாகராஜன்

சம்ஸ்க்ருத மொழியில் லட்சக்கணக்கில் உள்ள சுபாஷிதங்களில் சில இதோ:

செல்வமும் வறுமையும் வரும் விதம் இது தான்!

கேஷாம்சின் நிஜவேஷ்மனி ஸ்திதவதாமாலஸ்யவஸ்யாத்மனாம்

   த்ருஷ்யந்தே பலிதா லதா இவ சிரம் ச்ம்பந்நஷாகா: ஸ்ரிய: |

அம்பித் லங்த்யயதாம் கனோ: கன்யதாம் க்ஷோணிதலம் க்ஷுந்தததாம்

 அன்யேதாம் வ்யவஸாயசாஹஸசதியாம்  தன்னாஸ்தி யத் பச்யதே ||

சிலருக்கு அவர்கள் வீட்டிலேயே ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக இருந்தாலும் கூட,  கொடிகளில் தவழும் பழங்கள் போல செல்வம் ஏராளமாக வந்து அவர்களிடம் சேர்கிறது;

ஆனால் மற்ற சிலருக்கோ அவர்கள் கடல் கடந்து சென்று சுரங்கங்களைத் தோண்டி பூமி முழுதும் அலசினாலும் கூட, மிகுந்த உழைப்பை மேற்கொண்டாலும் கூட அன்றைய தினத்திற்கு சமைப்பதற்கான ஒரு பொருள் கூடக் கிடைப்பதில்லை.

*

இதயத்திலிருந்து வரும் இனிமையான வார்த்தைகள்!

கேஷாம்சித் வாசி சுகவத் பரேஷாம் ஹ்ருதி மூகவத் |

கஸ்யாப்யா ஹ்ருதயாத் வக்த்ரே வல்கு வல்கந்தி சூக்தய: ||

சிலருக்கு கிளிகள் போல இனிமையான வார்த்தைகள் அவர்கள் வாயில் தவழ்கின்றன; சிலருக்கோ ஊமைகளைப் போல அந்த வார்த்தைகள் அவர்கள் இதயத்திலேயே முடங்கி விடுகின்றன.

ஆனால் சிலருக்கோ நல்ல வார்த்தைகள் அவர்கள் இதயத்திலிருந்து நடனமாடிக் கிளம்பி அவர்கள் வாயை அடைகின்றன!

*

குலத்தையே அழிப்பவர்கள் யார்?

குவஸ்த்ரம் ஹரதே தேஜ: குபோஜ்யம் ஹரதே பலம் |

குபார்யா ஹரதே ப்ராணம் குபுத்ரே ஹரதே குலம் ||

அழுக்கான ஆடையானது ஒருவனது மதிப்பைக் குறைக்கிறது. ஊசிப் போன உணவு ஒருவனது பலத்தைக் குறைக்கிறது. கற்பில்லாத மனைவி ஒருவனது பிராணனை அழிக்கிறாள். நல்ல நடத்தையில்லாத மகன்கள் ஒருவனின் குலத்தையே அழிக்கின்றனர்.

மோதிரம் அணிக!

குஷம் ஸ்வர்ணம் சதா தார்ய பஹிர்மால்யம் ந தாரயேத் |

நாகந்தே பிம்ருயாத் புஷ்பம் நாத்மார்தம் கும்பயேத் ஸ்த்ரஜம் ||

ஒரு மனிதன் எப்போதும் குஸம் புல்லை (தர்ப்பை புல்லை) அணிய வேண்டும். அத்துடன் தங்க மோதிரத்தையும் அணிய வேண்டும்.

வெளிப்புறத்தில் மாலையை ஒருவர் அணியக் கூடாது. மணம் இல்லாத மலரை அணியக் கூடாது. ஒருவர் தான் சூடும் மாலையைத் தானே தொடுக்கக் கூடாது.

 கர்மபலன் வந்தே தீரும் 

கும்பம் நிர்மார்தி சக்ரேண கும்பகாரோ ம்ருதா புவி |

ததேவ கர்மசூத்ரேண பலம் தாதா ததார்தி ச || 

பூமியிலிருக்கும் களிமண்னைக் கொண்டு ஒரு குயவன் ஒரு பானையைச் செய்கிறான். அதே போல படைப்பவன் (விதி) ஒருவன் செய்த கர்மத்திற்குத் தக்கபடி பலனைக் கொடுக்கிறான்.

**

Pictures of 2500 Indian Stamps!- Part 50 (Post No.14,580)

Written by London Swaminathan

Post No. 14,580

Date uploaded in London –  1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

PART 50 

Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps,PART 50,

MAHATMA GANDHI, COMMUNAL HARMONY, SOCIAL UPLIFTMENT, PEASANT’S WELFARE, PICKING SALT, MOTHER TERESA, NAHAR SINGH, PATTABI SITARAMAYYA, JEROME D SOUZA, JAGDISH CHANDRA JAIN, MAHARANA PRATAP,  JOHAR SINGH, A KHAN, RAM PRASAD BISMIL, GORKHA RIFLES, PORT BLAIR JAIL, ROTARY INTERNATIONAL, NEHRU WITH BABY, CHILDREN’S DAY, VALLABHAI  PATEL, SS HINDOSTHAN SHIP, RIVER MAIL SERVICE, REVERENCE FOR LIFE,  V S KHANDEKAR, HAZARI PRASAD DWIVEDI, NANAK SINGH, JAL COPER, POST OFFICE HERITAGE BUILDING, INDPEX STAAMPS, BHARAT PARYATAN DIWAS

–subham—

Tags– Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps,PART 50,

MAHATMA GANDHI, COMMUNAL HARMONY, SOCIAL UPLIFTMENT, PEASANT’S WELFARE, PICKING SALT, MOTHER TERESA, NAHAR SINGH, PATTABI SITARAMAYYA, JEROME D SOUZA, JAGDISH CHANDRA JAIN, MAHARANA PRATAP,  JOHAR SINGH, A KHAN, RAM PRASAD BISMIL, GORKHA RIFLES, PORT BLAIR JAIL, ROTARY INTERNATIONAL, NEHRU WITH BABY, CHILDREN’S DAY, VALLABHAI  PATEL, SS HINDOSTHAN SHIP, RIVER MAIL SERVICE, REVERENCE FOR LIFE,  V S KHANDEKAR, HAZARI PRASAD DWIVEDI, NANAK SINGH, JAL COPER, POST OFFICE HERITAGE BUILDING, INDPEX STAAMPS, BHARAT PARYATAN DIWAS

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1 6 2025 (Post No.14,579)

Written by London Swaminathan

Post No. 14,579

Date uploaded in London –  1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

டம்”– என்று முடியும் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்

1. – பிள்ளையாரின் வளைந்த துதிக்கை

2. – நீரினால் மரணம்

3. – நாம் வசிக்கும் புனித நாடு.

4. – ராமன் கையிலுள்ள வில்

5. – இந்த ராமாயணப் பகுதியை படித்தால் நிறைய செல்வம் கிடைக்கும் .

6. – போருக்குச் செல்லும்  முன்னால் தமிழர்கள், உடலை வெட்டி செய்யும் உயிர்த் தியாகம் .

7. – தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வணிகத் தலமாகும். இதைத் ’தொடுவெட்டி’ என்ற பெயராலும் அழைப்பர்.

8.  – முக்கோல் அந்தணர் என்று தொல்காப்பியம் கூறும் கம்பின் ஸம்ஸ்க்ருதப் பெயர். வைஷ்ணவ ஜீயர் கையில் இருக்கும்.

9. – நம் முடைய பிரபஞ்சத்தின் ஸம்ஸ்க்ருதப் பெயர்.   

விடைகள்

1.வக்ரதுண்டம் – பிள்ளையாரின் வளைந்த துதிக்கை

2.ஜலகண்டம் – நீரினால் மரணம்

3.பரத கண்டம் – நாம் வசிக்கும் புனித நாடு.

4.கோதண்டம் – ராமன் கையிலுள்ள வில்

5.சுந்தரகாண்டம் – இந்த ராமாயணப் பகுதியை படித்தால் நிறைய செல்வம் கிடைக்கும் .

6.நவகண்டம் – போருக்குச் செல்லும்  முன்னால் தமிழர்கள், உடலை வெட்டி செய்யும் உயிர்த் தியாகம் .

7.மார்த்தாண்டம்- தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வணிகத் தலமாகும். இதைத் ’தொடுவெட்டி’ என்ற பெயராலும் அழைப்பர்.

8.த்ரிதண்டம்  – முக்கோல் அந்தணர் என்று தொல்காப்பியம் கூறும் கம்பின் ஸம்ஸ்க்ருதப் பெயர்.

9.பிரம்மாண்டம் – பிரம்மாண்டம் – நம் முடைய பிரபஞ்சத்தின் ஸம்ஸ்க்ருதப் பெயர்.   

–SUBHAM—

TAGS- லண்டன், தமிழ், குறுக்கெழுத்துப் போட்டி,1 6 2025

நம்பியை நம்பாதே! தி. வி. பு. ஆராய்ச்சிக் கட்டுரை-8 (Post No.14,578) Part one

Goddess Meenakshi of Madurai Temple in Wedding pose.

Written by London Swaminathan

Post No. 14,578

Date uploaded in London –  1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நம்பியை  நம்பாதே ! தி, வி பு ஆராய்ச்சிக் கட்டுரை-8

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-8

வரலாற்றில் எவ்வளவோ புதிர்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளன. அவற்றில் ஒன்று மாணிக்க வாசகர் பற்றிய அதிசயமான புதிர்; விடுகதை , மறைப்பு!

World famous Madurai Meenkashi Sundareswrar / Shiva Temple.

சைவ சமயக்குரவர்கள் படங்கள் எல்லாவற்றிலும் நால்வர் படத்தைக் காண்கிறோம். நால்வர்  என்பவர்கள் திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம், மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள்.

புதிர் என்ன?

பல அற்புதங்களைச் செய்த மாணிக்க வாசகரை ஏனைய  மூவரும் ஏன் குறிப்பிடவில்லை ?  அது போகட்டும்; மாணிக்கவாசகர் அவர்களுக்குப் பிற்காலத்தில் வாழ்ந்து இருந்தால் , அவர் ஏன் மூன்று தேவாரப் பாடகர்களைக் குறிப்பிடவில்லை?  அட,அது போகட்டும் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் ஏன் இவரைப் பாடவில்லை ? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிய அறிஞர்கள் அனைவரும் சப்பைக்கட்டு, நொண்டிச் சாக்குதான் கூறியுள்ளனர் . அவற்றைத் திரும்ப எழுதும் தேவையே இல்லை . ஆகையால் இதற்கு வரலாற்றுச் சான்றுகள் காண்பதே. முறை  

இந்தக் கேள்வி ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?  ஏனெனில் மாணிக்கவாசகருடைய  காலம் நமக்குத் தெரியவேண்டும் .

 ஒரு இந்தியவியல்INDOLOGIST வெளிநாட்டு அறிஞர் மிக அழகாக இதை வருணித்தார் ; இந்திய வரலாற்றில் எந்தக் காலத்தையும் உறுதிபடச் சொல்ல முடியவில்லை . ஏனெனில் அது Jigsaw Puzzle   ஜிக் சா பசில் போன்றது; ஒரு  சதுரத்தை நகர்த்தினால் இன்னொரு சதுரம் நகருகிறது !

இப்போது கட்டுரையின் தலைப்புக்குச் செல்வோம் .

பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் முதலில் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து மொழிபெயர்த்து திருவிளையாடல் புராணத்தை எழுதினார் . அவருக்கு நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பரஞ்சோதி முனிவர், இன்னும் ஒரு திருவிளையாடல் புராணத்தை எழுதினார் இவை தவிர கடவுள் மாமுனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் , சிவ லீலாவர்ணம் என்ற சம்ஸ்க்ருத  திருவிளையாடல் புராணம் முதலியன உள்ளன . பரஞ்சோதி முனிவர் கால வரிசைப்படி நூலினை அமைத்தார் அதாவது மதுரை கூடல் –ஆலவாய் என்ற மூன்று பெயர்களில் புராணத்தை பாடல் வடிவில் எழுதினார் ஆனால் நம்பி மதுரையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

சரித்திரப்படி முதலில் இருந்தது மதுரை ; மூன்று சங்கங்களை உண்டாக்கி தெய்வத் தமிழை வளர்த்த புண்ய பூமி மா மதுரை ; இன்றுவரை அதற்குச் சான்றாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வானத்தைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது; இதற்குப் பின்னர் நன் மாடக்கூடல், ஆலவாய் பெயர்கள் ஏற்பட்டன. இந்த வரிசையை பரஞ்சோதி கையாண்டுள்ளார் ஆனால் ம்பி, மதுரை என்ற நகரம் தோன்றியதை இடையே வைத்துள்ளார்.

இந்த வரிசை தவறு என்று மேம்போக்காகச்ச் சொல்லிவிடலாம் ஆயினும் நம்பியைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவி டமுடியாது ; காரணம் ?

அவர் எந்த மதுரையைக் கூறினார்? என்ற கேள்வியை அவர் தரப்பு வழக்கறிஞர் நீதி மன்றத்தில் எழுப்புவார். முதற் சங்க மதுரை, இரண்டாம் தமிழ்ச் சங்க மதுரை ஆகியவற்றைக் கடல் கொண்ட பின்னர் இப்போதுள்ள மதுரை தோற்றுவிக்கப்பட்டது . மகஸ்தனிஸ் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இண்டிகாவில் பாண்டேயா என்ற தென்னாட்டு மஹாராணியைக் குறிப்பிடுகிறார் அதாவது மீனாட்சி அம்மையாரின் புகழ் பீஹாரிலுள்ள பாட்னா வரை அப்போதே பரவியதால் இப்படி  எழுதியுள்ளார் அது எந்த மதுரை ? இதிலும் ஒரு புதிர் !  கி பி 75 CE  வாக்கில் மதுரை மாற்றப்பட்டதாக பிளினி PLINY  என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார் மதுரை எரியுண்டது பற்றிப் பேசும் சிலப்பதிகாரத்தின் காலம் கி பி 132 CE  என்று கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் குறிப்பால் அறிகிறோம் இது தற்கால மதுரையே! ஏனெனில் இன்றும் மதுரையில் கோவலன் பொட்டல் உள்ளது.

Goddess Meenakshi of Madurai Temple.

பரிபாடல் போன்ற சங்க நூல்கள்  மதுரை,  தாமரைப்பூ போல வீதிகள் அமைந்த ஊர்  என்று பாடுகிறது ; இன்றும் மதுரை அப்படியே உள்ளது; மீனாட்சி சுந்தரேச்வரர் கோவில் நடு நாயகமாகத் திகழ ஆடி, ஆவணி, சித்திரை மாசி வீதிகள் சதுரத்துக்குள்  சதுரமாக அமைய, பின்னர் வெளி வீதியும் வைகை ஆறும் உள்ளன.

கல்லாடம் போன்ற நூல்கள் 64 திருவிளையாடல் என்று சொல்லிவிட்டு 32  திருவிளையாடல்களை — அதாவது சிவ பெருமான் நடத்திய அற்புத லீலைகளைப் பட்டியல் இடுகிறது. சில லீலைகளை சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது

நம்பி என்ன தப்பு செய்தார் ?

தொடரும்…………………… to be continued

Tags- திருவிளையாடல் புராணம் , ஆராய்ச்சிக் கட்டுரை-8,நம்பியை  நம்பாதே, Part One

கல்கி வார இதழும் மூதறிஞர் ராஜாஜி அவர்களும்! (Post No.14,577)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,577

Date uploaded in London – –1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

13-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

கல்கி வார இதழும் மூதறிஞர் ராஜாஜி அவர்களும்! 

ச. நாகராஜன்        

தேசீயப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும், தமிழிசை இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவருமான பேராசிரியர் கல்கி (பிறப்பு:9-9-1899 மறைவு 5-12-1954)  மாயவரம் அருகே உள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ராமசாமி ஐயர் – தையல்நாயகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

1924ல் ருக்மிணி என்பவரை மணந்தார். ஒரு புதல்வர் – ராஜேந்திரன். ஒரு புதல்வி – ஆனந்தி. இருவரும் தந்தை வழியில் மிளிர்ந்த எழுத்தாளர்களே.

 கல்கி மாணவப் பருவத்தில் முதன் முதலாக ராஜாஜியைச் (தோற்றம் 10-12-1878 மறைவு 25-12-1972) சந்தித்தார். அவரிடம் ஏற்பட்ட ஈர்ப்பால் அவரைப் பற்றி நிறைய விசாரித்து அவரை நன்கு அறிந்து கொண்டார்..

 பின்னால் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு வருட சிறை வாசத்தில் பெற்ற அனுபவம், திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜியின் சேவை ஆகியவற்றைப் பார்த்து அவருடைய சிஷ்யராகவே ஆனார். இந்த அபூர்வமான பந்தத்தை அவர் பூர்வஜன்ம பந்தம் என்று பின்னால் எடுத்துரைத்தார்.

 திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜி ஆரம்பித்த விமோசனம் பத்திரிகையின் பொறுப்பை ஏற்றார் கல்கி. பின்னர் 1923ல் நவசக்தி இதழில் பணியாற்றினார். அதன் பின்னர் 1931ல் திரு எஸ்.எஸ்.வாசன் நடத்திய ஆனந்தவிகடனில் துணை ஆசிரியர் பதவியை வகித்தார்.

 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரம் காட்டினார் கல்கி. அரசை எதிர்க்கும் இந்த இயக்கம் திரு வாசனுக்கு சங்கடத்தைத் தந்தது.

 விகடனிலிருந்து வெளியேறிய கல்கி திரு, சதாசிவம் உதவியுடன் கல்கி பத்திரிகையை 1941ல் ஆரம்பித்தார். கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அரசியல் கட்டுரைகள் உள்ளிட்டவை பல்லாயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்தன.

 கல்கி வார இதழ் ராஜாஜியின் முழு ஆசீர்வாதத்தைப் பெற்றது.

டி.கே.சி. அ.சீனிவாசராகவன், மீ.ப.சோமு, பி.ஶ்ரீ., நீதிபதி மகாராஜன் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை கல்கிக்கு அனுப்ப அது மக்கள் ஆதரவை வெகுவாகப் பெற்றது.

 ராஜாஜி தனது அரசியல் கருத்துக்களையும், சமூகம் மேம்படுவதற்கான கருத்துக்களையும், ஆன்மீக இதிஹாஸ பொக்கிஷங்களையும், உயரிய ஆன்மீகக் கருத்துக்களையும் கல்கி இதழின் வாயிலாகத் தெரிவித்து வந்தார்.

 சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து போன்ற காலத்தை வென்ற ராஜாஜியின் படைப்புகள் கல்கி வார இதழில் தொடராக வந்தன.

ஆயிரமாயிரம் பேர் அதைப் படித்து ஊக்கம் பெற்றனர்.

 ராஜாஜியின் மறைவுக்குப் பின்னரும் அவரது கருத்துக்களும், சிறப்பான சிந்தனைகளும் தொடர்ந்து கல்கி இதழில் வெளியாகிக் கொண்டே இருந்தன.

 ராஜாஜி வாழ்க்கை வரலாறு கல்கியில் தொடராக வெளி வந்தது. ஶ்ரீமதி லக்ஷ்மி தேவதாஸ் காந்தி ‘சில நினைவுகள்’ என்ற தலைப்பில் சுவையான தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

 கல்கியில் அவ்வப்பொழுது பல்வேறு தலைப்புகளில் வெளி வந்த. அவரது சிந்தனைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை.

அவற்றில் சில கருத்துக்கள்:

 ஆக்ரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சொற்பொழிவில் அவர் கூறியது:

இளைஞர்கள் நாம் அன்றாட வாழ்வில் அதிகமாகக் காண முடியாத வீரம், விடாமுயற்சி ஆகியவற்றைப் படித்து ஊட்டம் பெற வேண்டும்.

 திருவள்ளுவரும் நம்மாழ்வாரும் என்ற கட்டுரை வசந்தம் இதழில் பிரசுரமானது. 35ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது கல்கி அதை மீண்டும் பிரசுரம் செய்தது.

“மனனக மலமற மலர்மிசை

எழுதரு மனனுயர் வளவிலன்” என்று ஆழ்வார் ஆரம்பத்தில் பாடும் போது “மலர்மிசை ஏகினான்” என்று வள்ளுவனார் பாடியது நினைவுக்கு வருகிறது.

 நவசக்தியில் வெளியான கவிதை ஒன்றை கல்கி மீண்டும் பிரசுரம் செய்தது:

மதுவைத் தருவது பாவம் என்ற கருத்தை அழகுமல்ல புகழுமல்ல என்ற கவிதையாக தமிழக அரசுக்குத் தருகிறார் ராஜாஜி.

அந்தக் கவிதையின் கடைசி வரிகள்:

 “கவலைக்கு மருந்திது பயமின்றி

அருந்தென்று தருவது பாபமாச்சே

நண்பனாகச் சொல்லுகிறேன்

நல்லதுக்குச் சொல்லுகிறேன்

பாபத்தைச் செய்யாதே!”

 ராமகிருஷ்ண உபநிஷதத்தை அழகுறத் தமிழில் அளித்தார் ராஜாஜி.

அதிலிருந்து கல்கியில் பிரசுரமான ஒரு உபதேசம் இது:

 கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பையன் கிறுகிறுவென்று சுழன்று சுற்றுகிறான். எத்தனை வேகமாகச் சுழன்றாலும் கம்பத்தைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சுழல்கிறான்.

அதைப் போல் பகவானைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு உலக வாழ்க்கையில் சுழலுங்கள்

 மீ.ப. சோமு அவர்கள் எழுதிய ரவிசந்திரிகை நூலுக்கு முன்னுரையில் ராஜாஜி அவர்கள் குறிப்பிட்டது:

“தொடர்கதைகளை எனக்கு இப்போது படிக்க முடிகிறதில்லை. நான் ‘ரவிசந்திரிகை’யைப் படிக்கவில்லை. ஏன் படிக்க வேண்டும்? எழுதிய ஆசிரியரைப் (சோமு) படித்து விட்டேன். அவருக்கும் நூலுக்கும்  என் ஆசிகள் – சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

 கடைசியில் கல்கி இதழில் வெளியான” ராஜாஜி வாழ்க்கை வரலாறு” தொடரில் தன் தாயார் சிங்காரம்மாவிடம் அவர் கற்றுக் கொண்ட ஒரு பாடத்தைப் பற்றிச் சொன்னதைப் பார்க்கலாம்:

 “தாயார் சிங்காரம்மா அவனுக்குக் கூறிய கதைகள் வேடிக்கையாகவும் இருந்தன; போதனைகளாகவும் அமைந்தன…. அவற்றில் ஒன்று ….

எதன் மீது ஏற வேண்டுமோ அத்துடன் ஒட்டினாற் போல் ஏணியை வைக்கக் கூடாது.’ஸ்திரமான ஒரு கோணத்தில் வைக்க வேண்டும்.”

 தாயாரின் கூற்று படி, ஸ்திரமான ஒரு கோணத்தில் தனக்கென்று அமைத்துக் கொண்ட பாணியில்  ஏணியை வைத்து உயரத்தில் ஏறி அதில் மற்றவரையும் ஏற வைத்த மூதறிஞர் ராஜாஜியையும் மறக்க முடியாது; அவரது போதனைகளை இடைவிடாமல் வழங்கி வந்த வழங்கி வரும் கல்கி வார இதழையும் மறக்க முடியாது; கல்கியை நிறுவிய மாபெரும் மனிதரான கல்கியையும் மறக்க முடியாது! 

என்ன சரிதானே! நண்பர்களே!!

***

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி3152025 ( Post No.14,576)

Written by London Swaminathan

Post No. 14,576

Date uploaded in London –  31 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரம்”– என்று முடியும் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்

1. –பெண்களுக்கு மிகவும் பிடித்தது;

2. –,குவியல், அடுக்கு, நெற்குவியல், களஞ்சியம்;

 3. — ஜோதிர்லிங்கத்தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே தலம்; , 4. அளித்தால் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; ,

 5. — முத்து மாலை என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்;

 6. தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளது  திருதராஷ்டிரனின் மனைவியின் தேசம்;

7. –அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு;

8. ஷேவிங் முடிந்தவுடன் ஆண்கள் முகத்தில் தடவிக் கொள்வார்கள் ;கி ருமிகளைக் கொல்லும்; ரத்தக் கசிவைத் தடுக்கும்  

31-5-2025

1    2    3
           
           
           
           
8    ம்    4
           
           
           
           
7    6    5

31-5-2025

1    2    3ரா
       மே 
  ங்  ம்  ஸ்  
   கா பா    
        
8டிகாம்காங்4
        
   து தா ஹா   
    ந்    
 தி   கா   க் 
7    6    மு5

விடைகள்

1.அலங்காரம் 2.அம்பாரம், 3.ராமேஸ்வரம், 4.சங்காரம்5.முக்தஹாரம்6.கா ந் தாரம், 7.அதிமதுரம் 8.படிகாரம்

1.அலங்காரம் –பெண்களுக்கு மிகவும் பிடித்தது; 2.அம்பாரம்–,குவியல், அடுக்கு, நெற்குவியல், களஞ்சியம்; 3.ராமேஸ்வரம்– ஜோதிர்லிங்கத்தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே தலம்; , 4.சங்காரம்– அளித்தால் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; , 5.முக்தஹாரம்– முத்து மாலைஎன்ற ஸம்ஸ்க்ருதச் சொல்; , 6.கா ந் தாரம்– தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளது  திருதராஷ்டிரனின் மனைவியின் தேசம்; , 7.அதிமதுரம்–அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு; 8.படிகாரம்–  ஷேவ் ஹீவிங் முடிந்தவுடன் ஆண்கள் முகத்தில் தடவிக் கொள்வார்கள் ;கிருமிகளைக் கொல்லும்; ரத்தக் கசிவைத் தடுக்கும் .

—subham—

Tags- லண்டன், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி,3152025

Hindu  Crossword  31525 (Post No.14,575)


Tamils Ritual Suicide

Written by London Swaminathan

Post No. 14,575

Date uploaded in London –  31 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Find words ending ANDA; though they are Sanskrit words they are used and understood through Hindu hymns in many Indian languages including Tamil.

1. – Universe ; literally big egg or globe.

2. – Sun; a temple for sun in Kashmir and a town in Tamil Nadu.

3. – Ascetics carry this stick according to Tolkappiam, the oldest book in Tamil (Mukkol Anthanar).

4. – Tamil’s heroic sacrifice before war; literally meaning Nine Cuts in the body; something like Japanese Harakiri.

5. – Whole, Uncut;Hindu Patriots pray for Undivided Bharat.

6. – Frivolous , fallacious argument.

7.– Name of women, Goddess meaning All Universe.

8. – Rama’s bow.Brahmanda – Universe ; literally big egg or globe.

2.Marthanda – Sun; a temple for sun in Kashmir and a town in Tamil Nadu.

3.Tridanda- Ascetics carry this stick according to Tolkappiam, the oldest book in Tamil (Mukkol Anthanar).

4.Navakandam- Tamil’s heroic sacrifice before war; literally meaning Nine Cuts in the body; something like Japanese Harakiri.

5.Akhanda- Whole, Uncut;Hindu Patriots pray for Undivided Bharat.

6.Vitanda- Frivolous , fallacious argument.

7.Akilanda – Name of women, Goddess meaning All Universe.

8.Kothanda- Rama’s bow. 

B1        M2        3
 R       A       T 
  A      R      R  
   H     T     I   
    M    H    D    
     A   A   A     
      N  N  N      
       D D D       
        AAA        
8KOTHANDA ADNAKAVAN4
        AAA        
       D D D       
      N  N  N      
     A   A   A     
    L    T    H    
   I     I     K   
  K      V      A  
 A7       6       5 

 —Subham—

Tags- Hindu  Crossword 31525

Pictures of 2500 Indian Stamps!- Part 49 (Post No.14,574)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,574

Date uploaded in London – –31 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 49

Stamps posted today include 1997 STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

BHATI VEDANTA PRABHUPADA, KAVI SUDERDAS, MEDICINAL PLANTS, SARPAGANDHA, TULSI, HARIDRA, GHRITKUMARI, GOA BEACH, RAMARAO, LAWRENCE SCHOOL, MARATHA 200, SWAMI BRAHMANAND, PENTOXYLON, SCINDIA SCHOOL, EXTINCT PLANTS, INTERPOL, RONALD ROSS, RURAL WOMEN OF INDIA, LADAKH, ARUNACHAL PRADESH, GUJARAT, ORISSA, INTERNATIONAL PHILATELIC EXHIBITION, FIRAQ GOEAKHPURI, WILLIAM JONES, G S  DHILLON, SHAW NAVAZ KHAN, P K SAGHAL

–subham—

Tags– BHATI VEDANTA PRABHUPADA, KAVI SUDERDAS, MEDICINAL PLANTS, SARPAGANDHA, TULSI, HARIDRA, GHRITKUMARI, GOA BEACH, RAMARAO, LAWRENCE SCHOOL, MARATHA 200, SWAMI BRAHMANAND, PENTOXYLON, SCINDIA SCHOOL, EXTINCT PLANTS, INTERPOL, RONALD ROSS, RURAL WOMEN OF INDIA, LADAKH, ARUNACHAL PRADESH, GUJARAT, ORISSA, INTERNATIONAL PHILATELIC EXHIBITION, FIRAQ GOEAKHPURI, WILLIAM JONES, G S  DHILLON, SHAW NAVAZ KHAN, P K SAGHAL, 1997 STAMPA, PART 49

பிள்ளையாரை முதலில் வணங்குவது ஏன்? (Post No.14,573)

Written by London Swaminathan

Post No. 14,573

Date uploaded in London –  31 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வாதாபி கணபதிம் என்ற கர்நாடக சங்கீதப் பாடலை அறியாத இசை ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது . அதில் வரும் ஒரு வரியை எல்லா பாடகர்களும் பத்து முதல் முப்பது முறை வரை திரும்பத் திரும்பப் பாடுவார்கள் ; அதுதான் பிள்ளையாரை அல்லது யானையை இந்துக்கள் வணங்குவதற்கு காரணம்..

அது என்ன வரி ?

வக்ர துண்டம் பிரணவ ஸ்வரூபம் என்னும் வரியாகும். அடுத்த முறை இந்தப் பாடலை கேட்கும்போது ஒவ்வொரு பாடகரும் எத்தனை முறை இந்த வரியைச் சொல்கிறார்கள் என்று கணக்குப் போடுங்கள் அப்போது தெரியும் ஏன் யானை முகத்தோனை முதலில் வழிபடுகிறார்கள் என்று.

இந்தப் பாடல், திருவாரூரில் உள்ள மூலாதார கணபதியின் பேரில் பாடப்பட்டது. அந்த கணபதியை ‘வாதாபி கணபதி’ என்றும் அழைப்பார்கள் .சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இந்தப் பாடலை இயற்றினார்.

பிள்ளையாரின் வளைந்த துதிக்கை பிரணவ மந்திரமான ஓம் என்னும் எழுத்தின் வடிவத்தில் இருக்கிறது. அந்த ஓம்தான் எல்லா வேத மந்திரங்களுக்கும் முதல் எழுத்து; அந்த எழுத்தைப் பிரித்துப் பார்த்தால் அ +உ+ ம  என்று வரும் இதனால்தான் பகவத் கீதையில் கண்ணன் நான் எழுத்துக்களில் ‘அ’ என்னும் எழுத்தாக இருக்கிறேன் என்கிறார் ; அதையே வள்ளுவரும் முதல் குறளில்   ‘அ’கர முதல எழுத்து எல்லாம் என்று தமிழில் சொன்னார்  ஆக உலகமே ஓம் என்னும் எழுத்தில் இருக்கிறது!

அது மட்டுமல்ல உலகமே பிக் பேங் BIG BANG  என்னும் ஒலியில் துவங்கியதாக விஞ்ஞானிகள் சொல்வார்கள்; அது உபநிஷதம் சொல்லும் உண்மை. இந்தப் பிரபஞ்சமே ஓம்கார ஒலியிலிருந்து துவங்கியது என்று நமது உபநிஷதங்கள் சொல்கின்றன  இவ்வளவு பெருமை உடைய இந்த ஒரு ஸப்தத்தைத் தியானம் செய்தே இறைவனை அடையலாம் என்பதால் இந்தியாவில் உதித்த சனாதன மதம் முதல் சீக்கிய மதம் வரை எல்லோரும் ஓம்காரத்தைப் போற்றுகின்றனர் இதனால்தான்  பிள்ளையாரை முதலில் வணங்குகிறோம்.அடுத்த முறை பிள்ளையார் சிலைக்கு முன்னால் நிற்கும்போது இந்த ஓம்காரத்தையும் மனதில் தியானியுங்கள்

****

திருவாரூர் வாதாபி கணபதி– ஷோடச கணபதி கீர்த்தனை

இந்தக் கீர்த்தனையில் அவர் பதினாறு விதமாக கணபதியின் பெருமைகளைச் சொல்வார்.

‘ஷோடச கணபதி கீர்த்தனை’ என்றும் அந்தக் கீர்த்தனைக்குப் பெயர் என்று அருட்சக்தி என்ற ஒரு பெரியவர் எழுதியுள்ளார்.

வாதாபி கணபதிம் பஜேஹம் வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி

பூதாதி ஸம்ஸேவித சரணம் பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம்

வீதராகிணம் வினதயோகினம் விச்வகாரணம் விக்னவாரணம்

சரணம்

புராகும்ப ஸம்பவ முனிவர  ப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்

முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ரஸ்திதம்

பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்

நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம் நிஜவாமகர வித்ருதேகக்ஷுதண்டம்

கராம்புஜபாச’பீஜாபூரம் கலுஷவிதூரம் பூதாகாரம்

ஹராதிகுரு ஹதோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்

பொருள்:

யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும்

விளங்கும் வாதாபி கணபதியை நான் வணங்குகிறேன் (பஜனை செய்கிறேன்).

பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.

வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர்.

இடையூறுகளைப் போக்கடிப்பவர்.

முன்காலத்தில் கும்ப சம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்னும்

சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.

மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.

விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.

மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.

தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.

தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்,

இவற்றை உடையவர். பாபமற்றவர்.

பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.

பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும்

சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர்.

ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்

Thanks to Arutsakti website.

****

நான் முன்னர் ஒரு கட்டுரையில் எழுதியது:–

பழைய கதையைச் சுருக்கமாகக் காண்போம்:– இரண்டாவது புலிகேசி என்னும் சாளுக்கிய மன்னன் தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்திலிருந்து ஆண்ட மகேந்திர பல்லவ வர்மனைத் தோற்கடித்தான். அவனது மகன் பெயர் நரசிம்ம வர்மன். பெயருக்கு ஏற்ற நரசிங்கம்தான் அவன். தந்தையைத் தோற்கடித்த புலிகேசியைப் பழிவாங்க பரஞ்சோதி என்ற கமாண்டரின் (படைத் தளபதி)

தலைமையில் ஒரு படையை கர்நாடகத்திலுள்ள பாதாமிக்கு (வாதாபி) அனுப்பினான். அவர் சாளுக்கியப் படைகளைச் சிதறடித்தார். அங்கே பல்லவர்களின் கொடி பறக்கத் துவங்கியது. அப்போது அந்த நகரிலிருந்த கணபதியையும் எடுத்து வந்து தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். அதற்கு வாதாபி கணபதி என்று பெயர்.வாதாபியை எப்படி அகத்தியர் வெற்றிகண்டாரோ அப்படி நரசிம்ம வர்மன் வாதாபியை வென்றான் என்று பல்லவர் கல்வெட்டுகள் புகழாரம் சூட்டுகின்றன (வாதாபி ஜீர்ணோ பவ: கதையை தனியாக முன்னரே கொடுத்துள்ளேன்) இந்த வாதாபி கணபதி கதையை முத்துசாமி தீட்சிதரும் தனது ஹம்சத்வனி ராக கீர்த்தனையில் சொல்லுவது சிறப்புக்குரியது. எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.

 திருவாருருக்கு அருகில்தான் திருச்செங்காடங்குடி உளது. நரசிம்மவர்மனின் படைத் தளபதியாக இருந்த பரஞ்சோதிதான் பெரிய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனாராகத் தோன்றுகிறார். அவருடைய சிவபக்தியை அறிந்த பல்லவ மன்னன் அவரைப் போற்றி வணங்கி படைப் பொறுப்புகளிலிருந்து விடுவித்து இறைப்பணியைத் தொடர வேண்டுகிறான். அவருடைய ஊருக்கு கணபதீச்வரம் என்றும் பெயர்.

****

எனது மொழியியல் ஆராய்ச்சி 

கட்டுரையை முடிப்பதற்கு முன்னதாக கொஞ்சம லிங்குஸ்டிக்ஸ் / LINGUISTICS மொழியியல் ஆராய்ச்சியையும் காண்போம்.

வாதாபி என்னும் பெயரே பாதாமி என்று திரிந்தது

வா + தா+ பி = பா +தா+ மி

 என்பது ப ஆக மாறும் என்பது சங்கத் தமிழில் உள்ளது; சபை என்பதை அவை என்று எழுதுவர். இது அவஸ்தன் முதல் ஸ்லாவ்

மொழிவரை உலகம் முழுதும் உளது வருணன் என்னும் தெய்வத்தை ஸ்லாவ் மொழி பேசுவோர் பருண் என்று கும்பிட்டார்கள் இன்றும் வங்காளி, மொழி, அஸ்ஸாமிய மொழிபேசுவோர் நாம்   என்று சொன்னால்  என்பர்; நாம் வ என்று சொன்னால்  என்பார்கள் சிவ சாகர் என்ற ஊரின் பெயரை சிப் சாகர் என்றுதான் சொல்வார்கள் அதே போல மி  , 

என்பதும் வி ,  ஆக மாறும் நாமே பேச்சு வாக்கில் விழி என்பதை முழி என்கிறோம். இதற்கும் நிறைய ஆதாரம் உள்ளது ஆக வாதாபி என்பதே சரி; பாதாமி என்பது அதன் திரிபு; அதாவது பேச்சு வழக்கு.

இன்னும் ஒரு உதாரணம்

சா + ம+ ரி என்ற மானை வள்ளுவர் கவரி என்று சொன்னார்;  இதிலும்  என்னும் எழுத்து வ என்னும் எழுத்தாக மாறுகிறது. இந்த மானின் முடியை மன்னருக்கும் கடவுளுக்கும் வீசும்போது கவரி ஏந்தினர் அல்லது சாமரம் வீசினர் என்போம். இந்த மாற்றமும் உலகம் முழுதும் உள்ளது.

காரணம்?

உலகில் ஆதிகாலத்தில் சிவ பெருமானிடம் தோன்றிய தமிழ் மொழியும் சம்ஸ்க்ருத மொழியும் மட்டுமே இருந்தன.

இந்துக்கள் உலகம் முழுதும் கலாசார தீபத்தை ஏந்திக்கொண்டு சென்று நாகரீகத்தைப் பரப்பியதால் இந்த மொழியியல் விஷயங்கள் உலகின் எல்லா பழைய மொழிகளிலும் இருப்பதைக் காண்கிறோம்.

–சுபம்-

TAGS –வாதாபி கணபதிம் பாடல், பாதாமி, வாதாபி, வக்ர துண்டம் , பிள்ளையார் , முதல் வணக்கம், ஏன், மொழியியல் ஆராய்ச்சி கவரிமான் சாமரம்,