
Written by London Swaminathan
Date: 9 September 2017
Time uploaded in London- 16-10
Post No. 4197
Pictures are taken from various sources; thanks.
தேவாரத்தில் சம்பந்தப் பெருமான்) அற்புதமாகப் பாடி வைத்திருக்கிறார். திரிபுரங்களை எரிக்க சிவபெருமான் பயன்படுத்திய அற்புத அஸ்திரம் “எரி, அரி, கால்!” அதாவது அக்னி, திருமால், வாயுதேவன்.
வேதம் போற்றும் மூன்று தேவர்கள் இந்த மூவர். இவர்களை ஒரு சேர விடுத்தாராம். முதலில் பாடலையும் கருத்தையும் காண்போம். பிறகு விஞ்ஞானச் செய்திகளை ஆராய்வோம்:
கல் ஆல் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர்
எல்லாம் ஒரு தேராய் அயன் மறைபூட்டி நின் று உய்ப்ப
வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்
வில்லால் எயில் எய்தான் இடம் வீழிம் மிழலையே
பொருள்
கல்லால மரத்தின் கீழிருந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உறைத்த பெருமானே! எங்களைக் காப்பாற்றுக என்று தேவர்கள் எல்லாம் வணங்கி வேண்டி நிற்க,
ஒளி திகழும் சூரிய சந்திரரர்கள் தேர்ச் சக்கரங்களாகவும்,
பிரமன் சாரதியாகவும்,
வேதங்கள் குதிரைகளாகவும் திகழ
காற்றுப் போன்று வேகமாகச் செல்லும்
எரிக்கும் நெருப்பைக் கொண்டு,
திருமாலாகிய அம்பினால்,
மேருமலையயை வில்லாகவும்,
வாசுகி எண்ணும் பாம்பை நாணாகவும்,
கொண்டு அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்தான்.
அவனுடைய இடமாவது திருவீழிமிழலை
எல்=ஒளி, கோல்=அம்பு, எரி=அக்னி, அரி=திருமால், காற்று=வாயு

திருநெடுங்களப் பாடலில் சம்பந்தர் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்:
கூறு கொண்டாய் மூன்றுமொன்றாக்
கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டோர் புரமெரித்த
மன்னவனே……………………
பொருள்
உமா தேவியை ஒருபாகத்தில் கூறாகக் கொண்டாய்; நெருப்பு, காற்று, திருமால் ஆகிய மூன்றும் இணைத்து ஓர் அம்பு ஆக்கி அதனைச் செலுத்தி முப்புரங்களைக் கொண்டாய்.
ஆக அசுர சக்திகளை அழிக்க திருமாலின் உதவி தேவை
வேதத்தில் அங்கொன்று இங்கொன்றுமாக எடுத்து அனர்த்தம் சொல்லும் வெள்ளைகா ர ர்கள் இது போன்ற அதிசய விஷயங்களை விட்டு விடுவார்கள். ஆகாயத்தில் தொங்கிய (FLOATING METAL FORTS) கோட்டைகள் என்ன? வெளி உலகவாசிகளின் (ALIEN ATTACK) தாக்குதலா? தேவர்களுக்கு அந்தக் கோட்டையில் இருந்துகொண்டு அவர்கள் தொல் லை தர, சக்திவாய்ந்த தேவர்கள் அஞ்சியது ஏன்?
ஸ்டார்வார்ஸ் ஏவுகணைத் (STARWARS PROJECT- MISSILE PREVENTION) தடுப்பு திட்டத்தை விட, பெரிய திட்டத்தில் முச்சக்திகளை இணைத்து சிவபெருமான் மூன்று கோட்டைகளை எரித்தது எப்படி?

இதுபோன்ற பல கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தோன்றுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேதத்தில் உள்ள வாசகம் திரிபுராந்தகன். அக்காலத்தில் கற்பனைக் கதை எழுதக் கூட இந்த விஷயங்கள் அவர்களுக்குப் புரிபட்டிராது. எதிர்கால அறிவியல் விளக்கம்தான் இத்தகைய புதிர்களை விடுவிக்கும்!
–subham–