சருப்பதோபத்திரம் – 4

culture-7

தமிழ் என்னும் விந்தை! -15

சருப்பதோபத்திரம் – 4

 

கட்டுரையை எழுதியவர் :–  ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1516; தேதி 25 டிசம்பர், 2014.

 

இனி யாப்பருங்கலவிருத்தி உதாரணமாகத் தரும் நான்கு சருப்பதோபத்திரச் செய்யுள்களைக் கண்டு மகிழ்வோம்:

நீகா வாமா மாவா காநீ                                         காமா வாதா தாவா மாகா                                        வாவா கோதா தாகோ வாவா                                   மாதா தாமா மாதா தாமா

 

நீ கா வா மா மா வா கா நீ
கா மா வா தா தா வா மா கா
வா வா கோ தா தா கோ வா வா
மா தா தா மா மா தா தா மா
மா தா தா மா மா தா தா மா
வா வா கோ தா தா கோ வா வா
கா மா வா தா தா வா மா கா
நீ கா வா மா மா வா கா நீ

 

 

 

பீநீ காமா மாகா நீபீ        

   நீகா மாவா வாமா காநீ                                        

காமா வாகோ கோவா மாகா                                    

மாவா கோதா தாகோ வாமா

 

பீ நீ கா மா மா கா நீ பீ
நீ கா மா வா வா மா கா நீ
கா மா வா கோ கோ வா மா கா
மா வா கோ தா தா கோ வா மா
மா வா கோ தா தா கோ வா மா
கா மா வா கோ கோ வா மா கா
நீ கா மா வா வா மா கா நீ
பீ நீ  கா மா மா கா நீ பீ

 

culture6

மாநீ காமா மாகா நீமா                                              

நீகா மாவா வாமா காநீ                                                  

காமா வாகோ கோவா மாகா                                                                     

மாவா கோதா தாகோ வாமா

 

 

மா நீ கா மா மா கா நீ மா
நீ கா மா வா வா மா கா நீ
கா மா வா கோ கோ வா மா கா
மா வா கோ  தா  தா கோ வா மா
மா வா கோ  தா  தா கோ வா மா
கா மா வா கோ கோ வா மா கா
நீ கா மா வா வா மா கா நீ
மா நீ  கா மா மா  கா நீ மா

 

மாமா தாநீ நீதா மாமா                                              மாதீ யாகா காயா தீமா                                          தாயா வேடா டாவே யாதா                                       நீகா டாயா வாடா காநீ   

             

மா மா தா நீ நீ தா மா மா
மா தீ யா கா கா யா தீ மா
தா யா வே டா டா வே யா தா
நீ கா டா யா வா டா கா நீ
நீ கா டா யா வா டா கா நீ
தா யா வே டா டா வே யா தா
மா தீ யா கா கா யா தீ மா
மா மா தா நீ நீ தா மா மா

 

‘சருப்பதோபத்திரம்’ பற்றிய குறிப்பாக யாப்பருங்கல விருத்தி குறிப்பிடுவது பின் வருமாறு:

எட்டெழுத்தான் இயன்ற நான்கு வரியாம். அவை மாலைமாற்றும், சுழிகுளமுமாய் ஒருங்குவரக் கொள்வது.

மாலைமாற்று, சுழிகுளம் பற்றி இந்தத் தொடரில் பின்னர் பார்க்கப் போகிறோம்.

நான்கு செய்யுள்களை எடுத்துகாட்டாகத் தந்து விட்டு குறிப்புரையாக நூல் தருவது: “இப்பெற்றியே எல்லாவெழுத்தும் மொழிக்கு முதலாயினவே நிறுவி, ஓரெழுத்துக்கோரடியாகப் பாடிப் பொருள் முடிப்பனவுஞ் சருப்பதோபத்திரம் எனப்படும். அவையும் வந்த வழிக் கண்டு கொள்க.”

சருப்பதோபத்திரம் தமிழின் ஒரு பரிமாணத்தை விளக்கும் ஒரு அரிய வகை சித்திரக் கவியாகும் என்பதில் ஐயமில்லை!

-தொடரும்

குறிப்பு: வாசகர்கள்  முந்தைய கட்டுரைகளைப் படித்தாலேயே எப்படி சருப்பதோபத்திரத்தைக் கட்டங்களில் படிப்பது என்பதை முழுவதுமாக அறிய முடியும்.

Contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment