HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 68; இந்து மத கலைச்சொல் அகராதி-68 (Post No.15,821)

MEGADUTA OF KALIDASA 

Written by London Swaminathan

Post No. 15,821

Date uploaded in London –2 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாதங்க

ஸம்ஸ்க்ருத்தில் யானை என்று பொருள்; ஒரு சுவையான கதை இதோ:

இந்தக் கதை மஹாபாரதத்தில் உள்ளது. ராமாயணத்திலும் கூட இவர் பெயர் வருகிறது ;ரிஷ்யமுக மலைக்கு அருகிலுள்ள இவருடைய ஆஸ்ரமத்துக்கு ராமனும் சீதையும் விஜயம் செய்தார்கள். சண்டாளனுக்குப் பிறந்த ஒருவன் பிராமணனாக வளர்க்கப்பட்டான்;அவன் ஒரு பெரிய கழுதைக் கும்பலை முரட்டுத்தனமாக மேய்த்துக் கொண்டிருந்தான்.  அப்போது தாய்க் கழுதை சொன்னது ; ஏய் கழுதைகளே; இதைவிட அதிகம் எதிர்பார்க்காதீர்கள்; ஏனெனில் நம்மை ஓட்டுபவன் பிராமணன் அல்ல; அவன் ஒரு சண்டாளனுக்குப் பிறந்தவன். இதைக் கேட்ட கழுதை ஒட்டி புத்திசாலிக் கழுதையே உனக்கு இது எப்படித் தெரியும்? என்று  கேட்டான் ; கழுதை சொன்னது : உன்னுடைய தாயார் போதையில் இருந்த போது ஒரு கீழ்ஜாதி அம்பட்டன் உன்னுடைய தாயைக் கட்டித் தழுவினான்; அதனால் பிறந்தவன்தான் நீ ; இதைக் கேட்ட சண்டாளன் பிராமணன்  ஆக மாறுவதற்கு நீண்ட காலம் தவம் செய்தான் அவனது தவத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சினர்; ஆயினும் இந்திரன் அவனுக்கு அனுமதி மறுத்தான். அவன் மீண்டும் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தான் ; 1000 ஆண்டுகள் உருண்டோடின அவன் எலும்பும் தோலுமாக ஆனான். இந்திரனே வந்து அவனைத் தாங்கி நின்றான்; அப்போது அவனுக்கு சில வரங்களை அளித்தான்; “நீ பறவையாகப் பறக்கலாம்; நினைத்த வடிவத்தை எடுக்கலாம்; எங்கு சென்றாலும் உனக்கு மரியாதையும் கெளரவமும் கிடைக்கும்” என்றான் அவர்தான் மாதங்க முனிவர்.  

***

மேதாதிதி

காண்வ மகரிஷி குலத்தில் உதித்த வேத ரிஷி இவர். உபநிஷத்தில் இவரைப் பற்றிய கதை வருகிறது ; இவரது தவத்தைக் கண்டு மெச்சிய இந்திரன் இவரை தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றான் ; அப்போது அவரை செம்மறியாட்டு வடிவத்தில் கொண்டு சென்றான் (இதே போல கழுகு வந்து கனிமேட் GANYMEDE என்பவனைத் தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றதாக கிரேக்க புராணக் கதை ஒன்றும்  இருக்கிறது.

***

மேதாவி

பாலாதி என்ற ரிஷியின் புதல்வர் இவர்; தந்தை இயற்றிய கடும் தவத்தால் இவருக்கு ஒரு வரம் கிடைத்தது; அருகிலுள்ள மலை இருக்கும் வரை யாரும் இவரை வெல்லவோ கொல்லவோ முடியாது என்பது அந்த வரம்; மேதாவிக்கு அகந்தை அதிகரித்தது ; உடனிருந்த பிரமணர்களைக் கொடுமைப் படுத்தினான் ; அதைக் கண்ட தனுசக்ஷா என்ற பிராமணர், பலத்த கொம்புள்ள ஒரு செம்மறி ஆட்டினை உருவாக்கினார் அது அந்த மலையை முட்டி முட்டி மோதிச் சிதற அடித்தது ; மேதாவிக்கும் மரணம் சம்பவித்தது; மஹாபாரதத்தில் இந்தக் கதை உள்ளது.  பரத்வாஜ முனிவர் இந்த விஷயத்தை அவருடைய மகன் யவக்ரீடனுக்குச் சொல்லி, அகந்தை ஆளையே அழித்துவிடும் என்று அறிவுறுத்தினார்.

***

மேனகா

தேவலோகத்தில் வசிக்கும் அப்சரஸ் என்னும் அழகிகளில் ஒருவர் மேனகா; விச்வாமித்திரர் என்னும் க்ஷத்ரிய மன்னன், பிராமணன் ஆகி பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதற்கு கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார் ; அவருடைய தவத்தைக் கலைக்க இந்திரன் மேனகாவை அனுப்பினான் ; அவளும் வாயுதேவனிடம் பேசி ஒரு உடன்படிக்கை செய்தாள்; விசுவாமித்திர முனிவருக்கு முன்னால், சேட்டைகள் செய்தபோது வாயு தேவன் அவளுடைய ஆடைகளை அகற்றினான்; உடனே முனிவர் தவம் கலைந்து மேனகாவின் வலையில் விழுந்தார்; அவர்கள் இருவரும் குடும்பம் நடத்திய காலத்தில் பிறந்தவள்தான் சகுந்தலா என்ற பெண்;  பாரத நாட்டினை ஆண்டு பாரத நாடு என்ற பெயரினை நல்கிய பரதனின் தாயார் சகுந்தலை.

***

மேனா

ரிக்வேதத்தில் வரும் மேனா என்ற பெண், வ்ரிஷனஸ்வாவின் புதல்வி ஆவார் ;இந்திரன் அவளை விரும்பினான்; புராணத்தில் ஹிமவத்தின் மனைவி ; அவர்களுக்குப் பிறந்தவள் உமா , மற்றும் கங்கா ; மகன் பெயர் மைனாகம் (இந்திரன் என்பது ஒருவரைக் குறிக்கும் பெயர் அல்ல; மன்னன் என்ற பொதுப் பெயரில் வேத, இதிஹாச புராணங்களில் வருகிறது ; இமயமலையில் கங்கை நதி பிறக்கிறது என்பதை ஹிமவத்தின் மகள் கங்கை என்று புராணம் சொல்கிறது)

****

மேரு

பூமியின் நடுவிலுள்ள உயரமான மலை மேரு ஆகும் ; வட துருவத்தையும் மேரு என்று புராணங்கள் வருணிக்கின்றன;  மேரு மலையின் உச்சியில் ஸ்வர்கம் இருப்பதாகவும் சொல்லும்; இமயமலைக்கு அப்பால் இது இருக்கிறது ; சுமேரு , ஹேமாத்ரி /பொன்மயமான மலை, ரத்னசானு /நவரத்தின சிகரம், கர்ணிகாசலம்/ தாமரை மலை , அமராத்ரி /தேவர்கள் மலை, தேவ பர்வதம் என்ற பெயர்கள் மேருவுக்கு உள்ளன .

***

மிதிலை

ஜனகர் ஆட்சி செய்த விதேஹ நாட்டின் தலை நகரம் மிதிலாபுரி; இப்போதைய வடக்கு பீஹாருக்கு, வேத காலத்தில்  விதேஹம் என்ற பெயர்  இருந்தது மிதிலையில் பிறந்ததால் சீதா தேவிக்கு  மைதிலி என்று பெயர் ; இப்போதும் ஜனகரின் பெயரில் ஜனக்பூர் என்று இந்த ஊரினை அழைக்கிறார்கள் ; வேதாந்த விஷயங்களுக்குப் பெயர் பெற்ற நாடு விதேஹம்.

***

மிலேச்சர்

மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.

பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’BARBARIANS (  காட்டுமிராண்டி ,நாகரிகமற்றவர், முரட்டுத்தனமானவர்,  அநாகரிகர்,  பண்பற்றவர்)  என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய (காட்டுமிராண்டி) அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.

யாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” IT IS GREEK TO ME என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.சி ந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். ஆனால் பாரத நாடு முழுதையும் குறித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.

ஆனால் வெளிநாட்டு அறிஞர்கள் இது திராவிடர்களை வசை பாடியது என்றும் மிலேச்சர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்றும் எழுதி குழப்பி இருக்கின்றனர்; மாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்தத்தில் பங்குகொண்ட பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.

சுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள்  என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் ETYMOLOGY வரலாறு காட்டும்.

***

மேகநாதன்

ராவணனின் மூத்த மகன்.

ராமாயணத்தில் வரும் மேகநாதன், இலங்கையின் அரசனான ராவணன் -மண்டோதரி ஆகியோரின் மூத்த மகன் ஆவார். இவருக்கு இன்னொரு பெயர் இந்திரஜித். இவர் பிறந்தபோது இடியும் மின்னலும் முழங்கியதால் ‘மேகநாதன்’ என்ற பெயரும் , தேவர்களின் தலைவனான இந்திரனைப் போரில் வென்ற காரணத்தினால்  ‘இந்திரஜித்’ என்ற பெயரும் ஏற்பட்டன; இவருடைய வீர தீர போர்ச் செயல்களை கம்பனும் வால்மீகியும் வருணித்துள்ளார்கள்.

***

மேக தூதம்

காளிதாசன் உலகின் முதல்Tourist Guide டூரிஸ்ட் கைடு ; போகும் வழியில் உள்ள நகரங்களையும் காடு மலைகளையும் வருணித்து படிப்போருக்கு பூகோள, வரலாற்றுச் செய்திகளை  அளிக்கிறான்

மேலும் அவன்தான் முதல் பயணக்கட்டுரை (Travelogue Writer) எழுதியவன் என்றும் சொல்லலாம். மஹாபாரதம், ராமாயணத்தில் இது போன்ற வருணனைகள் இருந்தாலும் புராணக்கதைகளும் நம்ப முடியாத விஷயங்களும் இருக்கும்.

காளிதாசன் வானிலை இயல் மன்னன் (Meteorologist) . முதல் முதலில் (Mapped South West Monsoon) தென் மேற்குப் பருவக்காற்று விந்திய மலை முதல் இமய மலை வரையே எந்தப் பாதையில் செல்கிறது என்பதையும் காட்டுகிறான். பறவைகள் குடியேற்றம் (Bird Migration) பற்றியும் காளிதாசன் செல்கிறான் . பிற் காலத்தில் புறநானூற்றுப் புலவர் முதல் சத்திமுற்றத்துப் புலவர் வரை “நாராய், நாராய், செங்கால் நாராய்” (Northward Return Journey of MigratoryBirds) என்று பாட வழிவகுத்தார் இவ்வகையில் காளிதாசனின் மேக விடு தூது சிறப்புடைத்து. மேகம் மூலம் ஒரு யக்ஷன் தனது காதலிக்கு அனுப்பிய செய்தியைக் கொண்டது ஆகும்.

காளிதாசரின் ‘ஒரிஜினல் ஐடியா’ Original Idea வா  இந்த தூதுக் கவிதை; இல்லை. காளிதாசரின் நூல்களுக்கு பழங்காலத்தில்  75 பேருக்கும் மேலானோர் உரை எழுதினார்கள். அவர்களில் மிகவும் பிரசித்தமானவர் மல்லிநாதர். வால்மீகி முனிவரின் ராமாயணம்தான் காளிதாசருக்கு ஊற்றுணர்ச்சி தந்தது என்கிறார். ராமாயணத்தில் நாம் குரங்கு/ அனுமன் விடு தூதுக் கவிதையைக் காண்கிறோம். ராமன் அனுப்பிய செய்தியுடன் சீதையைச் சந்தித்து மோதிரத்தையம் கொடுத்து, மீண்டும் ‘குட் நியூஸ்’ Good News  கொண்டுவந்து ராமனிடம் சபாஷ் வாங்குகிறார் அனுமன். இந்த அனுமன் தூது – குரங்கு விடு தூதுதான் காளிதாஸருக்கு ஐடியா Idea கொடுத்தது என்பதற்கு மற்றும் ஒரு சான்று வால்மீகி ராமாயண கணையாழி போல காளிதாசரின் ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு மோதிரம் அல்லது நகை முக்கிய இடம் பெறும் . ஆக அவர் வால்மீகி தாசர் என்பது வெள்ளிடை மலை.

அப்படியானால் ராமாயணத்தில் வரும் அனுமன் தூது விடு தூதுதான் உலகின் முதல் தூதுக் கவிதையா? இல்லை .

ரிக் வேதத்தில் வரும் ‘நாய் விடு தூது’தான் உலகின் முதல் தூதுக் கவிதை. தூது என்பது ஸம்ஸ்க்ருதச் சொல். இதுபற்றி திருவள்ளுவரும் ஒரு அதிகாரம் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் நிறைய தூதுக் கவிதைகள் (Messenger Poems)  உள்ளன; தமிழர்களுக்கும் முன்னதாக இந்தத்துறையில் காளிதாசன் எழுதிய நூல் மேக தூதம் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றது; இலக்கிய உலகத்தில் அந்த நூல் பெரும் புரட்சியை உருவாக்கியது. அவரைத் தொடர்ந்து பலரும் இப்படி முழு நீள தூதுக் கவிதை நூல்களை எழுதத் துவங்கினர்.

***

மித்ரன்

சூரியனின் பெயர்; ஒளி , நேர்மறை சக்தி, பகல்பொழுது என்று பொருள் .

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.

மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.

சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும். வியப்பான விஷயம் என்ன வென்றால் இன்றும் பிராமணர்கள் நாள்தோறும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த தெய்வத்தை வழிபடுகின்றனர்.

பாரசீக நாட்டிலிருந்து இதை பெற்ற ரோமானியர்கள் இதை ஒரு ரகசிய தெய்வமாக குகைகளில் வைத்து தவறான லீலைகளில் ஈடுபட துவங்கினர் பின்னர் புதிய கதைகளையும் உருவாக்கினர் ஐரோப்பா முழுதும் புதுப்புது மித்ரன் கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன ரோம் நகரில் மட்டுமே 700 மித்ரன் கோவில்கள்! இருக்கின்றன .

TO BE CONTINUED……………………….

TAGS- மித்ரன், மேக தூதம், மிலேச்சர், மாதங்க, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 68; இந்து மத கலைச்சொல் அகராதி-68, மேனகா

Madurai Mystery: Can You Solve it? (Post No.15,820)

Written by London Swaminathan

Post No. 15,820

Date uploaded in London –2 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(Tamil Version was posted yesterday)

Madurai Meenakshi Sundareswarar (Shiva) temple is a world-famous Temple and listed as one of the 100 Wonders of the World long back by AA of United Kingdom. Though it has 2000-year history Nayak Kings added lot of new structures in and around the temple 500 years ago. One of them is Pudu Mandapam (New Hall) just opposite the main (Eastern) entrance of the temple.

It is 335 feet long, 105 feet wide and raised up to 25 feet. About 125 pillars are in four rows. Around the main hall is deep pits to fill in with water during the spring festival called Vasanta Urchavam in Sanskrit; this is to get cool air during early summer.

The pillars have the statues of Nayak kings and the most important of them is the Thirumalai Nayak. Apart from other Nayak kings, many Siva Leelas (64 Divine Sports Siva played to bless his devotees) and goddesses are also portrayed. Secular figures like Yalis, Heroes on Horse backs are also sculpted.

One of the sculptures shows a woman carrying a child. The dress and the jewellery of the woman make her look like a divine woman; may be a goddess or a queen.

Many stories are going round it as hear say; nothing authentic is available in writing. Most famous temple artiste Sillpi who has drawn or painted all the main temples of Tamil Nadu posted a picture of this divine lady long back in a Tamil weekly called Ananda Vikatan; later all his paintings and drawings have been published in two volumes with Tamil write ups. Commenting on this picture of Divine Woman, he has said that may opinions are told about this statue. But her decorations are noteworthy. He did not elaborate.

***

My research shows that one story in the Tiru Vilaiyadal Puranam may explain the significance of this statue. The T V Puranam has 64 Sacred Sports or Sacred Games or Leelas of Lord Siva that happened in and around Madurai.

If anyone else has any other authentic information, please share it with our readers.

Here is the story

The God on Account of Gauri, Became An Old Man, A Youth And later A Child! This is the 23rd story in the T V Purana.

While ViKrama-Pandian was ruling from Madurai, there was a Brahmin named Virupaksha, his wife’s name being Subavrithai, who were childless; in consequence they worshipped the seven celestial females and obtained thereby the gift of a daughter. At five years old the child, named Gauri, asked to be taught a prayer and her father taught her the Devi-mantra.

While the father was waiting for a suitable husband, she passed the eighth year of her age without being betrothed; One day a Vaishnava Brahmin came to beg alms. Father was very much impressed when he met him. The youth was handsome and learned in the Vedas. After some thinking, he bestowed his daughter to him in marriage, with the usual ceremony of gift and Vedic fire worship. But he never disclosed it to his close relatives in the town. After the marriage both husband and wife travelled to husband’s village.

When the Vaishnava Brahmin brought his wife to his own village, and to his parents, they disapproved of his marrying a Saiva woman.

One day the parents without calling her, went away to a distant marriage feast. They locked the kitchen so that she would not touch any vessels there. Orthodox Vaishnavites cook for themselves and never eat other food. In this interval an aged Saiva Brahmin came to her and asked for food; She told him the kitchen was locked. Then the man told her to go to the kitchen and touch the door. It opened miraculously. on being admitted into the house and food being given by the woman, since he was too infirm to feed himself she assisted him to eat, when he suddenly changed to a young man.

At that time husband’s parents entered the house. She was so scared; to save her from trouble the young man suddenly became a child. Finding her with a young Saiva child they asked her what happened and who the child was. She told them that the neighbour had asked her to look after the child for a short time. Enraged parents (of her husband) turned both out of doors; and while she was in the street, sorrowing deeply for her misfortunes, she meditated the Devi mantra, on which the child instantly disappeared, and the god himself approached towards her, seated on his bullock vahan, (or car), and taking her up with him. The clouds rained flowers, and the town’s people were astonished, he carried her through the air to the temple.

This story is sung by all the Four Saivite Saints and so this should have happened 1500 or 2000 years ago. If the child and woman in the statue at Pudu Mandapam are one and the same , then the mystery is solved. But the statue looks like a goddess or a queen. So, there may be some other incident related or linked to the statue.

Who can throw more light on it and enlighten our readers?

–subham—

Tags – Woman and child, Madurai, Pudu Mandapam, Silpi, Mystery: Can You Solve it?

Athiyaman was not a Tamil King! No AVVஔ in Tamil! Purananuru wonders-29, Tamil Encyclopedia-69 (Post.15,793)

Written by London Swaminathan

Post No. 15,793

Date uploaded in London –27 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-29, Tamil Encyclopedia-69; One Thousand Interesting Facts -Part 69

Item 541 Tamil Heroine

This is one of the famous poems in Purananuru. This shows Tamil women were heroic in Sangam Age. This is seen not only in Tamil Nadu but also in other parts of India. All Kshatria women were like her. Indian history is full f heroic women who fought against Muslim invaders and Christian invaders. But here is a beautiful comparison from a female poet. Her son is like a tiger cub and so definitely in the battle field.

One must remember the modern rules. Nowadays using boy soldiers is against international law. In those days teenage boys Rama and Lakshmana were taken by Vishwamitra to fight demoness Tadaka and others.

We see Veera Maathaa in Vedic literature as well. (I have written a separate article on this topic some years ago)

***

Puranānūru 86, Poet Kāvarpendu, Thinai: Vākai, Thurai: Ērān Mullai

You grasp a fine pillar in my small house
you ask me, “Where is your son?”
I do not know where he is.

Like a mountain cave that a tiger
inhabited and abandoned,
is this womb which gave birth to him.
He will appear on the battlefield!

*** 

புறநானூறு 86, பாடியவர்: காவற்பெண்டு, திணை: வாகை, துறை: ஏறாண் முல்லை

சிற்றில் நற்றூண் பற்றி,  “நின் மகன்

யாண்டு உளனோ?” என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே,  5

தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

Notes:  This is the only poem written by this female poet.

***

Item 542 Sanskrit word Thachchan (Puram verse 87)

In English we have lots of words with Tech (nology, nician, nical etc). All these words including Thachcan are derived from Sanskrit word

Takṣa (तक्ष).—[adjective] cutting off, destroying (—°); [masculine] a carpenter (—°); [Name] of a serpent-demon etc.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary

1)      Takṣa (तक्ष):—[from takṣ] 1. takṣa mfn. ‘cutting through

***

Item 543-Eight Chariots in One Day

Avvaiyar, the most famous Female poet of Sangam age had composed several poems and gave us very interesting details of Sangam Age culture. Here in Puram 87 she warns the enemies of chieftain Athiyamān Nedumān Anji that he had also got good carpenters who can make 8 chariots a day! This statement shows us the technology and the road conditions of those days. We have hundreds of references to chariots in Akam (Sex and Family life) section where the hero comes to see his lady love in chariots. So, the road conditions were so good that they can drive very fast. Second point is that Tamils also used Chariots in battlefield like their northern counterparts. We always see Arjuna and Krishna in war chariot in Bhagavad Gita pictures.

***

Item 544 Athiyaman is Sathyavan, not a Tamil King!

Tamil name Athiyaman is Sathyavan in Sanskrit. Because Tolkappaiar banned SA as initial letter in Tamil he is Tamilized as Athiyamaan. Tamil women knows the story of Sathyavaan Savitri very well. They are known for their truthfulness. Sathya=Truth. Asoka 268 BCE also mentioned them in his inscription as Satyaputro. He belonged to Ikshvakus (Ikshu= Sugarcane) which Avvai herself said in another verse. They were the one who introduced Sugarcane cultivation in Tamil Nadu. Like Chozas they also came from North India.

***

Item 544 Strange but True Tamil has no AVV in Tamil!

If you go through word index of Sangam Tamil literature or Tirukkural you wont see the Tamil letter  AVV at all. Only in footnotes under the poems we see  (வையார்)

***

Puranānūru 87, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram
O enemies!  Protect yourselves
before you enter the field!
Among us is a warrior
who will fight you in battle.
He is like a chariot wheel
crafted with care
for over a month, by a carpenter
who creates eight chariots in a day!

***

Avvaiyār and King Athiyamān Nedumān Anji were great friends.  Avvaiyār wrote Puranānūru poems 87-104, 140, 187, 206, 231, 232, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390 and 392. 

***

புறநானூறு 87பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சிதிணை: தும்பைதுறை: தானை மறம்
களம் புகல் ஓம்புமின் தெவ்விர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன்வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.

***

Item 545 Different sections of Army

In the Tamil commentary for Puram verse 88, we come across two sections of army “கூழை தார் கொண்டு யாம் பொருதும்”

Koozai= கூழை= the soldiers on the sides of the king or commander and at his back

Thaar = தார்= Front of the battalion= dust soldiers= they ride very fast and produce dust.

This description in the commentary shows Tamils organised the army and allocated particular roles to the soldiers.

***

Puranānūru 88, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram
Whoever you may be,
if you defend your words,
“We will fight with his foot
soldiers and the rest of his army”,
you haven’t seen my lord who
celebrates victories with festivals.
He has drum-like shoulders,
fine, strong chest with elegant
ornaments that shoot rays,
and is chief to young, brave warriors
who bear long and shining spears.

***

புறநானூறு 88பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சிதிணை: தும்பைதுறை: தானை மறம்


யாவிர் ஆயினும், “கூழை தார் கொண்டு
யாம் பொருதும்” என்றல் ஓம்புமின்! ஓங்கு திறல்


ஒளிறு இலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின்
விழவு மேம்பட்ட நல் போர்  5
முழவுத் தோள் என் ஐயைக் காணா ஊங்கே.

*** 

Item 546 

Here in Puram verse 89, poetess Avvai described the appearance of a Virali:

, “O virali with a bright
brow, kohl-rimmed eyes, delicate nature,
and lifted, beautiful loins decorated with
jewels! 

VIRALI= a a female dancer , a female bard.

***

Item 547 Snake simile

Normally snakes will run away if they are hit or chased; but there are certain aggressive kinds of snakes that are ready to fight. Here poetess compared the soldiers to such aggressive snakes

Like snakes that do not fear
the rods that hit them.

***
Item 548 Tamils were warmongers!

The king was ever ready for a fight; so he mistook even the natural sounds for beating sounds of war drums,

whenever the wind
blows against the clear-sounding eyes of the
tightly tied thannumai drum in the courtyard
and it resonates.

***

Puranānūru 89, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram


O king with a battling army!  You asked
me again and again, “O virali with a bright
brow, kohl-rimmed eyes, delicate nature,
and lifted, beautiful loins decorated with
jewels!
  Is there anyone in your huge
country who can fight?

Yes, there are young, brave warriors who
are fearless Not only that, there is also my king who is
happy that it is war, whenever the wind
blows against the clear-sounding eyes of the
tightly tied thannumai drum in the courtyard
and it resonates.

 ***

புறநானூறு 89பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சிதிணை : தும்பைதுறை: தானை மறம்
இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,
மடவரல்உண்கண்வாணுதல் விறலி!
பொருநரும் உளரோ நும் அகன்தலை நாட்டு?” என
வினவல் ஆனாப் பொரு படை வேந்தே,
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன  5
சிறு வன் மள்ளரும் உளரே, அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்,
அது போர்” என்னும் என் ஐயும் உளனே.

*** 

Item 549 

Here is a beautiful description to say that No one can stop the king; no one can survive his attack.

The enemies are compared to deer in front of a tiger, darkness when sun shines, a strong bull that draws the cart even in muddy lands.

***

Item 550 Avvai Fond of Sanskrit Words! 

Poetess Avvaiyar never hesitated to use Sanskrit words such as ACHCHU (Axis, Axle) PANDAM (things, materials) SAKATAM (cart).

Shamudrika Lakshana of kings :

Your strong, faultless arms reach down
to your legs that are like crossbars – already explained in previous poems.

***

Puranānūru 90, Poet Avvaiyār sang to Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram


If a fierce tiger roars in anger on
the fragrant mountain slopes with
white glory lilies resembling broken
conch and wild jasmine flowers with
lush leaves, can a deer herd linger
there? 

 If the sun burns with rage,
is it possible for darkness to exist
in the expanses of the confused sky?


If a proud ox hauls a cart with goods,
even if the long bar grinds the axle bars
due to the weight, scattering the sand and
breaking stones as it pulls out of a deep
rut, is there a place where it cannot go?

O Lord of young warriors!
Your strong, faultless arms reach down
to your legs that are like crossbars.


Is there any warrior in this vast earth who
can take your land and be jubilant, if you
enter the field?

***

புறநானூறு 90பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சிதிணை: தும்பைதுறை: தானை மறம்

உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல்
மறப் புலி உடலின்மான் கணம் உளவோ?


மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோஞாயிறு சினவின்?  5


அச்சொடு தாக்கிப் பார் உற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய,
அரி மணல் ஞெமரக் கல் பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?


எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக்கை 10
வழு இல் வன் கை மழவர் பெரும!
இரு நில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீ களம் புகினே?

***

Item 551 King is Lord Shiva

Hindu poets never hesitated to compare kings with Vedic Gods and other gods. Queens were called Devi= Goddess; feminine form of Deva. Here in Puram verse 91, poetess Avvai blessed the king to live like Lord Shiva. She described Shiva as wee see in Puranas. So ,Tamils were Pukka Hindus well versed in Hindu scriptures


May you live as long as he lives, the god who has a milk-like, brow
shaped moon on his lovely head, and a sapphire-like dark neck!

***

Item 552 Ayurveda in Tamil

Nellikkay , Indian gooseberry, Amlaka in Sanskrit has been used by the Hindus for long. They knew the medical benefits of using it. And there was a special type in black colour which is rare and has more medical benefits. Thos who use it would have full life span- 100 years. Even al-Biruni mentioned it is his writings (I have written a separate article on this topic some years ago)

Chieftain Athiyaman gifted such a rare variety to Avvaiyar which shows his generosity

***

Puranānūru 91, Poet Avvaiyār sang to Athiyamān Nedumān Anji, Thinai: Pādān, Thurai: Vālthiyal


O Athiyar king owning uproar-causing alcohol!  O king with a
mighty hand with whirling bracelets that lifts an unfailing,
victorious sword and strikes down enemies in battlefields!
O Anji with a golden garland, who is rich in murderous battles!

1
May you live as long as he lives, the god who has a milk-like, brow
shaped moon on his lovely head, and a sapphire-like dark neck!

2

O Greatness!  Without considering how difficult it was to get
the sweet nelli fruit from a tree with small leaves,
plucked from the crevices of an ancient lofty mountain
that was difficult to scale, you gave it to me, knowing its benefits

of removing death, which knowledge you kept within yourself!

***

புறநானூறு 91பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சிதிணை: பாடாண்துறை: வாழ்த்தியல்
வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடி தடக்கை,
ஆர்கலி நறவின் அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி  5
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே தொன் நிலைப்
பெருமலை விடர் அகத்து அரு மிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்  10
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.

The Story of Indian Gooseberry Tree in Hinduism (Post No.11923)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,923

Date uploaded in London – –  21 APRIL 2023      

Veera Matha–‘Mother of Heroes’ in the Vedas and Tamil literature

by Tamil and Vedas on September 22, 2012 

To be continued………………….

Tags- Lord Shiva, Nellikkay, Indian Goosberry, Athiyaman, Sathyavan, Satyaputro, No AVV in Tamil! Purananuru wonders-29, Tamil Encyclopedia-69, Item 552, Sanskrit words, Thachan, Taksha, Tech

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 60; இந்து மத கலைச்சொல் அகராதி-60 (Post No.15,704)

Rani Mangammal.

Written by London Swaminathan

Post No. 15,704

Date uploaded in London –6 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மந்தபால

மஹாபாரதத்திலுள்ள ஒரு வினோதமான ரிஷியின் கதை. குழந்தைகள் உனக்குப் பிறக்காததால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்ட ரிஷி இவர். அடுத்த ஜென்மத்தில் அவர் ஆண்பறவையாகப் பிறந்து ஜரிதா என்னும் பெண் பறவையின் மூலம் நான்கு பறவைகளைப் பெற்றார் . பின்னர் ஜரிதாவை விட்டுவிட்டு லபிதா பறவையுடன் வாழ்ந்தார் ; காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்னனும் எரிக்கப்போகும் செய்தியை அறிந்து 4 பறவைக்குழந்தைகளை காப்பாற்றுவதற்காக ஜரிதாவிடம் திரும்பி வந்து காட்டின் வேறு பகுதியில் சுகமாக வாழ்ந்தார் .

***

மாண்டவ்ய ரிஷி  / ஆணி மாண்டவ்ய

பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு.  இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.

ஆணி மாண்டவ்ய ரிஷி (Mandavya Rishi), அணி மாண்டவ்யர் (Aṇi Māṇḍavya) என்றும் அழைக்கப்படுபவர்  ஒரு முனிவர் ஆவார். அவருடைய கதை  மகாபாரதத்தில் ஆதி பர்வத்தில்  வருகிறது  மாண்டவ்ய ரிஷி இரு கைகளையும் உயரத்  தூக்கியவாறு  தவத்தில் இருந்தார்; அப்போது அரண்மனையில் இருந்து அரசனின் பொருள்களைத் திருடியவர்கள் ஓடி வந்தனர்; பின்னால் சேவகர்கள் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்து முனிவர்களின் ஆசிரமத்துக்குள் பொருள்களைப் போட்டுவிட்டு திருடர்கள் ஓடிவிட்டனர்;  திருடர்களைத் தேடி வந்த அரச சேவகர்கள் பல  கேள்விகளைக் கேட்டும் முனிவர் பதில் சொல்லவில்லை ஏனெனில் அவர் மெளன விரதத்தில் இருந்தார் . பின்னர் திருடர்களும் பிடிபட்டனர்; முனிவரிடம் திருட்டுப் பொருள்கள் இருந்ததால் அவரையும் திருடர்களுடன் மன்னர் முன்னால் நிறுத்தினர் ; ராஜாவும் அனைவரையும் கழுமரத்தில் ஏற்றிக்கொல்ல உத்தரவிட்டான் அவரைச் சூலத்தில் (Stake) ஏற்றித் தண்டித்தனர். திருடர்கள் அனைவரும் இறந்தனர் ; அணி மாண்டவ்யர் மட்டும் இறக்கவில்லை ; அவர் நிரபராதி என்று தெரிந்தவுடன் அவரைக் கழு மரத்திலிருந்து இறக்கியபோது கூரான ஆணி முனை ஒட்டிக்கொண்டு இருந்ததால் அவர் பெயருடன் ஆணியும் சேர்ந்து கொண்டது . தன் தவ வலிமையால் சூலத்தில் இருந்தும் உயிருடன் இருந்த அவர், யமதர்மனிடம் (மரண தேவன்) ஏன் தனக்குத் தண்டனை கிடைத்தது என்று கேட்டார். சிறுவயதில் பூச்சிகளைக் கொன்றதற்கான தண்டனை இது என்று யமன் கூறியதைக் கேட்டு, சிறு வயதில் அறியாமையால் செய்யும் தவறுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று கூறி, யமனைப் பூமியில் மனிதனாகப் பிறக்கச் சாபமிட்டார். இதன் காரணமாகவே யமன் விதுரராகப் பிறந்தார் அவர் ஒரு பட்டுப்பூச்சியை வெறும் புல்லினால் குத்தி வேடிக்கையை பார்த்ததற்கு கிடைத்த தணடனை கழுமரம்!மண்டியா(கர்நாடகம்) நகரம்: மாண்டவ்ய ரிஷியின் ஆசிரமம் காவேரி நதிக்கரையில் இருந்ததாகவும், அந்த இடமே பின்னர் மண்டியா (Mandya) நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

***

மஹாலக்ஷ்மி: லட்சுமியின் பெயர் ; அஷ்ட லெட்சுமிகளின் விவரம் முன்னரே லெட்சுமி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

***

மஹா கால

சிவனின் பெயர் ; காலம் என்றும் காலன் என்றும் பொருள்; அதாவது எல்லோரின் , எல்லாவற்றின் முடிவுக்கு காரணமானவர் சிவ பெருமான் ; பன்னிரண்டு ஜோதிர்லிங்கத்த தலங்களில் ஒன்றான உஜ்ஜைனி நகரத்திலுள்ளவர் மஹா காலேஸ்வர்அங்குள்ள ஷிப்ரா நதியில் ஸ்நானம் செய்து சிவலிங்கத்தைத் தரிசித்தவர்களுக்கு அஸ்வமேத யாகம்  செய்தபலன் கிடைக்கும் இந்த விவரம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது.

***

மகரிஷி / மஹரிஷி

தற்காலத்தில் ராமணரும் மனம் கடந்த தியான முறையைக் கண்டுபிடித்த மகேஷ் யோகியும் மகரிஷி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள்.

உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.

யாஸ்கர் எழுதிய நிருக்தம் போன்ற நூல்களில் சொற்பிறப்பியல் அடிப்படையில் ரிஷி என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது:

சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி — ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ என்பது இதன் மூலம். அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.

இந்து மதம் தவிர, உலகிலுள்ள எல்லா மத நூல்களும் ஒரு மதத் தலைவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்துக்களின் வேதமோ, இந்து மதமோ மனிதனால் தோற்றுவிக்கப் படவில்லை. அது சநாதனமாக – தோற்றமோ முடிவோ இல்லாத ஒன்றாக— இருந்து வருகிறது. வேத மந்திர ஒலிகளும் இப்படித்தான்.

நாம் ரேடியோவில் ஒரு நிலையத்தைக் கேட்க வேண்டுமானல் ஒரு அலை வரிசயைத் தேர்ந்தெடுக்கிறோம். அது போல ரிஷிகள் மனதை ஒரு முகப்படுத்தி மந்திரங்களைக் கேட்கிறார்கள். எப்படி ஆயிரக் கணக்கான நிலயங்களின் ரேடியோ அலைகள் நம்மைச் சுற்றி இருக்கிறதோ அது போல பிரபஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கான மந்திர ஒலிகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று இந்துக்கள் நம்புவர்.

ரிஷிகள் முக்காலம் உணர்ந்த “த்ரிகால” ஞானிகளும் ஆவர். எப்படி நாம் ஒரு வீடியோ “டேப்”பைப் பார்க்கையில் REWIND ரீவைண்டு, FAST FORWARD பாஸ்ட் பார்வர்ட் என்று முன் பின்னால் உள்ளதைப் பார்க்கிறோமோ அது போல ரிஷிகளும் செய்கின்றனர். மஹாபாரத யுத்தக் காட்சியை கண்ணன் — விஸ்வரூப தரிசனத்தில் — அர்ஜுனனுக்கு பாஸ்ட் பார்வர்ட் செய்து காட்டுவதைப் படிக்கிறோம்.

இதே போல த்ரிகரண சுத்தி என்பதும் ரிஷிகளிடத்தில் உள்ளது.

சதபத ப்ராஹ்மணம் ரிஷி என்பதற்கு “அதிகம் பாடுபடுபவர், கஷ்டப்படுபவர்” — என்று பொருள் சொல்லும். அதாவது தீவிரத் தவம் புரிவோர்.

தைத்ரீய ஆரண்யகம் , “முன்னேறிச் செல், தோன்று” என்று பொருள் காணும்.

தான் மட்டுமின்றி மனித குலத்தையும் முன்னேற்ற விரும்பியதால்தான் அவர்கள் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற அரிய பெரிய மந்திரங்களை நமக்கு அளிததனர்.

ராஜ ரிஷிகளும் சப்த ரிஷிக்களும்

ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.

இதற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதிய உரை மிகவும் அருமையானது. அவர் சொல்வதாவது:–

முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:

1.நீண்ட ஆயுள்

2.மந்திரங்களை காணும் சக்தி

3.ஈசுவரத்தன்மை

4.தெய்வீகப்பார்வை

5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு

6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்

7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்

இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.

இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:–

மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர்.

இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்தரத்துக்கு உரிய ஸப்தரிஷிகள்:

அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர்

நால்வர்: ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:

ராஜ ரிஷி:

க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்

பிரம்ம ரிஷி:

பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்

ஜன ரிஷி:

மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.

காண்ட ரிஷி:

வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்

மஹரிஷி:

ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல

பரம ரிஷி:

மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி

ச்ருத ரிஷி:

வேத ஒலியைக் கேட்போர்

தவ ரிஷி:

தவத்தில் சிறந்தவர்

சத்ய ரிஷி:

சத்யத்தில் நிலைபெற்றவர்.

தேவ ரிஷி

தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.

பதஞ்சலி பிரிவினை

பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் உலகமே வியக்கும் சம்ஸ்கிருத இலக்கண நூலுக்கு மஹாபாஷ்யம் என்ற அளவிலும் தரத்திலும் பெரிய விளக்கவுரை (பாஷ்யம்) செய்ஹ பதஞ்சலி என்ற ரிஷி. வேறி இரண்டு விளக்கம் தருவார்:

மந்திரத்தைக் கண்டவர்கள் ஒரு வகை. கல்ப சூத்ரம் போன்ற பெரிய நூலகளை எழுதியோர் மற்றொரு வகை. ஆன்மீக எழுத்தாளர்களையும் ரிஷி வகையில் சேர்த்துவிட்டார் பதஞ்சலி.

மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:

கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள்.

ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவா மித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்

ஊர்த்வரேதஸ்: — பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்

ஆஸ்ரமவாசிகள்:– கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.

யாயவரஸ்: நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்

புரோகித வ்ருத்திகா: — புரோகிதம் செய்த ரிஷிக்கள்

சாதரண வ்ருத்திகா: — சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்

சஸ்த்ர அத்யாபகா :– ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்

சாஸ்த்ர அத்யாபகா: — சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்

உக்ர தபஸ்வீ: — இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.

சாதரண தபஸ்வீ: இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.

இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.

( உதவிய நூல்கள்:— பழங்கால இந்தியாவில் ரிஷிமார்கள் – சி.பி. பாண்டே எழுதிய நூல் —- ப்ருகு வம்சம் – ஒரு ஆய்வு, ஜயந்தி பண்டா எழுதிய நூல்—பகவத் கீதை, அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை).

****

மஹா வாக்கியங்கள்

மனிதன் என்பவன் இறைவனின் ஒரு அம்சம் ;அவனுக்குள் உறையும் ஆத்மா அழிவில்லாதது ; உடல் மட்டுமே அழியக்கூடியது ; எப்படி பானைக்குள் உள்ள காற்று பானை உடைந்த பின்னர் வெளியேயுள்ள காற்றுடன் கலந்து  ஐக்கியமாகிவிடுகிறதோ அது போல ஆத்மாவும் இறைவன் என்னும் பரப் பிரம்மத்துடன் கலந்துவிடும் . இதை விளக்கும் பொன்மொழிகள் ஒவ்வொரு வேதத்துக்கும் உரிய உபநிஷத்தில் உள்ளது; அவை பின்வருமாறு:

1. प्रज्ञानम् ब्रह्म (ப்ரக்ஞாநம் ப்ரஹ்ம )

உணர்வு / பிரக்ஞை பிரம்மம்

ஐதரேய உபநிஷத்  (3.3)  ரிக் வேதம்,

**

2. अयम् आत्मा ब्रह्म (அயம் ஆத்மா  ப்ரஹ்ம )

உள்ளுக்குள் உறையும் ஆத்மாவே பிரம்மம்

: மாண்டூக்ய உபநிஷத்  (2)  அதர்வ வேதம்

**

3. तत् त्वम् असि (தத் த்வம் அசி )

நீயே அதுவாக இருக்கிறாய்

சாந்தோக்கிய உபநிஷத்  (6.8.7) சாம வேதம்

**

4. अहम् ब्रह्म अस्मि அஹம்  ப்ரஹ்மாஸ்மி

நானே பிரம்மம் ஆக இருக்கிறேன்

பிருஹதாரண்யக  உபநிஷத்  (1.4.10) of the யஜுர் வேதம் .

**

வேறு சில மஹா வாக்கியங்கள்

सर्वं खल्विदं ब्रह्म (சர்வம் கல்விதம் ப்ரஹ்ம ): இங்குள்ள எல்லாம் பிரம்மம்

इशावास्यमिदं सर्वम् (ஈசாவாஸ்யம் இதம் சர்வம் ): உலகம் முழுதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது

***

மஹேந்திர வர்மன்

Music Inscription

Pallava Period Hero Stone for a Dog.

உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் தொல்பொருட் துறை அறிஞருமான டாக்டர் இரா .நாகசாமி 23, 2014 மயிலை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில், “பல்லவர் இசையில் மயிலாப்பூர்” என்ற தலைப்பில் நிகழ்த்திய ஒரு உரை தரும் செய்திகள்

டாக்டர் நாகசாமி, காயத்ரி கிரீஷின் இசைத்துணையோடு, உரையாற்றினார்.

“சித்திரக்கார புலி”, “சங்கீர்ணஜாதி”, என்று விருதுகளை கொண்ட மகேந்திர வர்ம பல்லவன், கலைகளில் வல்லவன். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையிலும் திருமெய்யத்திலும் மகேந்திரனது இசைக்கல்வெட்டுகள் உள்ளன. “பகவதஜ்ஜுகம்”, “மத்தவிலாச பிரஹசனம்” என்ற சமஸ்கிருத நாட்டிய நாடகங்களை மகேந்திரன் படைத்தான். கேரளத்தில் சில கோயில் திருவிழாவில் இன்றும் மத்தவிலாசம் நடிக்கப்படுகிறது. அதன் ஓலைச்சுவடி நூறாண்டுகளுக்கு முன்னால் திருவிதாங்கூர் ஓரியண்டல் நூலகத்தில் கிடைத்தது. காஞ்சி அருகே மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பும் அதனால் தனக்கு “மத்தவிலாசன்” என்ற விருதமைந்த குறிப்பும் உள்ளன. இதில், நாந்தி என்றழைக்கப்படும் கடவுள் வாழ்த்தில், “பாஷா வேஷ வபுக்ரியா குணக்ருதான்” என்று வரும் சொற்களை, பரத முனிவர் தன் “நாட்டிய சாத்திரம்’ நூலில், நாட்டியத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றுளார். பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தை கற்று மகேந்திரன் இந்நாடகத்தை படைத்த சான்று இது எனவும், “திஷது வோ ந்ருத்த கபாலீ ” என்ற வரியில் மயிலை கபாலியை மகேந்திர பல்லவன் வேண்டுகிறான் என்று நாகசாமி விளக்கினார்.மகேந்திரன் காலத்தில் மயிலை வந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை பதிகத்தை கபாலிக் கோவிலில் பாடியுள்ளார். அதில்

“மைப்பயந்த ஒன்கண் மடநல்லார் மாமயிலை

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்

துய்ப்பனவும் காணாதே ஓடியோ பூம்பாவாய் ”,

என்ற தேவாரப்பாடலில், ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரதில் நடந்த விழாவையும்;

“மணக்கை மடநல்லார்” என்ற பாடலில் “தொல் கார்த்திகை நாள்” விழாவையும் சொல்லி, மயிலையில் கபாலிச்சுர கோவிலில் 1300 ஆண்டுக்கு முன் மாதாமாதம் நடந்த திருவிழாக்களை நாகசாமி எடுத்துக்காட்டினார்.

செங்கம் வட்டார நடுகற்கள் பற்றிய 1972-ம் நூலில் அப்போதைய தொல்பொருட் துறை இயக்குனரும், வரலாற்று நிபுணருமான டாக்டர் இரா .நாகசாமி நமக்கு இன்னொரு புதுமையான தகவலை அளிக்கிறார். என்சைக்ளோபீடியாக்களில் பார்த்தால் மாமன்னன் மஹேந்திர வர்மன் 30 ஆண்டுகள் மட்டுமே  ஆண்டதாகக் கூறும். ஆயினும் அவனது 39-ஆவது ஆட்சி ஆண்டு கூட ஒரு நடு கல்லில் உளது; அவனது தந்தை சிம்ம விஷ்ணுவின் ஆட்சியின்போதே அவனுக்கும் பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டதால் இப்படி ஆட்சி ஆண்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.

டாக்டர் இரா. நாகசாமி அவர்கள், முதலாம் மகேந்திரவர்மன் பல்லவன் (கி.பி. 590-630) மற்றும் அவனது கலைப்படைப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட மிகச்சிறந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் ஆவார் மகேந்திர வர்மன் கி.பி. 600-630 காலகட்டத்தில் ஆட்சி செய்ததை அவர் உறுதிப்படுத்தினார் .

Mamamdur Caves of Mahendra Pallava 

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)

    சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன், மாவீரனாக வாழ்ந்தான். இவனது ஆட்சிக்காலத்தின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர் நிலைக்கு வந்தது. இப் பேரரசனே சமண சமயத்தை விடுத்து, சைவத்திற்கு மாறினான். திருநாவுக்கரசர் எனும் அப்பரால் மனமாற்றம் அடைந்தவன். சிவன் கோவில்களையும் விஷ்ணு கோவில்களையும் பிறமதத்தினர் ஆக்ரமித்திருந்தனர் ;அவற்றையெல்லாம் மீண்டும் இந்து மதக் கோவில்களாக மாற்றினான் ; இந்தச் செய்திகள் பெரிய புராணம் முதலிய நூல் களிலும் கல்வெட்டுகளிலும் உள. தமிழகக் கலை வரலாற்றில் ஈடிலாப் படைப்புக்களை உருவாக்கியவன். சிறந்த இசைவல்லவன், ஓவியன், நாடக ஆசிரியன். பல்லவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புகழ் எய்தியவன்.

பட்டங்கள்

   இப்பேரரசனுக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. குணபரன், விசித்திர சித்தன், போத்தரையன், சத்ருமல்லன், மத்தவிலாசன் போன்ற பல பட்டப் பெயர்கள் இவனது சாசனங்களில் காணப்பெறுகின்றன.

   புள்ளலூர் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன் புலிகேசியையும், கங்கமன்னன் துர்வீநீதனையும் இவன் வென்று தன் வீரத்திற்குப் பெருமை சேர்த்தான்.

மத்தவிலாச பிரகசனம் எனும் நாடகநூல் இப்பேரரசனால் எழுதப் பெற்றதாகும். பல்வேறு சமயங்களைப் பற்றிய செய்திகளையும், நல்லொழுக்கம் பற்றி வலியுறுத்துகின்ற செய்திகளையும் நகைச்சுவை உணர்வோடு இந்நாடகநூல் விவரித்துக் கூறுகின்றது. மகேந்திரவர்ம பல்லவனின் புலமை இந்நூல் வாயிலாக வெளிப்படுகின்றது.

   சிறந்த இசைப்புலவனாக வாழ்ந்த மகேந்திர பல்லவன் ‘சங்கீர்ணஜாதி‘ எனும் இசைப் பண்ணைத் தானே அமைத்துச் சிறப்பெய்தினான். ஒப்பற்ற கவியாகவும் விளங்கினான். திருச்சிராப்பள்ளிக் குடைவரைப் பாடல்கள் இவனால் எழுதப்பெற்றவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சித்திரக்காரப்புலி என்ற பட்டம் புனைந்து, ஓவியக்கலை வளர்ப்பதில் பெரும் பணி புரிந்திருக்கிறான். மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், வல்லம், பல்லவபுரம், தளவனூர், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் மலையைக் குடைந்து, குடை வரைக் கோயில்களை உருவாக்கினான். சுதை, மண், கல், மரம், உலோகம் ஆகியவை இன்றிப் புதுமையான கோயில்களை உருவாக்கியவன் இவன் என அவனது மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.

***

பாண்டிய நாட்டு ராணி மங்கையற்கரசி

Queen Magaiyarkarasi

மங்கையற்கரசி சோழர் குலப் பெண்மணி ; மாபெரும் சிவ பக்தை; பாண்டிய மகாராஜாவுக்கு வாக்குப்பட்டாள்  பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான்.  இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின; 

இதையெல்லாம் பார்த்த பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள்.  அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தாள்.

சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தர் திருமறைக்கா ட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அவர்கள் அறிந்து தூதர்கள் மூலம் அழைப்புவிடுத்தார்கள் . ஞானசம்பந்தர், நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார்.

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை

வரிவளைக் கைம்மடமானி

பங்கயச் செல்வி பாண்டிமாதேவி

பணி செய்து நாள்தோறும் பரவப்

பொங்கழலுருவன் பூத நாயகன் நால்

வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த

ஆலவாயாவதும் இதுவே

என்று தொடங்கி பதிகம் பாடினார் அதில் மங்கையர்கரசியின் சிவபக்தியைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கிறார்.; இதற்குள் சமணர்கள் சம்பந்தர் தங்கிய மடத்தில் தீ வைத்தார்கள். அமணர்கள் இட்ட தீத்தழல் போய் ”பையவே சென்று பாண்டியர்க்காகவே” எனப் பாடினார். சம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது.  யாராலும் தீர்க்கமுடியாத நோயை சம்பந்தர் மீனாட்சி கோவில் விபூதி மூலம் தீர்த்துவைத்தார் ; அப்போது அவர் பாடியதே

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாய் உமை பங்கன் திரு

ஆலவாயன் திருநீறே’

பின்னர் நடந்த அனல்வாதம், புனல் வாதப் போட்டிகளில் சம்பந்தர் வென்றார் ; அவைகளில் தோற்றால், கழுமரத்தில் ஏறி உயிர்விடுவோம் என்று 8000 சமணர்கள் வீ ரவசனம் பேசியிருந்தனர் ; சம்பந்தர் வெற்றிபெற்றவுடன் நிறைய சமணர்கள் சைவர்களாக மாறினர்; ஏனையோர் கழுவேறினர் .

பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார். பெரிய புராணத்தில் அழகிய செய்யுட்களால் சேக்கிழார் நமக்கு இந்தக்கதையை செப்புகிறார்.

***

மங்கம்மாள்  , ராணி  மங்கம்மாள்

திருச்சியிலிருந்து மதுரையை அரசாண்ட ராணி மங்கம்மாளைப் பற்றி பல கதைகள் உண்டு.    எகிப்திய பேரழகியும் ஆட்சியாளருமான  கிளியோபாட்ராவைப்போலவே இவரும் அழகானவர்;  பல போர் புரிந்தவர். அவரைப் போலவே அழகால், சாதுர்யத்தால் ஆட்சி உரிமை பெற்றவர். மிகவும் திறமையான ஆட்சியாளர். மதுரை நகர் முழுதும் இன்றும் இவர் புகழ் பாடும் கட்டடங்களும் சாத்திரங்களும் சின்னங்களும் இருக்கின்றன மர்மமான முறையில் (சிறையில்?) இறந்தார். ஆனால் இந்தச் செய்திகளில் சில, உறுதிப்படுத்தப் படாத செய்திகள். அவர் காலத்தில் வாழ்ந்த சின்ன வெங்கண்ணா, மங்கம்மாளைக் கிண்டல் செய்து எழுதிய கவிகளில் இருந்து பெறப்பட்ட கிளுகிளு செய்திகள் இதோ :.அவர் சொல்லும் ரகசியம்: மங்கம்மாளின் இயற் பெயர் கனகா; அவர் தந்தை சந்திரகிரி துபாகுல நாயகர். அவர் ஒரு நடன மாது. வேலை தேடி தஞ்சை விஜயராகவரின் அரசவைக்குச் சென்றார். அவர் அந்தப்புரத்தில் சேர்க்க தயாராக இருந்த தருணத்தில் எப்படியோ மதுரை சொக்கநாத நாயகரை (1659-1682)  மணந்தார். மங்கம்மாளின் மகன் முத்துவீரப்ப நாயகர் (1682-1689) சிறிது காலம் ஆண்டு இறந்துவிட்டார். உடனே பேரன் விஜரங்க சொக்கநாத நாயக்கரின் பேரில் 1689-ல் ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.

.    மதுரை முழுதும் அன்ன சத்திரங்களைக் கட்டினார். கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வாரி வழங்கினார். மதுரை சவுராஷ்டிர சமூகத்துக்குப் பிராமண அந்தஸ்து வழங்கினார். காவிரிப் பிரச்சினை இவர் காலத்தில்தான் துவங்கியது. சிக்கதேவராயன் காவிரி நதியின் குறுக்கே கண்ணம்பாடியில் அணை கட்டி தஞ்சைப் பாசனத்தைத் தடுக்கவே போர்க் குரல் எழுப்பினார். கடவுள் அருளால் பெரு மழை, வெள்ளத்தில் அணை  உடைந்தது. காவிரிப் பிரச்சினையும் தீர்ந்தது. இவர் கடைசி காலத்தில் சிறையில் இறந்ததாக ஒரு செய்தி. எது எப்படியாகிலும் இவரது சத்திரங்களும், கோவில், மசூதி, கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குக் கொடுத்த தானங்களும், மதுரை தமுக்கம் அரணமனையும் (இப்போது காந்தி மியூசியம்), மீனாக்ஷி கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களும் இருக்கும் வரை மங்கம்மாளின் புகழ் மங்கவே மங்காது.

மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் தனது ஒரு செருப்பை நாடு முழுதும் ஊர்வலம் விட்டான். அஸ்வமேத யாக குதிரை போகும் இடம் எல்லாம் எப்படி பாரதீய சக்கரவர்த்திகளுக்குச் சொந்தமானதோ அதே போல செருப்பு போனமிடம் எல்லாம் கப்பம் கட்டவேண்டும். ராணி மங்கம்மாள் மிகவும் தைரிய சாலி. அவனது படைத் தளபதி அந்த ஒற்றை செருப்பை காலில் மாட்டிக்கொண்டு மற்றொரு செருப்பு எங்கே என்று கேட்டான். ஆனால் பின்னர் ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி, மைசூரின் சிக்க தேவராயா தஞ்சை மன்னன் ஷாஜி, திருவாங்கூர் மன்னன் ரவிவர்மா ஆகியோர் தொல்லை கொடுக்கவே அவுரங்கசீப்புடன் சமரசம் செய்துகொண்டு கப்பம் கட்டினார்.

அழகால் ஆட்சி பெற்றதும், போர் முனைகளில் எதிரிகளைச் சந்தித்ததும், மர்மமான முறையில் இறந்ததும் இவரை கிளியோபாட்ராவுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.

***

மாணிக்கவாசகர்

Manikkavasagar

மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிராமண குலத்தில் பிறந்த இவரை அரிமர்த்தனன் என்னும் பாண்டியன் அழைத்து அமைச்சர் ஆக்கினான் ; கடற்கரைப் பகுதியில் அராபிய வணிகர்கள் குதிரைகளைக்  கொண்டுவந்திருப்பதை அறிந்த மன்னன், மாணிக்கவாசகரிடம் பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான் ; திருப்பெருந்துறையில் ஒரு புனித குருவினை கண்டவுடன் அவர் வசப்பட்டு அரச பணியை மறந்தார் . மன்னர் இவரை அழைத்து பல தண்டனைகளை கொடுத்தான் பின்னர்தான் மன்னருக்குத் தெரிந்தது – இவர் சிவபக்தர் அதைத் தெரிவிக்கவே நரி -பரி லீலைகள் நடந்தன என்று; அவரை விடுதலை செய்து அனுப்பியவுடன் அவர் யாத்திரை செய்து திருவாசகத்தைப் பாடினார். சிதம்பரத்தில் புத்த பிட்சுக்களை வாதத்தில் வென்ற பின்னர் அங்கே கோவிலில் இறைவன் அடி சேர்ந்தார்

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள்.

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்ன? அவருடைய பெயர் என்ன? யாருக்கும் விடை தெரியாத கேள்வி. தேவாரம் பாடிய மூவருக்கு முன்னால் இவர் வாழ்ந்திருந்தால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இவர் பெயரைச் சொல்லாதது ஏன்? நாயன்மார்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லாதது ஏன்? இந்த மூவருக்கும் பின்னால் அவர் வாழ்ந்திருந்தால் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ மூவரையும் மாணிக்கமாவது குறிப்பிட்டிருப்பாரே! ஏன் குறிப்பிடவில்லை? மதுரை வரை வந்து கூன் பாண்டியனை நின்ற சீர்நெடுமாறனாக்கிய சம்பந்தரை எப்படி மாணிக்கம் மறக்கமுடியும்?

சுருக்கமாகச் சொன்னால் மூவரை மாணிக்கவாசகர் குறிப்பிடவில்லை. ‘மாணிக்கவாசகர்  மூவர் குறிப்பிடவில்லை.  திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையைப் பாடியவர், திருக்கோவையார் என்னும் நூலையும் அவர் இயற்றியதை அறிஞர் உலகம் ஒப்புக்கொள்கிறது. அதில் சைவத்தில் பற்றுள்ள ஒரு வரகுணனைப் பற்றி ஒரு குறிப்பும் உள்ளது. அதைக் கொண்டு மாணிக்கவாசகர்  ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று பலரும் முடிவு கட்டிவிட்டனர். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் இது பிழை என்றே காட்டுகின்றன. அப்பர் தேவாரத்திலும், திருவிளையாடல் புராணத்திலுமுள்ள செய்திகள் இவர் தேவார மூவருக்கு முந்தியவர் என்று காட்டுகின்றன மேலும் ‘வரகுண’ என்பது ஒரு அடைமொழி. யாரும் வைத்துக் கொள்ளலாம். உண்மையில் மாணிக்க வாசகரின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது இவர் பிறந்தது திரு வாதவூர் என்பதால் அந்த ஊரின் கடவுளான சத்ய வாகீஸ்வரர் இவர் பெயர் என்று கருதலாம்  அதையே பின்னர் நமபியாண்டார் நம்பி முதலியோர் பொய் அடிமை இல்லாத புலவர் என்று பாடினார்கள் 

அறுபத்து மூவர் வரலாற்றைக் கூறும் அகஸ்திய பக்த விலாசம் என்ற சம்ஸ்கிருத நூலும் பொய் அடிமை இலாத புலவரை ‘ஒருவர்’ என்றே கூறி அவருடைய பெயர் ஸத்யதாசன் என்றும் குறித்துள்ளது. அவர் வேதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர், அந்தண குலத்தவர் 12 ஆண்டுப் பரமனைப் பாடிப் பரவி சிவபதம் அடைந்தார்.

மாணிக்க வாசகரின் பெயர் ஸத்தியதாசன். ஏனெனில் மேலே சத்யதாசனுக்குச் சொன்ன எல்லா விஷயங்களும் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதைவிட முக்கிய விஷயம் வேதபுரம் என்பது திருவாதவூரே! வேதபுர என்பது தமிழில் வாதவூர் என்று எழுதப்படும். திருவாதவூர் சுவாமிக்குப் பெயர் வேதபுரீஸ்வரர்!

–subham—

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 60; இந்து மத கலைச்சொல் அகராதி-60, மாணிக்கவாசகர், ராணி மங்கம்மாள், பாண்டிய ராணி, மங்கையற்கரசி , மகரிஷி, மாண்டவ்யர் , ரிஷி, முனிவர் ஆணி மாண்டவ்ய

பெருமை மிகு தமிழகத்தில் தொண்டமண்டலம்! (Post No.15,702)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,702

Date uploaded in London – 6 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம்.

பாண்டிய மண்டலம் சோழ மண்டலம் கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து இப்போது கடைசி கட்டுரையான தொண்ட மண்டலம் வெளீயாகிறது. 

பெருமை மிகு தமிழகத்தில் தொண்டமண்டலம்! 

ச. நாகராஜன்

இறையனார் தலைமை வகித்து சங்கத் தமிழை வளர்த்ததை பாண்டி மண்டலம் விளக்குகிறது என்றால் தமிழ்ப் புலவன் பாயைச் சுருட்டு என்று சொன்னவுடன் திருமால் பாய் சுருட்டி செந்நாப் புலவனுடன் கிளம்பிய வரலாறைச் சொல்கிறது தொண்ட மண்டலம்.

‘கல்வியில் கரையிலாத காஞ்சி’ என்று அப்பர் பெருமானால் புகழப்பட்ட காஞ்சியின் பெருமை தான் என்னே!

திருமழிசை ஆழ்வாரின் சீடரான கனிகண்ணனை பல்லவ அரசன் தன்னைப் பாடுமாறு பணிக்க, கனிகண்ணன் மறுத்து விட்டான். இதனால் கோபமடைந்த அரசன் அவனை நாட்டை விட்டுப் போகுமாறு ஆணையிட்டான். இதை அறிந்த திருமழிசை ஆழ்வார் தானும் அங்கிருந்து கிளம்பலானார். தான் வழிபடும் தெய்வமாகிய மணிவண்ணன் மட்டும் ஏன் அங்கிருக்க வேண்டும் என்று எண்ணிய ஆழ்வார் காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்கா கோவிலில் பாடினார் இப்படி:

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்தன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்i 

திருமால் ஆதிசேஷன் என்ற தனது பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்ப உலகமே திகைத்து அதிர்ந்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் ஆழ்வாரிடம் மன்னிப்புக் கேட்க, மனம் இரங்கிய ஆழ்வார்

கணிகண்ணன் போக்கொழிந்தான்! காமரு பூங்கச்சி

மணிவண்ணா! நீ கிடக்கவேண்டும்! – துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவொழிந்தான், நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்!!

என்று பாட திருமால் தன் இருப்பிடம் வந்து அனைவருக்கும் அருள் பாலிக்க ஆரம்பித்தார். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயரையும் பெற்றார். தமிழ்ப் புலவனின் ஆற்றலை உலகம் உணர்ந்து கொண்டது. 

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவரே. 

கந்தபுராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாசாரியார் காஞ்சிபுரத்தில் 

 அவதரித்தவர்.  குமரகோட்டத்தில் உள்ள முருகப் பெருமானின்                       அருளாணையுடன் அதை அவர் இயற்றினார். 10345 பாடல்கள் கொண்ட இந்த நூலுக்கு முருகப் பெருமானே ‘திகடச்       சக்கரச் செம்முகம்’ என்று அடி எடுத்துக் கொடுத்தார் என்பது வரலாறாகும். 

இன்னும் ஆதிசங்கரர் நிறுவிய காஞ்சி காமகோடி பீடம் இந்து மதத்தின் ஏற்றத்தைப் பறைசாற்றும் மடமாகும். சமீப காலத்தில் வாழ்ந்த இதன் 68வது பீடாதிபதி மகா பெரியவர் என்று உலகோரால் கொண்டாடப்பட்டார். இவர் அருளாசியைப் பெற கிரீஸ் ராணி உள்ளிட்ட மேலை நாட்டோரும் வருவது வழக்கமானது.

 காஞ்சிபுரம் பட்டு சேலைகள், வேஷ்டிகளுக்கும் கைவினைப் பொருள்களுக்கும் பெயர் பெற்ற இடமாகும். 

14ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் முருக பக்தர் அருணகிரிநாதர் ஆவார். இவர் 16000 திருப்புகழ் பாடல்களைப் பாடினார். நமக்கு இன்று

 கிடைத்திருப்பது 1334 பாடல்கள் மட்டுமே. இவர் திருவண்ணாமலை 

அண்ணாமலையார் கோவிலில் வாழ்ந்து முருகன் அருளால் பாடல்களை இயற்றினார். ‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர்

 தந்ததனால்’ என்ற இவரது வார்த்தைகளால் முருகனே இவரைப்

பாடல்களை இயற்ற வைத்தான் என்பது தெளிவு. 

திருவண்ணாமலையில் அருளாட்சி புரிந்த ரமண மகரிஷியை உலகம்   முழுவதும் போற்றியது. மேலைநாடுகளிலிருந்து ஏராளமானோர்         

ரமணாசிரமம் வந்து இவரை தரிசித்து அருள் பெற்றனர். குறிப்பாக பால்       பிரண்டன் எழுதிய ‘எ செர்ச் இன் சீக்ரட் இண்டியா’ என்ற நூல் இவரது            அருமைகளைக்  கூற உலகமே இவர் பால் ஈர்க்கப்பட்டது. 

இன்னும் திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமிகள் உள்ளிட்ட              ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

காஞ்சி வீரத்தின் விளை நிலமாகும். இங்கிருந்து ஆண்ட பல்லவ மன்னர்கள் உலகளாவிய அளவில் புகழ் பெற்றனர். மாமல்லன் என்று அழைக்கப்பட்ட பெரும் வீரன் மாமல்லபுரத்தில் அற்புதமான சிற்பங்களை வடிக்கச் செய்தான். இன்றளவும் அந்த அற்புதச் சிற்பங்களைக் காண உலகெங்குமிருந்து மக்கள் வருகின்றனர். அதன் பெருமையைப் பறை சாற்றுகின்றனர். 

தொண்ட மண்டலத்தில் உள்ள புலியூர் கோட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்த தெய்வப் புலவர் சேக்கிழார் 63 நாயன்மார்களின் வரலாற்றை பெரிய புராணம் என்ற நூலாக வடித்தார். தில்லையில் உலகெலாம் என்ற வார்த்தையை ஒலித்து இறைவனே நூலுக்கு அடி எடுத்துக் கொடுத்தான். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இவர் விளங்கிப் பெருமை பெற்றார். குன்றத்தூர் சென்னையின் புறநகர்ப் பகுதியாக போரூர் அருகே உள்ள ஊராகும். 

சென்னையின் புகழ் அதன் பல்வேறு துறை விற்பன்னர்களால் உலகம்      முழுவதும் பரவிய ஒன்று.

கணினி சார் துறைகளைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள், வாகனக் 

கட்டுமான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், 

ரயில் பெட்டிகளின் வடிவாக்கத் தொழிலகம், கிரிக்கெட், செஸ்  உள்ளிட்ட விளையாட்டுகளில் உலகப் புகழ் பெற்ற வீரர்கள்… இப்படி சென்னையின் புகழ் பட்டியல் நீண்ட ஒன்று.

ஆயிரக் கணக்கான தமிழ் திரைப்படங்களை உருவாக்கிய சென்னை மாநகரம் ஆயிரக்கணக்கான திரைத்துறை சார்ந்த கலைஞர்களை உருவாக்கிய நகரமாகும். இசை, நடனம், நடிப்பு, கதை, வசனம், கேமரா உத்தி, வண்ணச் சேர்க்கை, உடை அலங்காரம் என அனைத்துப் பகுதிகளிலும் தன் முத்திரையைப் பதித்த துறை சென்னையின் திரைப்படத் துறையாகும்.

 உலகின் ஆகப் பெரிய கடற்கரைகளுள் இரண்டாவது இடத்தைக் கொண்டிருக்கும் மரீனா பீச் உலக பயணிகள் அனைவருக்கும் உற்சாகம் தரும் ஒரு கடற்கரையாகும்.

இது இந்திய சுதந்திரப் போரில் லட்சக் கணக்கான மக்களுக்கு விழிப்பூட்டும் மையமாகத் திகழ்ந்தது. இங்கு கூட்டங்களில் பேசாத தேசீயத் தலைவர்களே இல்லை எனலாம். 

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்கு நடக்கும் படித்திருவிழா முருக பக்தர்களை ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் மாபெரும் விழாவாகும். 

தொண்டமண்டலத்தில் உள்ள செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் , இராணிப்பேட்டை உள்ள மாவட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி புகழ் பெற்றவையாகும். விரிப்பின் பெருகும்.

படிக்காசுப் புலவர் எழுதிய தொண்டைமண்டல சதகம் நூலில் உள்ள       100    பாடல்களையும் படித்து இதன் அருமை பெருமைகளை அறியலாம். 

இராமலிங்க சுவாமிகள் தொண்டைமண்டல சதகம் பற்றிய ஒரு ஆய்வுக்    கட்டுரையையே எழுதியுள்ளார். தனது ஆய்வின் முடிவில் அவர்        தொண்டை மண்டல சதகம் என்பது சரியல்ல தொண்டமண்டல  சதகம் என்ற பெயரே சரி என்று நிறுவி இருக்கிறார். 

இப்படிப் பெருமை மிகு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிற்றூரும், பெரும் நகரமும் தமிழகத்தின் காலம் வென்ற சரித்திரத்தையும், பண்பாட்டையும், கலை உணர்வையும், வீரத்தையும், தேசீயப் பற்றையும். இலக்கிய வளத்தையும், காலத்திற்கேற்ற அதி நவீன அறிவியல் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். 

பெருமை மிகு தமிழகத்தின் பெருமைகளை முற்றிலுமாகச் சொல்ல முடியுமா என்ன?

வாழ்க தமிழ், வாழிய தமிழர், வாழிய பழம் பெரும் தமிழ்நாடு!

***

புரந்தரதாசர்,அருணகிரி நாதர்,  வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை !– Part 80 (Post.15,633)

புரந்தரதாசர்,அருணகிரி நாதர்வள்ளலார்மூவரின் ஸ்வீட் உவமை ! – Part 80 (Post.15,633)

Written by London Swaminathan

Post No. 15,633

Date uploaded in London –19 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

80திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 80

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 80

***

தனித்தனி முக்கனி பிழிந்து ……

ராமலிங்க சுவாமிகள் அருணகிரிநாதரைப்போல தனித்தனி முக்கனி பிழிந்து …. பாடலைப் பாடினார். அருணகிரிநாதரோ புரந்தர தாசர் போலப் பாடினார்; தெய்வீகப் பாடல்களை ஒப்பு நோக்கி மகிழ்வோம் 

தேனை வடித்துச் சொரிந்ததோ கொதி

     பாலு டன்ஒக்கக் கலந்ததோ நல

          சீனி யில்விட்டுப் பிசைந்ததோ பல …… கனிதானோ

தேடி யெடுத்துப் பிழிந்ததோ நிறை

     பாகு பதத்திற் கமைந்ததோ இவை

          சேர வுருட்டித் திரண்டதோ நவ …… ரசமீதோ

ஞான முளைத்துப் படர்ந்ததோ யதி

     லேயெ ழுபுட்பச் சுகந்தமோ விது

          நாம கள்வித்தை ப்ரசங்கமோ வென …… உரைநாவால்

நாவ லர்மெச்சிப் பணிந்துதா ழவும்

     நீய துமெச்சித் தணிந்துபே சவும்

          நானு னைமெச்சிப் புகழ்ந்துபா டவும் ……. அருள்தாராய்!

யானை மதப்பட் டெழுந்ததா மென

     வேயி ருபத்மச் சதங்கையோ லிட

          ஆறு முகத்துக் குழந்தையா யருள் …… அணையார்பால்

ஆறு முகத்திற் சொரிந்தபாற் குளம்

     ஆறு முலைக்குப் பிரிந்தபால் நிறை

          வார மலைக்குச் சிறைந்தபோ திலு …… மமையாதோ

சோனை மலைக்குட் திரிந்துலா விய

     சீர சமுத்ரத் தரங்கமே லெழு

          சூரி யனொக்கத் திரிந்துலா விய …… புதல்வோனே!

சோலை மலைக்குக் கடம்புபோல் வளர்

     விரா லிமலைக்குக் கொழுந்துபோ லுயர்

          சுவா மிமலைக்குக் கரும்புபோல் வரு …… முருகோனே!

……… பதவுரை ………

தேனை வடித்துச் சொரிந்ததோ கொதி … சுத்தமான தேனைப் பிழிந்து எடுத்து ஊற்றியதோ, சூடான

பாலுடன் ஒக்கக் கலந்ததோ நல … பாலுடன் அத்தேனை தகுந்த அளவு கலந்துள்ளதோ, நல்ல

சீனியில் விட்டுப் பிசைந்ததோ பல கனிதானோ … சர்க்கரையில் கொட்டிப் பிசைந்துள்ளதோ, பல வகையான பழங்களோ,

தேடி யெடுத்துப் பிழிந்ததோ நிறை … அப்பழங்களைத் தேடி எடுத்து அதன் சாற்றைப் பிழிந்து எடுத்ததோ, தேவையான

பாகு பதத்திற் கமைந்ததோ இவை … நல்ல பக்குவத்திற்கு உள்ளானதோ, இவைகள் எல்லாம்

சேர வுருட்டித் திரண்டதோ நவரசமீதோ … ஒன்றாக சேர்த்து உருட்டி உருவானதோ, ஒன்பது விதமான இனிமைகளைக் கொண்டதோ

ஞான முளைத்துப் படர்ந்ததோ யதிலே … மெய்யான உணர்வு உதித்து பரவியுள்ளதோ, அவற்றுள்

யெழு புட்பச் சுகந்தமோ விது … எழுகின்ற பலவகைப் பூக்களின் நறுமணமோ, இது

நாமகள் வித்தை ப்ரசங்கமோ வென உரை நாவால் … சரஸ்வதியின் அருளால் வெளிப்படும் ஞானத் தெளிவோ என உன் அருளை நாவினால் போற்றுகின்ற,

நாவலர் மெச்சிப் பணிந்து தாழவும் … புலவர்கள் விரும்பிப் பணிவோடு தலை வணங்கவும்,

நீயது மெச்சித் தணிந்து பேசவும் … நீ அதைக் கண்டு விரும்பி நிறைவோடு அவர்களுடன் பேசவும்,

நானுனை மெச்சிப் புகழ்ந்து பாடவும் அருள்தாராய்! … நான் உனை விரும்பித் துதித்துப் பாடவும் உனது அருளைத் தருக!

யானை மதப்பட் டெழுந்ததா மெனவே … யானை மதங்கொண்டு ஓடும்போது, அதன் கழுத்திலுள்ள மணிகளின் ஒலியைப் போன்றதோ என்று

யிரு பத்மச் சதங்கை யோலிட … உனது இரு தாமரை மலர்ப் பாதங்களை அலங்கரிக்கும் சதங்கைகள் ஓசையிட

ஆறு முகத்துக் குழந்தையா யருள் அணையார் பால் … அறுமுகக் குழந்தை வடிவாக வந்து உன்னை அணைத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு அருள் புரிந்தவனே

ஆறு முகத்திற் சொரிந்த பாற்குளம் … உனது ஆறு முகத்திற்கு பொழிந்த பாற்குளம் போன்ற

ஆறு முலைக்கும் பிரிந்த பால் நிறை … கார்த்திகைப் பெண்கள் அறுவர் தனங்களிலிருந்து வெளிப்பட்டப் பாலின் அளவானது

வார மலைக்குச் சிறைந்த போதிலு மமையாதோ … நீண்ட நெடிய மலையினால் தடுக்கப்பட்டு அடைக்கப்பட முடியுமோ?

சோனை மலைக்குட் திரிந்துலாவிய … கார் மேகங்கள் சூழ்ந்துள்ள மலகளின்மேல் திரிந்து உலாவி வருகின்றவனாகவும்,

சீர சமுத்ரத் தரங்க மேலெழு … பாற்கடலின் அலைகளின் மேல் எழுகின்ற

சூரிய னொக்கத் திரிந்துலாவிய புதல்வோனே! … ஞான சூரியனாகவும் உலாவி வருகின்ற மைந்தனே

சோலை மலைக்குக் கடம்புபோல் வளர் … சோலை மலை எனும் திருத்தலத்திற்கு வளர்கின்ற கடம்ப மலர் போன்றும்,

விராலி மலைக்குக் கொழுந்து போலுயர் … விராலிமலை எனும் திருத்தலத்திற்கு இளந்தளிர் போன்றும், உயர்ந்த

சுவாமி மலைக்குக் கரும்புபோல் வரு முருகோனே! … சுவாமி மலை எனும் திருத்தலத்திற்கு இனிக்கும் கரும்பு போன்றும் வந்து அருள் புரிகின்ற முருகப் பெருமானே!

****

புரந்தரதாசர் கண்டுபிடிப்பு! ராமர் பாயசம்கிருஷ்ணா சர்க்கரைபுதுவகை கல்கண்டு! (Post.14,272) 

Written by London Swaminathan

Post No. 14,272

Date uploaded in Sydney, Australia –  5 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(புரந்தரதாசர் பற்றிய 7–வது கட்டுரை இது)

புரந்தரதாசர் கீர்த்தனைகளில் நல்ல ருசி உண்டு; யாராவது அவரது வீட்டுக்குப் போனால் ராமர் பாயசம் தருவார்; அதில் கிருஷ்ணா சர்க்கரையும் இருக்குமாம்; அத்தோடு வாசலில் உள்ள தாம்ப்பாளத்  தட்டிலிருந்து கற்கண்டும் எடுத்துக்கொள்ளலாமாம் . இதற்காக அவர்  நம்மை வெற்றிலை பாக்கு வைத்து மேள தாளத்துடன் வரவேற்கிறார் . இதோ அவரே சொல்கிறார்

ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)

ராமா என்னும் பாயசத்தை தயாரிக்ககிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;

விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)

ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி

சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம)

கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு

அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)

ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு

புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு

ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக

ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)

இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு

புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு

(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது

ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)

***

சஜ்ஜிகே – கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.

ஷாவிகே – சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்

****

தமிழில் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் உபன்யாசத்தைக் கேட்டவர்களுக்கு ஊறுகாய் போடுவது பற்றி அவர் சொன்னது மறக்காது!

புது வகைப்    பழச்சாறு SWEET — வள்ளலார்

வள்ளலார்  பாடலுடன் ஒப்பீடு ; சிவன் நாமம் மூன்று பழச் சாறு

தனித்தனி முக்கனி பிழிந்துவடித்துஒன்றாய்க் கூட்டி

சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,

தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,

இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,

அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,

அடிமலர்க்கு என் சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!

நூல்: திருவருட்பா; பாடியவர் வள்ளலார்

மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் தனித்தனியே சாறு பிழிந்து, வடிகட்டிச் சக்கைகளை நீக்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து, அந்தக் கலவையில் சர்க்கரையும் கற்கண்டுப் பொடியையும் நிறையச் சேர்த்து, அசுத்தம் இல்லாத நல்ல தேனை அதில் ஊற்றி, பசும்பாலும் தேங்காய்ப் பாலும் சேர்த்து, இடித்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறி, இனிப்பான, நல்ல நெய்யையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இளம் சூட்டில் இறக்கி ஆறவிட்டுப் பின்னர் அதிலிருந்து ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டால் எப்படி இருக்கும்? அந்தச் சுவைக்கட்டியைவிட அதிகம் இனிப்பான தெள்ளமுது, என் இறைவனாகிய நீ!

நிலையில்லாத பிறவித் துயரம் அறுபடும்விதமாக அம்பலத்தில் ஆடும் நடராஜனே, உன்னுடைய பாத மலர்களை என் சொற்களால் அலங்கரிக்கிறேன், ஏற்றுக்கொண்டு அருள் செய்!

*****

புது வகைக் கற்கண்டு  – புரந்தரதாசர்


கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு

கல்லு சக்கரே கொள்ளீரோ

கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு

புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு – நீங்க எல்லோரும்

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு

கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)

மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)

எத்து ஹேருகளிந்தா ஹொத்து மாருவதல்லா

ஒத்தொத்தி கோணியளு தும்புவதல்லா

எத்த ஓதரு பாடிகே சுங்க இதக்கில்லா

உத்தம சரக்கிது அதி லாப பருவந்தா… (கல்லு)

எருமைகளால் இதை இழுத்துப் போகமுடியாது

எடுத்துப் போட்டு கோணியில் நிரப்பமுடியாது

எங்கு எடுத்துப் போனாலும் இதற்கு வாடகை, சுங்கம் (வரி) கிடையாது

உத்தமமான சரக்கு (பொருள்) இது, அதிகமான லாபம் தரும் பொருளான (கற்கண்டு)

நஷ்ட பீடுவதல்லா நாத ஹுட்டுவதல்லா

எஷ்டு ஒய்தரு பெலே ரொக்க இதக்கில்லா

கட்டிருவெய திந்து கடிமே ஆகுவதில்லா

பட்டணதொளகே பிரசித்த ஆகிருவந்தா.. (கல்லு)

(இதனால்) நஷ்டமே வராது.. (எவ்வளவு சேர்த்தாலும்) துர்நாற்றம் வராது

(உங்களிடமிருந்து) யாராவ்து எடுத்துப் போனாலும் மதிப்பு குறையாதது

கட்டெறும்பு தின்றாலும் குறையவே குறையாதது

பட்டணத்தில் மிகவும் பிரசித்தமானதாக இருக்கும்… (கற்கண்டு)

சந்தே சந்தேக்கே ஹோகி சிரம படிசுவதல்லா

சந்தே ஒளகேயிட்டு மாருவதல்லா

சந்தத பக்தர நாலகே சவிகொம்ப

காந்த புரந்தர விட்டல நாமவெம்ப.. (கல்லு)

சந்தை சந்தையாக போய் விற்க முடியாதது

சந்தையில் வைத்து வாங்கவும் முடியாதது

எப்போதும் (அவர் பெயர் சொல்லும்) பக்தரின் நாக்கில் இனிமையை தரும்

புரந்தர விட்டலா என்னும் நாமமான … (கற்கண்டு)

***

ராம நாமம் செய்யும் அற்புதம் – – புரந்தரதாசர்

ராம மந்தரவ ஜபிஸோஹே மனுஜா

ராம மந்த்ரவ ஜபிஸோ

ஆ மந்த்ர ஈ மந்த்ர மெச்சி கெடலுபேடா

சோம சேகர தன்ன பாமெகே ஹேளித மந்த்ர (ராம)

ராம நாமத்தை ஜபியுங்கள்ஹே மக்களே

அந்த நாமம், இந்த நாமத்தையெல்லாம் பெரிதென்று சொல்லி கெட்டுப் போக வேண்டாம்

அந்த சிவபெருமான் தன் மனதிற்கு இனியவளிடம் (பார்வதியிடம்) சொன்ன நாமம் இதுவே (ராம)

குலஹீனனாதரு கூகி ஜபிஸுவ மந்த்ர

சல பீதியொளு உச்சரிப மந்த்ர

ஹலவு பாபங்கள ஹதகெடிசுவ மந்த்ர

சுலபதிந்தலி ஸ்வர்க சூரெகொம்புவ மந்த்ர (ராம)

அனைவரும் கூடி சொல்லக்கூடிய மந்திரம்

சாலை/தெருக்களில் போகும்போதும் சொல்லக்கூடிய மந்திரம்

எண்ணிலடங்கா பாவங்களை தொலைத்துக் கட்டும் மந்திரம்

சுலபமாக சொர்க்கத்தை அடைய வைக்கும் மந்திரம் (ராம)

மருதாத்மஜ நித்ய ஸ்மரணெ மாடுவ மந்த்ர

சர்வ ரிஷிகளிலி சேரித மந்த்ர

துரித கானனகிது தாவானல மந்த்ர

பொரெது விபீஷணனிகே பட்ட கட்டித மந்த்ர (ராம)

வாயு மைந்தன் (அனுமன்) தினமும் நினைத்து பூஜிக்கும் மந்திரம்

அனைத்து முனிவர்களும் ஜபிக்கும் மந்திரம்

பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு அளிக்க உதவும் மந்திரம்

உச்சரித்த விபீஷணனுக்கு ஆட்சியைப் பெற உதவிய மந்திரம் (ராம)

ஞானநிதி நம்ம ஆனந்த தீர்த்தரு

சானுராகதி நித்ய சேவிப மந்த்ர

பானுகுலாம்புதி சோம நேனிப மந்த்ர

தீன ரக்‌ஷக புரந்தர விட்டலன மந்த்ர (ராம)

ஞான நிதியாகிய நம்ம ஆனந்த தீர்த்தர் (ஸ்ரீ மத்வாச்சாரியர்)

காலை எழுந்ததிலிருந்து முழு நாளும் (எப்போதும்) வணங்கும் மந்திரம்

சூரிய குலத்தில் உதித்த (ராமச்)சந்திரனை நினைக்க வைக்கும் மந்திரம்

(நமது) கஷ்டத்தில் எப்போதும் உதவும் புரந்தரவிட்டலனின் மந்திரம் (ராம)

****

பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டதுநன்றி உரித்தாகுக.

****

ஏறுமயில் ஏறி‘ உள்ளர்த்தம்

     ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே

          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே

          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே

          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

……… இப்பாடலின் மேலார்ந்த பொருள் ………

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம்தான்.

உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்

தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை

உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு முகம்தான்.

உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான்.

… அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை

நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த

திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

……… இப்பாடலின் உள்ளர்த்தம் ………

1. என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடியும்,

2. எனக்கு குருவாக வந்து உபதேசித்து அருளியும்,

3. என்னுடைய வினைகளையெல்லாம் தீர்த்தருளியும்,

4. என் மாயா பாசங்களை வேலால் உருவி ஒழித்தருளியும்,

5. என் அகங்கார மமகார மலங்களை அடக்கியருளியும்,

6. என்னை உன்னோடு புணர்த்தியருளியும்

… இவ்வாறு உன் ஆறு திருமுகங்களாலும் எனக்கு கருணை புரிவாயாக.

****

இறைவனுடைய ஐந்து திரு முகங்கள் பரத்தையும், உமா தேவியின் திரு முகம் இகத்தையும் நல்கும். இந்த ஆறு முகங்களும் சேர்ந்து இகபர செளபாக்கியத்தை அருளும்.

—-subham—

Tags- Part 80, ‘ஏறுமயில் ஏறி’ பாட்டின் ,உண்மையான பொருள், புரந்தரதாசர்,அருணகிரி நாதர், வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை, தனித்தனி முக்கனி பிழிந்து ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

சிவபெருமான் தேள் அணிந்தாரா?  அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621)

snakes wearing Visha kanya in Belur Temple

Written by London Swaminathan

Post No. 15,621

Date uploaded in London –15 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 76

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 76

திருப்புகழில் அருணகிரிநாதர், திருப்பதி பாலாஜி கோவிலை முருகன் கோவில் என்றார்; பிள்ளையார் கையில் சிவன் கொடுத்தது மாம்பழம் அல்ல, மாதுளம் பழம் என்றார்; சரஸ்வதி நதி இப்போது இல்லை; அங்கே வயிரவி வனத்திலுள்ள முருகன் கோவில் என்று பாடுகிறார் ; இப்போது சிவன் உடலில் தேளையும் பாம்பையும் அணிந்ததாகப் பாடுகிறார் ; உரைகாரர் கள் செய்யும் தவறா ? அல்லது உண்மை உள்ளதா ? ஆராய்வோம்!

துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்

     சுக்கி லக்க லாமிர்தப் …… பிறைசூதம்

சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்

     சுத்த சொற்ப கீரதித் …… திரைநீலம்

புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்

     பொற்பு மத்தை வேணியர்க் …… கருள்கூரும்

புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்

     புற்பு தப்பி ராணனுக் …… கருள்வாயே

பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்

     பக்க மிட்டு லாவியச் …… சுரர்மாளப்

பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்

     பத்ம சிட்ட னோடமுத் …… தெறிமீனக்

கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்

     துட்க முத்து வாரணச் …… சதகோடி

கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்

     கைப்பி டித்த சேவகப் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

துத்தி நச்சு அரா இளம் பிச்சி நொச்சி கூவிளம் … புள்ளிகளைக்

கொண்டதும், விஷத்தை உடையதுமான பாம்பு, புதிய ஜாதி மல்லிகை

மலர், நொச்சிப் பூ, வில்வம்,

சுக்கிலக் கலா அமிர்தப் பிறை சூதம் … வெண்ணிறம் உடையதாய்

கலைகளைக் கொண்டதாய் உள்ள அமிர்த மயமான பிறைச் சந்திரன், மாந்தளிர்,

சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் … சுத்தமான

ரத்தநிறப் பாதிரிப் பூ, பொன்னிறமான கொன்றை மலர்தேள்,

சுத்த சொல் பகீரதித் திரை நீலம் … புகழை உடைய, அலைகள்

வீசும் கங்கை நதி, நீலோற்பலம்,

புத்(து) எருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு

மத்தை … புதிய எருக்க மலர், பெருமை பொருந்திய பிரம கபாலம்,

கொத்து கொத்தாயுள்ள அறுகம் புல், குளிர்ச்சியான அழகுள்ள ஊமத்தை,

வேணியர்க்கு அருள் கூரும் … (இவைகளை அணிந்த) சடைப்

பெருமானாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய,

புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் … புத்தியும், அஷ்ட

மா சித்திகளும்* வாய்ந்ததும், பெருமையும், சுத்தமும், உண்மையும்

கொண்டதுமான உபதேச மொழியை,

புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே … நீர்க்குமிழி போன்ற

நிலையில்லாத உயிருள் ஒட்டியுள்ள அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவாயாக.

பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம்

இட்டு உலாவி … வரிசையாய் அமைந்துள்ள தோகையை உடைய,

அழகிய பச்சை நிறம் கொண்ட வெற்றி வாகனமாகிய மயிலின் பக்கத்தில் ஏறி உலாவி,

அச்சுரர் மாள பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி … அந்த

அசுரர்கள் மாண்டு போகும்படிச் செய்து, அவர்களின் பிளவுபட்ட வாய்கள் மாமிசத்தைக் கக்கும்படி வெட்டி எறிந்து,

வாய் தரும் பத்ம சிட்டன் ஓட … அச்சத்தால் வாய்விட்டு

அலறிய சூரபத்மனாகிய** மேலோனும் ஓட,

முத்து எறி மீனம் கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க …

முத்துக்களை அலைகளால் வீசுவதும், மிகுந்த மீன்களைத் தன்னிடம்

கொண்ட பெருவெள்ளமாகிய கடலும் கொந்தளிக்க,

மா முறிந்து உட்க … மாமரமாக மறைந்து நின்ற சூரன்

கிளைகள் முறிபட்டு அச்சம் உறவும்,

முத்து வாரணச் சத கோடி கைக் களிற்று வாரணம் புக்கு

ஒளிக்க … முத்துக்களை நல்கும் கணக்கற்ற சங்குகளும் துதிக்கையைக்

கொண்ட (அஷ்ட திக்கு) யானைகளும் பயந்து ஒளிந்து கொள்ளவும்,

வாரணம் கைப் பிடித்த சேவகப் பெருமாளே. … சேவற்

கொடியைக் கையில் ஏந்திய, வல்லமை உடைய பெருமாளே.

****

அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:

அணிமா – அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.

மகிமா – மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.

கரிமா – ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.

லகிமா – ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.

பிராப்தி – பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).

பிராகாமியம் – எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.

ஈசத்துவம் – எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.

வசித்துவம் – எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.

** பத்ம சிட்டன் = சூர பத்மன். சூரன் பகுதி ஆணவத்தைக் குறிக்கும். பத்மன் பகுதி அறிவைக் குறிக்கும். போருக்குப் பின் ஆணவம் மயிலாயிற்று. பத்மப் பகுதி சேவலாகிக் கொடியாய் உயர்த்தப்பட்டது.

thuththi nacchu arA iLam picchi nocchi kUviLam: The spotted and poisonous serpent, fresh and tender jasmine and nochchi flowers, vilwa leaves,

sukkilak kalA amirthap piRai cUtham: white nectar-filled crescent moon with many phases, green mango leaves,

suththa raththa pAdalam pon kadukkai Edu alam: pure blood-red flower of pAthiri, golden flower of kondRai (Indian laburnum), a scorpion,

suththa sol pakeerathith thirai neelam: the celebrated river Gangai full of waves, blue lily,

puth(thu) erukku pAzhi kam koththu eduththa thALi thaN poRpu maththai: fresh flower of erukkai, the famous skull of BrahmA, bunches of aRugam (cynodon) grass, and cool and pretty flower of Umaththai –

vENiyarkku aruL kUrum: all these adorn the matted hair of Lord SivA; You preached to that SivA

***

Alam (अलम्).—ind. Ornament. 2. Enough, abundance. 3. Able, adequate or equal to. 4. Prohibition, no not. 5. Unnecessary, no need of. It is chiefly used in composition, as alañjīvikaḥ having enough for subsistence; alandattvā refusing to give; ityalam enough; alaṅkāra ornament, &c. E. ala to adorn. &c. and am aff.

சம்ஸ்க்ருதத்தில் அலம் என்றால் “போதுமான, ஆபரணம்” முதலிய அர்த்தங்கள் உண்டு; இந்த இடத்தில் ஆபரணம் என்பது பொருந்தும் அல்லது ஆலம் என்று கொண்டால் சிவன் கழுத்திலுள்ள விஷத்தைக் குறிக்கும்.

ஆலம் என்பதை படி எடுத்தவர்கள் தவறாக அலம் என்று அடுத்த ஏட்டில் எழுதி இருக்கலாம்

என்னுடைய கருத்து

இந்த இடத்தில் திருநீலகண்டனின் கழுத்திலுள்ள ஆலம் / விஷம் என்பதே  !

தமிழ் அகராதியில் ஆலம் என்பதற்கு விஷம் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளது; சம்ஸ்க்ருதத்தில் இதை Halāhala (Sanskrit हलाहल) ஹலாகல என்பார்கள். தமிழில் ஆலகாலம் என்றும் சொல்லுவதுண்டு.

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கு நடுவில் மயில் தீவு என்னும் திட்டில் உமானந்தா சிவன் கோவில் உள்ளது ; அங்குள்ள தேள் வடிவத்தைக்கூட தேவி என்றுதான் பக்தர்கள் வழிபடுகிறார்கள்; சிவபெருமானை அல்ல; சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட தேள் முத்திரைகளுக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை .

FOLLOWING IS THE ARICLE WRITTEN BY ME ON 11TH NOVEMBER 2012. IT IS POSTED IN TWO BLOGS ON THA DAY.

தேள்— ஒரு மர்ம தெய்வம்!

படம்: ரஹ்மான் தேரி தேள் முத்திரை; எகிப்திய தேள் மன்னன்

(This is a summary of my Two Part English article ‘The Great Scorpion Mystery in History’, posted already in this blog: swami)

உலகின் பல பழைய நாகரீகங்களில் பாம்பு வழிபாடு இருந்ததைக் கண்டோம். இந்துக் கடவுளர் எல்லோரிடமும் பாம்பு இருக்கிறது. ஆனால் தேள் என்பது சுமேரிய, எகிப்திய, சிந்துவெளி, மாயா, வளைகுடா நாகரீகங்களில் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இப்போதும் இந்தியாவில் தேள் வழிபாடு இருக்கும் வியப்பான விஷயம் பலருக்கும் தெரியாது.

அஸ்ஸாமில் கௌஹாத்தி நகரில் பிரம்மபுத்ரா நதியின் நடுவில் ஊர்வசி தீவு என்ற தீவு இருக்கிறது. இதில் உமானந்தா கோவிலில் சிவனும் தேவியும் உண்டு. ஆனால் தேவியின் வடிவம் ஒரு தேளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

கர்நாடகத்தில் குல்பர்கா பக்கத்தில் உள்ள கண்டாக்கூரில் நாகபஞ்சமி தினத்தன்று தேள் திருவிழா நடக்கிறது. அங்குள்ள தேள் அம்மனின் பெயர் கொண்டம்மை. அவளை வழிபட மக்கள் மலை ஏறிச் செல்வர். போகும் வழியில் எல்லாம் பாறை பொந்துகளில் நிறைய தேள்கள் வசிக்கின்றன. இதை மக்கள் பிடித்து விளையாடுகின்றனர்.  சிறுவர்கள் உடல் முழுவதிலும் தேள்களை விட்டுக் கொண்டாலும் அவைகள் கடிப்பதில்லை! இது அங்குள்ள விலங்கியல் பேராசிரியர்களுக்கும் வியப்பூட்டுகிறது. தொட்டாலோ மிதித்தாலோ தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தேள்கள் கொட்டும். ஆனால் கண்டாக்கூரில் இப்படிச் செய்வதில்லை.

தேள் திருவிழாவுக்கு ‘செலின யாத்ரா’ என்று பெயர். எகிப்திலும் தேளின் பெயர் இதே சப்தத்தில்தான் இருக்கிறது! எகிப்தில் தேள் தெய்வத்தின் பெயர் செல்கத். இந்த தெய்வத்தை குடும்ப உறவுக்கான (செக்ஸ்) தெய்வமாக கருதுவர்.

கஜுராஹோவில் காம சம்பந்தமான சிற்பங்கள் இருக்கின்றன. இதில் ஒரு அழகியின் தொடையில் ஒரு தேள் ஏறுவதாக சிற்பி செதுக்கி இருக்கிறான். ஏன் என்று காரணம் தெரியவில்லை. உலகின் பல கலாசாரங்களிலும் தேளை ‘செக்ஸ்’ சம்பந்தமான தெய்வமாகக் கருதுகின்றனர்.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் தேள்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. அதன் விஷத்தைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். சிந்து சமவெளியில் தேள் முத்திரைகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை எழுத்துக்களை படிக்க முடியாததால் தேள் முத்திரை புதிராகவே இருக்கிறது.

மாதவி ஆடிய 11 வகை நடனம் பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதினேன். அதில் தேவி ஆடிய ஒரு நடனத்தின் பெயர் மரக்கால். அதாவது அவுணர்கள் பாம்பு, தேள் வடிவத்தில் வந்தபோது அவைகளிடம் இருந்து தப்பிக்க தேவி மரக் கால்களுடன் ந்டனம் ஆடியதாக தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்டியம் உண்டாக்கினர்.

படத்தில் குதுர் கற்கள்; கஜுராஹோ அழகி

27 நட்சத்திரங்களுக்கு சிறப்பான தமிழ்ப் பெயர்களும் சின்னங்களும் உண்டு. அனுஷம்/ அனுராதா நட்சத்திரத்துக்கு மற்றொரு பெயர் தேள். சின்னமும் அதுவே.

தேவர்கள் வாழும் இடத்தை புத்தேள் உலகு என்று தமில் இலக்கியம் பகரும். தமிழில் தேளுக்கு நளி, அலம், தெருக்கால், துட்டன், பறப்பன், விருச்சிகம் (சம்ஸ்கிருதம்), நளிவிடம் என்ற பெயர்கள் இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் 30 பெயர்கள் உண்டு (எனது ஆங்கிலக் கட்டுரையின் இறுதியில் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது)

எகிப்தில் கி.மு.3100ல் ஆண்ட மன்னனின் பெயர் தேள். அவன் முத்திரையில் அவன் முகத்துக்கு நேராக தேள் படம் பொறிக்கப்ட்டு இருக்கிறது. தில்முன் எனப்படும் பஹ்ரைனில் மட்டும் 36 தேள் முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.

படத்தில் தேள் வீரன்

படத்தில் சிந்து சமவெளி தேள் முத்திரை

எகிப்திலும் கிரேக்க நாட்டிலும் தேள் பற்றி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இவைகளில் சில வானியல் நிகழ்ச்சிகளைக் குறிப்பன.

இஷாரா என்னும் தெய்வம் தேளுடன் தொடர்புடையவள். கிரேக்கத்தில் ஆர்டெமிஸ், ஒரியன் ஆகிய கதைகளில் தேளின் பங்கு இருக்கிறது.

சுமேரியாவில் பிரளய கால வீரன் ஜில்காமேஷ் வாயிற்காப்போன் தேள் மனிதர்கள் என்றும் சூரியக் கடவுள் ஷமாஷின் காவலர்கள் தேள் தெய்வங்கள் என்றும் எழுதப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 5000 ஆண்டுப் பழமையானவை.

பாபிலோனியாவில் எல்லைகளில் நடும் கற்களிலும் நில தானம் செய்யும் கல்வெட்டுகளிலும் தேள் படம் இருக்கிறது. இவைகளை குதுர் கற்கள் என்பர். இவைகளை வெளியிட்ட காசைட் மன்னர்கள் வேத கால நாகரீகத்துடன் தொடர்புடையோர். மேலும் கல்வெட்டுகளில் வரும் வாசகங்களும் சாபங்களும் இந்திய கல்வெட்டுகளை நினைவு படுத்துகின்றன.

பாரசீகத்தில் தேள் தொடர்பான பிரார்த்தனைகள் உள்ளன.

For more details, see my English post: The Great Scorpion Mystery in History.

Other articles on Snake, Indus Valley etc:

1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.The Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals and Indian literature7. Karnataka-Indus Valley Connection 8.Human sacrifice in Indus Valley and Egypt 9.Tiger Goddess of  Indus Valley: Aryan or Dravidian? 10.Flags: Indus valley –Egypt similarities 11. Fish God  around  the World 12.சிந்து சமவெளி-எகிப்தில் நரபலி 13.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் 14. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 15. நாகராணி: சிந்து சமவெளி முதல் சபரிமலை வரை 16.கொடி ஊர்வலம்: சிந்துசமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை. Contact London Swaminathan at swami_48@yahoo.com

–SUBHAM—

TAGS  – சிவபெருமான், தேள், அணிந்தாரா? ,அருணகிரிநாதர் புதிர், திருப்புகழில்,  அரிய செய்திகள் Part 76ருமான் தேள் அணிந்தாரா? அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621)

மன அழுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் 20 நிமிட கலைப் பயிற்சி! (Post No.15,620)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,620

Date uploaded in London – 15 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

21-3-26 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை! 

மன அழுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் 20 நிமிட கலைப் பயிற்சி! 

ச. நாகராஜன் 

உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு புதிய புத்தகம் ‘ஆர்ட் க்யூர்” ART CURE!

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட இந்தப்         புத்தகத்தை எழுதியவர் டெய்ஸி ஃபேன்கோர்ட் (Daisy Fancourt) என்ற பெண்மணி. 

டாக்டரேட் பட்டம் பெற்றுள்ள இவர் யுனிவர்ஸிடி காலேஜ் ஆஃப் லண்டனில்   சைக்கோ பயாலஜி மற்றும் எபிடெமியாலஜி துறையில் பேராசிரியராகப்         பணியாற்றுகிறார்.

யாருமே இதுவரை செய்யாத ஒரு அபூர்வ ஆய்வை இவர் மேற்கொண்டார்.      என்ன அது? 

கலைகளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ளதொடர்பு பற்றிய  ஒரு ஆய்வை     இவர் மேற்கொண்டார்.

நல்ல உணவுத் திட்டம், உடல்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது போல      கலையைக் கற்பதும் உடல் நோய்களைக் குணப்படுத்தும், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும், மன அமைதியை நல்கும் என்பதை இவரது ஆய்வின் முடிவு கண்டுபிடித்துள்ளது.

ஹீதர் ரோஸ் ஆர்டுஷின் (Heather Rose  Artushin)   என்ற 

பெண்மணி இவரை சைக்காலஜி டு டே பத்திரிகைக்காக பேட்டி  கண்டார்.

அதில் தன்னைப் பற்றியும் தனது ஆய்வைப் பற்றியும் இவர் மனம் திறந்து பல        தகவல்களை வெளியிட்டார்.

15 வருடங்களாக ஒரு விஞ்ஞானியாக கலைகள், மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பற்றி இவர் ஆராய்ச்சி செய்து வந்துள்ளார்.  

எந்த ஒரு கலையிலும் ஈடுபடும் ஒருவர் தான் சந்தோஷமாக இருப்பதையும்       மிகுந்த மனஅமைதியை பெறுவதையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கம். 

ஆனால் அது ஒருவரின் வாழ்க்கையை நம்ப முடியாத உயரத்திற்கு ஏற்றும்      என்றும் ஆரோக்கியம் மேம்படும் என்பதையும் இவர் உறுதிப்படுத்துகிறார்.    

 மூளையைப் படம்பிடித்து ஆராய்தல், உடலில் ஏற்படும் மாறுதல்களை         ஆராய்தல், இரத்த சாம்பிள்களை  எடுத்து ஆய்வு நடத்தல், ஏன் மரபணுவையே ஆய்வுக்கு உட்படுத்தல் என்பன போன்ற ஆய்வுகளை  முழு வீச்சில்  நடத்தி  கலைகளில் ஈடுபடுவதானது உடலில்  ஏற்படுத்தும் நல்ல விளைவுகளை அறிவியல் பூர்வமாகத் தொகுத்துள்ளார்.

மன ஆரோக்கியத்திற்கு கலைகள் பெரிதும் உதவுகின்றன. உணர்ச்சிகளைச்      சீராக்கல், படைப்பாற்றலை மேம்படுத்தல் உள்ளிட்ட பல நலன்கள் கலைகளில்        ஈடுபடுவதால் ஏற்படுகின்றன. மூளையில் டோபமைன் என்ற முக்கிய நியூரோ   டிரான்ஸ்மிட்டர் (இரசாயன தூதுவர்) அதிகரிக்கிறது. மன அழுத்த            ஹார்மோனானான கார்டிஸால் குறைகிறது.

ஒவ்வொருவரும் உணவுத் திட்டத்தை சீர்படுத்தி அமைத்துக் கொள்வது போல   கலைகளிலும் ஒரு நாளைக்கு இருபது நிமிட நேரமாவது ஈடுபட வேண்டும்      என்கிறார் இவர்.

இசை, நடனம், ஓவியம், நடிப்பு என்று எந்தக் கலை ஆகட்டும் நன்மையே பயக்கும்.

கலை ஈடுபாட்டை ஒரு ப்ரிஸ்கிரிப்ஷனாகவே தர வேண்டும் என்ற இவரது அதிரடி சிபாரிசு கலைப்பிரியர்களுக்கும் கலாரசிகர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியையே தருகிறது!

இதை ஆதாரத்துடன் ஆய்வு முடிவுகளைச் சுட்டிக் காட்டிக் கூறும் போது இந்த   அறிவியல் ஆமோதிப்பை அனைவரும் மனம் திறந்து வரவேற்கத்தானே வேண்டும்!

ஆர்ட் க்யூர் புத்தகம் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

புத்தகத்தின் விலை பேப்பர் பேக் எடிஷன் ரூ 662.33. பக்கங்கள் 328.

Omens, Sanskrit Words and Valakhilya Rishis in Purananuru – Part 57 (Post No.15,566)

Written by London Swaminathan

Post No. 15,566

Date uploaded in London – 2 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru Wonders -17, Ancient Tamil Encyclopaedia -Part 57; One Thousand Interesting Facts -Part 57

SAKUNA/OMENS AND SANSKRIT WORDS IN PURANANURU VERSE 41

(Vaidehi Herbert’s English Translation of Purananuru is used by me; thanks)

***

Item 416 Sanskrit words in Puram 41

Poet Kovur Kizar used lot of materials from Sanskrit books. In Puram 41 we see a number of Sanskrit words.

Kaala- Time; used in all Sangam works and Tirukkural

Kaalan- Yama, God of Death

Brahmins salute the Vedic Gods, Planets and Directions thrice a day in the Sandhyavandana. When they salute Yama, God of Death Facing South, they recite all the names of God of Death; and one of them is Kaala.

Disai=Dik= Direction

English word Direction and Tamil word Disaiare from Sanskrit Dik, Disaa.

Emam – Kshemam

Urkam- Ulka in Vedas

The most common Sanskrit word for meteor is ulkā (उल्का), which typically denotes a meteor, firebrand, or fiery appearance. It refers to shooting stars, often appearing in literature from the Rigveda onwards.

***

Item 417 Sakuna/Omens

Tamil commentators on Puram 41, list the omens without telling the readers that they are Bad Omens. Because Tamils already knew about bad omens and they follow this science in their life, commentators leave it  without explaining.

Brhat Samhita of Varahamihira has one full chapter on Omens (Chapter 86)

Valmiki Ramayana and Mahabharata have lot of references to Omens.

Many of the things mentioned here are already in the epics.

shooting stars falling in all the eight directions, long
branches of huge trees parched without any leaves, sun with
its scorching rays burning, bird calls heard as terrifying sounds,
teeth falling on the ground, pouring oil on hair, men riding on
boars, people removing their clothes and silver hued mighty
weapons falling from an overturned cot.

***

Puranānūru 41, Kōvūr Kizhār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan

1

O king who triumphs in battles!  Even Kootruvan, the
god of death, 
will wait for the due time.  You do not wait,
but kill, when you want, destroying fine men owing armies
with many spears!

2

You invade the lands of enemies causing distress.
In dreams and in reality, men see sights that are rare:
shooting stars falling in all the eight directions, long
branches of huge trees parched without any leaves, sun with
its scorching rays burning, bird calls heard as terrifying sounds,
teeth falling on the ground, pouring oil on hair, men riding on
boars, people removing their clothes and silver hued mighty
weapons falling from an overturned cot.

3

O King who is mighty in battles!  You advance like fire combined
with wind.  When they see you, your enemies who enraged you,
who do not have KSHEMAM/EMAM/protection, kiss the flower-like eyes
of their children, and hide their sorrow from their wives!

***

புறநானூறு 41பாடியவர்: கோவூர் கிழார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணை: வஞ்சிதுறை: கொற்ற வள்ளை

1


காலனும் காலம் பார்க்கும்பாராது


வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல் போர் வேந்தே!

2


திசை இரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெரு மரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,  5
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்,
எயிறு நிலத்து வீழவும்எண்ணெய் ஆடவும்,
களிறு மேல் கொள்ளவும்காழகம் நீப்பவும்,
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,  10

3


கனவின் அரியன காணா நனவின்
செருச்செய் முன்ப நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு  15
பெருங்கலக்குற்றன்றால் தானே, காற்றோடு
எரி நிகழ்ந்தன்ன செலவின்
செரு மிகு வளவ நிற் சினைஇயோர் நாடே.

***

Item 418 Beautiful Comparisons

Elephant- Size of Mountains

Army- Vast like ocean

Spears- Shine like Lightning

***

Item 419 Dharma Danda

Hindu Kings carry Senkol (Righteous Stick/Rod)

It is respected and revered like a divine symbol.

Madurai Nayak Kings received it from Goddess Meenakshi and the ceremony is repeated every year even today in a symbolic ceremony.

Kerala King submit it in the temple of Padmanabha Swamy in Thiruvanathapuram, when they go out of the country with a request to the God to take care of it till he comes back.

There are many instances like this in Hindu History.

Recently Indian Parliament had such a ceremony.

***

Item 420 Good Simile

The king protects his people like a tiger protects its cubs.

Item 421

Tamils’ Hospitality and Tamil Food

In the following lines Tamil food and drink that is served to guests are explained

Your citizens are hospitable to their relatives
from arid lands, and give them vālai fish that rice reapers remove
from the lower sluices, tortoises overturned by the plow blades
of those who plow, sweet juice that harvesters take from sugarcanes,
and waterlilies plucked by women on the huge shores.  Like the rivers

***

Item 422 Vedic Simile

Like the rivers
that descend from the mountains, run on the land, and flow toward the
ocean, all the poets come to you

The poet has translated a famous Sansskrit  saying which Brahmins recite thrice a day in their Sandhayavandana. Moreover this simile is used in umpteen places in Sanskrit books. Hindus are very familiar with geography.

The phrase “Akashat patitam toyam, yatha gacchati sagaram, sarva deva namaskaram, Keshavam prati gacchati” means that just as rain water from the sky flows towards the sea, worship offered to any deity reaches Shri Krishna, the Supreme Personality of Godhead.

आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम् । सर्वदेवनमस्कारं केशवं प्रतिगच्छति

***

Item 423

Thaanai for Army is cognate to Senaa in Sanskrit.

Akl the T sounds are change into S sound in Tamil and English.

TION in English is pronounced as SION in English.

In Tamil Visham= Vitam; Basha= Paadai etc.

So Tamil is not a Dravidian language

Tamil and Sanskrit have come from the same root.

So Tamil and Sanskrit are Hindu /Indian languages; neither Aryan nor Dravidian.

***

Puranānūru 42, Poet Idaikkādanār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan,

1

You are endless in charity and a leader of murderous battles!
Lord, your elephants appear like mountains!  Your army roars like
the ocean
!  Your spears gleam like lightning!  You have the ability
to make the kings of the world tremble!  What you do is never wrong
and this is not new to you!

2
With your righteousness and faultless scepter, you afford protection

3
as a tiger protects its cub, and your citizens listen only to the
sounds of cool water even in dreams, and not those of warriors in your
battlefields crying, “May you live long, Valavan!  Remove our sorrows!”

4

You are the ruler of a fine and greatly prosperous country with rich
towns with fields.  Your citizens are hospitable to their relatives
from arid lands, and give them vālai fish that rice reapers remove
from the lower sluices, tortoises overturned by the plow blades
of those who plow, sweet juice that harvesters take from sugarcanes,
and waterlilies plucked by women on the huge shores. 

5

Like the rivers
that descend from the mountains, run on the land, and flow toward the
ocean, all the poets come to you.  When you glance at the countries of
the two other kings, you are like Kootruvan with great might who is
enraged, as he whirls his axe, for which there just suffering and no cure!

***

புறநானூறு 42பாடியவர்: இடைக்காடனார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணை: வாகைதுறை: அரச வாகை


ஆனா ஈகை அடு போர் அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும் பெரும! நின்
தானையும் கடலென முழங்கும், கூர் நுனை
வேலும் மின்னின் விளங்கும், உலகத்து
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின்,  5
புரை தீர்ந்தன்று, அது புதுவதோ அன்றே,
தண் புனல் பூசல் அல்லது நொந்து,
களைக வாழி வளவ என்று நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
புலி புறங்காக்கும் குருளை போல  10
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்பப்,
பெருவிறல் யாணர்த்து ஆகி அரிநர்
கீழ் மடைக் கொண்ட வாளையும்உழவர்
படை மிளிர்ந்திட்ட யாமையும்அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும்பெருந்துறை  15
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்,
வன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து மாக் கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல் யாறு போலப்  20
புலவரெல்லாம் நின் நோக்கினரே,
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்று வெகுண்டன்ன முன்பொடு,
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே.

***

Item 424 Narasimha in Puranauru

Puram verse 43 is composed by Poet Narasimha!

Thāmarpal Kannanār is Tamil Translation of Narasimha.

The reason for my interpretation is the subject he is dealing with- Vaalakilya Rishis

Thaamappal means sharp teeth ;Kannan is Vishnu

Narasimha Gayatri Mantra (Sanskrit):

ॐ वज्रनखाय विद्महे तीक्ष्णदंष्ट्राय धीमहि तन्नो नृसिंहः प्रचोदयात्॥

Narasimha Gayatri Mantra (Transliteration):

Om Vajranakhaya Vidmahe Tiksnadamstraya Dhimahi Tanno Narasimhah

Meaning:

Om: The sound of the universe.

Vajranakhaya Vidmahe: “Let me contemplate on the Man-lion form of the Lord who has nails as strong as the Vajra (thunderbolt)”.

Tiksnadamstraya Dhimahi: “Let me meditate on the one who has sharp teeth (which pierce the veil of ignorance)”.

Tanno Narasimhah Pracodayat: “May that Lion god (Narasimha) be pleased to illuminate my intellect/mind and guide me”.

****

Item 425

Sibi Chakravarthy (Dove and Hawk) is story is repeated by this poet as well. Chozas came from Northwest of India. They are not Tamils.

Those who argue they ruled that part of India from Tamil Nadu have no historical or literary proof. Tamils didn’t even know Indus river.

***

Item 426 No one hurts Brahmins

Poet and the king were playing Chess. The king threw a coin on the poet. The poet became angry and said I doubt your birth (meaning you are a low born fellow). The king could have chopped poets head immediately. But he did not do it and felt ashamed about his behaviour. Immediately the poet praised him for not cutting off his head.

Here we know homw much respect Brahmins had in those days. It also shows the patience of the king

***

Item 427

The Poets praise

May your life be splendid for more days than the number of sands
heaped in the dunes by River Kāviri with sweet abundant waters!

Is in Tamil and Sanskrit books. Poets wish someone’s life should be like the number of stars in the sky or the number of sand particles on the shore or the number of rain drops

310).  மணலினும் பலவே:  அகநானூறு 93 – தண் ஆன்பொருநை மணலினும் பலவே, புறநானூறு 9- நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே, புறநானூறு 43 – எக்கர் இட்ட மணலினும் பலவே, புறநானூறு 55 – வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே, புறநானூறு 136 – நுண் பல மணலினும் ஏத்தி, புறநானூறு 363 – இடு திரை மணலினும் பலரே, புறநானூறு 387 – கல்லென் பொருநை மணலினும், மதுரைக்காஞ்சி 236 – திரை இடு மணலினும் பலரே, மலைபடுகடாம் 556 – வடு வாழ் எக்கர் மணலினும் பலரே.  

***

Item 428 MOST IMPORTANT REFERENCE TO VALKHILYA RISHIS

to the amazement
of sages with glowing hair who live with air as food and roam
around absorbing the heat of the scorching rays of the sun,
to end the sorrow of those who live on the land!

I have already written the following on Sec.31 ,2011 on the Munis:

Valakhilyas: 60,000 thumb-sized ascetics who protect Humanity

Jonathan Swift has taken the idea of Lilliputians for his novel Gulliver’s Travels from Valakhilyas!!

Valakhilyas are thumb sized ascetics accompanying the sun in its everyday travel in the sky. They are protecting the humanity by taking all the extra heat and act like the ozone layer. They are 60,000 in number they are shining like brilliant lights because of their severe penance. They used to hang upside down in the trees while doing penance—these are some of the interesting facts that are found in the Vedas, the epics and the mythologies. Tamil literature adds more details about these strange kinds of ascetics.

Valakhilya hymns, eleven in number, are the appendix of the eighth Mandala of the Rig Veda. But famous commentators like Sayana rejected them as interpolations. The Ramayana and the Mahabharata have a lot of references to the Valakhilya Rishis. They may be considered the forerunners of English folklore: ‘Tom Thumb’ and the Lilliputians of the famous satirical novel Gulliver’s Travels by Jonathan Swift. English newspapers and magazines were publishing a lot of stories about India in the 1700s.

Ancient Sangam Tamil literature refers to Valakhilyas in Puranaanuru (verse 43), Tirumurugatrup patai (lines 16-109), post Sangam book Silappadikaram (Vettuvavari 15) and in the poems of middle age poet Arunagirinathar.

Valakhilyas were born to Kratu and Kriya. Once Kasyapa did a Yagna (fire sacrifice) to beget children. He invited all the Devas and Rishis to help him in the task. Everybody readily agreed. Mighty Indra, the King of Heaven, brought wood for the ceremony. Valakhilyas were emaciated due to severe penance. They were hardly able to lift anything but leaves. Even when they were moving leaves like ants, they fell into rainwater puddles, because they were so tiny. It amused Indra and he laughed loudly. Valakhilyas were very much offended. They made a vow to do a separate yagna to create another Indra. When Indra listened to their vows, he was afraid and ran to Kasyapa to explain what had happened.

Kasyapa lent a patient ear, but warned that he could not stop the powerful Valakhilyas. But he gave an assurance to Indra that he would find a compromise. When he met Valakhilyas he requested them to drop the yagna to create a new Indra. He also assured them that whoever they create will be the Indra of the birds and Valakhilyas agreed to this new plan.

After the yagna Valakhilya’s prasad (food offering) was given to Vinata, one of the two wives of Kasyapa. She gave birth to two children Aruna and the most powerful golden-hued eagle, Garuda. Long after this Garuda flew to Indraloka to get Amrita and defeated Indra. The Second wife of Kasyapa Kadru gave birth to the Nagas or the Snake race. Garuda on his way back sat on the tree where Valakhilyas were doing penance. The tree broke into many branches, but Garuda lifted all the ascetics with the branch and put them in a safe place.

The Rig Veda says that they sprang from the hairs of Prajapati Brahma. They are the guards of the Chariot of the Sun. They are also called the Kharwas. The Vishnu Purana describes them as pious, chaste and resplendent as the rays of the sun.

Tamil literature is very clear in saying that the main task of the short and smart ascetics is to prevent human beings from being scorched. So they absorb the excess heat from the sun by travelling in front of him. Tamil books also add they were in turn given energy by Lord Skanda and Goddess Durga. Even the hunters in the forest pray to Durga for this. Another Tamil poet compares the sacrifice of the Valakhilyas to the sacrifice of the Emperor Sibi who gave his flesh to an eagle to save a pigeon. The famous story of Sibi was referred to in four Sangam Tamil books. Sibi was praised as the forefather of the famous and powerful Tamil Chola dynasty. The food of Valakhilyas is only wind.

Another story in the Hindu mythology is that the sun has to fight a set of demons called Mandokarunar on a day-to-day basis for survival. Valakhilyas stand beside the Sun in battle. We don’t know whether there is scientific basis for this story. Mandokarunar maybe a reference to the dangers of solar flares or magnetic storms. In any case, it is crystal clear that the Valakhilyas act as the ozone layer to protect us from harmful ultraviolet rays. Too much ultraviolet rays will cause us skin cancer and other health problems.

We must be grateful to the authors of the Vedas, Puranas, Epics and Tamil commentators Nachinarkiniyar and Adiarrku Nallar for creating awareness about the dangers of ultra violet radiation. In western countries people are warned to use special creams whenever they sunbathe.

***

Puranānūru 43, Poet Thāmarpal Kannanār sang for Māvalathān, the younger brother of Chozhan Nalankilli,

1

O heir of a powerful man with endless generosity who saved
a dove with small strides that came to him for protection,
afraid that it might be killed by a kite with curved wings
and sharp claws, and entered a scale,

2

to the amazement
of sages with glowing hair who live with air as food and roam

around absorbing the heat of the scorching rays of the sun,
to end the sorrow of those who live on the land!

3

O younger brother of Killivalavan with chariots and great wealth!
O Lord of warriors with long arrows and curved bows!  O leader
with strong hands and swift horses!  I said this making you hate me,

4
“I have doubts about your ancestry.  Your ancestors who wore
mountain ebony garlands did not hurt Brahmins. How can you?”
I had wronged you and was mistaken, but you did not take offense.
You were very embarrassed as if the fault was entirely yours. 

5

O Lord
who tolerates mistakes of those who have hurt you!  O Lord who has
admirable strength worthy of your clan!  I survived because of you!

6
May your life be splendid for more days than the number of sands
heaped in the dunes by River Kāviri with sweet abundant waters!

***

புறநானூறு 43பாடியவர்: தாமற்பல் கண்ணனார்பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்திணை: வாகைதுறை: அரச வாகை

1


நில மிசை வாழ்நர் அலமரல் தீரத்,
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,
கால் உணவாகச் சுடரொடு கொட்கும்,
அவிர் சடை முனிவரும் மருளக்,

2

கொடுஞ் சிறைக்
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்,  5
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!

3
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின்
தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல்  10
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்,
“ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது
நீர்த்தோ நினக்கு?” என வெறுப்பக் கூறி,  15

4
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே,
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் எனக்
காண்தகு மொய்ம்ப! காட்டினை ஆகலின்  20

5
யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள்,
மிக்கு வரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!

310).  மணலினும் பலவே:  அகநானூறு 93 – தண் ஆன்பொருநை மணலினும் பலவே, புறநானூறு 9- நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே, புறநானூறு 43 – எக்கர் இட்ட மணலினும் பலவே, புறநானூறு 55 – வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே, புறநானூறு 136 – நுண் பல மணலினும் ஏத்தி, புறநானூறு 363 – இடு திரை மணலினும் பலரே, புறநானூறு 387 – கல்லென் பொருநை மணலினும், மதுரைக்காஞ்சி 236 – திரை இடு மணலினும் பலரே, மலைபடுகடாம் 556 – வடு வாழ் எக்கர் மணலினும் பலரே.  

பார்ப்பார் நோவன செய்யலர் – they did not hurt Brahmins, றக்க நின் ஆயுள் மிக்கு வரும் இன்னீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே – may your life flourish for more days than the sands brought and heaped by Kāviri with sweet waters .

-Subham—

Tags- Purananuru Wonders -17, Ancient Tamil Encyclopaedia -Part 57, One Thousand Interesting Facts -Part 57, Sakuna, Omens, Valakhilya muni, Hurting Brahmins, Item 428

Swastika in Iran

Swastika shared heritage of Tehran, New Delhi: Iran Consulate

Diplomats highlight long-standing cultural, civilisational ties between nations on social media

Ajay Banerjee
Tribune News Service

New Delhi,Updated At : 02:04 AM Mar 29, 2026 IST

  • Rabindranath Tagore at the Tomb of Poet Hafez in Iran. Photo: Iranian ConsulateEmphasising Iran’s long-standing cultural and civilisational ties with India, Iranian diplomats stationed in the country are using social media to bring out anecdotes dating back to 7,000 years, including the commonality of the Hindu religious symbol, ‘Swastika’, in both culturesconsulate%2F&referer=https%3A%2F%2Fwww.tribuneindia.com%2FWithin this week, important posts on ‘civilisational-ties’ have included a picture of poet and philosopher Rabindranath Tagore visiting Iran several decades ago; and a painting depicting Zoroastrian (Parsi) religious leader Zoroaster to mark his birth anniversary.tThe Iranian consulate in Mumbai posted a picture of a 7,000-year-old rock carving in Iran showing the ancient Hindu symbol, Swastika. “The Swastika is in fact a prehistoric motif, deeply rooted in the shared cultural heritage of ancient Iran and India,” it said.It claimed that Swastika emerged from an Indo-Iranian civilisational continuum, where early Persian and Indian cultures were intertwined through language, cosmology and symbolic expression.It provided archaeological evidence on one such rock carving in ‘Loch Math’ near Birjand in eastern Iran. “A motif known as the ‘cosmic wheel’ or rotating cross has been dated back to almost 7,000 years ago,” it said.Similar engravings have been found etched into mountain stone walls across Iran from Kurdistan to Gilan and Khorasan.In parts of Khorasan and southern Iran, families would tie small wooden charms shaped like the Swastika around children’s arms. These were believed to protect against the evil eye and to promote health and well-being, the social media post said.Notably, Swastika’s symbolism continued into later periods of Iranian religious history, including during the era of Zoroastrian influence.Earlier, another post by the Consulate included a picture of Tagore with a group of Iranians. “An Indian heart finding itself in Persian verse: 1932, when Rabindranath Tagore sat in reflection at the Tomb of Hafez.”Iranian travel websites describe Hafez was the most celebrated Persian poet. His full name was Khwaja Shams-ud-Din Muhammad Hafez-e Shirazi (1320-1389). Known by his pen name Hafez, he lived and died in Shiraz. Hafez’s collection of poetry is mostly composed of short poems with mystical themes and is commonly considered to be the zenith of Persian poetry.Another social media post on the birth anniversary of Zoroaster said: “We honour his timeless message: Good (Thoughts, Words, Deeds). He elevated humanity beyond darkness and practices tied to deities that demanded human sacrifice (especially baby girls like what the US did to the schoolchildren of Minab)”.Zoroastrians or Parsis have populations in Mumbai and nearby areas. In December 2024, a high-ranking Zoroastrian priest from Iran, Mobed Mehraban Pouladi, and President of the Council of Iranian Mobeds, had visited India, a first such visit in five centuries. The Parsi community in India had hosted Pouladi.India’s Zoroastrian community, which migrated from Persia in the eighth century, has left an indelible mark on the nation. Prominent Parsi families like the Tatas, Godrejs, Wadias, Mistrys and Poonawalas have contributed significantly to India’s industrial, social and cultural development.. ***