Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-53; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,865)

Written by London Swaminathan

Post No. 15,865

Date uploaded in London –13 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திரு நாகை

தாயார் : ஸ்ரீ சௌந்தர்ய வல்லி

மூலவர் : நீலமேகப் பெருமாள்

உட்சவர்: சௌந்தர்யராஜன்

மண்டலம் : சோழ நாடு

இடம் : நாகப்பட்டினம்

கடவுளர்கள்: நரசிம்மா,கஜலெட்சுமி

வைணவ திவ்யதேசம் (திருநாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில்)

தீர்த்தம் – ஸாரபுஷகரிணி.

விமானம் – ஸெளந்தர்ய விமானம்.

ப்ரத்யக்ஷம் – நாகராஜன், திருமங்கையாழ்வார், கலியன், ப்ரஹ்மாதிகள்.

விசேஷங்கள் – வீற்றிருந்த பெருமாளாக கோவிந்தராஜனுக்கும், சயனத் திருக்கோலத்தில் ரங்கநாதனுக்கும் இரு ஸந்நிதிகள். வேறு பல ஸந்நிதிகளும் உண்டு. ரங்கநாதன் ஸந்நிதியில் மிக அபூர்வமான அஷ்டபுஜ நரஸிம்ஹரின் வெண்கலச்சிலை உள்ளது. ஒருகை பிரஹ்லாதன் தலையைத் தொட்டும் மற்றொரு கை அபயஹஸ்தமாகவும் விளங்குகின்றன. மற்ற கைகள் ஹிரண்யவதம் செய்கின்றன. இந்த க்ஷேத்ரம் த்ருவனுக்கு ஸேவை தந்த அவஸரத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கோலத்தில் இன்னும் சில சிறு அழகிய கோவில்கள் உள்ளன.

****

பாசுரங்கள்

திருமங்கையாழ்வார் அருளிய 10 பாசுரங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ளன.இப்பதிகம் அச்சோப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளின் அழகில் ஆழ்வார் மயங்கி, “அச்சோ, ஒருவன் அழகியவா!” என்று ஒவ்வொரு பாசுரத்திலும் வியந்து பாடியுள்ளார்.

நாலாயிர திவ்ய பிரபந்தம்– இரண்டாம் ஆயிரம்– திருமங்கை ஆழ்வார்– பெரிய திருமொழி–  திருநாகை: அச்சோப்பதிகம்.

1757    பொன் இவர் மேனி மரகதத்தின்

      பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்

மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும்

      வேதியர் வானவர் ஆவர் தோழீ

என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி

      ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்

      அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (1)

1758    தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்

      சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த

சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்

      செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி

பாடக மெல் அடியார் வணங்க

      பல் மணி முத்தொடு இலங்கு சோதி

ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (2)

1759    வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த

      மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்

தாயின நாயகர் ஆவர் தோழீ

      தாமரைக் கண்கள் இருந்த ஆறு

சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்

      செவ்விய ஆகி மலர்ந்த சோதி

ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (3)

1760    வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல்

      கையன ஆழியும் சங்கும் ஏந்தி

நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்

      நாகரிகர் பெரிதும் இளையர்

செம் பவளம் இவர் வாயின் வண்ணம்

      தேவர் இவரது உருவம் சொலலில்

அம் பவளத் திரளேயும் ஒப்பர்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (4)

1761    கோழியும் கூடலும் கோயில் கொண்ட

      கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன

பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்

      பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்

      வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்

      மா கடல் போன்று உளர் கையில் வெய்ய

ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி-

      அச்சோ ஒருவர் அழகியவா             (5)

1762    வெம் சின வேழ மருப்பு ஒசித்த

      வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தைத்

தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன்

      தாமரைக் கண்கள் இருந்த ஆறு

கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த

      காளையர் ஆவர் கண்டார் வணங்கும்

அஞ்சன மா மலையேயும் ஒப்பர்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (6)

1763    பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்

      பேர் அருளாளர்கொல்? யான் அறியேன்

பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ

      பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்

அணி கெழு தாமரை அன்ன கண்ணும்

      அம் கையும் பங்கயம் மேனி வானத்து

அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (7)

1764    மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட

      மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்

நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்

      நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்

மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த

      மா முகில் போன்று உளர் வந்து காணீர்

அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (8)

1765    எண் திசையும் எறி நீர்க் கடலும்

      ஏழ் உலகும் உடனே விழுங்கி

மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும்

      மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்

      கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்

      கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும்

அண்டத்து அமரர் பணிய நின்றார்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (9)

1766    அன்னமும் கேழலும் மீனும் ஆய

      ஆதியை நாகை அழகியாரை

கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்

      காமரு சீர்க் கலிகன்றி குன்றா

இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை

      ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்

மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும்

      வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே            (10)

***

இங்கு புகழ்பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது

அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பாள் கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நந்தி சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுச் சுவர்களில் புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது.

மேலும் நாகாபரணப் பிள்ளையார், சுவாமி சந்நிதியின் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை இந்த ஆலயத்தின் மற்ற சிறப்புகள் ஆகும்.

மேலும் இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் சுந்தரவிடங்கர் எனப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தியும் அடைந்தவர் அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. அதிபத்த நாயனார் தான் முதல் தடவை பிடிக்கும் மீன்களை பக்திப் பெருக்கோடு இறைவனுக்கு அர்ப்பணித்து பூஜித்து வந்தார். ஒரு முறை ஒரே ஒரு தங்க மீன் கொடுத்து அதிபத்த நாயனாரை சோதித்து திருவிளையாடல் செய்து அவரை இறைவன் ஆட்கொண்ட திருத்தலம் இதுவாகும்.

—subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-53; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திரு நாகை, அம்பாள் நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி

சோஷியல் மீடியாக்களில் பொய் சொல்லியே பிழைப்பவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? (Post.15,864)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,864

Date uploaded in London – 12 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5-6-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

சோஷியல் மீடியாக்களில் பொய் சொல்லியே பிழைப்பவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?ச. நாகராஜன்                                  

அப்பப்பா! ஒரு வழியாக ஓய்ந்தது ஒரு அரசியல் அலை! எத்தனை பொய்கள்!     எத்தனை கட்டி விடப்பட்ட கதைகள்! எத்தனை அவதூறுகள்!

மண்டையே சுழல்கிறது.

நல்லவர்கள் கெட்டவர்களாகிறார்கள். கெட்டவர்கள் “கடவுளாகி” விடுகிறார்கள்.

எல்லோரும் அறிஞர்கள்! எல்லோரும் அரசியல் வல்லுநர்கள்! யார்              வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “உண்மையாக்கலாம்”            உண்மையைப் பொய் ஆக்கலாம்!

சோஷியல் மீடியாக்களில் எத்தனை மணி நேரம் வேஸ்ட்!

“இப்பதான் பிரதம மந்திரி என்னிடம் மட்டும் சொன்னாரு” என்று

 டெல்லியிலிருந்து வரும் பொய்க்குரலைக் கேட்டு ஏமாந்தவர்கள் எத்தனை      லட்சம்!

இப்படி ஏமாறுவதைத் தவிர்க்க வழி உண்டா?

2005ம் ஆண்டு பிலிப் டெட்லாக் என்பவர் “நிபுணர்களின் அரசியல் ஆரூடம்” என்று ஒரு ஆய்வை மேற்கொண்டார். இஷ்டத்திற்கு “அள்ளி விடுபவர்களைப்” பற்றிய  ஆய்வு இது.

எதிர்காலத்தைப் பற்றி இந்த நிபுணர்களின் ஆரூடமும் கணிப்பும் உண்மை தானா, நம்பலாமா என்பதே அவரது ஆய்வின் அடிப்படைக் கேள்வி.

ஆச்சரியகரமான பதில் வந்தது.

உண்மை இல்லை!

284 அரசியல் நிபுணர்களிடமிருந்து அவர் 28000 அரசியல் கணிப்புகளை எடுத்து    அலசி ஆராய்ந்தார்.

முடிவைக் கண்டவுடன் அவர் திகைத்தே போனார். 

கூக்குரலிட்டு கத்தி ‘நாளையே உலகம் பாழாய் போகப் போகிறது, இவர் தோற்கப் போகிறார் அவர் ஜெயிப்பார்’ என்ற கணிப்புகள் எல்லாம் பொய்யாய்ப் போயின. 

மிகச் சில கணிப்புகளே அதிர்ஷ்டவசமாக உண்மை ஆயின.

எதைப் பற்றிய கணிப்பை வெளியிடும் அறிஞராக இருந்தாலும் அவர் இந்த      அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கிறாரா என்று பாருங்கள் என்கிறார் பிலிப்..

  1. கணிப்பை நம்பரில் சொல்லுங்கள்.

இ’ந்தக் கட்சி பெரும்பான்மையாக ஆகும். அது தேறவே தேறாது’ என்று    அடித்துச் சொல்பவர்கள் போலி கணிப்பாளர்கள். இவர் 150 இடங்களை    பெறுவார் அவர் 30 இடங்களையே பெறுவார் என்று ஒருவர் சொல்லும்   போது உண்மையான கணிப்பாளர் சற்று அடிப்படை வேலைகளைச் செய்தே ஆக வேண்டும். களத்திற்குச் சென்று அவர்கள் நிலவரத்தை ஆராய்ந்த    பின்னரே நம்பரைச் சொல்வார். இதையும் மீறி இரண்டு சீட்டுகளே வாங்குவார் என்று   சொல்லும் போலி அறிவாளி ஒருவர், எதிராளி 108 இடங்களை வாங்கி விட்டால் 

முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்?  

அவர் ஒரு போலி என்பதை முத்திரை குத்தித் தெரிந்து கொள்ளலாம். அவர் சொல்வதை இனி யாராவது கேட்பார்களா?

  1. கேள்வியைச் சுருக்கி குறிப்பாகக் கேளுங்கள்.    

தினசரி உடற்பயிற்சி செய்தால் நான் கட்டமைப்பான உடலைப் பெறுவேனா என்று கேட்கக் கூடாது.இன்றிலிருந்து தினமும் ஒரு மணி நேரம்         உடற்பயிற்சியை நான்கு வாரங்கள் செய்தால் என் எடை எவ்வளவு        குறையும் என்று குறிப்பாகக் கேளுங்கள்.முதல் கேள்விக்கான பதிலை ”அளக்க” முடியாது. இரண்டாம் கேள்விக்கான பதிலை அளக்க முடியும்.    தவறாக இருப்பின் அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாகப்     புரிந்து கொள்ள இது உதவும்.

  1. உண்மைக்கான அடிப்படை விகிதத்தைக் கேளுங்கள்.  ‘இது போல எப்போது யாருக்கெல்லாம் நடந்தது. அதன் பலன் அல்லது     விளைவு என்ன’ என்று கேளுங்கள். இது உண்மையின் அடிப்படையை    ஆராயும் கேள்வி. இப்போது சூழ்நிலை மாறி இருக்கிறதா, அதே போலத்   தான் இன்றும்  சகல அம்சங்களும் உள்ளனவா என்பனவற்றைக் 

கேட்டால் கணிப்பு தவறாகப் போனாலும் அடிப்படையைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

  1. ஃபெர்மி வழியைக் கடைப்பிடியுங்கள். பிரபல விஞ்ஞானியான என்ரிகோ ஃபெர்மி கண்டுபிடித்து  கடைப்பிடித்த வழி இது. ஒரு 

பிரச்சனையை ஏழு எட்டு துண்டுகளாகப் பிரித்து  உண்மையை அறிவது

தான் இந்த வழி உதாரணமாக இந்த வேலையை நள்ளிரவுக்குள் 

முடிப்பேனா என்று கேட்காதீர்கள். இரவு 9 மணிக்கு எத்தனை பக்கம் 

முடிப்பேன். அதற்கு அப்புறம் எவ்வளவு முடிக்க வேண்டி இருக்கிறது. இதில் என் வேகம் அல்லது ஆற்றல் என்ன என்று பல சிறு துண்டுகளாக பிரச்சினையை ஆக்கி விடை என்ன என்பதைப் பற்றி யோசித்தால் பதில் – உண்மையான பதில் -கிடைக்கும்.

இப்படித்தான் ஆரூடக் கணிப்புகளைச் செய்வோரையும் அலசி ஆராய வேண்டும். காசுக்காக சோஷியல் மீடியாக்களில் ஆரூடம் சொல்பவர்களைக் கேட்டுக்     கொண்டே இருந்தால் நமது மூளையும் பாதிக்கப்படும்; நமது பொன்னான நேரமும் வீணாகும். அவர்களின் கணிப்புகளுக்கான பலிக்கடாக்களில் நாமும் ஒரு        எண்ணிக்கையைக் கூட்டுவோம்.

இந்த நான்கு அம்ச வழிமுறையை பிலிப் சொல்கிறார்; கேட்டுப் பலனை அனுபவிப்போமே!

**

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-48; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,845)

Written by London Swaminathan

Post No. 15,845

Date uploaded in London –8 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவேங்கடம் (திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)

ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலம்.. இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.

1) முதல்பிரிவு – கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாள், கோவில்

மூலவர் – கோவிந்தராஜப் பெருமாள், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – புண்டரீகவல்லி.

விசேஷங்கள் – இங்கு, ஆண்டாள், உடையவர், முதலியவர்களின் ஸந்நிதிகள் உள்ளன.

2) இரண்டாம் பிரிவு – திருமலை.

மூலவர் – திருவேங்கடமுடையான், ஸ்ரீ நிவாஸன், வெங்கடாசலபதி, பாலாஜி, நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் – கல்யாண வெங்கடேச்வரர்.

தீர்த்தம் – சேஷாசல ஸ்வாமி புஷ்கரிணி, பாபவிநாச நீர்வீழ்ச்சி, ஆகாசகங்கை, கோனேரி தீர்த்தம். 14 தீர்த்தங்கள் – வைகுண்ட தீர்த்தம், சக்ர தீர்த்தம், ஜாபாலி தீர்த்தம். வருண தீர்த்தம், ஆகாசகங்கை, பாபவிநாசம், பாண்டவ தீர்த்தம், குமாரதாரை, ராமக்ருஷ்ண தீர்த்தம், தும்புரு தீர்த்தம், சேஷ தீர்த்தம், ஸுகஸந்தன தீர்த்தம், யுத்தகள தீர்த்தம், சீதம்ம தீர்த்தம் உள்ளன.

விமானம் – ஆநந்த நிலய விமானம்.

ப்ரத்யக்ஷம் – தொண்டைமான், ஆறுமுகன்.

ஆதீவராஹர் ஸந்நிதி – ஸ்வாமி புஷ்கரிணியின் வடமேற்கு மூலையில் கோவில் கொண்டுள்ள இப்பெருமாளக்கு தளிகை ஸமர்ப்பித்த பிறகே, அது ஸ்ரீநிவாஸனுக்கும் ஸமர்ப்பிக்கப்படுகிறது. ஏழு பர்வதங்கள் வெங்கடாத்ரி, சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி என்ற பெயர்களுடன் இருக்கின்றன. இதன் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ நீவாஸன் எழுந்தருளுவதற்கு முன் ஆதிவராஹன் இத்தலத்தில் ஸேவை ஸாதித்ததனால் ஆதிவராஹரைஸேவித்த பிறகுதான் ஸ்ரீநிவாஸனை ஸேவிக்கவேண்டும்.

3) மூன்றாம் பிரிவு – திருச்சானூர் (அலர்மேல் மங்காபுரம்)

மூலவர் தாயார் – அலர்மேல்மங்கை (பத்மாவதி) , கிழக்கே திருமுக மண்டலம்.

தீர்த்தம் – பத்மஸரோவரம்.

விசேஷங்கள் – இக்கோவிலில் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் ஸெனந்தரராஜனுக்கும் ஸந்நிதிகள் உள்ளன. இந்தக்கோயிலை ஸ்ரீநிவாஸன் நியமனப்படி, தொண்டைமான் என்ற அரசர் கட்டி பகவான் மிக்க ஆனந்தத்துடன் எழுந்தருளியதால் ஆனந்த விமானம் என்று பெயர் உண்டானதாக ஸ்தலவரலாறு.

திருமலைமேல் கல்யாண உத்ஸவம், ப்ருஹ்மோத்ஸவம் முடியளிப்பது ஏராளமான பிரார்த்தனைகள் செலுத்தப்படகின்றன. காணிக்கைகளின் காரணமாக உலகத்திலேயே பணக்காரக் கோவில் இதுதான்.

திருப்பதி பாசுரங்கள்

மங்களாசாஸனம் –

பெரியாழ்வார் – 56, 104, 180, 184, 207, 247, 463

ஆண்டாள் – 504, 506, 535, 546, 577-586, 601, 604.

குலசேகராழ்வார் – 677-87.

திருமழிசையாழ்வார் – 799, 811, 832, 2415, 2420-29, 2471.

திருப்பாணாழ்வார் – 927, 929

திருமங்கையாழ்வார் – 1018-1057, 1275, 1312, 1371, 1388, 1404, 1518, 1572, 1640, 1660, 1811, 1836, 1849, 1946, 1978, 2001, 2038, 2059, 2060, 2067, 2673 (69) , 2674 (6, 124)

பொய்கையாழ்வார் – 2107, 2118-21, 2149, 2157, 2158, 2163, 2180

பூதத்தாழ்வார் – 2206, 2209, 2214, 2226, 2227, 2234, 2235, 2256.

பேயாழ்வார் – 2295, 2307, 2311, 2313, 2320, 2321, 2326, 2339, 2342-44, 2349-54, 2356, 2370

நம்மாழ்வார் – 2485, 2487, 2492, 2508, 2527, 2537, 2544, 2558, 2754, 2848, 2849, 2862, 2919-29, 2948, 2985, 3061, 3282-92, 3326-36, 3458, 3586, 3716, 3740

மொத்தம் – 202 பாசுரங்கள்.

சென்னை – பம்பாய் ரயில்பாதையிலுள்ள ரேணிகுண்டாவிலிருந்து சுமார் 7 மைல் தூரத்திலுள்ள ரயில்வேஸ்டேஷன் திருப்பதி.. திருப்பதி, திருமலை, திருச்சானூர் என்ற மூன்று முக்ய பிரிவுகளிலும், தேவஸ்தான சத்திரங்களும் ஹோட்டல்களும் மற்ற எல்லா வசதிகளும் உள்ளன.

சென்னையிலிருந்து 108 கி.மீ. ரயில், விமானம், சாலை வழியாகச் செல்லலாம் சாலை வழியாகச் சென்றால் கோவிலுக்கு மிக அருகில் போகலாம். இயற்கை வனப்புமிக்க 7 மலைகளையும்  காணலாம்..பத்தொன்பது கி.மீ தூரம். சுமார் நாற்பது நிமிடங்கள் பிடிக்கும்.

மலை அடிவாரத்திலிருந்து, மலை உச்சியிலுள்ள வெங்கடாசலபதி கோவிலுக்கு நடந்து போனால் 11 கிமீ. மூன்று மணி முதல் ஆறு மணி நேரம் பிடிக்கும். எல்லோரும் போகும்பாதை அலிபிரி பாதை எனப்படும்; 3500 படிகளுக்கு மேல் உள்ளது.

***

திருப்பதி அதிசயங்கள்

திருப்பதி சென்று திருமலையில் ஏறினால் அதிசய வெங்கடாசலபதி நமக்கு தரிசனம் தருவார். இந்த மலையப்ப சுவாமி, ஏழு மலை வாசன் பற்றி புஸ்தகம் புஸ்தகமாக எழுதலாம். அவ்வளவு அற்புதங்களை பகதர்கள் வாழ்வில் செய்துள்ளார். ஆயினும் எல்லா  விஷயங்களையும் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.

உலகின் பணக்கார வழிபாட்டுத்தலங்களில் திருப்பதி,  முன்னிலையில் நிற்கிறது தினமும் 4 முதல் 6 கோடி ரூபாய் வரை உண்டியலில் விழுகிறது!

பாலாஜி என்றும் வெங்கடேஸ்வரன் என்றும் அழைக்கப்படும் பெருமாள்  உலகில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறார்.

பெருமாளே ஒரு அதிசயம்தான். வைஷ்ணவ, சைவ சின்னங்களுடன் காட்சிதருகிறார். இதனால் அருணகிரிநாதர் 500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய திருப்புகழில் இவர் முருகப் பெருமானே என்று பாடிவிட்டார்.

மக்கள் நாட் கணக்கில் நின்று தரிசிக்கும் ஒரே கடவுள் இவர்தான்.

இந்தியாவில் அதிகமான கல்வெட்டுகள் உள்ள கோவிலும் இதுதான்.

பக்தர்களால் அதிகம் பாடப்பட்ட துதிக்கப்பட்ட கடவுளும் இவர்தான் அன்னமாசார்யா  மட்டுமே ஆயிரக்கணக்கில் கிருதிகளை செய்துவிட்டார்.

சுமார் 2000 ஆண்டு வரலாறு உடைய கோவில் இது.

தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமே வட வேங்கடத்தைக் குறிக்கிறது.

இன்றுவரை பாலாஜி, வெங்கடேஸ்வரன், வெங்கடாசலபதி,  சீனிவாசன், வெங்கட் என்ற பெயர்களை இந்துக்கள் குழந்தைகளுக்குச் சூட்டி வருகிறார்கள். 

தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பழைய கோவிலும் இதுதான்.

 இது 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்று. 

****

 திருப்பதி லட்டு 

இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கமுடியாது ; 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர். 

****

நான்  24 AUGUST 2019-ல் எழுதிய கட்டுரையிலிருந்து  முக்கியத் தகவல்கள்

திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)

திருப்பதி என்றவுடன் வெங்கடாசலபதியும் அவருடைய உண்டியலும், லட்டு-ம் தான் நம் கண்ணுக்கு முன்னே வரும். அங்கு மிகப்பெரிய வரலாற்றுப் புதையல் , தமிழ் வரலாற்றுப் புதையல்- இருப்பது பலருக்கும் தெரியாது. அதுவும் தமிழ் வரலாற்றுப் புதையல்.

2000 ஆண்டுக்கும் மேலாக வேங்கட மலை உச்சியில் நின்றுகொண்டு, போகும் வருவோரின் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு, உலக அரசியல்வாதிகளைத் தன் கோவிலுக்கு வரவழைக்கும், காலடியில் விழ வைக்கும் வேங்கட நாயகனுக்கு பல சிறப்புகள் உண்டு. அருணகிரிநாதர் அவரை முருகா என்று பாடுகிறார்; பேயாழ்வரோ அவரை சிவனே என்று பாடுகிறார்; குல சேகர ஆழ்வாரோ உனது மலையில் எனக்குப்

பறவையாகவோ, புதராகவோ, சுனையாகவோ இருக்க அருள் புரி; அதுவும் முடியாவிட்டால், Please, At least ப்ளீஸ், அட் லீஸ்ட் என்னை வெற்றிலை எச்சில் துப்பும் தட்டாகவாது செய்து விடு என்று இறைஞ்சுகிறார்.

சிலப்பதிகார இளங்கோவோ பாடிப்பரவுகிறார். புரந்தரதாசரோ 600 ஆண்டுக்கு முன்னரே அவரை கிண்டல் செய்கிறார்; நீ ஒரு சரியான செட்டிப்பயல்; காசிலே கறாரான கெட்டிப் பயல் என்று கன்னடத்தில் பாடி சந்தோஷப்படுகிறார்.

kAsu tappidare paTTi baTTi kAsu biDade kaNDu kaTTi

dAsanendare biDa gaTTi namma kEsakki timmappasetti

இதில் எல்லாம் மயங்கிப் போன நமக்கு அங்குள்ள தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. எனக்கும் தெரியாது . நேற்று லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று ஆறு தடித் தடிப் புஸ்தகங்களைத் தூக்கி வந்து படித்தபோது நிறைய அதிசயச் செய்திகள் கிடைத்தன. சில செய்திகளைக் காண்போம்.

பல்லவர் காலம் முதல் அண்மைக்காலம் வரை கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாறு கிடைக்கிறது இவ்வளவு நீண்ட வரலாறு ஒரு கோவிலில் உலகில் வேறு எங்கும் கிடைக்காது!

திருப்பதி கோவிலிலும் புனித மலை வளாகத்திலும் 1150 கல்வெட்டுகள் உள்ளன. இது 1930ம் ஆண்டு கணக்கு! அவைகள் பெரும்பாலும் தமிழ் மொழியில்தான் இருக்கின்றன. ஏன் தெரியுமா?

சிவன் உடுக்கை அடித்தபோது ஒரு புறம் தமிழ் ஒலியும் மறுபுறம் ஸம்ஸ்க்ருதமும் வந்ததாம். இதற்குச் சான்று தமிழ் இலக்கியத்தில் உள்ளது பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடல் புராணம் அகஸ்தியரும், பாணினியும் எப்படி இரண்டு மொழிகளை சிவ பெருமானிடமிருந்து பெற்றனர் என்று பாடி இருக்கிறார்.

ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளோடு கவிஞர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய 3000 தாமிர சாசனங்கள் இருக்கின்றன. இதில் அன்னமாச்சார்யா பாடிய கீர்த்தனைகளை அறியாத சங்கீத வித்துவான் கிடையாது.

ஆக உலகிலேயே அதிக கல்வெட்டுகள் நிறைந்த ஒரு வழிபாட்டுத் தலம், உலகிலேயே கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் ஒரு இடம், உலகிலேயே அதிகமான தமிழ்க் கல்வெட்டுகள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான தாமிர சாசனங்கள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான பக்தர்கள் வரும் இடம், உலகிலேயே அதிகமான வசூல் செய்யும் சாமி என்று எல்லா வகையிலும் வேங்கட +அசல+  பதி சாதனைப் புத்தகத்தில் நுழைந்து விடுகிறார்.

1150 கல்வெட்டுகளையும் படியெடுத்து வெளியிட்ட பெருமை சாது சுப்ரமண்ய சாஸ்திரியைச் சாரும். அவர், சிறப்புக் கல்வெட்டு பயிற்சி பெற்ற திருப்பதி கோவில் தொல்பொருட் துறை அறிஞர்; அவரை முன்னின்று நடத்திய பெருமை தேவஸ்தான விசாரண கர்த்தா சுவாமி  மஹந்த் பிரயாகதாஸ்ஜியைச் சாரும். 1930ம் ஆண்டிலேயே இவைகளை வெளியிட்ட பெருமை கோவிலைச் சாரும். இவைகளை சேர்த்துவைத்து இலவசமாகப் படிக்க அனுமதிக்கும் பெருமை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியைச் சாரும்.

1150 கல்வெட்டு பற்றியும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். இவைகளை ஆராய்ந்து பத்து டாக்டர் பட்டம் பெறலாம் ; அவ்வளவு விஷயம்.

பல்லவன் தந்திவர்மன் அவனது 51ஆவது ஆட்சியாண்டில் ஒரு கல்வெட்டு வழங்கியுள்ளான்.

51 ஆண்டுக்காலம் ஆண்ட மன்னன் தந்திவர்மன்!

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் முதலியோர் கல்வெட்டுகளும் உள.

பழங்கால பல்லவ, பாண்டிய, சோழ , விஜய நகர மன்னர்களின் 236 கல்வெட்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் முதல் தொகுதியில் உளது.

ஏனைய 5 தொகுதிகளில் உள்ள கல்வெட்டுகள் :-

சாளுவ நரசிம்மன் -169 கல்வெட்டுகள்,

கிருஷ்ணதேவராயர்- 229 கல்வெட்டுகள்,

அச்யுதராயர்- 251 கல்வெட்டுகள்

சதாசிவராயர்-147 கல்வெட்டுகள்

ஆரவீடு வம்சாவளி- 135 கல்வெட்டுகள்

இவர்களில் வண்னமிகு மன்னன் – மாமன்னன், சக்ரவர்த்தி– கிருஷ்ண தேவராயர் ஆவார்; 35 முறை வெங்கடாசலாதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தவர். ஆமுக்த மால்யதா எழுதி ஆண்டாள் புகழ்

 பாடியவர் அவருக்கு நான்கு மனைவிகள். இது போன்ற ஏராளமான வரலாற்றுத் தகவல்கள், கலெட்டுகளுக்குப் பின்னணியாக தரப்பட்டுள்ளன.

*****

திருப்பதி மலைமேல் முருகன் !

(எனது பழைய அக்கட்டுரையில் ஒரு பகுதி)

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை– 9

அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை  கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.

1.            திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் புதிர்.

திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

****

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

திருப்பதி கடவுள் பற்றி நிறைய புதிர்கள் உள்ளன. வேறு எந்த வைணவ தலங்களிலும் இல்லாத உருவ அமைப்பும், பல நடைமுறைகளும் பூஜைகளும் திருவேங்கடநாதருக்கு இருக்கின்றன. ஆனால் சிலப்பதிகார காலம் முதல் ஆழ்வார்கள் காலம் வரை அங்குள்ள விஷ்ணுவையும் பாடி இருக்கிறார்கள் அப்படியானால் முருகன் கோவில் எங்கே? இதுவரை ஏழு மலைகளில் முருகன் கோவில் கண்டுபிடிக்கப்படவில்லை.

வேங்கடேசன் என்று சிவனைப் போல ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைக்கிறோம். பொதுவாக ‘ஈசன், ஈஸ்வரன்’ என்பது சிவனையே குறிக்கும். எதற்காக ஈசன் பெயரைச் சேர்க்கிறார்கள்? ‘வேங்கட சுப்ரமணி’யனென்றும் பெயர் வைக்கிறோம். வேங்கடத்தில் (திருப்பதி-திருமலை) சுப்பிரமணியன் எங்கே இருக்கிறார்? குன்று தோராடும் குமரன் தமிழக வட எல்லையான வேங்கடத்தில் கட்டாயம் கோவில் கொண்டிருப்பாரே? அது எங்கே? சிலர் விஷ்ணு கோவில் (பாலாஜி),  முதலில் முருகன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.

இருதரப்பு வாதங்களையும் படித்த பின்னர் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவேளை இரண்டு கோவில்களும் இருந்து ஒன்று மறைந்திருக்கலாம். தமிழ் நாட்டில் கூட சிதம்பரம் போன்ற இடங்களில் சிவனும் விஷ்ணுவும் அடுத்தடுத்து இருப்பதைப் பார்க்கிறோம். “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பொன்மொழியை அறிந்தவர்களுக்கு இது வியப்பு தராது. காலப் போக்கில் ஒன்று மறைந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் பலகோவில்களில் பலராமன் வழிபாடும் இருந்தது. ஆனால் இன்று அறவே இல்லை. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பலராமன் வழிபாடு உள்ளது. பழமுதிர்ச்சோலை காணாமற்போகவே நமது காலத்தில் நாமாக புதிய பழமுதிர்ச்சோலையை உருவாக்கினோம்.

நமது ரெகுலர் வாசகரும் பேரரறிஞருமான காலஞ்சென்ற நஞ்சப்பா அவர்கள் தரும் தகவல்

R.Nanjappa

  /  August 24, 2019

Tirupathi- the abode of Balaji,the most famous and wealthy of our Hindu temples- is it a wonder or mystery?

If we follow the ancient Tamil tradition of the five-fold division of the land with a Deity for each, then the hilly region of Tirumala-Tirupati qualifies as Kurinji land, of which the presiding Deity is Subrahmanya, the eternal Kumara ie Balaji! So claims are made that this was originally a Subrahmanya temple.

On the other hand, ancient Tamil literature gives the extant of the land of the Tamil speaking people as “lying between Venkatam in the North and Kumari in the South”. The interesting inference here is that as Kumari is the famous seat of Devi, which is the southern border, the northern border could as well have been a seat of Devi!. In fact we see the image of lion on the four corners of the Gopuram in Tirupati, and lion is the va-hana of Devi!

When Swami Brahmananda [ Rakhal Maharaj] the spiritual son and direct disciple of Sri Ramakrishna and the first President of the RK Math and Mission visited Tirupati around 1911/12, he had a mystic experience there. He felt the presence of Devi there. He asked the priests there about the Deity. And the priests confirmed that it had been a De-vi temple. This is clearly stated in the book ‘Swami Brahmananda As We Knew Him’, published by RK Math, Chennai.

So there is enough mystery surrounding this temple. Wish someone will unravel it with-out bigotry and prejudice.

****

திருப்பதி கோவில் அறிவிப்பு

திருமலையில் பிறந்தார் அனுமன்!

’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் அறிவித்தது.

ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் வெளியிடப்பட்டது.

இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

QUIZ திருப்பதி பத்து QUIZ (Post No.12,291)

Post No. 12,291

Date uploaded in London –   18 July , 2023                 

1.திருப்பதியில் இருப்பது முருகனே என்று பாடியவர் யார் ?

****

2.திருப்பதியில் எத்தனை கல்வெட்டுகள்  இருக்கின்றன ?

****

3.திருமலையில் உள்ள புதராகவோ பறவையாகவோ , சுனையாகவோ பிறந்தாலும் போதும் என்று பாடியவர் யார்?

****

4.திருமலையில் உள்ள பெருமாள் மீது அதிக துதிகளை இயற்றியவர் யார்?

 ****

5.வெங்கடேச சுப்ரபாதத்தை  இயற்றியவர் யார் ? ஸுப்ரபாதத்தின் முதல் வரி எங்கிருந்து எடுக்கப்பட்டது ?

****

6.திருப்பதி மலையை தமிழ் பாட்டுக்கள் எப்படிக் குறிப்பிடுகின்றன?

****

7.திருப்பதியில் உள்ள அருவியின் பெயர் என்ன?

****

8.ஏழு மலையான் என்று ஏன் பெருமாளை அழைக்கின்றனர்?

****

9.பெருமாள் எப்படி  உலகிலேயே பணக்கார கடவுள் ஆனார்?

****

10.வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் பக்தர்கள் உடனே வழிபடும்  திருமலைக்குக் கீழேயுள்ள கோவில் எது ?

****

விடைகள்

1.முருகனே என்று பாடியவர் அருணகிரி நாதர் (திருப்புகழில் ); சிவனே என்று பாடியவர் பேயாழ்வார்.

திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்

****

2.திருமலை-திருமலை கோவிலிலும்  அதன் கீழ் வரும் பகுதியிலும் 1150-க்கு மேலான கல்வெட்டுகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள  வழி பாட்டுத் தலம் இதுதான். பல்லவர்  காலம் முதல் 800 ஆண்டு வரலாற்றைக்  கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .

****

3. குலசேகர ஆழ்வார்

****

4.திருப்பதி பெருமாள் குறித்து அதிகமான பாடல்களை இயற்றியவர் அன்னமாச்சார்யா

****

5.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால்  ஸம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டது.

இதன் முதல் வரி கெளசல்யா ஸுப்ரஜா சந்த்யா பிரவர்த்ததே — என்பது வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரி .

कौसल्यासुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते ।

उत्तिष्ठ नरशार्दूल कर्त्तव्यं दैवमाह्निकम् ॥- Valmiki Ramayana

kausalyāsuprajā rāma pūrvā sandhyā pravartate ।

uttiṣṭha naraśārdūla karttavyaṃ daivamāhnikam ॥

Valmiki Ramayna Translation, 1.23.2

O Rāma, the noble son of Kausalyā! The Sandhyā of the East commences. O! best of men (Purushottama)! Wake up, the daily duties have to be performed.

The Veṅkaṭeśasuprabhātam begins with this very verse.

****

6.வடவேங்கடம் முதல் தென்குமரி

தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் சொல்கிறார்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து—(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)

****

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)

****

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்…..(அகநானூறு, 211:7-மாமூ லனார் )

****

7.ஆகாய கங்கா.

திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

****

8.திருமலை வெங்கடாசலபதி, ஏழு குன்றுகள் இடையே காட்சி தருகிறார். அவையாவன:

Vrushabhadri – விருஷபாத்ரி

Anjanadri – அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த இடம்)

Neeladri – நீலாத்ரி

Garudadri or Garudachalam – கருடாத்ரி

Seshadri or Seshachalam – சேஷாத்ரி

Naraynadri–நாரதாத்ரி அல்லது நாராயணாத்ரி

Venkatadri – வேங்கடாத்ரி

****

9.திருப்பதி பாலாஜி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், கடனை  அடைப்பதற்காக பக்தர்களிடம் காணிக்கை வாங்குகிறார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தனை பாடிய புரந்தரதாசரோ நீ சரியான செட்டிப்பயல் என்று பெருமாளை கிண்டல் செய்கிறார்.

****

10.திருப்பதியிலி ருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.

****

தொல்காப்பியர் காலத்தில் திருப்பதி

தொல்காப்பியத்துக்கு பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார் பாடுகிறார்:-

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு……………………………

பொருள்:-

வடக்கே வேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ் பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரு வழக்குகளில் உள்ள எழுத்து, சொற்கள், பொருள்களை நன்கு ஆராய்ந்து (தொல்காப்பியர் நூல் இயற்றினார்).

புராணங்களில் வரும் 56 தேசங்களில் திராவிட தேசத்துக்கும் தெற்கில்தான் பாண்டிய சோழ தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக திராவிட என்ற சொல்லையும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வில்லை.

கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்;

வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி

நான் மறையும் மற்றை நூலும்

இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்

நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு

புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த

மெய்யேபோல் பூத்துநின்ற

அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய

வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ

பொருள்:-

வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும்,  ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்.

சீதையைத் தேடச் செல்லும் வானரப் படைகளுக்கு கட்டளையிட்டபோது இச்செய்யுள் கூற்று வருகிறது.

****

பாசுரங்கள்

3101.  

சொன்னால் விரோதம் இது*  ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,*

என் நாவில் இன்கவி*  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*

தென்னா தெனா என்று*  வண்டு முரல் திருவேங்கடத்து,*

என் ஆனை என் அப்பன்*  எம் பெருமான் உளனாகவே.

3177.  

மாரி மாறாத தண் அம் மலை*  வேங்கடத்து அண்ணலை,*

வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்*  குருகூர் நகர்க்,*

காரி மாறன் சடகோபன்*  சொல் ஆயிரத்து இப் பத்தால்,*

வேரி மாறாத பூமேல் இருப்பாள்*  வினை தீர்க்குமே.

3398.  

மாலுக்கு*  வையம் அளந்த மணாளற்கு,*

நீலக் கருநிற*  மேக நியாயற்கு,*

கோலச் செந்தாமரைக்*  கண்ணற்கு,*

என் கொங்குஅலர்ஏலக் குழலி*  இழந்தது சங்கே.

3399.  

சங்கு வில் வாள் தண்டு*  சக்கரக் கையற்கு,*

செங்கனிவாய்ச்*  செய்ய தாமரைக் கண்ணற்கு,*

கொங்கு அலர் தண் அம் துழாய்*  முடியானுக்கு,*  என்

மங்கை இழந்தது*  மாமை நிறமே.

56.  

சுற்றும் ஒளிவட்டம்*  சூழ்ந்து சோதி பரந்து எங்கும்*

எத்தனை செய்யிலும்*  என்மகன் முகம் நேரொவ்வாய்*

வித்தகன் வேங்கட வாணன்*  உன்னை விளிக்கின்ற*

கைத்தலம் நோவாமே*  அம்புலீ! கடிது ஓடி வா     

104.  

என் இது மாயம்?*  என் அப்பன் அறிந்திலன்*

முன்னைய வண்ணமே*  கொண்டு அளவாய் என்ன*

மன்னு நமுசியை*  வானிற் சுழற்றிய*

மின்னு முடியனே!  அச்சோ அச்சோ*

 வேங்கடவாணனே! அச்சோ அச்சோ 

180.  

தென் இலங்கை மன்னன்*  சிரம் தோள் துணிசெய்து*

மின் இலங்கும் பூண்*  விபீடண நம்பிக்கு*

என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற*

மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா!

வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.

504.  

தை ஒரு திங்களும் தரை விளக்கி*  தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்*

ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து*  அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!*

உய்யவும் ஆம்கொலோ என்று சொல்லி*  உன்னையும் உம்பியையும் தொழுதேன்*

வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை*  வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே. (2)   

020.  

நின்ற மா மருது இற்று வீழ*  நடந்த நின்மலன் நேமியான்*

என்றும் வானவர் கைதொழும்*  இணைத் தாமரை அடி எம் பிரான்*

கன்றி மாரி பொழிந்திட*  கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்*

சென்று குன்றம் எடுத்தவன்*  திரு வேங்கடம் அடை நெஞ்சமே!  

1021.  

பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு*  வென்ற பரஞ்சுடர்*

கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*

ஏத்துவார் தம் மனத்து உள்ளான்*  இட வெந்தை மேவிய எம் பிரான்*

தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!  

1023.  

எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி*  பொன் வயிற்றில் பெய்து*

பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்*  பால் மதிக்கு இடர் தீர்த்தவன்*

ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்*  ஒள் எயிற்றொடு*

திண் திறல் அரியாயவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!

–SUBHAM–

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-48, திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவேங்கடம் ,திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம், திருச்சானூர் திருப்பதி அதிசயங்கள் .

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்(Post.15,843)

Written by London Swaminathan

Post No. 15,843

Date uploaded in London –7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நான் கொடுத்த தலைப்பு பொய்யான தலைப்பு.

ஏனெனில் சங்க இலக்கியத்திலோ  பிறகால தமிழ் இலக்கியத்திலோ பாரதி பாடல்களிலோ தேவாரம் திருவாசகத்திலோ திராவிட என்ற  சொல் கிடையாது . ஆயினும் சங்க இலக்கியம் முதல் பாரதி பாடல் வரை ஆரிய ARYA என்ற சொல் உண்டு. தேவார,  திருவாசககங்களில் ஆரியன் என்றால் சிவ பெருமான்!  சங்க இலக்கியத்திலும் ஆரிய என்றல் வடக்கில் இமய மலையில் வாழும் முனிவர்கள் அல்லது பண்பாடுமிக்க மனிதர்கள்; ஆங்கிலத்தில் CULTURED, EDUCATED என்று சொல்வதற்கு சமம் ; இதனால் அந்த திசையிலிருந்து வந்த கூத்தாடிக்கும், பயில்வான்களுக்கும் ஆரிய மல்லன், ஆரிய கூத்தாடி என்று சொல்லத் துவங்கினர்; ஆனால்  திராவிட என்ற சொல்லை எங்குமே தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ காண முடியாது; இது வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதை ; இப்படிச் சொன்னால் தென்னாட்டில் கிறிஸ்தவ மதத்தை பரப்பலாம் என்று கனக்குப் போட்டனர்; அது ஓரளவுக்குப் பலித்தது. மீனவர்களையும் பனை ஏறிகளையும் மலையாள ஈழவாக்களையும் மாற்றினார்கள்

பிற்காலத்தில் தென் பகுதியையும் அங்கு பேசப்பட்ட மொழிகளையும் குமாரில பட்டர் (EIGTH CENTURY CE ) போன்றோர் திராவிட பாஷை என்று அழைத்தனர்; அதற்கு முன்னர் சமணர்கள் ஸ்தாபித்த சங்கத்தை திராவிட சங்கம் (FIFTH EIGTH CENTURY CE) என்றனர் ; இரண்டும் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள்; அதற்கும் முன்னதாக ஒரிஸ்ஸா என்னும் கலிங்கத்தை ஆண்ட காரவேலன் த்ரமிள என்ற சொல்லை பயன்படுத்தினான்; சிலர் தமிழ் – த்ரமிள- திராவிட என்று விளக்கினர் இன்னும் சிலர் இல்லை திராவிட- த்ரமிள- என்பது தமிழ் ஆயிற்று என்று REVERSE GEAR  ரிவர்ஸ் கியரில் பயணம் செய்தனர் . 56 தேச வரைபடங்களிலும் விளக்கங்களிலும் திராவிடம் என்பதைத் தமிழ் நாட்டுக்கு மேலே ஆந்திரப் பகுதியைக் காட்டியுள்ளார்கள்;  ஆக இது தமிழ் நாடோ சேர, சோழ, பாண்டிய நாடோ இல்லை!

****

கணவன்மாரும் மனைவியரும்

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்!

ரிக்வேத ரிஷி தீர்க்கதமஸ் – தாசர் குலப் பெண் மமதா ;

கவச ஐலுசர் – தாசர் குலப் பெண்;

உபநிஷத பெண்மணி ஜாபாலா- பணிப்பெண் ; மகன் சத்யகாம ஜாபாலன்  ;

பிராமண ராவணன் – அசுரர் மகள் மண்டோதரி ;

பீமன் – அரக்கி ஹிடிம்பா; பீமன் மற்றும் அரக்கி இடும்பி ஆகியோரின் மகன் கடோத்கஜன்.

அர்ஜுனன் – நாக கன்னிகை உலூபி , மணலூர் சித்ராங்கதா ; அல்லி ராணி ; அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலூபிக்கும் பிறந்தவன் அரவான்.

முருகபப்பெருமான் – வேடுவச்சி வள்ளி ;

யயாதி – பிராமண தேவயானி

உதயணன் – நடன மாது வாசவத்தா

சந்தனு – மீனவப் பெண் மத்ஸ்யகந்தி; அவள் மகள் வேத வியாசர்

கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன் – அசுரர் இளவரசி பிரபாவதி

ராமனின் மகன் குசன் – நாக இளவரசி- குமுதவதி; அவர்கள் மகன் அதிதி

ராமன் மகன் லவன் – நாக இளவரசி கஞ்சசனா

நரகாசுரன் -மனைவி மாயா ; விதர்ப்ப நாட்டு இளவரசி; மகன் பகதத்தன்

முறைப்பெண்ணை மணப்பது தமிழ்நாடு மட்டுமின்றி ஒரிஸ்ஸா, குஜராத், மகாராஷ்டிரத்தில் உண்டு ; அவர்களுக்கு முன்னால் அர்ஜுனன்  முறைப்பெண் சுபத்ராவையும் , கிருஷ்ணன் மகன் பிரத்யும்னன் முறைப்பெண், ருக்மவதியையும் மணந்தனர்.

***

வெள்ளைக்காரன் வந்து ஆரிய திராவிட என்று பிரிப்பதற்கு முன்னர் நச்சினார்க்கினியர் முதலியோர் 18 குடிகள் அல்லது 18 பிரிவுகள் பற்றிப் பேசினார்கள். அதிலும் ஆரியர் திராவிடர் கிடையாது இவைகளுக்கு எல்லாம் இனவாதப் பொருளை கற்பித்தோர் பட்டியலில்  முதலிடம் பிடிப்பவர்கள் மாக்ஸ் முல்லர் ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர் , ஜான் மக்கே ஆவர். இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது ; நாலு பேரைக் குறிப்பிட்டதற்கு காரணம் இவர்கள் எல்லோரும் சிந்து வெளி எழுத்துக்களை படிக்க முடியாமல் திசை திருப்பியதோடு வேதத்தையும் நேற்று வந்தது, அதாவது பைபிளின் பழைய ஏற்பாடு, யூத மதம் ஆகியவற்றுக்குப் பிற்பாடு வந்தது என்று பொய்யுரை பரப்பினர்நான் சொல்வதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) மிக அழகாக, பாலீஷாக, திட்டாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லி இருக்கிறார்  (காண்க தெய்வத்தின் குரல்).

இந்தக் கொள்ளைக்காரர்கள் ஸாரி, ஸாரி SORRY,  SORRY  வெள்ளைக்காரர்கள் ஆங்கிலத்தில் பல விஷயங்களை எழுதினாலும் அது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்க முயன்றனர்.  

ஆயினும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற எஸ் ஆர் கே ( எங்கள் வீட்டுக்கு நாலு வீடுக்கு தள்ளி மதுரையில் வசித்த பேராசிரியர்; சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரையாளர் எஸ் ராம கிருஷ்ணன் ) போன்றோர் சில விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். (காண்க – இந்திய பண்பாடும் தமிழரும் , எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தகநிலையம், மதுரை , 1971).அவைகளைக் காண்போம் .

எந்தெந்த ஜாதிக்காரரை மணந்து பெற்ற பிள்ளைகளுக்கு என்ன பெயர் என்பதை மனு ஸ்ம்ருதியும் கூறுவதால் அப்படி நிகழ்ந்தது தெரிகிறது ஆனால் உதாரணங்களைக் காண்போம். 

மஹாபாரதம் சொல்லும் கதையில் சந்தனு மகாராஜன் மீனவப் பெண்ணான மத்ஸ்ய கந்தியை மணந்தது வருகிறது; மத்திய கந்தி என்றால் மீன் நாற்றம் என்று பொருள் ;அவர்களுக்குப் பிறந்தவர்தான் வியாசர்- வேத வியாசர் இல்லாவிடில் மஹாபாரதமும் கிடையாது, புராணங்களும் கிடையாது, நான்கு வேதங்களும் கிடையாது; ஆகையால் இன்றுவரை குருபூர்ணிமா தினத்தன்று அவரைக் குருவாக எல்லா இந்துக்களும் வணங்குகின்றனர் அவர் நிறமோ கருப்பு ; காக்காக் கருப்பு! UTTER BLACK!

இங்கு இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்; திராவிடர்கள் கோழி முட்டைக் கண்களும், போண்டா மூக்கும், சுருட்டை முடியும், குட்டையான தோற்றமும் உடையவர்கள் என்று வெள்ளைக்காரர்கள் எழுதிவைத்தார்கள். ஆரியர்கள் இதற்கு நேர் மாறாக கூரிய மூக்கும், நல்ல உயரமும், வெள்ளைத் தோலும்  தாமரைக் கண்களும் உடையவர்கள் என்றும் வருணித்தார்கள் !

ஆனால் வியாசர் கருப்பு! திரவுபதி கருப்பு! கிருஷ்ணன் கருப்பு! ரிக் வேத அகஸ்தியர் குட்டை !

இதிலும் வெள்ளைக்காரன் புளுகு அம்பலமாகிறது (ஹரப்பாவில் குட்டையான திராவிடர் எலும்புக்கூடு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை !!!) ராமன் வேடர் குலத் தலைவன் குகனைத் தழுவிக்கொண்டு யூ ஆர் மை பிரதர் YOU ARE MY BROTHER TOO   என்று சொன்னதெல்லாம் நமக்குத் தெரியும்.

திருவிளையாடல் புராணக் கதைப்படி மதுரை மீனாட்சி கூட வடக்கத்திப் பெண்தான் ! சூரசேன மஹாராஜாவின்  பெண்ணான  காஞ்சன மாலாவுக்குப் பிறந்தவள் மீனாட்சி . 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மெகஸ்த்னீஸ் கூட அவளைக் குறிப்பிட்டான் .ஆனால் அவளை திருஞான சம்பந்தர் அழகான தமிழ்ப்பெயர் சொல்லி — அங்கயற்கண்ணி என்று சொல்லித் –தேவாரம் பாடினார்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் !

அசுரர்கள் என்றால் திராவிடர்கள், தேவர்கள் என்றால் ஆரியர்கள் என்றும் வெள்ளைக்கார கிறிஸ்தவன் கதை கட்டி விட்டான் ; விருத்திராசுரன் என்ற பிராமணனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதை ரிக் வேதம் முதல்  நம்ம ஊர் தல புராணங்கள் வரை ஆயிரம் முறையாவது சொல்லி இருக்கும்;

ராவணன் என்ற 50% பிராமணனைக் கொன்றதற்காக ராம பிரானையும் பிரமஹத்தி பிடித்ததை ராமேஸ்வரம் முதலிய தல புராணங்களில் காண்கிறோம் ராவணனும் ஒரு அசுரன்!

பெண்கள் வசப்பட்ட க்ஷத்ரிய விசுவாமித்திர பின்னர் பிராமணனாக மாறியதும் நந்தனார் கதையும் எவரும் பிராமணன் ஆக முடியும் என்றும் காட்டுகிறது

நமுசி என்ற அரக்கனை இந்திரன் கொன்றான் என்ற ரிக் வேதக் கதையிலும் நமுசியை பிராமணன் என்றே காட்டுகிறது; நமுசியின் சகோதரன்தான் அசுரத் தச்சனான மயன்.

நேபாளம் பூட்டானில் இப்போதும் நமுசி என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்.

ரிக்வேதத்தில் வேறு ஒரு கிருஷ்ணன் உள்ளான்; அவனுக்கும் இந்திரனுக்கும் மோதல்! த்வஷ்டா மகனும் தேவர்களின் புரோகிதனுமான பிராமணன் திரிசரஸின் மூன்றுதலைகளையும் இந்திரன் துண்டித்தான் என்றும் ரிக் வேதம் 10-8 கூறுகிறது ; திரிசிரசும் ஒரு அசுரன் என்கிறது ! ஆகவே அசுரர் என்பது குணத்தால் வந்த அடைமொழிதான்பிறப்பால் அல்ல. வெள்ளைக்காரன் கணக்குப்படி இவை எல்லாம் இன மோதல்கள் .

இப்படி ஏனைய மத நூ ல்களில் ஆயிரம் விஷயம் இருந்தும் அவைகளுக்கு வெள்ளைக்காரன் இன வேற்றுமை கற்பிக்கவில்லை;

ஆக பிராமணர்களையும் அசுரர்கள் அல்லது  ராக்ஷஸர்கள் என்று வருணித்ததை ரிக் வேதத்திலும் ராமாயணத்திலும் காண்கிறோம் ; அவ்வளவு அசுரர்களும் ராக்ஷஸர்களும் பிரம்மா அல்லது சிவ பெருமானை நோக்கித் தவம் செய்து ஏராளமான வரங்களை பெற்றதையும் புராண, இதிகாசங்களில் படிக்கிறோம்;  இவர்கள் திராவிடர்கள் என்றால் எப்படி ஆரிய தெய்வங்களை வழிபட்டு வரங்களை பெற்றார்கள் ? இவைகளை எல்லாம்  மறைத்ததால்தான் வெள்ளைக்கார்களை  அயோக்கியர்கள் என்று குறிப்பிடுகிறேன் .

இந்திரன் என்பது பட்டம்; ஒரே ஆள் அல்ல; ராஜா, தலைவன் என்று பொருள்;

ரிக்வேதத்தில் கீழ் ஜாதி முனிவர் தீர்க்கதமஸ் என்ற ரிஷி, தாசர் குல மமதாவின் புதல்வர் . வெள்ளைக்காரன் கணக்குப்படி மமதா திராவிடப் பெண் .

கவச ஐலுசர் என்ற ரிக்வேத ரிஷியும் கிழ்ஜாதி தாசர் மகன்தான் .

சுதாஸ் என்ற ரிக்வேத கால மன்னனும் தாசன் என்பதை பெயரே காட்டிவிடுகிறது

உபநிஷத்தில் வரும் ஜாபாலா வேலைக்காரப்பெண் ; அவளுக்குப் பிறந்தவன் ரிஷியிடம் போய் “என் அப்பா யார் என்று தெரியாது என்று அம்மா சொல்லிவிட்டாள் என்றான்.  அப்படியானால் நீ பிராமணன்தான் ஏனெனில் பிராமணன் உண்மையே பேசுவான் உன் பெயர் இன்றுமுதல் உண்மை விளம்பி — அதாவது சத்யா காமன்- வா, வா! வேத வகுப்பில் உட்கார்! என்கிறார் வண்டிக்காரன் ரைவக் , ஜானுசுருதி என்ற மன்னனுக்கு ஆத்ம ஞானம் போதித்ததை சாந்தோக்கிய உபநிடதம் சொல்கிறது .

ஒரே வேதம் பயிலும் வெள்ளை நிறத்தவன் , இரு வேதம் பயிலும் மாநிறத்தவன் மூன்று வேதம் பயிலும் கருப்பு நிறத்தவன் பற்றி உபநிஷத்துக்களிலேயே பழமையான பிருஹத் ஆரண்யக உபநிஷத் குறிப்பிடுகிறது. வெள்ளைக்காரன் சொல்லுவதை ஒப்புக்கொண்டால் கருப்பு நிற திராவிடன்மட்டும்தான்  3 வேதங்களையும் படித்தான் என்று எழுதவேண்டி வரும்!

கசாப்புக் கடை வைத்திருந்த தர்மவியாதனிடம் கெளசிக முனிவர் அறிவுபெறச் சென்ற செய்தி மஹாபாரதத்தில் உள்ளது.   

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும் ; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினைக்கு வேதங்களிலும் சங்க கால இலக்கியங்களிலும் ஆதாரம் இல்லை ; ஆரிய, திராவிடச் சொற்களுக்கு இனவாத அர்த்தம் நம்முடைய நூல்களில் இல்லை ; குணத்தால் ஒருவன் தேவன் ஆகலாம் அல்லது அசுரன் ஆகலாம் ஆரியன்  என்றால் படித்தவன், நாகரீகம் உடையவன்; திராவிடன் என்றால் தென் இந்தியாவில் வசிப்பவன் என்பதே உண்மைப்பொருள்.

–Subham—

Tags- ஆரியன், திராவிடன், கலப்பு மணம், திருமணம் 

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-42; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15818)

Written by London Swaminathan

Post No. 15,818

Date uploaded in London –2 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PART 42

திருவல்லா

திவ்ய தேசம்    திருவல்லவாழ் – ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்

மூலவர்   கோலப்பிரான், திருவாழ் மார்பன், ஸ்ரீ வல்லபன்

தாயார்    செல்வத்திருக்கொழுந்து நாச்சியார், வாத்சல்ய தேவி

திருக்கோலம்   நின்ற திருக்கோலம்

திருமுகமண்டலம்   கிழக்கே திருமுக மண்டலம்

பாசுரங்கள்     

மங்களாசாசனம்     நம்மாழ்வார் 11 பாடல்கள் 

திருமங்கை ஆழ்வார் 11 பாடல்கள்

தீர்த்தம்   கண்டாகர்ண தீர்த்தம் பாம்பா நதி

விமானம் சதுரங்க கோல விமானம்

இக்கோயிலில் தினமும் கருடனுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடும், பிரம்மாண்டமான கொடிமரமும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

கருடபுராணம், மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

இந்த திவ்ய தேசம் ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்று மிகவும் பிரபலம். இங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான் பிரம்மச்சார்ய விரதம் அனுஷ்டிக்கிறார். மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தின் அன்றும், சித்திரை மாதத்து விஷு (வருடப்பிறப்பு) அன்றும் மட்டுமே, எம்பெருமானுக்கு திருமார்பு தரிசனம் என்பதால், இத்தலத்தில் அந்த இரண்டு தினங்கள் மட்டும் பெண்கள் சன்னதி சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற எல்லா நாட்களிலும், பெண்கள் சன்னதிக்கு வெளியில் இருந்து சேவிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

மாசி மாதம், பூச நட்சத்திரத்தில் ஆறாட்டு என்ற விழா நடைபெறுகிறது. இது ஒரு பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகும். மார்கழி திருவாதிரை அன்று சிவன் எம்பெருமானின் கோலத்தை காண வந்ததாக ஐதீகம், அதனால் இந்த திருத்தலத்தில் விபூதி பிரசாதமும் அளிப்பார்கள். கண்டாகர்ணனின் சிவபக்தியைக் குறிக்கும் வகையில், சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் விபூதி வழங்கப்படுகிறது.

மே மாதத்தில், ஒரு நாள் திருவிழா நடத்தப்படுகிறது, அருகிலுள்ள கோயில்களில் இருந்து 3 பகவதிகள் (காவில் கோயில் தேவதை, படப்பட் கோயில் மற்றும் ஆலம்துரத் கோவில்கள்) இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். கோவில் வடக்கு வாசலில் இருந்து போத்திகளால் சிறப்புப் பல்லக்குகளில் இந்த தெய்வங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நாளில் மட்டுமே, இந்த கதவு திறக்கப்படுகிறது.

மற்ற கேரளக் கோயில்களைப் போலவே, இந்த திருக்கோவிலும் கர்ப்பகிரகம் வட்ட வடிவில் உள்ளது. கிழக்குப் பக்கம், வல்லபப் பெருமானின் சன்னதியும், இக்கோயிலுக்குப் பின்னால் சுதர்சன ஆழ்வாருக்கு ஒரு சிறிய சன்னதியும் உள்ளது.

இந்த திருத்தலத்தில் உள்ள பெரிய குளம் தானாகவே உண்டானது என்றும் இன்றும் கூட பூமிக்கு அடியில் இருந்து ஊற்றுக்கள் மூலம் இந்தக் குளத்திற்கு தண்ணீர் வருவதாகச் சொல்லப் படுகிறது. மலையாளத்து பாணியில் இந்த திருத்தலத்திலும் பக்தர்களுக்கு பூக்களும் சந்தனமும், பிரசாதமாக ஒரு இலையில் அளிக்கப்படுகிறது.

இங்கு உள்ள இன்னொரு ஆச்சரியமான விஷயம், 50 அடி உயரம் 2 அடி சுற்றளவும் உள்ள ஓங்கி உயர்ந்து நிற்கும் கருங்கல். இந்த கல் பூமிக்கடியில் இதே 50 அடி ஆழத்தில் சென்று இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. மேலும் இந்த சுற்றுப்புறத்தில் பாறைகளே இல்லை என்பது இன்னொரு தகவல். இந்த கல் தூணின் மீது பஞ்சலோகத்தால் உருவான ஒரு கருடாழ்வாரை வைத்து உள்ளார்கள். கருடாழ்வார் தமது ஒரு கரங்களையும் விரித்து உடனே புறப்படுவதை போல் உள்ளது. இந்தக் கல்தூண் துவஜஸ்தம்பத்திற்கு (கொடிக் கம்பம்) சற்று பின்புறம் அமைந்துள்ளது. நாலாம்பலம் (துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்) கிரானைட் கற்களால் ஆனது. த்வஜஸ்தம்பத்தின் உச்சியில் சுமார் 3 அடி உயரத்தில் கருடன் பஞ்சலோக சிலை உள்ளது. கோயில் மிகப் பெரியது, த்வஜஸ்தம்பமும் பெரியது.

மலையாள திவ்ய தேசங்களில், சுதர்சன ஆழ்வாருக்கு தனி சன்னதி இருக்கும் திருத்தலம் இது. அதே போல, துவஜஸ்தம்பத்திற்கு பொன் தகடு வேயப்பட்டுள்ளதும் மற்றொரு தனிச் சிறப்பாகும்..

இந்த கோவிலில் துர்வாச ரிஷியின் சிலை உள்ளது, மேலும் அவர் ஒவ்வொரு இரவும் பெருமாளுக்கு பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.

குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் மக்கள் செல்வம் வேண்டி அவ்வப்போது கதகளி நிகழ்ச்சியை இங்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அந்நிகழ்ச்சியின் மூலமாக  எம்பெருமானிடம் புத்திரப்பேறு வேண்டுவது என்பது இதன் பொருள்.

ஸ்தல வரலாறு

சங்கரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்த திவ்ய தேசத்திற்கு வந்து ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று அதிதிகளுக்கு உணவு படைத்து அதன்பின் விரதத்தை முடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்தாள். அப்படி அவள் இந்த விரதத்தில் அதில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தாள். தோலகாசுரன் என்னும் அரக்கன் ஒருவன் இந்த விரதத்திற்கு இடையூறு செய்து. துன்பம் விளைவிக்கவே, அந்த பெண், இந்த அரக்கனை வதம் செய்ய எம்பெருமானை வேண்டிக் கொண்டாள். எம்பெருமான் அவளுக்கு தெரியாமல் அந்த அசுரனை வாமன ரூபத்தில் வந்து, சக்ராயுதத்தை ஏவினார். அது அவனை பல துண்டுகள் ஆக்கியது. அப்படி வதம் செய்து அவசரம் அவசரமாக துவாதசி பாரணை (விரதம் முடிக்க) செய்யவரும் போது, எம்பெருமான் திருமார்பில் மறைத்து வைத்து இருந்த மகாலக்ஷ்மியை தரிசனம் செய்து, இந்த சிறுவன் எம்பெருமான் தான் என்று நிச்சயம் செய்து, அவனிடம் எம்பெருமானின் திருமார்பு தரிசனம் வேண்டி இந்த பெண் மோக்ஷம் பெற்றாள் என்பது வரலாறு. அவளின் வேண்டுகோளின்படியே எம்பெருமான் இங்கே, திருவாழ்மார்புடன் இன்றும் பக்தர்கட்கு அருள்புரிவதாக ஐதீஹம். இதனையொட்டியே திருவல்லவாழ் என்ற பெயர் இந்த திருத்தலத்திற்கு உண்டானதாக வரலாறு.

துர்வாசர் இந்த பெருமாளை பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள். அவர் அப்படி செய்யும் போது 12000 வாழை பழங்கள் எம்பெருமானுக்கு சமர்பித்ததாகவும், அதே போல இன்றும் வருடம் ஒருமுறை இந்த விழா, பன்னீராயிரம் விழா என்று இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது.

கேரளாவின் கோட்டயம் (Kottayam) மற்றும் செங்கன்னூர் (Chengannur) நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக எளிதில் அடையலாம்.

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் புகைவண்டி மார்க்கத்திலும் திருவல்லா புகைவண்டி நிலையத்தை அடையலாம். அங்கு இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் இந்த திருதலம் உள்ளது. திருவல்லாவை தொடர்ந்து அதனை சூழ்ந்த மற்ற ஐந்து திவ்ய தேசங்களைச் சேவிக்கலாம்.

கோட்டயத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் செங்கனாச்சேரி

செங்கனாச்சேரியிலிருந்து 3 கீ.மி. தூரம் திருக்கடித்தானம்.

திருக்கடித்தானத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவல்லா.

திருவல்லாவிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்வண்டூர்

திருவண்வண்டூரிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருச்செங்குன்றூர்.

திருச்செங்குன்றூரிலிருந்து மேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருப்புலியூர்

***

பாசுரங்கள்

1808.  

தந்தை தாய் மக்களே*  சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*

பந்தம்ஆர் வாழ்க்கையை*  நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*

அந்தம்ஆய் ஆதிஆய்*  ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*

மைந்தனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!.  (2)     

1809.  

மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற*  நுண்இடை நுடங்கும்,*

அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*

துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி*  முன் தூது சென்ற*

மன்னனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

 1810.  

பூண்உலாம் மென்முலைப் பாவைமார்*  பொய்யினை ‘மெய் இது’ என்று,*

பேணுவார் பேசும் அப்பேச்சை*  நீ பிழை எனக் கருதினாயேல்,*

நீள்நிலா வெண்குடை வாணனார்*  வேள்வியில் மண் இரந்த,*

மாணியார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1811.  

பண்உலாம் மென்மொழிப் பாவைமார்*  பணைமுலை அணைதும் நாம்என்று*

எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து*  நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*

விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற*  வேங்கடத்துஉளார்,*  வளங்கொள் முந்நீர்-

வண்ணனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1812.  

மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்*  வாரணம் சூழ வாழ்ந்தார்,*

துஞ்சினார் என்பதுஓர் சொல்லை*  நீ துயர்எனக் கருதினாயேல்,*

நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து*  அவள் நாளை உண்ட,-

மஞ்சனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1813.  

உருவின்ஆர் பிறவிசேர்*  ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு*

அருவிநோய் செய்துநின்று*  ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*

திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ*  வேள்வியோடு அங்கம் ஆறும்,*

மருவினார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1814.  

நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை*  மெய்எனக் கொண்டு,*  வாளா-

பேயர்தாம் பேசும் அப்பேச்சை*  நீ பிழைஎனக் கருதினாயேல்,*

தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்*  மங்குல் வான்ஆகி நின்ற,*

மாயனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1815.  

மஞ்சுசேர் வான்எரி*  நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*

அஞ்சுசேர் ஆக்கையை*  அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

சந்துசேர் மென்முலைப்*  பொன்மலர்ப் பாவையும் தாமும்,*  நாளும்-

வந்துசேர் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1816.  

வெள்ளியார் பிண்டியார் போதியார்*  என்றுஇவர் ஓது கின்ற,*

கள்ளநூல் தன்னையும்*  கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

தெள்ளியார் கைதொழும் தேவனார்*  மாமுநீர் அமுது தந்த,*

வள்ளலார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1817.  

மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்*  வல்லவாழ் அடிகள் தம்மைச்,*

சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்*  கோலநீள்ஆலி நாடன்,*

கறைஉலாம் வேல்வல*  கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*

இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு*  இன்பம் நன்கு எய்துவாரே.   (2)

2775.  

அன்னம் துயிலும் அணிநீர் வயல்ஆலி,*

என்னுடைய இன்அமுதை எவ்வுள் பெருமலையை,* (2)

கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,*

மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்-

பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர்ஏற்றை,*

மன்னும் அரங்கத்து எம் மாமணியை,* (2) -வல்லவாழ்ப்-

3321.  

மான் ஏய் நோக்கு நல்லீர்!*  வைகலும் வினையேன் மெலிய*

வான் ஆர் வண் கமுகும்*  மது மல்லிகை கமழும்*

தேன் ஆர் சோலைகள் சூழ்*  திருவல்லவாழ் உறையும்-

கோனாரை*  அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)  

3322.  

என்று கொல்? தோழிமீர்காள்*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*

பொன்திகழ் புன்னை மகிழ்*  புது மாதவி மீது அணவி*

தென்றல் மணம் கமழும்*  திருவல்லவாழ் நகருள்-

நின்ற பிரான்*  அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*   

3323.  

சூடு மலர்க்குழலீர்!*  துயராட்டியேன் மெலிய*

பாடும் நல் வேத ஒலி*  பரவைத் திரை போல் முழங்க*

மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்*  தண் திருவல்லவாழ்*

நீடு உறைகின்ற பிரான்*  கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*     

3324.  

நிச்சலும் தோழிமீர்காள்!*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*

பச்சிலை நீள் கமுகும்*  பலவும் தெங்கும் வாழைகளும்*

மச்சு அணி மாடங்கள் மீது அணவும்*  தண் திருவல்லவாழ்*

நச்சு அரவின் அணைமேல்*  நம்பிரானது நல் நலமே*.            

3325.  

நல் நலத் தோழிமீர்காள்!*  நல்ல அந்தணர் வேள்விப் புகை*

மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்*  தண் திருவல்லவாழ்*

கன்னல் அம் கட்டி தன்னை*  கனியை இன் அமுதம் தன்னை*

என் நலம் கொள் சுடரை*  என்றுகொல் கண்கள் காண்பதுவே?*  

3326.  

காண்பது எஞ்ஞான்றுகொலோ?*  வினையேன் கனிவாய் மடவீர்*

பாண் குரல் வண்டினொடு*  பசுந் தென்றலும் ஆகி எங்கும்*

சேண் சினை ஓங்கு மரச்*  செழுங் கானல் திருவல்லவாழ்*

மாண் குறள் கோலப் பிரான்*  மலர்த் தாமரைப் பாதங்களே?*

3327.  

பாதங்கள்மேல் அணி*  பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்*

ஓத நெடுந் தடத்துள்*  உயர் தாமரை செங்கழுநீர்*

மாதர்கள் வாள் முகமும்*  கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்*

நாதன் இஞ் ஞாலம் உண்ட*  நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*

3328.  

நாள்தொறும் வீடு இன்றியே*  தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்*

ஆடு உறு தீங் கரும்பும்*  விளை செந்நெலும் ஆகி எங்கும்*

மாடு உறு பூந் தடம் சேர்*  வயல் சூழ் தண் திருவல்லவாழ்*

நீடு உறைகின்ற பிரான்*  நிலம் தாவிய நீள் கழலே?*   

3329.  

கழல் வளை பூரிப்ப யாம் கண்டு*  கைதொழக் கூடுங்கொலோ*

குழல் என்ன யாழும் என்ன*  குளிர் சோலையுள் தேன் அருந்தி*

மழலை வரி வண்டுகள் இசை பாடும்*  திருவல்லவாழ்*

சுழலின் மலி சக்கரப் பெருமானது*  தொல் அருளே?* 

3330.  

தொல் அருள் நல் வினையால்*  சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்*

தொல் அருள் மண்ணும் விண்ணும்*  தொழ நின்ற திருநகரம்*

நல் அருள் ஆயிரவர்*  நலன் ஏந்தும் திருவல்லவாழ்*

நல் அருள் நம் பெருமான்*  நாராயணன் நாமங்களே?*  

3331.  

நாமங்கள் ஆயிரம் உடைய*  நம் பெருமான் அடிமேல்*

சேமம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த*

நாமங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் திருவல்லவாழ்*

சேமம் கொள் தென் நகர்மேல்*  செப்புவார் சிறந்தார் பிறந்தே*   

–SUBHAM—

TAGS- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-42; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவல்லா

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-28; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,758)

Written by London Swaminathan

Post No. 15,758

Date uploaded in London –19 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்பாடகம்

திருப்பாடகம் (காஞ்சீபுரம்)

ஒன்பது திவ்ய தேசங்கள் பெரிய காஞ்சீபுரத்தில் உள்ளன. .

மூலவர் – பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – ருக்மிணி, ஸத்யபாமா

தீர்த்தம் – மத்ஸ்ய தீர்த்தம்.

விமானம் – பத்ர விமானம், வேத கோடி விமானம்.

ப்ரத்யக்ஷம் – ஜனமேஜயன், ஹாரீத முனி.

ஜனமேஜயஹாராஜன் வைசம்பாயனரிடம் பாரத கதையைக் கேட்டு, ஸ்ரீ க்ருஷ்ணன் பாண்டவர்களுக்காக ஹஸ்தினாபுரம் தூது சென்று விச்வரூபம் எடுத்ததை கேள்விப்பட்டு, அதை நேரில் ஸேவிக்க விரும்பி காஞ்சி வந்து, அச்வமேதயாகம் செய்து, பூர்ணாஹ§தி ஆனதும் பகவான் பாண்டவதூத வேஷத்துடன் ஆவிர்பவித்ததாக புராண வரலாறு.

இங்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் எழுந்தருளி இருக்கிறார். மணவாளமாமுனிகள் மங்களாசாஸனம்.

மங்களாசாஸனம் -திருமழிசையாழ்வார் – 814, 815; திருமங்கையாழ்வார் – 1541, 2674 (127); பூதத்தாழ்வார் – 2275; பேயாழ்வார் – 2311; மொத்தம் 6 பாசுரங்கள்.

திருப்பாடகம்

   நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து

        அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம்

   அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்

        நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே – (815)

                                – திருச்சந்தவிருத்தம் – 64

 பெருமானின் நின்ற திருக்கோலம் திரு ஊரகத்தில்;

 இருந்த திருக்கோலம் திருப்பாடகத்தில்;

 கிடந்த திருக்கோலம் திருவெஃகாவில்.

“இத்தலங்கள் எல்லாம் நான் ஜென்மம் எடுப்பதற்கு முன்பாகவே

எம்பெருமான் அர்ச்சா ரூபியாக எழுந்து அருளிய திருத்தலங்களாகும். எம்பெருமான் அர்ச்சா மூர்த்தியாகி இங்கு எழுந்து அருளிய காலங்களில் நான் பிறந்ததில்லை. இப்போது பிறந்துவிட்டேன். இந்த மூன்று திருக்கோலங்களையும் என் நெஞ்சினுள்ளேயே பெருமாளுக்கு அமைத்துக் கொண்டேன். அதனால் நான் இனி மறந்திலேன்”.

இவ்விதம் திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட

இத்தலம் பெரிய காஞ்சி புரத்தில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் உள்ளது.

வரலாறு

     எம்பெருமான் கிருஷ்ணவதாரத்தில் பாண்டவர்கள் பொருட்டு

துரியோதனன் சபைக்கு தூது சென்றான். இந்தக் கண்ணன்தான்

பாண்டவர்களின் பெரிய பலம். இவனை அழித்துவிட்டால் பாண்டவர்களை எளிதில் வென்றுவிடலாம். என்று எண்ணிய துரியோதனன், கண்ணன் அமரக்கூடிய இடத்திற் கருகில் ஒரு நிலவறையை உண்டாக்கி அதன்மீது பசுந்தலைகள் இட்டு மூடி அதன் மீது ஒரு ஆசனத்தை அமைத்தான். இதில் கண்ணன் அமர்ந்தவுடன் இந்த ஆசனம் நிலவறைக்குள் விழுக அங்கிருக்கும் மல்லர்கள் கண்ணனை கொன்றுவிட வேண்டும் என்பது துரியோதனன் திட்டம். துரியோதனன் திட்டப்படி நிலவறை சரிந்துவிழ உள்ளே விழுந்த கண்ணன், நொடிப்பொழுதில் மல்லர்களை மாய்த்து விஸ்வரூபனாய் நின்றார்.

சிறப்புக்கள்

     1) அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 25 அடி

உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத் திருமேனியுடன் திகழும் இவ்வெம்பெருமானை 108 திவ்ய தேசங்களில் மட்டுமன்றி இந்தியாவில் கூட வேறெங்கும் கூட சேவிக்க முடியாது.

2.கர்ப்பக்கிரஹத்தின் குவிந்த அமைப்பும், அதனடியில் பிரம்மாண்டமான திருக்கோலத்தில் எம்பெருமான் வீற்றிருப்பதும் ரசித்துப் பார்க்கத் தக்கது.

     3) எம்பெருமானின் நின்ற அமர்ந்த கிடந்த திருக்கோலங்கட்கு

தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களே ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்ததெனச் சொல்லலாம்.

அ) வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத

   பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் – நான்கிடத்தும்

   நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தானே

   என்றால் கெடுமாம் இடர்.

     என்ற பொய்கையாழ்வாரின் பாசுரத்தில் வெஃகாவைக் குறிப்பிட்டிருப்பது தொன்மைக்காலத்தே 108 திவ்ய தேசங்களில் மூன்று திருக்கோல எம்பெருமான்களை ஒரு சேரக் குறித்தால் அது இந்த தொண்டை மண்டலத்தின் முத்தலமேயென்பதில் ஐயமில்லை.

ஆ)  இசைந்த வரவமும் வெற்புங் – கடலும்

          பசைந்தங்கு அமுது படுப்ப – அசைந்து

     கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்

          கிடந்திருந்து நின்றதுவு மங்கு – 2345

                      என்று பேயாழ்வார் உரைப்பதும்.

இ)   குன்றிருந்த மாட நீடும் பாடகத்தும் ஊரகத்தும்

     நின்றிருந்து வெஃகனைக் கிடந்ததென்ன நீர்மையே – 814

     என்று திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வாரும் கூறியிருப்பதில் 108இல் உள்ள பிற ஸ்தலங்களை மூன்று திருக்கோலங்கட்கும் சுட்டவில்லை.

     ஈ) நின்றவாறும் அன்றியும் இருந்தவாறும் கிடந்தவாறும்

நினைப்பரியன. ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் –

(திருவாய்மொழி 5.10.6)

     என்ற நம்மாழ்வாரின் மங்களாசாசனத்திற்கு

     திருவூரகத்தில் நின்றபடியும், திருப்பாடகத்திலே இருந்தபடியும்

திருவெஃகாவிலே கிடந்த படியுமாதல் – என்று ஈடு வ்யாக்யானம்

சுட்டியிருப்பதும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

     காஞ்சி மண்ணில் முத்தீபம் போல் இலங்கும் இத்தலங்கள் தொண்டைமண்டலத்திற்கே தனிப்புகழ் ஏற்றுத் தந்தன வென்பதும் மறுக்க முடியாததாகும்.

     4) ஸ்ரீஇராமானுஜரிடம் வாதப்போரிலே தோற்றுப்போன யக்ஞ மூர்த்தி என்னும் அத்வைதி ஸ்ரீஇராமானுஜரின் உண்மை சொரூபம் தெரிந்து அவரிடமே சரணாகதியாகி அவரிடம் சீடரானார். அவருடைய பெயரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று இராமானுஜர் மாற்றி அவரை விஷ்ணுவின் தொண்டராக்கி விஷ்ணுகைங்கர்யம் செய்ய வைத்தார். இந்த அருளாளப் பெருமாள் ஜீவித்திருந்தது இந்த திவ்ய தேசத்தில்தான். இங்கு அவருக்குத் தனி சன்னதியுண்டு.    

***

திரு ஊரகம்

திரு ஊரகம் (உலகளந்த பெருமாள் கோயில்) என்பது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 50-வது திவ்ய தேசமான இத்தலத்தில், திருமால் பிரம்மாண்டமான 35 அடி உயர உலகளந்த பெருமாள் கோலத்தில் காட்சியளிக்கிறார். ஒரே கோயிலுக்குள் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச பெருமாள்கள் உள்ளனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரு ஊரகம்

:மூலவர்: ஊரகத்தான் (உலகளந்த பெருமாள்)

தாயார்: அமுதவல்லி

சிறப்பம்சம்: பெருமாள் தனது இடது காலை வானத்திற்கும், வலது காலை மகாபலியின் தலையிலும் வைத்து உலகளந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

****

திரு நீரகம்

இது காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

இந்தக் கோயிலுக்குள் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. ஒரே இடத்தில் இந்த நான்கு பெருமாள்களையும் தரிசிப்பது மிகுந்த சிறப்பாகும்.

திரு நீரகம் (காஞ்சீபுரம்) பெரிய காஞ்சீபுரத்தில் திரு ஊரகம், (உலகளந்தப் பெருமாள்) கோவிலிலேயே உள்ளது. .

மூலவர் – இல்லை

உத்ஸவர் – ஜகதீச்வரர், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – நிலமங்கைவல்லி.

தீர்த்தம் – அக்ரூர தீர்த்தம்.

விமானம் – ஜகதீச்வர விமானம்.

ப்ரத்யக்ஷம் – அக்ரூரர்.

குறிப்பு – மூலவர் எங்கிருக்கிறார்? பழைய கோவில் எங்கிருக்கிறது? தீர்த்தம் எங்குள்ளது? என்றெல்லாம் தெரியவில்லை. உலகளந்தப் பெருமாள் கோவிலின் வடபுறத்துப் ப்ராகாரத்தில் மிகச்சிறிய ஸந்நிதியில் உத்ஸவர் மட்டுமே எழுந்தருளியிருக்கிறார்.

மங்களாசாஸனம் – திருமங்கையாழ்வார் – 2059 – 1 பாசுரம்.

****

திருக்காரகம் பற்றி முன்னரே கண்டோம் ; ஒரே கோவிலில் உள்ள 4 தலங்களுக்கு ஒரே பாசுரம்தான்.

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்

நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்

உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்

காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா

காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்

பெருமானுன் திருவடியே பேணினேனே.

~ திருமங்கையாழ்வார்

To be continued………………………….

Tags–திருப்பாடகம், திருஊரகம், திரு நீரகம், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-28; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள்

மரணத்தைக் கண்டு அஞ்சாதே – சத்ய சாயிபாபா அருளுரை! (Post.15,743)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,743

Date uploaded in London – 16 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

4-5-2026 கல்கி ஆன்லைன்இதழில் வெளியான கட்டுரை!

மரணத்தைக் கண்டு அஞ்சாதே –

புருஷனும் புருஷோத்தமனும் – ஶ்ரீ சத்ய சாயிபாபா

அருளுரை!

நாகராஜன்              

22-10-1963 அன்று பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய அருளுரை!

வயதான ஒரு மனிதன் மரணப்படுக்கையில் இருந்தான். அவன் கன்னட 

தேசத்தைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறேன். கடைசி தருணம் வந்த போது 

அவனால் ஏதோ வார்த்தைகளை உளறத்தான் முடிந்தது. அவனது மகன்களால் 

அதை அறிந்து கொள்ள முடியவில்லை.  அவர்கள் உடனே ஒரு டாக்டரை 

அழைத்து கொஞ்சம் ஆக்ஸிஜனைக் கொடுத்து அவர் பேசுவது என்ன என்பதைப் 

புரிந்து கொள்ள வையுங்கள் என்று வேண்டினர்.  தான் சம்பாதித்த பணைத்தை 

எங்கே வைத்திருக்கிறேன் என்பதை அவன் சொல்ல முயல்வதாக அவனது 

பிள்ளைகள் அனுமானித்தனர்.  ஆகவே அவனது வார்த்தைகளைத் தெளிவாக 

அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்களால் ஒரே ஒரு 

எழுத்தை மட்டும் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த எழுத்து ‘க’. ‘க’ என்றால் என்ன?

‘க’ என்றால் கனகாவா? அதாவது தங்கமா? அல்லது ‘கரு’வா? அதாவது  

கன்றுக்குட்டியா? அல்லது ‘க’ என்பது கஞ்சாவா? அல்லது கஸப்ரிகாவா அதாவது விளக்குமாறா? 

விளக்குமாறை அவர்கள் கொண்டு வந்து காண்பித்தபோது  அவன் தலையை 

அசைத்தான். இறந்தும் போனான். அவன் விளக்குமாறாகவே பிறப்பு எடுக்க 

நேர்ந்தது!

அவனைப் போல் நீங்கள் இறக்கக் கூடாது.  நீங்கள் பீஷ்மரைப் போல மரணம்    அடைய வேண்டும். சாந்திபர்வத்தை அவர் பாண்டவர்களுக்கு உபதேசிக்கும்   போது அவர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். கிருஷ்ணர் முன்னால் இருக்க  அவர் மரணம் அடைந்தார். கிருஷ்ணரின் இதயத்தில் புகுந்தார்.  மரணம் என்பது 

பயப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நல்ல சந்தோஷமான தருணங்களில் பேசக் கூடாத விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மரணம் என்பது நல்லதோ 

அல்லது கெட்டதோ இல்லை. உங்களுக்கு அதைப் பற்றிய விருப்பத் தேர்வே 

கிடையாது.  நீங்கள் அதை வரவேற்றால் அதைச் சீக்கிரம் பெற முடியாது. அதைக் கெட்டது என்று நினைத்துத் திட்டினால் அதைத் தவிர்க்கவும் முடியாது. 

அது பிறந்து விட்ட தருணத்திலேயே தவிர்க்கமுடியாததாக ஆகி விட்ட ஒன்று. 

பிறந்த தருணத்திலேயே சுடுகாட்டை நோக்கிய பயணமானது ஆரம்பித்து 

விட்டது.  சிலர் அதை சீக்கிரம் அடைகின்றனர். சிலர் சுற்றுப்பாதை வழியாகச் 

சென்று சற்று தாமதமாக அடைகின்றனர். மனிதனுக்கு மனிதன் இது ஒன்று தான் வித்தியாசம்.  ஆனால் மனிதனோ மரணம் என்பது  தூரத்தில் இருக்கும் ஒரு     துயரம் என்று நினைத்து நடக்கிறான். 

அண்டைஅயலாரில் ஒருவரின் குழந்தை இறக்கும் போது அவரிடம் சென்று அது ஒரு கனவு என்றும், குழந்தைகள் பிறப்பதும் இறப்பதும் அவர்கள் நமது           கொடுப்பினை என்றும் பழைய ஜென்ம  கடன்களை உணரும் தருணம் அது       என்றும் கூறித் தேற்றுகிறோம்.  ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையை இழந்து 

தவிக்கும் போது இதே வாதங்களால் உங்களைத் தேற்றிக் கொள்ள 

முடியவில்லை. இந்த ஆறுதல் மொழிகள் எல்லாம் மற்றவருக்கு மட்டுமே தான்!

அர்ஜுனன் கிருஷ்ணரை புருஷோத்தமா என்று அழைத்தான்.  ஏனென்றால் அவரே புருஷர்களில் உயர்ந்த புருஷராவார். புருஷா என்றால் உடல் என்ற – புரா- என்ற   நகரிலே – உள்ளவன் என்று அர்த்தம். ஒவ்வொரு உடலிலும் புருஷன் 

இருக்கிறான்.

 பிரபஞ்சம் அனைத்துமே புருஷோத்தமனைத் தன்னுள் கொண்டிருக்கிறது.     

ஆகவே இறப்பது எது என்றால் உடல் மட்டுமே தான்! அதன் உள்ளே இருக்கும்    புருஷன் அல்ல.  புருஷன் உங்களின் உள்ளே இருக்கிறான் என்ற நம்பிக்கை      உங்கள் தீய எண்ணங்களையும்,தீய நாட்டங்களையும் புலன்களையும் 

மனதிலிருந்து அகற்றி மனதைச் சுத்தமாக்குகிறது.  உள்ளிருக்கும் பானம் 

மட்டுமல்ல, பாத்திரமும் சுத்தமாக்கப்பட வேண்டும்.  அப்படி இல்லையென்றால்  எவ்வளவு நேரம் ஸ்மரணமும் தியானமும் செய்தாலும் கூட  அவை பலனைத் 

தராது.  

ஆகவே தான் வேதங்கள் பிராமணர்களிடம்  மிகக் கடுமையான 

விதிகளுடனும் ஒழுக்கக்கட்டுப்பாடுடனும் ஒப்படைப்பட்டது. அப்படிப்பட்ட 

ஒழுக்கக் கட்டுப்பாடுடன் மனம் சுத்தமாக்கப்படவில்லை என்றால் வேதங்களைக் கற்றுப் பயனில்லை.

பெருமை மிகு தமிழகத்தில் தொண்டமண்டலம்! (Post No.15,702)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,702

Date uploaded in London – 6 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம்.

பாண்டிய மண்டலம் சோழ மண்டலம் கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து இப்போது கடைசி கட்டுரையான தொண்ட மண்டலம் வெளீயாகிறது. 

பெருமை மிகு தமிழகத்தில் தொண்டமண்டலம்! 

ச. நாகராஜன்

இறையனார் தலைமை வகித்து சங்கத் தமிழை வளர்த்ததை பாண்டி மண்டலம் விளக்குகிறது என்றால் தமிழ்ப் புலவன் பாயைச் சுருட்டு என்று சொன்னவுடன் திருமால் பாய் சுருட்டி செந்நாப் புலவனுடன் கிளம்பிய வரலாறைச் சொல்கிறது தொண்ட மண்டலம்.

‘கல்வியில் கரையிலாத காஞ்சி’ என்று அப்பர் பெருமானால் புகழப்பட்ட காஞ்சியின் பெருமை தான் என்னே!

திருமழிசை ஆழ்வாரின் சீடரான கனிகண்ணனை பல்லவ அரசன் தன்னைப் பாடுமாறு பணிக்க, கனிகண்ணன் மறுத்து விட்டான். இதனால் கோபமடைந்த அரசன் அவனை நாட்டை விட்டுப் போகுமாறு ஆணையிட்டான். இதை அறிந்த திருமழிசை ஆழ்வார் தானும் அங்கிருந்து கிளம்பலானார். தான் வழிபடும் தெய்வமாகிய மணிவண்ணன் மட்டும் ஏன் அங்கிருக்க வேண்டும் என்று எண்ணிய ஆழ்வார் காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்கா கோவிலில் பாடினார் இப்படி:

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்தன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்i 

திருமால் ஆதிசேஷன் என்ற தனது பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்ப உலகமே திகைத்து அதிர்ந்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் ஆழ்வாரிடம் மன்னிப்புக் கேட்க, மனம் இரங்கிய ஆழ்வார்

கணிகண்ணன் போக்கொழிந்தான்! காமரு பூங்கச்சி

மணிவண்ணா! நீ கிடக்கவேண்டும்! – துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவொழிந்தான், நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்!!

என்று பாட திருமால் தன் இருப்பிடம் வந்து அனைவருக்கும் அருள் பாலிக்க ஆரம்பித்தார். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயரையும் பெற்றார். தமிழ்ப் புலவனின் ஆற்றலை உலகம் உணர்ந்து கொண்டது. 

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவரே. 

கந்தபுராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாசாரியார் காஞ்சிபுரத்தில் 

 அவதரித்தவர்.  குமரகோட்டத்தில் உள்ள முருகப் பெருமானின்                       அருளாணையுடன் அதை அவர் இயற்றினார். 10345 பாடல்கள் கொண்ட இந்த நூலுக்கு முருகப் பெருமானே ‘திகடச்       சக்கரச் செம்முகம்’ என்று அடி எடுத்துக் கொடுத்தார் என்பது வரலாறாகும். 

இன்னும் ஆதிசங்கரர் நிறுவிய காஞ்சி காமகோடி பீடம் இந்து மதத்தின் ஏற்றத்தைப் பறைசாற்றும் மடமாகும். சமீப காலத்தில் வாழ்ந்த இதன் 68வது பீடாதிபதி மகா பெரியவர் என்று உலகோரால் கொண்டாடப்பட்டார். இவர் அருளாசியைப் பெற கிரீஸ் ராணி உள்ளிட்ட மேலை நாட்டோரும் வருவது வழக்கமானது.

 காஞ்சிபுரம் பட்டு சேலைகள், வேஷ்டிகளுக்கும் கைவினைப் பொருள்களுக்கும் பெயர் பெற்ற இடமாகும். 

14ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் முருக பக்தர் அருணகிரிநாதர் ஆவார். இவர் 16000 திருப்புகழ் பாடல்களைப் பாடினார். நமக்கு இன்று

 கிடைத்திருப்பது 1334 பாடல்கள் மட்டுமே. இவர் திருவண்ணாமலை 

அண்ணாமலையார் கோவிலில் வாழ்ந்து முருகன் அருளால் பாடல்களை இயற்றினார். ‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர்

 தந்ததனால்’ என்ற இவரது வார்த்தைகளால் முருகனே இவரைப்

பாடல்களை இயற்ற வைத்தான் என்பது தெளிவு. 

திருவண்ணாமலையில் அருளாட்சி புரிந்த ரமண மகரிஷியை உலகம்   முழுவதும் போற்றியது. மேலைநாடுகளிலிருந்து ஏராளமானோர்         

ரமணாசிரமம் வந்து இவரை தரிசித்து அருள் பெற்றனர். குறிப்பாக பால்       பிரண்டன் எழுதிய ‘எ செர்ச் இன் சீக்ரட் இண்டியா’ என்ற நூல் இவரது            அருமைகளைக்  கூற உலகமே இவர் பால் ஈர்க்கப்பட்டது. 

இன்னும் திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமிகள் உள்ளிட்ட              ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

காஞ்சி வீரத்தின் விளை நிலமாகும். இங்கிருந்து ஆண்ட பல்லவ மன்னர்கள் உலகளாவிய அளவில் புகழ் பெற்றனர். மாமல்லன் என்று அழைக்கப்பட்ட பெரும் வீரன் மாமல்லபுரத்தில் அற்புதமான சிற்பங்களை வடிக்கச் செய்தான். இன்றளவும் அந்த அற்புதச் சிற்பங்களைக் காண உலகெங்குமிருந்து மக்கள் வருகின்றனர். அதன் பெருமையைப் பறை சாற்றுகின்றனர். 

தொண்ட மண்டலத்தில் உள்ள புலியூர் கோட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்த தெய்வப் புலவர் சேக்கிழார் 63 நாயன்மார்களின் வரலாற்றை பெரிய புராணம் என்ற நூலாக வடித்தார். தில்லையில் உலகெலாம் என்ற வார்த்தையை ஒலித்து இறைவனே நூலுக்கு அடி எடுத்துக் கொடுத்தான். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இவர் விளங்கிப் பெருமை பெற்றார். குன்றத்தூர் சென்னையின் புறநகர்ப் பகுதியாக போரூர் அருகே உள்ள ஊராகும். 

சென்னையின் புகழ் அதன் பல்வேறு துறை விற்பன்னர்களால் உலகம்      முழுவதும் பரவிய ஒன்று.

கணினி சார் துறைகளைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள், வாகனக் 

கட்டுமான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், 

ரயில் பெட்டிகளின் வடிவாக்கத் தொழிலகம், கிரிக்கெட், செஸ்  உள்ளிட்ட விளையாட்டுகளில் உலகப் புகழ் பெற்ற வீரர்கள்… இப்படி சென்னையின் புகழ் பட்டியல் நீண்ட ஒன்று.

ஆயிரக் கணக்கான தமிழ் திரைப்படங்களை உருவாக்கிய சென்னை மாநகரம் ஆயிரக்கணக்கான திரைத்துறை சார்ந்த கலைஞர்களை உருவாக்கிய நகரமாகும். இசை, நடனம், நடிப்பு, கதை, வசனம், கேமரா உத்தி, வண்ணச் சேர்க்கை, உடை அலங்காரம் என அனைத்துப் பகுதிகளிலும் தன் முத்திரையைப் பதித்த துறை சென்னையின் திரைப்படத் துறையாகும்.

 உலகின் ஆகப் பெரிய கடற்கரைகளுள் இரண்டாவது இடத்தைக் கொண்டிருக்கும் மரீனா பீச் உலக பயணிகள் அனைவருக்கும் உற்சாகம் தரும் ஒரு கடற்கரையாகும்.

இது இந்திய சுதந்திரப் போரில் லட்சக் கணக்கான மக்களுக்கு விழிப்பூட்டும் மையமாகத் திகழ்ந்தது. இங்கு கூட்டங்களில் பேசாத தேசீயத் தலைவர்களே இல்லை எனலாம். 

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்கு நடக்கும் படித்திருவிழா முருக பக்தர்களை ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் மாபெரும் விழாவாகும். 

தொண்டமண்டலத்தில் உள்ள செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் , இராணிப்பேட்டை உள்ள மாவட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி புகழ் பெற்றவையாகும். விரிப்பின் பெருகும்.

படிக்காசுப் புலவர் எழுதிய தொண்டைமண்டல சதகம் நூலில் உள்ள       100    பாடல்களையும் படித்து இதன் அருமை பெருமைகளை அறியலாம். 

இராமலிங்க சுவாமிகள் தொண்டைமண்டல சதகம் பற்றிய ஒரு ஆய்வுக்    கட்டுரையையே எழுதியுள்ளார். தனது ஆய்வின் முடிவில் அவர்        தொண்டை மண்டல சதகம் என்பது சரியல்ல தொண்டமண்டல  சதகம் என்ற பெயரே சரி என்று நிறுவி இருக்கிறார். 

இப்படிப் பெருமை மிகு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிற்றூரும், பெரும் நகரமும் தமிழகத்தின் காலம் வென்ற சரித்திரத்தையும், பண்பாட்டையும், கலை உணர்வையும், வீரத்தையும், தேசீயப் பற்றையும். இலக்கிய வளத்தையும், காலத்திற்கேற்ற அதி நவீன அறிவியல் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். 

பெருமை மிகு தமிழகத்தின் பெருமைகளை முற்றிலுமாகச் சொல்ல முடியுமா என்ன?

வாழ்க தமிழ், வாழிய தமிழர், வாழிய பழம் பெரும் தமிழ்நாடு!

***

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-11;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,686)

Written by London Swaminathan

Post No. 15,686

Date uploaded in London –2 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திவ்யதேசம்          திருச்சேறை / பஞ்சஸார க்ஷேத்திரம்

மூலவர்-        ஸாரநாதன்    

உத்ஸவர் –     மாமதலைப்பிரான்   

தாயார்    –     ஸாரநாயகி /ஸார நாச்சியார் / பஞ்ச லக்ஷ்மி   

திருக்கோலம்-        நின்ற    

திசை –     கிழக்கு   

பாசுரங்கள் —    12   

மங்களாசாசனம்      திருமங்கையாழ்வார் 12

சாரநாதன் என்ற எம்பெருமான், சாரநாச்சியார் என்ற தாயார், சார புஷ்க்ரணி, சாரவிமானம் மற்றும் சார க்ஷேத்திரம் என்ற ஐந்தும் சேர்ந்து பஞ்ச சார க்ஷேத்திரம் என்று ஆயிற்று.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, மஹாலக்ஷ்மி, சார நாச்சியார் என்று ஐந்து தேவிகளுடன் எம்பெருமான் காட்சி அளிக்கிறார். இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கு ஓப்பானதாகும்.

எம்பெருமான் காவிரி தாய்க்கு ப்ரத்யக்ஷம். குளக் கரையில் காவிரியம்மனுக்கு சன்னதி உள்ளது. காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது, அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார்

ராஜகோபாலன் சன்னதி உள்ளது. புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும் அவசியம் தரிசிக்க வேண்டிய சன்னதி.

குடவாசலிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை அமைந்துள்ளது .

கும்பகோணத்திற்கு குடத்தின் மூக்கு என்று சொல்வதை ஒட்டி, குடத்திற்கு வாசல், குடவாசல் என்ற அருகில் உள்ள ஊர். இந்த திவ்யதேசம், குடத்தின் சாரம், அதாவது மத்திய பாகம்.

மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது

திருச்சேறை, சாரநாதப் பெருமாள் (பஞ்சஸாரக்ஷேத்ரம்) மற்றும் செந்நெறியப்பர் (சிவன்) ஆகிய இரு முக்கிய கோவில்களைக் கொண்ட தலம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த (13 பாசுரங்கள்) மற்றும் தேவாரப் பதிகங்கள் (சம்பந்தர், அப்பர்) பாடியுள்ள சிறப்புமிக்க தலம்.

திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானை பற்றி பாடும் போது, இந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கும் எல்லா பக்தர்களையும், ஆழ்வார் தன்னுடைய தலையில் தாங்குவதாக கூறி உள்ளார். “செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே” (பெரிய திருமொழி 7.4.1)

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த

பெரியதிருமொழி

1578

கண்சோர வெங்குருதி வந்திழிய

        வெந்தழல்போல் கூந்தலாளை

மண்சேர முலையுண்ட மாமதலாய்

        வானவர்தம் கோவே என்று

விண்சேரும் இளந்திங்கள் அகடு உரிஞ்சு

        மணிமாட மல்கு

செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின்

        என் தலைமேலாரே

கண்கள் சுழன்று சோரவும், வெப்பக் குருதி வெள்ளம் வெளிப்படவும், தீத்தழல்போல் சிவந்த கூந்தலுடைய பூதனையின் முலைப்பாலை குடித்து மடியச்செய்த பச்சிளம்பிள்ளையே ! வானவர் தலைவனே ! வானில் திரியும் இளம்பிறை வயிற்றைத் தொடும் மணி மாளிகைகள், செல்வம் வாய்த்ததுமாகிய திருச்சசேறை எம் பெருமானைத் தோழுவர்தம் திருவடிகளைத் தலைமேல் ஏற்பேன்.

 1579

அம் புருவ வரி நெடுங்கண்

        அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து

மல்லல் கொம்புருவ விளங்கனி மேல்

        இளங் கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்

வம்பலரும் தண்சோலை

        வண்சேறை வானுந்து கோயில் மேய

எம்பெருமான் தாள் தொழுவார்

        எப்பொழுதும் என்மனத்தே இருக்கின்றாரே

அழகிய புருவத்துடன் நீள்விழிகளும் உடைய மலர்மகளைத் தனது திருமார்பில் வைத்தவன், தழைத்த கிளைகளில் விளங்கனிகளின் மேலே இனங்கன்றைக் குறுந்தடியாக எறிந்தவன், மணம் பரவியும் குளிர்ந்த சோலைகள் சூழும் திருச்சேறை திருக்கோயிலில் வாழ்கின்ற பெருமானுடைய திருவடிகளைத் தொழுவார்கள் எல்லோரும் எப்போதும் என் மனத்தில் வாழ்கின்றார்கள்.

1580

மீதோடி வாளெயிறு மின்னிலக

         முன் விலகும் உருவினாளை

காதோடு கொடி மூக்கு அன்றுடன் அறுத்த

         கைத்தலத்தா என்று நின்று

தாதோடு வண்டலம்பும்

         தண்சைற எம்பெருமான் தாளை ஏத்தி

போதோடு புனல்தூவும் புண்ணியரே

         விண்ணவரின் பொலிகின்றாரே

மேலே ஓங்கிய கோரைப்பல் மின்னலாய் ஒளிவிட, எதிரில் நிற்போர் அஞ்சி ஓடும் உருவுடைய சூர்பணகையைச் செவியோடு மூக்கையும் அறுத்துவிட்ட கைகளையுடைய இராமனே ! பூந்தாது கிண்டும் வண்டுகள் ஒலிக்கும் திருச்சேறை எம்பெருமானது திருவடிகளைப் போற்றி, மலர்களையும் புனித நீரையும் பரிமாறும் நல்வினைப்பேறு வாய்ந்தவர்கள் விண்ணவராய் விளங்குகின்றனர்.

 1581

தேராளும் வாள அரக்கன்

        தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ

போராளும் சிலையதனால்

        பொருகணைகள் போக்குவித்தாய் என்று

நாளும் தாராளும் வரைமார்பன்

        தண்சேறை எம்பெருமான் உம்பராளும்

பேராளன் போ் ஓதும் பெரியோரை

        ஒருகாலும் பிரிகிலேன

தோ் நடத்த வல்லவனும் வாளை ஏந்தியவனுமான இராவணனின் இலங்கையைக் போரில் வில்லை ஏந்திக் கொடிய அம்புகளை ஏவி அழித்த இராமனே ! திருத்துழாய் மாலையுடன் விளங்கும் திருமார்புடையவனே, மேலுலங்களையும் காக்கும் பெருமையுடைய திருச்சேறை எம்பெருமானுடைய திருப்பெயர்களை ஓதிப் போற்றும் பெரியோர்களைக் கணப்போதும் நான் பிரியமாட்டேன்.

 1582

வந்திக்கும் மற்றவர்க்கும்

        மாசுடம்பின் வல்லமணர் தமக்கும் அல்லேன்

முந்திச் சென்று அரி உருவாய்

        இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்

சந்தப்பூ மலர்ச்சோலைத்

        தண்சேறை எம்பெருமான் தாளை

நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம்

        தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே

இரணியன் வலிமையை அழித்த பெருமானுக்கே நான் உரியவன். வலிந்து வாது செய்யும் சமணர்க்கும், மற்றும் பெளத்தர்கட்கும் நான் உரியேன் அல்லேன். சந்தனமலர்ப் பொழில்கள் சூழந்த திருச்சேறை எம்பொருமானுடைய திருவடிகளை நாள்தோறும் எண்ணுவார்க்கு என் உள்ளம் தேன் அடர்ந்தது போல எல்லாக் காலமும் இன்புறுகின்றது.

 1583

பண்டேனமாய் உலகை அன்றிடந்த

        பண்பாளா என்று நின்று

தொண்டானேன் திருவடியே துணையல்லால்

        துணையிலேன் சொல்லுகின்றேன்

வண்டேந்தும் மலர்ப்புறவில்

        வண்சேறை எம்பெருமான் அடியார் தம்மை

கண்டேனுக்கு இது காணீர்

        என் நெஞ்சம் கண் இணையும் களிக்குமாறே

முன்னர் வராகமாய் உலகைக் குத்தியெடுத்த நீர்மையனே ! உன்னை துதித்துத் தொண்டானேன் நான் : தேவரீர் திருவடிகளே எனக்குக் காப்பு . இவை தவிர வேறு புகலிடம் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறேன். வண்டுகளைக்கொள்ளும் மலர்ச் சோலை சூழ்ந்த நிலங்களுடைய திருச்சேறையில் உறையும் எம்பெருமானின் அடியார்களைக் கண்ட இப்பேறு, என் கண்களையும் நெஞ்சையும் களிக்கச் செய்கிறது.

 1584

பைவிரியும் வரியரவில்

        படுகடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்

மைவிரியும் மணிவரைபோல்

        மாயவனே என்றென்றும் வண்டார் நீலம்

செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்

        திருவடியைச் சிந்தித்தேற்கு

என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம்

        என் அன்புதானே

திருப்பார்கடலிலே திருவனந்தாழ்வான் மேல் கண்வளரும் எளியோனே! என்றும் அருள் படர்ந்த நீலமணி மலை போல் திருமேனித் திருமாலே! பலகாலும் வண்டுகள் அமரும் கருநெய்தல் கழனிகளிலே மலரும் தண்சேறை எம்பெருமானை சிந்திக்கின்றேன். என் ஐம்பொறிகளால் விளையும் அறிவூற்றிப் பெருமானை தனக்கே ஆக்கிக்கொண்டு அடிமைப்பட்டவர்பால் என்னுடைய அன்பும் அடிமைப்படும்.

 1585

உண்ணாது வெங்கூற்றம்

        ஓவாத பாவங்கள் சேரா

மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்

        மென் தளிர்போல் அடியினானை

பண்ணார வண்டு இயம்பும்

        பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் தன்னை

கண்ணாரக் கண்டுருகிக்

        கையாரத் தொழுவாரைக் கருதுங்காலே

வானவரும் நானிலந்தோரும் கிட்டி வணங்கும் மெல்லிய தளிர் திருவடிகளை உடையவனை, வண்டுகள் பண் மலியப் பாடுகின்ற பசுஞ்சோலையுடைய திருச்சேறைப் பெருமானைக், கண்ணாரக் கண்டு வணங்கி, மனமுருகி கைகளைக் குவித்துத் தொழுபவர்களை நினைக்குமளவில், கொடிய செயலுடைய காலன் நம்மை வருத்தமாட்டான். நம்மை துன்புருத்தும் தீவினைகள் நம்மை அணுகமாட்டா.

 1586

கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்

        போதொருகால் கவலை என்னும்

வெள்ளத்தேற்கு என்கொலோ

        விளைவயலுள் கருநீலம் களைஞர் தாளால் தள்ள

தேன் மணநாறும்

        தண்சேறை எம்பெருமான் தாளை

நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இதுகாணீர்

        என்னுள்ளம் உருகுமாறே

வயல்களில் முளைத்துள்ள நெய்தல் மலர்களைக் களைந்ததால் மணம் பரவும் திருச்சேறைப் பெருமானது திருவடிகளை நாள்தோறும் மனத்தில் வைத்து நினைப்பவரை எனது மனம் நெகுழும். இப்பேறு எவ்வாறு எனக்குக் கிடைத்தது. நான் இறைவனுக்குரிய உள்ளுயிரை எனது என்று நினைக்கும் கள்வன், வஞ்சக நெஞ்சினன், ஆதலால் துன்பப் பெருங்கடலில் அழுந்தியிருப்பவன். எனக்கும் இப்பேறு கிட்டும்.

 1587

பூமாண்சோ் கருங்குழலார் போல் நடந்து

        வயல் நின்ற பேடையோடு

அன்னம் தேமாவின் இன்னிழலில் கண்துயிலும்

        தண்சேறை யம்மான் தன்னை

வாமான் தோ்ப் பரகாலன்

        கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர்

தூ மாண்சோ் பொன்னடிமேல் சூட்டுமின்

        நும் துணைக்கையால் தொழுது நின்றே

பூச்சூடிய கருங்கூந்தல் பெண்கள் போல் வயல்களிலே அன்னம் பெடையோடு உலாவி, தேமா மரத்தின் குளிர்ந்த நிழலில் உறங்குகின்ற திருச்சேறையில் உறையும் பெருமானைத் தாவிப்பாயும் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, பகைவர்களை வெல்லும் கலிகன்றி ஆழ்வார் பாடிய பாடல்களைப் பாடும் பக்தர்களை அழகு மிக்க தூய பெருமானதுத் திருவடிகளின் மேலே கைகளைக் குவித்து வணங்குவீர்.

–Subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-11;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருச்சேறை , பஞ்சஸார க்ஷேத்திரம்    

சங்க காலத்தில் விலைமாதர்களும் விபச்சாரமும் (Post No.15,666)

Written by London Swaminathan

Post No. 15,666

Date uploaded in London –28 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ENGLISH VERSION OF Prostitution in Ancient Tamil Nadu; Parattaiyar or public women in Narrinai (Post No.15,663) WAS POSTED YESTERDAY)

உலகில் விபச்சாரமும் விலை மகள்களும் இல்லாத எந்த சமுதாயமும் இல்லை; கலாசாரமும் இல்லை ; எல்லா மத நூல்களிலும் இது குறித்த எச்சரிக்கைகள் உள்ளன . எனினும் சங்கத் தமிழ் பாடல்களிலும் அருணகிரிநாதர் யாத்த திருப்புகழ் பாடல்களிலும் இது சற்று தூக்கலாகக் காணப்படுகிறது . இதனால் இது குறித்து தமிழ் அறிஞர்கள் கதைக்கவே பயப்படுகிறார்கள் ; கே கே பிள்ளை எழுதிய ஆங்கில நூலில் நற்றிணையில் உள்ள விலைமாதர்கள் பாடல்களை எழுதி இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்கிறார் . எங்கள் குடும்ப நண்பரும் மதுரை வடக்கு மாசிவீதியில் எங்கள் வீட்டுக்கு அடுத்து வசித்தவரும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் (எஸ் ஆர் கே ) இது குறித்து மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் :

“அகத்தினை இலக்கியம் உலக இயல் வாழ்வின் படப்பிடிப்பு இல்லை என்பதை இன்னும் ஒரு வகையிலும் ஊகிக்கலாம். சங்க காலத்தில் பரத்தையர் இருந்தனர் என்பதும் , மேல்வருக்க இளைஞர் பலர் பரத்தையர்களை நாடி இழிவுற்றனர் என்பதும் மதுரைக் காஞ்சிசிலப்பதிகாரம் முதலியவற்றால்  விளங்குவது மெய்யே . ஆனால் பரத்தைமை என்பது சிறுபான்மையோரைப் பிடித்த நோயே. மக்கட் தொகையுடன் ஒப்பிடும்போது விலைமகளிர் சிலரே . அவர்களும் பெரும்பாலும் புகார், மதுரை முதலிய பெரு நகரங்களிலே வாழ்ந்தனர் . ஆனால் அகத்திணை இலக்கியத் தலைவர்கள் மனைவியரை நீங்கி பரத்தையரை நாடிச் செல்வோராகக் காட்சி தருகின்றனர் . 966 கற்பியர் பாக்களில் 279 பரத்தையர் பிரிவுக்குரியனவாக உள்ளன. இது உண்மை வாழ்வின் வெளியீடு எனில் , குல மகளிர் பாதி, விலை மகளிர் பாதியாகப் பெண்குலம் அமைந்திருந்தது என்று தோன்றும். அத்தகைய இழிநிலை சமுதாயத்துக்கு ஒருபோதும் வாய்க்கவில்லை என்பது வெளிப்படை . எனவே அகத்திணை கற்பனையை சமுதாய வாழ்வின் சித்திரமாகக் கொள்வது பிழையே “.

— இந்தியப்  பண்பாடும் தமிழரும் – எஸ் இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை , 1971

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் கூட இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழர்களை எச்சரிக்கின்றனர் .

***

இனி நற்றிணையில் வரும் பாடல்களில் விலைமகளிர் பற்றி வரும் இடங்களைக் காண்போம்.

எல்லாப் பாடல்களும் மருதத் திணையில் உள்ளவை  ;  அந்த திணையில் இப்படிப்படுவது ஒரு மரபு; ஒரு பாணி ; அதிலும் குறிப்பாக பரணர் பாடல்கள் மிகுந்திருப்பதையும் கவனிக்க வேண்டும் . இவை தவிர ஒரே ஆணுக்குப் பல விலைமாதர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவனை இழுத்த விஷயமும் , விபச்சகாரிகளிடையே ஆட்களை பிடிக்க நடந்த சண்டைகளும் ஒரு விலைமாதர் சேரி க்குள்  வேறு ஒருவள் வாடிக்கையாளரைப் பிடிக்க வந்த போது விரட்டிய செய்திகளும் ஏனைய அகப்பாடல்களில் கிடைக்கின்றன

***

நற்றிணை 30 ஒரே ஆண்மகனைச் சுற்றி பல விலைமாதர்கள் இழுபறி

கடலில் செல்லும் பாய்மரக் கப்பல் கவிழ்ந்ததால் மனம் கலங்கி, அதிலிருந்த ஒரே ஒரு மிதக்கும் பலகையைப் பலர் அவரவர் பக்கம் இழுப்பது போல உன்னை பரத்தையர் பலர் அவரவர் அணைப்புக்கு இழுத்துத் துன்புறுவதைப் பார்த்தேன்.

30. மருதம்

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தோழி சொல்லியது.கொற்றனார் பாடல்

கண்டனென் மகிழ்ந! கண்டு எவன்செய்கோ?

பாணன் கையது பண்புடைச் சீறியாழ்

யாணர் வண்டின் இம்மென இமிரும்,

ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்

மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்  5

கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி

கால் ஏமுற்ற பைதரு காலை,

கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு,

பலர் கொள் பலகை போல

வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே.      

***

நற்றிணை Natrinai 100

பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச் சொல்லியது. பரணர் பாடல்.

பரத்தை சொல்கிறாள்: அவன் என் கூந்தலையும் கையையும் பிடித்து இழுத்தான். உன் மனைவியிடம் சொல்லிவிடுவேன் என்றேன். அவன் நடுங்கிப் போனான். அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது.

பாடல் 100. மருதம்

உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்உகிர்

மாரிக் கொக்கின் கூரல் அன்ன

குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்

தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்

வான் கோல் எல் வளை வௌவிய பூசல்   5

சினவிய முகத்து, ”சினவாது சென்று, நின்

மனையோட்கு உரைப்பல்” என்றலின், முனை ஊர்ப்

பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்

தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்

புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்    10

மண் ஆர் கண்ணின் அதிரும்,

நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.

***

நற்றிணை 20 பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தலைவி சொல்லியதுஓரம்போகியார் பாடல்.

மனைவி சொல்கிறாள் ,“ஐய, நீயா ஒன்றும் தெரியாதவர்?

அவளா ஒன்றும் தெரியாத மடந்தை? அவளை நான் என் கண்ணால் பார்த்தேனே.உன்னுடைய மார்பிலே அவள் படுத்துக்கிடந்தாள். அதனால் உன்னுடைய பூ மாலையின் மணம் அவள் கூந்தலில் கமழ்ந்தது.

அந்தக் கூந்தலை அவள் உலர்த்திக்கொண்டு ஆடையையும் ஆட்டிக்கொண்டு ,.வளையல் ஓசை கேட்கும்படி கையை வீசிக்கொண்டு தெருவில் நடந்துவந்தாள். கண்களை விரித்து அங்குமிங்கும் (உன்னைத்) தேடிக்கொண்டு வந்தாள்.

ஆமாம். அவள் உன்னைத் தழுவவே இல்லை?  (தழுவியவள் என்னும் ஏளனக் குறிப்பு).

மருதம்

ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,

மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்

தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்

துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,

செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில்,     5

பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,

சென்றனள் வாழிய, மடந்தை! நுண் பல்

சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;

மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,

பழம் பிணி வைகிய தோள் இணைக்    10

குழைந்த கோதை, கொடி முயங்கலளே.

***

நற்றிணை 380 Natrinai 380பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.;கூடலூர்ப் பல்கண்ணனார் பாடல்

பரத்தை வீட்டிலிருந்து மீளும் தலைவன் ,தன் வீட்டிற்குள் நுழைய முனைகிறான். பாணன் அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறான் அப்போது தோழி சொல்கிறாள்  “பயன் இல்லாத சொற்களைப் பேச வேண்டாம். சமையல் செய்த எண்ணெய் (தாளிக்கும்போது சிதறிய) பட்டு என் தலைவியின் ஆடை அழுக்காக உள்ளது. பால்

பருகும் குழந்தையின் வாயும் பட்டு,  நாற்றம் வீசுகிறது. தேரில் சென்று சிறந்த அணிகலன்களுடன் சேரியில் பகட்டும் மகளிருடன் வாழும் உன் தலைவனுக்கு என் தலைவி தகுந்தவள் இல்லை. அவனைக் கூட்டிக்கொண்டு ஒடி விடு” .

திணை மருதம்

நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு

மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,

திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,

புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;

வால் இழை மகளிர் சேரித் தோன்றும்     5

தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்

பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்

எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;

கொண்டு செல் பாண! நின் தண் துறை ஊரனை,

பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப்  10

புரவியும் பூண் நிலை முனிகுவ;

விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!

***

உன்னைத் தொட்டால் எச்சில்கலையைத் தொட்டதற்குச் சமம்இங்கிருந்து ஒடு

நற்றிணை 350 Natrinai 350தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.பரணர் பாடல்

நீ என்னை அணைக்காமையால் என் நலம் தொலையும்.

அப்படித் தொலைந்தாலும் தொலைந்துவிட்டுப் போகட்டும்.

நீ என்னை நெருங்க விடமாட்டேன். அப்படி உன்னை என்னிடம் நெருங்க விட்டால்,  என் கை என்னை அறியாமல் உன்னைத் தழுவிவிடும். அதனைத் தடுக்கும் வலிமை எனக்கு இல்லை.

உன் மார்போ, பரத்தை முலையைத் தழுவிய சந்தனத்தையும்,

தழுவியதால் வாடிய மாலையையும் உடையது. அது

பரத்தை உணவு உண்ட எச்சில் வட்டி போன்றது. என்னிடம் வராதே.

அவளைத் தழுவிய தோளுடன் என்னிடம் வராதே.

திணை மருதம்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,

பழனப் பல் புள் இரிய, கழனி

வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்

தொல் கவின் தொலையினும் தொலைக! சார   5

விடேஎன்: விடுக்குவென் ஆயின், கடைஇக்

கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை

சாடிய சாந்தினை; வாடிய கோதையை;

ஆசு இல் கலம் தழீஇயற்று;

வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே!              

***

பக்கத்தில் வராதேபோபோ !

நற்றிணை Natrinai 260 ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.பரணர் பாடல்

என்னை விரும்புபவன் போல நடித்துக்கொண்டு என்னை அணைத்துக்கொண்டு உறங்கும் பகைவன் நீ.

நான் உன் பழைய செயலை மறக்கமாட்டேன்;

அரசன் வயவன், பகைவர்களைப் போர்முனையில் அழித்தவன்.

அவன் தலைநகரம் இரும்பை. அது நீர்வளம் மிக்க ஊர்.

அந்த ஊர் போலத் தழைத்த என் கூந்தலில் சூடிய பூக்களை வாடச்செய்த பகைவன் நீ. அதனை நான் மறக்கமாட்டேன்.

இவ்வாறு பரத்தையிடம் சென்று வந்த தலைவனிடம் தலைவி கூறுகிறாள்.     

திணை மருதம்

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை

பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,

தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது

குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!

வெய்யை போல முயங்குதி: முனை எழத் 5

தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்

மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்

ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த

முகை அவிழ் கோதை வாட்டிய

பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே!                               

***

நற்றிணை Natrinai 225 பரத்தை தலைமகள் கேட்கும்படி சொல்லியது;  கபிலர் பாடல்

முருகக் கடவுள் போன்ற வலிமையோடு தன் சினத்தால் போரிட்ட யானையின் வெள்ளைக் கொம்பு கரை படிந்து சிவப்பாக காணப்படுவது போலவும், வாழைப்பூ மொட்டு போலவும், மகளிரின் ஓதிக் கொண்டை போலவும், தோன்றும் முலை உடையவர் யாரேனும் ஆசைதீரத் தழுவியவர் உண்டோ,  தோழி! என்னிடம் அன்பு இல்லாதவனாக அவன் இருக்கிறானே, என்று காமக்கிழத்தி தன் தோழியிடம் கலங்கிக் கூறுகிறாள்.

திணை குறிஞ்சி

முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்

பொருத யானை வெண் கோடு கடுப்ப,

வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,

மெல் இயல் மகளிர் ஓதி அன்ன

பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை     5

இரந்தோர் உளர்கொல் தோழி! திருந்து இழைத்

தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்

பயந்து எழு பருவரல் தீர,

நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

வன்புறை எதிர் அழிந்தது;

***

நற்றிணை 320 Natrinai 320 தெருவில் பொது மகளிர் நடமாட்டம்;  குடும்ப்பப்பெண்கள் அச்சம்

பரத்தையின் காதில் விழும்படி  சொல்லியது. கபிலர் பாடல்

துணங்கை விழா முற்றுப்பெற்றது. விழாவில் முழக்கிய முழவு மாட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. என்ன நோக்கத்தோடு இவள் தன்னை அழகு படுத்திக்கொள்கிறாள், என்று கேட்கிறாயா?  (தலைவனுக்குத் தோழி சொல்கிறாள்)

தழை அணிந்த அல்குலை உடைய ஒருத்தி (பரத்தை)

தெருவில் நடந்து சென்றாள். அதற்காக, ஊரில் உள்ள மகளிர் அனைவரும் தன் கணவனுக்கு வைத்திருக்கும் காவலை

அதிகப்படுத்தினர். அவர்கள் நல்ல அழகிகள் தான் என்றாலும் தம் கணவன்மாரின் கவனம் தம்மிடம் திரும்புமாறு தம்மை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.

காரி அரசன் ஓரி அரசனைக் கொன்றுவிட்டு

தன் பகையாளி ஓரி நகரில் நடந்துசென்றபோது

ஊரே ‘கல்’ என்று ஆள் நடமாட்டம் இல்லாமல் கிடந்தது போல்

இந்த ஊரின் நிலைமை ஆயிற்று.

திணை மருதம்

”விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;

எவன் குறித்தனள்கொல்?” என்றி ஆயின்

தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,

இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்

ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்,                5

காரி புக்க நேரார் புலம்போல்,

கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,

காவல் செறிய மாட்டி, ஆய்தொடி

எழில் மா மேனி மகளிர்

விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.   

***

நற்றிணை 340 Natrinai 340 பரத்தை வீட்டிலிருந்து திரும்பிய  தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.நக்கீரர் பாடல்

மகிழ்ந! நீ உன் உடலுறவுக்காரி வீட்டிலிருந்து வந்துள்ளாய்.

அதனால் உன்னை நான் தழுவமாட்டேன். அதற்காக உன்னை நான் சினந்துகொள்ளவும் மாட்டேன். செழியன் ஊர் போல் வளமுடன் திகழ்பவள் நான். என் வளையல்களைக் கழலச் செய்தவன் நீ  .என்னைப் பிரிந்து உன் பரத்தையோடு வாழுங்காலத்து என் வளையல்கள் உன்னை நினைந்து கழன்றன.அப்படிப்பட்ட உன்மீது சினம் கொள்வேனா? மனைவி தன் கணவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

திணை மருதம்

புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்

கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்

படை மாண் பெருங்குள மடை நீர் விட்டென,

கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை

அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி,        5

பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,

செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,

பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்

வாணன் சிறுகுடி அன்ன, என்

கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!     

***

போ போ நீ யார்கிட்ட வேணுமானாலும் போ !

நற்றிணை 360 Natrinai 360

விழாவில்,  விறலிப் பெண்பாவை ஆடுவாள். அவள் போன்ற ஒருத்தியை, நேற்று இழுத்துப் புணர்ந்து  அவளது புத்தழகைத் துய்த்தாய். இன்று  இன்பம் தரும் மெல்லிய தோள் கொண்ட மகளிரைப் பெறுவதற்காகச் சென்றுகொண்டிருக்கிறாய். பெருமானே!

உன் பரத்தைமை சிறக்கட்டும்.

அங்குசத்தால் குத்தி யானைக் குருதியைப் பலக்குவோர் சோறு கொடுத்தால் அது அதைத் திண்ணாமல் வாரி இறைக்கும்; அந்தச் சோற்றுக் கவளம் பயனற்றுப் போவது கண்டு பாகர் வருந்துவது போல, நீ சில பெண்களுக்கு கொடுத்த  செல்வம் பயன் இல்லாமல் போவது கண்டு நீ வருந்துகிறாய். அது எனக்கு மகிழ்வாக இருக்கிறது.இந்த இல்லத்தில் இன்பத்தை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.இப்போது நீ விரும்பியவளிடம் செல். உன் பரத்தமை வாழ்க.

(தலைவி சொல்வது போலத்

தோழி தலைவனிடம் சொல்கிறாள்.)

திணை மருதம்

முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய

விழவு ஒழி களத்த பாவை போல,

நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி,

இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்,

சென்றீ பெரும! சிறக்க, நின் பரத்தை!               5

பல்லோர் பழித்தல் நாணி, வல்லே

காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப,

கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்

முனியுடைக் கவளம் போல, நனி பெரிது

உற்ற நின் விழுமம் உவப்பென்;               10

மற்றும் கூடும், மனை மடி துயிலே.

பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; ஓரம்போகியார் பாடல்

***

பொது மகளிர் பற்றித் திருக்குறள்

வரைவின் மகளிர்

அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.1

கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.2

பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.3

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார்.4

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.5

அழகு முதலியவற்றால் செருக்குக்கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.6

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொதுமகளிரின் தோளைப் பொருந்துவர்.7

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்.8

ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.9

இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.10

–subham—

Tags-

சங்க காலத்தில், விலைமாதர்களும் விபச்சாரமும் , பொது மகளிர் , நற்றிணைப் பாடல்கள் , உண்மை நிலை என்ன? பொது மகளிர் பற்றித் திருக்குறள்