HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL ; இந்து மத கலைச்சொல் அகராதி-114 (Post16,197)

Written by London Swaminathan

Post No. 16,197

Date uploaded in London – 14 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 ஆங்கில அரிச்சுவடி வரிசையில் இப்பொழுது வி V என்னும் எழுத்தின் கீழுள்ள முக்கிய சொற்களைக் காண்போம் :

வாசஸ்பதி மிஸ்ரா (900-980 CE)

உலகத்தில் இலக்கிய அதிசயம் புரிந்தவர் வாசஸ்பதி மிஸ்ரா ஆவார் . தான் எழுதிய அத்தனை நூல்களையும் அவர் எழுதிய கால வரிசைக் கிராமத்தில் அவரே கொடுத்துள்ளார் ; எப்பொழுது ? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்! இந்திய தத்துவ முறைகளை பற்றி விளக்கியவர்களில் இவரே முதல்வர் ; இவர் ஆதி சங்கரரின் பிரம்ம சூத்திர உரைக்கு உரை எழுதியவர் அந்த நூல் பாமதி என்ப்படும்இவர் எழுதிய நூல்களில் இதுதான் புகழ்பெற்றது. இவர் பீஹார் மாநிலத்தின் மிதிலா பிராந்தியத்தைச் சேர்ந்தவர் ; அந்த பகுதியிலிருந்து வந்ததால் சீதா தேவிக்கு மைதிலி என்றும் பெயர் .

வாசஸ்பதி மிஸ்ரா வாழ்ந்த நகரின் பெயர் வாசஸ்பதி; இவர் மனைவியின் பெயர் பாமதி . காலம் – பத்தாவது நூற்றாண்டு.

பாமதி பற்றி காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)

மிதிலையைச் சேர்ந்த சிறந்த அறிஞரான வாசஸ்பதி மிஸ்ரர், ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு மிக விரிவானதொரு விளக்க உரையை (விவரணம்) எழுதத் தொடங்கினார்.அந்தத் தத்துவப் பணியில் அவர் தன்னை முற்றிலும் மறந்து, இரவும் பகலும் பல ஆண்டுகள் தீவிரமாக மூழ்கியிருந்தார். அவரது மனைவியான பாமதி, கணவரின் தியானத்திற்கும் எழுத்திற்கும் எந்தவித இடையூறும் நேராத வண்ணம், அவரிடமிருந்து எந்தவொரு உலகியல் எதிர்பார்ப்பும் இல்லாமல் பல வருடங்களாக அமைதியாகப் பணிவிடை செய்து வந்தார். அவளுக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்பதைக் கூட வாசஸ்பதி மிஸ்ரர் மறந்திருந்தார். நூல் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட அன்று இரவு, விளக்கு வெளிச்சத்தில் தனக்கு எண்ணெய் ஊற்றி உதவிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து வியப்புடன், “நீ யார்?” என்று கேட்டார்.அவளோ எவ்வித வருத்தமும் இன்றி, “நான் உங்கள் மனைவி, என் பெயர் பாமதி” என்று கூறினாள். )தனது ஞானத் தேடலால் மனைவியின் வாழ்வையும் இளமையையும் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று வாசஸ்பதி மிஸ்ரர் வருந்தினார். அவளது அசாத்தியமான தியாகத்திற்கும், எதிர்பார்ப்பற்ற சேவைக்கும் கைமாறாக, தான் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழித்து எழுதிய அந்த உன்னத வேதாந்த நூலுக்கு ‘பாமதி’ என்றே பெயரிட்டார். இந்த நூல் உலகம் உள்ளவரை அவளது பெயரை நிலைநிறுத்தும் என்று ஆசீர்வதித்தார். தத்துவ விளக்கம் (அவச்சேத வாதம்)’தெய்வத்தின் குரல்’ ஐந்தாம் பகுதியில், மஹா பெரியவா அத்வைதக் கோட்பாட்டை விளக்கும் போது, அத்வைதத்தில் உள்ள இரு முக்கியப் பிரிவுகளான விவரண பிரஸ்தானம் (VivaraNa Prasthaanam) மற்றும் பாமதி பிரஸ்தானம் (Bhamati Prasthaanam) ஆகியவற்றின் தத்துவ வேறுபாடுகளை எளிமையாக விளக்கியுள்ளார்: பிம்ப-பிரதிபிம்ப வாதம் (விவரண முறை): சூரியனின் ஒளி தண்ணீர்த் துளிகளில் பிரதிபலிப்பதைப் போல, ஒரே பரமாத்மா மாயையின் காரணமாகப் பல ஜீவாத்மாக்களாகத் தெரிகிறது என்பது விவரணப் பிரிவின் வாதம். [அவச்சேத வாதம் (பாமதி முறை): பாமதி பிரஸ்தானம் ‘அவச்சேத வாதம்’ (Avachchinna / Avachcheda Vaadam) எனப்படும் தத்துவத்தைக் கையாள்கிறது. ‘அவச்சேத’ என்றால் எல்லைகளுக்கு உட்பட்டது என்று பொருள். மஹா பெரியவா / காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)

 இதற்கு ஒரு எளிய உதாரணம் தருவார்: ஆகாயம் (வெட்டவெளி) என்பது எங்கும் நிறைந்தது. நாம் ஒரு திறந்தவெளியில் பல வெற்றுப் பானைகளை வைத்தால், ஒவ்வொரு பானைக்குள்ளும் ஆகாயம் இருக்கிறது. பானைக்குள் இருக்கும் ஆகாயத்தை ‘கடா ஆகாயம்’ (பானை ஆகாயம்) என்றும், வெளியில் இருக்கும் எல்லையற்ற ஆகாயத்தை ‘மஹா ஆகாயம்’ என்றும் சொல்கிறோம்.உண்மையில் ஆகாயம் இரண்டாகப் பிரியவில்லை. பானை என்ற எல்லை (உபாதி) இருக்கும் வரைதான் உள்ளே, வெளியே என்ற பேதம் தெரிகிறது. பானை உடைந்ததும் உள்ளே இருந்த ஆகாயம் மஹா ஆகாயத்தோடு ஒன்றிவிடுகிறது.இதேபோல, மனித உடலும் மனமும் பானையைப் போன்ற எல்லைகளாகும். இந்த எல்லைகளுக்குள் கட்டுப்பட்டுக் காணும் ஆன்மாவே ‘ஜீவாத்மா’. அறியாமை நீங்கி இந்த எல்லைகள் உடையும் போது, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத உண்மை புலப்படும் என்று பாமதி பிரஸ்தானம் விளக்குவதாக மஹா பெரியவா /காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) குறிப்பிட்டுள்ளார். அத்வைத தத்துவ உலகிற்கு வாசஸ்பதி மிஸ்ரரின் ‘பாமதி’ உரை ஒரு மிகச்சிறந்த கொடை என்றும், இல்லறத்தில் இருந்துகொண்டே தியாக உணர்வோடு ஆன்மீகப் பணிக்குத் துணைநின்ற பாமதியின் பெருமைக்கு அது ஒரு சான்று என்றும் காஞ்சி ஆச்சார்யார் போற்றியுள்ளார்.

வாசஸ்பதி மிஸ்ரா எழுதிய நூல்கள்

1) நியாய கனிகா : This is a commentary on Vidhiviveka, a Bhāṭṭa Mīmāṃsā work of Maṇḍanamiśra.

2)  நியாயசூத்ரோத்தாரா : This is a compilation of the Nyāyasūtra fixing the readings of the text of the sūtras.

3)நியாய சூஸிநிபந்த : This arranges the same Nyāyasūtra.

4) நியாயவார்த்திக்க தாத்பர்ய டீகா : This work also known by its shorter and more popular name, ‘tātparyaṭīkā’, is an extensive commentary on the Nyāyavārtikā of Uddyotakara Bhāradvāja.

5) தத்வஷமீக்க்ஷ : It is generally believed to be a commentary on the Brahmasiddhi of Maṇḍanamiśra. But it has been recently suggested that this is also an independent Mīmāṃsa treatise of Vācaspati Miśra. This work is lost.

6) தத்வ பிந்து : This is also an independent Bhāṭṭa Mīmāṃsa treatise of Vācaspati Miśra.

7) சாணக்யா தத்வ கெளமுதி : This work, known briefly as Tattvakaumudī, is a brilliant commentary on the famous Sāṅkhyakārikā of Īśvarakṛṣṇa.

8) யோக தத்வ வைசாரதி known also by its shorter title Tattvavaiśāradī: This work is a commentary on the Pātañjalayogasūtrabhāṣya of Vyāsa.

9) பாமதி: The full title of this work is perhaps Śārīrakabhāṣya bhāmatī. This is the earliest known exhaustive and complete commentary on the Brahmasūtraśāṅkara-bhāṣya.

It is interesting to note that in a verse in the epilogue of the Bhāmatī Vācaspati Miśra gives a full list of his own works arranged exactly in the above order suggested by the modern researchers. In the Indian tradition Vācaspati Miśra is again perhaps the first writer to give a complete list of his works, that too in a chronological order.

***

வைதேஹி – சீதாதேவியின் பெயர்; ஜனகர் ஆண்ட விதேஹ நாட்டிலிருந்து வந்தவள் என்று பொருள்; விதேஹ என்றால் தேகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆத்ம விடுதலையைப் பற்றி தியானம் செய்பவர்  என்று பொருள் . மிதிலை எரிந்திட வேதப்பொருளை வினவும் மதி ஜனகன் மதி என்று பாரதியார் புகழந்ததிலிருந்து இதை அறியலாம்.

***

வைகுண்டம்

விஷ்ணுவின் இருப்பிடம் ; லெட்சுமி தேவியுடன் வாசம் செய்யும் இடம் ; வானவியல் ரீதியில் இது மகர ராசியில் உள்ளது . சம்ஸ்க்ருத மொழியில் இதற்கு கவலை இல்லாத இடம் என்று பொருள்; வைகுண்டத்தை அடைவோருக்கு நித்திய ஆநந்தம், பேரானந்தம் இருக்கும்; பிறப்பு இறப்பு என்ற கவலையே இல்லை

இந்து சமய நூல்களில் பரமபதம்விஷ்ணு லோகம் என்றும் சொல்லுவார்கள் ;அங்கே தங்க மயமான கட்டிடங்களும் ரத்தின கற்களாளான கட்டிடங்களும் தொங்கும் தோட்டங்களும் இருப்பதாக புராணங்கள் வருணிக்கின்றன .

வைகுண்ட ஏகாதசி

மாதம் தோறும் இரண்டு முறை வரும் ஏகாதசி உண்ணாவிரத நாட்களில் மிகவும் சிறப்புடையது டிசம்பர் மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி  ஆகும்; இதற்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு . 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 20 இது வருகிறது. மார்கழி மாதத்தில் வரும் இந்த ஏகாதசியில் நாள் முழுதும் பட்டினி கிடந்து இரவு முழுதும் விஷ்ணுவைப் பற்றி கதைகளை அல்லது பாடல்களைக் கேட்டு பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறந்தவுடன் உள்ளே சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம்; அவ்வாறு செய்தால் பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை  (மோக்ஷம்/ முக்தி) பெற்று வைகுண்டத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.

***

வாஜசநேயி

வாஜசநேயி சம்ஹிதை , நான்கு வேதங்களில் ஒன்றான யஜுர் வேதத்தின் (சுக்ல யஜுர் வேதம்) மந்திரத் தொகுப்பாகும். சூரிய பகவான் குதிரை (வாஜி) வடிவம் எடுத்து யக்ஞவல்கிய முனிவருக்கு இந்த வேதத்தை உபதேசித்ததால், இதற்கு ‘வாஜசநேயி சம்ஹிதை’ என்ற பெயர் வந்தது.  சமஸ்கிருதத்தில் ‘வாஜி’ என்றால் அன்னம் (உணவு) அல்லது குதிரை என்று பொருள்.  யக்ஞவல்கியர்: சூரிய தேவனை நோக்கித் தவம் புரிந்து, அவரிடமிருந்து நேரடியாகப் பெற்ற தூய்மையான வேதம் என்பதால் இது சுக்ல யஜுர் வேதம் (வெள்ளை யஜுர் வேதம்) என்றும் அழைக்கப்படுகிறது. வாஜசநேயி சம்ஹிதை இரண்டு முக்கிய கிளைகளாகப் (சாகாக்கள்) பிரிக்கப்பட்டுள்ளது: மத்யந்தின சாகா (Madhyandina Recension): வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதில் 40 அத்தியாயங்கள், 303 அனுவாகங்கள் மற்றும் 1975 மந்திரங்கள் உள்ளன.

காண்வ சாகா (Kanva Recension): தென்னிந்தியாவில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இதிலும் 40 அத்தியாயங்கள் இருந்தாலும், 2086 மந்திரங்கள் உள்ளன. யாகங்கள் மற்றும் சடங்குகள்: தர்சபூர்ணமாஸம் (அமாவாசை, பௌர்ணமி யாகங்கள்), அக்னிஹோத்திரம், சோமயாகம், வாஜபேயம், அஸ்வமேதம் மற்றும் புருஷமேதம் போன்ற பல்வேறு வேத கால யாகங்களை நடத்துவதற்கான மந்திரங்கள் இதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

ஈசாவாஸ்ய உபநிடதம்: இந்த சம்ஹிதையின் இறுதி அத்தியாயமான 40-வது அத்தியாயம் உலகப் புகழ்பெற்ற ஈசாவாஸ்ய உபநிடதம் ஆகும். இது ஆன்மா, தியாகம் மற்றும் பிரம்ம ஞானத்தைப் பற்றிப் பேசும் மிக முக்கியமான வேதாந்தப் பகுதியாகும்.

ருத்ராஷ்டாத்யாயி: சிவபெருமானை வழிபடும் புகழ்பெற்ற ‘ஸ்ரீ ருத்ரம்’ (நமகம், சமகம்) மந்திரங்கள் இந்த சம்ஹிதையின் 16 மற்றும் 18-வது அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளன.

***

வஜ்ர

கடினமான என்பது இதன் பொருள்; இந்திரனின் ஆயுதம் இதுதான் ; தீய சக்திகளை அழிப்பதற்காக ததீசி முனிவர் தன்னுடைய முதுகெலும்பினைக் கொடுத்தார்; விஷ்வகர்மா அதிலிருந்து வஜ்ராயுதத்தை உருவாக்கி இந்திரனிடம் கொடுத்தார்

வைரம் என்னும் ரத்தினைக் கல்லுக்கும் இதே பெயர்; அது வஜ்ரம் என்னும் சொல்லின் மருவு ஆகும் ; பிராமணப் பெண்கள் பேசிய பிராகிருத மொழியிலிருந்து வந்தது ; வீட்டிலுள்ள பெண்களும் கீழ்மட்ட ஊழியர்களும் கொச்சையான சம்ஸ்க்ருதம் பேசுவர் ; இந்தப் பேச்சு வழக்கினை பிராகிருதம் என்பார்கள் ; காளிதாசன் நாடகங்களிலும் பெண்களும் வேலைக்காரர்களும் மீனவர்களும் பேசிய பிராகிருத வசனங்களைக் காணலாம் .

***

வாக்கியபதீயம்

வாக்கியபதீயம் (Vakyapadiya) என்பது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய இலக்கண அறிஞரும் தத்துவஞானியுமான பர்த்ருஹரியால் (Bhartrihari) சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு புகழ்பெற்ற நூலாகும். இது மொழியியல் தத்துவம் (Philosophy of Language) மற்றும் சமஸ்கிருத இலக்கணத்தின் (Vyakarana) அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும் மிக முக்கியமானதொரு நூல் [இந்த நூலின் முக்கிய அம்சங்கள் :1. மூன்று பிரிவுகள் (திரிகாண்டீ – Trikandi)இந்நூல் மூன்று முக்கிய காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பிரம்ம காண்டம் (Brahma-kanda): இது மொழியின் ஆன்மீக மற்றும் பிரபஞ்சத் தன்மையை விளக்குகிறது. பிரம்மமும் மொழியும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை இது ஆராய்கிறது. 2.வாக்கிய காண்டம் (Vakya-kanda): இது வாக்கியங்களின் அமைப்பு, அதன் அர்த்தம் மற்றும் ஒரு வாக்கியம் எவ்வாறு முழுமையான பொருளைத் தருகிறது என்பதைப் பற்றி விவரிக்கிறது. 3.பத காண்டம் (Pada-kanda): இது சொற்கள், அவற்றின் இலக்கணக் கூறுகள், பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களின் பகுப்பாய்வு போன்றவற்றை விரிவாகக் கூறுகிறது.

 ஸ்போட வாதம் (Sphota Theory)

பர்த்ருஹரியின் மிக முக்கியமான பங்களிப்பு ஸ்போட (Sphota) என்ற கோட்பாடு ஆகும். இதன்படி, நாம் கேட்கும் ஒலிகள் தனித்தனியாக இருந்தாலும், அவை நம் மனதில் ஒரு முழுமையான கருத்தையோ அல்லது அர்த்தத்தையோ திடீரெனத் தோற்றுவிக்கின்றன (Bursts of sound conveying meaning). ஒரு வாக்கியத்தின் உண்மையான அர்த்தம் அதன் தனித்தனி சொற்களைக் கூட்டுவதால் வருவதில்லை, மாறாக அது ஒட்டுமொத்தமாகவே மனதில் புலப்படுகிறது என்று அவர் வாதிடுகிறார்.  மொழியும் அறிவும்  பர்த்ருஹரியின் கூற்றுப்படி, “உலகில் மொழி வடிவம் இல்லாத அறிவு என்று எதுவுமே இல்லை”. மனிதர்களின் அனைத்து எண்ணங்களும், உலகத்தைப் பற்றிய புரிதல்களும் மொழியின் மூலமாகவே கட்டமைக்கப்படுகின்றன என்பதை இந்நூல் ஆழமாக விளக்குகிறது.

***

வலன்  (वल).—(பலன் ) அசுரர்.

ரிக்வேதத்தில் இந்திரனால் கொல்லப்பட்ட அசுரர்களில் ஒருவன் . தேவர்களின் பசுக்களைத் திருடி குகைகளில் அடைத்துவைத்த இவனை இந்திரன் வஜ்ராயுதத்தால் கொன்றான் . இதற்கு தத்துவ விளக்கமும் உண்டு. உஷஸ் என்னும் ஒளி தேவதையை அசுரர் வலன் ஒளித்து வைக்கவே இந்திரன் அதை நீக்கினான்;   வலன் பற்றி அரவிந்தர் கூறியதாவது- இறைவனை அடைய முடியாது மனிதர்களை தடுக்கும் இருள் என்னும் அறியாமைதான் வலன்.

வேதங்களை மொழி பெயர்த்த வெளிநாட்டினர் இதை இயற்கை நிகழ்ச்சி என்றே கருதுகின்றனர் ; பசுக்களை குகையில் ஒளித்துவைத்தான் வலன், என்று எண்ணற்ற இடங்களில் ரிக் வேதம் சொல்கிறது ; இதை பசுக்கள் என்று எடுத்துக்கொள்ளாமல்,  திருமூலர் பசுக்களை எப்படிக் கையாள்கிறாரோ அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து; பார்ப்பான் அகத்திலே பாற் பசு ஐந்துண்டு என்பது ஐந்து புலன்கள் என்று திரு மூலர் உவமிக்கிறார் . பத்ம புராண பூமி காண்டத்தில் இவனைப்பற்றிய கதை வருகிறது  – வலன் , ஒரு நாள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட இந்திரன் அவன் மீது வஜ்ராயுதம் என்னும் இடி மின்னலைப் பாய்ச்சி அவனை வீழ்த்தினான் .

***

வால்மீகி கதை राम से बड़ा राम का नाम .

ராம் சே படா ராம் கா நாம்

“ராம் சே படா ராம் கா நாம்” (राम से बड़ा राम का नाम) என்பது புகழ்பெற்ற ஒரு இந்திப் பழமொழி ;. இதற்கு “ராமனை விட ராமனின் நாமமே (பெயரே) பெரியது” என்று பொருள்.இந்து மதக் கதைகளின்படி, இந்த வரிகளுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது:கடலைக் கடந்த அனுமன்: ராமபிரான் சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்ல கடலில் பாலம் கட்ட வேண்டியிருந்தது. அப்போது வானரங்கள் ‘ராம்’ என்ற திருநாமத்தை கல்லில் எழுதி தண்ணீரில் போட்டபோது, அந்தப் பாறைகள் நீரில் மிதந்தன. ஆனால், ராமரே ஒரு கல்லை எடுத்துப் போட்டபோது அது நீரில் மூழ்கியது. இதன் மூலம் ராமரின் சக்தியை விட அவரது பெயருக்கு அதிக சக்தி இருப்பது உலகிற்கு உணர்த்தப்பட்டது. ராமபிரானால் நேரடியாக சிலருக்கு மட்டுமே உதவ முடிந்தது. ஆனால், அவரது மறைவுக்குப் பிறகும் இன்று வரை கோடிக்கணக்கான பக்தர்கள் “ராம” நாமத்தை உச்சரிப்பதன் மூலம் தங்களின் இன்னல்களிலிருந்து விடுபட்டு அமைதி பெறுகிறார்கள்.

மிக முக்கியமான ஒரு விஷயம் ராமாயணத்திலேயே வருகிறது ;அதாவது வேடனாக வாழ்க்கை நடத்திய வால்மீகிக்கு ராம என்ற நாமத்தைச் சொல்ல  தெரியவில்லை. மரா,  மரா என்று நாரதர் உபதேசிக்கிறார் . அவன் முனிவர் ஆகி நமக்கு உலகப் புகழ்பெற்ற , காலத்தால் அழிக்க முடியாத ராமாயணத்தைக் கொடுத்தார் ; இதிலுள்ள மிகப்பெரிய உண்மை, ராமன் பிறப்பதற்கு முன்னரே ராம நாமம் துவங்கிவிட்டது பின்னர்தான் நமக்கு ராமாயணம் என்னும் நூல் கிடைத்தது ; இந்த சொல்லுக்கு உள்ள மந்திர சக்தியை வைத்தே வசிஷ்ட முனிவர் கெளசல்யா  தேவியின் குழந்தைக்கு ராம என்ற நாமத்தைச் சூட்டினார்.

வால்மீகி மர்மம்

சங்க இலக்கியத்தில் மிகவும் பழைய பகுதி புறநானூறு. இதில் 358–ஆவது பாடலை இயற்றியவர் வால்மீகி (வன்மீகனார், வான்மீகனார் என்று எழுதப்பட்டுள்ளது). யார் இந்த வால்மீகி என்று தெரியாமலேயே இருந்தது. இவரும் உலகப் புகழ்பெற்ற ராமாயணப் புகழ் வால்மீகி போலவே தவத்தின் பெருமையைப் பாடி இருக்கிறார். துறவறமே பெரிது, இல்லறம் அதற்குப் பக்கத்தில் கூட வரமுடியாது. யார் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்குவார்களோ அவளிடம் தான் லெட்சுமி தேவி ஒட்டிக்கொள்வாள். யார் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது லெட்சுமி தேவிக்குப் பற்று இராது. உலகம் நிலயற்றது. ஒரே நாளில் ஏழு மன்னர்களைக் கண்டது இந்த உலகம் என்று தத்துவ விஷயங்களைக் கூறியுள்ளார். இவர் ராமாயண வால்மீகியாக இருக்கலாம் என்று கூட சில அறிஞர்கள் கருதினர். அனால் உண்மையில் வால்மீகி என்பது ஒரு கோத்திரப் பெயர்.

வால்மீகி கோத்திரத்தில் பிறந்த எல்லோரும் அப்பெயரைவைத்துக் கொள்ளமுடியும். இது போதாயன ஸ்ரௌத சூத்திரத்தில் உள்ளதை பி.எல்.பார்கவா எழுதிய ‘’புராணத்தில் வரலாற்றுச் செய்திகள்’’ என்ற நூலில் எழுதியிருக்கிறார். கீழே ஆங்கிலப் பகுதியில்  இருப்பது அவருடைய வாசகம்: 

The following note was copied by me on 5th May 2002 from the book ‘’Retrieval of History from Puranic Myths’’ by P.L.Bhargava (available at SOAS LiBrary, University of London): 

Pravaradhyaya of the ancient Baudhayana Srauta Sutra (800 to 400 BC) mentions Valmiki as a Gotra in the Vatsa Paksha of the family of Bhrgu. This name thus could be borne by other persons of this gotra and this is proved by tha fact that we learn from the Taitriya Pratisakhya of a Phoenician Valmiki who was different from the famous poet Valmiki.’’

 ராமாயணம் எழுதிய வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்து—முனிவராகவும், உலக மஹா கவிஞராகவும் மாறினார். அவர் ராம ராம என்று செபித்து தவம் செய்த காலத்தில் அவர் மீது புற்று வளர்ந்தது. கறையான் புற்றுக்கு வன்மீகம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். அதன் காரணமாக அவர் வால்மீகி என்று பெயர் பெற்றார். ஆனால் புறநானூற்று வால்மீகி அவர் பிறந்த குலம், கோத்திரம் காரணமாகப் பெயர் பெற்றார்.

 பிற்காலத்தில் பல முனிவர்களும் சித்தர்களும் இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர்கள் எழுதிய பாடல்களே அவர்களைப் பிற்காலத்தியவர் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வன்மீகநாதர் சந்நிதியும், திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வன்மீகர் என்பது எவ்வளவு பொதுவாகப் புழங்கப்பட்ட பெயர்கள் என்பதற்குச் சான்று பகரும். ஒருவேளை ராமாயண வால்மீகியின் மீது அன்பு கொண்டு அவர் பெயரையே பலரும் சூட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சோகம் மாறி ஸ்லோகம் பிறந்தது

வால்மீகி தன் இளமைப் பருவத்தில் ரத்னாகரர் என்ற பெயருடன் காடுகளில் வழிப்பறிக் கொள்ளை அடிக்கும் வாழ்க்கை வாழ்ந்தார்.

நாரதரின் கேள்வி: ஒருமுறை நாரத முனிவர் அங்கு வந்தார். அவரிடம் ரத்னாகரர் சிக்கினார். நாரதர் அவரிடம், “நீ செய்யும் பாவங்களுக்காக உன்னுடைய குடும்பத்தினர் உன்னுடன் பங்கு பெற்றுக்கொள்வார்களா?” என்று கேட்டார்.ரத்னாகரர் தன் மனைவியையும் குடும்பத்தினரையும் கேட்டபோது, “உன் பாவத்திற்கு நாங்க பொறுப்பல்ல” என்று அவர்கள் கூறினர். இதனால் மனம் மாறிய ரத்னாகரர் நாரதரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நாரதர் அவருக்கு ‘ராம’ நாமத்தை உச்சரிக்க உபதேசித்தார். ரத்னாகரர் முழுமையான தியானத்தில் ஆழ்ந்து பல ஆண்டுகள் ராம நாமத்தை জபித்தார்.  அவரைச் சுற்றிலும் கறையான்கள் புற்று மூடிக்கொண்டன.மறுபிறப்பு: புற்றிலிருந்து (வால்மீகம் என்றால் புற்று) வெளிப்பட்டதால் அவர் ‘வால்மீகி’ என்று அழைக்கப்பட்டார்.

 ஒருநாள் தமஸா நதிக்கரையில் குளிக்கச் சென்றபோது, வேடன் ஒருவன் அம்பால் வீழ்த்திய இணைப் பறவைகளில் ஒன்று வீழ்ந்து இறக்க, மற்றொரு பறவை துயரத்தால் அலறியதைக் கண்டார்.அந்தத் துயரம் வால்மீகியின் நாவில் ஒரு சாபக் கவிதையாக இசை வடிவில் வெளிப்பட்டது. அங்கு தோன்றிய பிரம்ம தேவன்,  ஸ்ரீராமரின் வரலாற்றை இராமாயணம் என்ற காவியமாக எழுதும்படியும் வால்மீகியை ஆசீர்வதித்தார்.உலகில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரைக்கும் ராமாயணக் கதை உலகங்களில் விளங்கப் போகிறது என்று ஆசீர்வதித்தார் பிரம்மா.

யாவத் ஸ்தாஸ்வந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே I

தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியேழாம் ஸ்லோகம்

பூமி உள்ளவரை ராமாயணம் ஒலிக்கும்!!!

ராமாயணம் தோன்றக் காரணமாக அமைந்ததே ஒரு சிலேடை ஸ்லோகத்தால் தான்!

இனிமையான குரலுடைய இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளுடைய ஆண்,பெண் ஜோடியை குரூரங்களுக்கு இருப்பிடமான ஒரு வேடன் பார்த்தான்.அதில் ஆண் பறவையைக் கொன்றான்.பெண் பறவை கீழே தள்ளப்பட்டு பூமியில் புரளுகிற ரத்தத்தினால் பூசப்பட்ட சரீரமுடைய தன் ஜோடிப் பறவையைப் பார்த்து பரிதபிக்கத்தக்க புலம்பலைப் புலம்பிற்று. அந்தப் பறவையைப் பார்த்த தர்மாத்மாவான வால்மீகி முனிவருக்குக் கருணை உண்டாயிற்று. அவர் ‘இது அதர்மம்’ என்று ஒரு வசனத்தைக் கூறினார்:

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I

யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

நிஷாத – வேடா! க்ரௌஞ்சமிதுனா – க்ரௌஞ்ச மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த ஏகம் – ஒன்றை அவதீ: – கொன்றாய் தத் ஸ்வே – அதனால் நீ ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – இருப்பை மா அகம::-அடைய மாட்டாய்

இதைச் சற்று சிந்தித்த அவருக்கு இதே வசனத்திற்கு வேறு ஒரு பொருள் தோன்றியது!

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I

யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

மாநிஷாத – ஸ்ரீனிவாஸ! க்ரௌஞ்சமிதுனாத் – ராக்ஷஸ மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் புத்தி கெட்ட ஏகம் – ஒருவனை அவதீ: – கொன்றீர்; யத் ஸ்வே – அதனால் நீர் ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை மா அகம::-அடைந்தீராக!

ஆக இந்த ஸ்லோகமே இரு அர்த்தம் கொண்ட ச்லேடை ஸ்லோகமாக ஆனது!

சற்று சிந்தித்த அவருக்கு ஒரு அதிசயம் விளங்கியது!

பாதபத்தோக்ஷரசமஸ்தந்த்ரிலயசமன்வித: I

ஷோகார்தஸ்ய ப்ரவ்ருத்தோ மே ஸ்லோகோ பவது நான்யதா II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினேழாம் ஸ்லோகம்

சோகார்தஸ்ய – சோகத்தால் பீடிக்கப்பட்ட மே – என்னிடமிருந்து ப்ரவ்ருத்த – உண்டானதும் பாதபத்த: – பாதங்களோடமைந்த அக்ஷரசம: – எழுத்தொத்த தந்த்ரிலயசமன்வித: – வீணைத் தந்தியில் தாள லயத்தோடு கூடினது ஸ்லோக: – ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே பவது – இருக்கட்டும் அன்யதா ந – வேறு விதமாக இல்லை.

தானே தாள லயத்துடனும் அற்புதமான அர்த்தத்துடனும், பொருத்தமான சந்தத்துடனும் அமைந்த அந்தச் செய்யுளுக்கு ஸ்லோகம் என்று அவர் பெயர் தந்தார். இப்படியாகத் தான் சங்கீத லயமும் அர்த்தமும் சந்தமும் உள்ள ராமாயணம் உதயமாயிற்று!

Tags- வாசஸ்பதி மிஸ்ரா, பாமதி, .HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL , இந்து மத கலைச்சொல் அகராதி-114, வால்மீகி கதை

–subham

பாஸா நாடகங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,150)

Written by London Swaminathan

Post No. 16,150

Date uploaded in London – 31 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பாஷா அல்லது பாஸா என்பவர் யார்அவர் எத்தனை நாடகங்களை எழுதியுள்ளார் ?

2

அவருடைய நாடகங்களில் மிகவும் புகழ்பெற்றது எதுஅது யாரைப் பற்றியது ?

3

அவருடைய 13 நாடகங்களின் பெயர்கள் என்ன?

4

பாஸா வின் காலத்தை அறிய உதவும் முக்கிய விஷயம் எது ?

5

கிரேக்க நாடகங்களைக் காப்பி அடித்துதான் நாடகம் என்பதே இந்தியாவுக்கு வந்ததா ?

6

இவருடைய நாடகங்களில் நாம் காணும் சிறப்பு அம்ஸங்கள் என்ன ?

7

இவருக்குப்பின்னர் நாடகம் எழுதிய காளிதாசன் உவமைகளால் சிறப்பு அடைந்தார் இவர் பெயர் அந்த அளவுக்குப் பரவாதது ஏன் ?

8

காளிதாசனின் சாகுந்தலம் முதலிய நாடகங்களை தமிழ் உபாதா எல்லா மொழிகளிலும் காணலாம்  பாஸா நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்களா?

9

இவர் வாழ்ந்த காலம் பற்றி சம்ஸ்க்ருத அறிஞர்கள் கூறுவது என்ன ?

10

பாஸா நாடகங்களில் காணப்படும் பொன்மொழிகள் என்ன ?

**********************

விடைகள்

1.பாஷா அல்லது பாஸா அல்லது பாசர் என்று குறிப்பிடப்படும் இவர் காளிதாசனுக்கும் முன்னால் வாழ்ந்த இந்தியாவின் முதல் நாடக ஆசிரியர் ஆவார்; இவர் 13  நாடகங்களை எழுதியுள்ளார் .பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) என்ற நூலில் வேறு இடத்தில் கிடைக்காத பல செய்திகளை எழுதியுள்ளார்.

ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.

***

அவருடைய நாடகங்களில் மிகவும் புகழ்பெற்றது “ஸ்வப்னவாசவாதத்தா“.இது உதயணன் – வாசவாதத்தா ஆகிய இருவரின் காதல் கதை ; இதில் அரசியல் செய்திகளும் உள்ளான

 பாஷாவின் நாடகங்களிலேயே மிக உயரிய படைப்பாகக் கருதப்படுகிறது.

***

3. அவருடைய 13 நாடகங்களின் பெயர்கள்:

மகாபாரதம், ராமாயணம் மற்றும் மக்கள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பாஷா இந்த நாடகங்களை இயற்றியுள்ளார்.ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டவை:

1.பிரதிமா நாடகம் (Pratima Nataka): ராமாயணத்தின் ஆரண்ய காண்டம், அயோத்தியா காண்டப் பின்னணியில், கைகேயி போன்ற பாத்திரங்களின் நற்பண்புகளையும் விளக்கும் தனித்துவமான நாடகம்.

2.அபிஷேக நாடகம் (Abhiseka Nataka): ராமரின் பட்டாபிஷேகத்தை மையமாகக் கொண்ட நாடகம்.

மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டவை:

3. ஊருபங்கம் (Urubhanga): துரியோதனனின் தொடை பிளக்கப்பட்டு வீழ்வதைச் சித்தரிக்கும் சமஸ்கிருதத்தின் அரிய சோக நாடகம்.

4. கர்ணபாரம் (Karnabhara): கர்ணனின் அஸ்திரக் கொடை மற்றும் அவனது மனபாரத்தை விவரிக்கும் ஒரு அங்கம் கொண்ட நாடகம்.

5. தூதவாக்யம் (Duta Vakya): கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது செல்லும் கதை.

6. தூதகடோத்கஜம் (Duta Ghatotkaca): கடோத்கஜனின் தூது பற்றிய நாடகம்.

7. மத்யமவ்யாயோகம் (Madhyama Vyayoga): பீமனுக்கும் இடும்பனைக்கும் இடையிலான கதையை அடிப்படையாகக் கொண்டது.

8. பஞ்சராத்ரம் (Panca Ratra): பாண்டவர்களின் ஐந்து இரவு கால மறைமுக வாழ்வை மையமாகக் கொண்டது.கிருஷ்ணரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது:

9. பாலசரிதம் (Bala Carita): கிருஷ்ணரின் இளமைக்கால லீலைகள் மற்றும் கம்ச வதத்தைப் பாடும் நாடகம்.உதயணன் மற்றும் கற்பனைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை:

10. ஸ்வப்ன வாசவதத்தா (Svapna Vasavadatta): பாஷாவின் நாடகங்களிலேயே மிக உயரிய படைப்பாகக் கருதப்படும் அரசியல் மற்றும் காதல் கலந்த நாடகம்.

11. பிரதிஞ்ஞா யுகந்தராயணம் (Pratijna Yugandharayana): வாசவதத்தையின் தந்தை பிரத்யோதனின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் மந்திரி யுகந்தராயணனின் கதை.

12. சாருதத்தம் (Carudatta): ஏழை வணிகன் சாருதத்தன் மற்றும் வசந்தசேனையின் காதலைப் பேசும் சமூக நாடகம்.

13. அவிமாரகம் (Avi maraca): இளவரசன் அவிமாரகன் மற்றும் குந்தீபோஜனின் மகள் குரங்கியின் காதல் கதை

***

4. இவர் நந்த வம்ச மன்னர்களைக் குறிப்பிட்டு வாழ்த்துகிறார்; ஆகையால் மெளரியர்களுக்கும் முன்னால் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும். உதயணன் என்ற புகழ்பெற்ற மன்னன் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தான். அவருடைய காதல் கதையே இவருடைய புகழ்மிகு படைப்பின் கரு ஆக அமைந்துள்ளது . சமஸ்கிருதத்தின் மகாக்கவியான காளிதாசரே தனது மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தின் முன்னுரையில், தனக்கு முந்தைய சிறந்த நாடக ஆசிரியராகப் பாஷாவைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

ஆகையால் சங்க காலத்துக்கும் முன்னர் வாழ்ந்த காளிதாஸருக்கும் முன்னால் இவர் இருந்தது  உறுதியாகிறது . இருவருடைய கதை களுக்கும் அணுகுமுறைக்கும் இடையே நல்ல  வித்தியாசம் இருப்பதால் 100, 200 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். பரத முனியின் நாட்டிய சாஸ்திர விதிகள் முழுமையாக பின்பற்றப்படும் காலத்துக்கு   முன்பே பாஷா வாழ்ந்ததும் காலத்தைக் கணைக்கப்பயன்படுகிறது

***

5.கிரேக்க நாடகங்கள் கிண்டல்கேலிகீழ்த்தரமான செக்ஸ் ஜோக்குகள் உடையவை ; இந்துக்களின் நாடகங்கள் எல்லாம் புனிதக்  கதைகள் அல்லது தர்ம விஷயங்கள் கொ ண்டவை. மேலும் கிரேக்கர்கள் நாடக ம் எழுதுவதற்கு 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேதத்தில் சுமார் 20 நாடக உரையாடல்கள் உள்ளன. இந்தியாவில் ‘எல்லாம் இன்பியல் படைப்புகள்’. சுபம் என்றே முடிவடையும்; கிரேக்கத்திலும் பாபிலோனிய கில்காமெஷிலும் அப்படி இராது. ஆகையால் நமது கலாசாரம் நாமே உருவாக்கியது. வெளித் தொடர்பு இல்லை .

கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.

1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY  நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .

2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன

3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.

4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .

5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர். கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம்

****

6.பாஸா நாடகங்கள் ஒவ்வொன்றிலும் நந்த வம்சத்தைக் குறிப்பிடுகிறார். அவருடைய நாடகங்களில் 230 கதா பாத்திரங்கள் வருகின்றனர் . அவர்  நட்சத்திரங்களை மட்டும் குறிப்பிடுகிறர்; 12 ராசி மண்டலம் பற்றிக் குறிப்பிடவில்லை. 2000 ஆண்டு பழமையான சங்க இலக்கியத்தில் கூட ராசி மண்டலம் வருணிக்கப்பட்டுள்ளது . காசு என்று குறிப்பிடும் போதெல்லாம் சுவர்ண மாசக என்கிறார் கனிஷ்கர் காலம் முதல் நாணயம்/ நானக என்ற சொல் புழக்கத்துக்கு வந்தது . மெளரியர்களின் தென் இந்தியப்  படையெடுப்பு குறித்து சங்கப் புலவர் மாமூலரும், மைசூர் கல்வெட்டுகளும் பேசுகின்றன. அதற்கு முன் வாழ்ந்த பாஸா, நர்மதைக்கு வடக்கேயுள்ள நிலப்பரப்பையே குறிப்பிடுகிறார் . பரத வாக்கியம் என்னும் தேசீய கீதம், நாந்தி என்னும் துவக்க அறிமுகங்களும் உள்ளன . பிற்கால நாடக ஆசிரியர்களுடன் ஒப்பிடும்போது, இவரது நாடகங்கள் தேவையற்ற வர்ணனைகள் இன்றி, மிகச் சுருக்கமான மற்றும் வேகமான உரையாடல்களைக் கொண்டவை.நாடகத் தொடக்கம்: வழக்கமான சமஸ்கிருத நாடகங்கள் போலன்றி, ‘நாந்தி’ (மங்கள வாழ்த்துப் பாடல்) முடிந்தவுடனேயே சூத்திரதாரன் (நாடகப் இயக்குனர்) மேடைக்கு வந்து கதையைத் தொடங்கிவிடுவார்

***

7.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1912 ஆம் ஆண்டு) தி. கணபதி சாஸ்திரிகள் என்பவரால் திருவிதாங்கூர் பகுதியில் 13 நாடகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கண்டு பிடிக்கப்கப்பட்து மிகவும் பிந்தியகாலம்; மேலும் பிறமொழிகளிலோ இந்திய மொழிகளிலோ உடனே மொழிபெயர்க்கப்  படவில்லை; இவை உண்மையிலேயே  பழைய நாடகங்கள்தானா? ஏன் கேரளத்தில் மட்டும் கிடைத்தது? என்றெல்லாம் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன; ஆகையால் காளிதாசன் எழுதிய சாகுந்தலம்  நாடகத்துக்கு கிடைத்த பப்ளிசிட்டி இவரது  நாடகங்களுக்குக் கிடைக்கவில்லை ; உண்மையில் ஸ்வப்னவாசவதத்தம் மிகவும் சிறப்புடையது.

***

8. ஸ்வப்னவாசவதத்தம் முதலிய சில நாடகங்கள் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டன எல்லா நாடகங்களும் மொழிபெயர்க்கப்படவில்லை ; மொழிபெயர்ப்போரும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கின்றனர் ; ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து மொழிபெயர்க்கவில்லை

***

பாஸாவின் காலம் குறித்துப் பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் சொல்லும் காலம்:

பிடே, தீட்சிதர், கணபதி சாஸ்திரி, ஹரிப்பிரசாத் சாஸ்திரி – BCE கி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றா ண்டு வரை ;

ஜஹாங்கிர்த்தார், குல்கர்னி, செம்பவனேகர்- BCE கி.மு. மூன்றாம் நூற்றாண்டு ;

செளத்ரி , ஜெயஸ் வால், துருவ – BCE கி.மு.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு;

லிண்டனோவ், சரூப், கோனோவ்  வெல்லர் – CE.கி.பி.இரண்டாம்  நூற்றாண்டு;

பானர்ஜி, பண்டார்கர், ஜாகோபி, ஜாலி, கீத் – CE> கி.பி.மூன்றாம் நூற்றாண்டு;

***

10. நாடகமே உலகம் என்று பலரும் பிற்காலத்தில் சொன்ன பொன்மொழி, கடவுள் ஒரு குழந்தை, காதலன், நண்பன் என்ற பொன்மொழி. நீதி நெறியுடன் மன்னன் ஆண்டால் புலிப்போத்தும் புல்வாயும் ஒருதுறையில் நீருண்ணும் என்னும் பொன்மொழி முதலியன 2400 ஆண்டுகளுக்கு முன்னரே பாஷா நாடகங்களில் காணக்கிடக்கின்றன :

பாஸா133 Beautiful Quotations of Playwright Bhasa – Part 1133 Beautiful Quotations (Subhashitas) of Playwright Bhasa – Part 1

Post No. 1050; Dated 18th May 2014

(Earlier on 18th April 2014, I posted under the title “Beautiful quotations from a Great Playwright”; Post No. 987. Following post is more comprehensive and 133 quotations are arranged subject wise.)

133 Beautiful Quotations of Playwright Bhasa – Part 1


Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/18 › 133-beautifu…

18 May 2014 — GOD 1.God owns everything in the universe, but keeps nothing for himself; He is the supreme renouncer. 2.God is our soul refuge, there is no …

133 Beautiful Quotations of Bhasa – Part 2


Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/19 › 133-beautifu…

19 May 2014 — 133 Beautiful Quotations of Bhasa. DHARMA 76.Dharma is the foundation of universe. 77.Who in this world can ultimately survive his own misdeeds …

Missing: Playwright ‎| Show results with: Playwright

Beautiful Quotations from a Great Playwright


Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/04/18 › beautiful-qu…

18 Apr 2014 — Compiled by By London Swaminathan Bhasa is one of the greatest playwrights of the world. Beautiful Quotations from a Great Playwright | Tamil …

Missing: 133 ‎| Show results with: 133

–subham—

Tags- பாஸா நாடகங்கள் ,10 கேள்விகள், பொன்மொழி, ஸ்வப்னவாசவதத்தம்

மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)

Written by London Swaminathan

Post No. 16,141

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பார்ப்பனர்களை ஓரம் கட்டுவது எப்படி ? பக்கி பீடியா, மங்கி பீடியா, டாங்க்கி பீடியா விஷமிகள் சொல்லும் ஐடியா என்ன ?

2

மாரிமுத்தா பிள்ளையின் புகழ்பெற்ற கீர்த்தனைகள் எவை ?

3

இவர் எழுதிய நூல்கள் யாவை ?

4

மாரிமுத்தா பிள்ளையின் எத்தனை கீர்த்தனைகள் இப்போது கிடைக்கின்றன?

5

நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை எது ?

6

காவேரி திரைப்படத்தில் இவருடைய எந்தப் பாடல் இடம்பெற்றது ? அதைப் பாடியவர்  யார்?

7

மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு என்ன ?

8

சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாட்டிய பாடல் எது ?

9

தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரம் போல வேறு எதுவும் இல்லை என்ற பாடலின் வரிகள் என்ன ?

10

எல்லா கீர்த்தனைகளும் கிடைக்கும் வெப்சைட் எது ? தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை   — என்ற பாடலின் வரிகள் என்ன ?

***

விடைகள்

1.”இவர் (மாரிமுத்தா பிள்ளை) தமிழ் இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. தமிழ் ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் (1525-1625)”..

XXX

இதில் இரண்டு விஷங்கள்/ விஷமங்கள் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ; அதாவது பார்ப்பனர்களாகிய மும்மூர்த்திகளுக்கும் முன்னவராம் இவர்கள் ; அதனால் இவர்கள் ஆதி மும்மூர்த்திககளாம் . அதையும் சம்ஸ்க்ருதத்தில் ஆதி, மூர்த்தி என்ற சொற்களுடன் போட்டு சங்கீத மும்மூர்த்திகளை வம்புக்கு இழுத்து அவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது அது சரி ! இவர்களுக்கு ஆதி மும்மூர்த்திகள் பட்டம் கொடுத்தது யார் ? அந்த அயோக்கியர் பற்றி பின்னர் எழுதுகிறேன்.

இரண்டாவது விஷமம் ; சில நாட்களுக்கு முன்னர்தான் இதே பிளாக்கில் பத்து கேள்விகள் வரிசையில் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பற்றி பத்து விஷயங்களை போட்டிருந்தேன். அவருடைய காலம் Oothukkaadu Venkata Kavi (c. 1700-1765) வாழ்ந்த காலம் – (16 அக்டோபர் 1700 – 1765) . அதாவது மேலே குறிப்பிட்ட இருவருக்கு முந்தையவர்; அவர் பாடிய அலைபாயுதே , ஆடாது அசங்காது வா  கண்ணா, கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம், அசைந்தாடும் மயிலொன்று , தாயே யசோதா என்ற பாடல்கள் உலககப் பிரசித்தம் . அவர் பிராமணர் என்ற காரணத்துக்காக அவரை ஓரம் கட்டி, அயோக்கியர்கள் கொடுத்த டைட்டில் ஆதி மும்மூர்த்தி.

மூன்றாவது விஷமம், முத்துத் தாண்டவர் ((1525-1625) என்பவருக்கு இவர்கள் கொடுத்த காலம் ஆதாரமற்ற பொய், ஆதி மும்மூர்த்திகளை உண்டாக்கிய அயோக்கியனின் கற்பனை . ஆனால் இவர்கள் மூவரும் மஹா மேதைகள், பெரியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம் சங்கீத மும்மூர்த்திகளைத் தாழ்த்தி, மேலே குறிப்பிட்டோருக்கு மூத்தவரான ஊத்துக்காடு வேங்கட சுப்பையரை ஒதுக்கி வைத்ததைக் காட்டவே இதை எழுதுகிறேன் இந்த விஷமும் விஷமமும் மேலே குறிப்பிட்ட ஆதி மும்மூர்த்திகள் சைட்டில் இருப்பதால்தான் இங்கே எழுதுகிறேன் . இதை உண்டாக்கிய அயோக்கியன், கர்நாடக இசை மீது அணுகுண்டு வீசியுள்ளான். அதைத் தனியாகப் பார்ப்போம்

அப்பர் ,சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இசையைப் பரப்பினார்கள்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்று பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்  போற்றினார் ; ஆகவே தமிழையும் தமிழ் இசையையும் முதலில் பரப்பியவர்கள் தேவார மூவரே ; அதற்குச் சான்றாக இன்றும் ஓதுவா மூர்த்திகள் நிற்கிறார்கள். 

***

2. தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்தாப் பிள்ளை (1712–1787) சிதம்பரம் நடராஜ பெருமான் மீது பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும் பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே (ராகம்: யதுகுலகாம்போதி, தாளம்: ஆதி) – இவரின் மிகப்பிரபலமான பாடல்.

  எதுக்கு இத்தனை மோடிதான் உனக்கு (ராகம்: சுருட்டி, தாளம்: ரூபகம்)

  எந்நேரமும் ஒரு கால் சிவன்கை (ராகம்: ஹனுமத்தோடி)

  தில்லை சிதம்பரமே (ராகம்: ஆனந்தபைரவி / காபி நாராயணி)

  ஒருக்கால் சிவசிதம்பரம் (ராகம்: அரபி)

  என்ன துணிவாய் நெஞ்சே (ராகம்: சாரமதி)

  தரிசித்த பேருக்கு முக்தி (ராகம்: கேதாரகௌளை

***

3.மாரிமுத்தாபிள்ளை தெய்வம் தொடர்பான பல நூல்களை இயற்றினார். அவை புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, ,தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு ஆகியவை இவற்றோடு பல கீர்த்தனைகளும் பாடினார்.

***

4.தமிழிசை மூவர்களில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை அவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை (கீர்த்தனைகளை) இயற்றியுள்ளார் என்று கூறப்பட்டாலும், இன்று நமக்கு 25 கீர்த்தனைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன.

***

5.நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை :

இராகம் : தோடி தாளம் : ஆதி

பல்லவி

எந்நேரமும் ஒருகாலைத் தூக்கி நொண்டிக்
கொண்டிருக்கிற வகையேதையா

அநுபல்லவி

பொன்னாடர் போற்றுந்தில்லை நன்னாடர்
பொன்னம்பல வாணரே இன்னந்தானும் ஊன்றாமல்

சரணம்

எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ.


எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ.

***

6. காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே – பாடல் காவேரி திரைப்படத்தில் இடம்பெற்றது; அதை சி எஸ் ஜெயராமன் பாடினார்.

****

7.மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு:

கடவுளைப்பற்றி பாடினாலும் அதை கிண்டல் தொனியில் பாடுவார்; அதாவது இகழ்வது போலப் புகழும், வஞ்சப்புகழ்ச்சி முறையை கையாண்டார் ; இதோ ஒரு உதாரணம்

எந்நேரமும் ஒரு காலைத் தூக்கி”

“காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே”

என்ன பிழைப்புன்றன் பிழைப்பையா”

“வீடும் அம்பலமாகி நீரும் அந்தரமானீர்”

***

8. சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாடிய பாடல் “ஏதுக்கித்தனை மோடி தான்”

***

9.இராகம்-சவுராஷ்டிரம்- ஆதிதாளம்.  

பல்லவி    தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரமன்றியுண்டோ  

 அநுபல்லவி     

விரிவுற்றபூலோக கயிலையென் றுளமொருமித்து

நடந் தெதிர்    கொண்டு, மேரு வொத்த விரண்டோடிரண்டு,

கோபுரத்தைக்    கண்ணாரவே கண்டு                (தெரிசி)          

சரணங்கள்.

1.      மேலைத்திசைக் கோபுரத்தினிற் கற்பகவேழமுகன் றனைவாழ்த்தி    நல்ல நீலத் திருமயிலேறுங் குமரன் முன் நின்று தொழுதடி    போற்றி, அனுகூலச் சிவகங்கை மூழ்கியந் நீரை யுட்கொண்டு    மனக்குறையாற்றி, இந்த ஞாலத்தையீன்ற சிவகாமசுந்தரி பா    பாலுற்றிருவினை மாற்றி வெகு சீலத்துடன் மலர்சாத்தி அர்த்தசா    மத்திலே தொழுதேத்தித்                (தெரிசி)

2.     நம்பித் திருமூலஸ்தானத்திலே துதி நாத்தழும்பேறலேறப் பயின்று    உமை அம்பிகைத் தாளைப்பணிந்து மலாதியோடைந்து புலாதி    யை வென்று நிதமும்பர் வணங்கும் பேரம்பலந் தன்னைக் கண்டுண்    மையாய்ச் சேவித்தகன்று கள்ள -வெம் பிறவிப்பிணி வேரைப் பொ    டிசெய்யுஞ் செம்பொற்சபை நாடிச்சென்று கொடிக்கம்பத் தரு    கினில் நின்று கையால் கும்பிட்டரகராவென்று         (தெரிசி)

3.     ஞானசபை தன்னைச் சேவித்தங்குள்ள ரகசிய வுண்மையை நாடி.    வொளியானத்தை யற்புத ஞானக்கண்ணா லறிந் தானந்தவாரியி     லாடித், தவ மோனத்துட னங்கிருந்து செபங்கண் முழுதுஞ்செ    பித்தன்பு நீடி, நாளும் வானத்தவர்க்குங் கிடையாத முத்தி நிதா    னத்திற் சேவடி தேடி, மெய்த்தியானத்தினாலது பாடி யாக்கியான    த்தை வேறரச் சாடித்                    (தெரிசி)

***

10. You can all the Keerthanas from

இராகம்-பூர்விகலியாணி- ஏக தாளம்            

பல்லவி.    

தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை            

அநுபல்லவி,    

துய்யவேதனு மாலுந் தேடியே காணாச் செய்ய தாமரைத் தாளாலாடி    யேநின்ற, வையனிருந்து வாசஞ் செய்யுந் தென்கயிலாசமாமே யிணை    சொல்லப் போமோ வொருவராலே            (தெய்வீக)            

சரணங்கள்

1.     மதிலா யெழுந்து பஞ்சாக்ஷரமே சுற்றி வளைந்திருப்பதுஞ் சிதம்    பரமே, மேலாஞ் சதுர்வேத நாலுங் கோபுரமேயாகிச் சமைந்து    நிற்பதும் நிலவரமே, யிது வதனா லெத்தலத்தையும் வெல்லுமே யு    லகம் பதினாலுமிதைத்தானே சொல்லுமே யார்க்கும், கதி தந்த விதத்தாலே     பதியொன்றையிதைப் போலே காணேனுண்டென்    றுவீணே சொல்லக்கூடுமோ                (தெய்வீக)

2.     மூர்த்தியுந் தீர்த்தமுந் தலமும் மூன்று முக்கியமு மொருமித்த நல    முங் கண்ணாற் பார்த்தவர்க் குண்டோ சஞ்சலமும் நினைவின்படி    யே வந்தெய்துஞ் சகலமும் வேத சாஸ்திரமு மிதைத்தானே யோ    துமே நிமிஷந்தோத்திரமா யுரைத்தாலும் போதுமோ யிதிலோர்    மாத்திரையாம் போது வீற்றிருந்தாற்றீது வருமோ பிறவியைத்    தருமோ சற்றுந் தராது                (தெய்வீக)

3.     எப்போதும் நலந்தருவதுவே யிதுவெல்லாச் சமயத்துக்கும் பொ    துவே-யிதற்கொப்பான தலமினியிதுவே விராட்டுள்ளக்  கமலத்    தானமிதுவே வச்சிரக்கொப்பாருங் குழைச்சியோர் பாகனார் கா    லந்தப்பாத லாறபிஷேகனார் தமக்கொப்பாந் தலந் தமதுமெய்ப்    பாந் தலமிது வுண்மை யிதிலுள்ள வண்மையின் னமனந்தம்    (தெய்வீக)

–subham—

Tags- பார்ப்பன எதிர்ப்பு, ஆதி சங்கீத மூர்த்திகள், பார்ப்பனர்களை ஓரம் கட்டுவதுமாரிமுத்தா பிள்ளை பாடல்கள் , 10 கேள்விகள்

அருணாசலக் கவிராயர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,131)

Written by London Swaminathan

Post No. 16,131

Date uploaded in London – 26 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

அருணாசலக் கவிராயர் (Arunachala Kavi) (1711–1779) சீர்காழியிலே வாழ்ந்து பல பாட்டுகள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பினார். தில்லையாடி என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் நல்ல தம்பி – வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார்.] தருமபுர ஆதீனத் தலைவர் கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்துக் குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார். இவர் படைப்புகளில் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது.

1

அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடல்களில் பத்து மாத பந்தம் திரைப்படம் மூலம் பிரபலமான பாடல் எது?

2

இவருடைய நூல்களை யாவை?

3

இவருடைய நூல் திருவரங்கத்தில் அரங்கேறியது  ; அந்தக் கடவுள் மீது அவர் இயற்றிய பாடல் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகளில் மிகவும் விரும்பிக் கேட்கப்படுகிறது; அது என்ன பாடல்?

4

இவருடைய நூல்களில் “இராம நாடகக் கீர்த்தனை”  என்ற நூல் சிறப்படையாக் காரணம் என்ன ?

5

கச்சேரிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு இவர் இயற்றிய பாடல் என்ன?

6

பொதுவாகப் பிரபல பாடகர், பாடகிகளால் பாடப்படும் பாடல்கள் எவை ? என்ன ராகத்தில் அவை உள்ளன ?

7

தஞ்சசைக் கோட்டையை ஆற்காட்டு நவாபின் படைகள் முற்றுகையிட்டபோது இவரை உபன்யாசத்துக்கு அழைக்க, படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்கு இவர் பாடியது என்ன பாடல் ?

8

ராமசாமி தூதன் நான்அடா-அடட  ராவணா- என்ற பிரபல பாடலின் முழு வரிகள் என்ன ?

9

அனுமன் இலங்கைக்கு வைத்த தீ என்ன செய்தது ?

10

கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்- என்ற பாடல் கம்ப ராமாயணத்தில் மிகவும் முக்கியப்பாடல்; அதை அருணாசலக் கவிராயர் எப்படிப்பாடினார் 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

1. “இராமனுக்கு மன்னன்” என்ற கீர்த்தனை திரைநடிகையும் பாடகியுமான பானுமதியால் பிரபலமடைந்தது.

ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே

நன்மை உண்டொருக்காலே

பாமரமே உனக்கென்னடி பேச்சே  

பழம் நழுவித் பாலிற் விழுந்தார் போலாச்சே

பரசுராமன் கர்வம் தீர்த்தவண்டி

நம்மையெல்லாம் காத்தவண்டி

பட்டம் கட்ட ஏற் றவண்டி

நாலுபேரில் மூத்தவண்டி

அவன் என் கண்மணி

***

2.அசோமுகி நாடகம், சீர்காழித் தலபுராணம், சீர்காழிக் கோவை, சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம்,

சம்பந்தர்பிள்ளைத் தமிழ், அநுமார் பிள்ளைத் தமிழ், இராம நாடகக் கீர்த்தனை, ஆகியவை கவிராயரது படைப்புகள், இவற்றுள் ஓர் இசை நாடக நூலாக, “இராம நாடகக் கீர்த்தனை” உள்ளது. கைவல்ய நவநீதம் – தாண்டவராய சுவாமிகள் இயற்றியது இதற்கு முதலில் உரை எழுதியுள்ளார்.

***

3.ஏன் பள்ளி கொண்டீர் ஐயா – ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.

இராகம் : மோகனம், தாளம் : ஆதி

பல்லவி

ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதரே நீர்

(ஏன்)

அனுபல்லவி

ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-

அவதரித்த இரண்டாற்று நடுவிலே

(ஏன்)

சரணம் 1

கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ?

அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?

ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?

பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?

மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே

வழி நடந்த இளைப்போ?

தூசில்லாத குஹனோடத்திலே

கங்கை துறை கடந்த இளைப்போ?

மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின்

மிசை கிடந்த இளைப்போ?

காசினிமேல் மாரீசனோடிய கதி

தொடர்ந்த இளைப்போ?

ஓடிக்களைத்தோ தேவியை தேடி

இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?

கடலை கட்டி வளைத்தோ?

இலங்கை என்னும் காவல் மாநகரை

இடித்த வருத்தமோ?

ராவணாதிகளை முடித்த வருத்தமோ?

(ஏன்)

சரணம் 2

மதுரையிலே வரும் களையோ?

முதலை வாய் மகனைத்தரும் களையோ?

எதிர் எருதை பெருங்களையோ?

கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?

புதுமை ஆன முலையுண்டு பேயின்

உயிர் போக்கி அலுத்தீரோ?

அதிர ஓடிவரும் குருவி வாயை

இரண்டாக்கி அலுத்தீரோ?

துதி செய் ஆயர்களை காக்க வேண்டி

மலை தூக்கி அலுத்தீரோ?

ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி

தாக்கி அலுத்தீரோ?

மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ?

சகடுருளை தேய்தோ? கஞ்சன் உயிரை மாய்த்தோ?

அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ?

போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ?

(ஏன்)

சரணம் 3

படி தனிலே மெத்தவும் நானே உம்மை

பரம் எனவே அடுத்தேனே

அடிமை கொள்வீர் என்னைத்தானே

செம்பொன் அணி அரங்கப்பெருமாளே!

ததம் உரைந்த கரும் பாறை சாபமது

தடுத்து ரக்ஷித்தீரே!

விட ஒண்ணாத காகாசுரனுக்கொரு

கண் விடுத்து ரக்ஷித்தீரே!

கொடுமை கொண்டழுத த்ரௌபதைக்குத்

துகில் கொடுட்த்து ரக்ஷித்தீரே!

மடுவில் ஆனை முன் ஓடி முதலையை

மடித்து ரக்ஷித்தீரே

அதுபோல்

வாரும் க்ருபை கண்ணாலே

பாரும் மனக்கவலை தீரும்

நினைத்த வரம் தாரும்

தாரும் என் சாமி

வக்ஷமேவும் மஹாலஷ்மியுடன்

பெரும் பக்ஷமாக என்னை

ரஷிக்க எழுந்திரும்

(ஏன்)

***

4.அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராமாயணக் கதையை நாடகவடிவில் வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார். இது “சங்கீத இராமாயணம்” ஆக அமைந்ததால் மக்கள் கேட்டு மகிழ்ந்தனர். மேலும் ஒவ்வொன்றும் ஒரு புதிய ராகத்தில் அமைந்தது. அருணாசலக் கவிராயருக்கு “இராமாயணக் கவிஞன்” என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். “இராம நாடகக் கீர்த்தனை” என்னும் நூல் பின்னர் “இராம நாடகம்” என்றும், தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பழமையான இராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் பிரபலமாயின. மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடப்பெற்றன. இக்கால இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் ஒரு சில இராம நாடகக் கீர்த்தனைகளை பிரபல பாடகர்கள் பாடி வருகின்றனர்.

***

5.பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக ‘நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்’ அல்லது ‘பவமான சுதடு படு பாதார விந்த முலகு’ பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:

ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல

திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு

ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்

கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்

புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்

தண்டுளுவதோளனுக்கு

ஜானகி மனாளனுக்கு

ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

(மத்யமாவதி சரணம்)

பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்

பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்

சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு

அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு

ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

***

சில பாடல்கள்

1.           யாரோ என்றெண்ணாமலே சங்கராபரணம்  ஆதி தாளம்

2.           யாரோ இவர் யாரோ பைரவி, சாவேரி ஆதி தாளம்

3.           ராமனுக்கு மன்னன்  இந்தோளம்     ஆதி தாளம்

4.           யாரென்று ராகவனை யதுகுலகாம்போதி    ஆதி தாளம்

5.           ஸ்ரீராம சந்திரனுக்கு   மத்தியமாவதி   ஆதி தாளம்

6.           எனக்குன்இரு   இராகமாலிகை  ஆதி தாளம்

7.           ஏன் பள்ளி கொண்டீர் மோகனம் ஆதி தாளம்

8.           தில்லைத் தலம் போல    சௌராஷ்டிரம்  ஆதி தாளம்

9.           துணை வந்தருள் புரிகுவாய்     மேசகல்யாணி  மிஸ்ரசாப்பு தாளம்

10.        வந்தனர் எங்கள் கலியாண மத்தியமாவதி   அடசாப்பு தாளம்

***

7. தஞ்சைப் படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, ‘அனுமன் விஜயம்’ என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, ‘அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?’ என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,

அடிக்காமலும், கைகளை

ஒடிக்காமலும், நெஞ்சிலே

இடிக்காமலும், என் கோபம்

முடிக்காமலும் போவேனோ?’

என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.

“ராமசாமியின் தூதன் நானடா ராவணா!”, என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், ‘பாய்ந்தானே அனுமான்’, என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.

***

8.மோகனராகம்                             அடதாளசாப்பு

பல்லவி

ராமசாமி தூதன் நான்அடா-அடடராவணா

நானடா என்பேர் அனு மானடா                 (ராமா)

அநுபல்லவி

மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும்

மறைந்துநின்று தந்தநான் அல்லடா

புறம்பே நின்று வந்தநான் அல்லடா              (ராமா)

சரணங்கள்

1. கொடுத்த வரமும் தனமும் கனகமும் வீணிலே ஏன் போக்கிறாய்

     குடிக்கும்பாலை ஐயையோ கமர் வெடிக்குளேஏன் வார்க்கிறாய்

  துடுக்குடன் பரஸ்திரி செனங்களைத் தொடர்ந்தேன்பழி ஏற்கிறாய்

     தூக்கி ஏறவிட் டேணியை வாங்கும் தூர்த்தர் வார்த்தையைக்கேட்கிறாய்

     தடைபடாமல்என் அய்யன்கால்         மீதே

          சரண்என்றால் பிழைப்பாயே இப்   போதே

     அடக்கஉன்தரம் அல்லடா              சீதை

     அவன்இவன்விட வந்தான்என்           னாதே  (ராம)

2. காலமும் பலமும் தெரியாமல் குதிக்கிறாய்என்ன    மாயமோ

     காமத்தாலே தர்மபுத்தியை கடக்கிறாய்இதுஉ    பாயமோ

  சாலமோ கேடு காலமா அடாஉனக்கும் தெய்வச    காயமோ

     தங்கை மூக்கறுப் புண்டதல்லவோ சண்டாளாஇது ஞாயமோ

     வாலியும் போனான் உன்னைச் சிறை         வைத்த

          வாலும் போய்விட்டது அஞ்சாதே       மெத்த

சீலராகவன் அம்பால் அவன்      செத்த   

     சேதியை நீயறி யாயோடா   பித்த      (ராம)

3. கீதம் தெரிந்தும் வேதம் தெரிந்தும் பாதங்களைச் சூழ்கிறாய்

     கெடுமதி கண்ணுக்குத் தோன்றாமல் படுநரகத்தில்    மூழ்கிறாய்

  மாதர் மோகத்திலே துவண்டு தாழாதவரைத் தாழ்கிறாய்

     மயக்கமோ கைக்குள் விளக்கைப் பிடித்துக்கிணற்றிலேஏன்வீழ்கிறாய்

     ஆதிமூர்த்திதானே              உத்தண்ட

          மாகவந்தான் அரக்         கரைமண்ட

     சீதையை விட்டுப்பிழை           அடாகண்ட

          சேதியைச்சொன்னேன்வீர    கோதண்ட (ராம)

***

9.அனுமார் இலங்கையைக் கொளுத்துதல்

தோடிராகம்                              ஆதிதாளம்

பல்லவி

     பற்றிக் கொண்டது     அனுமான் இட்டஅனல்

     சுற்றிக்கொண்டது      லங்கையை      (பற்றி)

அநுபல்லவி

வெற்றிப்பெண் சானகி உறைமரம் ஒன்றும்

விட்டுநீங்கித் திசை எட்டும் ஓங்கி முட்டி      (பற்றி)

சரணங்கள்

1. எடுத்தபொற்கோ              புரங்களும்-மலர்

  படுத்த பூஞ்சப்               பரங்களும்-எரி

  அடுக்களையும்தா             வரங்களும்-சுவர்

  கொடுத்த மணியுத்            தரங்களும்

உன்னதஉப்                   பரிகையும்-தங்கத்தாலே

மின்னிய கொடி                வகையும்-ஆனை சேனை

மன்னும் விமானத்              தொகையும்-நவரத்தினம்

பொன்னறைகளும்              குகையும்-திகுதிகென

     கொண்டல் கொண்டலாப் புகை   ஏறவே-அத்தை

     கண்டவர் சீவன்விட்டு           மாறவே-அவர்

     பெண்டுபிள்ளைகள் பழி         கூறவே-பெண்கள்

     கொண்டைகள் எல்லாம்சுறு       நாறவே

உருவங்கள் தாறுமாறாப் பருவங்கள் வேறுவேறா

அருகெங்கும் கீறுகீறாத் தெருவெங்கும் நீறுநீறாய்         (பற்றி)

2. மூதெயில் வளைந்து          சொலிக்கவே-படும்

  வாதை கண்டமரர்            சலிக்கவே-சொல்லும்

  வேதசாஸ்திரங்கள்            கெலிக்கவே-எங்கள்

  சீதை சொன்னபடி             பலிக்கவே

சாகரங்களும்                   குறைய-புகைப்படலம்

ஆகாயம் மட்டும்               நிறைய-பாதாளத்தில்

நாகரும் கூட                   இறைய-ராவணனும்

மேகதலத்தில்                  மறைய-இலங்கையிலே

     கிணற்று நீரும் சுண்டி       வற்றவே-செத்த

     பிணத்தின் வெடிநாற்றங்கள்  சுற்றவே-வாலை

     வணங்கி எழுந்தெழுந்து     மெத்தவே-செந்

     தணல் பொறியாக அய்யன்   ஏற்றவே

புரவி எல்லாம் உவிய  நிருதாரல்லாம் அவிய     

எரிஎரியாக் கவிய     கரிகரியாக் குவிய          (பற்றி)

3. கைக்குழந்தைகளைப்          போடுவார்-பெற்ற

  மக்களை விட்டுவிட           டோடுவார்-புகைச்

  சிக்கினிலே தள்ள             மாடுவார்-ஒரு

  மிக்க அரக்கியர்              வாடுவார்

மலர்ச்சோலை பொரிந்த          தென்பார்-ராவணன்

கொலுக் கூடம் எரிந்த           தென்பார்-வீட்டின்மேல்வீடா

நிலத்தோடே சரிந்த             தென்பார்-வெட்டவெளியாத்

தலைக்கடை தெரிந்த            தென்பார்-தவிதவித்து

     வேலைக்குள் ஓடிவிழச்      சொல்லுவர்-பெண்கள்

     மூலைக்கு மூலைவாயை     மெல்லுவார்-அனல்

     மேலிட்டி டாமற்குழி        கெல்லுவார்-அனுமான்

     வாலுக்குத் தெண்டனென்று   சொல்லுவார்

மாடகூடம் அனேக கோடி கோடி நீறாக

மேடுமேடாகிப் போகக் காடுகாடாகி வேக     (பற்றி)

—–

10.முகாரி ராகம்                             அடதாளசாப்பு

பல்லவி

     கண்டேன் கண்டேன் சீதையைக்

     கண்டேன் ராகவா                             (கண்)

அனுபல்லவி

     அண்டருங் காணாத இலங்காபுரத்திலே

     அரவிந்த வேதாவைத் தரவந்த மாதாவை     (கண்)

சரணங்கள்

1. காவி விழிகளில் உன்          உருவெளி மின்னக்

     கனிவாய் தனிலேஉன்  திருநாமமே பன்ன

  ஆவித்துணையைப்       பிரிந்த மட அன்னம்

     ஆனாள்நான்        சொல்லுவ தென்ன

  பூவைத் திரிசடை        நித்தம்நித்தம் சொன்ன

     புத்திவழியே தன்     புத்திநிலை மன்னப்

  பாவி அரக்கியர்         காவல் சிறைதுன்னப்

     பஞ்சு படிந்தப        ழஞ்சித்திரம் என்ன    (கண்)

2. பனிக்கால வாரிசம்       போல நிறங்கூசிப்

     பகல்ஒரு யுகமாகக்     கழித்தாளே பிரயாசி

  நினைத் தங்கே ராவணன்  அந்நான் வரச் சீசி

     நில்லடா சன்          டாளா என்றேசி

  தனித்துத்தன் உயிர்தன்னைத் தான்விட மகராசி

     சாரும்பொழுது காணும் சமய மிதுவே வாசி

  இனித்தா மதம் செய்யல்   ஆகாதென்றிடர் வீசி

     ராமராம ராமா        ராமஎன்றெதிர் பேசி   (கண்)

3. அடல்சேரும் வாலியை   வானுலகிலே கூட்டி

     அவனியைச் சுக்கிரீவன் ஆளமுடி சூட்டி

  உடனேநீ தூதுபோ       என்றசொல் அமுதூட்டி

     உன்எழில்           … …. … பாராட்டி

  விடவந்த அனுமந்தன்         நான்என்று சீராட்டி

     விவரம் சொல்ல உயிர்கொண் டிருக்கிறாள் சீமாட்டி

  திடமா லட்சுமணன் செய்த பானசாலை வீட்டில்

     தேவாதி தேவா உன்   திருவாழிதனைக் காட்டி (கண்)

—-subham—

Tags அருணாசலக் கவிராயர், 10 கேள்விகள் , ராமனுக்கு மன்னன்  முடி, ஏன் பள்ளி கொண்டீர், கண்டேன் சீதையை , ராமதூதன் நானடா

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 103; இந்து மத கலைச்சொல் அகராதி-103 (Post.16,124)

Written by London Swaminathan

Post No. 16,124

Date uploaded in London – 24 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already

தைத்திரீய சம்ஹிதா தைத்திரீய உபநிஷத்

தைத்திரீய சம்ஹிதா என்னும் வேதம்  கிருஷ்ண யஜுர்வேத.த்தின் ஒரு பிரிவு.  அதில் ஏழு பகுதிகளில் யாக யக்ஞங்கள் குறித்த மந்திரங்களைக் காணலாம். தைத்திரீய உபநிஷத், கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும், ஆத்மாவின் இயல்பு மற்றும் பிரம்மன் என்னும் இறைவனை உணர்வது, அடைவது எப்படி என்று விளக்குகிறது. இதற்கு ஆதி சங்கரர் பாஷ்யம்/ விரிவுரை வழங்கியுள்ளார்.  பஞ்ச கோஷங்கள் என்னும் உடலை மூடியுள்ள திரைகளை விளக்கும் உபநிஷத் இது . “சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா” (பிரம்மன் என்பதே சத்தியமானது, அறிவு , எல்லையில்லாதது ) என்ற இதன் வாசகம் மிகவும் பிரபலமானது . சத்ய சாய் பாபா பஜனைகளில் இது மிகவும் விரும்பிக் கேட்கும் பஜனை. அவரே பாடியுள்ளார் . இந்த உபநிஷதத்தை மூன்றாக பிரித்து வழங்கியுள்ளார்கள் ரிஷி முனிவர்கள்; அவையாவன —

•     சிக்ஷா வல்லி: உச்சரிப்பு, உச்சரிப்புவியல் மற்றும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா உரை அடங்கிய பகுதி.

•     ப்ரஹ்மானந்த வல்லி: பிரம்மனின் இயல்பு, பஞ்ச கோஷங்கள் எனப்படும் உடலை மூடியுள்ள ஐந்து திரைகளின் விளக்கம்.

•     பிருகு வல்லி:  பிருகு’என்ற ரிஷி முனிவர் தியானத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் எவ்வாறு பிரம்மனை அறிந்தார் என்பதை விளக்கும் பகுதி இது பிருகு’என்ற ரிஷி முனிவர் தியாகத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் இவ்வரசு பிரம்மனை அறைந்தார் என்பதை விளக்கும் பகுதி இது

***

தாள துவஜம்  – கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் ஆன  பலராமனின் கொடி.  2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது புறநானூற்றில் உள்ளது; தமிழர்கள்  அதி தீவிர இந்துக்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தாடங்கம், தோடு முதலிய சொற்கள் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தவை ; காஞ்சி சுவாமிகள் (1894-1994)  அழகாக விளக்கியுள்ளார்

***.

தக்ஷக

நாகர் என்னும் பழங்குடி மக்களின் தலைவன் தக்ஷகன்.. காடு திருத்தி நாடாக்குவது அரசர்களின் கடமை ; கரிகால் சோழனும் இதைச் செய்தான்; இதற்கு முன்னுதாரணமாக கிருஷ்ணனும் அர்ஜுனனும் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, காண்டவ வனத்தை  தகனம் செய்தார்கள் ; அப்போது தஷகன் வெளியே இருந்ததால் உயிர் பிழைத்தான் . யாதவர்களுக்கும் நாகர்களுக்கும் நீண்ட கால  பகைமை இருக்கையில் இது ஒரு முக்கிய சம்பவமாக அமைந்தது ; இதற்குமுன்னர் சமீக மஹரிஷியின் மீது பரீக்ஷித் என்னும் மன்னன் ஒரு பாம்பினை விளையாட்டாகத் தூக்கி எறிந்தான் ; அவனுடைய மகன் ஸ்ருங்கி , அப்பாவை அவமதித்தவனை ஏழே நாட்களில் கொல்வேன் என்று சபதம் எடுத்தான் . உடனே அரண்மனையில் செக்யூரிட்டியை அதிகப்படுத்தினார்கள் ஆனால் ஸ்ருங்கி, அரண்மனைக்குள் நாள் தோறும் செல்லும் பழக்கூடையில்  ஒளிந்து கொண்டுசென்று பரீட்சித் மன்னனை வெட்டிச் சாய்த்தான். அந்த மன்னின் மகன் ஜனமேஜயன் ஆவான்  ; அவன் சர்ப்ப யாகம் என்ற பெயரில் நாகா இன மக்களை வெட்டி வீழ்த்தினான் ; அப்போது ஜரத்காருஆஸ்தீகர் என்ற இரண்டு ரிஷிகள் தலையிட்டு நாகா- யாதவ சமாதான உடன்படிக்கையை ஒப்புக்கொள்ள வைத்தனர் . பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தையும், உடன்படிக்கையையும் பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் நர்மதாயை நமஹ என்னும் மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் . அதே காலத்தில் மயன் என்ற நாகன் மட்டும் கிருஷ்ணனுடன் நண்பனாக இருந்தான் ; அவன் காணடவ வன எரியூட்டலுக்குப் பின்னர், தனது குழுவை அழைத்துக்கொண்டு பாதாள லோகததுக்குச் சென்றான் பாதாள லோகம் என்பது அமெரிக்கா ஆகும்; தென் அமெரிக்காவில் இவர்கள் குடியேறி மாயா நாகரீகத்தைத்  தோற்றுவித்தனர் .  பழக்க கூடைக்குள் ஒளிந்து கொண்டு தப்பிக்கும் தந்திரத்தைப் பிற் காலத்தில் வீர சிவாஜியும் பின்பற்றி ஒளரங்கசீப் என்ற வெறியனின் கண்ணில்  மண்ணைத் தூவினான். 

***

தமஸ், தமோ குணம்

தமஸ் என்றால் இருள், அறியாமை .

மனிதனின் மன நிலையை இந்துக்கள் மூன்றாகப் பிரித்தார்கள் ; சத்வ குணம், ராஜஸ குணம், தமோ குணம் என்று ; மன மைதியுடன் சாந்தமாக நல்லதையே மட்டும் நினைக்கும் பாசிட்டிவ் குணம் உயர்ந்த சத்வ குணம் ஆகும்; செயல் வேகம் நிறைந்த , ஆனால் நல்லதையும் கெட்டதையும் செய்யும் மன நிலை  ராஜஸ குணம் ஆகும் . ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களளை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம் ; சுடு என்றால் சுடுவார்கள் ; நல்லது- கெட்டது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை ; வெறித்தனமாக வேலை செய்து இன்பத்தை மட்டும் அனுபவிக்க காலத்தை விரயம் செய்வோரும் இவ்வகையே;  மூன்றாவது வகை தமோ குணம்– மஹா சோம்பேறிகள் ; தூங்கித் தூங்கி காலத்தை நாசம் செய்யும் வகை; குடி, கூத்து, மாயை, மயக்கம் , வெட்டிப்பொழுது, எந்தக் காரியத்தையும் ஒத்திப்போடுவது என்பது இவர்களின் கொள்கை ; இந்த மூன்று குணங்களையும் பகவத் கீதையின் 14 ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார் .

***

தாம்ரபரணி

பொதிகை மலையில் உற்பத்தியாகி , திருநெல்வேலி வட்டாரத்தில் ஒடி, மன்னார் வளைகுடாவில் கலக்கும் ஜீவ நதி; அதாவது ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடும் ஆறு;  பொருநை நதி என்ற பெயரில் இலக்கியங்களில் இந்த ஆற்றினைக் காணலாம். இதன் நீளம்

 128 கிலோமீட்டர், (80 மைல்கள் ) மணிமுத்தாறு, சித்ரா நதி முதலிய ஏழு உபநதிகள் இந்த ஆற்றில் நீரைக் கொட்டுகின்றன ; ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி முதலிய புகழோங்கிய வைணவ தலங்கள் இதன் கரையில் அமைந்துள்ளன ; நவ திருப்பதி என்னும் நவக்கிரக தலங்கள், நவ கைலாசம் என்னும் சிவன் கோவில்கள் ஆகியனவும் இந்த நதி பாயும் வட்டாரத்தில் அமைந்துள்ளன. காவிரி, வைகை போனற நதிகளின் குறுக்கேயும் அவற்றுக்கு நீராய்க் கொண்டுவரும் உபநதிகளின் குறுக்கேயும் அணைகளைக் கட்டுவதற்கு முன்னர் எல்லா தமிழ் நாட்டு நதிகளும் ஜீவ நதிகளாகவே இருந்ததை இலக்கியங்களில் காண முடிகிறது .

***

தாண்டவம்

சிவ பெருமானின் கட்டளைகளுக்கு இணங்க தண்டு என்ற முனிவர் உருவாக்கிய நாட்டிய வகை  இது என்று பரத முனிவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நாட்டிய சாஸ்திர புஸ்த்தகத்தில் 14 ஆவது அத்யாயத்தில் உள்ளது.

ஒரு பிரம்மாவின் ஆயுள் முடிந்தவுடன் சிவ பெருமான் ஆடும் தாண்டவத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும்; பின்னர் புதிய பிரம்மாவுடன் க்ரியேஷன் என்னும் படைப்புத் தொழில் ஆரமபாகும்; இவ்வகை நடனம், ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது  பூமி, தண்ணீர், அக்கினி,  வாயு, ஆகாசம் என்பன மீண்டும் உருவாகும் இந்த வரிசைக்கிரமம் புறநானூறு பாடல்களிலும் தேவாரத்திலும் அப்படியே உள்ளன .

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் , சம்ஸ்க்ருத மொழியில் உள்ள ஒரு அருமையான துதி; தாள நயம் மிக்கது ; இது தாண்டவ நடனத்தை மனக் கண்ணுக்கு முன்னே கொண்டுவரும்; சிவ பெருமான் வசிக்கும் கயிலாய மலையை ராவணன் ,அகந்தையால் அசைக்க முயன்றவுடன் சிவன் ஒரு அமுக்கு, அமுக்கினார் ; ராவணன் கதறி, சிவ பெருமானைப் போற்றி,  இதைப் பாடியவுடன் சிவன் மனம் மகிழ்ந்து, அகம் குளிர்ந்து, ராவணன் மீது கருணை மழை பொழிந்து, ஒரு வரமும் கொடுத்து, இலங்கைக்கு அனுப்பினார் . ராவணன் நலல சிவ பக்தன்; ஆனால் அஹம்காரத்தின் மொத்த உரு ; ஆகையால் சிவன் பாடம் கற்பித்தார்.

***

தாரக அசுரன்

தேவர்களை எதிர்த்துப் போரிட்ட தைத்ய குல தலைவன்;  இவனை ஒழிக்க முருகப்பெருமான் அவதரித்தார்;  அவன் இறந்த பின்னர் அவனுடைய மூன்று புதல்வர்களான தாரகாக்ஷ கமலாக்ஷ, வித்யுன்மாலி ஆகியோர் பழிவாங்கத் துடித்தனர்; விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் அமைத்து தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் ;   தேவர்கள் சிவனை வேண்டவே, அவர் இவர்களை பார்த்து சிரித்தார்; முன்று விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் பூமியில் சாம்பலாய் விழுந்தன . சிவனின் நெற்றிக் கண் என்பது லேசர் ஆயுதம் . இந்த சம்பவத்தைத் தேவாரப்பாடல்களிலும் திருப்புகழ் பாடல்களிலும் படிக்கலாம்.

***

தாரா

(கற்பழிக்கப்பட்ட கதை)

Planet Jupiter and its four large moons.

தாரா என்பது மூவரைக் குறிக்கும் ; வாலியின் மனைவி; திபெத்திய புத்த மத தேவதை;  பிருஹஸ்பதி என்றும் வியாழன் என்றும், குரு பகவான் என்றும் இந்துக்கள் போற்றும் ஜூப்பிட்டர் என்னும் கிரகத்தின் மனைவி பெயரும் தாரா தான் . கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த காஸ்மாலாஜிக்கல் விஷயத்தை– அதாவது சூரிய மணடலம் என்னும் சோலார் சிஸ்டம் உருவான கதையின் ஒரு பகுதி இது .

பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்)  அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !

“அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .

இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த  செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .

அதாவது ஒரு குட்டி  கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.

குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப்  பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது !  சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.

சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 .

To be continued……………….

Tags- தாரா ,

இந்து மத கலைச்சொல் அகராதி-103 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 103, தைத்திரீய உபநிஷத்

கடவுள் செய்த கற்பழிப்பு! பெரிய விஞ்ஞானச் செய்தி! (Post No.16,117)

Written by London Swaminathan

Post No. 16,117

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நவக்கிரக துதியில் 8 விஞ்ஞான உண்மைகள்

ஜபா குஸும ஸங்காசம் என்னும் சம்ஸ்க்ருத நவக்கிரஹ துதியைத் தினமும் படிப்போர் அமெரிக்க விண்வெளி ஸ்தாபனமான நாசாவும் (NASA= National Aeronautics and Space Administration) அறியாத மிகப்பெரிய உண்மைகளை எடுத்துச் சொல்கின்றனர் ! பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் நர்மதாயை நமஹ மந்திரத்தில் மிகப்பெரிய வரலாற்றுச் செய்தியை தினமும் நினைவுபடுத்துகின்றனர்  (சில பிராமணர்கள் இந்த மந்திரத்தைச் சொல்வதில்லை) . அந்தக்காலத்தில் நாகா பழங்குடி மக்களுக்கும் யாதவர்களுக்கும் இடையே குறைந்தது நான்கு தலைமுறைகளுக்கு மோதல் நடந்தது; இறுதியில் ஜனமேஜயன் என்ற மன்னன் நாகர்களை படுகொலை செய்யத் துவங்கியவுடன் ஆஸ்தீக மகரிஷி தலையிட்டு நாகா– யாதவ சமாதான உடன்படிக்கையைச் செய்வித்தார்; இதன் விளைவாக தென் அமெரிக்காவில் மாயா நாகரீகம் உருவானது (இதுபற்றி மாயா நாகரீகம் பற்றிய எனது கட்டுரைகளிலும் அவைகளைக் கொண்ட எனது புஸ்தகத்திலும் உள்ளது) . புறநானூற்றிலும் புராணங்ககளிலும் கூறப்படும் கட்டை விரல் அளவிலான வாலகில்ய முனிவர்கள் சூரியனை நாள்தோறும்  வலம் வருவது பற்றி மட்டும் இன்னும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுக்கும் கேடயம்/ ஷீல்ட் என்று ஊகித்து எழுதியுள்ளேன் (பழைய கட்டுரைகளைக் காண்க) .

NASA stands for the National Aeronautics and Space Administration. It is an official agency of the United States government. This group is in charge of the country’s space program, space travel, and scientific research on airplanes and flight.

***

இப்போது கடவுளின் கற்பழிப்பைக் கண்டு மகிழ்வோம்

இந்து மதத்தில் ஏதேனும் செக்ஸ் SEX விஷயங்கள் வந்தால் வெள்ளைக்காரர்களுக்கு ஒரே குஷி ! கிளுகிளுப்பு ! உடனே அதை வெளியிட்டு அவர்களுடைய பொன்மொழிகளையும் திருவாய் மலர்ந்து கொட்டியிருப்பதைக் காணலாம் . பிரம்மா, ஒரு பேரழகியைப் படைத்தார் அவள் பெயர் சதரூபா; அவள் படைத்த மகள் மீதே அவர் காதல் கொண்டார் . அவள் போன பக்கம் எல்லாம் அவருடைய தலை திரும்பியது ; அதனால் அவருக்குப் பல தலைகள். இப்படி ஒரு கதை ! ரிக் வேதத்தில் பல SEXY செக்சி (இந்திராணி – வ்ருஷாகபி) உரையாடல்கள் உள்ளன . இவைகள் எல்லாம் நம்முடைய காமன் பண்டிகை தெருக்கூத்து போன்ற நாடக வசனங்கள் ; அவை நாடகம் என்று அறியாத வெள்ளைத்  தோல்கள், அதை செக்ஸ் SEX என்று எழுதி மகிழ்கின்றன ! வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திர நூலைப் படங்களுடன் வெளியிட்டு மகிழ்கின்றன; அதே காலத்தில் எழுந்த பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தைக் கண்டு மகிழ்வதில்லை ; இது வெள்ளைக்காரன் அணுகுமுறை!

பல விஷயங்களை பாமர மக்களுக்காக இந்துக்கள், சிம்பாலிக் SYMBOLIC காகக், கதைகளாகச் சொல்லுவார்கள் ! கிரஹணம் பற்றிச் சொன்னால் புரியாது என்பதற்காகப் பாம்பு விழுங்குகிறது என்பார்கள்; இது 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது .

இப்போது ஒரு கற்பழிப்புக் கதையைப் பார்ப்போம்.

பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்)  அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !

அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .

இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த  செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .

அதாவது ஒரு குட்டி  கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.

குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப்  பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது !  சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.

சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 MOONS FOR JUPITER.

நிலவு எப்படி உருவானது என்பதையும் நம் புராணங்கள் எழுதி வைத்துள்ளன .

பாற்கடலைக் கடைந்த போது, நிலவு உருவானது ; இப்போது பசிபிக் மஹா சமுத்திரத்தில் நிலவை வைக்கும் அளவுக்கு அதன் விட்டம் உள்ளதைக் கண்டு அது பூமியிலிருந்து பிய்த்து எறியப்பட்ட துண்டு துன்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்; இவை எல்லாம் பில்லியன்– கோடி கோடி ஆண்டுகளில் நடந்தவை. இதை நாம் பாற்கடலைக் கடைந்த போது நிலவும் வெளியே வந்தது என்று சொல்கிறோம் .

பாற்கடல் என்பதை மில்கி வே காலக்சி MILKY WAY= MILKY OCEAN  என்று பொருள்கொள்ள வேண்டும்

சுருங்கச் சொன்னால், சோலார் சிஸ்டம் ஆரிஜினை ORIGIN OF SOLAR SYSTEM விளக்குவதே இந்துக் குழந்தைகள் நாள்தோறும் சொல்லும் நவக்கிரஹ ஸ்தோத்திரம்!

***

எட்டு மிகப் பெரிய உண்மைகள்

இந்துக்கள் உலக மக்களுக்கு எட்டு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்

2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்

3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்

4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு

5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இவைகளின் பொருள் என்ன?

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:

பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

கட்டுரைக்கான மேற்கோள்கள்
1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)
இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,
நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.

–subham—

Tags- கடவுள் செய்த கற்பழிப்பு, விஞ்ஞானச் செய்தி, நவக்கிரக துதி, 8  விஞ்ஞான உண்மைகள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 101; இந்து மத கலைச்சொல் அகராதி-101 (Post 16,106)

Written by London Swaminathan

Post No. 16,106

Date uploaded in London – 19 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already.

Part 101

ஸ்வயம்பு

சுயமாக , அதாவது தாமாக  உருவாகும் சிலைகள் ; பல பாறை வடிவங்களும் கற்களின் வடிவங்களும் இயற்கையாகவே கடவுள் உருவங்கள் போல இருத்தல்; பாணலிங்கம், சாளக்கிராமம் முதலி யன இயற்கை யில் நதிகளில் கிடைக்கின்றன ; இவைகளை சிவன், விஷ்ணு வடைவங்களாக வணங்குவர் ; கயிலாயம் , அமர்நாத்திலுள்ள ஐஸ் லிங்கம் முதலியன இயற்கையில் காணப்படும் சிவ லிங்க வடிவங்களாகும் . இவை தவிர பூமிக்கடியில் நிகழும் அதிர்வலைகளால் பூமிக்கு மேலே வடிவங்கள் தோன்றுவதும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது . பிரம்மாவுக்கும் ஸ்வயம்பூ என்று பெயர்

ஸ்வயம்பூ லிங்கம் தோன்றுவது எப்படி?

ஆதிசங்கரர் போன்ற பெரிய மகான்கள் பல இடங்களில் இப்படி லிங்கங்களைக் கண்டுபிடித்து அவைகளை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்று படிக்கிறோம். மதுரை நகரம் ஒருகாலத்தில் கடம்பவனக் காடாக இருந்தது என்றும் தனஞ்செயன் என்ற வணிகன் இரவு நேரத்தில் காட்டைக் கடந்து போகும் நேரத்தில் ஒளிமயமான ஒருகாட்சியைக் கண்டான் என்றும் இந்திரன் முதலானோர் வந்து பூஜை செய்த காட்சி அது என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது. அதுவும் ஸ்வயம்பூ லிங்கம்தான். பாண்டிய மன்னனுக்கு இச்செய்தியை அறிவித்தவுடன் அவன் அங்கே கோவில் அமைத்தான்..

ஆனால் இதைத்தவிர வேறு ஒரு சக்தியும் உண்டு. அது பூமிக்கடியில் இருக்கும் கற்களை மேலே தள்ளுகிறது. அதை அறிவியல் படித்தவர்கள் ஈ.எல்.எf. என்று சொல்லுவார்கள். அதாவது மிகவும் சன்னமான அதிர்வு அலைகள். இவைகள் பூமிக்கு அடியில் உள்ள கற்களை சிறிது சிறிதாக அசைத்து பூமிக்கு மேலே கொண்டுவந்துவிடும்! லண்டனைத் தாண்டியுள்ள பர்மிங்ஹாம்சைரில் சில்டெர்ன் என்னும் இடத்தில் இப்படி பூமிக்கு மேலே வரும் கற்களை விலைக்கும் விற்கிறார்கள். இதை மே 1994ல் சி.ஏ.சில்க் என்பவர் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இந்த இடத்துக்கே கல் விளையும் பூமி என்று பெயர்!

Science behind Swayambhu Lingams

A letter published in London Times newspaper on 20th May, 1994 explains this. Anne C.A. Silk wrote this letter in reply to a reader’s query. The letter gives some interesting information about “stone growing fields” in Chiltern Hills. (These Hills are not far from London). “There was a local industry of gathering the large flints, some the size of a fist, to sell to local builders by the roadside.

There is a further reason for the ascending mode of flints and rocks worldwide, over and above the fork disturbance proposed by Brian Parker (May 14 letter). This is the natural extremely low frequency (ELF) seismic energy from deep within earth.

Micro seismic activity from faults such as Church Stratton Fault, Mere Fault, Great Glen Fault, sub terranean settling and indeed traffic at roundabouts will generate ELF energy sufficient enough to vibrate rocks and stones to the surface.

It is of relevance to note that ELF frequencies from 30 Hz to 300 Hz also cover brain waves in humans”.

***

சுகன்யா

பொது அர்த்தம் – நல்ல பெண் அல்லது  நல்ல அழகு ;இளவரசி சுகன்யா ஒரு சமயம் தந்தையுடன் காட்டுக்குச் சென்ற போது ஸ்யவன முனிவர் ஆஸ்ரமத்துக்குச் சென்றனர் ; அங்கு புற்று போல வளர்ந்திருந்த ஓரிடத்தில் இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தவுடன் விளையாட்டாக அதைக் குத்தவே புற்று மண்ணில் தவம் செய்துகொண்டிருந்த ஸ்யவன முனிவரின் கண்கள் குருடாயின. இந்தத் தவற்றுக்குப் பிராயச்சித்தமாக  சுகன்யாவின் தந்தை சர்யாதி அவளை முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். ஸ்யவன முனிவர் கிழவர் ; அஸ்வினி தேவர்கள் ஸ்யவன முனிவருக்கு இளமையைக் கொடுத்தனர் .

***

ஸ்வேதாஸ்வதர உபநிஷத்

 கிருஷ்ண-யஜுர்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத் இது . ஸ்வேதாஸ்வதர முனிவர் போதனை இதில் உள்ளது சிவா பெருமானையும் ருத்ரனையும் புகையும் இந்த உபநிஷத் , பிற்காலத்தில் எழுதப்பட்டது

சிவா பெருமானை உயர்த்தி பிரம்மன் ஆக — உயர்ந்த கடவுளாக – காட்டுகிறது . வேதாந்த ஸாங்க்ய விஷயங்கள் இதில் காணப்படுகிறது . ஆறு அத்தியாயங்களைக் கொண்டது .ஸ்வேதாஸ்வதர என்பதன் இன்னுமொரு பொருள் வெள்ளைக் குதிரை என்பதாகும் .

சில எடுத்துக் காட்டுகள்:-

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை

வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி  தஸ்மை 

தம் ஹ தேவம்  ஆத்மபுத்திப்ரகாசம்  முமுக்ஷுர்வை

சரணமஹம் ப்ரபத்யே

–ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -6-18,19

யார் பிரம்மதேவனை சிருஷ்டியின்போது தோற்றுவித்தானோ , யார் மேலும் அந்த வேதங்களை பிரம்மதேவனுக்குக் கொடுத்தானோ , அப்பரமனை,  அறிவை ,ஆத்ம ஞானத்தில் ஒளிர்பவனை, அவயங்கள் இல்லாதவனை, கர்மங்கள் இல்லாதவனை, சாந்த மூர்த்தியை, குற்றமற்றவனை, மாசற்றவனை மரணமில்லாத நிலைக்கு இட்டுச் செல்லும் பாலமாக இருப்பவனை, விறகு எரிந்த பின்னர்  ஒளிரும் தீப்போன்றவனை, மோக்ஷத்தை நாடுகின்ற நான் சரணடைகிறேன்.

யோ யோனிம் யோனிமதி  திஷ்டத்யேகோ 

யஸ்மின்னிதம்  ஸம் ச  வி சைதி ஸர்வம்

தமீசானம் வரதம் தேவமீட்யம்    

நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி

—-ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -4-11

எந்த ஒரு இறைவன் பிரகிருதியின் / இயற்கையின்  பிறப்பிடங்களிலெல்லாம் தலைமை தாங்குகிறானோ , எவனிடத்து இவை யாவும் ஒடுங்குகின்றனவோ , எவன் பல வடிவங்களை எடுக்க வல்லவனோ , அந்த ஈசனை, வரம் கொடுப்பவனை,  போற்றுதற்குரியவனை, பிரகாசமானவனை  அனுபவத்தில் அறிகிற ஒருவன் அளவுகடந்த சாந்தியை அடைகிறான்.

ஆதி சங்கரர் இந்த உபநிஷத்துக்கு உரை எழுதவில்லை.

***

ஸ்வர்கம்

தமிழ் மொழியில் இதைத் துறக்கம் என்பர் ; நாகலோகம் மேலுலகம் தேவ லோகம் என்ற பொருளைகளும் உண்டு. இந்திரன் இதன் தலைவர் புண்ணியம் செய்தொரர் இங்கு இன்பத்தை அனுபவித்துவிட்டு பூமிக்குத் திரும்புவார் கள். ஆனால் இங்கு பார்வதியின் சாபத்தால் செக்ஸ் தடை செய்யப்பட்டுஉள்ளது . மேரு மலை உச்சியில் இருப்பதாகவும் சில கருதுகிறார்கள் ஸ்வர்க்க என்ற எழுத்துக்களுக்கு ஒருவித கணிதத்தில் 21 என்ற பொருளும் உண்டு  . சங்க காலாட் தமிழர்களுக்கு இதில் நம்பிக்கை இருந்ததால் மேற்கூறிய ட்கமிழ்ச் சொற்களை பயன்படுத்தியுள்ளனர்.

 . ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா ஆகியோர் இங்கு நடனமாடி எல்லோரையும் மகிழ்விப்பார்கள் என்பது புராணம் சொல்லும் செய்தி .

***

ஸ்வஸ்திகா

 1200 YEAR OLD SWASTIKA WELL NEAR TRICHY

SWASTIKA IN INDUS VALLEY SEALS

இந்துக்களின் புனிதத் சின்னம் ; மணங்களாம் சுபம் என்று பொருள்; சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படுகிறது உலகின் பழைய கிரேக்க, ரோமானிய பாண்டங்களிலும் இந்தச் சின்னம் உள்ளது ; ஆயினும் இன்றுவரை இந்துக்கள் மட்டுமே இதை 4500 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர் . சம்ஸ்க்ருத தமிழக கல்வெட்டுகள் ஸ்வஸ்தி ஸ்ரீ என்றே துவங்குவம் .

மாக்ஸ்முல்லர் , ஜெர்மானியர்களும் ஆரியர்கள் என்று சொன்னதை மனதில் கொண்டு ஹிட்ட லரும் ஜெர்மனியின் கொடி மற்றும் அரசாங்க   சின்னங்களில் ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்தினார் . ஆகையால் மேலை உலகம்  முழுதும் இந்த சின்னத்தத் த்தை தடை செய்துவிட்டார்கள்; எங்காவது இந்த சின்னத்தைக் கண்டால்  கூச்சல் போட த்துவங்குவார்கள் . சில கட்டடங்கள் இயற்கையாக இந்த வடிவத்தில் இருந்ததையும் இடித்து வேறு வடிவத்தில் கட்டிய செய்திகளை அ வ்வப்போது பத்திரிகைகளில் படிக்கலாம் . இந்துக்களுக்கு இது சுப சகுனம் என்பதால் கல்யாணப் பத்திரிகைகள் , அழைப்பிதழ்களிலும் போடுவார்கள்; மேலை நாட்டினருக்கோ இது சிம்ம சொப்பனம்!

1200  ஆண்டுகளுக்கு  முன்னால் திருச்சிக்கு அருகில் திருவெள்ளறை என்னும் ஊரில் தந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சியில் சுவஸ்திகா வடிவில் ஒரு கிணறு தோண்டி அமைக்கப்பட்டது . அதில் ஒரு பாடல் கல்வெட்டும் உள்ளது  . மேலை நாட்டில் இந்த வடிவத்தில் எந்த அமைப்பு,  கட்டிடம்,  குளம், கிணறு இருந்தாலும் மக்களும் அரசாங்கமும்  சேர்ந்து இடித்துத் தள்ளிவிடுவார்கள்! ஹிட்லர் மீது அவ்வளவு கோபம், வெறுப்பு  .

–Subham— .

Tags– ஸ்வஸ்திகா, துறக்கம், ஸ்வயம்பூ, லிங்கம், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL -101; இந்து மத கலைச்சொல் அகராதி-101

அறப்பளீச்சுர சதகம் பற்றி 10 கேள்விகள் (Post.16,046)

Written by London Swaminathan

Post No. 16,046

Date uploaded in London – 2 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

அறப்பளீச்சுர சதகம் நூலை இயற்றியவர் யார் ? எப்போது எங்கே இயற்றினார் ?

2

அந்தணர் பற்றி அறப்பளீச்சர   சதகம் செப்புவது என்ன?

3

அரிது அரிது  மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று அவ்வையாரும், ஆதி சங்கரரும் சொன்னார்கள் ; இவர் என்ன சொன்னார் ?

4

நல்ல புதல்வன் யார் ?

5

மனைவியின் குணநலன்கள்  பற்றி அறப்பளீச்சுர சதகம்கூறுவது என்ன ?

 6

நாய் வாலை நிமிர்த்த முடியாது அதே போல முட்டாள்களும் என்று எங்கே சொல்கிறார் ?

 7

இல்லறத்தார் சன்யாசிகளைவிட மேலானவர்கள்  என்று அறப்பளீச்சர சதகம்சொல்கிறதா ?

8

கள் குடித்து, தேள் கொட்டி, பேயும் பிடித்த குரங்கு பற்றி அறப்பளீசுர சதக நூலில்   அம்பலவாணக்கவிராயர் பகிர்வது என்ன ?

9

நல்லவர்களின் பட்டியலில் யார் யாரை அம்பலவாணக் கவிராயர் சேர்த்துள்ளார்?

10

பயனற்ற இடங்கள், ஆட்கள், செயல்கள் பற்றி  அறப்பளீச்சர சதகப் பாடல் தரும் பட்டியல் என்ன ? 

****************************************************************************************

விடைகள்

1.அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.. இவர் சோழநாட்டிலே தில்லையாடி என்னும் ஊரிலே வேளாளர் குலத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் இராம நாடகம்சீர்காழித் தலபுராணம் என்னும் அரிய நூல்களை இயற்றிப் புகழ் பெற்ற அருணாசலக் கவிராயர் ஆவார். அவருடைய மூத்தமகன் இவர். இவர் காலம் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது

***

2.ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி

     ஒன்றுதப் பாது புரிவார்;

  உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்

     ஒருமூன்றி னுக்கும் மறவா

தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்

     அதிதிபூ சைகள்பண் ணுவார்;

  யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்

     இன்றியே செய்து வருவார்;

பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே

     பிழையா திருக்கும் மறையோர்

  பெய்யெனப் பெய்யும்முகில்;அவர்மகி மையெவர்களும்

     பேசுதற் கரித ரிதுகாண்!

(அந்தணர் தமக்கு உரித்தான ஆறு தொழிலையும் (ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்) கைவிடார்.

கடமைகளைத் தப்பாமல் செய்வார்

சூரியன் தோன்றும்போது நீராடுவார்

3 காலத்திலும் காயத்திரி மந்திரம் சொல்லுவார்

நாள்தோறும் இரவலர்க்கு வழங்குவார்

யாகம் செய்வார்

மந்திரம் சொல்லுவார்

பேராசை கொள்ளமாட்டார்

வைதிக மார்க்கம் பிழையாமல் கடைப்பிடிப்பார்

இப்படிப்பட்டவர் பெய் என்றால் மழை பெய்யும்)

***

3.கடலுலகில் வாழும்உயிர் எழுபிறப் பினுள்மிக்க

     காட்சிபெறு நரசன் மமாய்க்

  கருதப் பிறத்தலரி ததினும்உயர் சாதியிற்

     கற்புவழி வருதல் அரிது;

வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது

     வருதலது தனினும் அரிது;

  வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்றெண்ணி

     மாசில்வழி நிற்றல் அரிது;

நெடியதன வானாதல் அரிததின் இரக்கம்உள

     நெஞ்சினோன் ஆதல் அரிது;

  நேசமுடன் உன்பதத் தன்பனாய் வருதல்இந்

     நீள்நிலத் ததினும் அரிதாம்;

****

4.தங்குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு

     தருமங்கள் செய்து வரலும்,

  தன்மமிகு தானங்கள் செய்தலும், கனயோக

     சாதகன் எனப்படுதலும்,

மங்குதல் இலாததன் தந்தைதாய் குருமொழி

     மறாதுவழி பாடு செயலும்,

  வழிவழி வரும்தமது தேவதா பத்திபுரி

     மார்க்கமும், தீர்க்கா யுளும்,

இங்கித குணங்களும், வித்தையும், புத்தியும்,

     ஈகையும், சன்மார்க் கமும்

  இவையெலாம் உடையவன் புதல்வனாம்.

***

5.மனைவியின் குணநலன்கள் 

கணவனுக்கினியளாய் ம்ருதுபாஷியாய் மிக்க

கமலை நிகர் ரூபவதியாய்க்

காய்சின மிலாளுமாய் நோய் பழியிலாத தோர்

கால்வழியில் வந்தவளுமாய்

மணமிக்க நாணம் மடம் அச்சம் பயிர்ப்பென்ன

வருமினிய மார்க்கவதியாய்

மாமி மாமர்க்கிதம் செய்பவளுமாய் வாசல்

வருவிருந் தோம்புபவளாய்

இணையின் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய் வந்தி

யெனப் பெயரிலாத வளுமாய்

(ம்ருதுபாஷி = இன்சொல் உடையவள்; கமலை = திருமகள்; ரூபவதி = அழகி; கால்வழி = பரம்பரை; இதம் = அன்பு; மகிழ்நன் = கணவன்; வந்தி = மலடி)

***

6.நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!

     நெருப்பைநீர் போற்செய் யலாம்!

  நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!

     நீள்அர வினைப்பூ ணலாம்!

பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்

     பட்சமுட னேஉண்ண லாம்!

  பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்

     பாவைபே சப்பண் ணலாம்!

ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்

     எடுக்கலாம்! புத்தி சற்றும்

  இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே

     எவருக்கும் முடியா துகாண்!

***

7.  ஆமாம் . கிருஹஸ்தனே மேலானவன்.

தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்

     சன்மார்க்கம் உளமனை வியைத்

  தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்

     தனைநம்பி வருவோர் களைச்

சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்

     தென்புலத் தோர் வறிஞரைத்

  தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்

     தேனுவைப் பூசுரர் தமைச்

சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாது

     தான்புரிந் திடல்இல் லறம்;

  சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

     தம்முடன் சரியா யிடார்!

அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்

     கன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

தந்தை ,தாய் ,விரும்பும் தெய்வம் ,மனைவி ,சுற்றத்தார் ,பெற்ற பிள்ளைகள் ,பாதுகாப்புக்காகத் தன்னை நம்பி வருவோர் ,பணியாளர் ,தென்புலத்தார் ,வறிஞர் ,

அதிதி ,துணைவர் (நண்பர்) ,பசு ,பூசுரர் (அந்தணர்) ,ஆகியோரைப் பேணுபவர் இல்லறத்தார். ,துறவறத்தார் இவருக்குச் சமமாகமாட்டார்.

***

8.வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டு

     வெங்காஞ் சொறிப்பு தலிலே

  வீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்

     மேவுமோ? மேவா துபோல்,

குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,

     கூடவே இளமை உண்டாய்க்,

  கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க

     குவலயந் தனில்அ வர்க்கு,

நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்

     நிதானமும் பெரியோர் கள்மேல்

  நேசமும் ஈகையும் இவையெலாம் கனவிலும்

     நினைவிலும் வராது கண்டாய்;

வெறி கொண்ட மற்கடம் – வெறி பிடித்த ஒரு குரங்கு, பேய் கொண்டு – பேயாற் பிடிக்கப்பட்டு, கள் உண்டு – (அதன்மேற்) கள்ளையுங் குடித்து, வெம் கரஞ்சொறிப் புதரில் வீழ்ந்து – (மேலும்) கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து, தேள்

கொட்டிட – (அவற்றுடன்) தேளாலும் கொட்டப்பெற்றால், எள்ளளவும்

சன்மார்க்கம் மேவுமோ – (அக் குரங்குக்கு) சிறிதளவேனும் நன்னெறியிலே செல்லும் நிலை உண்டாகுமோ? மேவாதுபோல் – (அவ்வாறு அக் குரங்குக்கு நன்னெறி) தோன்றாததுபோல்), குறைகின்ற புத்தியாய் – சிற்றறிவுடன், அதில் அற்ப சாதியாய் – மேலும் இழிசெயலுடைய குலத்தினராய், கூடவே இளமை உண்டாய்

– அவற்றுடன் இளமைப் பருவமும் உடையவராய் (இருந்து) அவர்க்கு –

அவர்கட்கு, கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் – சிறிது

தலைமைப்பதவி கிடைத்தாலும், குவலயந்தனில் – உலகத்தில், நிறைகின்றபத்தியும் – நிறைந்த கடவுள் அன்பும், சீலமும் – ஒழுக்கமும், மேன்மையும்– பெருந்தன்மையும், நிதானமும் – அமைதியும், பெரியோர்கள்மேல் நேசமும் – அறிஞரிடம் நட்பும், ஈகையும் – கொடைப்பண்பும்,இவையெலாம் நினைவிலும் கனவிலும் வராது – (ஆகிய) இவைகள் யாவும் நினைவிலேயன்றிக் கனவிலும் உண்டாகா.

***

9.நல்லவர்களின் பட்டியலில்  சற்புருடர்யார் ?

செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர்செய்

     தீமையை மறந்த பேரும்,

  திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேல்

     சித்தம்வை யாத பேரும்,

கைகண்டு எடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்

     கையில்கொ டுத்த பேரும்,

  காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி

     காத்தருள்செய் கின்ற பேரும்,

பொய்ஒன்று நிதிகோடி வரினும் வழக்குஅழிவு

     புகலாத நிலைகொள் பேரும்.

  புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்

     பொய்ம்மைஉரை யாத பேரும்,

ஐய, இங்கு இவரெலாம் சற்புருடர் என்று உலகர்

     அகமகிழ்வர்!

(செய்நன்றி மறவாதவர்கள், ஒருவர் செய்த தீமையை மறந்து, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற ‘பாலிசி’யைப் பின்பற்றுவோர் உத்தமர்கள். 

பணமே கொடுத்தாலும் மாற்றானின் மனைவியின் மீது ஆசை வைக்காதவனும், பிறர் பொருளைக் கீழே கண்டு எடுத்தாலும் அதன் உரிமையாளரைத் தேடிக்கண்டு பிடித்து கொடுப்பவரும்,  கோவிலுக்கும் அறப்பணிகளுக்கும், பிராமணர்களுக்கும் கல்வெட்டுக்களில், உயில்களில் எழுதி வைத்த தர்மத்தைக் காப்பவர்களும்  உத்தமர்கள்.

எவ்வளவு பணம் கொடுத்தாலும் வழக்கில் பொய் பேசாமல், நடுவு நிலைமை தவறாறாதவர்களும் , அதாவது கோடிக்கணாக்காக பணத்தை அள்ளிவீசினாலும் பணத்துக்காக பொய்ச் சாட்சி, பொய்த் தீர்ப்பு சொல்லாதவர்களும்  உயிரே போகும் நிலைமை வந்தாலும் கனவிலும் கூட பொய் மட்டும் சொல்ல மாட்டேன் என்போரும் சத் புருஷர்கள்/ நல்லவர்கள் என்று உலகமே போற்றும்.)

***

10.அம்பலவாணர் சொல்வது :

கோவில் இல்லாத ஊர், நாசி இல்லா முகம்,

          கொழுநன் இல்லாத மடவார்,

     குணமது இல்லா வித்தை, மணமது இல்லாத மலர்,

          குஞ்சரம் இலாத சேனை,

காவல் இல்லாத பயிர், பாலர் இல்லாத மனை,

          கதிர் மதி இலாத வானம்,

     கவிஞர் இல்லாத சபை, சுதி லயை இலாத பண்,

          காவலர் இலாத தேசம்,

ஈவது இல்லாத தனம் நியமம் இல்லாத செபம்,

          இசை லவணம் இல்லாத ஊண்,

     இச்சை இல்லாத பெண் போக நலம், இவை தம்மின்

          ஏது பலன் உண்டு?

–subham—

Tags அறப்பளீச்சுர சதகம், 10 கேள்விகள்,  அம்பலவாணர், அந்தணர், நல்ல மனைவி , நல்லவர் பட்டியல் , கள் குடித்த குரங்கு

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 87; இந்து மத கலைச்சொல் அகராதி-87 (Post.16,015)

 Written by London Swaminathan

Post No. 16,015

Date uploaded in London – 25 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆங்கிலத்தில் ஆர் ஐ RI எழுத்துக்களில் துவங்கும் சொற்கள்

ரிக் வேதம்

உலகிலேயே மிகப்பழமையான நூல்; இதற்கு இணையான நூல் உலகில் எந்தப் பகுதியிலும் இல்லை ; வேத கால ஸம்ஸ்ருத மொழியில் உள்ள இந்த நூலில் சுமார் 450 முனிவர்கள் மனக்கண்களால் கண்ட — ரேடியோ அலைகளை போல ஈர்த்த– 10,000 

மந்திரங்கள் சுமார் ஆயிரம் துதிகளில் உள்ளன . நான்கு வேதங்களில்– அதாவது ரிக், யஜுர், சாமம் அதர்வணம் என்ற – நான்கில் முதன்மையானது . சுமார் 6000 ஆண்டு முதல் 3500 ஆண்டுவரை  பலராலும் தேதி குறிப்பிடப்பட்டது.

இதுபற்றி அதிகம் எழுதியோர் ஆங்கிலத்தில் எழுதியதால் தப்பும் தவறுமாக உளறிக்கொட்டி இருக்கிறார்கள்; அந்தப் பேர்வழிகள் இந்துமதத்தை எதிர்க்கும் ஆக்ஸ்போர்ட் துறையில் சம்பளம் வாங்கியவர்கள்; அவர்களில் மாக்ஸ்முல்லர் போன்ற பேர்வழிகள் இந்தியாவுக்கு வந்ததும் இல்லை ; இந்துக்களைப் பார்த்தும் இல்லை ; யார் இந்துமதத்தைப் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் வேதங்களைப் பற்றி என்ன சொல்கிறார்களோ அதைப் படித்தால் நன்கு புரியும் ; இந்திரன் என்பது ஒரே ஆளின் பெயர் என்று நினைத்து உளறிக்கொட்டி இருக்கிறார்கள் ; இவர்களை பற்றிக் காஞ்சி மகா சுவாமிகள் (1894-1994) முதலியோர் சொன்னதை முன்னரே எழுதி   ருக்கிறேன் .

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன அவைகளில் ஆறு மண்டலங்களை அந்தந்த ரிஷிகளின் வழிவந்தவர்கள் படைத்துள்ளனர் . வேதத்தை ஏற்காதவர்களை இந்துக்களாகச் சேர்ப்பதில்லை . ஆழ்வார்கள் நாயன்மார்கள் மஹான்கள்,  சாது, சந்யாசிகள் வேத்தைப் புகழ்ந்துள்ளார்கள். இதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம்,  திருக்குறளிலும் காணலாம். 

இதோ சில  ரிக் வேத புள்ளிவிவரங்கள்

மொத்தமுள்ள சூக்தங்கள்/ துதிகள்  1028 .

அவைகளில் உள்ள மந்திரங்களின் எண்ணிக்கை-  10,600.

The number of syllables அசைகள் 432,000.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் எழுதிய பாஷ்யத்தை வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்த்து ஆங்காங்கு சொந்தச்  சரக்கையும் சேர்த்து, அதி பயங்கர உளறல்களைக் கொட்டியுள்ளனர்  ; எடுத்துக்காட்டாக முதல் பக்கத்திலே கிரிப்பித் என்னும் பேர்வழி, சோம லதை பற்றிச் சேர்த்த உதாரணத்தைச் சொல்லலாம்.

ரிக்வேதத்திலுள்ள சொற்களின் எண்ணிக்கை – 1,53,826

மண்டலம் 2:  க்ருத்சமத ரிஷியின் குடும்ப ரிஷிகள்  (43 hymns)

மண்டலம் 3: விசுவாமித்திரர் குடும்பம்  (62 hymns)

மண்டலம் 4: வாமதேவ ரிஷியின் குடும்பம் (58 hymns)

மண்டலம் 5: அத்ரி மகரிஷியின் குடும்பம் (87 hymns)

மண்டலம் 6: பரத்வாஜ ரிஷியின்குடும்பம்  (75 hymns)

மண்டலம் 7: வசிஷ்ட மஹரிஷியின் குடும்பம் (104 hymns)

முதல் மண்டலத்திலும் கடைசி /பத்தாவது மண்டலத்திலும் பல ரிஷிகளின் பாடல்கள் இருக்கின்றன .

மண்டலம் 8 – பல தெய்வங்கள் பற்றிய  103 துதிகள்;  ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம லதை பற்றிய 114 துதிகள் உள்ளன .

***

ரிஷிகேஷ்

இமயமலையின் அடிவாரத்தில், கங்கை நதியின் கரையில், அமைந்த புனிதத்தலம .  ஒருகாலத்தில் இயற்கை வனப்புடன் இருந்த இந்த இடம் இப்பொழுது முழு அளவுக்கு வணிகத் தலமாக மாறிவிட்டது சுவாமி சிவானந்தர் போன்ற தூய தமிழ் சந்நியாசி முதலில் தெய்வ நெறிக்கழகத்தை Divini Life Society.   நிறுவி இதன் புகழை இந்தியா முழுதும் பரப்பினார். பின்னர் மஹேஸ் யோகியை பீட்டில்ஸ் பாடகர்கள் பின்பற்றவே இது உலகம் முழுதும் தெரியவந்தது; இன்று ரிஷிகேஷில் கிளை அமைக்காத சாது சன்யாசி கிடையாது; முக்கால் வாசி யோகா பிசினஸ் நடத்துவோர் ஆவர்; தூய்மைக்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளி மிகப்பெரியது இதை உலக யோகா தலை நகர் என்றும் அழைப்பார்கள்; தற்போது உத்தர கண்ட மாநிலத்திலுள்ள இந்த இடத்தை டேராடூன் முதலிய நகரங்களிலிருந்து எளிதில் அடையலாம்  ஹரித்வாரிலிருந்து 24 கிலோமீட்டர் தூரம். (லண்டன் சுவாமிநாதன் இரண்டு முறை சென்றுவந்த இடம் )

***

ரிஷ்யசிருங்கர் / தமிழில் கலைக்கோட்டு முனிவர்

தலையில் மான் கொம்புடன் பிறந்தவர் ; தந்தை விபாண்டக முனிவரால் காட்டில் வளர்ந்து யோகங்களையும் வேதங்களையும் கற்றவர் ; ஒரு காலத்தில் ரோமபாதர் ஆண்ட அங்க தேசத்தில் வறட்சி நிலவியது; அப்போது இவர் வந்தால் மழை பெய்யும் என்று அறிந்து நாட்டியக்காரிகளை அனுப்பி அவரைக் கவர்ந்து அழைத்துவந்தார்; மழையும் பெய்தது. தனது மகள் சாந்தாவை திருமணம் செய்து கொடுத்தார் இவரது பெருமையை அறிந்த தசரதர் குழந்தை வரம் வேண்டி நடத்திய புத்ர காமேஷ்டி யாகத்தை இவர் மூலம் நடத்தி  பலன் அடைந்தார்.

***

ரோமஹர்ஷணர் 

புராணக் கதைகளைச் சொல்லுவதில் வல்லவர் . வேத வியாசரின் சீடர். . அவருடைய மகன் உக்ரஸ்ரவஸ் மஹாபாரத பிரவசனம் செய்தார் . அவர் மூலமே மஹாபாரதம் கிடைத்தது .

***

ருது

பர்வம் என்பது இதன் பொருள்;  இந்துக்கள் பருவங்களை ஆறாகப் பிரித்தனர் ; சங்க காலத் தமிழர்கள் அதை அப்படியே ஏற்று தமிழிலும் கொடுத்தனர் ; மேலை நாடுகளில் நான்கு பருவங்கள் மட்டுமே பேசப்படுகிறது .

உலகில் முதல் முதலில் பருவங்களைப் புகழ்ந்து நூல் எழுதியவர் காளிதாசர் ஆவார்; இவர்ருடை சம்ஸ்க்ருத ருது சம்ஹாரம் மிகவும் அழகான வருணனைகள் அடங்கியது .

அதில் காணும் ஆறு பருவங்கள் :

1.           வசந்த, or spring (Phālguna to Vaiśākha—mid March to mid May);

2.           க்ரீஷ்ம/ கோடை  , or summer (Vaiśākha to Āṣāḍha—mid May to mid July);

3.           வர்ஷ /மழைக்காலம் , or rainy season (Āṣāḍha to Bhādrapadā—mid July to mid Sep-tember );

4.           சரத் , or autumn (Bhādrapadā to Kārtika—mid September to mid No-vember);

5.           ஹேமந்த /குளிர் காலம் , winter, before the frost (Kārtika to Pauṣa—mid November to mid January);

6.           சீர்ஷ , or winter (Pauṣa to Phālguna—mid January to mid March).

காளிதாசனுக்கு முன்னர், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதத்திலும், பருவம் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயினும் அதர்வண வேதமே (6-55-2) ஆறு பருவங்களை முதலில் குறிப்பிடுகிறது. பல சம்ஹிதைகளிலும் ஆறு பருவங்கள் வருகின்றன.

வேதத்திலும் தொல்காப்பியத்திலும் இளவேனில், முது வேனில், கார், கூதிர், முன் பனி, பின்பனிக் காலம் என்று ஆறு பருவங்கள் உள்ளன. பழங்கால நாகரீகம் எதிலும் இப்பிரிவுகள் இல்லை. இதனால் என்ன தெரிகிறது?

காஷ்மீர் முதல் இலங்கையின் தென்கோடி கண்டி வரை ஒரே கலாசாரமே வேத காலம் முதல் நிலவியது.

தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் அகத்திணை இயலில் வரும் சூத்திரம்:
“காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
பனிஎதிர் பருவமும் மொழிப.
வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்
நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும் உரித்தென மொழிப”

என்று நிலங்களுக்கு உரிய ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறு பொழுதுகளையும் கூறுவார்.

***

ருத்ராக்ஷம்

இமயமலையிலும் தென் கிழக்காசிய நாடுகளிலும் வளரும் ஒரு குறிப்பிட்ட மரத்தின் (botanically Elaeocarpus ganitrus) விதைகளை இந்துக்கள் புனிதமாகக் கருதி மாலைகளாக ஜெப மாலைகளாகப் பயன்படுத்துகின்றனர்; ருத்ர + அக்ஷ = என்றால்  சிவனின் கண்கள் என்று பொருள் இதில் ஏக முகம் முதல் பல முகங்கள் உள்ள வகை வரை கிடைக்கின்றன ; அவைகளின் பலன்களை தேவி பாகவதம், சிவ புராணம் முதலிய நூல்களில் காணலாம்.

***

ருத்ரன்


ரிக் வேதத்தில் ருத்ரன் என்று போற்றப்படும் தெய்வத்தை யஜுர் வேதம் முதலிய நூல்களில் சிவ பெருமானாகக் காண்கிறோம். சங்கத்தமிழ் நூல்களில் சிவனும் ருத்திரனும் ஒருவரே. ருத்ரன் கோபக் கனல் வீசும் சிவன் ஆவார் ; மும்மூர்த்திகளில் அழி த்தல் தொழில் அவருடையது; வேதத்தில் இவர் யானை புலித் தோலை அணிந்து வில் அம்புடன் காட்சி தருவதைத் தேவாரம் திருவாசகத்தில் காணலாம் . ருத்ரனை டாக் டராகவும் மருந்தாகவும் வேதங்கள் போற்றுகின்றன ஒரு மந்திரம் இவரிடம் ஆயிரம் குளிகைகள் உள்ளதாகப் பாடு கிறது;  தீராத நோயைத் தீர்த்து வைய்ப்பவர் என்று அப்பர் பெருமானும் புள்ளிருக்கு வேளூர் பதிகத்தில் போற்றுகிறார்; இன்றுவரை அந்த வைத்தீஸ்வரன் கோவிலை நோய் தீர்க்கும் தெய்வமாகவே வழிபட்டு வருகிறோம் ஆகையால் ரிக்வேதத்தில் பாடப்பட்ட ருத்ரனும்  தேவாரத்தில், சங்க இலக்கியத்தில் நக்கீரர் அவ்வையார் பாடிய சிவனும் ஒன்றே.

***

ருத்ரம்

யஜுர் வேதத்தில் வரும் முக்கியதுதி .

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் முதல் முதலி வரும் துதி இது

ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்

சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.

நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.

ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது.

ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

பாபா செய்த மகத்தான யக்ஞம்–  அதிருத்ரம்

ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். நமது காலத்தில் சென்னையிலும் புட்டபர்த்தியிலும் ஸ்ரீ சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்:–

ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது
மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது
அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.

Rudra Ekadasi: When Rudram is recited 121 times (11 priests recite it 11 times) it is Rudra Ekadasi.

When Rudram is recited 1331 times (11X11X11) it is Maha Rudram

When Rudram is recited 14641 times (11X 11X11X11) it is Ati Rudram.

To be continued………………………..

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 87; இந்து மத கலைச்சொல் அகராதி-87, அதிருத்ரம், ருத்ரன், ருத்ராக்ஷம், ரிக் வேதம்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 75; இந்து மத கலைச்சொல் அகராதி- 75 (Post.15,928)

Picture– 63 Nayanmars

Written by London Swaminathan

Post No. 15,928

Date uploaded in London –29 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

N words continued…………………..

நாயன்மார் / நாயனார்

சிவ பெருமானை வழிபட்ட 63  பெரியோர்கள் நாயன்மார் அல்லது நாயனார் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களில் மூவர் பெண்கள்; இவர்களுடைய கதைகளை சேக்கிழார் என்ற புலவர் அறிஞர் பெரியபுராணம் என்னும் நூலில் பாடியுள்ளார் ; இவர்களுடைய சிலைகளை பெரிய சிவன் கோவில்களின் பிரகாரத்தில் காணலாம். இந்த 63 பேரில் மாணிக்கவாசகர் இல்லாதது ஏன் என்று இன்று வரை விவாதிக்கப்பட்டுவருகிறது. 12 ஆழ்வார்களைப் போலவே இவர்களிலும் பல ஜாதிகளைச் சேர்ந்தோர் உள்ளனர் ; அப்பர் என்னும் திருநாவுக்கரசர் (600 CE) மற்றும் ஞான சம்பந்தர் காலம் நமக்குத் தெரிவதால் இவர்கள் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை பரப்பியது உறுதியாகிறது; இவர்களுடைய பாடல்களை பன்னிரு திருமுறைகளில் படிக்கலாம் . 63 பேரில் கண்ணப்ப நாயனார் என்ற வேடரின் கதை மிகவும் பிரபலமானது.

***

நாரதர்

தேவரிஷி என்று பெயர் பெற்றவர் நாரதர் ; பூலோகத்துக்கும் மேலோகத்துக்கும் இடையே பயணம் செய்த முதல் விண்வெளி வீரர் திரிலோக சஞ்சாரி என்று பெயர்பெற்றவர் ; கலகம் விளைவிப்பதில்மன்னன்; ஆயினும் நாரதர் கலகம்  நன்மையில் முடியும் என்ற வசனமும் பிரபலமானதே ; தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரத்தில் முதல் தடவையாக இவர் பெயர் வருகிறது ; இவர் வீணை என்னும் இசைக்கருவியைக் கண்டுபிடித்தால் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ இவரை நாரதர் வீணை என்று பாடியிருக்கிறார்; வீணையும் நாராயண நாராயண என்ற சொற்களும் இவரை அடையாளம் காட்டிவிடும்; பெரிய விஷ்ணு பக்தர் ; மஹாபாரதத்தில் வனவாசம் செய்த பாண்டவர்களை அவ்வப்போது கண்டு, தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியவர்;  துரியோதனனை அடக்கி வையுங்கள் என்று திருத ராஷ்டிரனுக்கும் அறிவுரை வழங்கினார். பிரம்மாவின் மனதில் உதித்த பத்து ரிஷிகளில் ஒருவர் ; பிரபஞ்த்தின் முதல் பிரம்மச்சாரி; இவர் போதித்த பாகவதத்தை வியாசர் அவருடைய பிள்ளையான சுகருக்குச் சொல்லிக்கொடுத்தார் ; நாரதர் பெயரில் பல நூல்கள் உள்ளன. இவர்கள் தேவரிஷி நாரதர் அல்ல ; நாட்டிய சாஸ்திரத்தைப் பரத முனி 6000 சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் பாடியபோது இவரும் இருந்ததாக நாட்டிய சாஸ்திரம் பகர்கிறது ;

நாரத பக்தி சூத்திரம்

பக்தியின் இலக்கணத்தை விளம்பும் நாரத பக்தி சூத்திரம் என்ற நூலை சம்ஸ்க்ருத மொழியில் இவர் இயற்றினார். பக்தி என்றால்  என்ன, பக்தரின் நடை உடை பாவனை எப்படி இருக்கும், பக்தியால்  விளையும் நன்மைகள் என்னென்ன என்ற 84 சூத்திரங்களை உடைய நூல் நாரத பக்தி சூத்திரம் ஆகும்.

***

நரகாசுரன்

கிருஷ்ண பரமாத்வாலால் வதைக்கப்பட்ட அசுரர்களில் ஒருவன் ; பிரக் ஜோதிஷம் என்னும் அஸ்ஸாம் பகுதியை ஆட்சி செய்தவன் ; 16, 000 பெண்களை சிறை வைத்தவன்; இவன் இறந்த நாளை நரக சதுர்த்தி என்ற பெயரில் தீபாவளியாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். பூமாதேவியின் புதல்வன் வராஹ அவதாரத்தில் தர்த்தி என்ற பெயர்; தன்னுடைய புதல்வனுக்கு நீண்ட ஆயுளும் அதிக சக்தியும் கொடுக்கவேண்டும் என்று விஷ்ணுவிடம் பூமாதேவி வேண்டினாள்; மேலும் எந்த ஆண் மகனும் இவனைக் கொல்லமுடியாத சக்தி தர வேண்டும் என்றாள்; விஷ்ணுவும் இவன் அடுத்த யுகம் வரை வாழ்வான் என்று சொல்லி வரமளித்தார் . அவனோ பாணாசுரனுடன் சேர்ந்து அதிகார மமதையில் எல்லோரையும் கொடுமைப்படுத்தி வந்தான் ; சொர்க்க லோகத்தையும் வசப்படுத்த எண்ணினான் ; விஷ்ணுவானவர் கிருஷ்ணனாக அவதரித்தபோது  அவருடைய எட்டு மனைவிகளில் ஒருவரான சத்யபாமா பூதேவியின் அவதாரம் ஆக வந்தாள்; கிருஷ்ணர் அவளையும் அழைத்துக்கொண்டு நரகாசுரனுடன் மோதியபோது பூ தேவி ( சத்யா பாமா) அம்பினாலேயே அவன் அழிந்தான் ; கிருஷ்ணன் 16,000 பெண்களையும் துவாரகைக்கு அழைத்துச் சென்றார்

***

நிகும்ப

பல ராக்ஷஸர்களுக்கு இந்தப் பெயர் உண்டு

மஹாபாரத நிகும்பன் சுந்த–உபசுந்த என்ற ராக்ஷஸர்களுக்கு தந்தை; அவ்விரு ராக்ஷஸர்களும் திலோத்தமை என்ற தேவ லோக அழகி விஷயத்தில் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொன்று அழிந்தனர்.

வால்மீகி ராமாயணத்தில் வரும் நிகும்பன், வஜ்ரமாலா- கும்பகர்ணன் தம்பதியருக்குப் பிறந்தவன் . அவனுடைய அண்ணன் பெயர் கும்பன்; ராமாயணத்தில் அனுமனால் கொல்லப்பட்டான்

ராவணனுடைய படைத்தளபதிகள் ஒருவனுக்கும் இதே பெயர் ; புராணங்களில் பேய் பிசாசுகளுடன் தொடர்புடையது நிகும்ப வனம்; ராவணனின் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித் இலங்கையிலுள்ள நிகும்ப வன குகையில் எதிரிகளை ஒழிக்கும் ஆபிசார யாகத்தை நடத்த முனைந்தபோது அதை அறிந்த லெட்சுமணன் அங்கு சென்று யாகத்தை நடைபெறாதவாறு தடுத்தான்.

***

நிமி 

தத்தாத்ரேயரின் புதல்வன்; அவருடைய மகன் இறந்தவுடன், அவன் சாந்தி அடைவதற்கான பல சடங்குகளை நிமி செய்தார்  ; அவைதான் இப்போது செய்யப்படும் சிராத்தம் என்னும் சடங்குகளுக்கு அடைப்படையாக அமைந்தது .

***

நிவாதக்கவச்ச, நீவாடகவச்ச The nivatakavachas (Sanskrit: निवातकवच,)

நிவாதக்கவச்ச என்றால் ஆயுதம் துளைக்க முடியாத கவசங்களை அணிந்தவர்கள் என்று பொருள் ; இப்போது அரசியல் தலைவர்கள் அணிந்து செல்லும் புல்லெட் ப்ரூப் சட்டை போன்றது; மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் நீவாடகவசர்கள் கடலுக்கு அடியில் வாழும் அசுர இனத்தவர், இவர்களை அர்ஜுனன் இந்திரன் உதவியுடன் போரிட்டு வென்றான்.

மஹாபாரதத் தகவல்

இதன் விவரமாவது; இவர்கள் தேவர்களுக்கு எதிரான தானவர்கள் ; தேவர்களின் நகரத்தை இவர்கள் ஆக்ரமித்தவுடன் சண்டை துவங்கியது; இவர்களின் எண்ணிக்கையோ முப்பது லட்சம்; அர்ஜுனன் விண்வெளியில் / சொர்க்க லோகத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தான்; பிரிவுபசாரத்தின் போது தானவர்களை அழித்து விட்டுச் சென்றால் அதுவே பெரிய நன்றி என்று இந்திரன் பகர்ந்தான் ; ஸ்பேஸ் ஷட்டில் என்னும் விண்கலத்தின் பைலட் மாதலியுடன் அர்ஜுனனை பூலோகத்துக்கு அனுப்பினான் ; அர்ஜுனன் விண்வெளியில் கிடைத்த நவீன (லேசர்) ஆயுதங்களை பயன்படுத்தி தானவர்களை அழித்தான்.  அர்ஜுனன் போர் முழக்கத்தை தேவ தத்தம் என்ற சங்கினை முழக்கித் துவங்கினான் ; தானவர்கள் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிப் போனான் ; அப்போதுதான் ஸ்பேஸ் ஷட்டில் பைலட் மாதலி, ஏன் தெய்வீக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று வினவினான். அதன்பேரில் அர்ஜுனன் தேவலோக ஆயுதங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றான் .

ராமாயணத்தில் வரும் தகவலின் படி இவர்கள் பிரம்மாவிடம் பெற்ற வரத்தால் ராவணனாலும் இந்திரஜித்தாலும் தோற்க முடியாவார்களாக விளங்கினார்கள் ; இறுதியில் பிரம்மா தலையிட்டு சமரசம் செய்து வைத்தார் ; இந்த தானவர்கள் தலைநகர் மணிமதீ ; இவர்கள் காலகேயர் என்னும் அசுரர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டனர்.

****

நர நாராயண

PICTURE OF NARA NARAYANA

நர நாராயணர்கள் என்போர் விஷ்ணுவின் இரட்டை அவதாரம் என்றும் இரட்டையர் ரிஷிகள் என்றும் புராணங்கள் செப்புகின்றன;

இதன் கருத்து என்னவென்றால் தர்மத்தை நிலைநாட்டுவதற்கு மனித முயற்சியும் தெய்வீக அருளும் தேவை என்பதாகும்.

தட்சனின் மகளான மூர்த்திக்கும் தர்மத்துக்கும் பிறந்தவர்கள் இவர்கள் ;பத்ரிநாத்தில் நீண்ட காலம் தவம் இயற்றினர்

மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் என்னும் நரன் ஆகவும் கிருஷ்ணன் என்னும் நாராயணன் ஆகவும் தோன்றினார்கள்

சிற்பங்களில் நரனை இரு கைகள் உடையவராகவும் நாராயணனை நான்கு கைகள் உடையவராகவும் காட்டியுள்ளனர்.

***

நரசிம்ம/  நரசிம்மவாதாரம்

நரசிம்மவாதாரம் விஷ்ணுவின் நாலாவது அவதாரம் ஆகும்; விஷ்ணு பக்தனான பிரஹலாதன் என்னும் சிறுவனைக் காப்பாற்றுவதற்காக சிங்க முகமும் மனித உடலும் எடுத்து அவதரித்தார் . ஹிரண்யகசிபுவை கடவுளாக வணங்க மறுத்த பிரஹலாதன் கடவுள் அணுவிலும் மேரு மலையிலும் தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்று சொன்னான் ; மன்னன் ஹிரண்யகசிபு அரண்மனைத் தூணை எட்டி உதைத்து  கடவுளைக் காட்டு என்றான் ; பிரஹலாதன் என்ற சிறுவன் பிரார்த்திக்கவே தூண் வெடித்துப் பிளந்து சிங்க முகப் பெருமாள் வெளியே வந்து, ஹிரண்ய காசிபுவின் உடலைக் கிழித்து எறிந்தார். இந்தச் சிற்பமும் ஓவியமும் நிறைய கோவில்களில் உள்ளன  ; பக்தர்கள் அதை வழிபட்டு வருகின்றனர் ; முதல் மூன்று அவதாரங்களுக்கு அத்தகைய சிறப்பு இல்லை .

***

நாளந்தா

தற்போதைய பீஹார் மாநிலம் முற்காலத்தில் பாரத்தின் வலிமை வாய்ந்த மகத சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது; அதிலிருந்த நாளந்தா  உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தது ; பாட்னா என்னும் பாடலிபுத்ரத்திலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த இடம் இப்போது யுனெஸ்கோ பாரம்பர்ய கேந்திரமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

தட்சசீலம், விக்ரமசீலம் முதலிய பல்கலைக்கழகங்களின் மாதிரியில் அமைக்கப்பட்ட இது புத்த விஹாரமாகவும் இருந்தது; சீனா, ஜப்பான் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மாணவர்கள் பயின்றனர்; வேதம் முதல் பெளத்தம் வரையான நூல்கள் பல்லாயிரக்கணக்கில் சேகரித்து வைக்கப்பட்ட உலகின் பிரம்மாண்ட லைப்ரரியும் இருந்தது; விஷ்ணு பக்தர்களான குப்தர்கள் பேராதரவு நல்கினார்கள் ; ஐந்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரை கொடிகட்டிப் பறந்தது .

துருக்கிய ஆப்கானிய தில்லி சுலதான் வம்ச மதவெறியன் பக்தியார் கில்ஜி (Bakhtiyar Khilji of the Delhi Sultanate  ) படையெடுத்து வந்து பல்கலைக்கழகத்தை இடித்து நூலகத்துக்கு தீ வைத்தான் ; அந்த நூலகம் மூன்று மாதங்களுக்கு எரிந்து கொண்டிருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்தனர் ; பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத நூல்களின் பெயர்களை இன்று உரைகளில் காண்கிறோம்; ஆனால் நூல்கள் கிடைக்கவில்லை ;எல்லாம் அங்கே சாம்பலாயின.

Eyewitness Accounts: Tibetan monk Dharmasvamin visited the site in 1234 CE, nearly 40 years after Khilji’s campaign. He found the institution heavily ruined but still functioning, with a small fraction of about 70 monks being taught by a 90-year-old abbot.

பக்தியார் கில்ஜி தீவைத்து அழித்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தர்ம சுவாமி என்னும் திபெத்திய புத்த பிட்சு அங்கே வந்து கண்ட காட்சியை நமக்கு எழுதிவைத்துள்ளார் . 90 வயத்துக்கிழவனார் ஒருவர் பாடம் கற்பிக்க 70 மாணவர்கள் இருந்தனர் என்றும் பலக்லைக்கழகம் பயங்கர சேதம் அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்   அதற்குப்பின்னர் அதை புனருத்தாரணம் செய்யும் முயற்சிகள் பலிக்க வில்லை; காரணம் மேலும் மேலும் முஸ்லீம்கள் படையெடுத்து அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர்; இப்போது அதே பேரில் புதிய பல்கலைக்கழகம் தோன்றியுள்ளது.

Tags- நாளந்தா, நரசிம்ம, நிவாதக்கவச்ச, நரகாசுர, நீவாடகவச்ச, நாயன்மார் , நிகும்ப,  HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 73; இந்து மத கலைச்சொல் அகராதி- 75, நாரதர், நரகாசுரன்

To be continued……………………