
தொகுத்தவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 1865; தேதி 14 மே 2015
லண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்: 20-29
1.அஞ்ஞாத குல சீலஸ்ய வாஸோ தேயோ ந கஸ்யசித் – ஹிதோபதேசம்
குல ஒழுக்கங்களை அறியாமல் எந்த ஒருவருக்கும் இடம் தரக்கூடாது.
“குலத்து அளவே ஆகும் குணம்”- அவ்வையார்/மூதுரை
“ஆழம் தெரியாமல் காலை விடாதே”
2.அதரே பயசா தக்தே தக்ரம் பிபதி ப்பூத்க்ருத்ய
பாலால் சுடப்பட்ட பின்னால், மோரைக் கண்டால் கூட பூ.. பூ.. அன்று ஆற்றிக் குடிப்போம்.
“பட்டால்தான் தெரியும் பார்ப்பானுக்கு”
“சூடு கண்ட பூனை”
3.அதிகஸ்யாதிகம் பலம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமோ அவ்வளவுக்கு அவ்வளவு பலன்.
முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் – குறள்
“அடிக்க அடிக்க அம்மியும் நகரும்”
“எறும்பூரக் கல்லும் தேயும்”

4.அத்ருவாத் துருவம் வரம்
நிச்சயமில்லாமல் இருப்பதைவிட நிச்சயமாக இருப்பதே சிறந்தது
“துணிந்தவனுக்கே உலகம் கிடைக்கும்”
“வெட்டு ஒன்று, துண்டு இரண்டு!”
5.அனதிக்ரமணீயானி ஸ்ரேயாம்சி- அபிக்ஞான சாகுந்தலம்
உயர்ந்த விஷயங்களை மீறக்கூடாது
பெரியவாள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி
மூத்தோர் சொல்லைத் தட்டாதே
வழியே ஏகுக, வழியே மீளுக—வெற்றி வேற்கை
6.அனார்யஜுஷ்டேன பதா ப்ரவ்ருத்தானாம் சிவம் குத: -கதா சரித் சாகரம்/கதைக்கடல்
பண்படற்றவர்களால் வழிநடத்தப்படுவோருக்கு நற்கதி ஏது?
“தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே” – அவ்வையாரின் முதுரை

7.அநார்யப் பரதார வ்யவஹார: – அபிக்ஞான சாகுந்தலம்
பிறர் மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பது அநாகரீகமாகும் (ஆரியர் அற்றவர்/ பண்பாடாதல்லவர் வழக்கு)
“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்”– குறள்
8.அந்யாயம் குருதே யதி க்ஷிதிபதி: கஸ்தம் ந்ரோத்தம் க்ஷம: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
அரசனே தவறு செய்தால் அதைத் தடுக்க யாருக்கு சக்தி உண்டு?
“வேலியே பயிரை மேய்ந்தால்?”
9.அபி சாஸ்த்ரேஷு குசலா லோகாசார விவர்ஜிதா: சர்வே தே ஹாஸ்யதாம் யாந்தி – பஞ்சதந்திரம்
சாத்திரங்களில் எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாலும், உலக விவகாரம் தெரியாவிட்டால் பிறரின் நகைப்புக்கு உள்ளாக நேரிடும்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவில்லாதார் – குறள்
படகு உடைந்தபோது நீந்தத் தெரியாத சந்யாசிக்கு நேர்ந்த கதி—ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

10அபூஜ்யா யத்ர பூஜ்யந்தே பூஜ்யாம் து விமானனா
த்ரீணி யத்ர ப்ரவர்த்தந்தே துர்பிக்ஷம் மரணம் பயம் – –பஞ்சதந்திரம்
மதிக்கப்படக் கூடாதோர் எங்கு மதிக்கப்படுகிறார்களோ, மதிக்கப்பட வேண்டியவர்கள் எங்கு அவமதிக்கப்படு கிறார்களோ அங்கே மூன்று வரும்: வறுமை, சாவு, பயம்.
வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் – பாங்கு அறியாப்
புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம் – மூதுரை/அவ்வையார்
நிரில் தத்தளித்த தேளைக் காப்பாற்றினாலும் அது கொட்டதான் செய்யும் – ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

hariharanark
/ May 17, 2015மதிக்கப்பட வேண்டியவர்கள் எங்கு அவமதிக்கப்படு கிறார்களோ அங்கே மூன்று வரும்: வறுமை, சாவு, பயம்.