DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Research Article: Written by London swaminathan
Date: 15th September 2015
Post No: 2160
Time uploaded in London :–14-16
(Thanks for the pictures)
“300 ராமாயணம்” என்று ஆங்கிலத்தில் ஏ.கே. ராமனுஜம் கட்டுரை எழுதிய பின்னர் கடந்த கால் நூற்றாண்டில் பல நூல்கள் வெளியாகிவிட்டன. நானே புறநானூற்றில் உள்ள இரண்டு ராமாயணக் காட்சிகள், ஆழ்வார் பாடல்களில் வரும் அணிலின் உதவி (இலங்கைக்குப் பாலம் கட்ட) முதலிய பல காட்சிகள் ஒரிஜினல் ராமாயணங்களில் இல்லை என்பதை எழுதி இருக்கிறேன். சென்ற வாரம் ராமன்- யமன் சண்டை பற்றி வசந்தன் உயிர்வரு படலம் என்ற சிறிய நூலை பிரிட்டிஷ் லைப்ரரயிலிருந்து எடுத்து இங்கே வெளியிட்டேன். தியாகராஜர் போன்றோரின் கிருதிகளில் வரும் ராமாயணம், ஆழ்வார் பாடல்களில் வரும் ராமாயணம், திரைப்படப் பாடல்களில் வரும் ராமாயணம், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பலவகை ராமாயணங்கள் என்று தொகுக்கப் போனால் 3000 ராமயணங்களுக்கும் மேல் கிடைக்கும்!! நமக்குத் தெரிந்தது எல்லாம் கம்பன், வால்மீகி, துளசிதாஸ், எழுத்தச்சன்,மற்றும் அஸ்ஸாமிய, வங்காளி மொழி ராமாயணங்கள்தான். கம்பன் குறிப்பிடும் மூன்று ராமாயணங்களில் போதாயன , வசிஷ்ட ராமாயணங்கள் நமக்குக் கிடைத்தற்பாடில.
பிரிட்டிஷ் லைப்ரரியில் ராமாயணக் கும்மி என்று ஒரு பாக்கெட் சைஸ் நூலைப் பார்த்தவுடன் வியப்பு மேலிட்டு இதை எழுதுகிறேன். எத்தனை பேரோ ராமாயணம் எழுதி இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் நாம் மறந்துவிட்டோம். யாரை நம்பி, திருநெல்வேலி ஜில்லா, தென்காசி தாலுக்கா, குருங்களாவனம், வெங்கட்ராமையர் இப்படி ஒரு ராமாயனக் கும்மி எழுதினார்? யாரை நம்பி அதை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரி 1902-ஆம் ஆண்டு முதல் காப்பாற்றி வைத்திருக்கிறது? – இதை எண்ணும்போதெல்லாம் புல்லரிக்கிறது. காலத்தால் வெல்ல முடியாத காவியமன்றோ ராமகாதை!!
வெங்கட்ராமையருக்கு பன்முறை நமஸ்காரம் சொல்லி அந்த ராமாயணக் கும்மியை இங்கு வெளியிடுகிறேன். 113 ஆண்டுகளுக்கும் மேலாக அதைப் பாதுகாத்துவைத்து வந்து கேட்போருக்கெல்லாம் அரிய, பெரிய, பல்லாயிரம் தமிழ் நூல்களை இலவசமாக வழங்கும் பிரிட்டிஷ் லைப்ரிக்கு நன்றி சொல்லி இதை வெளியிடுகிறேன். ஆணவமும், அஹங்காரமும், பண வெறியும் பிடித்த தமிழ்நாட்டு நூலகங்கள் இவர்களிடம் பாடம் கற்க வேண்டும்—பயிற்சி பெற வேண்டும். கடவுள் காப்பாற்றுவாராக!

To be contimnued………………..




















atpu555
/ September 15, 2015இத்தகைய அரிய பெரிய நூல்களை நாங்களும் பார்க்க வழிசெய்யும் உங்களுக்கும் எமது நன்றி! From: Tamil and Vedas To: atpu555@yahoo.co.uk Sent: Tuesday, 15 September 2015, 14:04 Subject: [New post] 300 ராமாயணமா? 3000 ராமாயணமா? –Part 1 #yiv9230342171 a:hover {color:red;}#yiv9230342171 a {text-decoration:none;color:#0088cc;}#yiv9230342171 a.yiv9230342171primaryactionlink:link, #yiv9230342171 a.yiv9230342171primaryactionlink:visited {background-color:#2585B2;color:#fff;}#yiv9230342171 a.yiv9230342171primaryactionlink:hover, #yiv9230342171 a.yiv9230342171primaryactionlink:active {background-color:#11729E;color:#fff;}#yiv9230342171 WordPress.com | Tamil and Vedas posted: “DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. Research Article: Written by London swaminathanDate: 15th September 2015Post No: 2160Time uploaded in London :–13-50(Thanks for the pic” | |