Compiled by London swaminathan
Post No.2275
Date: 26 October 2015
Time uploaded in London: 16-01
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
சம்ஸ்கிருத/தமிழ் பொன்மொழிகள்
1).புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் – புறம் 182
2).அக்ருத்யம் நைவ கர்தவ்யம் ப்ராணத்யாகே அப்யுப்ஸ்திதே- பஞ்சதந்திரம்
பொருள்:உயிரே போகுமென்றாலும் செய்யக் கூடாத (தீய) செயல்களைச் செய்யக்கூடாது.
3).ஒப்பிடுக (ஹிந்தி): ப்ராண் ஜாயேன் ந வசன் ஜாயேன்
4).ஈன்றாள் பசி காண்பாண் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை – குறள் 656
Xxx
மனசா சிந்திதம் கார்யம் வசசா ந ப்ரகாசயேத்
அன்யலக்ஷிதகார்யஸ்ய யத: சித்திர்ன ஜாயதே –
—-சாணக்ய நீதி தர்பணம்
மனதில் நினைத்த காரியத்தை வெளியே சொல்லாதே; இன்னொருவரின் பார்வையில் விழுந்தால் அது வெற்றியடையாது.
xxx
அதிரபசக்ருதானாம் கர்மணாமாவிபத்தேர்பவதி
ஹ்ருதயதாஹீ சல்யதுல்யோவிபாக: — பர்த்ருஹரி
பொருள்: சிந்தித்துச் செயல்படாவிட்டால் இறுதிவரை அது முள் போலத் தைக்கும்
ஒப்பிடுக: எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு – குறள் 467
Xxx
அபரிக்ஷ்ய ந கர்தவ்யம், கர்தவ்யம் சுபரிக்ஷிதம் – பஞ்சதந்திரம்
பொருள்:-ஆராயாமல் எதையும் செய்யாதே, நன்கு ஆராய்ந்தபின்னரே எதையும் செய்ய வேண்டும்.
பொருள், கருவி, காலம், வினை, இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல் – குறள் 675
Xxx
ஆமுகாபாதி கல்யாணம் கார்ய சித்திம் ஹி சம்சதி – கதாசரித் சாகரம்
பொருள்:– செயல் செய்யும்போது மங்களகரமான விஷயத்துடன் துவங்கினால் அது வெற்றியடையும்.
–Subham–


You must be logged in to post a comment.