
Rue de l’Étuve – Stoofstraat, Bruxelles – Brussel, België
WRITTEN BY S NAGARAJAN
Date: 19 March 2016
Post No. 2645
Time uploaded in London :– 8-29 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

Urinating boy statue in Brussels
நையாண்டி மடல் எண் 5
ஜம் ஜம் பங்கஜம் பங்கேற்கும் தலை நகர் சேனல் நிகழ்ச்சி!
ச.நாகராஜன்
என் அன்புக்குரிய முட்டாள்களே!
CUTTING பற்றிய மடல் தயார்! அதை வெளியிடும் நேரத்தில் அவசரத் தொலைபேசி அழைப்பு என உதவியாளர் கூற யார் என்றேன்.
சொன்னார். என்னையா என்றேன்!
நமது அறிவுக் களஞ்சியங்கள் பணி புரியும் தலைநகரின் பல்கலைக் கழகம் என்றதும் உள்ளமெலாம் பூரித்தது. உடலெல்லாம் சிலிர்த்தது.
பேசினேன். வேறொன்றுமில்லை. ஆதரித்து ஒரு அறிக்கை வேண்டுமாம்.
தர வேண்டியதை நான் தந்தால், தர வேண்டியதை அவர்கள் தருவார்கள், இல்லையா? புரிந்து கொண்டாயா?
சரி விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன்.
இதில் என்ன தப்பு இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. 31 வயதே ஆன பச்சிளம் பாலகன் ஒருவன் சோலை நிரம்பிய பல்கலைக்கழகத்தின் நட்ட நடுப் பகுதியில் அழகிய மாலை நேரத்தில் அவசரமாக இயற்கை உபாதையைக் கழித்தான்.
ஒன்னுக்குப் போனான் என்று சொல்லி விட்டால் முட்டாள்களாகிய உங்களுக்கு சுலபமாகப் புரியும்.
சொல்லுங்கள், இதில் என்ன தவறு இருக்கிறது முட்டாள்களே!
சாலையிலே சிறுநீர் கழித்தானாம், பாலகன்! இது ஒரு தப்பா? அதை ஒரு பெண் பார்த்தாளாம்! அவள் பருவ மங்கையா, பார்க்க சிறுமியா?
கேட்கிறேன் அர்த்தமுள்ள அபூர்வமான இந்த வினாவை. விடை தருவார்களா, வீணர்கள்?
அந்தரங்க உறுப்பைக் காண்பித்ததாக புகார் கூறிய பருவ மங்கை தன் கண்ணை மூடிக் கொண்டு போயிருக்கலாம். புகாராவது கொடுக்காமல் இருந்திருக்கலாம்.
அந்தப் பாலகனை ஆசிரியை அழைக்க அவர்கள் உல்லாசமே, சல்லாபமே என்ற படத்தை வீடியோவில் நெருங்கி இருந்து பார்த்தார். இதில் என்ன தவறு? ஐயகோ! இதையெல்லாம் அரசியல் ஆக்க நினைக்கிறார்கள் கோணல் புத்தியுள்ள கொடுமதியாளர்கள்.



Daily Mail pictures of urinating Stalin statue at Kiev, Capital of Ukraine. Anti Communist activists put it, but the authorities dismantled it later.
இதை கண்டித்து இன்றைய இரவு , “இந்தியா அறிய விரும்புகிறது” நிகழ்ச்சியில் ஒரு விவாதம் நடைபெற உள்ளது, அல்லவா? அதற்கு நம் கழகத்தின் சார்பில் மகளிர் பேரணியின் மாண்புமிகு முட்டாள் ஆன ஜம் ஜம் பங்கஜம் அவர்கள் அனுப்பப்படுகிறார்.
அதென்ன அவர் பெயர் தாய்த் தமிழில் இல்லையே எனக் கலங்கல் வேண்டா. அலட்டல் வேண்டா.
அருமைத் தம்பீ! எம்பீ! நம்பீ!
வடவர்களின் ஆதிக்கத்தில் உள்ள சேனல்களில் அவர்கள் விரும்பும் பெயர் இருந்தால் தானே நாம் இடம் பெற முடியும்? உரிமையைப் பெற முடியும்? சிந்தி!
ஜம் ஜம் பங்கஜம், “மேலாடை நழுவி விழ, பூவாடை பூசி வர” பாடலுக்கு எத்தனை முறை மேலாடையை நழுவ விட்டுள்ளார் என்பதை எண்ணுவதற்காகவே எண்ணற்ற முறைகள் அந்தப் படத்தைப் பார்த்த கழகக் கண்மணிகளின் எண்ணிக்கையை யாவரே அறிவர்?!
அவர் இந்த விவாதம் நடக்கும் அரங்கத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் ஆடையை அடிக்கடி நழுவ விட அதை நான்கு காமராமேன்களும் படம் பிடிக்க மற்றவர்கள் பக்கம் காமராக்களும் திரும்புவதில்லை அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை என்ற உண்மையை உனக்குச் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளேன். உள்ளம் குளிர்கிறதா?
அங்கு கூலிக்காக வரவழைக்கப்பட்ட 90 பார்வையாளர்களும் எதிரி கட்சிக்கென வந்திரக்கும் சிறு நரிக் கூட்டத்தைச் சிதற அடித்து விட மாட்டார்களா? அவர்களுக்குப் பேச இடம் கொடுத்தால் தானே!
இந்த நிகழ்ச்சியை நடத்தும் பெண்மணி ஜம் ஜம் பங்கஜம் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் டி ஆர் பி ரேட் எகிறுகிறது என்பதற்குத் தானே காரணம் என நினைத்தாராம்.
குட்டிப் பெண்மணி! என் கண்மணி! அப்படி இல்லை அம்மணீ! அதற்கான காரணம் ஜம் ஜம் பங்கஜத்தின் லிப்ஸ்டிக்கும் தலையை அடிக்கடி கோதி விட்டுப் பார்க்கும் கொக்கரிக்கும் கண் சிமிட்டுப் பார்வையும் தான்! இதை சேனல் இயக்குநர் அந்தப் பெண்மணீயிடம் சொன்ன போது அவர் மருண்டார்; சுருண்டார்.
என்றாலும் அவருக்கு அடுத்த நாட்டிலிருந்து வரும் படியை எண்ணி, வரும்படியை எண்ணி, வாய் மூடி பணியைத் தொடர்கிறார்.
கொஞ்ஜம் கொஞ்ஜமாக நம் ஜம் ஜம் ஜாம் ஜாம் என்று அந்தச் சேனலையே முட்டாள்களுக்கு உரியதாக ஆக்கப் போகிறார், அன்பர்களே, நண்பர்களே!
“என்னையா, கன்னையா, என்னையா பார்க்கிறாய்?
சின்னையா, சீர் ஐயா, நீ சிரித்தால் நான் வேர்க்கிறேன்”
என்ற ஜம் ஜம்மின் நடனக் காட்சியை சின்ன உடையில் சின்னத் திரையில் அதே விவாதத்தின் போது ஒரு சின்ன ப்ரேக் என்று சொன்னவுடன் பார்க்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.
தலை நகரின் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்குப் பேராதரவு தர முட்டாள்கள் கழகம் முன்னே நிற்கும், இனி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் இயற்கை உபாதைகளைக் கழிக்கலாம், ஆசிரியைகள் மாணவர்கள் பேதமின்றி நினைத்த இடத்தில் நினைத்த போது அந்தரங்கம் பேசலாம் என்ற என் கொள்கை முழக்கத்தை நீங்கள் வேண்டி விரும்பிக் கேட்டதற்கிணங்க இப்போது அறிவிக்கிறேன்.
அடுத்த மடல் கட்டிங் பற்றியே என்று அறுதியிட்டு உறுதி கூறி விடை பெறுகிறேன்.
மு மு கழகத் தலைவர்
–subham-
S.n. Ganapathi
/ March 19, 2016ayyo ayyoooo supper nayaandi.