
Written by London Swaminathan
Date: 25 November 2016
Time uploaded in London:18-59
Post No.3388
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பதிலிருந்தும், குழந்தைகள்ளைக் “கண்ணே! கண்மணியே!” என்று கொஞ்சுவதிலிருந்தும் கண்ணின் முக்கியத்துவத்தைத் த்மிழர்கள் நன்கு அறிவர். வள்ளுவன் என்ன சலைளைத்தவனா?
கல்லாதவர் அனைவரும் குருடர்களுக்குச் சமம் என்று சொல்லிக் கல்வி அறிவைக் கண்ணுக்கு நிகராக்கினார்:
கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர் (குறள் 393)
திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் ஏராளமான இடங்களில் கண் என்ற சொல் கையாளப்பட்டாலும் பெரும்பாலும் பெண்களின் கண், பார்வை என்று காமப் பகுதிப் பாடல்களில் போய்விடுகின்றன.
காளிதாசனின் சில அருமையான கண் உவமைகளைப் பார்ப்போம்:-
சிவனை நோக்கி பார்வதி கடுமையான தவம் நோற்கிறாள். அதை குமார சம்பவத்தில் வருணிக்கும் காளிதாசன் சொல்கிறான்:-
சிலாசயாம் தாமநிகேத வாசினீம்நிரந்தராசு அந்தரவாத வ்ருஷ்டிசு
வ்யலோகயன் உன்மிஷிதை: தடின்மை: மஹாதப: சாக்ஷ்ய இவ ஸ்திதா: க்ஷபா: (5-25)
இரவும் பகலும் பாராது பாறை மீது நின்று, பார்வதி தவம் செய்கிறாள்; அப்பொழுது மின்னல் ‘பளிச் பளிச்’ என்று அடிக்கிறது. அது பார்வதியின் தவத்தைப் பார்க்க விண்ணுலகமே கண் திறந்து பார்ப்பது போல இருந்ததாம். இயற்கையில் நடக்கும் மின்னல் வெட்டை காளிதாசன் அழகாகப் பயன்படுத்தும் போது அவள் இரவு பகல் பாராது, இடி மின்னல் பாராது கடும் தவம் இயற்றிய காட்சி நம் கண்ணுக்கு முன்னே வந்துவிடுகிறது!
இன்னொரு இடத்தில் இரவு நேரத்தில் இதழ் மூடிய தாமரையைநிலவின் கண் என்றும் அவை இரவு நேரத்தை முத்தமிடுகின்றன என்றும் வருணிக்கிறான். இரவு என்னும் காதலியை நிலவு என்னும் காதலன் முத்தமிடுகிறான் என்று சொல்லுவதோடு மேலும் சில காட்சிகளையும் புகுத்துகிறான். நிலவின் கிரணங்கள் இருளில் ஊடுருவிப் பாய்ந்தது, பெண்ணின் தலை முடியைக் கோதி விடுவது போலும் அங்கே இருந்த இதழ் மூடிய தாமரை, இக்காட்சியைக் கண்டு ரசிக்கும் கண் என்றும் சொல்லுவான்.
அங்குலீபி: இவ கேச சஞ்சயம்சன்னிக்ருஹ்ய திமிரம் மரீசிபி:
குட்டமலீக்ருத சரோஜ லோசனம் சும்பதி இவ ரஜனிமுகம் சசி (8-63)
உன்னைப் பார்த்து, நதிக் காதலி கண் அடிப்பாள்!
மேக தூதத்திலும் பல இடங்களில் கண் உவமை வருகிறது.
கம்பீராயா: பயசி சரித சேதசீவ ப்ரசன்னே
சாயாத்யாமபி ப்ரக்ருதி சுபகோ லப்ய்ஸ்யதே தே ப்ரவேசம்
தஸ்மதஸ்யா குமுத விசதான்யர்ஹசி த்வம் ந திர்யதி
மோகிகர்தும் சடுல சபரோ (40)

மேகமே! நீ செல்லும் வழியில் கம்பீரா என்ற நதி வரும். அவள் உன் காதலி. அவளிடம் ஜம்பத்தைக் காட்டாதே. அவள் காதலை பகிரங்கமாக புலப்படுத்த மாட்டாள். ஆனால் அதில் துள்ளி ஓடும் சபரம் என்ற வெள்ளி நிற மீன்கள்தான் அவளுடைய கண்கள். அவற்றின் மூலம் உன்னைப் பார்ப்பாள்; அவள் மிகவும் தெளிவான நதி. ஆகையால் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன் நிழல் அந்த நதியில் விழும். அத்ன் மூலம் நீ அவள் மனதை ஊடுருவிச் செல்லலாம். வாய்ப்பை நழுவ விடாதே (மேகதூதம் 40)