காஷ்மீர் அமைச்சரின் தியாகம்! (Post No.3874)

Written by London swaminathan

Date: 3 May 2017

Time uploaded in London: 15-52

Post No. 3874

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

கல்ஹணர் என்ற பிராமணனை வெளிநாட்டு அறிஞர்கள் அனைவரும் சிலாகித்துப் பேசுவர். அவருக்கு ஏன் அவ்வளவு கியாதி (புகழ்)? ஏனெனில் இந்தியாவில் முதல் முதலில் வரலாற்றை எழுதியவர் இவர்தான் என்பது வெளிநாட்டு அறிஞர் கருத்து. சங்கத் தமிழ் நூல்களில் எண்பதுக்கும் அதிகமான வரலாற்றுச் செய்திகளை வரலாற்று மன்னன் பரணன் அளித்த போதும், அதற்கு முன்னால் 140-க்கும் மேலான தலைமுறை

 

மன்னர்களைப் புராணங்கள் பட்டியலிட்ட போதும் அதை எல்லாம் அறிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இந்தக் காஷ்மீரி பிராமணன் 3400 க்கும் மேலான சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் “வருட”த்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதியுள்ளான்.

 

கல்ஹணர் சொன்ன பல அதிசய விஷயங்களை ஏற்கனவே பல கட்டுரைகளில் தந்தேன். இதோ மேலும் ஒரு அற்புதம்!

 

ரிக்வேதத்தில், தலைகொடுத்த தத்யாங்க் பற்றிப் படித்தோம். புராணங்களில் , வஜ்ராயுதம் செய்ய தன் முதுகெலும்பையே தியாகம் செய்த ததீசி முனிவர் கதையை அறிந்தோம்; சிவபெருமானுக்காக கண்களையே தியாகம் செய்த கண்ணப்ப நாயனார், மஹாவிஷ்ணு பற்றிப் பெரிய புராணத்திலும் தேவாரத்திலும் கேட்டோம். ஆனால் உடலையே நீச்சல் அடிக்க உதவும் தோல் பையாயாக்கி உயிர்த் தியாகம் செய்த தேவ சர்மன் பற்றிக் கேட்டிருக்க மாட்டோம்.

 

இதோ கல்ஹணர் வாய்மொழியாக கேட்போம்:

காஷ்மீரில் கி.பி.750-ஆம் ஆண்டை ஒட்டி ஜெயபீடன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் நேபாள நாட்டின்மீது படை எடுத்தபோது அங்கே அரமுடி என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். அவன் கில்லாடி. மந்திர தந்திரங்களில் வல்லவன்; ராஜ தந்திரமும் கற்றவன்.

 

ஜெய பீடனின் படைகளை நேரில் சந்திக்காமல் அவனைத் தாக்காட்டி தொலைதூரம் இழுத்து வந்தான். ஒரு கடலும் நதியும் சந்திக்கும் இடம் (முகத்துவாரம்) வரை படைகளை இழுத்தான். ஆற்றின் ஒரு பக்கத்தில் ஜெயபீடனின் படைகளும் மறுபுனிறத்தில் அரமுடியின் படைகளும் நிலைகொண்டிருந்தன. மிகவும் திட்டமிட்டு ஒரு நாள் திடீரென்று போர் முழக்கம் செய்து முரசு கொட்டினான் அரமுடி. அவனுடைய சூது வாது தெரியாத ஜெயபீடனி ன் படைகள், ஆற்றைக் கடந்தன. முழங்கால் அளவே தண்ணிர் என்று கருதி ஜெயபீடன் ஆற்றில் புகுந்தான். ஆயினும் நதியைக் கடப்பதற்குள் கடல் அலைகள் உள்ளே வந்து நீர் மட்டத்தை உயர்த்தின ஜெயபீடன் தத்தளி த்தான். பெரும்பாலான படைகளை வெள்ளம் கடலுக்கு அடித்துச் சென்றது

‘த்ருதி’ என்னும் தோல் பைகளை கட்டி நீந்தி வந்த வீரர்கள் வந்து ஜெயபீடனைக் கைது செ ய்து சிறைவைத்தனர். ‘த்ருதி’ என்பது எருமை மாட்டின் தோலினால் ஆனது. அதைக் காற்றடைத்து,  அதைப் பிடித்துக்கொண்டு நீந்துவது காஷ்மீரி மக்கள் அறிந்ததே.

ஜெயபீடனை ஒரு உயரமான கட்டிடத்தில் நதி ஒரமாகக் காவலில் வைத்தான் நேபாள மன்னன் அரமுடி!

 

ஜெயபீடனிடம் தேவ சர்மன் என்ற புத்திசாலி அமைச்சன் வேலை பார்த்து வந்தான். மன்னரைக் கடவுளாகக் கருதி தன் இன்னுயிரையும் ஈயும் உத்தம குணம் கொண்ட சத்திய சீலன் அவன். நல்ல தந்திரம் ஒன்றை வகுத்தான். மன்னன்  அரமுடிக்குத் தூது அனுப்பி, ஜெயபீடன், இதுவரை போரில் வென்ற செல்வப் புதையலை எல்லாம் அளிப்பதாகவும் ஜெயபீடனை மட்டும் விடுவித்தால் போதும் என்றும் செப்பினான்.

 

தலையில் குறை முடியே உடைய அரைமுடியும் அதற்குச் சம்மதித்தான். உடன்படிக்கை கையெழுத்தானது. தங்கள் மன்னரை ஒருமுறை சந்திக்க அனுமதி கோரினான் தேவசர்மன். அப்பொழுது நடந்த சம்பாஷணை:–

“மன்னர் மன்னவா

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவதுண்டோ; சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? நீங்கள் சிறைப்பட்டாலும் உங்கள் வீரமும் மனோ திடமும் குலையவில்லை என்றே கருதுகிறேன்” – என்றான் தேவ சர்மன்

 

“அது எப்படி முடியும் சர்மா? என்ன வீரம் இருந்து என்ன பயன்? நான்கு சுவருக்குள் இருக்கும் நான் என்ன செய்ய முடியும்?” – என்றான் ஜெயபீடன்

 

“மன்னா! நான் படைகளை நதியின் மறு கரை யில் தயாராக வைத்துள்ளேன். நீங்கள் மட்டு ம் இப்பொழுது நதியில் குதித்து, மறுகரைக்கு நீந்திச் சென்றால் போதும்.”

“நானா? இவ்வளவு ஆழத்திலிருந்து குதித்தால் மேலே  உடல் வராது. தோல் பையைக் கட்டிக் கொ ண்டு குத்தித்தாலோ தோல் பை கிழிந்துவிடும்”.

 

“அரசே! துணிவை இழக்காதீர்கள் நான் சொல்லும்படி செய்யுங்கள். ஒரு இரண்டு நாழிகை ( 48 நிமிடம்) வெளியே நில்லுங்கள்” – என்று மன்னனிடம் சொல்லிவிட்டு மன்னனின் அறைக்குள் சென்று, எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு, தன்னையே கத்தியால் குத்திக் கொண்டு இறந்தான் தேவ சர்மன்.

 

அரசன் உள்ளே சென்ற போது சடலத்தைப் பார்த்து திடுக்கிட்டான். தனது உடலையே தோல்பையாகக் கொண்டு நீந்தி மறுகரைக்குச் செல்லும்படி குறிப்பு எழுதி வைத்திருந்தான் மன்னன் வசதியாக அமர பல பாகங்களில் துணிமணிகளைக் கட்டி வைத்தீருந்தான். மன்னனும் அவனது தியாகம் வீணாகக் கூடாது என்று எண்ணி உடனே ஆற்றுக்குள் குதித்தான். தனது படைகளை அடைந்தான்.

 

பின்னர் பெரும்படை திரட்டி, நேபாளத்தை நோக்கிச் சென்று அரமுடியைக் கவிழ்த்தான். தேவ சர்மனின் தியாகத்தால் காஷ்மீர் அரசு பிழைத்தது! இது உண்மையில் நடந்த சம்பவம்.

 

–சுபம்–

Leave a comment

Leave a comment