
Written by S NAGARAJAN
Date: 14 May 2017
Time uploaded in London:- 6-01 am
Post No.3906
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
வாழும் வழி
கட்டளை புதிது
ச.நாகராஜன்
காலத்திற்கேற்றவாறு ஆத்திசூடியை மஹாகவி பாரதியார் மாற்றி புதிய ஆத்திசூடி படைத்தார்.
நவீன காலத்தில் கட்டளை புதிது.
கீழே உள்ள கட்டளைகள் காலத்திற்கேற்ற கட்டளைகள்.
வாழ நினைத்தால் வாழலாம்; வழிகளாய் இருப்பவை இந்தக் கட்டளைகள்.
அறம் வெல்லும்
அருளைப் பெறு
அறிவியல் தொழு
ஆலயம் செல்
இயற்கையைக் கா
இசையை ரசி
இனியன போற்று
ஈனரை விலக்கு
உடலை ஓம்பு
உள்ள உறுதி கொள்
உயிர்க்கொலை தவிர்
எழுதிக் குவி
எண்ணமே ஏணி
எண்ணுவது எண்ணு
கலைகளைப் பயில்
குறிக்கோளை அடை
குடும்பம் பேண்
சத்சங்கம் சேர்
சீலமே சிறப்பு
சேவை செய்
தமிழை வளர்
தொடர்ந்து படி
பெண்மை போற்று
பேச்சைக் குறை
பேதமை விலக்கு
மனமே மனிதன்
மன்னித்து விடு
மறைபொருள் தெளி
நன்றி பாராட்டு
நல்லதைச் செய்
நாட்டை உயர்த்து
நிதியைச் சேர்
மதியை மதி
லஞ்சம் தவிர்
வாயை அடக்கு
விதிப்படி நடக்கும்
***