வித்தும் இடல் வேண்டும் கொல்லோ!- வள்ளுவன், மனு ‘மூட நம்பிக்கை’

Written by London Swaminathan
Date: 15 June 2017
Time uploaded in London- 11-16 am
Post No. 4003
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

வள்ளுவன், காளிதாசன், மனு ஆகியோர் எல்லாம் ஒரு கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றனர். ஆனால் பகுத்தறிவு பேசும் பகலவன்களுக்கு அது வேப்பங் காயாகக் கசக்கும். ஒரு நாட்டில் நல்லாட்சி நடைபெற்றால் அங்கு விதை விதைக்காமலேயே தானியம் முளைக்குமாம்! நல்ல அறுவடை கிடைக்குமாம்!

 

அதே போல விருந்தாளிகளைக் கவனித்தால் நல்ல விளைச்சல் வருமாம். விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத எதுவும் மூட நம்பிக்கைதானே

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம் (85)

 

பொருள்:

வந்த விருந்தினரை முதலில் உண்ண வைத்துவிட்டுப் பின்னர் மீதியை உண்பவனுடைய விளை நிலத்திற்கு விதையும் விதைக்க வேண்டுமா?

 

அதாவது அவன் நிலத்தில் தானாக தானியம் முளைக்கும்; நெல் விளையும்!!

விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் பத்து குறள்களில் அப்படிப்பட்ட விருந்தாளிகளை வரவேற்க தேவலோகத்தில் தேவர்கள்வேறு காத்திருப்பார்கள் என்று இன்னும் ஒரு குறளில் செப்புகிறான். சங்க இலக்கிய நூலான புறநானூறும் செப்புவது அதே! ஆய் அண்டிரன் இறந்தவுடன் இந்திர லோகத்தில் அவனை வரவேற்க டமாரங்கள் (முரசு) முழங்கினவாம்.

 

மனு நீதி நூலும் இதையே பகர்வது பகுத்தறிவுப் பகலவர்களுக்குப் பாகற்காயாகக் கசக்கும்:

நல்லாட்சி நடத்தும் அரசன்  நாட்டில் விவசயிகள் பயிரிட்டது போல பயிர்கள் தானே விளையுமாம்; குழந்தைகள் இளம் வயதில் சாக மாட்டர்களாம். யாரும் உடலூனத்துடன் பிறக்க மாட்டார்களாம்! (மனு 9-247)

 

வள்ளுவனும், மனுவும் சொல்லுவது மூட நம்பிக்கையா?

 

இதற்கெல்லாம் மூல காரணம் வேதங்கள் ஆகும். ஆரமபத்திலேயே “அதிதி தேவோ பவ” = ‘விருந்தாளிகள் கடவுள்’ (தைத்ரீய உபநிஷத், சிக்ஷாவல்லி 1-20) என்று சொல்லிவிட்டது.

வேதத்தில் பல இடங்களில் விருந்தோம்பல் கருத்து உளது:

அதர்வ வேதத்தில் (14-11) ஒரு பாடல்-

“இந்த அறிவு உடைய விராத்யன் விருந்தாளியாக வரட்டும்;

உடனே எழுந்து நின்று, விராத்யனே, நீ  நேற்று இரவு எங்கு தங்கினாய்? இதோ தண்ணீர் இருக்கிறது.

முதலில் கொஞ்சம் சிரம பரிகாரம் செய்; உனக்கு என்ன வேண்டுமோ அதெல்லாம் கிடைக்கும், விராத்ய, நீ விரும்பியதெல்லாம் நடக்கட்டும்; விராத்ய, உன் ஆசைகள் எல் லாம் நிறைவேறட்டும்

 

இது போன்ற கருத்து ரிக் வேதத்திலும் உள்ளது (10-117); பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் கருத்து இப்பாட்டில் தொனிக்கிறது.

 

நல்லாட்சி நடந்தால் புலியும் மானும் ஒன்றை ஒன்று தாக்காது என்று காளிதாசன், கம்பன், இளங்கோ சொல்லியதை முன்பே கண்டோம். இதுவும் பகுத்தறிவுகளுக்கு ஒவ்வாத தமிழ் மூட நம்பிக்கை.

 

இந்த விருந்தோம்பல் என்னும் கருத்து வெளி நாட்டுப் பண்பாட்டில் அறவே கிடையாது! ஆனால் நம் நாட்டிலோ இமயம் முதல் குமரி வரை அன்ன சத்திரங்கள் ஆயிரம் ஆயிரம். அதாவது Free Boarding and Lodging ( போர்டிங் அண்ட் லாட்ஜிங் ப்ரீ)! சாப்பாடும் தங்கும் இடமும் இலவசம். உலகில் எங்கும் இல்லாப் புதுமை. ஆரியர்கள் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லுவோருக்கு செமை அடி கொடுக்கும் அம்சம்.

இது ஏன் வெளி நாட்டில் இல்லை?  இமயம் முதல் குமரி வரை குறைந்தது 2500 ஆண்டுகளுக்காவது உளதே? என்றால் பேந்தப் பேந்த முழிப்பர். இது இந்தியாவில் வந்தவுடன் அவர்கள் உருவாக்கியது என்று சொல்லி பூசி மெழுகுவர்; அதாவது கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதை! அவர்களை எல்லாம் மறந்துவிட்டு இந்த அற்புதமான கருத்தை சீதையும் கண்ணகியும் தன் வாக்கில் சொல்லி மகிழ்வதை மீண்டும் நினைவு கொள்வோம்.

My Old Articles on the Hospitality

உண்டி கொடுத்தோர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/உண்டி-கொடுத்தோ…

 

Written by London swaminathan. Date: 7 APRIL 2017. Time uploaded in London:- 14-55. Post No. 3796. Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com. விருந்தோம்பல் என்னும் …

மணிமேகலை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மணிமேகலை/

 

விருந்தோம்பல், தேவதானம், புலவரை ஆதரித்தல் என்பது வேறு. சமூக சேவை என்பது வேறு. தண்ணீர் பந்தல் கதைகளும் மணிமேகலை சிறைச் …

 

—subham–

Leave a comment

Leave a comment