தமிழ்க் கல்வெட்டுகளில் விநோதப் பெயர்கள் (Post No.4092)

Written by London Swaminathan


Date: 18 July 2017


Time uploaded in London-14-06


Post No. 4092


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மனிதர்களுடைய பெயர்கள் காலத்துக்கு காலம் மாறுபடும்; சங்கத் தமிழ் நூல்களில் வழங்கும் பல பெயர்கள் இப்பொழுது புழக்கத்தில் இல்லை; இதே போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல பெயர்களை நாம் இப்பொழுது நமது குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை. உலகில் மாறாத பொருட்கள் இல்லை. மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது (Change is inevitable) . உடை, உணவு, மொழி எல்லாமே மாறுபடும் என்பது அனுபவத்தில் கண்ட விஷயம்!

சுமார் ஐந்தாம் நூற்றாண்டிலேயே புனிதவதி, திலகவதி, பரம தத்தன் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டதை காரைக்கால் அம்மையார் சரித்திரம் அதற்குப்  பின்னர் வந்த அப்பர் சரித்திரம் ஆகியன காட்டும். ஆனால் நப்பசலை, நச்செள்ளை போன்ற பெண்களின் பெயர்களை நாம் இப்போது பயன்படுத்துவதில்லை. ஆயினும் சங்க காலத்தில் கேசவன், தாமோதரன், வால்மீகி, பிரம்மா, கபிலர், பரணர் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினர்.

சங்கத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள் இருக்கின்றன. இன்னும் சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை தமிழில்  மொழி பெயர்த்து வைத்துக் கொண்டனர். காமக்கண்ணி என்ற சங்கப் புலவரின் பெயர் காமாக்ஷி என்ற தெய்வத்தின் பெயராகும். வேத கால இந்திரனின் பெயரை காஷ்மீர் முதல், இலங்கையின் கண்டி வரையுள்ள எல்லோரும் பயன்படுத்துகிறோம். ஜாதி வித்தியாசமின்றி எல்லோரும் ராஜேந்திரன், மஹேந்திரன், உபேந்திரன் என்றெல்லாம் இந்திரன் பெயரை வைத்துக் கொள்கிறோம். இதே போல ஊர் என்பது சங்க காலத்திலேயே உள்ளது. இது புரம், பூர் (Jaipur, Nagpur, Jodhpur) என்ற சம்ஸ்கிருதச் சொல்லுடன் தொடர்புடையது. சங்க காலத்துக்கு முன்னமே சம்ஸ்கிருத நூல்களில் உள்ளது.

 

(என்னுடைய கொள்கைப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திலிருந்து பிறந்ததால் இப்படி நூற்றுக்கணக்கான ஒற்றுமைகளைக் காணலாம். இவை எல்லாம் ஐரோப்பிய மொழிகளில் இல்லாததால் மாக்ஸ்முல்லர், வில்லியம் ஜோன்ஸ் போன்றவர்கள் சொன்னதெல்லாம் வெறும் ஊகமே — தவறான ஊகங்களே — என்பது உறுதியாகின்றது)

 

இதோ சில சுவையான கல்வெட்டுப் பெயர்கள்:

கல்வெட்டுகள் அனைத்தும் இந்து முறைப்படிதான் திசைகளைக் குறிக்கும்— பூர்வ, தக்ஷிண, பஸ்சிம, உத்தர = கீழ் பாலெல்லை, தென்பாலெல்லை, மேல் பாலெல்லை, வட பாலெல்லை). இது இந்துக்களின் கண்டுபிடிப்பு. கோவிலை வலம் வருதல், கடிகராத்தில் முள் வலமாகச் சுற்றல் எல்லாம் , உலகிற்கு இந்துக்கள் கற்பித்த நாகரீகம்!

 

கி.பி. 550

சிம்மவர்மன் (சிம்ஹவர்மர்), வஜ்ர நந்தி, நரபயன் (ஆணத்தி)

 

கி.பி.675

பரமேச்சுரன், அநந்தசிவ ஆசாரியர்

 

ஒன்பதாம் நூற்றாண்டு

சதுர்புஜன், சதுர்வக்த்ரன்,, அத்ரி, புரூரன், நஹுஷன், தசவதனன், தார்தராஷ்டிரன், வானரத்வஜன், ஹரிச்சந்திரன், சிரிவல்லன், வரகுணன், சிரிகண்டராசன், வீரநாரணன், ஸ்ரீ பராந்தக மஹாராஜன், பரமேஸ்வரன், காடக ஸோமயாஜி, மாயா நாராயண பட்டர், நாராயணங் கேசவன், கண சுவாமி பட்டர், யோகேசுவர பட்டர், மாதவன், சிரீவல்லன், நக்கன்

11ஆம் நூற்றாண்டு

வீர கேரளன், வீர பாண்ட்யன், வினைய கஞ்சுகன், விசால சீலன், கோவிந்த சுவாமி பட்டச் சோமாசி, வாசுதேவ பீதம்பரப் பட்டன்,

ப்ரஹ்ம ஸ்ரீதுங்க ராஜ, ராஜ சிம்ஹ, மாங்குடிச் சோலைக் கிழவன், இளவளம்புல்லன், அரையன், வேற்சாத்தன், சாத்தன்.

 

கி.பி.865

கருநந்தடக்கன், விஷ்ணு பட்டாரகன், குமாரசுவாமி பட்டன், இளையான் கண்டன், வெண்ணீர் வெள்ளாளன், சாத்த முருகன், சிங்கங்குன்றப் போழன்.

 

ராரஜராஜன் லெய்டன் செப்பேடு

கிருஷ்ணன் ராமன், பருத்திக் குடையான் வேளான், மூவேந்த வேளான், ஆரூரன்,  தத்தன் சேந்தன்,  பொற்காரி, , தாமோதர பட்டன், , கற்குடையான் பிசங்கன்,  சங்கர நாராயணரங்கன், , தம்மடி பட்டன், தியம்பக பட்டன், கொற்றன் பொற்காரி, சூற்றியன் தேவடி, தேவன் சாத்தன்,

தளிக்குளவன், குமரன் ரங்கன், சிங்கன் வெண்காடன்,   தம்மடிப் பட்டன், ஸ்ரீதரபட்டன், பற்பநாப பட்டன், வெண்ணைப் பட்டன்,  நந்தீஸ்வர பட்டன், அமுதன் தீர்த்தகரன், அரைசூர் மறியாடி, வேட்கோவன் மாதேவன், காஸ்யபன் ஸூர்யரங்கன், பாரத்வாஜி திரித்தி வைகுந்தன், சதுர்முகனரங்கன், கண்ணன், தேவன் குடையான், பூவத்தபட்டன், நள்ளாறன், கற்பகஞ் சோலை, கணவதி, முண்டனரங்கன், ராஜேந்திர சோழ பட்டன்.

TAGS: கல்வெட்டு, தமிழ்ப் பெயர்கள், லெய்டன், சங்கப்புலவர்

 

–சுபம்-

 

Leave a comment

Leave a comment