பாரதி போற்றி ஆயிரம் – 4 (Post No.4491)

Date: 14  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-29 am

 

COMPILED BY S NAGARAJAN

 

Post No. 4491

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 4

  பாடல்கள் 19 முதல் 24

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

 

தவமார் புதல்வன்!

சூ. கிரிதரன்

 

 

பாடல் எண்: 19 முதல் 24

1

தமிழ்த்தாய் ஈந்த தவமார் புதல்வன்

அமிழ்தம் நிகர்த்த ‘கவிக்கோ’ பாரதி!

அழியாப் புகழ்கொல் அருட்பெருஞ் செல்வன்

மொழியை விழியாப் பேணிய தலைவன்!

2

நிலையாய் வந்து நிழல்மர மாகி

அலையெனப் பெருக்கிக் கலைபல தந்து

மலையென நின்று புகழ்மணம் வீசி

தலைவன் ஆனான் தன்னிகர் இல்லான்!

3

சாதிகள் வெறிப்பயன் சாய்த்திடப் பாடுவான்

ஆதியும் அந்தமும் அணைந்திடா ஒருவனை

ஓதியே ஒற்றுமை எங்குமே பரவிட

தீதினை வென்றிடக் கவிதையைக் கொண்டவன்;

 

4

சேதமே இல்லா வகையினில் செந்தமிழ்

மாதரின் உரிமையைக் காத்திடப் பாடிய

மூதறி வாளன்; மொழிபுகழ்ச் சீலன்,

கோதிலாக் கவிக்குயில்; குணமலை பாரதி!

 

5

பலமொழி உணர்ந்த பைந்தமிழ்ப் புலவன்;

நலமெலாம் நற்றமிழ் மொழியினைச் சேர்ந்திட

குலவிட எழில்மிகக் கவியினில் வழிகளைப்

பலபல வழியினில் பகர்ந்தவன் பாரதி!

 

6

அடிமைக்குக் கூற்றுவன் அவன்கவி யாகும்;

மிடிமைக்கு மருந்து, மிளிர்ந்திடும் அவன்சொல்;

கொடுமையின் எதிரி; குளிர்புனல்; கவிமணி;

படித்தவர் பாமரர் புகழ்ந்திடும் பாரதி!

 

தமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:

 

சூ.கிரிதரன் : கல்லூரி மாணவர். கட்டுரையாளர். கவியுளம் கொண்டவர். பெயர் பெற்ற டாக்டர் நா.சூரிய நாராயணன் அவர்களின் புதல்வர்.

 

குறிப்பு: இப்போது (2017ஆம் ஆண்டில்) கவிஞர் சூ.கிரிதரன் லண்டனில் வசிக்கிறார்.

 

****

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

 

Leave a comment

Leave a comment