
Date: 25 JANUARY 2018
Time uploaded in London- 5-48 am
Written by S NAGARAJAN
Post No. 4658
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.
பாடல்கள் 206 முதல் 213
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பண்டித ஜனாப் K.அப்துல் சுகூர் (1933) பாடல்கள்
பாரதியார் பா மணம் (தொடர்ச்சி)
தேனிருக்குது தினையிருக்குது தென்பழனியிலே என்ற மெட்டு
9) சேவை முறைகள் சேர்ந்திருக்குது
தேசப் பாடலிலே
பாவையர் சுதந் தரமிலங்குது
பாரதி பாட்டுளே
10) விடுதலையெனும் வீ ணையொலிக்குது
வித்தகப் பாடலிலே
படுபவத் தொழில் பறந்திரியுது
பாரதி பாட்டுளே
- அச்சமென்ற சொலகன்றிருக்குது
அன்புப் பாடலிலே
பச்சமென்ற சொல்பரவி நிற்குது
பாரதி பாட்டுளே
12) கொஞ்சுங்காதல் திறந்தொனிக்குது
குயிலின் பாடலிலே
பஞ்சமோடிட வழியிருக்குது
பாரதி பாட்டுளே
13) அடிமையென்ற சொலகன்றிருக்குது
அமுதப் பாடலிலே
படிதலென்ற சொற்பழுதுபட்டது
பாரதி பாட்டுளே
14) முத்தமிழெனும் வெற்றிமுழங்குது
முரசுப் பாடலிலே
பத்தழகுகள் பரவிநிற்குது
பாரதி பாட்டுளே
15) அண்டத்தை வெல்லும்
ஆண்மைதங்குது அழகுப்பாடலிலே
பண்டைத்தமிழர் வீ றிலங்குது
பாரதி பாட்டுளே
16) பாரதியென்றிட சக்திஜெனிக்குது
பாப்பாப் பாடலிலே
“பாரதி”மாளிகை தன்னிலுலாவுது
பாரதி பாடல்களிலே
(கவிதை முற்றும்)
– “பாரதி” – மாதப் பத்திரிகை
உத்தம பாளையம் 1933 ஆகஸ்டு
கவிஞர் குறிப்பு : தெரியவில்லை
தொகுப்பாளர் குறிப்பு : மகாகவி பாரதியார் பற்றிய பல அரிய விஷயங்களை மிகவும் சிரமப்பட்டு சேகரித்து தனது இதழான குமரி மலர் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார் திரு ஏ.கே.செட்டியார் அவர்கள். 1974ஆம் ஆண்டு இதழ்களைப் பார்த்தால் பல சிறப்பான செய்திகளை அறியலாம். அவற்றுள் ஒன்று இந்தப் பாடல்.
நன்றி: என்றென்றும் எம் நினைவில் இருக்கும் – திரு ஏ.கே.செட்டியார்; குமரி மலர்
***