சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! –1 (Post No.4829)

Date: MARCH 19, 2018

 

 

Time uploaded in London- 5-10 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4829

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மஹாபாரத மர்மம்

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 1

 

ச.நாகராஜன்

 

மஹாபாரத மர்மங்கள் ஏராளம். அதை முழுதுமாக அறிந்து கொள்ள ஒரு ஆயுள் போதாது.

 

அது விளக்கும் அற்புத இரகசியங்களும் ஏராளம். விண்டுரைக்கும் மர்மங்களும் ஏராளம்.

அதில் ஒன்று தான் சூரிய தேஜஸின் ரகசியம்.

 

சாந்தி பர்வத்தில் 371,372,373,374,375 ஆகிய அத்தியாயங்களில் இதை முழுதுமாகப் படிக்கலாம்.

 

அத்தியாயம் 371 – நாகன் பிராம்மணரைக் கண்டு பேசியது

அத்தியாயம் 372 – நாகன் சூரியனிடத்துள்ள அதிசயங்களை பிராம்மணருக்குச் சொல்லியது

அத்தியாயம் 373 – சூரியன் தன்னிடம் பிரவேசித்த தேஜஸின் வரலாற்றைச் சொல்லியது

அத்தியாயம் 374 – பிராம்மணர் நாகனிடம் விடைபெற்றுச் சென்றது

அத்தியாயம் 375 – பிராம்மணருக்கும் நாகனுக்கும் நடந்த சம்வாதமான கதை உலகில் வந்த முறை

 

இந்த அத்தியாயங்களில் உள்ள சுவாரசியமான விஷயங்களின் சுருக்கத்தை மட்டும் இங்கு காணலாம்.

தர்மாரண்யன் என்ற பெயர் கொண்ட பிராம்மணன் நாகராஜனான பத்மநாபன் என்ற நாகனைப் பார்க்கச் சென்றான்.

அவனைச் சந்தித்த பத்மன், அந்த பத்மன் நானே என்கிறான்.

உடனே பிராம்மணன் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று வந்துள்ளேன் என்று கூறி, “சூரியனிடம் நீ ஆச்சரியமான எதையாவது பார்த்திருந்தால் அதைச் சொல்ல வேண்டும்” என்று சொன்னான்.

 

உடனே பத்மன், “சூரிய பகவானானவர் அநேக ஆச்சரியங்களுக்கு இருப்பிடம். அவராலேயே மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்துப் பிராணிகளும் பிரவிருத்திக்கின்றன.

அவருடைய ஆயிரம் கிரணங்களிலும் நன்றாக சித்தி பெற்ற முனிவர்கள் தேவர்களுடன் கூட, கிளைகளில் பட்சிகள் போல ஆஸ்ரயித்துக் கொண்டு வசிக்கின்றனர்.

 

அவரிடமிருந்து பெரிய வாயுவானது கிளம்பி அவரது கிரணங்களை ஆஸ்ரயித்துக் கொண்டு ஆகாயத்தில் விருத்தி அடைகின்றது.

அவரிடம் இதை விட மேலான ஆச்சரியம் என்ன இருக்கிறது? அந்த வாயுவைப் பிரித்து வர்ஷா காலங்களில் ஜலத்தைப் பொழிகிறார்.

 

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய மண்டலத்தின் மத்தியில் இருந்து கொண்டு  அந்தர்யாமியானவர் பரமமான காந்தியினால் ஜ்வலித்துக் கொண்டு உலகங்களைப் பார்க்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய பாதம் போன்ற சுக்கிரன் ஆகாயத்தில் மேகமாகி வர்ஷா காலங்களில் ஜலத்தை விடுகிறது.

தான் விட்ட ஜலத்தை எட்டு மாதங்கள் இழுக்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய விசேஷமான தேஜஸினால் ஆத்மா நிலைத்திருக்கிறது.

 

பூமி ஓஷதியைத் தாங்குகிறது.

அவரிடம் ஆதியந்தம் அற்ற தேவர் இருக்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

முற்காலத்தில் சூரியனைப் போலப் பிரகாசிக்கின்ற இன்னொருவர் காணப்பட்டார்.

 

அவர் சூரியனுக்கு எதிரே வந்தார்.

அவரை நோக்கி சூரியன் தன் கைகளைக் கொடுத்தார்.

அவரோ தன் வலக் கையைக் கொடுத்தார்.

 

பிறகு அவர் சூரிய மண்டலத்தில் பிரவேசித்தார்.

க்ஷண காலத்தில் அவர் தேஜஸ் சூரியனோடு கலந்தது.

சூரியன் யார், வந்தவர் யார் என்று எங்களுக்குச் சந்தேகம் வர சூரியனிடமே வேறொரு சூரியன் போல வந்த அவர் யார் என்று கேட்டோம்.

சூரியன் பதில் சொல்லத் தொடங்கினார்.

– தொடரும்

 

 

DO YOU WANT TO SEE GOD’S THIRD EYE? (Post No.4828)

Written by London Swaminathan 

 

 

Date: 18 MARCH 2018

 

 

Time uploaded in London – 12-38

 

Post No. 4828

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

I wrote about the miraculous properties of Ankola (azinjil tree) found in the Singaperumal Koil temple under the heading Adi Sankara, Andal and Alangium hexapetalum yesterday. There are more interesting titbits about Singaperumal Koil of Kancheepuram District. It is not far from Chennai.

 

Singaperumal koil deity Narasimhar is called Pataladri Narasimha meaning red hill Narasimha. It is a rock cut temple. Narasimha means Man-Lion- one of the ten avatars of Lord Vishnu.

 

When you come around the temple, Hot Dosa is sold for ten rupees each. Other food items are also available. Inside the temple Lord Narasimha’s statue has the third eye. The priest will remove the covering and show it to all the devotees during arti. Normally Lord Siva is associated with the Third Eye. It is rare to see Third Eye in a Vaishnavite temple like Singaperumal Koil.

 

Another interesting aspect is the sun light falling on the deities during two months in a year.

 

There is a saint behind every temple!

It is said that there is a woman behind every man (man’s success). Whether it is true or not, there is a saint behind every temple (temple’s greatness). Probably this is what makes the temple great. In a lot of Tamil temples there are Siddhar Samadhis (greatmen’s grave). This adds power to the temple.

Most of the temples in Tamil Nadu are associated with a saint, seer or a rishi. Singaperumal Koil temple is associated with Rishi Jabali. We come across a Jabali in Ramayana. But it may be another Rishi with the same name. Even poet Valmiki’s name is in 2000 year old Sangam Tamil literature!

 

Paris Lovers Locks and Narasimha Locks

One more interesting tit bit is the locks with the deity Narasimhar in the front part of the temple. In Paris and other western cities, we see Lovers Locks. They put the locks in the bridges to show that the lover and loved would be locked together for ever. But here I was told that they place the locks in front of Narasimha to get their problems solved. Once the problem is solved the loch is removed, I heard.

 

Singaperumal Koil is one of the 108 sacred Vaishnavite Temples and the deity is sung by Peyalvar, one of the 12 famous Vaishnavite saints.

Read about the mysteries of Ankola/ Azinjil tree in the temple posted here yesterday.

 

 

–Subham–

 

 

ஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் ! (Post No.4827)

Picture from Guruji Gopalavallidasar post.

Written by London Swaminathan 

 

 

Date: 18 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-02 am

 

Post No. 4827

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

ஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் ! (Post No.4827)

உலக சைவ சித்தாந்த மஹாநாட்டில் கலந்துகொண்டு பேச வந்த அழைப்பினை ஏற்று மார்ச் 2018 முதல் வாரம் சென்னை சென்றேன். இடையிடையே எனது தம்பியுடன் க்ஷேத்ராடனம் செய்தேன்; பார்க்காத கோவில்களைப் பார்க்க ஆவல் கொண்டேன். சென்னைக்கு அருகில் காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். பல அதிசயங்களைக் கண்டேன். ஒரு அதிசயம் பற்றி இக்கட்டுரையில் கதைக்கிறேன்.

 

அழிஞ்சில் மரம் என்பது ஒரு அதிசய மரமாகக் கருதப்படுகிறது. இது பற்றி ஆதி சங்கரர் சிவானந்த லஹரி ஸ்துதியில் பாடியுள்ளார். ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் உரையிலும் இது காணப்படுகிறது. இந்த அதிசய மரத்தை சிங்கப் பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மரை வலம் வரும் இடத்தில் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.

 

மந்திரத்தால் மாமரம் வளருமா? என்பார்கள்; பெரியவாச்சான் பிள்ளை எழுதிய பேருரையில் இது பற்றி வியப்பான தகவலைத் தருகிறார்.

 

நாச்சியார் திருமொழி– நாலாம் திருமொழி– நாலாம் பாட்டு ‘ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட’– என்று துவங்கும்.

இதன் உரையில் காணும் விஷயத்தின் சுருக்கம் இதோ:-

கடம்ப மரம், காளியன் எனும் பாம்பு கக்கிய விஷத்தில் எரிந்து கருகியது. கண்ணன் காலடி பட்டவுடன் பூத்துக் குலுங்கியது. இது எப்படி சாத்தியம்? அட, விஷ்ணுவின் பாதம் எப்போதும் அமிர்தம் சுரப்பதால் இது நடக்கvமுடியாதா? ராமன் கால் பட்டவுடன் கல்லாகக் இருந்த அஹல்யா, அழகிய பெண்மணியாக எழுந்திருக்கவில்லையா?

“அங்கோலத் தைலம் தடவப்பட்ட மாம்பழக் கொட்டையைத் தரையில் நட்டால், அப்போதே முளைத்துப் பெரிய மரமாய் சாய்த்துப் பழுக்கும் என்று சொல்லும்போது, விஷ்ணுவினுடைய மேலான திருவடியில் அமுதம் வெள்ளமிடுகிறது — என்று வேதத்தால் சொல்லப்பட்ட பெருமானுடைய  திருவடி பட்டு பட்ட மரம் தளிர்க்கச் சொல்ல வேண்டுமோ?

 

 

அங்கோல மரம்= அழிஞ்சில் மரம்

 

அழிஞ்சில் மரத்தின் பழங்கள் அம்மரத்தின் கீழே உதிர்ந்திருக்கும்; வானில் மின்னல் மின்னினால், அக்கணத்திலேயே அப்பழம் மரத்திலே பழையபடி ஓட்டிக் கொள்ளும்; அக்கணத்தில் அப்பழத்தை எடுத்து வந்து தைலமாக்கி (எண்ணை ஆக்கி)  ஒரு மாங்கொட்டையில் தடவி தரையில் நட , அப்போதே முளைத்துப் பெரிய  செடியாகி காய்த்துப் பழுக்கும் என்பர்……………………”

 

இவ்வாறு உரைகாரர்கள் சொல்லுகின்றனர்.

 

ஆண்டாளுக்கும் முன்னர் அவதரித்த உலக மஹா தத்துவ ஞானி ஆதிசங்கரர் பக்த்திக்குச் சொல்லும் ஐந்து இலக்கணங்களில் அங்கோல மர விதைகளும் ஒன்று ஆகும்.

 

(ஆதி சங்கரர் கி.மு.வில் இருந்தவர் என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொன்னதற்கு நான் தமிழ் இலக்கிய சான்றுகளை அளித்து ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளேன்; இதே பிளாக்கில் படித்து இன்புறுக)

சிவானந்த லஹரியின் 61-ஆவது ஸ்லோகம்

‘அங்கோலம் நிஜபீஜ சந்ததி’ —- என்று துவங்கும். இதன் பொருளாவது:

உண்மையான பக்த்தி என்பதற்கு ஐந்து உதாரணங்கள் உள்ளன; ஈஸ்வரனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு- அங்கோல மரமும் அதன் விதைகளும், காந்தமும் இரும்பு ஊசியும், கற்புக்கரசியும் அவளது கணவனும், மரமும் அதைச் சுற்றிப் பற்றும் படரும் கொடியும், ஆறுகளும் கடலும் போலும் இணைந்து இருக்கும்.

 

இதற்கு பாஷ்யம் எழுதியோர் அங்கோல/ அழிஞ்சில் மரத்தின் அற்புத குணத்தை விளக்கியுள்ளனர். அங்கோல மர விதைகள் கீழே விழுந்தவுடன், மரத்தின் மீது  ஏறிச் சென்று ஒட்டிக்கொள்ளும் என்று.

 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள இந்த நம்பிக்கையை விஞ்ஞான முறையில் ஆராய்வது நலம் பயக்கும்..

சிங்கப் பெருமாள் கோவில் பிரஹாரத்தில் மரத்தை ஒட்டி சுவரில் எழுதப்பட்ட அறிவிப்பு– இந்த மரத்தின் மீது ஆடையிலிருந்து ஒரு நூலைப் போடுவோருக்கு அறிவு வளரும்; மணம் முடிக்காதவர்கள் விரைவில் கல்யாணம் செய்வர்; குழந்தை இல்லாதவர் விரைவில் குழந்தை பெறுவர் என்று செப்புகிறது.

 

மருத்துவ நூல்களோவெனில் இதன் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை முதலிய மருத்துவ குணங்களை வருணிக்கிறது.

எப்படியாகிலும் இது ஒரு அதிசய மரமே.

அடுத்த முறை சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றால் நரசிம்மருடன் மரத்தையும் கண்டு களிக்க.

 

சிங்கப் பெருமாள் கோவிலின் நெற்றிக் கண் நரசிம்மர், சூடான மிளகு தோசை, நரசிம்மர் பூட்டு, சில் மாதங்களில் பெருமாள் மீது விழும் சூரிய ஒளி ஆகியன பற்றி அடுத்த கட்டுரையில் நுவல்கிறேன்.

இதுவரை இயம்பி யவற்றை நினைவிற் போற்றுக.

 

சுபம் சுபம்

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

நமது பெண்மணிகளை மெல்லக் கொல்லும் விஷங்கள்! (Post No.4826)

Date: MARCH 18, 2018

 

 

Time uploaded in London- 5-27 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4826

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

BY ச.நாகராஜன்

சுமார் 25 ஆண்டுகள் இருக்கலாம், பெல்ஜியத்திற்கு அலுவலக விஷயமாகச் செல்ல நேர்ந்தது.

ரோஸலேர் என்று ஒரு அழகிய சிற்றூர். அங்கு சென்றேன்.

எங்கள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்த படி நண்பர் ஒருவர் தங்குமிடம் உள்ளிட்டவற்றை அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்.

 

 

அவருக்கு ஒரு ஆசை – என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று.

அழைத்தார். எதற்கு அவருக்கு சிரமம் என்று மறுத்தேன்.

வற்புறுத்தினார். சம்மதித்தேன்.

எனது சக நண்பர்களுடன் அவர் வீட்டிற்குச் சென்றோம்.

இரவு சுமார் ஏழரை மணி.

வீட்டில் மணியை அடித்தார். கதவைத் திறந்தது அவர் மனைவி.

எங்களை நண்பர் அறிமுகப்படுத்த அவர் புன்னகையுடன் வரவேற்றார்.

 

ஒரு நிமிடம் தான், அவசரம் அவசரமாக உள்ளே ஓடினார்.

பிறகு சுமார் 30 நிமிடங்கள் ஓடின.

நண்பருக்கும் எம்பராஸ்மெண்ட்.

ஏதேதோ பேசினோம்.

30 நிமிடங்களுக்குப் பின்னர் அவசரம் அவசரமாக உள்ளேயிருந்து வந்தவர் மன்னிப்புக் கேட்டார்.

என்ன விஷயம் என்று கேட்டேன்.

ஒரு டி.வி. சீரியல்.

 

 

சில மாதங்களாக ஓடிக் கொண்டிருந்தது அன்று முடிவுக்கு வந்தது.

 

அதைப் பார்க்க உள்ளே போனேன்.மன்னிக்கவும் என்றார்.

“மன்னிப்பே கேட்க வேண்டாம்.எங்கள் வீட்டுப் பெண்மணிகளும் கூட இப்படித்தான்.போன் வந்தால் கட் பண்ணி விடுவார்கள்.

அரை மணி நேரம் கழித்துக் கூப்பிட்டு ஒரு மணி நேரம் பேசுவார்கள். வெவ்வேறு ஊர்களில் இருக்கும் அம்மா, பெண்ணும் கூட இப்படித்தான்.“ என்றேன்.

 

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

பிறகு நல்ல உணவைப் பரிமாறினார்.

விடை பெற்றோம்.

நல்ல அனுபவம் இது!

 

உலகெங்கும் டி.வி.சீரியல்களின் தாக்கம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் போலும்!

 

தமிழ் டி.வி. சீரியல்களைப் பற்றி என்னால் சொல்ல முடியும். விருப்பமில்லாவிட்டால் கூட அதன் சில சீன்கள் என் பார்வையில் திணிக்கப்படும்.

 

எப்படி ஒருவரை கொலை செய்வது? கேஸைத் திறந்து விட்டு.. தலைகாணியை வைத்து அமுக்கி. பல்வேறு விஷங்களைப் பல்வேறு விதமாக ஜூஸில் கலந்து…

எப்படி ஒருவரை உபத்திரவப் படுத்துவது?

பல்வேறு உபாயங்களைக் கையாண்டு கை கால்களை உடைப்பது, கடத்துவது, காட்டு பங்களாவில் அல்லது பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைத்து அடிப்பது, மிரட்டுவது…

போலீஸ் கேஸ்களில் தவறாக மாட்டி விடுவது.. இத்யாதி, இத்யாதி.

 

கேவலமான சீன்கள் முடிவில்லாமல் தொடர்கதையாக நீளும்.

இப்படி ஒரு சீரியல் மட்டும் இல்லை, ஏராளமான சீரியல்கள்!

காலை முதல் இரவு 10.30 வரை இப்படி சீரியல்களின் தொடர்ச்சிகள். எல்லாம் இப்படித் தான்!

இதைப் பார்க்கும் நம் வீட்டுப் பெண்மணிகள் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும். மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க முடியும்?

 

 

நெகடிவ் எண்ணங்களினால் மூழ்கடிக்கப்பட்டு “நாசமாய்ப் போவதற்கு”த் தயாராகத் தானே வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் மரணக்காட்சிகள், நல்ல நாட்களில் கோரமான கொலைகள் . – இப்படிப் பார்த்தால் வாழ்க்கை எப்படி நன்கு அமையும்?

 

 

சீரியல் எபிசோட்களை அமைப்பவர்கள் எப்படி நல்ல வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியும்?

கர்ம பலன் விடாது. லட்சக் கணக்கானோருக்கு தீய காட்சிகளை இடைவிடாது காண்பிக்கக் காரணமான இவர்கள் எப்படி நலமுடன் வாழ முடியும்?

 

பெரிய பெரிய நிறுவனங்கள் – தொலைக்காட்சித் தொடர்களை அளிப்பவர்கள் – அதன் பொறுப்பாளர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

 

தேவன் எழுதாத நாவல்களா?

கல்கியின் கதாநாயக, நாயகியர் அனுபவிக்காத அவஸ்தைகளா?

சமூகப் பொறுப்புடன் எழுதிய நல்ல எழுத்தாளர்கள் அல்லவா இவர்கள்?

ராஜாஜி சமூகத்தை உன்னத நிலைக்குக் கொண்டு போகும் படி எழுத வேண்டுமென்று எழுத்தாளர்களுக்கு அறிவுரை பகன்றார்.

காஞ்சி பரமாசார்யாள் எழுத்தாளர்களுக்கு மாபெரும் பொறுப்பு உண்டென்றும், அவர்களின் பேனா முனையிலிருந்து வருபவை நல்லதையே எழுத வேண்டுமென்றும் அறிவுரை அருளினார்.

இன்றைய தமிழ் டி.வி. சீரியல்கள் மெல்லக் கொல்லும் விஷங்கள்!

 

 

இவற்றிலிருந்து விடுபட்டவர்கள் பாக்கியசாலிகளே!

வேலைக்குப் போகும் பெண்மணிகள் சற்று பிழைத்தவர்க்ளே என்று சொல்லலாம்!

 

 

மாலை நேரங்களில் கோவிலுக்குச் செல்லல், நல்ல பாடல்களை, கீர்த்தனைகளை இசைத்தல், அர்த்தமுள்ள அரட்டை அடித்தால் – இவையெல்லாம் எங்கு போயின?

 

 

நமது பெண்மணிகள் சற்று யோசிக்க வேண்டும்.

மெல்லக் கொல்லும் விஷங்கள் உங்களைக் கொல்ல்த் தயார்

உஷார், உஷார், தப்பித்துக் கொள்ளுங்கள்!

***

Adi Sankara, Andal and Alangium hexapaetalum (Post No.4825)

Written by London Swaminathan 

 

 

Date: 17 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-52

 

Post No. 4825

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Great men think alike! So, no one would believe that one copied it from the other. But there is a strange coincidence between Andal and Adi Shankara. Andal has composed two poems Thiruppavai and Nachiar Thirumozi. Adi Shankara mentioned a plant known as Azinjil in Tamil and Ankola in Sanskrit, in his hymn Sivananda Lahari. Though Andal did not mention this plant in her hymn Nachiar Thirumozi, a commentator has mentioned the plant and its strange properties.

In the commentary to Nachiar Thirumozi (4th Thirumozi, Fourth poem), Periyavachan Pillay says the following:

“The Kadamba tree which was burnt down due to the poison spit by the Kaliya snake, came back to life at the touch of Krishna’s feet. One may wonder how was it possible. Don’t you know that the mango seed smeared with Ankola (tree) oil becomes a tree at once and bears fruits? If it is so, cant Vishnus’s feet which secretes Amrita (elixir of life, ambrosia) for ever revive a tree?

 

The common belief is that the seeds of the Ankola (azinjil in Tamil) tree falls on the ground and when the lightning strikes the seedS go and stick to the tree. If the seeds (fruits) are collected at that time and crushed into oil and used on the mango seed, it would sprout into a full tree IMMEDIATELY and bear fruits. Another example is Rama’s feet turned a stone into a woman ( Ahalya)…… The commentary continues……………

 

So the miraculous properties of the Ankola tree are used by the commentators and composers for at least 2000 years.

 

My Visit to Singaperumal Koil

When I went to Singaperumal Koil in the first week of March 2018, I was surprised to see this tree in the hillock around the temple. It was written on the rock that Nachiar Thirumozi commentary speaks about the miraculous property of this plant. It also says that those wanted to become a genius or those who wanted to get married quickly or get an issue, have to take a thread from their clothes and hang it on the tree! As soon as I saw the tree, I remembered my old article about this plant (Please see below)

 

Following is my research article published in this blog on 21st August 2013.

Adi Shankara & Alangium hexapetalum

 

Adi Shankara, the greatest philosopher of India uses lot of similes from nature to illustrate Advaita philosophy. In one sloka he used four birds. I have written about it in my earlier post. One of his interesting observations is about a tree called Ankola in Sanskrit, Alinjil in Tamil and Alangium hexapetalum in botanical term. Its other variety is Alangium salvifolium.

 

‘’ True Bhakti or devotion is explained with the help of Ankola tree and magnet in Sivananda Lahari and Viveka Chudamani of Adi Shankara.

Ankolam nijabeejasanthathi syaskanthopalam suchika………… (Sivananda Lahari, verse 61)

 

 

Sri Shankara has explained what real Bhakti is. The relation between the devotee and Iswara(God) is explained with reference to five examples. They are the tree known as Ankolam and its seeds; the magnet and the needle; a chaste woman and her husband; a creeper and a tree; and a river and the ocean.

 

The ankola tree (Azinjil in Tamil) is found in the forest. It is said that when its fruits fall to the ground, the seeds, liberated from the fruit by some compelling force within, move close to the trunk of the tree, gradually climb up, and get inseparably attached to the tree. During my travels, I was shown this tree in a forest. I saw the seeds sticking o the trunk of the tree, though I was not able to observe the actual movement of the seeds from the ground to the tree. This example of the seeds which fall away from the tree struggling back and attaching themselves to the tree, is denoted by the words ‘’aankolam nija beeja santatih’’.

—- Kanchi Paramacharya’s Talk on February 8, 1958 in Madras (Page 90/91 ‘Acharya’s Call Part 2)

 

Later Tamil literature Seevaka Chintamani refers to this tree. This tree and its parts have got medicinal properties. It has got anti microbial activity. It is traditionally used for tonic and treatment of haemorrhoids (Piles complaint).

Andal posted by Ponnambalam Stapathy

ஞானாநந்த தபோவன அதிசயம்- செவ்வாய் கிரஹ ஞானிகள் (Post No.4824)

Written by London Swaminathan 

 

 

Date: 17 MARCH 2018

 

 

Time uploaded in London – 6-20 AM

 

Post No. 4824

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகிலுள்ள திருக்கோவிலூருக்குச் சென்றேன். தென் பெண்ணை ஆற்றின் கரையில் அழகான சூழ்நிலையில் ஞானாநந்த தபோவனம் உள்ளது. அங்கு விலைக்கு வாங்கிய மலரில் (புஸ்தகத்தில்) ஒரு அதிசயச் செய்தியைப் படித்தேன்; எனக்கு முழுதும் விளங்கவில்லை; உங்களுடன் அதைப் பகிர்வேன் .

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருக்கோவிலூரில் பல முக்கிய இடங்கள் உள; அவற்றில் சில:– சிவன் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், ஞானாநந்தா தபோவனம் மற்றும் பல ஆஸ்ரமங்கள்.

 

நான் சிறு பையனாக இருந்தபோது எங்கள் அண்ணன் இருவருக்கும் திருப்பதியில் பூணூல் போட்டார்கள். எனது தந்தை வேங்கடராமன் சந்தானம் மதுரையின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டி.வி.எஸ்-சுக்கு நெருக்கமானவர். அங்குள்ள ராமசந்திரன் என்பவர் பெரிய காரையும் கொடுத்து, நல்ல டிரைவரையும் கொடுத்து எங்களை ஊர்வலம் அனுப்பினார். அப்போது வரும் வழியில் திருக்கோவிலூருக்கும் சென்றதாக நிழல் போல சில நினைவுகள்.

 

நான் பள்ளிப் படிப்பு படிக்கையில் திருக்கோவிலூரில் தபோவனம் (ஆஸ்ரமம் அமைத்த) சுவாமி ஞானாநந்தா மதுரைக்கு வந்தார். எந்த சுவாமிகள் மதுரைக்கு வந்தாலும் மிகப்பெரிய ‘பப்ளிசிட்டி’ கொடுப்பது எங்கள் தந்தயின் கீழ் இருந்த மதுரை தினமணி மட்டுமே! அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடுவது ‘’ஹராம்’’ (அபச்சாரம்) என்று கருதினர். மதுரை தினமணிப் பொறுப்பாசிரியர் வெ. சந்தானம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இதன் காரணமாக மதுரைக்கு சுவாமி ஞானாநந்தா வந்தபோது பழக்கடை தங்கவேலு, அவரது அம்மன் சந்நிதி பழக்கடையின் மாடியில் சுவாமிகளை தரிசிக்க எங்கள் குடும்பத்தை அழைத்து இருந்தார்; அடியேனும் ஒட்டிக்கொண்டேன்; அப்பொழுது அவரது தரிசனம் கிடைத்தது. எங்கள் வீட்டின் சுவாமி அறையில் இருந்த 108+ சாமியார் படங்களுடன் சுவாமி ஞானாநந்தா படமும் பூஜையில் இடம் பெற்றது. அது முதற்கொண்டு  அவருக்கும் பூ வைப்போம்.

நீண்டகாலமாக திருக்கோவிலூர் செல்ல வேண்டும் என்ற ஆவல், இந்த முறை இந்தியாவுக்குச் சென்றபோது நிறைவேறியது (7-3-2018). தபோவனம் நல்ல அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. காலை பத்தரை மணிக்குக் காலை பூஜை முடிந்துவிடும் என்பதால் விருத்தாசலத்தில் இருந்து சிட்டாகப் பறந்தோம்; சமாதியைத் தரிசித்தோம்; வலம் வந்தோம் புகைப்படம் எடுத்தோம். நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக புத்தகங்கள் வாங்கி ஆஸ்ரமத்துக்கு பணம் அளித்தோம் ; ஒரு புஸ்தகம் 1999-ல் வெளியான கும்பாபிஷேக மலர். அதில் ஹரிதாஸ் சுவாமிகள் முதல் பலரும் அரிய பெரிய கட்டுரைகள் எழுதி இருந்தனர். அத்தனையையும் படித்+தேன். அது ஒரு படி, தேன் (one measure of honey) போல இனித்தது.

 

(ஸ்டாலின் பற்றிய நூலைப் படித்தேன்; அது ஒரு படி, தேன் என்பது கலைஞர் கருணாநிதி சொன்னது). நிற்க

 

யார் இந்த சுவாமி ஞானாநந்தா?

கர்நாடகத்தில் மங்களூரில் பிறந்து, வடக்கில் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாராக சில காலம் இருந்து, இமய மலைக்கு மீண்டும் சென்று தவம் செய்து, பின்னர் நேபாளம் முதல் இலங்கை வரை பயணம் செய்து, தமிழ்நாட்டில் ஆட்டையாம்பட்டி ஏற்காடு முதலிய சில இடங்களில் ஆஸ்ரமங்கள் அமைத்து, இறுதியில் திருக் கோவிலூர் எனும் புனித க்ஷேத்ரத்தில் தபோவனம் நிறுவி, ஹரிதாஸ் சுவாமிகள் போன்ற பல பக்தர்களை உருவாக்கி, புகழ் மணமும் பக்தி மழையும் பொழிந்து 1974-ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார் ஞானாநந்தா.

இவருடைய சமாதி ஜீவ சமாதி- அதாவது பூத உடல் மறைந்தாலும் அவர்கள் அங்கே எப்போதும் இருந்து அருள் புரிவர். சுவாமிஜியின் குரு- ஜோதிர் மடத்தின் தலைவர் சிவரத்ன கிரி.

 

இவரைப் பற்றிய இரண்டு அதிசயச் செய்திகள்:

இவர் 150 ஆண்டுகள் வாழ்ந்தாராம்; இவர் என்று பிறந்தவர் என்பது யாருக்கும் தெரியாது; கர்நாடகத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் பேச்சுவாக்கில் சொன்ன செய்திகளில் இவர் ராமலிங்க சுவாமிகள் (வடலூர் வள்ளலார்) முதலிய பல பெரியோரைச் சந்தித்தவர் என்பது புலப்படும்.

 

இரண்டாவது செவிவழிச் செய்தி என் தந்தை மூலம் அறிந்தது- இவர் சமாதி நிலையில் அடிக்கடி இருந்ததால் உண்மையில் பூத உடலை விட்டுச் சென்றாரா என்பது பக்தர்களுக்குப் புதிராக இருந்ததாம்; பல நாட்களுக்கு உடல் அசைவில்லாமல் இருக்கவே காஞ்சி முனிவர்- மஹாபெரியவர்- சங்கராசார்யாரிடம் கருத்து கேட்டனராம்; அவர் குறிப்பிட்ட சில நாட்களைச் சொல்லி- அதற்குள் எழுந்திருக்காவிடில் சமாதியில் இறக்கிவிடுங்கள் என்று சொன்னவுடன் சீடர்கள் அப்படிச் செய்தனராம்.

 

இவை அனைத்தும் உண்மை என்றே நான் நம்புகிறேன்.

தபோவன மலரில் பல அதிசயங்கள் எழுதப்பட்டபோதும் நான் படித்த ஒரு அதிசயச் செய்தி எனக்கு விளங்கவில்லை. தபோவனம் எப்படி விரிவடையப் போகிறது என்பதெல்லாம் அவர் சொன்னபடியே நடந்தது. அவர் இருக்கும் காலத்திலேயே தபோவனத்தில் பல சந்நிதிகளையும் வைத்து பூஜை செய்யவைத்தார். ஆனால்…………..

 

ராஜ மாணிக்கம் என்பவர் எழுதிய கட்டுரையில் சுவாமிகள் பம்பாய் சென்று செவ்வாய் மண்டல ஞானிகளை அழைத்துவரப்போவதாகவும் அப்போது சுவாமிகளின் 1008 சங்க நாதம் ஒலிக்கும் என்றும் உலகமே சுபிட்சமாக வாழும் என்றும் இந்த நிகழ்வினைக் கண்டு உலகமே ஆச்சர்யப்படும் என்றும் — அந்தக் கட்டுரை முடிகிறது.

 

ஒரு பக்தரின் எழுத்து மூலம் வந்த செய்தி என்பதால்,  ஞானாநந்தா என்ன சொன்னார், எந்த சூழ்நிலையில் சொன்னார், செவ்வாய் மண்டல ஞானிகள் என்பது நாம் அறிந்த கிரஹங்களில் ஒன்றான செவ்வாயா அல்லது வேறு பொருள் உடைத்தா  என்பது விளங்கவில்லை.

சுவாமிகளின் பூத உடல் சமாதியில் இறக்கப்பட்டு விட்டாலும் அவருடைய அருள் அவர் சொன்னபடியே இன்றும் அங்கே இருப்பதை நாம் உணரமுடிகிறது. ஆகவே அவர் புகழ் உடம்பு அந்த அதிசயத்தை நிகழ்த்தும் என்று எதிர் பார்ப்போமாக ( ஆஸ்ரம மலரில் வெளியான கட்டுரையின் கடைசி பக்கத்தை இங்கே இணைத்துள்ளேன்; ப டித்து மகிழ்க.

 

ஞானாநந்த சுவாமிகளுக்கு நமஸ்காரம்; அவர் புகழ் ஓங்குக!

 

–subham–

சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்! (Post No.4823)

Date: MARCH 17,  2018

 

 

Time uploaded in London- 5-15 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4823

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

 

 

ஞான ஆலயம் குழு வெளியீட்டுப் பத்திரிகையான ஸ்ரீ ஜோஸியம் மாத இதழில் மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்!

 

ச.நாகராஜன்

ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நமது சாஸ்திரங்கள் நுட்பமானவை. பல நூற்றாண்டுகளில் கிடைத்த அனுபவத்தாலும், உள்ளுணர்வாலும் மனித குலத்திற்கு நலம் பயக்கும் நாட்களையும் நட்சத்திரங்களையும் மஹரிஷிகள் கண்டு அதை ஜோதிடம் உள்ளிட்ட சாஸ்திர நூல்களில் தொகுத்து வழங்கியுள்ளனர்.

 

தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.

 

பஞ்சக நட்சத்திரங்களும் பஞ்சக் யோகமும்!

 

அவிட்டம் , சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் பஞ்சக் என்று அழைக்கப்படுகின்றன. பஞ்சகம் என்றால் ஐந்து. இந்த ஐந்து நட்சத்திரங்கள் உள்ள ராசிகள் கும்பமும் மீனமும் ஆகும். சந்திரன் இந்த ராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சக் கால் என அழைக்கப்படுகிறது. இதை பஞ்சக யோகம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறும்.

இந்த நட்சத்திரங்களில் (அவிட்டம் கடைசி இரு பாதங்கள் மட்டும்) புல், மரம் வெட்டக் கூடாது.

தென் திசையில் பயணம் மேற்கொள்ளக் கூடாது

படுக்கை அமைக்கக் கூடாது

புதிய பிஸினஸ் துவங்கக் கூடாது

பிரேத தகனம் கூடாது. (அப்படியானால் ஐந்து நாட்கள் எப்படி ஒரு பிரேதத்தை தகனம் செய்யாமல் வைத்திருப்பது என்ற கேள்வி எழும். இப்படி எரித்தால் இன்னும் ஐந்து மரணம் வரும் என்பதாலேயே இது சொல்லப்படுகிறது. என்றாலும் பிரேதத்தை தகனம் செய்யும் போது பரிகாரமாக இன்னும் ஐந்து மலர், மாவு ஆகியவற்றினாலான உடல்களையும் சேர்ந்து எரிப்பது மரபு.

சுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும். சுப காரியம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் உரிய பரிகாரத்தைத் தெரிந்து கொண்டு செய்வது வழக்கம்.

பஞ்சக காலம் என்பது மாதம் ஒரு முறை அதாவது 27 நாள் சுழற்சியில் வரும். இதை முன்னதாகவே கணித்து நமது திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.

 

புத்தாடை அணிவதற்கான தினங்கள்!

 

புதன், வியாழன், வெள்ளி ஆகிய  கிழமைகளில் புத்தாடைகளை அணிய வேண்டும்.

  • முகூர்த்த மார்த்தாண்டம்

 

புத்தாடை அணிவதற்கான நட்சத்திரங்கள்!

 

அவிட்டம், புனர்பூசம்,ஹஸ்தம்,சித்ரா,ஸ்வாதி,விசாகம், அனுஷம்,பூசம்,அஸ்வினி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் புத்தாடை அணிய வேண்டும்.

– முகூர்த்த மார்த்தாண்டம்

 

எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் பொதுவான விதிகள்!

 

1)பணம் (செல்வம்), உறவினர், நிலை, தொழில், படிப்பு ஆகிய ஐந்தும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. இவற்றில் ஒன்றை விட ஒன்று அதிக சிறப்பு வாய்ந்தது என்று கொள்ள வேண்டும்.

– மனுஸ்மிருதி, பவிஷ்ய புராணம், யாக்ஞவல்ய ஸ்மிருதி, கூர்ம புராணம்

2) எல்லா தார்மீக காரியங்களிலும் முதலில் நவக்ரஹ சாந்தி செய்ய வேண்டும். – வைஸ்வாரம்ப ஸ்மார்த்த சூத்ரம்

3) வீட்டின் ஸ்தீரி இல்லாமல் ஒரு யக்ஞ காரியமும் செய்யக் கூடாது.

-ஆனந்த ராமாயணம்

4) பாடம் படித்தல் (ஓதுதல்), தேவி பூஜை, வஸ்திரம், நகை அணிதல்,ஆகியவற்றை வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

-கருட புராணம்

 

சந்தியாகாலத்தில் செய்யக் கூடாதவை

 

சந்தியாகாலத்தில் 1) உணவு உண்ணக் கூடாது 2) உடல் உறவில் ஈடுபடக்கூடாது 3) உறங்கக் கூடாது 4) வேதம் ஓதக் கூடாது.

சத்வாரி கலு கர்மாணி சந்த்யாகாலே விவர்ஜியேத் |

ஆஹாரம் மைதுனம் நித்ராம் ஸ்வாத்யாம் ச சதுர்தகம் ||

  • ஸ்மிருதி சந்தர்ப: – 76

 

இப்படி நுணுக்கமாக அனைத்து விஷயங்களையும் நமது சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

 

அனைவரும் அனைத்து சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற முடியாது என்பதாலேயே இதில் விற்பன்னராக உள்ள சாஸ்திர பண்டிதர்கள் அல்லது ஜோதிடரைக் கலந்தாலோசித்து அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும் என்ற எளிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

 

குடும்ப புரோகிதர், குடும்ப ஜோதிடர் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னரே ஒரு காரியத்தைச் செய்வது என்ற நடைமுறை சிக்கலான விஷயங்களை ஒரு குடும்பம் எதிர்கொள்ள நேரிடாதவாறு பாதுகாத்தது.

இன்றும் இதை நடைமுறையில் அனுஷ்டிப்போர் சிக்கலின்றி வாழ்வதைப் பார்க்கலாம்.

 

 

***

 

 

Hindu Saint Gnanananda and Planet Mars! (Post No.4822)

 

Written by London Swaminathan 

 

 

Date: 16 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-35

 

Post No. 4822

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

It is a strange link indeed! Swami Gnanananda was born in Mangalore and became the Head of Jyotir Mutt, one the Mutts established by Adi Shankara. After some time, he relinquished that post and did penance in the Himalayas. He travelled from Tibet and Nepal to Sri Lanka in the south. He established his own Ashrams in various places in Tamil Nadu, but settled in Thiukkoilur, where he established a temple and Tapovanam (Forest of penance). It is said that he lived for 150 years and he was a contemporary of Vadalur Vallalar- Sri Ramalinga Swamikal. Gnanananda attained Samadhi in 1974. No one knew the exact year of his birth.

 

My connection with Thirukkoilur

Tirukkovilur or Kovalur is on the banks of Pennai River, located about 30 kilometres from Viluppuram or Tiruvannamalai.

My brother Prof Suryanarayanan is talking with the priest.

When I was a school boy, my father took us (the family) to Tirukkovilur after performing Punul (sacred thread) ceremony to my older brothers. I don’t remember much now. But we had a picture of Swami Gnanananda at home in Madurai and we worshipped him along with other saints’ pictures. His disciple Haridas came to Madurai and spread his message through Bhajans. He himself wrote about the greatness of Swamiji.

 

When Swami Gnanananda came to Madurai, Pazakkadai/Fruitshop Thangavelu invited us to have his darshan. It was arranged on the top floor of the fruit shop itself. My father had a chat with him and all other members of the family were just observers. When Swamiji attained Siddhi, I was working as a Senior Sub Editor in Madurai Dinamani newspaper. I wanted to visit the Tapovanam for very long. When I went to attend the Fifth World Saiva Siddhanta Conference in Chennai in March 2018, I targeted three new places and successfully finished them: Madurantakam Rama Temple, Vadalur Vallalar  Ashram and Tirukkovilur Tapovanam.

It is situated in a quiet place and anyone can feel the divine vibrations. It is closed at 10-30 am in the morning after Puja and opens in the evening. Fortunately, I and my brother reached the place at 10 am ad had the darshan of the Samadhi.

 

I bought two books so that the money would benefit the ashram. One of the books is a souvenir published in 1999. It has very good articles. Though I did not go for any miracles or anecdotes about miracles, one of the articles had a strange information of Swamiji speaking about the Saints of  Mars zone. But it came through the writing of another hand. So I did not know how far the information is correct and what he meant by that (see the version in Tamil posted here):

A rough translation of the last paragraph of the article written by A R P N Raja Manikkam is as follows:

“To make our country stand first in spiritual and mundane things, I go to Mumbai to bring the Jnanis/saints from Mars zone to Tapovanam; then swamijis 1008 conch shells will sound; Ramarajyam will begin; the world will be a prosperous place. It will be a great wonder to everyone. This is Swamiji’s resolve/ conclusion.”

 

Since Swamiji is no more, we don’t know what he meant by saints in planet Mars.

 

But the visit to the ashram will be a great experience. And this holy town has two more famous temples of Shiva and Vishnu. Viluppuram district has many more temples in the surroundings. It is worth visiting the town; better stay for a whole day or stay overnight.

 

Swamiji’s teachings are very simple and universal; anyone can follow them irrespective of one’s faith.

-Subham–

உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா (Post No.4821)

Written by London Swaminathan 

 

Date: 16 MARCH 2018

 

Time uploaded in London – 5-50 am

 

Post No. 4821

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

தமிழ்ப் பழமொழிகளும் சாணக்கிய நீதியும்

 

இருபதாயிரத்துக்கும் மேலான தமிழ்ப் பழமொழிகள் உள்ளன. இந்தப் பழமொழிகளில் பல, பாரதம் முழுதும் உள. அவைகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால் இமயம் முதல் குமரி வரை நம்பிக்கைகள் ஒன்றே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

 

இதோ! 2300 ஆண்டுப் பழமையான சாணக்கிய நீதியின் ஸ்லோகங்களும் இணையான பழமொழிகளும்

அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே என்பது தமிழ்ப் பழமொழி.

முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே- என்று அப்பர் பெருமான் தேவாரம் நாலாம் திருமுறையில் பாடுகிறார். புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைவிட கையில் இருக்கும் ஒரு பறவை மேல் A bird in hand is better than two in the bush என்பது ஆங்கிலப் பழமொழி. ‘உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா’ என்றும் ‘கையில் வெண்ணை இருக்க நெய்யிற்கு அலைவானேன்’ என்றும், ‘உள்ளங்கையில் தேனை வைத்துக் கொண்டு புறங்கையை நக்கினாற் போல’ என்றும் தமிழில் செப்புவர்.

 

 

யோ த்ருவாணி பரித்யஜ்ய ஹ்யத்ருவம் பரிஷேவதே

த்ருவாணி தஸ்ய நஸ்யதி ஹ்யத்ருவம் நஷ்டமேவ ஹி

 

-சாணக்கிய நீதி 1-13

பொருள்:

உறுதியான ஒன்றை விட்டு விட்டு உறுதியற்ற- நிச்சயமற்ற- பொருளை நாடுபவன், இருக்கும் ஒன்றையும் இழந்து விடுவான்; இல்லாத பொருள் கிடைக்காது என்பது ஏற்கனவே அறிந்த விஷயம்.

xxx

சிறு துளி பெரு வெள்ளம்

ஜல பிந்து நிபாதேன க்ரமசஹ பூர்யதே கடஹ

ஸ ஹேதுஹு ஸர்வ வித்யானாம் தர்மஸ்ய ச தனஸ்ய ச

12-21

பொருள்:

“சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் விழுந்தாலும் ஒரு பானை நிரம்பி விடும்.  இதுதான் மிகப் பெரிய ரஹஸியம் — செல்வம் சேர்வதும் இப்படித்தான், தர்மம் வளருவதும் இப்படித்தான்”.

 

எதிலுமே சிறுகச் சிறுக சேர்வது பின்னர் பெரும் கடல் போலப் பெருகிவிடும். பல ஓடைகளின் நீர் சேர்ந்து, நதிகளாகப் பெருகி சமுத்திரத்தை உண்டாக்குகின்றன. இயற்கையும் கூட நமக்கு கற்பிப்பது இந்த ரஹஸியமே!

xxx

 

மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி

யதா ராஜா ததா ப்ரஜாஹா (As the Ruler, So the Ruled)  என்பது ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இணையான பழமொழி. பகவத் கீதையில் கண்ண பிரானும் ‘பெரியவர்கள் எதைச் செய்கிறார்களோ பொது மக்களும் அதையே செய்வர் (3-21) என்று சொல்லுவார்.

 

சாணக்கியன் நுவல்வதும் அஃதே!

ராக்ஞி தர்மிணி தர்மிஷ்டாஹா  பாபே பாபாஹா ஸமே ஸமாஹா

ராஜானம் அனுவர்தந்தே யதா ராஜா ததா ப்ரஜாஹா- 13-7

 

பொருள்

அரசன் நேர்மையாளனாக இருந்தால் மக்களும் அப்படியே இருப்பர்; அவன் பாபம் செய்தால், மக்களும் பாவம் செய்வர்; அவன் நடு வழியில் சென்றால் அவர்களும் நடு வழியில் செல்லுவர்; மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.- 13-7

 

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி – என்பதைப் பொது வாழ்விலும் காணலாம். ஆட்சியாளர்களே ஊழல் செய்தால் மக்களும் கெட்டுப் போவார்கள்

 

xxx

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு – என்று பாடினான் சொற்தேரின் சாரதியாம் பாரதி.

 

ஒற்றுமையே உயர்வு என்பதற்குப் பல கதைகளை பஞ்ச தந்திரம் ‘மித்ர பேதம்’ என்னும் பிரிவில் எடுத்துரைக்கும்

 

சாணக்கியன் மொழிவதும் அஃதே!

பஹூனாம் சைவ ஸத்வானாம் ஸமவாயோ ரிபுஞ்ஜயஹ

வர்ஷதாஅதரோ மேகஸ்த்ருணரபி நிதார்யதே

14-4

 

பல கைகள் ஒன்று சேர்ந்தால், எதிரிகளை வென்று விடலாம்; வைக்கோலைச் சேர்த்துக் கட்டிய பாயும் பெரு மழையைத் தடுக்கவில்லையா!

 

xxx

 

குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு

குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து பிள்ளைகளையும் மனைவியையும் அடிக்கும் குடிகாரனை எல்லோரும் கண்டித்தவுடன் நாளை முதல் குடிக்க மாட்டேன் இது சத்தியம் என்பான்; ஆனால் மறு நாளே குடிக்கச் செல்லுவான். குடி போதையில் இருக்கும் போது மனைவியைப் பார்த்து உனக்கு தங்கச் சங்கிலி, வைர நெக்லஸ் வாங்கித் தருவேன் என்பான். காலையில் எழுந்தவுடன் — குடி போதை தெளிந்தவுடன் கதையே மாறிவிடும்.

 

இதே போலத்தான் ஸ்மசான வைராக்யம்– சுடுகாட்டு சபதம்-

 

யாராவது நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்தவுடன், அடடா! வாழ்க்கையே அநித்யமானது- உடனே நல்லது செய்துவிட வேண்டும்- கெட்ட வழியில் செல்லக்கூடாது- செல்ல மாட்டேன் என்று மனைதுக்குள் சபதம் செய்வர். பத்து நாள் சென்ற பின்னர் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்று ஆரம்பித்து விடுவர். இதை ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் – உள்ளிப்பூண்டு வைத்த பாத்திரத்துடன் ஒப்பிடுவார். அந்த வாடை என்றுமே போகாது

 

இதோ சாணக்கியன் சொல்

 

தர்மாக்யானே ஸ்மசானே ச ரோகிணாம் யா மதிர்பவேத்

ஸ ஸர்வதைவ திஷ்டேச்சேத் கோ ந முச்யேத் பந்தனாத்

14-6

 

பொருள்

ஒரு சமயச் சொற்பொழிவினைக் கேட்கும் நோயாளி மனதில் ஓடும் எண்ணங்களும், சுடுகாட்டில் இரங்கல் தெரிவிக்கும்போது மனதில் ஓடும் எண்ணங்களும் நிலையாக மனதில் தங்கிவிட்டால் எல்லோரும் பற்றற்றான் பற்றினைப் பற்றிவிடுவரே! பந்தங்கள் அறுபட்டு மோட்ச சாம்ராஜ்யத்துக்குச் சென்று விடுவது எளிதாகி விடுமே!

 

xxx

 

விநாச காலே விபரீத புத்தி

விதி கெட்டுப் போனால்

மதி கெட்டுப் போகும்

ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ

ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ

ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய

விநாச காலே விபரீத புத்திஹி

 

-சாணக்கிய நீதி, அத்யாயம் 16, ஸ்லோகம் 5

 

பொருள்:

உலகில் தங்க நிற மான் என்பது கிடையவே கிடையாது. யாரும் முன்னால் பார்த்ததும் இல்லை; யாரும் அப்படி ஒன்று இருப்பதாகக் கேட்டது கூட இல்லை. ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது புத்தி பேதலித்து விடும்.”

(தங்க நிற மான் ஒன்றைப் பார்த்து சீதா தேவி ஆசைப்பட்டதால், ராமாயணம் என்னும் கதை வளர்ந்தது பற்றிய குறிப்பு இது )

–Subham—

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

 

 

Part 2 க்ராஸ் டாக்கில் உதயமானது அர்த்தமுள்ள இந்துமதம் (Post No.4820)

Date: MARCH 16,  2018

 

 

Time uploaded in London- 3-45 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4820

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்; ராஜாஜியின் தூண்டுதலால் உதித்தது கடைசிப் பக்கம்! -2

 

Part-1 was posted on 14th March, 2018

 

ச.நாகராஜன்

 

கல்கியின் உதவி ஆசிரியர் ரா.வீழிநாதன் மிகுந்த தயக்கத்துடன் கவிஞரின் இல்லம் சென்றார். அங்கு அவரது உதவியாளர் இராம.கண்ணப்பனைச் சந்தித்தார்.

 

“கல்கியின் சார்பாகக் கவிஞரைச் சந்திக்க வேண்டும். அவர் கல்கியில் எழுதுவதற்குச் சம்மதிப்பாரா?” என்றும் கேட்டார்.

“கவிஞரோ குழந்தை உள்ளம் கொண்டவர். நீங்கள் தாராளமாக அவரைச் சந்திக்கலாம்” என்றார் கண்ணப்பன்.

சந்திப்பு நிகழ்ந்தது.

 

மறுநாள் மாலையில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களை கவிதா ஹோட்டல் மண்டப்பத்திற்குக் கூட்டி வந்தார்.

கடைசிப் பக்கம் என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுத கவிஞர் ஒப்புக் கொண்டார்.

 

கடைசிப் பக்கம் கல்கியில் வாசிக்கப்படும் முதல் பக்கமாக ஆனது.

 

அர்த்தமுள்ள இந்துமதம் எதையெல்லாம் தெரிவித்ததோ அதை கடைசிப் பக்கமும் தெரிவித்தது.

 

இதில் அவ்வப்பொழுது அருமையான கவிதைகள் வேறு.

பின்னர் கடைசிப் பக்கம் முதல் பக்கம் ஆனது.

பின்னர் கல்கியில் ஏதோ ஒரு பக்கத்தில் கவிஞரின் எழுத்துக்கள் இடம் பெற்றன. வாசகர்கள் அமோகமாக கவிஞரின் எழுத்துக்களை வரவேற்றுப் படித்தனர்.

 

அன்பார்ந்த நேயர்களுக்கு என்ற தனது பகுதியில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் 1976ஆம் ஆண்டு ஒரு கல்கி இதழில் இப்படி எழுதினார்:

 

“கண்ணதாசனைப் பொறுத்தவரை அவர் தமது பேனாவைச் செங்கோலோச்சித் தமிழை இலக்கிய உலகில் அரியாசனத்தில் அமர்த்தி விடும் ஆற்றல் வாய்ந்தவர் என்பது பற்றி யாருக்கும் ஐயமிராது. தமிழை அவர் ஆள்கிறாரா தமிழ் அவரை ஆள்கிறதா என்று புரியாத அளவுக்கு இன்றைய தமிழகத்தின் மிகச் சிறந்த சிந்தனையாளருள் ஒருவரான கண்ணதாசன் எழுத்தில் எழில் கொஞ்சுகிறது; நடையில் நயம் மிகுந்திருக்கிறது. ஆத்ம திருப்தி இல்லாமல் வருவாயைக் கருதி மட்டுமே அவர் சிலவற்றை எழுதியிருக்கலாம். அவரே அதை ஒப்புக் கொள்வார். ஆனால் தமிழுக்கு அவர் அளித்திருக்கும் சிறப்புக்கள் இதனை நாம் மறந்து விடச் செய்கின்றன.”

 

பின்னர் “சேரமான் காதலி” தொடரை அவர் எழுத ஒப்புக் கொண்டமையை அவர் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.

இப்படியாக ராஜாஜியின் தூண்டுதலால் கல்கியின் நல்ல தொடர்பு கவிஞருக்குக் கிடைத்தது.

 

அதை ஒட்டு மொத்த தமிழர்களும் வரவேற்றனர்.

க்ராஸ் டாக்கும் நன்மை பயக்கும்; ராஜாஜி போன்ற பெரியோரின் நுட்பமான கவனமும் தமிழுக்கு நலம் தரும் என்பதை அர்த்தமுள்ள இந்து மதம் மற்றும் கடைசிப் பக்கம் ஆகியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

இந்தத் தொடர் இத்துடன் முற்றும்.

 

–Subham–