
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 1 November 2018
GMT Time uploaded in London – 8-53 am
Post No. 5612
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
ஸம்ஸ்க்ருதம் செத்தால் தமிழும் சாகும். ஏனெனில் தமிழ் இலக்கியம், தமிழ் அகராதி, நிகண்டு முழுவதும் பிரிக்க முடியாத அளவுக்கு சம்ஸ்க்ருதச் சொற்கள்!!
காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் எழுதிய ‘மைத்ரீம் பஜத’ என்ற உலக சமாதான, உலக அமைதி, மக்கள் நல் வாழ்வு பற்றிய ஸம்ஸ்க்ருதப் பாடலை திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி , ஐ.நா.சபையில் பாடியதன் மூலம் ஸம்ஸ்க்ருத ஒலி உலக நாடுகள் முழுவதிலும் ஒலித்தது.
ஸம்ஸ்க்ருதத்தில் சுபாஷித ரத்ன பாண்டாகாரம் போன்ற தனிப்பாடல் திரட்டு நூல்கள் ஏராளம், ஏராளம். அதில் அதி பயங்கர ‘செக்ஸி’ பாடல் முதல் நக்கல், கிண்டல் பாடல்கள் வரை பல்லாயிரம் உள.
யார் எல்லாம் ஸம்க்ருதத்தைக் கிண்டல் செய்கிறார்களோ அவர்கள் பெயர்கள், அப்பா பெயர்கள், அம்மா பெயர்கள் எல்லாம் ஸம்ஸ்க்ருதம் என்றும் காட்டினேன்.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அகற்றினாலோ, திருக்குறளில் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அகற்றினாலோ அவை செத்துவிடும் என்றும் காட்டினேன்.
தமிழில் இது வரை ஒரு அகராதியோ, நிகண்டோ வரவில்லை என்பதையும் சொல்லுவேன். பக்கத்துக்குப் பக்கம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்!! ஆனால் நாம் அதை தமிழ் நிகண்டு, தமிழ் அகராதி என்போம்!!
நிற்க.
இன்றும் கூட ஸம்ஸ்க்ருதத்தில் நையாண்டி பாடல் எழுத முடியும் என்று மதுரை அன்பர் எழுதியதை எனது சகோதரர் (வாட்ஸ் அப்பில் வந்ததை எனக்கு) அனுப்பினார். இதோ இட்லி பற்றிய ஸம்ஸ்க்ருத கவிதை:–


–subham–