பள்ளிக்கூடப் பிரார்ததனைப் பாடலாக மாறிய ஒரு திரைப்படப் பாடல்! (Post 6123)

Written by S.Nagarajan

swami_48@yahoo.com


Date: 26 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 8-54 am


Post No. 6123

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

திரைப்படப் பாடலோடு ஒரு பயணம்

இந்தத் தலைப்பில் 52 அத்தியாயங்களுடன் எனது புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. (மணிவாசகர் பதிப்பகம், சென்னை)

அதைத் தொடர்ந்து எழுத காலம் கை கூடவில்லை. இதோ ஒரு கட்டுரை அந்தப் புத்தகத்தின் ஒரு தொடர்ச்சியாக …

பள்ளிக்கூடப் பிரார்ததனைப் பாடலாக மாறிய ஒரு திரைப்படப் பாடல்!

ச.நாகராஜன்

ஒரு திரைப்படப் பாடல் பள்ளிக்குடங்களில் பிரார்த்தனைக்குரிய பாடலாக ஆனது என்றால் நம்ப முடியவில்லை அல்லவா?

இங்கு இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் கூட பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனைப் பாடலாக ஆனது அந்தப் பாடல்.

இந்தப் பெருமைக்குரிய பாடல் :

ஐ மாலிக் தேரே பந்தே ஹம்

ஐந்து நிமிடம் 33 விநாடிகள் நீடிக்கும் இந்தப் பாடலை இன்றும்

https://www.youtube.com/watch?v=YmYFRNXrPdk என்ற தொடுப்பில் கேட்கலாம்.

11,786,116 பேர்கள் இதுவரை இதை கேட்டிருக்கிறார்கள்; இன்னும் கேட்பார்கள். (AS on 26-2-19)

பாடல் இடம் பெறும் படம் :தோ ஆங்கே பாரா ஹாத்

இரு கண்களும் பன்னிரெண்டு கரங்களும்.

படத்தை இயக்கியவர் பிரபல டைரக்டரான வி.சாந்தாராம் அவர்கள்.

படம் வெளியான ஆண்டு 1957. பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தில் சாந்தாராம் ஆதிநாத் என்ற ஜெயில் வார்டனாக நடித்தார். ஒபன் ஜெயில் என்னும் திறந்த வெளிச் சிறைச்சாலை முறையை சதாரா அருகில் உள்ள அவுந்த் ராஜ்யம் பரிசோதித்துப் பார்த்தது. அதன் அடிப்ப்டையில் உத்வேகம் பெற்று இந்தக் கதை படமாக்கப்பட்டது.

ஆறு பயங்கரமான கிரிமினல்களை இளம் வார்டன் தன் பொறுப்பில் அழைத்துச் சென்று மாற்ற முயல்கிறார்.

அவர் கடைசியில் ஒரு எதிரியால் கொல்லப்பட்டு இறக்கிறார்.

பரத் வ்யாஸ் அற்புதமான பாடலை எழுத, வசந்த் தேசாய் இசை அமைக்க லதா மங்கேஷ்கர் பாட உளத்தை உருக்கும் ஒரு பாடலாக படத்தின் இறுதியில் அமைகிறது ஐ மாலிக் தேரே பந்தே ஹம் பாடல்!

Aye Maalik Tere Bande Hum

Ayese Ho Humaare Karam
nekee Par Chale, Aaur Badee Se Tale,

Taankee Hasate Huye Nikale Dam

ye Andheraa Ghanaa Chhaa Rahaa,

Teraa Insaan Ghabaraa Rahaa
ho Rahaa Bekhabar, Kuchh Naa Aataa Najar,

Sukh Kaa Sooraj Chhoopaa Jaa Rahaa
hai Teree Roshanee Mein Jo Dam

To Amaawas Ko Kar De Poonam

badaa Kamajor Hain Aadamee,

Abhee Laakhon Hain Is Mein Kamee
par Too Jo Khadaa, Hain Dayaaloo Badaa,

Teree Kirapaa Se Dharatee Thamee
diyaa Toone Humei Jab Janam Too Hee Zelegaa Hum Sab Ke Gam

jab Julmon Kaa Ho Saamanaa,

Tab Too Hee Humei Thaamanaa
wo Buraee Kare,

Hum Bhalaaee Bhare, Naheen Badale Kee Ho Kaamanaa
badh Uthhe Pyaar Kaa Har Kadam Aaur Mite Bair Kaa Ye Bharam

ஓ, கடவுளே நாங்கள் உனது மக்கள்.

ஓ, கடவுளே நாங்கள் உனது மக்கள்.

தீமையிலிருந்து விலகி இருந்து

நல்ல பாதையில் நடக்கும் படியாக எங்களின் விதியை அமை.

சிரித்துக் கொண்டே இருக்கும் போது இறுதி மூச்சை விடுவோமாக!

இதோ இப்போது இருப்பது காரிருள்.

உனது மனிதன் பயந்திருக்கிறான்,

பொறுமையற்றவனாக இருக்கிறான், பார்க்க ஒன்றும் இல்லை, பொறுமை குறைகிறது.

உனது ஒளி மிக்க சக்தி வாய்ந்தது. இருளான் இரவை ஒளி மயமாக்க வல்லது

மக்களோ மிகவும் பலஹீனமாக உள்ளனர்.

அவர்கள் குறைபாடுள்ளவர்களாக இருக்கின்றனர்

ஆனால் நீயோ கடவுள்

பூமியே உனது ஆணையால் சுழல்கிறது.

நீ எங்களுக்கு உயிரை ஈந்த போதிலேயே நீயே எங்கள் வலியை எடுத்துக் கொள்ளவும் பொறுப்பாளி ஆகிறாய்!

எங்கு பார்த்தாலும் கொடுமை இருக்கும் போது, நீயே எங்களைக் காப்பாற்ற வல்லவனாகிறாய்!

நாங்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்த போதிலும் அவர்கள்

தீமையை விளைவிக்கின்றனர். நிலைமை மாறாது.

அன்பை ஒவ்வொரு அடியிலும் எழச் செய்வோம்!

Ohh God, we are your people
Ohh God, we are your people, make our destiny
so we walk on good path, stay away from bad, we breathe our last while laughing.
it is now becoming pitch dark, your human is becoming scared
becoming very impatient, nothing to see, sun of patience is going down
Your light is so powerful, can light the dark night

People are very weak, They are so imperfect
But you are God, The earth moves on your order
When you brought us to life, it made you responsible to also take our pain

When cruelty is everywhere, Then you become our only savior
They do bad, doesn’t matter how good we are, things will not change
Let’s raise the feet of Love.

நல்லதை நினைத்து நல்லதையே செய்யும் போது நன்மையே விளையும் என்ற அறநெறிப் பண்பை விளக்க வந்த படம் தோ ஆங்கே பாரா ஹாத்.

அதில் அமைந்துள்ள இந்தப் பாடலை அந்தக் கால ஆசிரியர்கள் பள்ளிக்கூட பிரார்த்தனைப் பாடலாக அமைத்து மகிழ்ந்தனர்.

அதைப் பாடிய அந்தக் கால குழந்தைகள் இன்று முதியவர்கள்!

அவர்கள் பழைய காலத்தை நினைத்து இணையதளத்தில் ப்திவிடும்போது ப்ரவசத்துடன் பழைய காலத்தை நினைத்து மகிழ்கின்றனர்.

திரைப்படப் பாடல் ஒன்று பிரார்த்தனை கீதமாக ஆன கதை இந்தியத் திரைப்பட வரலாற்றில் இதுவே முதல்  முறை; இன்னும் வேறு ஒரு பாடலும் இப்படி ஒரு வெற்றியைப் பெறவில்லை!

ஓ, கடவுளே நாங்கள் உனது மக்கள்.

ஓ, கடவுளே நாங்கள் உனது மக்கள்.

தீமையிலிருந்து விலகி இருந்து

நல்ல பாதையில் நடக்கும் படியாக எங்களின் விதியை அமை.

***

Leave a comment

5 Comments

  1. Rama Nanjappa's avatar

    Rama Nanjappa

     /  February 26, 2019

    பழைய ஹிந்திப் படங்களில் பல நல்ல பிரார்த்தனைப் பாடல்கள் வந்திருக்கின்றன. சில மிகவும் பிரபலமாயின. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை:
    – அப் தேரே சிவா கௌன் மேரா க்ருஷ்ண கன்னையா -படம் கிஸ்மத் 1943 .அமீர்பாயி கர்னாடகி பாடியது. நான் குழந்தையாக இருந்தபோது என் அம்மா பாடுவார்.
    – தூ ப்யார் கா ஸாகர் ஹை : படம் “ஸீமா” 1955 மன்னா டே பாடியது
    – ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே : படம் : பூரப் ஔர் பஶ்சிம் 1970. மஹேந்த்ர கபூர் குழுவினர் பாடியது. இது பொதுவான ஆரதிப் பாடல். சினிமாவுக்காக சிறிது மாற்றிக்கொண்டார்கள்.
    -ஹம் கோ மன் கீ சக்தீ தேனா: படம்-குட்டி. பாடியது வாணி ஜயராம்.

    ஆனால் எதுவும் : ஏ மாலிக் தேரே வை மிஞ்சவில்லை. இதை படத்தில் மன்னா டே குழுவினரும் , லதா மங்கேஷ்கரும் தனித்தனியாகப் பாடியிருக்கிறார்கள். மன்னா டே பாடியது சிறந்தது.
    இந்தப் பாடலை எழுதியவர் கவி பரத் வ்யாஸ். Bharat Vyas. இவர் எளிய ஹிந்தியில் எழுதுவார். இந்தப் பாடலில் கடவுளுக்கு “மாலிக்” என்ற உருதுச் சொல்லைப் பயன்படுத்தி யிருக்கிறார். அதனால் இது பரவலாக ஆதரவைப் பெற்றது. இதற்குப் பின்னணியில் ஒரு செவிவழிச் செய்தி உண்டு. படப்பிடிப்பு தொடங்கி பல நாட்கள் ஆகியும் பரத் வ்யாஸ் பாடல் எழுதவில்லை. ஒரு நாள் தயாரிப்பாளரும் டைரக்டரும் நடிகருமான ஶாந்தாராம் , பரத் வியாஸைச் சீண்டும் முறையில், “அரே மாலிக், நீ எப்போது பாடலை எழுதப்போகிறாய்” என்று கேட்டாராம். மாலிக் என்றால் கொச்சையாக ‘தலைவா’ எஜமானரே ‘ என்றெல்லாம் பொருள் சொல்லலாம். வ்யாஸுக்கு சட்டென்று மூளை செயல்படத் தொடங்கியது! அந்த ‘மாலிக்’ சொல்லை வைத்தே பாடலை எழுதத் தொடங்கினாராம்! [ இப்படிப் பல பாடல்களின் பின்னணியில் ரசமான சம்பவங்கள் உண்டு.]

    இந்தப் பாடலில் வரும் கருத்துக்கள் அடிப்படையில் நம் ஹிந்து சமயக்கருத்துக்கள் தான். ஆனல் அவற்றைப் பொதுவான முறையில் ஹிந்தியில் தந்தார் கவிஞர். ” ஹஸ்தே ஹுவே நிகலே தம்”= சிரித்துக்கொண்டே ( மகிழ்ச்சியாகவே) உயிரை விடுவோமாக என்பது,
    “அனாயாஸேன மரணம் வினாதையேன ஜீவனம்
    தேஹிமே க்ருபயா ஸம்போ ( க்ருஷ்ணா( த்வயீ பக்திம் அசஞ்சலம்”
    என்ற ஸம்ஸ்க்ருத ஶ்லோகத்தின் பிரதிபலிப்புத்தான். இப்படி விளக்கினால் பதில் நீண்டுவிடும்.

    இதற்கு இசையமைத்தவர் வஸந்த் தேஸாய். ‘ஹம் கோ மன் கீ ஶக்தீ தேனா’ பாடலுக்கு இசையமைத்தவரும் அவரே. டாக்டர் வி.ராகவன் எழுதி, காஞ்சி பரமாசார்யர் அங்கீகரித்து, எம்.எஸ். சுப்புலக்ஷ்மி ஐ.நா சபையில் 1966ல் பாடி உலகப் புகழ் பெற்ற “மைத்ரீம் பஜத” பாடலுக்கும் இசை அமைத்தவர் வஸந்த் தேஸாய்தான். நமது பாரம்பரிய இசையில் பிடிப்புள்ளவர், இவர் இசையில் மலர்ந்த “கன ஶ்யாம ஸுந்தரா” என்ற மராத்திப் பாடல் ( படம்: அமர் பூபாலி, 1951) முன்பு தமிழ் நாட்டிலும் பிரசித்த மாயிருந்தது. மிக நல்ல மனிதர். இவர் வீடு ஒரு ஆசிரமம் போல இருக்கும். காசு, பணம் பற்றி அலட்டிக்கொள்ளாதவர். சினிமா உலகில் இருந்தும் நல்லவராக இருந்தவர்.

    ‘ஹஸ்தே ஹுவே நிக்லே தம்” என்று இசையமைத்தார். ஆனால் பாவம். கஷ்டமான முறையில் இறந்தார். லிஃப்டில் ஏறிச்செல்லும் போது சங்கிலி துண்டிக்கப் பட்டு, லிஃப்ட் கீழே விழுந்து மோதியதில் இவர் உயிர் நீத்தார். இது எங்களுக்கு மிகவும் மனத்தைக் கலக்கிய ஷாக் விஷயம். ஒரு நல்ல மனிதருக்கு இப்படி நேர்ந்தை இன்னமும் ஜிரணிக்க முடியவில்லை. மாலிக் ஏன் இப்படிச் செய்தார் என்பது புரியவில்லை!
    அவருடைய இசை- இது போன்ற பாடல்கள். ஏன் இந்தப் பாடலே அவரை அமர நிலையில் வைக்கும்!

  2. Rama Nanjappa's avatar

    Rama Nanjappa

     /  February 26, 2019

    இங்கு மேலே குறிப்பிட்ட ஸம்ஸ்க்ருத ஶ்லோகத்தில் முதல் வரியில்.
    “வினா தைன்யேன ஜீவனம்” என்று இருக்கவேண்டும்.
    ஹிந்தி தெரிந்தவர்களின் வசதிக்காக முழு ஹிந்திப்பாடலை கீழே தருகிறேன்:

    ऐ मालिक तेरे बन्दे हम
    ऐसे हों हमारे करम
    नेकी पर चलें और बदी से टलें
    ताकि हंसते हुए निकले दम

    ये अंधेरा घना छा रहा
    तेरा इंसान घबरा रहा
    हो रहा बेखबर, कुछ न आता नज़र
    सुख का सूरज छुपा जा रहा
    है तेरी रोशनी में जो दम
    तो अमावस को कर दे पूनम
    नेकी पर…

    जब ज़ुल्मों का हो सामना
    तब तू ही हमें थामना
    वो बुराई करें, हम भलाई भरें
    नहीं बदले की हो कामना
    बढ़ उठे प्यार का हर कदम
    और मिटे बैर का ये भरम
    नेकी पर…

    बड़ा कमज़ोर है आदमी
    अभी लाखों हैं इसमें कमी
    पर तू जो खड़ा, है दयालू बड़ा
    तेरी किरपा से धरती थमी
    दिया तूने हमें जब जनम
    तू ही झेलेगा हम सबके ग़म
    नेकी पर…

  3. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  February 26, 2019

    சூப்பர். எனக்கு ஹிந்தி வடிவம் கிடைக்கவில்லை. இப்போது தாங்கள் தந்து விட்டீர்கள். அது மட்டுமல்ல, விளக்கினால் நீண்டு விடும் என்பது பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீள நீள அதிக விஷயங்கள் தமிழ் அன்பர்களுக்குக் கிடைக்கும். ஏராளமான விஷயங்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள் தந்துள்ள ஹிந்திப் பாடல்களைக் கேட்க ஆசை. அந்த தொடுப்புகளைக் கண்டு கேட்பேன். பரத் வியாஸ் பற்றிய தகவல்கள் நெஞ்சை உருக்குபவை. இப்படி பல நல்லவர்களுக்கான இறுதி தருணம் மோசமானவையாக இருப்பதைக் கண்டு பல முறை நான் கலங்கி இருக்கிறேன். குறிப்பாகச் சொல்லப் போனால் ஆலயப் பாதுகாப்பிற்காக தன் சகலத்தையும் அர்ப்பணம் செய்த எம்.ராமசாமி அவர்கள் ஒரு கார் விபத்தில் மரண்மடைந்தார். லங்காவில் (SriLanka)இருந்த போது ஒரு நாள் மாலை நேரம் ஹிந்து பத்திரிகையைப் புரட்டினேன். அதில் ஒரு சிறிய செய்தியாக இது வந்திருந்தது. ஒன்றும் ஓடவில்லை. ஒரு மகத்தான நல்லவருக்கு இப்படி ஒரு விபத்தா? ஆச்சரியம் தான்! நிறைய எழுதுங்கள். நாகராஜன்

  4. Rama Nanjappa's avatar

    Rama Nanjappa

     /  February 26, 2019

    லிஃப்டில் மாட்டிக்கொண்டது இசை இயக்குனர் வஸன்த் தேஸாய்.

    இந்தப் பாடலின் கருத்துக்களைப் பற்றி மேலும் சில குறிப்புக்கள் தருகிறேன்.
    1.ஐசே ஹோ ஹமாரே கரம்: எங்கள் கைகள் தீயவற்றிலிருந்து விலகி, நல்லசெயலிலேயே ஈடுபடட்டும்.
    இது பொருள் பொதிந்த வரி. மனம், புத்தி சரியாக இல்லையெனில் கை, கால்கள் மட்டும் எப்படி நல்ல வழியில் செல்லும்? ஆக இதன் பொருள் நம் அந்தக்கரணம் முழுதும் தூயதாக இருந்து நம்மை நல்ல வழியில் இட்டுச் செல்லவேண்டும் என்பதே. இதையே ,
    “ஓம் பத்ரம் கர்ணேபி: ஶ்ருணுயாம தேவா:
    பத்ரம் பஶ்யே மாக்ஷபிர் யஜத்ரா:….”
    என்று வரும் உபனிஷத ஶான்தி மந்திரத்தில் பார்க்கிறோம்.
    அப்பர் ஸ்வாமிகள் தேவாரத்தில் வரும் திருஅங்க மாலையில் ‘தலையே நீ வணங்காய்” என்று தொடங்கி ஒவ்வொரு அங்கத்தையும் இறைபணியில்-நற்செயலில் ஈடுபடுத்தும் வழியைச் சொல்கிறார்.

    2.ஏ அந்தேரா கனா சா ரஹா: இருள் எங்கும் கவ்விப் படர்கிறது.
    ஹிந்து மதத்தில் இருள் அறியாமைக்கு அறிகுறியாக கொள்ளப்படுகிறது. இந்த அறியாமையே பயத்தின் மூலம். ஞானம் ( கடவுளைப்பற்றிய, ஆன்மீக அனுபவ அறிவு) ஒளியாகும். இதுவே அசல் சூர்யன். நமது மிக முக்கியமான காயத்ரி மந்த்ரம் இந்த அறிவு ஒளியையே போற்றுகிறது.
    “தமஸோ மா ஜ்யோதிர்கமய ” என்பது பிரசித்திபெற்ற வேதப் பிரார்த்தனை.
    ஜோதியே சுடரே என்று நாம் இறைவனை விளிக்கிறோம். சம்பந்தர், மாணிக்கவாசகர்,ராமலிங்க வள்ளலார் போன்றோர் இறை ஜோதியில் ஒன்றினர்.
    * தங்கள் ஆத்மாவை அறியாது திரிபவர்கள் ஒளியற்ற உலகங்களில் உழல்வார்கள் என்பது ஈஶ உபனிஷதம்.
    அசூர்ய நாம தே லோகா அந்தேன தமஸா ஆவ்ருதா
    ஆக, இருள், ஒளி ஆகியவற்றுக்கு ஆழ்ந்த பொருள் உண்டு.
    3.தேரீ ரோஷனீ மே ஜோ தம்: உன்னுடைய ஒளிக்குதான் எத்தனை சக்தி!
    இறைவன் முழுதும் ஒளிஸ்வரூபமானவன். முருகன் பாதம் “சத கோடி சூரியர்களின்” உதயத்திற்கு நிகரானது என்பது அருணகிரியார் வாக்கு. சூரியன் உலக இருளை நீக்குவதுபோல இறை அருள் மன இருளை நீக்கிவிடும்!
    4. ஓ அமாவஸ் கோ கர்தே பூனம்: அது அமாவாசையை பவுர்ணமியாகச் செய்துவிடும்!
    அபிராமி பட்டர் வரலாற்றை அறிந்தவர்கள் அமாவாசை பவுர்ணமியாக மாறியது உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பதை அறிவார்கள்!
    5. ஜப் ஜுல்மோ(ன்) கா ஹோஸாம்னா………
    எங்களுக்கு எதிராக தீமை செய்யும்போது, நீயே எங்கள் கைகளை நிதானப்படுத்து. பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் வராமலிருக்கட்டும், தீமைகளையும் நன்மையாகவே எடுத்துக்கொள்வோம்….
    இது ஆன்மீக வாழ்வின் உயர்ந்த லட்சியம். பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே என்கிறோம்.
    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்துவிடல்
    என்பது குறள்! அஷ்டாங்க யோகத்தில் முதல் படியாக வரும் யம, நியமங்கள் அஹிம்ஸை, வரும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றையே போதிக்கின்றன.
    6. படா கம்ஃஜோர் ஹை ஆத்மி
    அபி லாகோ(ன்) ஹை இஸ் மே கமீ….
    மனிதன் எவ்வளவு வலிவற்றவர்களாக இருக்கிறோம், அதில் எவ்வளவு குறைகள்:
    இது நமது ஆன்மீகப் பெரியவர்கள் நமக்குப் புகட்டும் பாடம், தேவார திருவாசகம், திருப்புகழ் பிற ஸம்ஸ்கிருத நீதி, பக்தி நூல்கள் ஆகியவை நமது வலிவின்மையையும், கீழ்மையையும் நினைவு படுத்துகின்றன. இவற்றைச் சரிசெய்வது இறை நினைவும் இறை பணியும்தான். இதையே பரத் வ்யாஸ் இங்கு சொல்கிறார்:
    பர் தும் ஜோ கடா ஔர் தயாலு படா
    தேரி கிர்பா சே தர்தி தமி
    நாம் நமது முயற்சியால் கடவுளின் க்ருபைக்குப் பாத்திரமாவதில்லை. க்ருபை அவரது இயல்பு. ( க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் ) அருள் அவரது தொழில். அதனால் நாம் பிழைத்திருக்கிறோம். இந்த பூமி நிலைத்திருக்கிறது.
    7. தியா தூ நே ஹமே ஜப் ஜனம்
    து ஹீ ஜேலேங்கே ஹம் ஸப் கே கம்
    நீதானே எங்களைத் தோற்றுவித்தாய்
    எங்கள் கஷ்டங்களையும் நீ தானே சுமப்பாய்!
    கடவுள்மேல் பாரத்தைப் போடு என்பார்கள் பெரியோர்கள். ரயிலில் பிரயாணம் செய்யும் ஒருவன் தன் மூட்டையை தோளிலேயே சுமப்பானா? கீழே தானே இறக்கி வைப்பான்? அதுபோல் நீயும் உன் கவலைச் சுமையை இறைவனின் பாதத்தில் இறக்கி வை என்பார் ஸ்ரீ ரமணர். எல்லாம் அவன் செயல், ‘ நன்றே செய்வாய் பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே, அடித்தாலும் நீயே, அணைத்தாலும் நீயே பிடித்தேன் உன் பொற்பாதப் பேறு என்பது பரம ஞானிகளின் நிலை, ஆனால் நம் போன்ற சாதாரண நிலையிலிருப்பவர்கள் கஷ்டத்திலிருந்து விடுபட கடவுளையே நாடவேண்டும். இத்தகையவர்கள் ‘ஆர்த்தி’ பக்தர்கள் என்பது கீதை. ‘எல்லாவற்றையும் விட்டு என் ஒருவனையே சரணடை, கவலைப் படாதே” என்பது கீதையில் பகவான் அருள் மொழி.
    “பிழையே பொறுத்துன் இரு தாளில் உற்ற
    பெரு வாழ்வு பற்ற அருள்வாயே” என்பது அருணகிரி நாதரின் வேண்டுகோள்.
    ஆக இத்தனை கருத்துக்களை உள்ளடக்கியது இப்பாடல். கல்வியில் சிறந்த பெரியோர்களும், ஆன்மீக அனுபவம் உள்ளவர்களும் இன்னும் விளக்கம் தருவார்கள்.

  5. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  February 27, 2019

    சூப்பர்! இதற்கு மேலும் என்ன ‘பண்டித விளக்கம்’ வேண்டும்! ஒரிஜினல் கட்டுரையை விட விளக்கம் நன்றாக இருக்கிறது. HATS OFF TO YOU
    nagarajan bangalore

Leave a comment