கத்தி முனை உன் பக்கம், கைப்பிடி எதிர்ப்பக்கம் இருக்கட்டும் (Post No.7920)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7920

Date uploaded in London – – – 4 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கத்தி முனை உன் பக்கமும், கைப்பிடி எதிரிலிருப்பவரிடமும் இருக்க வேண்டும்!

ச.நாகராஜன்

ஸ்வாமி துரியானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்களுள் ஒருவர்.

அவரின் வாழ்க்கைச் சரிதம் அற்புதமான ஒன்று. சுவையான சம்பவங்கள் நிறைந்தது.

அதில் சில சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.

ஹரிநாத் சட்டோபாத்யாயா கல்கத்தாவின் வட பகுதியில் 1863, ஜனவரி 3-ஆம் தேதி பிறந்தார். அவருக்கு மூன்று வயது ஆகும் போது அவரின் தாயார் மறைந்தார். 12 வயதில் அவர் தந்தையை இழந்தார். பின்னர் அண்ணன், மன்னி ஆதரவில் வளர்ந்து வந்தார்.

பதிமூன்று அல்லது பதிநான்கு வயதிருக்கும், ஒரு நாள் அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை கல்கத்தாவில் தீனநாத் பாசுவின் வீட்டில் சந்தித்தார்.

அந்த தரிசனம் அவரை ஈர்த்து ராமகிருஷ்ண பரமஹம்ஸருடன்  ஒன்றச் செய்தது.

அவர் பின்னாளில் ஸ்வாமி துரியானந்தர் ஆனார்.

59 வயது வாழ்ந்த ஸ்வாமி துரியானந்தர் பல செயற்கரிய செயல்களை ஆற்றி கல்கத்தாவில் 21-7-1922 அன்று மாலை 6.45 மணிக்கு நிர்வாண நிலையை எய்தினார்.

அதற்கு முதல் நால் ஸ்வாமிஜி தனது அருகிலிருந்தவர்களிடம், “ நாளை தான் எனக்கு கடைசி தினம்” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருந்தார்.

அதன் படியே நடந்தது!

ஸ்வாமி விவேகானந்தர் மேற்கில் வெற்றி யாத்திரையை முடித்துக் கொண்டு 1897ஆம் வருட ஆரம்பத்தில் கல்கத்தா திரும்பினார். 1897, மே மாதம் முதல் நாள் அவர் ராமகிருஷ்ண மிஷனைத் துவங்கினார்.

ஸ்வாமி துரியானந்தர் விவேகானந்தருடன் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார்.

தவ வாழ்க்கை வாழ்வதிலேயே அவருக்கு நாட்டம் இருந்தது.

ஒரு நாள், ஸ்வாமி விவேகானந்தர் துரியானந்தரை நோக்கி, “பரமஹம்ஸரின் பணிக்காக என் இறுதி வரை ஒவ்வொரு துளியாக என்னை நான் அர்ப்பணித்துக் கொண்டிருப்பதை நீ பார்க்கவில்லையா? அதை வெறுமனே நீ பார்த்துக்  கொண்டே இருப்பாயா? எனது சுமையைச் சற்று இறக்கி விட மாட்டாயா?” என்று கேட்டார்.

துரியானந்தர் மனம் உருகினார்.

விவேகானந்தர் கூறிய படி 1899இல் ஜூன் மாதம் அமெரிக்கா நோக்கிப் பயணமானார். அங்கு பெரும் பணி ஆற்றினார்.

அமெரிக்கா செல்லும் முன்னர் சகோதரி நிவேதிதையை நோக்கி துரியானந்தர், “எனக்கு மேலை நாட்டு பழக்க வழக்கங்கள் தெரியாதே! அது பற்றிக் கொஞ்சம் சொல்லக் கூடாதா” என்றார்.

நிவேதிதை அவரை நோக்கி, “ஐயனே! எப்பொழுதெல்லாம் நீங்கள் ஒருவருக்கு எதையேனும் கொடுக்க முற்படுகிறீர்களோ அப்போதெல்லாம் வசதியற்ற, விரும்பத்தகாத பக்கங்களை உங்கள் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். கத்தியின் கூர்மையான முனை இருக்கும் பக்கத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு கைப்பிடியை எதிரிலிருப்பவரிடம் கொடுக்க வேண்டும், அவ்வளவு தான்!” என்றார்.

அதன்படியே அவர் அமெரிக்காவில் சீடர்களுக்கு ஒவ்வொரு கணமும் தன் வசதியை அறவே துறந்து விட்டு அவர்களின் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்தும் செலுத்தினார்.

சின்னச் சின்ன பழக்கங்களையும் அவர் மிருதுவாக அமெரிக்க சீடர்களுக்குச் சொல்லித் தந்தார்.

ஒரு முறை சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு பெண்மணி அவரது வேதாந்த வகுப்புகளுக்கு ஆர்வமுடன் வந்து கொண்டிருந்தார். அந்தப் பெண்மணியின் கணவனுக்கோ இது சற்றும் பிடிக்கவில்லை.

இதை அறிந்து கொண்ட துரியானந்தர் அவரிடம், “ ஒரு மனைவியானவள் கணவனின் விருப்பப்படி அவருக்கு அடங்கி நடந்து கொள்ள வேண்டும். அடிக்கடி இங்கு வர வேண்டாம். இங்கு என்ன கற்றுக் கொள்கிறாய் என்பதை கணவனிடம் கூறு. தேவியை பிரார்த்தனை செய். எல்லாம் சரியாகும்” என்று அறிவுறுத்தினார்.

ஆனால் கணவனுக்கோ மனைவி துரியானந்தர் வகுப்புகளுக்கு வருவது பிடிக்கவே இல்லை.

ஒருநாள் துரியானந்தர் அந்தப் பெண்மணியிடம், “உன் கணவனை நான் பார்க்க வேண்டுமே” என்றார்.

“ஐயையோ! அது மட்டும் வேண்டாம்” என்று அவர் அலறினார்.

ஆனால் துரியானந்தர் ஒரு நாள் அவர் இல்லம் சென்றார். அவரது கணவனைப் பார்த்து கைகுலுக்கினார்.

என்ன ஆச்சரியம்! அந்த ஒரே கைகுலுக்கலுடன் கணவனின் வெறுப்பு மறைந்தது. மனைவி வழக்கம் போல வேதாந்த சொஸைடிக்கு வரலானார்.

ஒவ்வொருவரின் மனப்பக்குவம், பழக்க வழக்கத்திற்குத் தக்கபடி அறிவுரை கூறுவது அவர் பழக்கம்.

ஒரு பெண்மணிக்கு அதீத உளவியலில் ஆர்வம் அதிகம். அவர் ஆவிகளுடன் பேசும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

அவரது விசேஷ திறமை ஆடோமேடிக் ரைட்டிங் எனப்படும் ஆவி கைகளின் வழியே எழுதும் முறையில் விகசித்தது.

சிறிது நேரம் ஓய்வாக இருந்த பின்னர் அவர் கைகளில் இருக்கும் பென்சில் தானே பேப்பரின் மீது எழுத ஆரம்பிக்கும்.

ஒரு நாள் இதைப் பார்த்த துரியானந்தர் அவரிடம், “ என்ன முட்டாள்தனம்! பிசாசுகளின் கட்டுப்பாட்டில் நீ இருக்க விரும்புகிறாயா, என்ன? இந்த முட்டாள்தனத்தை அடியோடு விடு. நாம் விரும்புவது முக்தி! இந்த  உலகத்தை மட்டுமல்ல, எல்லா உலகங்களையும் கடந்து செல்ல நாம் விரும்புகிறோம். இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள ஏன் நீ விரும்புகிறாய்? அவர்களை அமைதியுடன் இருக்க விடு. இதெல்லாம் மாயையே! மாயையை விடு. சுதந்திரமாக இரு” என்றார்.

அன்றுடன் அந்தப் பெண்மணி தன் ஆவி உலகத் தொடர்பை விட்டார்.

இன்னொரு பெண்மணி சமைக்கும் போது உப்பு சரியாகப் போட்டிருக்கிறோமா என்பதைச் சரி பார்க்க உணவில் ஒரு சிறிய பகுதியை எடுத்து சுவைத்துப் பார்த்தார்.

இதைக் கவனித்த துரியானந்தர் அவரிடம் சென்று, “சமைக்கும் போது உணவை ருசி பார்ப்பது  இந்தியாவில் வழக்கமே இல்லை. ஏனெனில் அது சமைக்கப்பட்டவுடன் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நமது குடும்பத்திற்காக நாம் சமைக்கவில்லை. இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகத் தான் நாம் சமைக்கிறோம். குளித்து, ஆடை அணிந்து இறைவனைத் துதித்த பின்னரே சமையலறைக்குள் நுழைவது இந்தியரின் பழக்கம்” என்றார்.

ஒவ்வொரு சிறு செயலையும் அவர் தன் மேலை நாட்டு சீடர்களுக்கு மிருதுவான குரலில் அன்பைக் குழைத்துக் கற்றுத் தந்தார்.

தினந்தோறும் காலை எழுந்தவுடன் பகவத்கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை அவர் ஓதுவார்; பின்னர் தான் காலைச் சிற்றுண்டியை எடுத்துக் கொள்வார்.

1909ஆம் ஆண்டு கங்கைக் கரையோரம் இருந்த நகோல் என்ற இடத்திற்கு அவர் சென்றார். 1910ஆம் ஆண்டில் சில மாதங்கள் வரை அங்கு இருந்தார். ஹரித்வாரின் கீழே சுமார் 60 மைல் தொலைவில் உள்ள கிராமம் நகோல். அதைச் சுற்றி ஒரே காடுகள். இந்தக் காட்டினுள் நுழைந்து சென்று தவம் செய்வது துரியானந்தரின் வழக்கம்.

ஒரு நாள் பாறை ஒன்றின் மீது அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். கண் விழித்த போது ஜொலிஜொலித்த இரு கண்கள் அவரைப் பார்த்த வண்ணம் இருந்தன. பெரிய புலி ஒன்று அவருக்குச் சற்று தூரத்தில் இருந்தது. முதலில் திடுக்கிட்ட துரியானந்தர் அதைக் கூர்ந்து பார்த்தார். புலி அங்கிருந்து அகன்றது.

என்ன நடந்தது என்று கவலையுடன் கேட்டவர்களிடம் அவர் கூறினார் : “அது என்னைப் பார்த்தது. நானும் நகராமல் அதைப் பார்த்தேன். ஒரு தாவு தாவி அது ஓடி விட்டது” என்றார்.

அவரது வாழ்வில் நடந்த ஏராளமான சம்பவங்களை ஸ்வாமி ரிடஜானந்தா ஸ்வாமி துரியானந்தா என்ற நூலில் எழுதியுள்ளார்.

படித்தால் பரவசமூட்டும் நூல் இது!

Tags –  துரியானந்தர் , கத்தி முனை , உன் பக்கம்

***

PANINI’S AMAZING INFORMATION ON COINS (Post No.7919)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7919

Date uploaded in London – 3 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

HINDUS INVENTED COINS: IT IS IN RIG VEDA AND PANINI- Part 2

Please read the first part posted yesterday and then read the following:

Great Sanskrit scholars like Bhandarkars and Goldstucker place Panini in the 8th century BCE. His words about coins and currencies place him well before Kautilya, author of Artha sastra.

When one looks at Asthtadyayi as a grammar book and Artha sastra as an economics book , it becomes obvious that Panini lived before him. Panini mentioned coins which are not known to Kautilya. So hundreds of years must have elapsed between the two authors.

***

Panini mentioned gold coin ‘Niska’ in three sutras

5-1-20 .It used with purchase, pana/money and masha/measure

5-1-30 purchasing for 2 and 3 nishkams

5-2-119 about a person possessing 100 or 1000 niskas. Upanishads , Mahabarata and later jataka stories also talk about 100 Niskas.

Great Sanskrit scholar Dr D R Bhandarkar adds,

“20,000 paadas offered by king Janaka to a  most learned in Brahmana in the assembly of philosophers were gold coins related to Niskas”.

Panini also mentioned ‘paad’ coin in sutra 5-1-34

‘Pana – paada- maasha -satadyat’

Xxx

Suvarna Coin

In sutra 6-2-55 Panini  hinted at ‘Suvarna’ coin.

In sutra 4-3-153 gold coins are referred to according to commentators.

During Kushana period we came across gold coins with lord Shiva and the king. They were called Kedara and Denarius. Panini mentioned Kedara in 5-2-120

Dinar is used in all Muslim countries even today.

xxx

Satamana

5-1-27 says Satamaana- vimsatika – sahasra – vasanad- an

From Vedic index, it is understood that Satamana weighed 100 rattis.

xxx

Saana

Panini refers to a range of prices and taxes in ‘sanaas’

5-1-35, 5-1-36,7-3-17, 6-2-24, 7-3-10

Mahabharata mentioned a silver saana coin – one eight of a satamana — in Aranyaka parva/vana parva.

 It is calculated as 12 and a half rattis or 22-5 grams.

Xxx

Karsha pana

This word gave us two English words and Tamil words

Karsha = cash= kaasu in Tamil.

Pana = money = Panam in tamil .

Vanika /business man = Phoenicians = Vedic Paanis who were money minded .

Like Napoleon scholded the Britsih a country of businessmen’, Rig Vedic poets also criticised Phoenicians (Panis in RV)

Panini refers to karsha pana . it is punch marked silver coins. Numerous hoards have been found throughout India. They are dated from sixth century BCE .

Sutras 5-1-48; 5-1-34; 5-1-49; 5-1-21, 5-1-27, 5-1-29.

Arthasastra and Jataka stories have numerous references.

Jatakas use it as kahapana; Arthasatra uses it as karshapana and pana.

Word ‘pana’ is used hundreds of times by Kautilya .

It is amazing to see this 2700 year old word is used in Tamil even today; but not in Sangam tamil literature.

Kasu is also not used as coins in Sangam literature. May be later used in the sense of coins and currencies.

Amazing thing about currencies is they are used in units of 1/1 pana , ½  ardha, bhaga, ¼ paada , 1/8 dvi-masha, 1/16ardha masha, 1/32 ardha masha kakani, ardha kakani .

This 2, 4, 8, 16 annas (one rupee) were used till we introduced decimal coinage (100 paise- one rupee)

Xxx

Prati

Prati is used for karsha pana according to Katyayana and Sabha parva of Mahabharata and Nasik cave inscriptions

Xxx

Masha

Sutra 5-1-34

It was both a silver and copper coin. Manu mentioned it 8-135. Silver masha was 1/16th part of karsha pana weight 2 rattis= 3.6 grams

Actual specimens of raupya maasha are discovered in Takshasila

Xxx

Copper coins

Panini refers to  adhyardha masha in sutra 5-1-34.

I.e. One and a half masha . This is a copper coin.

Xxx

Kakani , ardha kakani

Panini does not mention these but Katyayana mentioned them. This may show the time elapsed between Panini and Katyayana

It came into use in post Paninian period. Jatakas mentioned it.

Gold washers in Indus/Sindhu river recovered lot of minute Kakani coins weighing 1-518, 1-132, 1-577, 1-22 grams.

Xxx

Vimsatika

A silver punch marked coin of 20 mashas is Vimsatika.

Actual specimens of vimsatikas are in Lucknow museum

Panini sutra 5-1-32

Trimsatikas are also mentioned by Panini in 5-1-24

Actual specimens are available in silver and copper.

Xxx

Rupa

‘Rupa’ means punch marked symbols , later identified with rupee/ rupya coinage.

A large number of symbols  are found stamped on ancient Karsha pana coins. They have been called punch marked coins and the Greek historian Quintius Curtius  rightly called them ‘signati argenti’

B Durga prasad illustrated about 564 such symbols from a large number of well preserved coins in 1934 according to V S Agrawala .

Panini mentioned rupa in 5-2-120

Ruupaad aahata prasamsayor -yap

Since he used it in singular, we know one symbol was punched at one time.

Rupa itself meant a coin in Mahasupina jataka.

Officers who examined coins and maintained standard are mentioned as Ruupadarsaka and Rupatarka are mentioned by Kautilya and Patanjali respectively.

The information on coinage helps us to fix the chronology authors like Panini, Katyayana and Kautilya. More research is required in this area.

ROMAN COINS
GREEK COINS

tags- Hindus, coins, invention, part-2, Panini, Niska, Satamana, Karshapana.

–SUBHAM–

நிஷ்கா தங்கக் காசுகள் முதல் அலெக்சாண்டர் நாணயம் வரை (Post.7918)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7918

Date uploaded in London – 3 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உலகிலேயே முதல் முதலில் நாணயங்களை பயன்படுத்தியது இந்தியா. ஆனால்  அவை வட்ட வடிவான நாணயங்கள் அல்ல . நீளமாகவும் சதுரமாகவும், மெல்லிய பல வடிவம் கொண்ட தகடுகளாகவும் இருந்தன. வேத காலத்தில் இருந்தவை வட்ட வடிவத்தில் இருந்திருக்கலாம். ஆயினும் நமக்கு ஒரு மாதிரியும் கிடைக்காததால் ஊகிக்க மட்டுமே முடிகிறது பெண்களின் கழுத்தில் தங்கக் காசு மாலை அணிவதை இன்று வரை நாம் பார்க்கிறோம். வேதகாலத்தில் காலத்தில் நிஷ்கா (Nishka or Niska) என்பது கழுத்தில் அணியும் நெக்லசையும் நாணயங்களையும் குறிப்பதால் காசுகள் வட்டவடிவில் இருந்திருக்கும் எனத்தெரிகிறது. முந்திய கட்டுரைகளில் நிஸ்கா பற்றி கண்டோம். இதோ மேலும் சிலா சுவையான விவரங்கள்.

சிந்து-சரஸ்வதி நதி தீரத்தில் நாணயங்கள் கிடைத்ததாக செய்திகள் இல்லை. வேத காலம் என்பது சுமேரிய பாபிலோனிய நாகரீகங்களுக்கு முன்னர் என்பது பலரின் கருத்து. அப்படிப் பார்த்தோமானால் நாம்தான் உலகிற்கு கணிதத்தைக் கற்பித்தது போல நாணய முறையையும் கற்பித்தோம் என்று சொன்னால் தவறில்லை.

உலக நாணய என்சைக்ளோபீடியாக்களை எடுத்துக் படித்தால் அவை அனைத்தும் லிடியர்கள் அல்லது பைர்ஜியர்கள் (Lydians and Phyrgians) தான் முதலில் நாணயங்களை புழக்கத்திற்குக் கொண்டு வந்ததாகப் பகரும். ஏனெனில் அற்புதமான, அழாகான , ஏராளமான நாணயங்கள் துருக்கி (லிடியர் ), கிரேக்க தேசங்களிலிருந்து கிடைத்திருக்கின்றன. அவைகளின் வடிவங்கள் வியப்பூட்டும்! நம் நாட்டில் கிடைத்த வெள்ளி, தாமிரத் தகடுகள்  அவைகளை விட பழமையானது என்றாலும் கவர்ச்சி கிடையாது.

நாம் நாட்டு நாணயங்களில் பல வடிவ முத்திரைகள் குத்தப்பட்டதால் இவர்களை முத்திரைக் காசுகள் (Punch marked coins) என்று அழைக்கிறோம். இவைகளில் 564 வகையான முத்திரைகள் இருப்பதை 1934ம் ஆண்டிலேயே துர்கா பிரசாத் என்பவர் கட்டுரையாக எழுதியுள்ளார்.

***

இன்னொரு முக்கிய விஷயம் தமிழில் உள்ள நாணயம் தொடர்பான எல்லா சொற்களும் இன்று ஸம்ஸ்க்ருத சொற்களாகவே இருக்கின்றன. இது, வடக்கில் இருந்து இங்கே நாணய முறை வந்ததைக் காட்டுகிறது.

கார்ஷா பணம் என்பது காசு-பணம் ஆகியது. நாணயம் என்பதும் சம் ஸ்கிருத சொல்லே. சங்க இலக்கியத்தில் ‘காசு’ என்ற சொல் வட்ட வடிவ  பொற்காசுகளைக் குறித்ததை பல பாடலகளில் காணலாம். புலவர்களுக்கு  பொற்காசுகள் கொடுத்த செய்திகளையும் காணலாம். ஆயினும் இவைகள் நாணயம் என்பதற்கான சான்று இல்லை. மேலும் பண்ட மாற்று (barter trade)  வணிகம் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன.

***

இந்துப் பெண்களுக்கு ஒரு பெரிய வியாதி உண்டு. இன்று வரை அது நீடிக்கிறது . தங்கத்தின் மீது பேராசை. அதில்கூட தவறில்லை. அதை மீண்டும் மீண்டும் உருக்கி புதுப்புது டிசைன்களில் அணியும் வியாதி இன்றுவரை தொடர்கிறது. இது பொற்கொல்லர்கள் தங்கத்தைத் திருடவும் (கூலி சேதாரம்) செய்கூலி வசூலிக்கவும் வகை செய்தது. இதனால் நம்முடைய தங்க நாணயங்கள் அனைத்தும் உருக்கப்பட்டு அழி க்கப்பட்டன.

வெளிநாட்டினர் கொள்ளை அடித்த அல்லது வெளிநாட்டுக்கு நம்மவர்களால் கடத்தப்பட்ட நாணயங்கள் — ஏராளமான தங்க நாணயங்கள் — இன்று பிரிட்டிஷ் மியூசியத்திலும் உலகின் ஏனைய கண்காட்சி சாலைகளிலும் தனியார் பொக்கிஷ அறைகளிலும் உள்ளன.

திருவனந்தபுரம் கோவிலில் கிடைத்த உலக மஹா பொக்கிஷம் பற்றி மேலும் தகவல் கிடைத்தால் புதிய நாணய செய்திகள் கிடைக்கலாம். தற்போது சிவபெருமான் உருவத்துடன் குஷாணர் வெளியிட்ட தங்கக் காசுகளும், குப்தர்கள் லெட்சுமி முதலிய படங்களுடன் வெளியிட்ட தங்க நாணயங்களும் காட்சியில் உள்ளன.

***

நிஷ்கா நாணய அதிசயம்

வேதங்கள், பிராஹ்மண நூல்களுக்குப் பின்னர் நமக்குக் கிடைக்கும் நாணயச் செய்திகள் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயீ’ என்ற இலக்கண நூலில் கிடைக்கிறது. 5-1-19 முதல் 5-1-37 வரையுள்ள சூத்திரங்களில் இவர் நிறைய விஷயங்களை சொல்கிறார். இதையும் உரைகாரர் தரும் விஷயங்களையும் நாடு முழுதும் கிடைத்த நாணயங்களையும் வைத்து ஒரு என்சைக்ளோபீடியா தயாரிக்கலாம். அவ்வளவு விஷயங்கள் .

கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் இல்லாத நாணயங்களை பாணினி குறிப்பிடுவதால் இவர் கி.மு 700 அல்லது அதற்கு முந்தியவர் என்பது உறுதியாகிறது. இவர் முதற்கொண்டு பதஞ்சலி வரையான கால கட்டத்தில் வாழ்ந்த 64 இலக்கண ஆசிரியர் பெயர்களை — அதாவது 2200 ஆண்டுகளுக்கு முந்திய 64 ஆசிரியர் பட்டியலை மாக்ஸ்முல்லர் வெளியிட்டதால் நமக்கு நாணய வரலாறும் கிடைக்கிறது. இவர்கள் காலத்தையும் நிர்ணயிக்க முடிகிறது.

ஏனெனில் பாணினி முதல் பதஞ்சலி வரையுள்ள கால கட்டத்தில் நந்தர்கள் புதிய நாணயக் காட்டுப்பாடுகளை விதித்தது, மௌரியர்கள் அதை மாற்றியது, பதஞ்சலி காலத்தில் புதிய நாணயங்கள் புழங்கியது— என்பதை எல்லாம் வைத்து கால வரிசைப்படுத்த முடிகிறது.

‘பண’, ‘பாத’, ‘மாஷ’ , ‘மாண’  என்பதை எல்லாம் விளக்குகையில் எத்தனை நிஸ்காக்களுக்கு ஒரு பொருள் விலைக்கு வாங்கப்பட்டது  என்பதை பாணினி விளக்குகிறார்.

‘த்வி நிஷ்கம் , த்ரி  நிஷ்கம்’ என்பார் .

5-1-20, 5-1-30

சத சஹராந்தாச்ச நிஷ்காத் – 5-2-119

நிஷ்க சஹஸ்ரிகா  என்பவர் – ஆயிரம் பொற்காசுகள் உடையவர் . இன்று நாம் லட்சாதிபதி , கோடீஸ்வரர் என்று சொல்லுவது போல அந்தக் காலத்தில் இது ஒரு செல்வந்தரைக் குறித்தது போலும். .மஹாபாரதம், பதஞ்சலியின் மஹா பாஷ்யம், காசிகா விருத்தி உரை முதலியன இதை உறுதி செய்கின்றன. உத்தாலக ஆருணி என்பவர் ஸ்வைதாயன என்பவருக்கு நிஷ்க அளித்ததை 3000 ஆண்டுப் பழமையுடைய சதபத பிராஹ்மணம் பகரும் .

புத்த ஜாதகக்  கதைகளிலும் நிறைய குறிப்புகள் உண்டு .

ஜனக மாமன்னன் நடத்திய அகில இந்திய தத்துவ  மாநாட்டிற்கு வந்தவர்களில் யார் மிகவும் கற்றறிந்த பிராஹ்மணனோ அவருக்கு 20,000 ‘பாத’ அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . இது நிஷ்கா தங்க நாணயம் என்று டாக்டர் தி.ஆர். பண்டார்கர் எழுதுகிறார். பாணினி சூத்ரம் 5-1-34 காட்டும் ‘பண – பாத – மாஷா- சதாத்யாத்’ இதற்கு சான்று என்பார் ‘.பண’ என்பதுடன் வருவதால் இது வெறும் தங்கக் காசு அல்ல, நாணய வழக்கில் பயன்படுத்தப்பட்டது என்கிறார். சிலர் இதை வெள்ளிக்காசு என்றும் விளக்குவார்.

மனு ஸ்மிருதியில் 8-137 நிஸ்கா என்பது 4 சுவர்ணம் அல்லது 320 ரத்தி எடை உடையது என்று விளக்கப்படுகிறது . இதிலிருந்து ‘பாத’, ‘நிஷ்கா’ என்பது ஒரு ‘சுவர்ண’ என்று ஊகிக்கப்படுகிறது .

சுவர்ண

சுவர்ண என்பதை பாணினி நேரடியாகக் குறிப்பிடவில்லை. ‘ஹிரண்ய பரிமாணம் தனே’ 6-2-55 சூத்திரத்தில் மறைமுகமாக வருகிறது

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் ‘சுவர்ண’ என்பது ‘கார்சா பணம்’ எடை உடையது = 80 குஞ்ச= 140 தானியம் என்பார் . ஆனால் உலகம் முழுதும் இன்றும்  கூட நாணயத்தின் எடையும், அளவும், அதிலுள்ள உலோக மதிப்பும் மாறிக்கொண்டே வருவதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குஷானர் காலத்தில் ‘கேதார’, ‘தினாரியஸ்’  என்ற பெயர்களில் தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன. . ‘கேதார’ என்ற சொல் 5-2-120ல் வருகிறது.

முத்திரை குத்தப்பட்ட பாணினி கால நாணயம் கிடைக்கவில்லையாயினும் ஏராளமான குறிப்புகள் வருவதால் உண்மையென்றே நம்புகிறோம்.

உறுதியான சான்றுகள் நம்மிடம் இல்லாததால் வெளிநாட்டினர் இதை ஏற்பது இல்லை. கிரேக்க, லிடிய நாணயங்கள் அவர்களுக்கு நல்ல சான்றுகளைத் தருகின்றன .

பதஞ்சலி எழுதிய மஹா பாஷ்யத்தில் தங்கம் கொடுத்து தானியம் வாங்கியது ,குதிரை வாங்கியது பற்றி உதாரணங்கள் தருகிறார். இது கரன்சி எனப்படும் நாணயங்களாக இருக்கலாம்

***

சுவர்ண மாஷக

இவை பற்றியும் இலக்கியத்தில், ஜாதகக் கதைகளில் மட்டும் தகவல் கிடைக்கிறது. தங்கம் வெள்ளி, தாமிரத்தில் இவை இருந்ததை அறிகிறோம்.

***

சதமான

சதமான எனப்படும் வெள்ளி நாணயம் 5-1-27 சூத்திரத்தில் வருகிறது.

‘சதமான விம்சதிக  சஹஸ்ர வசனாத்’

சதபத ப்ராஹ்மணத்தில் சதமானம் என்னும் தங்க நாணயம் பற்றியும் பேசப்படுகிறது.

சதமானம் என்பது 100 ரத்தி எடை கொண்டது.

ஒரு மனிதன் 100 ஆண்டுகள் வாழ்வதால் அவனுக்கு சதமானம்  வெள்ளி, தங்கம் தக்ஷிணை தரவேண்டும் என்று சதபத ப்ராஹ்மணம் கூறும் —

ரஜதம் ஹிரண்யம் தக்ஷிணா நானா ரூப தயா சதமானம் பவது

ஸதாயுர் வை புருஷாஹா  -13-4-2-10

இது 100 யூனிட் கொண்ட வெள்ளி . மனுவும் சதமான என்பது 10 தாரண அல்லது 320 ரத்தி எடை கொண்டது. என்பார்.

***

அலெக்ஸ்சாண்டர் நாணயம்

1953-ம் ஆண்டு புஸ்தகத்தில் டாக்டர் அக்ரவாலா எழுதுகிறார் –

தட்சசீலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயப் புதையலில்  2 அலெக்ஸ்சாண்டர் , ஒரு பிலிப் அரிதேயஸ் காசுடன் வெள்ளி முத்திரை நாணயமும் கிடைத்தன அதன் எடை 177 தானியம் என்று சார் ஜான் மார்ஷல் கூறுகிறார் . .

அங்கு கிடைத்த ‘சலாகா’ நாணயங்கள் வெள்ளி சதமான காசுகள் எனலாம். அவை 100 மான அல்லது குன்றிமணி எடையுடையவை. காத்யாயனர் காலம் வரை இது புழக்கத்தில் இருந்தது அவருடைய வார்த்திகா மூலமும் தெரிகிறது.

***

சாண

‘சாண’ வகை நாணயங்களையும் 5-1-35 எடுத்துக் காட்டாக தருகிறார் .

சரகரும் மருத்துவ நூலில் இதன் எடை  சுவர்ண அல்லது கார்ஷாவில் நாலில் ஒரு பகுதி , அதாவது 20 ரத்தி என்று காட்டுகிறார்.

வெள்ளி சதமானத்தில் எட்டில் ஒரு பகுதி என்று மஹாபாரத அரண்யக / வன பர்வத்தில் வருகிறது.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் போட்ட வரிகளில் ‘சாண’ காசு வருவதை பிற்கால காசிகா உரை குறிப்பிடுகிறது .

***

கார்சா பண

சூத்திரம் 5-1-29ல் இதைக் காண்கிறோம். இது வேத காலத்தில் இல்லை.. ஜாதகக் கதைகளில் நிறைய அடிபடும் நாணயம் இது. ‘பிரதி’ என்ற புதிய பெயரில் மஹா பாரதம் குறிப்பிடும் .

இது பற்றிய முழு விவரங்களையும் எடை முதலியவற்றுடன் அக்ரவாலா ,’ பாணினி கால இந்தியா’ (INDIA AT THE TIME OF PANINI)  என்ற தனது நூலில் வெளியிட்டுள்ளார்.

***

மாஷா என்ற நாணயம் வெள்ளி, தாமிர நாணயம். வரிசைக் கிரமத்தில் ‘பண’, ‘பாத’ ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இது வரும்..

காத்யாயனர் குறிப்பிடும் காக்கணி , அர்த்த காக்கணி  ஆகியவற்றை கௌடில்யரும் குறிப்பிடுவதால் அவர்கள் காலம் நமக்கு தெரிகிறது . பாணினி காலத்தில் இவை இல்லை. ஆகையால் பாணினி மிகவும் முற்காலத்தில் வாழ்ந்ததும் அவருக்கும் காத்யாயனர்க்கும்

நல்ல கால இடைவெளி உண்டு என்பதும் தெளிவாகிறது.

ஒருவருடைய காலத்தைக் கணக்கிட எவ்வளவோ சான்றுகள் இருந்தும் நாணயங்கள்தான் மிகவும் துல்லியமாக காலத்தைக் காட்டுகின்றன.அவை காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றால் மிகையாகாது .

tags — பாணினி, நாணயம், நிஷ்கா, சதமான , காசு, கார்சா பண , பதஞ்சலி

–சுபம்–

ஹிந்தி படப் பாடல்கள் – 25 – கிழக்கும் மேற்கும்! (Post No.7917)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7917

Date uploaded in London – – – 3 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 25 – கிழக்கும் மேற்கும்!

R.Nanjappa

கிழக்கும் மேற்கும்!

பண்பாட்டு, தத்துவ இயல்களில் கீழை நாடுகளும் மேலை நாடுகளும் இரு துருவங்களாகக் கருதப்பட்டு வந்திருக்கின்றன. வாழும் கீழை நாகரிகத்திற்கு சிறந்த பிரதிநிதியாகத் திகழ்வது நமது பாரத நாடு. இவற்றினிடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளைப் பற்றி ஸ்வாமி விவேகானந்தரும் ஸ்ரீ அரவிந்தரும் எழுதியிருக்கிறார்கள். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனும்  East and West In Religion (1933), Eastern Religion and Western Thought (1939)  ஆகிய புத்தகங்களில் இவ்விஷயத்தை அலசியிருக்கிறார். இவற்றிற்கிடையே, இவற்றின் அணுகுமுறைகளில் வேறுபாடு இருந்தாலும், ஒன்றின் வழியில் மற்றதைப் புரிந்துகொள்வது சாத்தியமே என்று எழுதியிருக்கிறார்.இருந்தாலும் இவை  வெவ்வேறானவை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. 

East is East, West is West, and never the twain shall meet என்ற வரி வேதவாக்காகக் கருதப்படுகிறது. 1889ல் இதை எழுதிய ருட்யார்ட் கிப்லிங் (Rudyard Kipling), இத்தோடு நிறுத்தவில்லை! அவர் எழுதியது:

Oh, East is East, and West is West, and never the twain shall meet,
Till Earth and Sky stand presently at God’s great Judgment Seat;
But there is neither East nor West, Border, nor Breed, nor Birth,
When two strong men stand face to face, though they come from the ends of the earth!

— lines 1-4. The Ballad of East and West, 1889

இந்த நீண்ட கவிதையில் ஒரு பட்டாணிய கொள்ளைக்காரனும் ஒரு கர்னலின் மகனும் எதிரிகளாகக் கிளம்புகிறார்கள், ஆனால் மற்றவரின் வீரத்தையும் பண்பையும் கண்டு நண்பர்களாகி விடுகிறார்கள். குணமெனும் குன்றேறி  நின்றவர்களுக்கு, கிழக்காவது, மேற்காவது!

நல்ல பண்புகளும் சிந்தனைகளும் உள்ள மக்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். இத்தகையோரின் பழக்க வழக்கங்கள் வேறுபட்டாலும், ஒழுக்கம் ஒருதன்மைத்தாகவே இருக்கும். Goodness is Universal. அன்னியர் என்பதனாலேயே அவர்கள் விரும்பத் தகாதவர்களாகி விடமாட்டார்கள். மிலேச்சன் என்ற சொல்லை எப்பொழுது இந்தியன் கற்றானோ அப்பொழுதே அவன் மனம் குறுகிவிட்டது என்பார் ஸ்வாமி விவேகானந்தர்!

கிப்லிங், விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் எழுதியபோது, இந்தியா “வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு” பிரிட்டனுக்கு அடிமையாக நின்றது.  அப்போது இந்தியர்களுக்கே தம் பெருமை  தெரியாதிருந்தபோது, அதை எடுத்துச்சொல்வது அவசியமாயிற்று. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா பல விஷயங்களில் மேலை நாட்டு முறைகளை கண்மூடிப்  பின்பற்றத் தொடங்கிவிட்டது! மேலை நாட்டைப் பின்பற்றுவதே நவீனமாவது என்று ஒரு எண்ணம் மனதில் ஆழப் பதிந்துவிட்டது! இன்று பள்ளிப் படிப்பு படித்தவர்களெல்லாம் நடையுடை பாவனைகளில் மேலை நாட்டவரே!

நமது கலை, பண்பாட்டு அம்சங்களில் பலவும் மேலை நாட்டு சிந்தனை முறைகளின் தாக்கத்திற்கு இலக்காகிவிட்டன. முக்கிய பொழுதுபோக்கு அம்சமான சினிமாவும் இதற்கு இலக்கானது ஆச்சரியமல்லவே! பலவிதத்திலும் ஹாலிவுட்டே உலக சினிமாவின் மெக்காவாகத் திகழ்கிறது! 

நமது சினிமா இசைவாணர்கள் மேலை நாட்டு சங்கீதத்திலிருந்து கடன் வாங்கியோ, கொள்ளையடித்தோ  [lifted, plagiarised] வந்திருக்கிறார்கள்! 1950 வாக்கில் கோவா இசைவாணர்கள் வந்ததும் chord, prelude, interlude, counter melody, elaborate orchestration, arrangement போன்ற பல மேலை இசை அம்சங்கள் ஹிந்தி திரையிசையில் கலந்து அதை மேன்மைப் படுத்தின! அதற்கும் முன்பிருத்தே நம் இசைஞர்கள் மேற்கத்திய இசையிலிருந்து எடுத்தாளவும், ஊக்கம் பெறவும் – Inspiration! – செய்தார்கள்!  ஹிந்தியில் நூற்றுக்கணக்கில் இப்படிப்பட்ட பாடல்கள் இருக்கின்றன .அதுவும் 70களுக்குப் பிறகு இது மிகவும் அதிகமாகிவிட்டது. (அசிங்கமும் ஆகிவிட்டது.)

 ஆனால் நாம் பொற்காலத்தில் இப்படி  நடந்த இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்.

தில் தில் ஸே மிலாகர் தேகோ

दिल, दिल से मिला कर देखो
नज़रों में समा कर देखो
अपना तो बना कर देखो
होती है मोहब्बत क्या
दिल, दिल से मिला कर देखो

தில் தில் ஸே மிலா கர் தேகோ

நஃஜ்ரோ(ன்) மே ஸமா கர் தேகோ

அப்னா தோ பனா கர் தேகோ

ஹோதி ஹை மொஹப்பத் க்யா

தில் தில் ஸே மிலா கர் தேகோ

மனதோடு மனது கலந்து பார்

கண்ணொடு கண் கலந்து பார்

உன்னவனாக ஏற்றுக்கொண்டு பார்

அன்பு மலர்கிறதா இல்லையா, பார்


हम प्यार में खो गये ऐसे
परदेस में राही जैसे
उल्फ़त का नशा जब हो ही गया
दामन को छुडा़यें कैसे
नज़रें तो उठाकर देखो
वो तीर चला कर देखो
अपना तो बना कर देखो
होती है मोहब्बत क्या
दिल, दिल ले मिला कर देखो

ஹம் ப்யார் மே கோ கயே ஐஸே

பர்தேஸ் மே ராஹீ ஜைஸே

உல்ஃபத் கா நஷா ஜப் ஹோ ஹீ கயா

தாமன் கோ சுடாயே(ன்கைஸே

நஃஜ்ரே தோ உடாகர் தேகோ

வோ தீர் சலா கர் தேகோ

அப்னா தோ பனா கர் தேகோ

ஹோதீ ஹை மொஹப்பத் க்யா

தில் தில் ஸே……

அன்னிய தேசத்தில் வழி தவறிய பயணி போல

நான் காதலில் தடுமாறுகிறேன்

காதல் என்னும் போதை ஏறியபின்

இடத்தை விட்டுப் போவது எப்படி?

பார்வையைத் தான் சற்று உயர்த்திப் பார்

அந்த பாணத்தைத் தான் செலுத்திப் பார்

உன்னவனாக ஏற்றுக்கொண்டு பார்

அன்பு மலர்கிறதா, இல்லையா பார்!

लहरा के हवा जब आई
फिर डसने लगी तन्हाई
दिल पहुँचा वहाँ दिलबर था जहाँ
लो बजने लगी शहनाई
दिल में तो बैठा कर देखो
कुछ पास तो आकर देखो
अपना तो बना कर देखो
होती है मोहब्बत क्या
दिल, दिल ले मिला कर देखो  

லஹரா கே ஹவா ஜப் ஆயீ

ஃபிர் டஸ்னே லகீ தன்ஹாயீ

தில் பஹுஞ்சா வஹா(ன்) தில்பர் தா ஜஹா(ன்)

லோ பஜ்னே லகீ ஷஹனாயீ

தில் மே தோ பைடாகர் தேகோ

குச் பாஸ் தோ ஆகர் தேகோ

அப்னா தோ பனாகர் தேகோ

ஹோதீ ஹை முஹப்பத் க்யா

தில் தில் ஸே மிலா கர் தேகோ

தென்றல் வீசத் தொடங்கியதும்

தனிமை வாட்டத் தொடங்கியது!

காதலி இருந்த இடத்திற்கே மனது சென்று விட்டது!

பின் மனது கீதமிசைக்கத் தொடங்கி விட்டது!

மனதில் அமர்த்தித் தான் பார்

சற்று அருகில் வந்து தான் பார்

உன்னவனாக எண்ணித் தான் பார்

அன்பு மலர்கிறதா இல்லையா, பார்!

Song: Dil dil se milakar dekho  Film: Mem Sahib Lyricist: Rajinder Krishan

Music: Madan Mohan  Singer: Kishore Kumar [ There is another version with different lyrics sung by Asha Bhonsle.]

எளிய இனிய பாடல், ‘லைட் மூடில்பாடப்பட்டது.

இது 1934ல்  வெளிவந்த Isle of Capri  என்ற பிரபல பாட்டின் மெட்டில் அமைந்தது, இதை பின்னர்

பிரபல ஹாலிவுட் பாடகர்நடிகர் ஃப்ராங்க் ஸினாத்ரா (Frank Sinatra), டீன் மார்டின் (Dean Martin), Bing Crosby இன்னும் பலர் பாடினார்கள்

There is even a nice video clip of Dean Martin singing this song  (dino4ever) In the lyrics, there is a line: “Lady, I’m a rover,

Can you spare a sweet word of love?” which is the theme of this song . But the original song ends differently. It is charming in its own way.

கிஷோரின் குரலைக் கேளுங்கள்! எந்த ஹாலிவுட், கீலிவுட்டும் கிட்ட நெருங்க முடியாது. மதன் மோஹன் மெட்டில் இனிமை அதிகம், கனம் அதிகம். பின்னணி முற்றிலும் வேறு! நம்மை ஆடவைக்கும் இசை!

தண்டீ ஹவா

ठंडी हवा ये चांदनी सुहानी
मेरे दिल सुना कोई कहानी
लम्बी सी एक डगर है जिंदगानी
मेरे दिल सुना कोई कहानी

தண்டீ ஹவா யே சாந்த்னீ ஸுஹானீ

யே மேரே தில் ஸுனா கோயீ கஹானீ

லம்பீ ஸீ ஏக் டகர் ஹை ஃஜிந்தகானீ

யே மேரே தில் ஸுனா கோயீ கஹானீ

இந்தத் தென்றல், இந்த நிலவொளிஆஹா, என்ன அழகு

மனமே, எனக்கு ஏதாவது கதை சொல்!

வாழ்க்கை நீண்ட  ஒரு பாதை

மனமே, எனக்கு ஏதாவது கதை சொல்!

सारे हसीं नज़ारे, सपनो में खो गये
सर रख के आसमां पे परबत भी सो गये
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ताँ
जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंज़िल है अनजानी

ஸாரே ஹஸீன் நஜாரே ஸப்னோ மே கோகயே

ஸர் ரக்கே ஆஸ்மா(ன்) பே பர்பத் பீ ஸோ கயே

மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா(ன்)

ஜிஸ்கோ ஸுன் கர் மிலே சைன் முஜே மேரீ ஜான்

மன்ஃஜில் ஹை அன்ஜானி

இந்த அழகிய காட்சிகள்எல்லாம் கனவில் மூழ்கிவிட்டன!

இந்த பர்வதமும் பார்வானின் மடியில் தலைவைத்து உறங்கிவிட்டது!

மனமே நீ எனக்கு ஒரு கதை சொல்

அதைக்கேட்டு  நான் சாந்தி அடைய வேண்டும்!

நமது இறுதி லட்சியம் தெரியாதே!

ऐसे मैं चल रहा हूँ, पेड़ों की छाँव में
जैसे कोई सितारा, बादल के गाँव में
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ता

जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंज़िल है अनजानी

ஐஸே மை  சல் ரஹா ஹூன் பேடோ(ன்) கீ சாவ்(ன்) மே

ஜைஸே கோயீ ஸிதாரா, பாதல் கே காவ்(ன்) மே

மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா(ன்)

ஜிஸ்கோ ஸுன் கர் மிலே சைன் முஜே மேரீ ஜான்

மன்ஃஜில் ஹை அன்ஜானீ

மரங்களின் நிழலில் நான் நடந்து போகிறேன்

ஏதோ நட்சத்திரம் மேகங்களின் ஊரில் நடப்பது போலிருக்கிறது!

மனமே, கேட்டால்  சாந்தி  பெறவேண்டும்அப்படி ஒரு கதை சொல்!

நாம் போகுமிடம் தெரியாதே!

थोड़ी सी रात बीती, थोड़ी सी रह गयी
खामोश रुत जाने, क्या बात कह गयी
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ताँ
जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंज़िल है अनजानी

தோடீ ஸி ராத் பீதி, தோடீ ஸி ரஹ் கயீ

காமோஷ் ருத் ஜானே, க்யா பாத்  கஹ் கயீ

மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா(ன்)

ஜிஸ்கோ ஸுன் கர் மிலே சைன் முஜே மேரீ ஜான்

மன்ஃஜில் ஹை அன்ஜானீ

இரவு சிறிது கழிந்து விட்டது, இன்னும் சிறிது இருக்கிறது

இந்த பருவம்மவுனமாக எதையோ சொல்லிச் சென்றதே!

மனமே எதாவது ஒரு கதை சொல்

அதைக்கேட்டு சாந்தி பெறவேண்டும்.

நாம் சென்று அடையவேண்டிய இடம் தெரியாதே!

Song: Thandi hawa ye chandni suhani Film: Jhumroo 1961

Lyricist: Majrooh Sultanpuri

Music & Singer: Kishore Kumar.

எத்தனை அருமையான பாடல்! என்ன  அழகான கவிதை! மலை வானத்தில்  தலைவைத்து உறங்கிவிட்டதுஎத்தனை அழகிய கற்பனை!

இது Julius La Rosa பாடிய DOMANI 1955 என்ற பாட்டின் மெட்டில் அமைந்தது. மிக அழகிய பாடல்ஜூலியஸ் ரோஸா நன்றாகவே பாடியிருக்கிறார். கிஷோர் குமார் அனேகமாக முழுதும் ஒரிஜினல் மெட்டையே தொடர்கிறார். அவரது குரல் வளம் பாட்டிற்கு மெருகூட்டுகிறது. தனக்கேயுள்ள சில முத்திரைகளையும் பதித்திருக்கிறார். இரவல் மெட்டுதான், ஆனால் எங்கோ இட்டுச் சென்று விட்டார்!

Kishore has not just lifted the tune, but uplifted the song!

இரண்டு பாடல்களுமே இறுதி அமைப்பில் இந்திய இசை போலவே தெரிகின்றன. பண்டிதர்கள் இவற்றுக்கும் ராகம் சொல்ல முடியும்எல்லாம் அடிப்படையில் ஸ்வரம் தான்! மதுரை மணி ஐயர் ஸ்வரத்தைஇங்கிலிஷ் நோட்என்று பாடுவாரே!

சமீப காலத்தில் மரபு இசை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு தோற்றுவித்த படம் தெலுங்கில் வந்தசங்கராபரணம்“. அதில் இந்தியமேற்கத்திய இசையின் ஒருமைப்பாட்டைப் பற்றி ஒரு சிறிய டயலாக் வரும்.

மேலை நாட்டு அம்சங்களை எடுத்துக்கொள்வது தவறில்லை. எதை, எப்போது, எவ்வளவு, எப்படிஇதில் தான் நமது திறமையையும் பண்பாட்டுப் பிடிப்பையும் காட்டவேண்டும்!

வாழ்க்கை நீண்ட பயணம், வாருங்கள் பாடிச் சிரித்துச் செல்வோம் என்ற பொருளில் ஷகீல் பதாயுனியும்  ஒரு பாட்டில் எழுதியிருக்கிறார்:

लम्बे हैं जीवन के रस्ते –  आओ चले हम गाते हँसते 

லம்பே ஹை ஜீவன் கே ரஸ்தேஆவோ சலே ஹம் காதே ஹஸ்தே!

இப்படிக் கிழக்கும் மேற்கும் இசையில் இணைந்தால் நல்லது தானே! நாமும் டாக்டர் .சிதம்பரநாதன் செட்டியாருடன் சேர்ந்து சொல்லலாம்:

மேல் நாடு வேறு, கீழ் நாடு வேறு-இரண்டும் சேரின் பேறு!

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 25 , கிழக்கு, மேற்கு,

***

கொரானா போன்ற வைரஸ் வராமல் இருக்க ஹிந்து தத்துவம் தேவை! (Post No.7916)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7916

Date uploaded in London – – – 3 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொரானா போன்ற வைரஸ் வராமல் இருக்க ஹிந்து தத்துவம் தேவை!

ச.நாகராஜன்

கொரானா வைரஸ் சீனாவின் லாபரட்டரியில் உருவாக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்களும் நம்புகின்றனர்.

வட கொரியா ஹைட்ரஜன் குண்டு தயாராக இருக்கிறது என்று அடிக்கடி மிரட்டுவது வழக்கமாகி விட்டது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அருமையாகச் சொன்னார் : மூன்றாவது உலக மகா யுத்தம் என்று ஒன்று ஏற்பட்டால் இனி மக்கள் ஒருவருக்கொருவர் பழைய கால முறைப்படி கம்பு, கல் கொண்டு தான் யுத்தம் செய்வர் என்று. ஆம், உலகம் நாசமடைந்து கற்காலத்திற்குத் திரும்பி விடுவோம்.

இந்தச் சூழ்நிலையில் ஆர்னால்ட் டாய்ன்பி சொன்னது போல உலகைக் காப்பாற்ற ஒரே வழி ஹிந்து மதக் கொள்கைகள் தாம்!

அது என்ன ஹிந்து மதக் கொள்கை? சர்வே ஜனா சுகினோ பவந்து!

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.

லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து!  அனைத்து உலகங்களும் சுகத்துடன் இருக்க வேண்டும்.

வரலாறைப் புரட்டிப் பார்ப்போம்.

ஒரு முறை கனௌஜ் மன்னன் வாரணாசி மீது போர் தொடுத்தான். அப்போது அவனது படையைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஆகாயத்தில் பறக்கும் சாதனம் ஒன்றைச் செய்தனர். (இன்றைய விமானம் அல்லது ட்ரோன் போன்ற ஒன்று). அதில் சிறிய தீக்குண்டுகளை ஏற்றி அனுப்பி வாரணாசி மீது பொழியலாம் என்பது அவர்கள் திட்டம்.

அவர்களின் குரு இளைஞர்களின் சாதனத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். சாமான்ய ஜனங்களின் மீதல்லவா இவை விழும்! போருக்குச் சம்பந்தமே இல்லாத அவர்களைக் கொல்வது என்ன நியாயம் என்று கேட்டார். அவர்களுக்கு ஹிந்து மதத்தின் உயர் கொள்கைகளை விளக்கினார். அத்தோடு விட்டு விடாமல் அந்த பறக்கும் சாதனத்தை உடைத்துப் போட்டார்.

கிரேக்க வரலாற்று ஆசிரியனான ஸ்ட்ராபோ (Strapo) சரியாகத் தான் சொன்னார் இப்படி : “ஹிந்து சட்டங்கள் அனைவரின் நலத்திற்குமானவை. அது எப்படியெனில் ஒரு விஷத்தைக் கண்டுபிடித்தவன் அதற்கு மாற்று மருந்தையும் அதைக் கண்டுபிடித்த அதே சமயம் கண்டுபிடிக்கவில்லை எனில் அவனுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும்” என்று அது சொல்கிறது.

“Ultimate good of all is the goal of Hindu laws; so much so, that the inventor of a poison is to be put to death, unless he can invent an antidote at the same time.”

சாஸ்திரம் கூறுவது இதைத் தான் :-

நத்வேகஸ்யாபராதேன ப்ரசங்காத் வஹவோ ஹதா: |

நாயம் மார்கோ ஹி சாதூனாம் த்ருஷ்டிகேஷானுவசித்தநாம் ||

அர்ஜுனன் மஹாபாரதப் போரில் எந்த வித கஷ்டமான சூழ்நிலையிலும் பாசுபாதாஸ்திரத்தை விட அனுமதிக்கப்படவில்லை.

விஞ்ஞான வளர்ச்சியில் உயிரியல் ஆயுதங்கள், ஹைட்ரஜன் குண்டுகள், அணுகுண்டுகள் விஷப் புகைகள் என அபாயகரமான ஆயுதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சீனத் தலைமை, வடகொரியத் தலைமை போன்ற விஷமத்தனமான தலைமை என்னவெல்லாம் செய்யும் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட பயங்கரம்!

ஆகவே தீவிரவாதம், மதவாதம் ஆகியவை இல்லாத, அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்ட ஹிந்து தத்துவங்களை, இன்றைய மற்றும் நாளைய உலகிற்கான தேவை என்பதை அடித்துச் சொல்லலாம், இல்லையா?

tags — கொரானா, வைரஸ், ஹிந்து தத்துவம்

***

SWAMI CROSSWORD 252020 (Post No.7915)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7915

Date uploaded in London – 2 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

1.–8 letters– Woman who laughed at Duryodhana and suffered.

6. –6–the leaves of this tree are given to cows in south India

8. – -4–the region/ desa ruled by Karna of Mahabharata

9. – 5–philosopher cum sage in Brhad Aranyaka and Chandogya Upanishads

10.  –4– daughter or daughter in law or wife in Sanskrit

11. – 5–Vedic woman who got cured of her skin disease by biting soma plant

XXX

DOWN

1. -7 letters- Krishna shifted to this coastal city 800 miles away from Mathura

2. 7 –Kardama Muni’s daughter and Atri’s wife

3. – 4–piece of garment, falling cloth

4. — 5–seated, aged in  Sanskrit

5. — 6–fort, protected place

7.  — 5–under the control in Sanskrit and Tamil

–subham–

HINDUS INVENTED COINS: IT IS IN RIG VEDA AND PANINI- Part 1 (Post No.7914)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7914

Date uploaded in London – 2 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

If you read encyclopaedias they would tell you that Lydians or Phyrgians of Turkey and Greece used coins for the first time. They are wrong. It is true that they have some of the oldest coins in their museums with heads and animals portrayed. An amazing variety of coins with beautiful drawings! If you turn the leaves of book ‘Encyclopedia of Coins’ you would be wonder struck when you see the pictures; well preserved very good specimens are available.

But we  have older coins as thin, small metal bits with five or six symbols punch marked on them from sixth or seventh century BCE. Our coins are very simple and not that attractive. We had beautiful gold coins in Rig Vedic time according to five foreign scholars who translated Rig Veda in European languages. But Hindu women have always been running after gold. There is nothing wrong in it. That is why I wrote scores of articles proving that India is the richest country in the world. I wrote those articles seven years ago. After my posts, Thiruvanathapuram (Kerala) Temple Treasures came to light. That one treasure trove would itself value more than all other treasures in the world!

Hindu women have a serious disease called ‘melting the gold’. They would always accumulate gold and never keep them intact. They would melt them and make new jewellery. Then again, they would melt them and make new jewellery.  Like Hindus updated all their scriptures except the Vedas they kept on doing it. And the biggest beneficiaries were goldsmiths which gave them an opportunity to take some gold and charge the women for remaking. Even today Hindu women have the disease.

To cut it short 99 % of our gold and silver coins were melted. One percent are in British Museum and other museums and private collections. Every time I enter British Museum in London,  I used to look at the Gupta gold coins displayed in the window cases. They have our biggest coin collection. Thanks to them they are still in the form of coins. In India they would have become necklaces.

Talking about neck—laces there is very interesting information in the oldest book in the world ‘Rig Veda’. According to Herman Jacobi and BG Tilak it is 6000 years old. According to Max muller and Wilson gang it is at least 4000 years old. The Rig Veda talks about Nishka. This is in the oldest portion of the Rig Veda. Nishka meant Necklaces and Nishka meant gold coins which were used as currency.

Vedic Index of Names and Subjects by AA Macdonell and A B  Keith has the following information-

“Niska is frequently mentioned in the Rig Veda and later denoting a gold ornament worn as is shown by the two epithets ‘ niska-kantha and niska-griva’ having a gold ornament on the neck.

A Niska of silver is mentioned in the Panchavimsa Brahmana.

As early as Rig Veda, traces are seen of the use of Niskas as a sort of currency, for a singer celebrates the receipt of a hundred Niskas and a hundred steeds.; he could hardly require the Niskas merely  for personal adornment. Later the use of Niskas as currency is quite clear.

RV -2-33-10; 8-47-15  etc.

AV 5-14-3; 7-99-1; 20-131-8

RV 5-19-3;

AV 5-17-14; 15-3

NISKA COINS – RV1-126-2; AV 20-127-3.

In addition, both of them give lot of references from Brahmanas, Srauta Sutras and Upanishads.

And in description of ‘Krsnala seeds, Mana, Satamana etc more details of coins and their weights are given. Before going in to Panini I would give my views-


***

My Comments

1.Umpteen words for gold, reference of golden necklaces and gold coins explode the views that Vedic Hindus were nomads. When you read 1000s of terms from Agriculture, Mathematics and Metallurgy in the Rig Veda, you will know about the foreign jokers and will have a good laugh.

2.Niska jewellery is nothing but coin necklace. Even today it is used by Hindu women as Kasu Malai (In Tamil meaning coin neclace)

3.The word used by Vedic priests in Blessing Mantras (Satamanam Bhavtu) is 100 coins. Satamanam is 100 or 100 fold. When someone gives a gift to the couple they recite Satamanam bhavatu with two fold meaning.

Let the present/gift multiply in hundreds.

Let you live for 100 years. Since Hindus invented the decimal system and value of Zero they use 100 every day in their Prayers. Brahmins repeat it at least seven times in ONE mantra (in the afternoon oblation Pasyema saradas satam……..)

4.Mana- meaning ‘big’, ‘measure’ is in Sumeria and Tamil literature.

5.The biggest number is found in Vedic literature. Mahavir, the 24th Tirtankara of Jain religion was a businessman and a great mathematician; he improved upon the Vedic numbers and Jain literature later than the Vedas, has bigger numbers.

6.All the words regarding MONEY in history are from Sanskrit . Tamils use all those words even today.

Karsha Panam= Kasu, Panam

Cash = Karsha (panam)

Money = Panam , Sanskrit word (M and V are interchangeable in ancient languages)

Phoenicians = Vaniks/businessmen (M and V are interchangeable in ancient languages)

Mana (Sumerian, Tamil and Sanskrit) – in Sata Mana, Pramana , Pari mana and other words mean measure, quantity, size, fold

Rupee/ Rupai = Rupa in Sanskrit and Uruva in Tamilized Sanskrit is the figure on the coin.

Now let us look at Panini :–

The numismatic data of the Ashtadhyayi  show that it is older than the Arthasasttra of Kautilya .

Kautilya wrote a book on economics and panini wrote a book on grammar; but Kautilya did not know about Panini’s Nishka ,Suvarna,

Saana and Satamana!!

Similarly Kautilya  does not know of the significant coin names Vimsatika and Trimstaka   mentioned in the Ashtadhyayi .

We have discovered the actual coins

**

Satamana must have been in circulation at the time of Panini. This coin is mentioned in Vedic literature. Satapata brahmana and two other brahmanas refer to Satamana. The chronological inference is that the period of Satamana currency was confined to few centuries around 8th century BCE. Kauiya lived around 4th century BCE.

Panini knew two types silver coins including Vimsatika ; Kautilya never mentioned it . Nandas of 5 century BCE made new rules regarding coinage. So Panini must have lived before or during Nandas.

My Comments-

 A book on economics did not even know the coinage mentioned by Panini. So, at least a few centuries must have elapsed between the two authors. More over 64 grammarians’ names are listed by Max Muller in the History of Sanskrit literature who lived between Yaska and Patanjali, a period of roughly 800 years. We did not know anything about their works. Panini himself mentioned ten of his predecessors. We couldn’t get a single book written by them.

His sutras about the first nakshatra/ star in the 27 stars of Hindu astronomy/astrology (Kartika and Dhanishta) also point out that he lived before the new system which placed Sravana and then Asvini.

If Panini had lived in 4th century BCE he would have mentioned Buddha or Mahavira. He never mentioned them by name or their creeds. Only guesses are made with certain words.

All these show that Panini lived in 8th century BCE as proved by Goldstucker and great Sanskrit scholars like Dr Bhandarkar.

tags –Panini, Kautilya, Coinage, Nishka, Karshapana, Satamana, Mana, part 1

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பாணினி புஸ்தகத்தில் நாணய மர்மம்! (Post No.7913)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7913

Date uploaded in London – 2 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ரூபா, அணா , பைசா, காசு, பணம், நாணயம் முதலிய எதுவுமே தமிழ் சொற்கள் இல்லை!!!!

உலகம் வியக்கும் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர்  பாணினி . இதன் பெயர் ‘அஷ்டாத்யாயி’ . தமிழில் ‘எட்டு அத்தியாயங்கள்’ என்று மொழி பெயர்க்கலாம். பாணினி  எழுதியதால் ‘பாணினீயம்’ என்றும் செப்புவர் .அவர் பிறந்த லாகூர் இப்போது பாகிஸ்தான் வசம் உள்ளது. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பிறந்த லாகூர் , சாலத்துறை (சால துரா / சாலத்தூர்)   என்று அழைக்கப்பட்டது . சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் லாகூருக்குச் சென்ற சீன யாத்ரீகன் யுவாங் சுவாங் , தான் கேட்ட எல்லா விஷயங்களையும் அப்படியே நமக்கு எழுதி வைத்துள்ளார் .

பாணினி எழுதிய 4000 சூத்திரங்களும் சின்னச் சின்ன வரிகள் . அவற்றின் மூலம் அவர் செப்பியதோ இமய மலை அளவுக்கு !! அவர் எழுதிய எல்லாவற்றையும் அச்சிட்டால் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு போய்விடலாம். திருக்குறள் புஸ்தகத்தை விடச்  சின்னது. ஆனால் ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’. எப்படி குட்டையான, சின்ன பிராஹ்மணப் பையன் வாமனன் , திரிவிக்ரமனாக வளர்ந்து ஓங்கி ‘உலகளந்த உத்தமன்’ ஆனானோ அதுபோல  பாணினி புஸ்தகமும் த்ரிவிக்ரம அவதாரம் எடுக்கும். உலகின் முதல் இலக்கண (Grammar) புஸ்தகம் இதுதான். உலகின் முதல் மொழியியல் (Linguistics)  புஸ்தகமும் இதுதான்.

இரண்டு அதிசய விஷயங்கள் என்னவென்றால் ,

1.இவர் மிளகு பற்றி ஒரு சூத்திரத்தில் சொல்கிறார். ஆகையால் இவருக்கு கேரளா பற்றித் தெரியும். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சேர நாடு இருந்த செய்தி நமக்கு மகிழ்ச்சி தரும் . கோதாவரி நதிக்கரையில் இருந்த அஸ்மாக தேசம் பற்றியும் விளம்புகிறார். ஆப்கானிஸ்தானம் துவங்கி அஸ்ஸாம் மாநிலத்தைத் தொட்டுவிட்டு கேரள மிளகு வரை கதைக்கிறார்.

2.இரண்டாவது அதிசய விஷயம் –ஸம்ஸ்க்ருதம் என்ற சொல்லையே இவர் பயன்படுத்தவில்லை. ஏனெனில் அக்காலத்தில் எல்லோருக்கும் தெரிந்த பாஷை ஒன்றுதான். ஆகையால் பாஷா என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துகிறார். அதைவிட வியப்பான விஷயம் இவர் வேத கால சம்ஸ்க்ருத இலக்கணத்தையும் ஒப்பிட்டுக் கொண்டே போகிறார். இதனால் இவர் வேதகால இலக்கியத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்பது உலக மஹா அறிஞர்களின் துணிபு. பாஷா இலக்கணத்தைச் செப்பிவிட்டு, சந்தஸி (வேத கால கவிதை) இலக்கணத்தைச் செப்புவார். இதனால் முற்கால, நிகழ் கால இலக்கணத்தை ஒப்பிட்டுக் கொண்டே போகலாம்.

தொல்காப்பியர் ‘என்மனார்’ புலவர், ‘என்ப’ , ‘மொழிப’ என்று தமக்கு முந்தி இருந்த இலக்கண கர்த்தாக்கள் சொன்னதை நான் தொகுத்து அளிக்கிறேனே தவிர ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை என்பதை சொல்லாமல் சொல்லுவார். ஆனால் பாணினியோ இது வடக்கத்திய வழக்கு, இது கிழக்கத்திய வழக்கு என்று சுட்டிக்காட்டிக் கொண்டே செல்கிறார். இதனால் இவருக்கு 2000 மைல் அகலத்துக்கு நாட்டில்  வழங்கிய விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. அவருக்கு முன் வாழ்ந்த ஆபிசாலி , சாகடாயான , சாகல்ய, கார்க்ய , காலவ, பாரத்வாஜ , காஸ்யப, சேனக, ஸ்போடாயன , சக்ரவர்மன என்று பத்து இலக்கண வித்தகர் பற்றி உரைக்கிறார்.

உலகின் முதல் சொற்பிறப்பியல் (Etymology)  நூல் (நிருக்தம்) எழுதிய யாஸ்கருக்கும், பாணினீயம் மீது பேருரை – ‘மஹா பாஷ்யம்’ எழுதிய பதஞ்சலிக்கும் இடையே 600 முதல் 800 ஆண்டு இடைவெளி இருந்தது. இந்த கால கட்டத்துக்குள் 64 இலக்கண ஆசிரியர்கள் இருந்தனர். இவர்களுடைய பெயர்ப் பட்டியல் மாக்ஸ்முல்லர் எழுதிய ஸம்ஸ்க்ருத இலக்கிய வரலாறு (பக்கம் 142) நூலில் இருக்கிறது.

****

பாணினீயத்தில்/ அஷ்டாத்யாயியில்  உள்ள நாணயம்- காசு – பணம் பற்றிய செய்திகள், இவரை கௌடில்யருக்கு முன்னவர் என்பதைக் காட்டுகிறது  கௌடில்யர் காலம் கி.மு .நாலாம் நூற்றாண்டு.

பாணினி சொல்லும் நிஷ்கா , சுவர்ண, சாண, சதமான என்ற நாணயங்களை கௌடில்யர் அறியார்.  ஆகையால் இருவருக்கும் இடையே பல நூறு ஆண்டு இடைவெளியாவது இருக்க வேண்டும். பொருளாதார நூல் எழுதிய கௌடில்யருக்கே தெரியாத காசு, பண விஷயத்தை ஒரு இலக்கண ஆசிரியர் குறிப்பிடுகிறார் என்றால் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை நாமே ஊகிக்கலாம்.

மேலும் ‘அஷ்டாத்யாயீ’-யில் காணப்படும் ‘விம்சதிகா’ (20) , த்ரிம்ஸ்தக( 30)’  நாணயங்களை கௌடில்யர் குறிப்பிட்டதே இல்லை இந்த நாணயங்கள் நமக்கு கிடைத்துள்ளதால் இவை உண்மையிலேயே புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம்

பாணினி காலத்தில் வழங்கிய முக்கியக் காசு ‘சதமான’  ஆகும். 100 என்பது இதன் பொருள்.  இதை சதபத பிராமண நூல் குறிப்பிடுகிறது. அந்த நூலின் காலம் கி.மு 2100 முதல் 1000 வரை என்பர் அறிஞர் பெருமக்கள்.

மற்றொரு முக்கிய நாணயம் ‘கார்ஷா பணம்’ . இது 20 மாஷா அல்லது 40 ரத்தி எடை கொண்ட கனமான நாணயம் . இதன் மற்றோரு பெயர் ‘விம்சதிகா (20)’. ஆனால் மௌர்ய கால வெள்ளி நாணயம் 16 மாஷா எடையுடையதே. இதை  அர்த்த சாஸ்திரமும் குறிப்பிடுகிறது. கார்சா பணம் என்னும்  வழக்கமான நாணயமும் அதிக எடையுள்ள விம்சதிக்காவும்  பாணினிக்குத் தெரியும். மனுவும் கார்ஷா பணத்தைக் குறிப்பிடுகிறார். இதன் எடை 32 ரத்தி  ஆக இருக்கக்கூடும் . கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆண்ட நந்த வம்ச ராஜாக்கள்தான், முதல்முதலில் எடைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தனர்.

பிம்பிசாரன் காலத்தில் ராஜக்ருஹத்தில் 20 மாஷா எடையுள்ள கனமான காசு புழக்கத்தில் இருந்தது. பல்வேறு ஜனபதங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது.

இதனால் கௌடில்யருக்கு முந்தையவர் பாணினி என்பது உறுதியாகிறது. நந்த வம்ச மன்னர் காலத்திலோ அதற்கு முன்னரோ அவர் வாழ்ந்திருப்பார்.

****

மருத்துவ நூல்களில் ‘கலிங்கமான’ , ‘மாகத மான’ என்று வேறு வேறு நாணயங்கள் காட்டப்படுகின்றன.

நந்த வம்ச ஆட்சியில் காணப்படும் புதிய அம்சங்கள் :–

20 மாஷா விம்சதிகாவுக்குப் பதில் , 16 மாஷா எடையுள்ள நாணயம் ;

நாணயத்தின் இரு பக்கங்களிலும் முத்திரை குத்தப்படும்;

4 முத்திரைக்குப் பதிலாக 5 முத்திரைகள் குத்தப்படும்;

முந்திய விம்சதிகா-வில் 4 முத்திரைகளே  இருந்தன.

5 முத்திரைகளில் சூரியன் மற்றும் ஆறு கோடுகள் உள்ள ‘ஷடரா’ பொறிக்கப்படும்.

32 ரத்தி நாணயங்கள் மெல்லிதாக பெரிய தட்டு போல இருக்கின்றன.

இதற்குப்பின்னர் மௌரியர் அச்சிட்ட கனமான நாணயங்களில் மயிலும்  பிறையும் காணப்படுகின்றன.

****

நிஷ்கா

இது உலகிலேயே மிகப் பழைய கவிதை நூலான ரிக் வேதத்தில் அடிக்கடி வரும் சொல். பெரும்பாலும் கழுத்தில் அணியும்   ஆபரணங்களைக் குறிக்கும் . ‘நிஷ்க கண்ட’ , ‘நிஷ்க க்ரீவ’ என்ற தங்கக் காசு மாலை அணிந்து சென்றனர் வேதகாலப்  பெண்கள்   .

வேத கால மக்கள் மாடு மேய்க்கும் நாடோடிகள் என்று பரப்பி வந்த அரை வேக்காடுகளின் முகத்திரையைக் கிழிக்கும் துதிகள் இவை – RV.  2-33-10; 8-47-15 மற்றும் பல இடங்கள் .

நிஷ்கா கண்ட , நிஷ்கா க்ரீவ என்ற சொற்களை காணலாம்.

அதர்வ  வேதத்திம் உளது – 5-14-3; 7-99-1; 20-131-8

இவை தங்கக் காசுகள் என்பதை ரிக் வேதம் RV 1-126-2 உறுதிப்படுத்துகிறது.. ஒரு புலவர் தனக்கு 100 நிஷ்காக்களும், 100 குதிரைகளும் பரிசாகக் கிடைத்ததை பாடுகிறார்.

இதற்குப்பின்னர் இவை காசுகளை மட்டுமே குறித்ததை அதர்வ வேதம் 20-127-3 காட்டுகிறது. பிராஹ்மண  நூல்களில்  எண்ணற்ற குறிப்புகள் உள . எக்ளிங் (Eggeling)  , கெல்ட்னர் (Geldner) , ஸிம்மர் (Zimmer) ஆகியோர் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் குறித்துளர் .

பஞ்ச விம்ச பிராஹ்மண நூலில் வெள்ளி நிஷ்காவும் காணப்படுகிறது.

****

ரூபா (Rupa)

ரூபாய் என்று இன்று நாம் வழங்கும் சொல் ‘ரூப= உருவ’ என்ற சொல்லிலிருந்து வந்தது . முத்திரை குத்தப்பட்ட தகட்டு நாணயங்களில் ‘ரூபம்’ (symbols) இருந்ததால் அவை ரூபாய் எனப்பட்டது. கிரேக்க வரலாற்று எழுத்தாளர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதை ‘சிக்னடி அர்ஜெண்டி’ Signeti argenti — வெள்ளி முத்திரை – என்று சொல்லியிருக்கிறார். அவருடைய பெயர் — க்விண்டஸ் கர்டியஸ் Quintus Curtius

ஒரு பெரிய தகட்டை , தேவையான எடைக்கேற்ப வெட்டி எடுத்து முத்திரை அடையாளங்களை குத்தினார்கள் .

பாணினி 5-2-120

ரூபா என்பதை ஒருமையில் பாணினி பயன்படுத்துவதால் அவர் காலத்தில் ஒவ்வொரு  முத்திரையாக  குத்தப்பட்டதை அறியலாம். மஹா சுபின ஜாதகத்தில் ‘ரூபா’ நாணயம் வருகிறது.கௌடில்யர் காலத்தில் நாணய தரக் கட்டுப்பாடும் இருந்தது. ‘ரூப தர்சக’  என்ற அதிகாரியை அர்த்த சாஸ்திரமும், ‘ரூபா தர்க்க’ என்ற அதிகாரியை பதஞ்சலியும் எழுதியுள்ளனர்

ரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் …

tamilandvedas.com › 2017/09/26 › ர…

  1.  

26 Sep 2017 – சேர மன்னர்கள் பிராமணப் புலவர்களுக்கு தங்க நாணயங்களை மழை … ஆக உலகிலேயே நிஷ்கா என்னும் தங்க நாணயத்தை வெளியிட்ட …


வேதத்தில் தங்கமும் … – Swami’s Indology Blog

swamiindology.blogspot.com › blog-…

  1.  

23 Apr 2015 – வேதத்தில் தங்கமும் ரத்தினக் கற்களும்! Compiled by London swaminathan. Date: 23 April 2015; Post No: 1822. Uploaded in London 9-28 காலை. ரிக் வேதம் கி.மு 1700 …


ரத்தினக் கற்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › ரத்தி…

  1.  

16 Nov 2019 – வேதத்தில் ரத்தினக் கற்கள் மற்றும் தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் சில முக்கியமான விஷயங்களை உணர்த்துகின்றன. 1.வேத …

tags – பாணினி, நாணயங்கள், நிஷ்கா, ரூபா , கார்ஷாபண, பணம், காசு



XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

ஹிந்தி படப் பாடல்கள் – 24 – இரு பாட்டுகள் ஒரு சாயல் ! (2) (Post No.7912)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7912

Date uploaded in London – – – 2 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 24 – இரு பாட்டுகள் ஒரு சாயல் ! (2)

R.Nanjappa

இரு பாட்டுகள் -ஒரு சாயல்!-2

இந்திய சங்கீதத்தின் எல்லாப் பிரிவிற்கும் அடிப்படையாக இருப்பது ஏழு ஸ்வரங்களே. “ஸோபில்லு ஸப்த ஸ்வர” – ஏழு தேவதைகள் என்பார் ஸ்ரீ த்யாகராஜர். எல்லா இசைக்கும் இவையே அடிப்படை.

ஸ்வரத்தை அடிப்படையாக வைத்து எழுவது ராகம் என்னும் மாளிகை! -ஸ்வரங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் ஏற்ற-இறக்கங்களுடன் அடுக்குவது..  மேலையிசையில் ராகம் என்று இல்லை, ஆனாலும் அவர்கள் இசையும் ஸ்வரக் கூட்டங்களின்  மீது எழுவதே. ராபர்ட் ப்ரௌனிங்க் எழுதுகிறார் :

Would that the structure brave, the manifold music I build,

Bidding my organ obey, calling its keys to their work,

Claiming each slave of the sound, at a touch, as when Solomon willed

Armies of angels that soar, legions of demons that lurk,

Man, brute, reptile, fly,—alien of end and of aim,

Adverse, each from the other heaven-high, hell-deep removed, —

Should rush into sight at once as he named the ineffable Name,

And pile him a palace straight, to pleasure the princess he loved!

 – Robert Browning: Abt Vogler 1864

ராகமும் பாவமும்

 இப்படி ஸ்வரங்கள் சேரும்போது ஒரு பாவம் மனதில் தோன்றும். ஒவ்வொரு பாவமும் ஒர் உணர்ச்சியை தோற்றுவிக்கும்-அனுபவிக்கச் செய்யும். சில இசைகளைக் கேட்கும் போது நமக்கு ஆடத் தோன்றுகிறதல்லவா!. மிலிடரியில் நடையின்போது பாண்ட் வாசிப்பார்கள்.-நடையில் மிடுக்கேறும்!

இப்படி பாவங்களைக் கருத்தில் கொண்டு தோற்றுவிக்கப்படுவதே ராகம். ஒவ்வொரு ராகமும் ஒரு அல்லது சில பாவங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. நவரசங்களையும் நம் மனதில் தோற்றுவிக்கக் கூடியவை. .ஸ்ரீ ரங்க ராமானுஜ ஐயங்கார் “க்ருதி மணி மாலை” என்ற புத்தகத்தில் ஒவ்வொரு ராகத்தின்  இலக்கணத்தைச் சொல்லி அவை எந்தெந்த பாவங்களை வெளிப்படுத்தும் என்பதையும் சொல்லியிருக்கிறார்.

சினிமாவில் ஒவ்வொரு பாட்டும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்த/ தூண்ட  உருவாக்கப்படுகிறது. இதில்  நடிக நடிகையரின்  அங்க அசைவுகள், முக பாவத்துடன், பாடலின் சொற்களும் இசைக்கு  இயைந்து போகும்போது ரசிகர்கள் மனதில் எதிர்பார்த்த உணர்வு தோன்றும். பாட்டு மனதில் நிற்கும்.

இரண்டு படங்களில் ஒரேவித சூழ்நிலை என்று வந்தால், இரு இசைஞர்கள் ஒரே ராகத்தில் அமைந்த மெட்டுக்களை அமைக்கக் கூடும்!  இது தற்செயலாக நிகழ்வதே தவிர, ஒருவரைப் பார்த்து மற்றவர் செய்தார் எனச் சொல்வதற்கில்லை!

 இப்படி நமது சினிமாவில் நடந்தது! அப்படி வந்த இரு பாடல்களைப் பார்ப்போம். [இந்த ராகத்தில் பல பாடல்கள் இருக்கின்றன. ஆனால் இவ்விரு பாடல்களும் மிகவும் ஒத்துப்போகின்றன-ஒரே நிலையில் பாடப்பட்டவை.]

ரஸிக் பல்மா

रसिक बलमा, हाय दिल क्यों लगाया
तोसे दिल क्यों लगाया, जैसे रोग लगाया
ரசிக் பல்மா, ஹாய் தில் க்யோ(ன்) லகாயா

தோஸே தில் க்யோ(ன்) லகாயா, ஜைஸே ரோக் லகாயா

மயக்கும் அன்பனே, உன்னிடம் நான் ஏன் மனதை வைத்தேன்?

உன்னிடம் நான் ஏன் மனதை வைத்தேன்?

அது நோய் போன்று என்னை வருத்துகிறதே


जब याद आये तिहारी, सूरत वो प्यारी प्यारी
नेहा लगा के हारीतङपूं मैं गम की मारी
रसिक बलमा

ஜப் யாத் ஆயே திஹாரி, ஸூரத் ப்யாரீ ப்யாரீ

நேஹா லகா கே ஹாரீ, தட்பூ(ன்) மை கம் கீ மாரீ

ரஸிக் பல்மா…..

உன் நினைவு வந்து, உன்  அழகிய முகத்தை நினைக்கும்  பொழுது

காதலில் தோற்றது தெரிகிறது,

வருத்தத்தில் உழல்கிறேன் அன்பனே !

ढूंढे हैं पागल नैना, पाए ना इक पल चैना
डसती है उजली रैना, कासे कहूँ मैं बैना
रसिक बलमा…  

டூண்டே ஹை பாகல் நைனா, பாயே நா இக் பல் சைனா

டஸதீ ஹை உஜ்லீ ரைனா, காஸே கஹூ(ன்) மை பைனா

ரஸிக் பல்மா….

இந்தக் கண்கள் உன்னைத் தேடி பைத்தியமாகி விட்டன

ஒரு கணம் கூட நிம்மதி இல்லை!

ஒளி மிக்க இந்தப் பகல் பாம்புக்கடி போல் துன்பம் தருகிறது

எவருடன் இதை நான் பகிர்ந்துகொள்வேன்?

அன்பனே

Song: Rasik balma  Film: Chori Chori 1956  Lyricist: Hasrat Jaipuri

Music: Shankar-Jaikishan   Singer: Lata

சாந்த் ஃபிர் நிக்லா

चाँद फिर निकला, मगर तुम आये
जला फिर मेरा दिल, करुँ क्या मैं हाय
चाँद फिर निकला


சாந்த் ஃபிர் நிக்லா, மகர் தும் ஆயே

ஜலா ஃபிர் மேரா தில், கரூ(ன்) க்யா மை ஹாய்

சாந்த் ஃபிர் நிக்லா…..

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது, ஆனால் நீ வரவில்லை

மனது துன்பத்தில் எரிகிறது, என்ன செய்வேன்

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது……

ये रात कहती है वो दिन गये तेरे
ये जानता है दिल के तुम नहीं मेरे
खड़ी मैं हूँ फिर भी निगाहें बिछाये
मैं क्या करूँ हाय के तुम याद आये
चाँद फिर निकला

யே ராத் கஹதீ ஹை வோ தின் கயே தேரே

யே ஜான்தா  ஹை தில் கே தும் நஹீ மேரே

கடீ மை ஹூ(ன்) ஃபிர் பீ நிகாஹை பிசாயே

மை க்யா கரூ(ன்) ஹாய் தும் யாத் ஆயே

சாந்த் ஃபிர் நிக்லா……

என்னுடைய நல்ல நாட்கள் கழிந்துவிட்டன என்று இந்த இரவு சொல்கிறது

நீ எனக்கில்லை என்பதை நான் அறிவேன்

இருந்தும் உன் வழியைப் பார்த்தவாறே நான் நின்றுகொண்டிருக்கிறேன்

நான் என்ன செய்வேன், உன் நினைவு வருகிறதே!

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது………


सुलगते सीने से धुंआ सा उठता है
लो अब चले आओ के दम घुटता हैं
जला गये तन को बहारों के साये
मैं क्या करुँ हाय के तुम याद आये
चाँद फिर निकला…  

ஸுலக்தே ஸீனே ஸே துவாஸா உட்தா ஹை

லோ அப் சலே ஆவோ கே தம் குட்தா ஹை

ஜலாகயே தன் கோ  பஹாரோ(ன்) கே ஸாயே

மை க்யா கரூ(ன்) ஹாய் கே தும் யாத் ஆயே

சாந்த் ஃபிர் நிக்லா…….

என் எரியும் நெஞ்சிலிருந்து புகைபோல் கிளம்புகிறது,

மூச்சு முட்டுகிறதுநீ திரும்பி வந்துவிடு

இந்த வஸந்த காலத்தின் நிழலும் என் உடலை தகிக்கிறது

நான் என்ன செய்வேன், உன் நினைவு வந்துவிட்டதே !

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது……

Song: Chand phir nikla Film: Paying Guest 1957 Lyricist: Majrooh Sultanpuri

Music: S.D.Burman  Singer: Lata

இரு பாடல்களும் சுத்த கல்யாண் ராகத்திலேயே அமைந்தவை! இந்த ராகம் மாலை 6 மணிமுதல் 9 வரை பாடத்தகுந்தது.  பக்தி, சோகம் melancholy -அதைச் சார்ந்த  ரஸங்களைப் பிரதிபலிப்பது. இதில் பாடகரின் குரலும், சாஹித்யத்தின் தன்மையும் முக்கியமானவை.

 இந்த ராகத்தில் பூப் Bhoop, தேஷ்கர் Deshkar ஆகிய ராகங்களின் சில சாயல் வரும் – கார் காலத்தில் நிலவை லேசாக மறைத்து ஓடும்  மேகம் போல.- touch and go ! [பூப் சாயலால் சோக ரசம் மிகும்].

 சரியாகக் கையாளாவிட்டால் ராகத்தின் தன்மை மாறிவிடும். அதனால் இதை தேர்ந்த பாடகர்கள் விஷயம் தெரிந்த ரசிகர்களிடத்தில் தான் பாடுவார்கள்..

 இந்த இரண்டு பாடல்களும் ஒரே நிலையை-பிரிவை- விவரிப்பவை. முதல் பாடல் மிக எளியது. இரண்டாம் பாடல் ஒரு Classic என்று சொல்லலாம். நிலவு, வசந்தம்- இரண்டும் பிரிவு நிலையில் துன்பம் தருபவை. இதை நாம் நம் இலக்கியத்தில் பார்க்கிறோம். இப்படி இந்தப் பாடல் ஒரு அருமையான கவிதையாக மலர்ந்திருக்கிறது.

சினிமா பாடகியான லதா மங்கேஷ்கர் இவ்வளவு நன்றாக இதைப் பாடியது இசைஞர்களின் திறமைக்குச் சான்று சொல்கிறது.

Yet, one can notice differences in the musical arrangement and interludes.

The music is good, but the lyrics add sufficient depth to make listening not only a pleasure but an experience.

60 ஆண்டுகள் ஆகியும் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள்! Power of melody and lyrics!

 இப்பாடல்களை இரவில் அமைதியான சூழ்நிலையில் கேட்கவேண்டும்..

[ இதே ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்கள்:

– ஜஹா டால் டால் பர்-  சிகந்தர்-ஏ ஆஜம்  1965

-மேரீ முஹப்பத்  ஜவான் ரஹேகீ-  ஜான்வர் 1965

-ஏ ஷாம் கீ தன்ஹாயியா (ன்)  -ஆஹ்  (1953)

( தமிழில்: ஏகாந்தமாம் இம்மாலையில்- அவன்)

[See how many emotions this raag expresses! ]

” When you are happy, you enjoy the music.
 But when you are sad, you understand the lyrics”.

           -Frank Ocean , American singer and songwriter.

[Note: I do not aim at providing a poetic rendering here of the lyrics. That is for poets! I am simply attempting to convey the main sense of the poems, often without the embellishments.]

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 24 –

***

.

கொரானா போன்ற கொலைவெறி! – கிம் ஜாங் உன்!! (Post No.7911)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7911

Date uploaded in London – – – 2 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொரானா போன்ற கொலைவெறி! – கிம் ஜாங் உன்!!

ச.நாகராஜன்

வட கொரியா ஒரு மர்மமான நாடாக கடந்த 70 ஆண்டுகளாக விளங்குகிறது.

கொரானா வைரஸ் போலவே தான் இந்த நாட்டின் அதிபர்களும் மர்ம நபர்கள். ஆட்கொல்லிகள்! மர்மமாக இருக்கும் இவர்கள் பயம், காழ்ப்புணர்ச்சி, கொலைவெறி உள்ளிட்ட ஏராளமான நெகடிவ் குணங்களின் தாயகம்!

கிம் என்பது இவர்களின் குடும்பப் பெயர்

முதலில் 1994 முடிய கிம் இல் சுங் படு கோர தாண்டவம் ஆடி வட கொரியாவை ஒரு வழி செய்தார்! வட கொரிய தொழிலாளர் கட்சியின் தலைவர் இவர்.

இங்கு யாரும் எதையும் சுதந்திரமாகப் பேச முடியாது. எந்தச் செய்தியையாவது வெளி உலகிற்கு யாரேனும் சொன்னால் அவருக்கு மரணதண்டனை தான்!

கிம் இல் சுங்கிற்குப் பிறகு அவர் மகன் கிம் ஜாங் இல் தனது கோர தாண்டவத்தை ஆரம்பித்தார். (பிறப்பு 16-2-1941 மரணம் 17-12-2011)

அவர் இறப்பதற்கு முன் தனது மூன்றாவது மகனான கிம் ஜாங் உன்னைத் தனது வழியிலேயே தயார் செய்தார்.

தாத்தா- மகன் – பேரன் மூன்று பேருமே கொடூர வில்லன்கள்!

இப்போது தினசரி ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கும் கொடூர வில்லன் கிம் ஜாங் உன் ‘கிறுக்குத் தடியன்’, ‘கிறுக்கு வில்லன்’ என்று தமிழக ஊடகங்களில் செல்லமாக அழைக்கப்படுபவர். வமிச பாரம்பரிய ராட்சஸ குணத்தைத் தப்பாமல் தக்க வைத்திருக்கும் ஒரு தடியர் என்று இவரைப் பற்றிய விமரிசனங்கள் வருகின்றன!

37 வயதே ஆன இவருக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்ததாகவும், அவர் இறந்து விட்டதாகவும் அல்லது கவலைக்கிடமாக இருப்பதாகவும் 21, ஏப்ரல் 2020 முதல் செய்தி பரவலாக வருகிறது.

ஆனால் இப்படிப்பட்ட வதந்திகளை இவர்களே பரப்பி விடுவது வழக்கமாதலால் இது உண்மையா பொய்யா என்று யாருக்கும் தெரியவில்லை.

Kim is alive according to May 1, 2020 news in Noth Korean Mass media.

இப்போதிருக்கும் ‘வில்லன்’ உலகையே நான் அழித்து விடுவேன்; என்னிடம் ஹைட்ரஜன் குண்டு இருக்கிறது என்று மிரட்டுவது வழக்கம்!

நாம் பயப்பட்டுத் தானே ஆக வேண்டும்; ‘கிறுக்கன்’ எங்காவது திடீரென்று போட்டு விட்டால்….?

கொரானா போல அல்லவா ஆகி விடும்?!

மலை மீது சொகுசு வாசஸ்தலத்தில் அறுவை சிகிச்சை என்று சொன்னார்கள்.

ஆடம்பரப் பிரியர் இவர்.

2009ல் கிம் ஜாங் உன்னின் தந்தை மெர்சிடிஸ் பென்ஸ் புல்மே கார்டு லிமோசின் கார்கள் இரண்டை வாங்கினார். குண்டு துளைக்காத 21 அடி நீளமுள்ள சொகுசு கார்கள் இவை!

அதைத் தான் ‘கிறுக்கு’ வில்லன் இப்போது தன் கைவசம் உபயோகத்திற்கு வைத்திருக்கிறார்.

கண்டம் விட்டு கண்டம் தாவும் நாசகார ஆயுதங்களையும் ராக்கெட்டுகளையும் தயாரிக்கும் விஞ்ஞானிகளுக்கு இந்த வில்லன் தரும் பரிசு பென்ஸ் கார்கள் தாம்!

ஒரு முறை 160 பென்ஸ் கார்களை தனது அதிகாரிகளுக்கும் வேண்டியவர்களுக்கும் இவர் பரிசாக அளித்தாராம்!

கிம் ஜாங் உன் இறந்து விட்டால்…

உலகத்திற்கு க்ஷேமம் என்று சொல்கிறீர்களா, அதிருக்கட்டும், அடுத்த ஆள் யார் என்பதைப் பற்றிப் பேச வருகிறேன்.

அவரது தங்கை கிம்யோ ஜாங் பொறுப்பேற்கலாம். ஏனெனில் இந்த மங்கை தான் அண்ணனுடன் அடிக்கடி பொது இடங்களில் தோன்றுகிறார். இவர் ஆளும் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

அண்ணன்மார் பற்றி விவரங்கள் எதுவும் வெளி உலகிற்குத் தெரியாது.

அது சரி, கிறுக்கு வில்லன் என்கிறீர்களே, ஏதாவது ஒரு விஷயத்தையாவது சொல்லக் கூடாதா என்கிறீர்களா?

சொல்லலாம், மனதைத் திடப்படுத்திக் கொண்டு படிக்க வேண்டும்.

கிம் ஜாங் உன்னின் சொந்த மாமன் மீது அவருக்கு கோபம் வந்தது. என்ன நடந்தது தெரியுமா?

உயிரோடு வெறிநாய்களிடம் தள்ளி அவைகளை விட்டுக் கடிக்க விட்டார்!

ஹாங்காங்கின் வென் வெய்போ பேப்பர் தரும் தகவல் இது.

4-1-2014 அன்று வந்த செய்தி இது!

ஜாங் சாங் தக் – மாமாவின் பெயர் இது.

அவரை அடிக்கடி கடுமையாக விமரிப்பது வட கொரியாவின் வழக்கம். அவரையும் அவரது ஐந்து பாதுகாவலர்களையும் பிடித்தார் கிம் ஜாங் உன்!முதலில் மாமாவின் உடைகளையும் ஐந்து பாதுகாவலர்களின் உடைகளையும் அவிழ்த்து அவர்களை நிர்வாணமாக்கினார்.

மூன்று நாட்கள் 120 வெறி நாய்களைப் பட்டினி போட்ட கிம் ஜாங் உன், அவைகளை கட்டவிழ்த்து விட்டு அந்த ஆறு பேர்களின் மீது ஏவினார்.

வெறி நாய்கள் கடித்துக் குதறி விட்டன சொந்த மாமனை!

ஒரு மணி நேரம் இந்த கோர சம்பவம் நடந்தது; எல்லாம் முடிந்து விட்டது. இதை நூற்றுக்கணக்கான அதிகாரிகள் வேடிக்கை வேறு பார்த்தனர்.இது இவர் வாழ்வின் ஒரு சம்பவம். ஏனையவை  பற்றி நினைத்தாலே குலை பதறும்!

செய்தியின் ஆங்கில மூலம் இதோ:

04-1-2014

Kim Fed his Uncle alive to 120 Dogs!

Kim Jong Un’s uncle was killed after being sripped naked and fed to a pack of hungry dogs, according to reports in a Chinese state backed newspaper.

North Korea has already described Jang Song-thaek as “despicable human scum, worse than a dog”, but these reports appearing in Hong Kong’s Wen Wi Po newspaper, suggest he may have met his end in the jaws of dogs.

The account describe how Jang Song-thaek and five of his aides were stripped naked and fed to 120 hungry hounds, who had been starved for three days. The whole process lasted an hour, and as they were being eaten, hundreds of officials watched.

*

அது சரி, இந்த ‘கிறுக்கு வில்லனைப்’ பற்றி இப்போது எதற்காக எழுத வேண்டும் என்று கேட்கிறீர்களா?

நியாயமான கேள்வி தான்!

இந்த வட கொரியாவிற்கு இருக்கும் ஒரே நண்பன் சீனா தான்!

சீனா உலக வில்லனாக அமெரிக்க டிரம்ப் முதலாக பல்லோராலும் சித்தரிக்கப்படும் இந்த கொரானா காலத்தில் சீனாவின் நண்பர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்வது நல்லதில்லையா?!

***

tags – கிம் ஜாங் உன், வட கொரியா