தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி152020 (Post No.7910)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7910

Date uploaded in London – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. –5 எழுத்துக்கள்- காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்தப் பெண்ணின் சுயம்வரம் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது.

4. -6 — நரகத்தின் அதிபதி

6. – 5–நாக்கில் வரும்புண்

7. – 6–இது ஒரு ராகம் ; உறவினர்களும் வரளி மஞ்சளு ம் சேர்ந்த ராகம்

9. — 5–இதன் மூலம் எடைக்கு எடை சுவாமிக்கு காணிக்கை செலுத்தலாம்

கீழே

1. — 8 எழுத்துக்கள் – பூதஞ்சேந்தனார் தரும் 40 இனிய பாடல்கள்

2. –6–  பித்தளையில் செம்பு- டன் சேர்க்கப்படும் உலோகம்

3. – 4–வைஷ்ணவர்கள் நெற்றியில் இருக்கும்

8. –2– ருசியான இதிஹாஸப் பெயர்.

5./ — 4– சந்நியாசி போல சவுண்டுள்ள ராகம் /கீழிருந்து மேல் செல்க

5.— 4– பருப்புடன் இது சேர்ந்தால்  சுவையான ரசம் கிடைக்கும்

—– subham —–

DON’T GUESS EVERYTHING! YOU MAY BE WRONG! (Post No.7909)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7909

Date uploaded in London – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

I am translating one folk tale from 1911 Tamil story book.

A  merchant lived in a town in South India. He had a good friend who is stone deaf. Suddenly the merchant fell sick. His friend wanted to visit him .

Deaf man thought , ‘Oh my god I am stone deaf. So I must draw a plan for my conversation now’ .

Since the merchant is very sick, he is going to murmur when I inquire about his health. But I must shout; then only he can hear me.

He framed three questions in his mind;

I will go and sit very near him

1.First I would ask him,

How is your health? Hoe are you feeling now?

He would definitely say,

No, I am not feeling alright. But better than before.

Then I would say,

Oh, I am very glad to hear that.

2.Then I would ask him ‘what is your diet like ?’

Every sick person takes only gruel made up of broken rice. He would certainly say ,

Just a little bit of rice gruel.

Then I will say, please follow it; you would be cured quickly.

3.Finally , I will ask him who is your doctor now. He would give some name.

I must say,

By god’s grace you are with the right person. He will take care of you.

Then I would return home quickly and  happily.

xxx

The deaf man went to his friend’s house as planned. He welcomed him with a smile and offered him a chair. The deaf friend went towards him and sat at the edge of his bed.

1.First question

How is your health? How are you feeling now?

Sick man replied in a very low voice,

Why do you ask me? The temperature has gone up. I am shivering with fever.

Deaf man imagined his answer and said,

‘Oh I am very happy to hear that. By god’s grace it must continue like this’.

Sick friend was taken aback.

2.Second question

Then the deaf man fired his second question-

what is your diet like ?’

Sick man said in anger,

What diet? It is just dust I am having.

It is a phrase in Tamil to say nothing but rubbish.

Immediately the deaf person imagined his reply to be what he expected and said,

‘Please follow it; you would be cured quickly.’

Now the sick man became angrier. He wanted to punch on the face of his friend.

3.Third question

The deaf man rose from the edge of the bed as a sign of leaving in the next minute or so and asked his final question,

Who is your doctor now?

The sick man was dead angry now and so said sarcastically,

Who the doctor is ! who else it can be other than Yama (god of death in Hindu mythology)?

Deaf man carefully remembered  what to say then and said,

‘By god’s grace you are with the right person. He will take care of you’.

The sick man rose from his bed red faced ; but deaf person thought probably he is having some temperature now; I must leave immediately and went out before he got a kick from his friend.

Moral of the story

When you go to an interview for a job or radio or TV channel, if you don’t hear anything properly, please ask the person to repeat. Nothing wrong in it. If it happens more than two or three times, then tell the person to speak loud and clear.

Don’t guess anything; don’t imagine anything.

–subham–

27 நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம் ?- Part 3 (Post No.7908)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7908

Date uploaded in London – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Pleiades பிளையடெஸ் = கார்த்திகை,

Aldebarana ஆல்டிபேரன் = ரோகிணி (அகநாநூறு 86, 136ல் சகடம்)

Betelgeuse பீ டல் ஜியுஸ் = திருவாதிரை

Orion belt மூன்று நட்சத்திரம் = மிருகசீர்ஷம் (மான் தலை)

***

கிருத்திகா (Pleiades)

பாணினி கிருத்திகாவில் துவங்குகிறார் சதபதம் (SATAPATA  BRAHMANA,1000 BCE) இதை பூஇஷ்டா , பஹுளா  என்று அழைக்கும். இதையோ அதையோ பயன்படுத்தலாம் என்பது பாணினி  கருத்து. 

கிருத்திகா வரும் இடங்கள் – பா ( பாணினி) 6-4-158, 4-2-23, 4-3-34.

சதபத பிராஹ்மணம் – 2-1-2-3

கார்த்திகை நட்சத்திரம் பற்றிய சுவையான விஷயம் :–

முருகப் பெருமானை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததை நாம் அறிவோம். பைனாகுலர் வைத்துப் பார்த்தால் 7 நட்சத்திரம் தெரியும். தைத்ரிய ப்ராஹ்மணம்   7 என்று இயம்பும்; அவற்றின் பெயர்களும் உள ; அவையாவன — அம்பா, துலா, நிதத்னி , அப்ரயந்தி , மேகயந்தி , வர்ஷயந்தி, சுபுனிகா.

பிற்கால சம்ஸ்க்ருத இலக்கியங்கள் 6 நட்சத்திரம் என்று உரைக்கும். ஆகையால் “சான்  மாதுரகாஹா” — ஆறு தாய்மார்கள் என்று சொல்லும். இதனால் முருகனுக்கு ஷண்முகம் என்று பெயர்.

எனது கருத்து

இதைக் குறிக்க ஆறுமுகங்களை  சித்திரமாக  வரைந்தனர். ஆனால் உண்மையில் முருகனுக்கு ஒரு முகம்தான் . இதே போல தசரதனுக்கு பத்து ரத்தம் போட்டு சித்திரம் வரைந்திருக்கலாம். நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் பத்து திசைகளிலும் தன்  சக்தியைக் காட்டிய ராவணனுக்கு பத்து தலைகளை வரைந்து விட்டோம். அவனுக்கும் உண்மையில் ஒரு தலைதான். இவை எல்லாம் புராணங்கள் செய்த கூத்து . இன்று சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் , பேண்டம் டார்ஜான் ஆகியோரை சித்தரிப்பது போல பவுராணிகர்கள்  சுவைமிகு கதைகளைச் சொல்லிவிட்டார்கள்.

நாம் அரசியல் கொடிகளை இப்போது வைத்திருப்பது போல , தேர்தல் சின்னங்களை வைத்திருப்பது போல, அந்தக் காலத்தில் , ஒவ்வொரு இனத்தாரும் பாம்பு, குரங்கு, கரடி, கழுகு  முதலிய சின்னங்களை அணிந்தார்கள் ; இவர்களையே நாம் ராமாயணத்தில் நாகர் , வானரர்கள், ஜாம்பவான் , ஜடாயு என்கிறோம் .

***

மிருகசீர்ஷம்

பாணினி  நேரடியாக மிருகசீர்ஷ  நட்சத்திரம்  பெயரைச் சொல்லவில்லை. அது பௌர்ணமி சந்திரனுட ன் சேர்ந்து இருக்கும் நாள் ‘ஆக்ரஹாயினி’ . அதை மூன்று முறை குறிப்பிடுகிறார் – 4-2-22; 4-3-50; 4-4-110;

கடனைத் திருப்பித்தரும் ஒப்பந்த பத்திரத்திலும் இந்தப் பெயர் வருகிறது 4-3-50

***

ஆருத்ரா :–இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் பெயர் ‘ஆர்த்ரக’ .

சங்க இலக்கியப் புலவர் பெயர்களில் புறநானுற்றுப் புலவர் பெயர்—‘கள்ளில் ஆத்திரையனார்’.

***

புனர்வசு நட்சத்திரம்

இந்த நட்சத்திரம் இருக்கும் மண்டலத்தில் 2 நட்சத்திரங்கள் இருப்பது ‘பா’- க்குத் தெரியும். திஷ்ய நட்சத்திரம் சேர்ந்தால் மூன்று ஆகிவிடும். ஓரிடத்தில் ஒருமையில் இன்னொரு இடத்தில் இருமையிலும் சொல்கிறார். மைத்ராயணி, காடக  சம்ஹிதைகளும் இவ்வாறு ஒருமை, இருமையை பயன்படுத்துகின்றன.

***

திஷ்ய நட்சத்திரம்

1-2-63; 4-3-34; 4-4-149

இதனுடன் ‘புஷ்ய, சித்ய நக்ஷத்ரே’ என்றும் 3-1-166 சொல்கிறார்.

இதன் கீழ் பிறந்தவன் திஷ்ய எனப்படுவான்; ஜாதகக் கதைகளில் அடிக்கடி வரும் பெயர்கள் திஸ்ஸ , புஸ்ஸ; அர்த்த சாஸ்திரம் திஷ்யவுக்குப் பதில் புஷ்யவை பயன்படுத்துகிறது .பதஞ்சசலியும்  இதையே விரும்புவதால் ‘புஷ்ய’ என்பது பிற்கால வழக்கு என்று சொல்லலாம் 

***

பல்குணி – இரண்டு நட்சத்திரங்கள் ஆகையால் பா . இவைகளை ‘பல்குன்யவ்’ என்று பன்மையில் அழைக்கிறார் 1-2-60

***

ஹஸ்தம் – பா.  சூத்திரம் 4-3-34

***

சித்திரை நட்சத்திர  பவுர்ணமி சைத்ரி எனப்படும் 4-2-23

***

சுவாதி நட்சத்திரம் 4-3-34

***

விசாகா – இரட்டை நட்சத்திரங்கள்  விசாகா , விசாகே

***

அனுராதா நட்சத்திரம் – அனுஷம் – 4-3-34

***

மூல – 4-3- 28

***

ஆஷாட – ரெண்டு நட்சத்திரங்கள் ந. 4-3-34

***

அபிஜித் நட்சத்திரம் – 4-3-36

+++

ஸ்ராவண நட்சத்திரம் – ஓணம் – காடக சம்ஹிதை இதை ‘அஸ்வத்த’ என்று சொன்னது பாணிணிக்குத் தெரியும் 4-2-5; 4-3-48. ஆனால் பா. ஸ்ராவண என்றார் 4-2-23. அரச மரத்தின் பழங்கள் கீழே விழும் பருவம் என்பதால் இதை இப்படி ‘அஸ்வத்த / அரச மரம்’ என்று பெயரிட்டதாக காசிகா உரை பகரும்.

என் கருத்து

வேதத்திலும் சித்த மருத்துவ நூல்களிலும் நிறைய சொற்கள் இரு பொருள் பட வரும். விஷயம் அறியாத அரை வேக்காடுகள் உளறித்தள்ளும் ; ஆகையால் உரைகளைப் படிக்கவேண்டும். சங்க இலக்கியத்தில் ‘மாண்ட’, ‘செத்த’, ‘இறந்’த என்ற சொற்கள் மரணம் என்ற பொருளில்  வராது . கடந்த , சிறந்த என்ற பொருளில் வரும். காலப்போக்கில் நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அர்த்தம் மாறிக்கொண்டே வரும்.

***

ச்ரவிஷ்டா / தனிஷ்டா /அவிட்டம் – 4-3-34.

எது முதல் நட்சத்திரம்? என்ற நேற்றைய கட்டுரையில் அவிட்டம் பற்றிச் சொல்லிவிட்டேன்.

***

சதபிஷக் நட்சத்திரம் – சதயம் – 4-3-36

***

ப்ரோஷ்டபத – 5-4-120; 1-2-60; 4-2-35 — பூரட்டாதி , உத்திராட்டாதி  ; தைத்ரிய சம்ஹிதையிலும் இது உள்ளது . இதற்கான அதிதேவதையை மக்கள் பக்தியுடன் வணங்குவதை பா  சுட்டிக்காட்டுகிறார்.

நட்சத்திரங்களுக்கு அதி தேவதைகள் உண்டு; அவைகளை வணங்கும் வழக்கம் உண்டு என்பதை 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பா . எழுதிவிட்டார்.

***

ரேவதி நட்சத்திரம் 4-1-146

***

அஸ்வயுஜ் – 4-3-36 அஸ்வினி நட்சத்திரம் ; நாம் இப்போது முதல் நட்சத்திரமாக வைத்து இருக்கிறோம் .

பயிர்களை விதைக்க ஆஸ்வாயுஜி  என்று அழைக்கப்படும் பவுர்ணமி நாள் நல்ல நாள் என்று பா பகர்கிறார் 4-3-45

***

35 பக்கங்களில் இலக்கண புஸ்தகத்தை எழுதிய பாணினி  இவ்வளவு விஷயங்களையும் நமக்கு சொல்கிறார்

காத்யாயனர் எழுதிய ‘வார்த்திகா’ , பதஞ்சலி  எழுதிய ‘மஹா பாஷ்யம்’ என்னும் பேருரை, அதற்குப்பின்னர் பாணினீயத்தை  விளக்க வந்த ‘காசிகா’ உரை ஆகியன கடல் போல விஷயங்களை அள்ளிக் கொடுக்கின்றன. ‘காசிகா’ என்பது வாமன – ஜயாதித்ய என்ற இருவர் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய உரையாகும்

***

Ursa Major= Great Bear =  Sapta Rishi Mandala 

சப்த ரிஷி வழிபாடு

தமிழர்கள் விண்ணில் வடக்கு வானத்தில்  ஒளிவீசும் 7 நட்சத்திரங்களை – ஏழு ரிஷிகளாக வழிபடுவதை சங்க இலக்கிய புலவர் இளநாகனார் நற்றிணைப் பாடல் 231-ல் பாடுகிறார்.

“மை அற விளங்கிய மணி நிற விசும்பில்

கை தொழும் மரபின் எழு மீன் போல”

என்று எளிய தமிழில் சொல்லிவிட்டார் . இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது . இன்றும் பிராமணர்கள்  ஒரு நாளைக்கு மூன்று முறை ஸப்த ரிஷிக்களின் பெயர் சொல்லி ‘’சந்தியா வந்தனம் செய்கின்றனர் . கல்யாணத்தன்று அருந்ததி நட்சத்திரம் பார்க்கும் வழக்கமும் தமிழர் இடையே உளது . அந்த நட்சத்திரம் கற்பின் சின்னம் .

tags – எது முதல் நட்சத்திரம் ?- Part 3

—-Subham —-

ஹிந்தி படப் பாடல்கள் -23- இரு பாட்டுக்கள் – ஒரே சாயல் (1) (Post No.7907)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7907

Date uploaded in London – – – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் -23- இரு பாட்டுக்கள் – ஒரே சாயல் (1)

R. Nanjappa

இரு பாட்டுகள் – ஒரே சாயல்

1966. “மம்தா” என்ற படம் வெளிவந்தது. அதில் ஒரு பாட்டு- “ரஹே நா ரஹே ஹம்”- செம ஹிட் ஆனது. இசைஞர் ரோஷன். பாடல் எழுதியவர் கவி மஜ்ரூஹ் ஸுல்தான்புரி. ஒவ்வொரு ரசிகனின் வாயும் இப்பாட்டை

முணுமுணுத்தது!

இசைஞர் எஸ்.டி. பர்மனும் இப்பாட்டை ரசித்தார். ரோஷனுக்கு ஃபோன் செய்து பாராட்டினார். ரோஷனுக்கு வெட்கமாயிற்று.

” அண்ணா (தாதா), இது என்ன? இது உங்கள் பாட்டின் தழுவல் தான்! நான் என்ன சொந்தமாகச் செய்துவிட்டேன்?

“ஓ அப்படியா?”

“ஆமாம். உங்கள் “தண்டீ ஹவாயே(ன்) என்ற ‘ நௌஜவான்’ படத்துப் பாட்டிலிருந்து தான் இதை ‘காப்பி’ அடித்தேன்
‘” அப்பனே,  இருப்பது எல்லாம் ஏழு ஸ்வரம் தானே! அதையே தானே நாம் எல்லோரும் இப்படி அப்படி திருப்பிப் போட்டு நம் கடையை விரிக்கிறோம்? பின் எது என்னுடையது, எது உன்னுடையது? நீ இந்தப்  பாட்டை நன்றாகவே செய்திருக்கிறாய். அதற்கே இந்தப் பாராட்டு!”

இது கற்பனையல்ல. பர்மன் பாராட்டியதும் ரோஷன் சொன்னதும் உண்மையிலேயே நடந்தவை. அப்போது  பம்பாயில் இசை ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம். அப்போதெல்லாம் இசைஞர்கள் இப்படி ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வார்கள். பர்மனும் ரோஷனும் நண்பர்களே. இசைஞர்களிடையே போட்டி இருந்தது, 

பகைமை இல்லை!

இருந்தாலும் பர்மனிடம் இருந்த பெருந்தன்மையும், ரோஷனிடமிருந்த பணிவும்  பண்புள்ள பெரியவர்களிடம் மட்டுமே நாம் காணக் கூடியது. பெருக்கத்து வேண்டும் பணிவு என்பார்கள்..

[இப்போது ‘இப்படி அப்படி’ திருப்பிப் போடுவதற்கு கம்ப்யூடர்கள் பெரிதும் துணைசெய்கின்றன!]

.

இந்த இரண்டு பாடல்களையும் பார்க்கலாமா?

Thandi Hawayen Lehrake Aaye
Ha Ha Ha, Ha Ha Ha Ha Ha la La La La La, Hm Hm Hm Hm Hm
kaise Bulaaye  

ठंडी हवाएँ, लहरा के आयें
रुत है जवां
तुमको यहाँ, कैसे बुलाएँ
ठंडी हवाएँ…  

தண்டீ ஹவாயே(ன்) லஹராகே  ஆயே(ன்)

ருத் ஹை ஜவா(ன்தும் கோ யஹா(ன்

கைஸே புலாயே(ன்)

தண்டீ ஹவாயே(ன்)..

.

குளிர் தென்றல்அலைஅலையாக வீசுகிறது!.

என்னைச் சூழ்ந்து எல்லாமே இளமையில் பொலிகிறது!

உன்னை இங்கு எப்படி அழைப்பது!

அலையாக வீசும் குளிர் தென்றல்..!..

.

चाँद और तारे, हँसते नज़ारे
मिल के सभी, दिल में सखी, जादू जगाये
ठंडी हवाएँ…  

சாந்த் ஔர் தாரே, (ன்)ஸ்தே நஃஜாரே

மில் கே ஸபீ, தில் மே ஸகீ ஜாதூ ஜகாயே

தண்டீ ஹவாயே(ன்)….

 நிலவும் தாரகைகளும்மகிழ்ச்சியில் பொங்கும் காட்சிகள்

  ஸகியே! இவை அனைத்தும் சேர்ந்து மனதில் ஜாலம் செய்கின்றன!.

அலை அலையாக வரும் குளிர் தென்றல் !.…..

कहा भी जाए, रहा भी जाए
तुमसे अगर, मिले भी नज़र, हम झेंप जाए
ठंडी हवाएँ…  

கஹா பீ ஜாயே, ரஹா பீ  ஜாயே

தும் ஸே அகர், மில் தே நஃஜர்ஹம் ஜோப் ஜாயே

தண்டீ ஹவாயே(ன்)

மனதில் இருப்பதைச் சொல்லவும் வரவில்லை

சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை!

உன்னை நேரில் பார்த்தாலும் என்னால் எதுவும் பேச முடியாது!

அலை அலையாக வீசும் குளிர் தென்றல்!

दिल के फ़साने, दिल भी जाने
तुमको सजन, दिल की लगन, कैसे बताएँ
ठंडी हवाएँ…  

தில் கே ஃபஸானே, தில் ஹீ ஜானே

தும் கோ ஸஜன்,தில் கீ லகன், கைஸே பதாயே(ன்)

தண்டீ ஹவாயே(ன்)….

மனதின் ரகசியம் மனதிற்கே தெரியாதே!

பின் மனதில் இருப்பதை அன்பரே, உமக்கு எப்படிச் சொல்வது?

அலை அலையாக வரும் குளிர் தென்றல்..

Song: Thandi hawayen  Film: Naujavan 1951 Lyrics : Sahir Ludhianvi

Music: S.D.Burman  Singer:Lata

இந்தப் பாட்டு  நாடு முழுவதும் ஒர் அலையைத் தோற்றுவித்தது! அப்படி என்ன இருக்கிறது இப்பாட்டில்?

திருப்பிக் கேட்கலாம்என்ன இல்லை?

அருமையான மெட்டுஇசையின் இன்ப அலை!

பின்னணியில் வாத்திய ஜாலம்!

அன்றைய லதாவின் மதுரக் குரல்!

இனிய, எளிய சாஹித்யம்!

இந்த சங்கீதம் +சாஹித்யம்  நகமும் சதையும் போல இணைந்துதான் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தின!இந்தப் பாட்டுதான் கவி ஸாஹிரைத் தூக்கிவிட்டது!

இந்தக் காதல் கவிதைகளைப் பாருங்கள்பெரிதாக ஒன்றும் இல்லை! எல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்இவற்றை வைத்தே கவிதை வலை பின்னுகிறார்கள்! Sweet Nothings என்பார்கள் ஆங்கிலத்தில்

இந்த மெட்டு, பல இசைஞர்களிடையே நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது! பலர் இதையொட்டியே மெட்டமைத்தனர். அவற்றுள் சில::

தேரா தில் கஹா(ன்) ஹைசாந்தினி சௌக் 1954  ரோஷன்

யஹீ ஹை தமன்னாஆப்கீ பர்சாயியா(ன்) 1964  மதன் மோஹன்

ஸாகர்  கினாரேஸாகர்  1985  ஆர்.டி.பர்மன்

தமிழில்கொஞ்சும் புறாவே“!

ஆனால் இதன் அதிக சாயல் விழுந்த பாட்டு, ‘மம்தாபடப் பாட்டு-1966.


रहें न रहें हम  महका करेंगे
बन के कली  बन के सबा
बाग-ए-वफा में
रहें न रहें हम…

ரஹே ரஹே ஹம், மஹகா கரேங்கே

பன் கே கலீ, பன் கே ஸபா

பாக்வஃபா மே

ரஹே ரஹே ஹம்….

நான் இங்கு இருக்கிறேனோ, இல்லையோ,

நம் நம்பிக்கை என்னும் சோலையில் ஒரு மலர் போலும், தென்றல் போலும்

இந்த  நறுமணம்..இருந்து கொண்டிருக்கும்!

मौसम कोई हो, इस चमन में, रंग बन के रहेंगे हम खिरामा
चाहत की खुशबू, यूँ ही जुल्फों से उड़ेगी, खिज़ा हो या बहारें
यूँ ही झूमते और खिलते रहेंगे
बन के कली

மௌஸம் கோயீ ஹோ இஸ் சமன் மே

ரங்க் பன் கே ரஹேங்கே ஹம் கிராமா

சாஹத் கீ குஷ்பூ, யூ(ன்) ஹீ ஜுல்ஃபோ(ன்) ஸே உடேகீ,

கிஜா ஹோ யா பஹாரே

யூ(ன்) ஹீ ஜூம்தே ஔர் கில்தே ரஹேங்கே !

பன் கே கலீ…..

இந்தச் சோலையில் எந்தப் பருவமானாலும்

நான் அதை வண்ணமாகப் பூசி நிற்பேன்! , 

இலையுதிர் காலமோ, வஸந்தமோஎதுவாயினும்

நம் காதல் என்னும் நறுமணம் என் கூந்தலிலிருந்து பரவி வரும்!

நான் ஒரு மலர் போலும் தென்றல் போலும் 

இந்தச் சோலையில் அசைந்து ஆடி நிற்பேன்!


खोये हम ऐसे, क्या है मिलना, क्या बिछडना नहीं है याद हमको
कूचे में दिल के, जब से आये, सिर्फ दिल की ज़मीं है याद हमको
इसी सरज़मीं पे हम तो रहेंगे
बन के कली

கோயே ஹம் ஐஸே

க்யா ஹை மில்னா, க்யா பிசட்னா நஹீ ஹை யாத்  ஹம்கோ

கூசே மே தில் கே, ஜப் ஸே ஆயே

ஸிர்ஃப் தில் கீ ஜமீன் ஹை யாத் ஹம்கோ

இஸீ ஸர்ஜமீன் பே ஹம் தோ ரஹேங்கே

பன் கே கலீ…..


நான் அன்பில் என்னை மறந்து விட்டேன்!

உடன் இருத்தல்பிரிவு எதையும் நான் அறியவில்லை!

நீ என் மனதில் வந்தபின், அன்பு என்னும் இந்தப் பூமியை மட்டுமே அறிவேன்!

அந்த உலகிலேயே நான் இருப்பேன்!

ஒரு மலர் போலும் தென்றல் போலும் திகழ்வேன்!

जब हम ना होंगे, जब हमारी खाक पे तुम रुकोगे, चलतेचलते
अश्कों से भीगी, चांदनी में, इक सदा सी सुनोगे, चलतेचलते
वहीं पे कहीं हम तुमसे मिलेंगे
बन के कली…  

ஜப் ஹம் நா ஹோங்கே, ஜப் ஹமாரீ காக் பே தும் ருகோகே, சல்தேசல்தே

அஷ்கோ ஸே பீகீ, சாந்த்னீ மே இக் ஸதா ஸீ ஸுனோகே, சல்தேசல்தே

வஹீ(ன்) பே கஹீ(ன்) ஹம் தும்ஸே மிலேங்கே

பன் கே கலீ….

நான் இங்கு இல்லாத போது

மழை பெய்து ஓய்ந்து , என் கண்ணிரால் நனைக்கப்பட்ட இந்த

என் சாம்பலின் அருகில் நீ நடந்துபோகும் போது  சிறிது நிற்க நேர்ந்தால்,

என் குரல் உன் காதில் ஒலிக்கும்!

அங்கு எப்படியோ நாம் இருவரும் சந்தித்துக்கொள்வோம்!

இச் சோலையில் மலர் போலவும் தென்றல் போலவும் இருப்போம்!

Song: Rahe na rahe hum  Film: Mamta 1966 Lyricist: Majrooh Sultanpuri

Music: Roshan  Singers: Lata, Suman Kalyanpur, Rafi

This is an extraordinary song by any standards. The poetry is simply sublime. It combines two worlds-two realities.

There is the physical world- with its meeting and separation. But there is also that state of unity which is transcendental- beyond the physical dimension, with its limitations of time and space. Life is transient, but it is also eternal- not in the sense of extended, infinite time, but in the sense of Timelessness! Majrooh Sultanpuri traverses the two realms seamlessly! And weaves them together in his imagery! Oh, what an excellent poem! It fills the mind with high thoughts, but also wrenches the heart! We all have to go one day, but the thought that we will be remembered comforts us! This the poet conveys without getting into a sad, sentimental mode! This is extraordinary!

இது சங்ககால அகத்துறைப் பாடல்களை (அகநானூறு, கலித்தொகை) நினைவு படுத்துகிறது. தலைவன்தலைவி பிரிவு அங்கே பேசப்படுகிறது. எதன் நிமித்தம் இத்தகைய பிரிவு என்பதும், அதனால் தோன்றும் மன நிலைகளும் விரிவாகவே பேசப்படுகின்றன. ஆனால் அத்தகைய பிரிவுகள் அனைத்தும் தாற்காலிகமானவையே. இங்கு மஜ்ரூஹ் நம் எவராலும் தவிர்க்க, தடுக்க இயலாத அந்த இறுதிப் பிரிவையும் பற்றிப் பேசுகிறார்மிக  நாசூக்காகச் சொல்கிறார். ஆனால் எந்தப் பிரிவானாலும் வேண்டியவர்களை அன்புடன் நினைக்கிறோம்!. இத்தகைய அன்பில் , மனதில் நிறைந்து நிலவும் நினைவில்பிரிவு என ஒன்று உண்டாஇல்லை என்கிறார் கவி!

இதன் இசை அபாரமானது. இதுதண்டீ  ஹவாயேன்பாட்டை அப்படியே தழுவவில்லை. இந்த மெட்டு எளிதானதல்ல

இதை முதலில்  லதா பாடுகிறார். பின்னர் சில மாற்றங்களுடன், சுமன் கல்யாண்பூர், ரஃபி  ஆகியோரின் குரலிலும் கேட்கலாம்.

ஐம்பது வருஷங்களுக்கு மேலாகியும் ஒரு பாட்டு மக்கள் மனதில் நிற்கிறதென்றால், அது மனதைத் தொடுவதாக இருக்கவேண்டும்! இது இசைகருத்து இரண்டும்  இணைவதால் தான் சாத்தியமாகிறது.

ஒரே ராகத்தின் அடிப்படை தான்ஆனால் பாடல் காட்டும் உணர்ச்சிகள் எப்படி வேறுபடுகின்றன!

Note 1. தண்டீ ஹவாயேன் பாட்டு யமன் ராகத்தின் அடிப்படையில் அமைந்தது என்று கருதுகின்றனர்

 ஆனால் இதன் பூர்வீகம் மேற்கு இண்டீஸ் பேண்ட் இசை என்பாரும் உண்டு!

மேற்கத்திய மெட்டை எடுத்தாள்வது அக்காலத்தில் சகஜமே

2. சில சமயம் ஒரே சாயலில் இரு பாடல்கள்  அமைவதும் உண்டு

****

வாழும் வழி காட்டும் சுபாஷிதம்! (Post No.7906)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7906

Date uploaded in London – – – 1 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வாழும் வழி காட்டும் சுபாஷிதம்!

ச.நாகராஜன்

நல்ல வாழ்க்கையை வாழ்வதற்காக, நமக்கு வழி காட்டும் சுபாஷிதங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் சில இதோ:

அஜராமரவத் ப்ராஞோ வித்யாமர்த ச சிந்தயேத் |

க்ரூஹித் இவ கேஷேஷு ம்ருத்யுனா தர்மமாசரேத் ||

அறிவாளியான ஒருவன் அறிவு பெறுவதிலும் பணம் சம்பாதிப்பதிலும், தான் அழிவற்று இறக்காமல் இருப்பது போல நினைத்து, அவற்றைச் சேகரிக்க வேண்டும். ஆனால் தர்மம் செய்வதிலோ தனது தலை முடியை எமன் பிடித்திருப்பதாக நினைத்து (உடனடியாக) தர்மம் செய்ய வேண்டும்.

A wise man should fix his thoughts upon knowledge and wealth as (if he were) undecaying  and undying. He should practice duty as if (he were) seized by the hairs of his head by Death (as if he had not an instant to lose) (Translation by :  F.Johnson)

*

அணும்யச்ச மஹத்ம்யச்ச சாஸ்த்ரேப்ய; குஷலோ நர: |

சர்வத: சாரமாத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத: ||

சிறிதானாலும் சரி பெரிதானாலும் சரி சாஸ்த்ர நூல்களிலிருந்து கற்றறிந்தோர், புஷ்பங்களிலிருந்து வண்டு எடுப்பது போல, சிறந்தவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.

The learned man takes everywhere the best from small and large books, like a bee from flowers.

*

அஞோ ந விதரத்யயதி புனர்தாரித்ர்ய ஷங்க்யா |

ப்ராக்ஞோபி விதரத்யனி புனர்தாரித்ர்ய ஷங்க்யா ||

(இந்த ஜென்மத்தில்) ஏழையாகி விடுவோமோ என்று பயந்து மூடனானவன் தர்ம வழியில் தன் செல்வத்தைத் வழங்குவதில்லை; ஆனால் ஒரு புத்திசாலியோ அடுத்த ஜென்மத்தில் தான் ஏழையாகி விடுவோமோ என்று நினைத்து தாராளமாக வழங்குகிறான்.

An ignorant man does not give his wealth as gift fearing that he may get impoverished in the process (in this birth). But a wise man gives liberally lest *he becomes poor (in the next birth). (Translation by :  A.A.R)

*

அஜவச்சர்வணம் குர்யாத் கஜவத் ஸ்நாநமாசரேத் |

ராஜவத் ப்ரவிஷேத்க்ராமம் சோரவத்கமனம் சரேத் ||

ஒருவன் ஆடு போல (எது கிடைத்தாலும் அதை) உண்ண வேண்டும்.

யானை போல (மெதுவாக) குளிக்க வேண்டும்.

எங்கும் ராஜா போல பிரவேசிக்க வேண்டும்.

கிராமத்தில் திருடன் போல (மெதுவாக ஓசையின்றிச்) செல்ல வேண்டும்.

One should eat (anything) like a goat; bathe (slowly) like an elephant; enter a  place (boldly) like a king and move village (noiselessly) like a thief. (Translation by :  A.A.R)

*

அதிவ்யயோநவேக்ஷா ச ததார்ஜனமதர்மத: |

மோக்ஷணம் தூர சம்ஸ்தானம் கோஷ்வ்யஸனமுச்யதே ||

(வரவுக்கு மீறி) அதிகமாகச் செலவழித்தல், பண விஷயங்களில் அலக்ஷியம், தவறான வழிகளில் பொருள் சம்பாதித்தல், செல்வத்தைத் துறந்து தூர விலகி நிற்றல் ஆகியவை செல்வ சம்பந்தமான தவறான அணுகுமுறைகளாகும்.

Excessive spending (living beyond one’s means), carelessness about money matters, acquiring wealth by wrongful means, as well as forsaking and distancing oneself from wealth (or problems relating thereto) are wrong attitudes towards wealth. (Translation by Mankar Jai)

*

அர்த்தா: பவந்தி கச்சந்தி லப்யதே ச புன: புன: |

புன: கதாபி நாயாதி கதம் து நவயௌவனம் ||

சம்பாதிக்கப்பட்ட செல்வம் கையில் இருந்து பின் இழக்கப்பட்டாலும் கூட மீண்டும் மீண்டும் திரும்பப் பெற முடியும்; ஆனால் கழிந்து போன நவ யௌவனம் – வாலிபத் தன்மையோ ஒரு போதும் திரும்ப பெற முடியாது.

Wealth, (earned and) presently in your possession and then lost, can be regained again and again; but virility of youth and manhood once lost (or wasted) never comes back. (Translation by Mankar Jai)

*

கதே ஷோகோ ந கர்தவ்யோ பவிஷ்யம் நைவ சிந்தயேத் |

வர்தமானேன காலேன, வர்தயந்தி  விசக்ஷண: ||

கடந்த கால சோக நிகழ்வுகளைப் பற்றியோ எதிர்காலம் பற்றியோ சிந்திக்காதீர்கள். கையில் இருக்கும் நிகழ்காலம் பற்றி கவனம் செலுத்துபவரே சிறந்த அறிவாளிகள். Do not grieve over past losses (or misfortunes), nor (sit with folded hands) worry about the future. Wise men (are those who) pay attention to (the tasks in hand in) the present

tags  —  வாழும் வழி , சுபாஷிதம்,