பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! –3 (Post No.9965)

 
SUNDARAMURTHY SWAMIKAL, MADRAS MUSEUM

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9965

Date uploaded in London –  12 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 
 

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 3

ச.நாகராஜன்

S NAGARAJAN, BENGALURU
சுந்தரர் ஒரு சிறந்த இயற்கைக் கவிஞர். உலகின் ஆகப் பெரிய சிறந்த இயற்கை வர்ணனைப் பாடலாக கருதப்படுவது வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் எழுதிய டாஃபோடில்ஸ் கவிதையாகும். இங்கிலாந்தில் 1805ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று அவர் தனது சகோதரி டோராதியுடன் லேக் டிஸ்ட்ரிக்ட் என்னுமிடத்தில் ஒரு ஏரிக்கரையோரம் நடந்து சென்றார். அங்கு கவிஞர் திடீரென ஒரு திருப்பத்தில் ஆயிரக்கணக்கான தங்க நிற டாஃபோடில்ஸ் மலர்களைப் பார்த்து வியந்து அதிசயித்து நின்றார். இந்தக் காட்சியை அப்படியே என்றும் நிலைத்து நிற்கும் வண்ணம் 1807இல் கவிதையாக்கினார்.                                                         I wandered lonely as a Cloud
   That floats on high o'er Vales and Hills,
When all at once I saw a crowd,
   A host of golden Daffodils;
Beside the Lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.      ஏரிக்கரையோரம் தென்றல் காற்றில் நாட்டியம் ஆடின மலர்கள். இந்தக் காட்சியால் என்ன பயன் அவருக்கு? தனிமையிலே சூன்யமான ஒரு நிலையில் ஒரு ஈஸி சேரில் அவர் இருக்கும் போது - vacant or in pensive mood - அகக் கண்ணில் அந்த மலர்கள் தோன்றி ஆட இதயம் குளிர்ந்து இன்பம் மலர்ந்து அவரும் அவற்றுடன் ஆடுகிறார்.

     For oft when on my couch I lie
   In vacant or in pensive mood,
   They flash upon that inward eye
   Which is the bliss of solitude,
   And then my heart with pleasure fills,
   And dances with the Daffodils.

சரி, இப்போது நமது சுந்தரருக்கு வருவோம்.

ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை

அப்படி அழகாய அணி நடை மட அன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே என்கிறார். நீலம் ஒளியுடன் கூடி ஒளி நீலம் ஆகி ஓங்குகிறது. அந்த ஒளி எங்கும் பரவுகிறது. வானமெங்கும், மலர்ப் பொய்கை எங்கும். அப்படி அழகாய அணி நடை மட அன்னம் அங்கே மெய்ப்படுகிறது. நீல நிறக் கடல்! நீல நிற ஆகாயம் நமக்குத் தெரியும். ஆனால் ஒளி நீலம் ஓங்கிய காட்சி தங்க நிற டாஃபோடில்ஸை விட அழகிய காட்சியாக அமைகிறது அல்லவா! அங்கு வோர்ட்ஸ்வொர்த் போல இயற்கையை மட்டும் காண்பிக்காமல், இயற்கையுடன் ஆன்மீகத்தையும் கலந்து சிவனைக் காண்பிக்கிறார் சுந்தரர். ஆக, ஆகப் பெரும் இயற்கைக் கவிஞராக ஆகி விடுகிறார் இரு வரிகளில்! அடுத்து திருக்கலய நல்லூர் பதிகத்தில் முதல் பாட்டை மட்டும் இங்கு பார்ப்போம்:

குரும்பைமுலை மலர்க்குழவி கொண்ட தவம் கண்டு

 குறிப்பிணெடும் சென்று அவள்தன் குணத்தினை நன்கறிந்து

விரும்பு வரம் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த

   விண்ணவர்கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில்

அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட

    அணிமயில்கள் நடமாடும் அணி பொழில் சூழ் அயலின்

கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்

  கமலங்கள் முகம் மலரும் கலயநல்லூர் காணே

அடடா! என்ன அழகிய பாடல்! அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட

    அணிமயில்கள் நடமாடும் அணி பொழில் சூழ் அயலின்

கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்

  கமலங்கள் முகம் மலரும் கலயநல்லூரைப் பாருங்கள்! இதற்கு இணையாக உலக மொழிகளிலே இன்னொரு இயற்கை வர்ணனைப் பாட்டு உண்டா என்ன? தேடிப் பார்த்தால் மிக அரிதாகவே இது போன்ற பாடல்கள் உலக மொழிகளில் நமக்கு கிடைக்கக் கூடும்! இப்படி அவரது இயற்கை வர்ணனைகளை நூற்றுக் கணக்கில் கூறிக் கொண்டே போகலாம்.

எமபயம் நீங்க பத்துப் பாடல்களை கோயில் திருத்தலத்தில் அருளியவர் சுந்தரரே. தருமனார் தம் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் என்று அவர் கூறும் போது பாடலில் சிவ மயம் கமழ எம பயம் தீருகிறதல்லவா!

சிவபக்தர் ஒருவர் பாடினார் இப்படி: கிரீடே நிஷேஷோ லலாடே ஹூதாஷோ புஜே போகிராஜோ கலே காலிமா ச| தனௌ காமினீ  யஸ்ய தத்துல்யதேவம் ந ஜானே ந ஜானே ந ஜானே ந ஜானே 
கிரீடே நிஷேஷோ - தலையிலே சந்திரன் லலாடே ஹூதாஷோ - நெற்றியில் தீ ; புஜே போகிராஜோ - புஜங்களைச் சுற்றி பாம்புகளின் ராஜா; கலே காலிமா  - கழுத்தில் கறுப்பு வண்ணம்| தனௌ காமினீ  யஸ்ய தத்துல்யதேவம் -அவனுடைய மனைவி அவனுடைய உடலிலேயே! இப்படிப்பட்ட ஒரு தெய்வத்தை நான் அறிந்ததில்லை; அறிந்ததில்லை அறிந்ததில்லை என்கிறார். 
சிவபிரானையே தன் முழு முதல் தெய்வமாகக் கொண்ட சுந்தரரும் கூட இதே போல சிவனை பித்தா பிறைசூடி என்றும், வண்டார்குழலி உமைநங்கை பங்கா என்றும், பாதி ஓர் பெண்ணை வைத்தாய் என்றும், மாமணி நாகம் அரைக்கு அணிந்து என்றும், பொன்னார் மேனியன் என்றும் புலித்தோலை அரைக்கசைத்து சடைமேல் கொன்றை அணிந்தவன் என்றும் இப்படி எல்லாம் பாடல்கள் முழுவதும் சிவபிரானை வர்ணிக்கும் விதமே தனி! பொன்னே, நல்மணியே, வெண்முத்தே, செம்பவளக் குன்றமே ஈசன் என்று உன்னைப் புகழ்வேன் என்று இப்படிப் பலபடியாக அவர் போற்றுகிறார்.      

                                                           பக்தி சூத்திரத்தை சுந்தரர் வாழ்ந்து காட்டும் பாங்கே தனி! நாரத பக்தி சூத்திரத்தில் நாரத மஹரிஷி 84 சூத்திரங்களை அருளியுள்ளார். அதில் 55வது சூத்திரம் ஒரு பெரும் ரகசியத்தைத் தருகிறது. அதன் திரண்ட சுருக்கம் இது தான்: - தத் சிந்தனம் தத் வாக்யம் தத் அவலோக்யம் தத் பரம் என்று இறைவனைச் சேரும் விதத்தை அவர் கூறி அருளியுள்ளார். தத் சிந்தனம் அவனைப் பற்றியே சிந்தனை செய்தல்.தத் வாக்யம் அவனைப் பற்றியே பேசுதல். தத் அவலோக்யம் அவனுடனேயே இணைந்திருத்தல் இப்படிச் செய்தால் இறுதி நிலை தத் பரம். அவ்னாகவே ஆதல்! சுந்தரர் அவனைப் பற்றியே - சிவனைப் பற்றியே - சிந்தித்திருந்தார். நற்றவா உன்னை நான்  மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றார். அவனைப் பற்றியே பேசினார், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடினார் அவனுடனேயே தோழமை கொண்டார். வன்மையாகப் பேசி வன் தொண்டர் என்ற செல்லப் பெயரையும் பெற்றார். இறுதியில், ‘வேண்டேன் மனை வாழ்க்கை’ என்ற நிலையில் சிவபிரான் அவரைத் தன்னோடு சேர்த்துக் கொண்டருளினார் தத் பரமாக!  வெள்ளை யானை மீதேறி கைலாயம் வருக என்று அவர் அருள் பாலிக்க கரி மீது ஏறிக் கைலாயம் பறந்தார் அவர். அவரது உற்ற தோழரான சேரமான் பெருமாள் நாயனார் உள்ளுணர்வினால் தன் நண்பர் கைலாயம் செல்வதை அறிந்து, “ நீர் கரி மீது சென்றால் நான் இதோ, பரி மீது வருகிறேன் என்று குதிரை மீது ஏறி அவருடன் கைலாயம் ஏகினார். 
ஆக சுந்தர மூர்த்தி நாயனாரின் சரித்திரம் ஒரு பன்முகப் பரிமாணத்தைக் காட்டுகிறதல்லவா! முதலில் அவர் ஒரு சிவனடியார். சிவனடியார்க்கு அடியார். தமிழ் வித்தகர். இசைக் கலைஞர். தலம் தோறும் சென்று தரிசித்த அருளாளர். இயற்கைக் கவிஞர். எளிதாக இறைவனை விளக்கியவர். சிவ ரகசியங்களை விண்டு கூறியவர். பக்தி சூத்திரத்தை  வாழ்ந்து காட்டி விளக்கியவர். செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது, காவிரி ஆறு பிரிந்து வழி விடச் செய்தது,  சங்கிலியாரை மணக்க சிவபிரானையே தூது செல்ல வைத்தது உள்ளிட்ட அற்புதங்களை நிகழ்த்திய அருளாளர். ‘பெரிய புராணக்’ காப்பியத்தின், பெரிய்ய்ய்ய புராணத்தின் தலைவர். நம் நெஞ்சம் நிறை மகான். அவர் அடி போற்றுவோம். வணங்குவோம். அவர் புகழ் பரப்புவோமாக!

This image has an empty alt attribute; its file name is 55ed6-img_2611.jpg
KALYANJI, LONDON

இந்த நன்னாளில் அடியேனையும் ஒரு பொருட்டாக மதித்து சில வார்த்தைகளைப் பேசப் பணித்த அன்பர்களுக்கும் இவ்விழாவிற்கு மூல காரணமாய் இருந்து சிவப் பணியைச் செய்து வரும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும் இந்த உரையைச் செவி மடுத்த பெரியோர்களுக்கும் தாய்க்குலத்தோருக்கும் அன்பர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்! தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

                      ***                

முற்றும்

TAGS- காப்பியத் தலைவர், சுந்தரர்! –3,

‘அட்லஸ் ஷ்ரக்ட்’ திரைப்படப் புகழ் நாவல் ஆசிரியை அய்ன் ராண்ட் (9964)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9964

Date uploaded in London – 11 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘த பவுண்டைன் ஹெட்’ THE FOUNTAINHEAD மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட் ATLAS SHRUGGED நாவல்களை எழுதிப் புகழ் பெற்ற பெண்மணி அய்ன் ராண்ட் AYN RAND ஆவார் . கம்யூனிசத்தின் பரம எதிரி; முதலாளித்துவத்தின் பெரிய ஆதரவாளர். ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர்.

அய்ன் ராண்ட் AYN RAND எழுதிய நூல்களும் அவருடைய கொள்கைகளும் 1950, 1960ம் ஆண்டுகளில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன தனி மனித உரிமையே பெரிது; தனிப்பட்டவர் சுதந்திரம், தன்  முயற்சி முக்கியம் வாய்ந்தது என்று பொருள்படும்படி அவர் நாவல்களை எழுதினார். அமெரிக்க ஜனாதிபதி ரீகன் ஆட்சிக் காலத்தில் அவரது நூல்கள் பெரிதும் பேசப்பட்டன. பின்னர் அவை திரைப்படங்களாகவும் உருவாயின.

ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அவர் பிறந்தார். அவருக்கு 12 வயதானபோது ரஷ்யப் புரட்சி வெடித்தது. ஜார் (CZAR) மன்னர் ஆட்சி ஒழிந்து கம்யூனிஸ ஆட்சி ஏற்பட்டது. அய்ன் ராண்ட் அதன் பின்னரும் ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் படித்தார். 18 வயதில் ரஷ்யாவை விட்டு வெளியேறினார் அவருக்கு கம்யூனிஸ்ட் ஆட்சி வெறுப்பை உண்டாக்கியது.

அமெரிக்காவில்  குடியேறி  1931-ல் அமெரிக்க பிரஜை ஆனார். ஹாலிவுட்டில் திரைப்பட வசனங்களை எழுதும் பணியில் அமர்ந்தார். அமெரிக்காவுக்குப் போனவுடன் தீவிர கம்யூனிச எதிர்ப்பும், முதலாளித்துவ ஆதரவும் அதிகரித்தது மனிதர்கள் சுயமாகச் சிந்தித்து அவர்களுடைய சொந்த நலனுக்குப் பாடுபடுவதே முக்கியம். சமூகம் என்பது அதற்குப் பின்னரே என்று எழுதினார். இந்தக் கொளகைகளை அடிப்படையாக வைத்து ராண்ட் 4 நாவல்களை எழுதினார் அவருக்கு 31 வயதாகும்போதே அவருடைய முதல் நாவல் WE THE LIVING வீ த லிவிங் பதிப்பாகியது. அவர் படைத்த கதாநாயகன் சமூக நலன்களை ஒதுக்கிவிட்டு தனது ஆசைகள் பூர்த்தியாக உழை த்து  அதில் வெற்றியும் அடைகிறான்.

அவர் எழுதிய மூன்றாவது நாவலான பவுண்டைன்ஹெட்டில் THE FOUNTAINHED கதாநாயகன் ஒரு கட்டிடக் கலைஞன். அவன் தனது உரிமைகளே பெரிது என்று எண்ணு வன் . இது திரைப்படம் ஆக்கப்பட்டபோது அதில், காரி கூ ப்பர் GARY COOPER முதலியோர் நடித்தனர். படமும் வெற்றிநடைபோட்டது.

பல்கலைக்கழக மாணவரிடையே அய்ன் ராண்டின் நாவல்கள் பிரபலமாகின. சுயநலத்துடன் செயல்படுவதே சரி என்று நினைத்தனர் அக்கால மக்கள்.  இப்போது அந்த தத்துவம் மாறிவிட்டது .

பிறந்த தேதி -பிப்ரவரி 2, 1905

இறந்த தேதி – மார்ச் 5, 1982

வாழ்ந்த ஆண்டுகள் -77

எழுதிய நூல்கள்…..

1936- WE THE LIVING

1938- ANTHEM

1943- THE FOUNTAINHEAD

1957- ATLAS SHRUGGED

1961- FOR THE NEW INTELLECTUAL

1965- THE VIRTUE OF SELFISHNESS

1969- THE ROMANTIC MANIFESTO

1971- THE NEW LEFT: THE NEW ANTI INDUSTRIAL REVOLUTION

1982- PHILOSOPHY: WHO NEEDS IT?

–SUBHAM–

tags- அட்லஸ் ஷ்ரக்ட்,   நாவல் ஆசிரியை, அய்ன் ராண்ட் , Ayn Rand, Atlas Shrugged

சேலையில் கண்ணன் லீலை! (Post No.9963)

WRITTEN BY LONDON POET DR A. NARAYANAN

Post No. 9963

Date uploaded in London – 11 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சேலையில் கண்ணன் லீலை– சேலை கவர்ந்தவனே சேலை கொடுத்தவன்

கண்ணனையே  கணவனாயடைய கோபியக்

கன்னியர்கள் காத்யாயனீ நோன்பு காத்துக்

களைந்த ஆடைகளைக்  கரையில் வைத்துக்

களிப்புடன் யமுனை நதியில் நீராட  அங்கு

வந்த வாசுதேவனுக்கு வம்புக் கிழுப்பதற்கு

வாய்ப்பாக நாணம் நதியிலேப் பறிபோகும்

அச்சமில்லா ஆய்ச்சியக் கன்னியருக்குப்

பாடம் கற்பிக்க கரையிருந்த சேலைகளை

ஒரு தருக்கிளையில் தொங்க தொங்கியதோ

மங்கையர்  நாணமும் மரக்கிளையிலே

கண்ணன் கவர்ந்த சேலைகள் தருக்கிளையிலே

கண்ட கழுத்தளவு நீரில் நின்ற கன்னியர்கள்

கெஞ்சியும் கொஞ்சியும் தளராக் கார் வண்ணன்

சாத்திரமேற்கா நிர்வாண நீராட்டத்தில் வரம்பு

மீறி வழுவிய நீங்கள் அந்நிலையிலேயேக் கரை

ஏறி சேலை பெறுவதோர் பரிகாரமெனக் கண்டிக்க

தண்ணீர் வெந்நீராக கண்ணீர் சொரிந்த கன்னியர்

மன்னிக்க மன்றாட மரம் தழுவிய சேலைகளை

மங்கையரிடை தவழ மனமிரங்கிய மாதவன்

சேலை கவர்ந்தீன்ற முதல் லீலை

பண்டொரு நாள்  கௌரவன் துரியோதனன்                     

பங்காளிப் பகையில் பாண்டவர் உடைமைகளைப்         

பறிக்கத் தருமனை சூதாட்டத்துக் கீர்த்து வஞ்சகச்      

சூதில் வாரி எடுத்தானோ  தம்பிகளுட்படத் தரும        

னுடைமையெலா மெனும் நிலையில் தலை தரை       

நோக்கத் தன்னயும் பணயமாய் வைத்திழந்த காலை    

துரியோதனன் காலுருண்டதோ பஞ்சவர் முடி                     

எஞ்சியவளோ பாஞ்சாலி விட்டதைப் பிடிக்க                                                 

மிஞ்சியது வெறி கெஞ்சியது விவேகம் ஆனால்                    

மத களிர் சூதில் மிதிபட்டாளோ பாஞ்சாலி !                   

பகடையுருட்டாட்டத்தில் பணயமாய் பறிபோன

பஞ்சாலியைத்  துரியோதனன் அரசவைக்கிழுத்து

அரங்கேற்றியதோ அவள் கற்புக் களவாடும்

காட்சியாக துயிலுரிக்கத்  தம்பி துச்சாசனனை

ஏவ இடை தழுவிய சேலையை வலிவான கரங்கள்

இழுக்கத் தடுத்துப் பிடித்தப் பஞ்சாலி கைகள் தளர

இரு கரங்கள் மேல் தூக்கிக் கோவிந்தாவென்றக்

கூக்குரலில் வண்ணச் சேலைகள் ஓயா அலைபோல    

பூ மகளையும் போர்த்து விஞ்சுமளவு வர கோவிந்தன்

விந்தையே சேலையைக்  கொடுத்ததும்.

 நாராயணன்

Poem by Dr A Narayanan, London

Xxx

One more poem by Dr A Narayanan

காலன் கணக்கு

கழுதைபோல் சுமந்த வினைகள் காலங்கள் கடந்தும்

உழுத உடலில் விதைத்த கருமங்களில் சருமப்பை வாட

விழுந்த தருணம் இரு கரங்கள் விண்ணோக்கி த்

தொழ நாடி நரம்பு தளர்ந்த பின் நாராயணனை

விழித்தாலும் வேந்தனோ வேதியனோ வித்தகனுக்கோ 

கூனிக் குறுகிய வினைகளின் சுமை அசலுக்கு விஞ்சிய

வட்டிக் கடன் போலக் காலனெனும் கடன்காரன் கதவைத்  

தட்டி கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்துக் கழியாதோ

உன் கணக்குப் பல சன்மங்களிலு மென இவர் வீடு 

காலியாக விளைந்த மறு பிறவி தொடருமெங்கோ

 நாராயணன்   

Poem by Dr A Narayanan, London

tags- சேலை, கண்ணன், லீலை,  கவர்ந்தவன் ,கொடுத்தவன், 

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! –2 (Post No.9962)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9962

Date uploaded in London –  11 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானமயம் சார்பில் சுந்தரர் குருபூஜை தினமான ஆடி சுவாதித் திருநாளையொட்டி சுந்தரர் சப்தாஹ – ஏழு நாள் விழாவில் இரண்டாம் நாள் விழாவில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை. இந்த உரையை facebook.com/gnnamayam தளத்தில் எந்த நேரமும் காணலாம்.

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 2

ச.நாகராஜன்

இதை அறிவியல்  நோக்கில் பார்த்தால் டைம் மெஷின் என்னும் கால இயந்திரத்தில் பின்னோக்கிச் சென்று இறந்திருந்த குழந்தை மீட்கப்பட்ட  தலம் அவிநாசி என்று சொல்லி அதிசயிக்கலாம். ஆன்மீக நோக்கில் பார்த்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருந்த குழந்தையை, அருளாளர் சுந்தரர் இறைவனைத் தொழுது வேண்டி, சிவபிரான் அருளால் உயிர்ப்பித்த ஆன்மீக அருள் தலம் என்று கொள்ளலாம்.      அவிநாசியப்பர் சந்நிதியிலேயே அந்த அந்தணச் சிறுவனுக்கு பூணூல் கல்யாணமும் நடந்தது. இன்றும் இந்த உற்சவம் அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில், ‘முதலை வாய்ப் பிள்ளை உற்சவம்’ என்று விமரிசையாக நடக்கிறது. அவிநாசியப்பர் கோவிலின் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குளம் உள்ளது. இங்கு சுந்தரரர் பாடல் பாட, முதலை தன் வாயிலிருந்து குழந்தையை உமிழும் விழாவும், சுந்தரர் கோவிலில் உபநயனம் செய்விப்பதும் ஐதீகத்தை விளக்கும் விதமாக நடைபெறுகிறது. விஞ்ஞானிகளின் பார்வையிலும் முக்கியமானதாக விளங்குகிறது இந்தச் சம்பவம். காலத்தில் பின்னோக்கிச் சென்று இறந்தவனை மீட்க முடியும் என்பதை அதிசயமாக நிரூபிக்கும் விழா அல்லவா இது                                                                                                                                                                                                                                                                                                                                                                                        சுந்தரர் ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவர். எங்கும் போகாமல், திருவொற்றியூரிலேயே இருப்பதாக சத்தியம் செய்து சங்கிலியாரை மணந்து கொண்ட அவர் திருவாரூர் சிவபிரானை பார்க்காமல் இருக்க முடியாமல் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டவே அவர் கண்கள் குருடாயின. நீ எனக்கு மகத்தில் புகுந்த சனி போல அல்லவா விளங்குகிறாய். என் கண்கள் குருடாகி விட்டனவே. பார்வையைத் தா என்று அன்புடன் அவர் சிவனை நிந்தை செய்கிறார். மகத்தில் சனி புகுந்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்கிறது ஜோதிடம். பார்வையைத் தா என்று அவர் வேண்ட பின்னர் பார்வையையும் பெற்றார்.                                                                                                                                                                            சுந்தரர் நாடெங்கும் சிவஸ்தலங்களை நோக்கி யாத்திரை செய்ததால் நாட்டிலே வழக்கில் உள்ள எளிய  இனிய பழமொழிகளை வைத்து உணர்தற்கு அரிதாக உள்ள ஆழ்ந்த கருத்துக்களை விளக்குபவர். திருவிடைமருதூர் பதிகத்தை எடுத்துக் கொள்வோம் : கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்றது போல என்கிறார். அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன்,  புல் நினைப் பனி வெங்கதிர் கண்டால் போலும் வாழ்க்கை பொருள் இலை, வாழைதான் பழுக்கும் நமக்கு  – இப்படி வழக்குப் பழமொழிகளைத் தருகிறார் அவர். இன்னும் ஏராளமான பழமொழிகளை  அவர் பாடல்களில் காணலாம்.                                        

சுந்தரர் இனிய தமிழிலே வித்தகர். அவர் பாடல்களில் நாம் காணும்  சொற்கள் மொத்தம் 30322.. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருளை உள்ளடக்கிய் அமிர்தத் துளியே.                                                                       

சுந்தரர் அனைத்து மகான்களின், அடியார்களின் பாராட்டுகளைப் பெற்றவர். எடுத்துக்காட்டிற்குச் சில!                                               

வாழ்வாவது மாயம் என்று உரைத்தோன் மாமலர்த் தாள்                

தாழ்வாம் எப்போதும் தலை என்று பாடினார் அருட்பிரகாச வள்ளலார். 

புராணத் திருமலை நாதர் தனது சொக்கநாத உலாவில், “ மலரடைந்த புள்ளவாம் பொய்கையிடைப் புக்க முதலைவாய்ப் பிள்ளை, வா என்ற பெருமாளும்” என்றும்,“தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டு” என்றும் இன்னும் பலவாறாக அவரைப் புகழ்கிறார்.   குமரகுருபரரோ,”சொல்மாலை தொடுத்தணிந்த தொண்டர்” என்று புகழ்கிறார்.  சேக்கிழார் பிரானோ அவரது சொல்மாலைகளைத் தமிழ் மாலை என்றும் இன்னும் பல விதத்திலும்  புகழ்ந்து கூறுகிறார். அவர் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தின் காப்பியத் தலைவர் அல்லவா சுந்தரர்! அவரைப் புகழ்ந்துரைக்க அவரிடம் புகழுரைக்குப் பஞ்சமேது?! ஆனால் இவை எல்லாம் பொய்யுரை அன்று; பொருளுரையாகும்!           

                                         சுந்தரர் அடியார்க்கு அடியானாக இருக்க விரும்புவதை திருவாலங்காடு பதிகம் முழுவதிலும் காணலாம். “ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே” என்று குறிப்பிடுகிறார்! அத்துணை எளிமையும் சிவனடியார் பால் மதிப்பும் கொண்டவர் அவர்!

கடவுள்எப்படி இருப்பார் என்பதைச் சுவைபட அவர் சொல்லும் விதமே தனி! பண்ணிடைத் தமிழ் ஒப்பாய், பழத்திடைச் சுவை ஒப்பாய் கண்ணிடை மணி ஒப்பாய், கடு இருள் சுடர் ஒப்பாய் என்று திருக்குருகாவூர் வெள்ளடைத் தலத்தில் அவர் விவரிக்கிறார். கடவுளைக் காட்டு என்னும் நாத்திகர்களுக்கு அவர் தரும் நல்ல பதில் இது. பழத்தின் சுவையை எவனாலாவது காண்பிக்க முடியுமா, அனுபவிக்க அல்லவோ வேண்டும் அது! தமிழ்ப் பண்ணின் சுகமே சுகம் என்றால் அதை எப்படிக் காட்ட முடியும்? அனுபவிப்பது அல்லவோ சங்கீத சுகம்! ஆண்டவன் அருளை அடைதல் அன்றோ விவரிக்க முடியாத சுகம்! கடவுள் எங்கு இருக்கிறார்? வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார் அவர், சரண் அடைந்தார் நெஞ்சம் கொண்டார் என்பதுவே அவர் பதில்! நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானை, தீயானை கதிரானை என்று கூறி சரணடைந்தவர் தம் உள்ளத்திலேயே அவன் உறைகின்றான் என்கிறார் அவர்!

திருஞானசம்பந்தர் தொடங்கி சுந்தரர் வரை வளர்க்கப்பட்ட கேள்விகளாகக் கேட்கும் பதிகம் ஒன்று புதுப் பாணிப் பாடல் உத்தியைத் தருகிறது. பாறு தாங்கிய காடரோ, தேனை ஆடு முக்கண்ணரோ, கோணல் மாமதி சூடரோ என்ற பாடல்களால் பின்னாலே வந்த திரைப்படக் கவிஞர்கள் கூட அதைத் தமக்கு உகந்தது என எடுத்துக் கொண்டனர் இல்லையா? என்ன தவம் செய்தனை யசோதா, உள்ளிட்ட அருமையான கீர்த்தனைகளைக் கேட்டு ரசிக்கிறோம். இன்னும் அவரால் உத்வேகம் பெற்ற கவிஞர்கள் நூற்றுக் கணக்கான மெல்லிசைப் பாடல்களையும் ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா, நான் பாட இன்றொரு நாள் போதுமா, பேசுவது கிளியா, பாடுவது குயிலா என்று இப்படி கேள்விப் பாடல்களாக அல்லவா இயற்றியுள்ளனர்! இரு சொற்களை அடுக்கிப் பாடும் அவரது உத்தியும் இன்றைய நாட்களில் கவிஞர்களால் பெரிதும் பின்பற்றப்படுகிறது. பொன்னவன் பொன்னவன்,மின்னவன் மின்னவன், அன்னவன், அன்னவன் ,என்னவன் என்னவன் என்ற பாணியில் எத்தனை பாடல்களை இன்று நாம் கேட்கிறோம்!
அவரது நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லை; அப்படி ஒரு நகைச்சுவைத் திலகம் அவர்; எடுத்துக்காட்டிற்கு ஒரே ஒரு பாடல் -                   நமண நந்தியும் கரும வீரனும் தருமசேனனும் என்று இவர்           குமணன் மாமலைக் குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே ஞமண ஞாஞண ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாணிலா அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே!
எப்படி ஒரு கிண்டல் பாருங்கள் - ‘ஞமண ஞாஞண ஞாணம் ஞோணம் என்று ஓதி’ என்கிறார்!

                          *                     தொடரும்


tags-  பரிமாணம் ,காப்பியத் தலைவர்,  சுந்தரர்! –2


 

COLOUR FOR ACTORS AND ORNAMENTS IN NATYASHASTRA (Post No.9961)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9961

Date uploaded in London – 10 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Bharata, author of Natyasastra, gives amazing details about the role of colours in the dance dramas. It is not surprising to see the use of colours because we see colour coding even in Bhagavatha. Krishna wearing yellow clothes is called Peetambaradhari and Balarama wearing blue clothes is called Neelambaradhari.

Bharata even applies colour coding for seats. Please see the link given at the end.

Hindus’ obsession with colours began in Rigvedic period. Indra’s horses are described as tawny coloured. Sometimes they are red. Different colour skins of cows are also mentioned by Vedic Rishis.

Coming to ornaments and hair styles, he gives minute details. Before going into the details of colours and ornaments, let me make my comments

  1. Hindu dramas of ancient India followed their own rules in ornaments and dresses. It has nothing to do with the Greek dramas . The big difference between the Hindu statues and Greek statues is ornaments. Greeks don’t wear ornaments. Hindu statues and paintings of Ajanta, Bharhut,Sanchi, Aamaravati are seen wearing ornaments all over the body. They have names for ornaments from head to toe.
  • Colour coding is also not found in Greece .
  • Another important point is the division of Hindu society. Foreigners who translated Vedas made adjective words into proper nouns. Arya should be translated as ‘educated, cultured ‘ etc. But they put capital A for Arya and made them a race. In the same way Dravidians should be southerners. But they put one capital D for the word and made it a race. We have very good evidence against Maxmuller gang, the advocates of Aryan-Dravidian theory. Here in Natyasastra, we don’t find Aryan or Dravidians. If Dravidians are mentioned we know it is about southerners. But they are mentioned with other peoples. In short, they are not racial.

Now let us look at the colours , from Chapter 23 of Natya sastra

Make- up (Slokas 72-89)

“Now I shall speak about the proper make up of male characters.

First of all their bodies should be painted. White, blue, yellow and red are primary colours. There are derivative colours as well as minor colours.

The derivatives are

White + blue = Pandu (yellowish white)

White +red = Padma (lotus colour )

Yellow +blue =  Harita (Green)

Blue + Red = Kasaya (deep red)

Red + Yellow = Gaura (pale red)

Besides these, there are many colours made up of three or four primary colours.

Once the fans get used to these colours, they can easily understand the story. Dialogues may be inaudible, but the colours of characters will help them to recognise them.

Bharata continues with hair styles and ornaments…

Slokas 49-61

Celestial women should be distinguished by their ornaments and costumes, and females of Vidhyadhara, Yaska, Naga and Apsara groups as well as daughters of sages and gods to be distinguished by their costumes. The same rule applies to Siddha, Gandharva, Raksasa  and human females.

(Here we must note that there is no Arya or Dravidian classification. Through out devotional Tamil literature Lord shiva is addressed as Arya. It has no racial connotation.)

The vidhyadhara women should have their hair tied in a top knot, must have many pearls, but wear white costume.

The Yaska and apsara women should wear many jewels, costume to be the same but the yaksa women’s hair must be worn in a Sikha. The naga women should wear ornaments like goddesses, should wear ornaments of pearls and jewels, but the latter must be in the form of wild fruits.

Daughters of sages must wear their hair in a single braid and there should not be many ornaments.

The siddha women must wear plenty of ornaments pearls and emeralds and yellow costumes.

The gandhrva women should wear ornaments of rubies, costumes of saffron colour and a Vina in their hands.

The Rakshasa women should wear blue stones, white protruding teeth and black costume; the goddess pearls and Vaidurya and costumes green like a parrot tail, but this only while they are enjoying love;I n other conditions white.

xxx

Hair styles for different regions are as follows…..

Avanti women- curled hair

Gauda- a sikha pasa

Abhira women- two braids with head band

North east women- a sikhandaka standing up. They must cover their body up to the hair.

Women of South- wear tattoos on their fore heads

Then he describes make ups for different characters.

Let me summarise,

All these show that our drama and dance have unique features. The oldest portion of Natyasastra goes back to fifth century BCE.

I will give the list of ornaments separately

Links to old articles:-

Natya sastra | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › natya-sastra

  1.  

27 Feb 2021 — The ”Natya Shastra” is the oldest extant literature in the field of dramatic arts. The black-coloured sculpture, conceptualised by classical …


Colour Coding of Seats in Ancient Theatres! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/13 › colour-codin…

  1.  

13 May 2014 — In the Natya sastras we have references to 18 different types of stages. … The Natyasastra of Bharata is a compendious treatise on …

You visited this page on 03/08/21.

–Subham–

tags- natya sastra, colours, costumes, ornaments, Bharata

LONDON CALLING ‘GNANAMAYAM’ 9-8-2021 (Post No.9960)

COMPIED BY LONDON SWAMINATHAN

Post No. 9960

Date uploaded in London – 10 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

9-8-2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  MRS ANNAPURANI PANCHANATHAN, LONDON

DR CHAMUNDEESWARY FROM LONDON AND SUBRAMANIAN SITARAMAN FROM INDIA -DISCUSSION ON THEIR NEW DANCE DRAMA PROJECT – SECOND PART 25 MTS

ABHANGAM SONG BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT Sri Aurobindo (Aravinthar)– 13 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7

MANGALAM – 3 MTS

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXXX

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags —  broadcast982021, gnanamayam

LONDON CALLING ‘TAMIL MUZAKKAM’ 8-8-2021 (Post No.9959)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9959

Date uploaded in London – 10 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

8-8-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer – LONDON BALASUBRAHMANYAN

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON THIRUVIDAIMARUDUR TEMPLE8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR AND GROUP–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  BY RANI SRINIVASAN

–20 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 60 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- TAMIL MUZAKKAM, BROADCAST882021,

மீண்டும் ‘அகராதி பிடித்த’ டாக்டர் ஜான்சன் (Post No.9958)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9958

Date uploaded in London – 10 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பற்றி முன்னரே பல கட்டுரைகள் இதே ‘பிளாக்’கில் எழுதி வெளியிட்டு விட்டேன். அவர் பற்றிய மேலும் சில குறிப்புகள் இதோ :

பிறந்த தேதி – செப்டம்பர் 18, 1709

இறந்த தேதி – டிசம்பர் 13, 1784

வாழ்ந்த ஆண்டுகள் – 75

பதினெட்டாம் நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கிய அறிஞர் சாமுவேல் ஜான்சன் DOCTOR SAMUEL JOHNSON. அவர் ஆங்கில அகராதியை முதல் முதலில் உருவாக்கினார். அவர் இலக்கிய விமர்சகர்,புலவர், மொழி பெயர்ப்பாளர்.

இங்கிலாந்தில் லிச்பீல்ட் (LICHFIELD)  என்னும் இடத்தில் பிறந்த அவர், தந்தையின் புஸ்தகக் கடையில் அமர்ந்து மணிக்கணக்கில் படித்தார் பள்ளியிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் சிறப்பாகப் படித்தபோதிலும் வறுமை காரணமாக பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை.

ஜான்சன் பயந்த சுபாவம் உள்ளவர். மேலும் பழகும் விதமும் இங்கிதமும் அறியாதவர். சிறுவயதில் ஏற்பட்ட நோயால் பார்வைக்குறைவும் , செவிட்டுத் தன்மையும் இருந்தது. வேலை கிடைக்காமையால் அடிக்கடி மனச் சோர்வும் ஏற்பட்டது.

28 வயதில் லண்டனில் குடியேறி 20 ஆண்டுகளுக்குப் பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதினார். பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தார். அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையும் எழுதினார். 53 வயதில் அரசாங்கம் ஒரு பென்சன்  கொடுக்கும் வரையில் அவரை வறுமை வாட்டியது.

இலக்கிய சேவைக்காக அரசு அவருக்கு பென்சன் கொடுத்தது. வருடைய நண்பர்  ஜேம்ஸ் பாஸ்வெல் JAMES BOSWELL  அவருடைய மேதாவிலாசத்தத்தை உலகிற்கு எடுத்துக்காட்டினார். பி காலத்தில் அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தையும் எழுதினார்.

29 வயதில் ஜான்சன் எழுதிய லண்டன் LONDON என்ற கவிதை வெளியானது . இது லத்தீன் மொழிக்கு கவிஞர் யுவனல் (JUVENAL’S  THIRD SATIRE) கவிதையைத் தழுவியது. அதற்கு வரவேற்பு கிட்டவில்லை.அவருடைய மற் றொரு  கவிதையைத் தழுவி எழுதிய கவிதை (THE VANITY OF HUMAN WISHES), ஆசை வயப்பட்ட  மனிதன் படும் அல்லல்களை எடுத்துக்காட்டுகிறது.

‘ஆங்கிலப் புலவர்களின் வாழ்க்கை வரலாறு’ LIVES OF THE ENGLISH POETS  என்று அவர் எழுதிய நூலில்தான் அவருடைய திறமை வெளிப்பட்டது. ஒவ்வொரு புலவரின் கவிதைகளை அவர் விமர்சித்தது அவருடைய புலமையைக்  காட்டியது . அவருடைய நடையும் மிக நன்றாக இருந்தது .

ஏழு ஆண்டுகள் உழைத்து 40,00 சொற்களைக் கொண்ட முதல் ஆங்கில அகராதியை வெளியிட்டார். இதனால் ஆங்கில இலக்கிய உலகில் அழியாத இடம் பெற்றார்.

அவருடைய கவிதைகள் ,நூல்கள்…..

1738- LONDON

1744- AN ACCOUNT OF THE LIFE OF MR RICHARD SAVAGE

1749- THE VANITY OF HUMAN WISHES

1755- DICTIOARY OF THE ENGLISH LANGUAGE

1759- RASSELAS, PRINCE OF ABYSSINIA

1779-1781 – LIVES OF THE ENGLISH POETS.

PLEASE SEE THE LINKS FOR  MY OLD ARTICLES

அகராதி “பிடித்த” சாமுவேல் ஜான்சன் (Post No.9653 …

https://tamilandvedas.com › அகர…

27 May 2021 — சாமுவேல் ஜான்சன் (SAMUEL JOHNSON) முதல் ஆங்கில அகராதியை உருவாக்கினார். டாக்டர் …

–subham–

tags- அகராதி , டாக்டர் ஜான்சன், Dr Johnson

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! –1 (Post No.9957)

Sundaramurthy swamikal in Colombo Museum, Sri Lanka

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9957

Date uploaded in London –  10 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானமயம் சார்பில் சுந்தரர் குருபூஜை தினமான ஆடி சுவாதித் திருநாளையொட்டி சுந்தரர் சப்தாஹ – ஏழு நாள் விழாவில் இரண்டாம் நாள் விழாவில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை. இந்த உரையை facebook.com/gnnamayam தளத்தில் எந்த நேரமும் காணலாம்.

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் நமஸ்காரம். வணக்கம். இன்றைய தினம் ஆடி மாதம் சுவாதி நன்னாளையொட்டி சுந்தரர் சப்தாஹம் – ஏழு நாள் விழாவின் இரண்டாவது நாளாக இன்றைய நன்னாள் அமைகிறது. இந்த நாளில் உலகெங்கும் வாழும் சைவர்களை ஒருங்கிணைத்து சிவனருளைப் பெற்றுத் தரும் அரிய பணியில் ஈடுபட்டிருக்கும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும், ஞானாசிரியர்களுக்கும் எனது நமஸ்காரங்கள். சிவனடியார்களுக்கும் மெய்யன்பர்களுக்கும் தாய்க்குலத்தோருக்கும் என் நமஸ்காரம் வணக்கம். நாயன்மார்களில் பன்முகப் பரிமாணமும் சிறப்புக்களையும் கொண்ட காப்பியத் தலைவராகவும் ஒரு அபூர்வமான நாயனாராகவும்  சுந்தர மூர்த்தி நாயனார் திகழ்கிறார்.

அது என்ன பன்முகப்பரிமாணம் என்றால் அதற்கு பதிலை விரித்துக் கொண்டே போகலாம்.

முதலாவதாக நாயன்மார்களின் சரிதத்தை உலகெலாம் என்று ஆரம்பித்து உலகெலாம் என்று முடித்து பெரியபுராணத்தை இயற்றி அருளிய சேக்கிழார் பெருமானுக்கு அதை இயற்ற வழி வகுத்துக் கொடுத்தவர் சுந்தரரே. அதுமட்டுமல்ல, 4286 பாடல்களைக் கொண்ட அந்தப் புராணத்தின் காப்பியத் தலைவராக சுந்தரரையே சேக்கிழார் பிரான் சித்தரிக்கிறார். அவர் திருத்தொண்டத்தொகையில் கூறிய 60 நாயன்மார்களோடு அவரையும் அவரது தாயார் இசைஞானியார் தந்தையார் சடையனார் ஆகிய மூவரையும் சேர்த்து 63 நாயன்மார் கொண்ட சரித நூலாக அதைப் படைத்தார். ஆக மற்ற நாயன்மார்களுக்கு இல்லாத தனி நாயகச் சிறப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

சம்பந்தரின் வரலாற்றை 1256 பாடல்களிலும் நாவுக்கரசர் வரலாற்றை 419 பாடல்களிலும் சித்தரித்த சேக்கிழார் பிரான் சுந்தரரின் வரலாற்றை ஐந்து இடங்களில் 879 பாடல்களில் சித்தரித்துள்ளார்.

திருஞானசம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் போலல்லாது சிவபிரானை சகா த்வமேவ, த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ என்று சகாவாக, ஏன் அனைத்துமாக அவர் சிவபிரானை வழிபட்டதும் அவரது வாழ்க்கையில் ஒரு தனிச் சிறப்பாகும்.

நடுநாட்டில் அமைந்துள்ள திருநாவலூரில் அவதரித்தவர் சுந்தரர். அவரது இயற்பெயர் ஆரூரன். ஆலாலசுந்தரர் என்ற பெயரைக் கொண்ட அவர் சிவலோகத்தில் பார்வதி தேவியாருக்கு சேடியராக இருந்த கமலினி, அனிந்திதை ஆகிய இருவரைப் பார்த்து ஆசை கொண்டார். அதனால் அவரை பூலோகம் சென்று அதன் பயனை அனுபவிக்குமாறு சிவபிரான் அருள்பாலிக்க அவர் பூவுலகில் பிறந்தார். தேவியாரின் சேடியர் இருவரும் பரவையாராகவும் சங்கிலியாராகவும் பிறந்தனர். 18 தேவ நாட்கள் அதாவது 18 மனித ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்து செயற்கரிய பணியை எல்லாம் செய்து முடித்து தன் இருப்பிடம் மீண்டார் அவர்.

பூவுலகில் சுந்தரத் தோற்றத்துடன் அவதரித்த அவருக்கு சிவபிரானே சுந்தரர் என்ற அழகிய நாமத்தை அளித்தார்.

தெருவீதியில் விளையாடிக் கொண்டிருந்த அழகிய சிறுவனைக் கண்ட திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் அந்தப் பையனை அழைத்துக் கொண்டு போய் அரண்மனையில் வளர்க்கலானார். மணமுடிக்கும் வயதில் அவருக்குப் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் முடிக்கும் வேளையில் சிவபிரான் அங்கு வந்து அவரை தடுத்தாட் கொண்டார். சிவபிரானுக்கே அவர் மீளா அடிமையானார். அவர் பாடிய பாடல்கள் மொத்தம் 38000 என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது ஏழாம் திருமுறையில் அவர் இயற்றியுள்ள பதிகங்களாக நமக்குக் கிடைத்துள்ளவை 101 பதிகங்கள். 84 தலங்களுக்குச் சென்று அவர் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கை 1037.  சுந்தர நாயனாரின் பாடல்கள் அனைத்தும் அவற்றின் சிறப்பைக் கருதி, திருப்பாட்டு என்று விசேஷமாக அழைக்கப்படுகிறது.

அவர் ஒரு சிறந்த இசைக் கலைஞர். அவர் பாடிய பாடல்கள் அனைத்திற்கும் பண்கள் உண்டு. ஆகவே அவை பண் சுமந்த பாடல்கள் என்று சிறப்பாகக் கூறப்படுகின்றன.அத்தோடு தேவாரப் பாடல்களில் செந்துருத்திப் பண்ணில் பாடலை இயற்றியவர் அவர் ஒருவரே தான். வேறு யாரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.

அவர் ஆற்றியுள்ள அற்புதங்கள் பல.

 Time and Space என்று கூறுகின்றோமே காலம், வெளி என்று! – இவை இரண்டையும் கடந்த அருளாளர் அவர். ஏனெனில் காலமும் கணக்கும் நீத்த காரணனின் தோழர் அல்லவா அவர்!

சிவபிரான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் அவர் எடுத்த போது உலகமே வியந்தது. Space – இடம் என்பது தனக்கு ஒரு பொருட்டல்ல என்று அவர் நிரூபித்தார்.

அடுத்து அவிநாசி என்று இன்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூரில்,  அவர் சிவனடியார் வீட்டில் நடந்த ஒரு உபநயன விழாவில் கலந்து கொள்ளச் சென்ற போது எதிர் வீட்டிலிருந்து வந்த அழுகைக் குரலைக் கேட்டு அது என்ன அழுகைக் குரல் என்று விசாரிக்க, சிவனடியாரின் பிள்ளையின் வயதை ஒத்த தன் மகனை இழந்த தாயின் புலம்பல் அது என்று கேட்டு பச்சாதாபம் கொண்டார். இரு வருடங்களுக்கு முன்னர் ஐந்து வயதாகியிருந்த போது அவனை குளத்திலிருந்த முதலை ஒன்று விழுங்கிற்று என்று அறிந்து கொண்ட அவர் நேராக குளத்தருகே சென்றார். தனது நெருங்கிய தோழரான சிவபிரானை நோக்கிப் பாடலானார். இரண்டாவது பாடலில் உன்னை வணங்க வந்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் என்ன (புக்கொளியூரில் குளத்து இடை இழியாக் குளித்த மாணி என்னைக் கீறி செய்ததே?) என்று வினவினார். சிவபிரானைத் தோழனாகக் கொண்ட வன்தொண்டர் இல்லையா அவர்! நான்காவது பாடலில்,                                                                உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்                அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய                       புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே                                                               கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே            என்று இப்படி கட்டளை இடும் தொனியில் பாடினார்.

பாடலின் பொருள் :  “உன்னைத் தோத்திரம் செய்பவர் உரையை உகப்பவனே! உன்னை நினைப்பவர் தலை மேல் இருப்பவனே! அரையில் ஆடும் பாம்பை அணிந்தவனே! ஆதியும் அந்தமுமாய் இலங்குபவனே! சிறந்த முல்லை நிலமும் சோலைகளையும் கொண்ட திருப்புக்கொளியூர் அவிநாசியில் எழுந்தருளியிருப்பவனே! காலனையும் முதலையையும் பிள்ளையைக் கொண்டுவந்து தருமாறு ஆணையிடுக”               

                                                       உடனே நீரில்லாமல் வற்றி இருந்த குளத்தில் நீர் நிரம்பியது. அதனுள்ளிருந்து இரண்டு வருடங்கள் முன் ஐந்து வயதாக இருந்த பாலகனை  விழுங்கிய முதலை இப்போது ஏழு வயதாக் வளர்ந்த நிலையில் அவனை உயிருடன் உமிழ்ந்து விட்டுச் சென்றது. இது அவர் காலம் கடந்த அருளாளர் என்பதைக் காட்டுகிறது. விஞ்ஞானிகள் வியந்து ஆராயும் TIME TRAVELஐ இது மெய்ப்பிக்கிறது. காலம் என்பது ஒரு அற்புதமான விஷயம். அதில் அவதாரங்களும் அருளாளர்களும் எப்படி வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

ஸ்ரீ கிருஷ்ணர் சாந்தீபனி ம்ஹரிஷியின் குருகுலத்தில் குருகுலவாசம் முடிந்த நிலையில் குருதக்ஷிணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது ஆசாரியர் நீ எனக்கு மாணவனாக வந்ததே என் பாக்கியம் என்கிறார். ஆனால் ஆசிரமத்தின் உள்ளிலிருந்து குரு பத்னியின் அழுகைக் குரல் கேட்கவே கிருஷ்ணர் பதறிப் போய் என்ன விஷயம் என்று கேட்கிறார். குரு பத்னி தன் மகன் காலன் வசம் அகப்பட்டுக் கொண்டதைக் கூறி வருந்த, கிருஷ்ண பிரான், இதோ கொண்டு வருகிறேன் உங்கள் மகனை என்று கூறி விட்டு ஒரே பாய்ச்சலில் அவன் மகன் இருந்த பிரபஞ்சம் சென்று அவனை மீட்டு வரும் வரலாறு அதிசயமான ஒன்று. அதே போல திருஞானசம்பந்தர் இறந்து அஸ்தியாக இருந்த பூம்பாவையை மயிலையில் உயிருடன் மீட்ட சம்பவமும் அற்புதமானதே.  Miracles are  visiting cards of Saints! -அற்புதங்கள் என்பது அருளாளர்களின் அடையாள முகவரிகள்-என்பதே உண்மை!  

தொடரும்

tags-  பரிமாணம், காப்பியத் தலைவர்,  சுந்தரர்! ,

திருமந்திரத்தில் ரிக்வேத வரிகள் ! (Post No.9956)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9956

Date uploaded in London – 9 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே

–திருமந்திரம்

திருமந்திரத்தில் பசுக்களைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறதோ அது ரிக்வேதத்தின் எதிரொலி ஆகும்.

ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திருந்து பத்தாவது மண்டலம்  வரை உள்ள

10,000 மந்திரங்களில்  பசுக்களைப் பற்றியும் குதிரைகள் பற்றியும் ஏராளமான

குறிப்புகள் உள்ளன. அதில் குதிரைகள் பற்றிய விஷயங்களில் அதிகப் புதுமை இல்லை.

வேகமாகப் போகும் குதிரைகள்  வேண்டும் , போருக்கு ஏற்ற குதிரைகள் வேண்டும்

என்று கோருகின்றனர். ஆனால் பசுக்கள் பற்றி புதுமையான விஷயங்கள் சொல்லப்படுகின்றன . குகைகளில் மறைந்திருந்த அல்லது மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை இந்திரன் மீட்டான் அல்லது வேறு ஒரு கடவுள் மீட்டார் என்று எல்லா மண்டல ரிஷிகளும் பாடுகின்றனர்.

இதைப் படிப்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழும். ஒரு முறை குகையில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டதையா அவர்கள் இப்படி அடுத்தடுத்து பாடுகின்றனர்? அல்லது ஒவ்வொரு முறையும் இப்படி எதிரிகள் மறைத்து வைத்தார்களா?

எந்த மந்திரத்துக்கும் மூன்று வகை விளக்கம் சொல்ல முடியும்.

1.மந்திரத்துக்கு இலக்கிய ரீதியில் அர்த்தம் சொல்லாதே (Don’t take it literally) . அதன் மூலம் வரும் ஒலி அலைகளால்  நல்ல விளைவுகள் ஏற்படும் அதைப் பாடிக்கொண்டே இரு. இதுதான்

பழமைவாதிகள் அணுகுமுறை . மடாதிபதிகளும் இப்படியே நம்புகின்றனர்.

2.மேலை நாட்டினரும் இந்து மத விரோதிகளும் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் பார்த்து புதிய வியாக்கியானம் செய்வார்கள். பெரும்பாலும் விஷமத்தனமான விளக்கமாகவே இருக்கும் .

‘சிஸ்ன தேவாஹா’ என்பதை காமத்தை வழிபடுவோர், செக்ஸ் (Lewd) விரும்பிகள் என்றே பல வெள்ளைக்காரர்களும் மொழிபெயர்த்தனர் . அவர்களில் விஷம் கொண்ட விஷமிகள் இது ஆண்குறியைக் குறிக்கும். ஆண் குறி என்பது சிவ லிங்கத்தைக் குறிக்கும். இது சைவர்களைத் தாக்கி ஆரியர்கள் பாடியது; சிந்து வெளி மக்களைத் தாக்கி ஆரியர்கள் பாடியது என்றெல்லாம் எழுதி அசிங்கப்படுத்தினர் .

3.மூன்றாவது அணுகுமுறை – அவர்கள் மறை பொருளில் , சிலேடைப் பொருளில் வேறு விஷயத்தைச் சொல்கிறார்கள்  என்பர்.

இதில் எதுவும் சாத்தியமே. திரைப்படப் பாடல்களில் கூட இப்படி இரு பொருள்படும்படி பாடி செக்ஸ் விஷயங்களைக் கொண்டு வருவதைக் காண்கிறோம்.

சிவவாக்கியர், திருமழிசை ஆழ்வார், திருமூலர் போன்றோர்  வெறும் எண்களை மட்டும் சொல்லி  நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். வேதங்களிலும் ஒரே ம ந்திரத்தில் ஆறுமுறை எண் மூன்று வருவதைக் காணலாம். எல்லோருக்கும் தெரிந்த கம்ப ராமாயணப் பாடலான “அஞ்சிலே ஒன்று பெற்றான்”…………. என்பதில்  எண்  5 என்பது பல பொருள்களில் வருவதை அறிவோம்.

மறை  பொருளுக்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன். மதுரை ஜவுளிக்கடைகளில் பெண்கள் பயங்கரமாகப் பே ரம் பேசுகையில் கடை ஊழியர் கடை முதலாளியை ஒரு பார்வை பார்ப்பார். அவர்கள் தங்களுக்கே உரிய பரி பாஷையில் வாடிக்கையாளருக்கு இந்த விலையில் கொடு அல்லது கொடுக்காதே என்று சொல்லுவர் . அது தமிழ்ச் சொல்லாகவே இருக்கும் ஆனால் அதன் பொருள் வாடிக்கையாளருக்கு விளங்காது . இன்னொரு உதா ரணமும் சொல்லலாம் குழந்தைகளுக்குத் தெரியக்கூடாதென்பதற்காக பெற்றோர்கள் ‘க’ என்ற எழுத்தை எல்லா எழுத்துக்களுடனும் சேர்ப்பர். சாக்லேட் என்பது குழந்தைகளுக்குத் தெரியக கூடாது  என்பதற்காக கசா,  கக்  , கலே  , கட்  எங்கே இருக்கிறது ? என்பர் .

ஆகையால் வேத மந்திரத்தை இந்து மத அறிஞர்களே அணுகமுடியும். நாம் பார்ப்பதோ, வேத மந்திரங்களை நம்பாத, வேத மதத்துக்கு எதிரான, வேதங்களை செயல் முறையில் உபயோகிக்காத  ‘அஹிந்து’க்களின் பொருள் ஆகும்.

திருவள்ளுவர் ஐம்புலன்களுக்கு ஐந்து மத யானைகளை ஒப்பிடுகிறார். அவர்கள் பயன்படுத்தும் இடத்தைக்கொண்டு யானை என்பதற்கு புலன்/ இந்திரியம் என்று நாம் பொருள் கற்பிக்கிறோம். இதே போல திருமூலரும் பசுக்களை ஐம்புலன்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார். இதோ அந்தப் பாடல்-

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே

–திருமந்திரம்

இங்கு பார்ப்பான் என்பது உள்முகமாகப் பார்க்கும் அகக்கண் உடையவன் இரு பொருள் கொள்ள  வேண்டும். அவனிடமுள்ள பசுக்கள் ஐம்புலன்கள்.; அதைக் கட்டுப்படுத்தாமல் மேயவிட்டால் அது ஆசை வயப்பட்டு வெறி கொண்டு திரியும் . அதையடக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் அவை உள்ளத்திலே அமிர்த தாரையைப் பொழியும். அதாவது யோகத்தில் நிலைத்து நிற்பவர்கள் புலன் இன்பங்களைக் கைவிட்டால், அவர்கள் உள்ளத்தில் பால் போன்ற தூய்மை ஏற்படும். பால் சாப்பிட்டால் உடலுக்குக் கிடைக்கும் பலன்கள் போல இந்தப்பாலால்  உள்ளத்துக்குக் உரம் கிடைக்கும் .

இப்போது ரிக் வேத மந்திரங்களை ஒப்பிடுங்கள் :-

ரிக் வேதம் 1-6-5

 இந்திரனே, நீ காற்று தேவனான ‘மருத்’ கூடச் சேர்ந்து குகையினுள் மறக்கப்பட்டிருந்த பசுக்களைக் கண்டு பிடித்தாய் .

இதற்கு உரை எழுதியோர் இந்திரன் தன்  வஜ்ராயுதத்தால் (இடி, மின்னல்) மலையிலுள்ள மேகங்களை வெளிக்கொணர்ந்தார். (மேகங்கள் = பசுக்கள்)

1-11-5

வஜ்ராயுதத்தை ஏந்தி நிற்கும் நீ (இந்திரன்), பசுக்களை மறைத்து வைத்திருந்த வலனின் குகையைத் திறந்தாய்; அவனால் துன்பமுற்ற தேவர்கள் உன்னுடைய நட்பை பெற்றவுடன் அச்சத்தை விட்டார்கள்

இங்கேயும் பசுக்கள் என்பதற்கு மேகங்கள்  என்றே உரைகாரர்கள் எழுதியு ள்ளனர்

7-87-4

பசுவுக்கு மூவேழு நாமங்கள் உண்டு

இதற்கு உரை எழுதியோர் இங்கு பசு என்பது ‘சொல்’ WORD என்றும் 21 வகையான வேள்விகள் அல்லது 21 சந்தங்கள் என்றும் ஊகிக்கின்றனர் . தமிழ் இலக்கிய புறநானூற்றிலும் (பாடல் 166) மூவேழ் துறை, யாகம் தொடர்பான பொருளில் வருகிறது.

1-191-14

இங்கு மூவேழு பெட்டை மயில்கள் என்று விஷக்கடி மந்திரத்தில் வருகிறது. பாம்பும் மயிலும் எதிரி என்பது தெரிந்ததே.1-191-12ல் மூவேழு அக்கினிப் பொறி கள் என்றும் ரிஷி அகஸ்தியர் பாடுகிறார். இங்கெல்லாம் 3x 7=21 என்பதன் பொருள் விளங்கவில்லை சாயனர் 21 பொறிகளை 21 பறவைகள் என்கிறார். ஏன் 21 என்று எவருக்கும் சொல்ல முடியவில்லை .4-1-16 மந்திரத்திலும் பசுவுக்கு 21 பெயர்கள் என்ற வரி வருகிறது .

2-34-1

காற்று தேவதைகளான மருத் தேவர்கள் பசுக்களை புலப்படுத்தினார்கள் ; பசு= மேகம்

XXX

இவ்வாறு ரிக் வேதம் முழுதும் பசு, குகை, 21 மர்மம் வருகிறது. ஒரு சின்ன விஷயத்தை எதற்காக ரிஷிகள் மீண்டும் மீண்டும் பாடவேண்டும்? அதை எதற்காக சொல் மாறாமல் எழுத்தாக கூடாது என்று சொல்லி வாயமொழி மூலம் மட்டுமே பரப்ப வேண்டும்?

திருமூலர் எதற்கு ஐம்புலன்களையும் பசுவாக உருவகிக்கவேண்டும் ? இதனால்தான் இதை மறை= ரஹஸ்யம் என்கிறோம். மறைவான பொருள் உடைய வேதத்தை அதைப் பயிலாத, அதை இந்துக்களைப் போல மதிக்காத , இது விரோத சக்திகள் மொழிபெயர்க்கப் போய் தோல்வியே கண்டார்கள் மாக்ஸ்முல்லர் கும்பலை சேர்ந்த 20 க்கும் மேலான வெள்ளையாட்கள், மனம்போனபடி அர்த்தம் எழுதிவைத்து இருக்கிறார்கள்!

நாம் உண்மைப் பொருளை உணர வேதத்தைப் போற்றும், வேதத்தைப் பின்பற்றும் பெரியோர்களின் வாயிலாகவே கேட்கவேண்டும்/ தேவார, திருவாசக, திவ்யப்பிரபந்த வரிகள் அப்படியே ரிக் வேதத்தில் உள்ளது.

ஒரு  ஆழ்வார் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் என்று ஆடிப்பாடி கூத்தாடுகிறார் . அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ரிஷி கண்டேன் கண்டேன், கண் முன்பாக அவன் தேரைக் கண்டேன் என்கின்றனர்.!

–சுபம்–

tags-  திருமந்திரம்,  ரிக்வேத வரிகள், பசுக்கள்