இந்திய ரிஷி கிரீஸில் கரடி ஆன கதை!- Part 2 (Post No.10,728)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,728

Date uploaded in London – –    9 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Part  1 was posted here yesterday

பழைய கிரேக்க மொழியில் காணப்படும் சுமார் 50 சொற்களை நான்  கட்டுரைகளில் காட்டியுள்ளேன் . ஈரானில் ஒரு கோடியில் பேசப்பட்டு அழிந்து போன அவஸ்தன் மொழியில் 1 முதல் 100 வரை அப்படியே ஸம்ஸ்க்ருத எண்கள் இருப்பதைக் காட்டினேன். துருக்கியின் பொகஸ்கொய் நகரிலிருந்து இந்தோனீஷியாவின் அதிபயங்கர போர்னியோ தீவின் காட்டுக்குள்ளும், வியட்நாமிலும் உள்ள மூலவர்மன், ஸ்ரீமாறன் கல்வெட்டுகளையும் காட்டினேன். அதாவது கி.மு 1400 முதல் கி.பி இரண்டாம்  நூற்றாண்டுக்குள்ளேயே சம்ஸ்க்ருதம் ஈரான் முதல் வியட்நாம்- இந்தோனேஷியவரை காணப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக எகிப்தில் கி.மு 1500 முதல் வேத கால குதிரை திடீரென்று காட்சி தருகிறது. தசரதன் கடிதங்கள் அங்கே உள்ளன (ராமாயண தசரதன் அல்ல. துருக்கியை ஆண்ட தசரதன்) உலகெங்கும் காணப்படும் தமிழ்ச் சொற்களும் ஸம்ஸ்க்ருதச் சொற்களும் வெள்ளைக்காரன் சொன்ன பொய்களை பானையை தடிக்கம்பால் அடித்து நொறுக்குவது போல ( இது அதர்வண வேதத்தில் அடிக்கடி வரும் உவமை) தூள் தூள் ஆக்கிவிட்டது.

நிற்க, சப்ஜெக்டு subject க்கு வருவோம். கட்டுரையின் தலைப்பை விவாதிப்போம் . ரிக் வேதத்தில் பத்து புஸ்தகங்கள் / மண்டலங்கள் உண்டு .அதில் முதல் மண்டலத்தில் ‘ரிக் ஷ’ என்ற சொல் வருகிறது. இதற்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘கரடி’ என்று அர்த்தம். ஆனால் பின்னர் இதே சொல்லை நட்சத்திரம் என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஸப்த (7) ரிஷி நட்சத்திரக் கூட்டத்துக்குப் பயன்படுத்தினர். அந்த இடம் சதபத பிராஹ்மணம் என்னும் நூலில் வருகிறது அதற்கு உரை எழுதிய சாயனர் அங்கே ‘ரிக் ஷ’  என்று சொன்னது ரிஷிகள் என்று பொருள்படும் என்று எழுதியுள்ளார். சாயனர் நமக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் வேதங்களோ பல அல்லது சில ஆயிரம் ஆண்டு பழமையானவை.

சாயனர் எழுதியதை இந்து மத சந்யாசிகள்- குறிப்பாக சங்கராச்சார்ய மடங்கள் பெரிதும் புகழவும் மாட்டார்கள்; பின்பற்றவும் மாட்டார்கள்; ஏனெனில் வேதத்துக்கு அர்த்தம்  பார்க்காமல் நம்பிக்கையுடன் ஓதினால் போதும்; பலன்தரும் என்பது அவர்கள் வாதம். நல்ல வேளை இப்படிச் செய்ததால்தான் உலக அதிசயம் என்று எல்லோரும் அறிவிக்கும் ரிக் வேதம் நமக்கு எழுத்துப் பிசகாமல் வாய்மொழி மூலமாகவே கிடைத்தது.

சதபத பிராஹ்மண நூலுக்கும் யாஸ்கர் எழுதிய சொற்பிறப்பியல் நூலுக்கும் (நிருக்தம்) வெள்ளைக்காரன் குத்திய முத்திரை கி.மு எட்டாம் நூற்றாண்டு. அப்போதே யாஸ்கருக்கே 600 வேத சொற்களுக்கு அர்த்தமே தெரியவில்லை என்று அரவிந்தர் எழுதியுள்ளார்.

இதே கி.மு எட்டாம் நூற்றாண்டில்தான் கிரேக்க இலக்கிய வரலாறும் துவங்குகிறது. அதாவது ஹோமர் BLIND POET HOMER என்னும் அந்தகக் கவிஞர் எழுதிய இலியட் , ஆடிஸி ILIAD AND ODYSSEY என்ற இரண்டு காவியங்கள் உதயமாயின. அதில் கிரேக்க மொழி ARKTOS ஆர்க்ட்டோஸ் = கரடி என்ற சொல்லை அவர் இந்த சப்த ரிஷி நட்சத்திரக் கூட்டத்துக்குப் பயன்படுத்துகிறார். சதபத பிராஹ்மணத்திலும் அதேகால ஹோமர் காவியங்களிலும் ஒரே கருத்து உளது. இங்கேதான் வெள்ளைக்காரன் அவன் தந்திரத்தைக் காட்டுகிறான். நாம் எல்லோரும் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்த காலத்தே பயன்படுத்திய சொல் கரடி.; பின்னர் நீங்கள் ரிஷி என்று மாற்றிவிட்டீர்கள் என்று ‘கரடி விடுகிறான்’.

அவன் உரை , பொய்யுரை என்பதற்கு நமக்கு நிறைய சான்றுகள் உண்டு

எகிப்தியர்கள் இதே நக்ஷத்திரக் கூட்டத்துக்கு நீர்யானை HIPPOPOTAMUS என்று பெயர் சூட்டினர் . இராக் என்னும் மெசபொடோமியாவில் வாழ்ந்தவர்கள் இதை WAIN = WAGON= VAHANA IN SANSKRIT வண்டி, வாஹனம் என்றனர். அதையும் ஹோமர் ஓரிடத்தில் பயன்படுத்துகிறார் . ஆக , ஹோ மர்தான்  காப்பி அடித்தார்; அது மட்டுமல்ல; அது மேற்கு நோக்கி நாகரீகம் (WESTWARD MOVEMENT OF IDEAS AND CULTURE) பரவியத்தைக் காட்டுகிறது  வெள்ளைக்காரன் சொன்னதுபோல (NOT EASTWARD MIGRATION OF CULTURE)  கிழக்கு நோக்கி ஆரியர்கள் வரவில்லை.

இதற்கு இன்னொரு சான்றும் உளது வட திசையைக் குறிக்க இந்த நட்சத்திரக்கூட்டத்தைக் குறிப்பர். அதில் ஒரு லத்தீன் மொழிச் சொல் ஏழு காளைகள் / எருதுகள். SEVEN OXEXN அதாவது இதே ஏழு கரடிக்கூட்டத்தை காளைகள் OXEN என்று பார்த்தோரும் உண்டு. அந்த ஏழு காளை குறிப்பும் ரிக் வேத மூன்றாவது மண்டலத்தில் உள்ளது. ஈரான் நாட்டுடைய கோட்டானீஸ் KHOTANESE LANGUAGE மொழியில் வடதிசையக் குறிக்க 7 கரடி கள் என்பர். லத்தீன் மொழி தமிழுக்கு சற்றே முந்தியது. சங்க இலக்கியத்துக்கும் முன்னர் அவர்கள் இலக்கியம் வருகிறது. ஆக 7 காளைக் குறிப்பும் லத்தீன் மொழியில் இருப்பது , இந்தக் கருத்து ரிக் வேதத்தில் இருந்து மேற்கு நோக்கிச் சென்றதைக் காட்டுகிறது.

XXXX

அது சரி , இந்துக்கள் முதலில் ரிக் வேதத்தில் “கரடி – ரிக் ஷ”  என்று சொன்னது பின்னர் எப்படி ரிஷி ஆனது?

இதை ஒரு தமாஷ் என்றே நான் கருதுகிறேன். காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் 12 ஸம்ஸ்க்ருத மாதங்களும் எப்படி சித்திரை முதல் பங்குனி என்று ஆயின என்று விளக்கும் அற்புதமான சொற்பொழிவில் எழுத்துக்கள் இடம் மாறி உச்சரிக்கப்படுவதைக் காட்டுகிறார்; அப்போது தமாஷாக ஒரு JOKE ஜோக் அடிக்கிறார். நாம் கூட மதுரை என்பதை மருதை என்றும் குதிரை என்பதைக் குருதை என்றும் சொல்கிறோம் அல்லவா என்று !

நான் மதுரைக்காரன் என்பதால் இந்த ஜோக்கைப் படித்துப் படித்து ரசித்தேன். ஏனெனில் நாங்கள் இதைக் கிராமத்துக்காரர் பேச்சில் கேட்பது மட்டுமல்ல; மதுரை என்பதே வட மதுரைக் கிருஷ்ணனுடன் தொடர்புடையது அல்ல; மருதம் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே மருதை வந்து, அது மதுரை ஆனது என்றும் நூல்களில் எழுதியுள்ளனர். அவர்களும் ரு / ரை இடம் மாறியதை ஒப்புக்கொள்கின்றனர். ஆக ரிக்ஸ= கரடி , ரிஷி ஸ் = முனிவர்கள் ஆனதில் வியப்பில்லை. இதை நான் ஏன் ஜோக் என்று சொல்கிறேன் என்றால் பிராஹ்மண நூல்களில் (சதபதம், ஐதரேயம்) இதுபோன்ற சொற்புரட்டுகள், அதற்கான கதைகள் நிறையவே உள்ளன. மனு ஸ்ம்ருதியிலும் இது போன்ற சொற்பிறப்பியல் ETYMOLOGICAL FUN, PUN, EXPLANATIONS, RIDDLES விஷயங்கள் உண்டு .

இதெல்லாம் ஒரு புறமிருக்க சதபத பிராஹ்மண நூலின் காலம் கி.மு. 3000 என்று எஸ்.பி. தீக்ஷித் S.B.DIKSHIT என்னும் அறிஞர் சொல்வதையும்    மனதில் கொள்ளவேண்டும் . ஹெர்மன் ஜாகோபியும் பால கங்காதர திலகரும் சொல்லும் ரிக் வேத காலம் கி.மு 4000 முதல் 6000 என்பதை ஏற்றுக்கொண்டால் வெள்ளக்காரன் வாதம் தவிடு பொடியாகும் எஸ்.பி. தீட்சித்தும் கிருத்திகா (KRITTIKA= PLEIADES CONSTELLATION) நட்சத்திரம் கிழக்கில் உதயமாகும் குறிப்பை வைத்து சதபத நூலுக்கு காலம் கணித்துள்ளார் ; வெள்ளைக்காரர்கள் இந்த வான சாஸ்திர கணக்குகளை கண்டுகொள்வதே இல்லை. காரணம் நமக்கே விளங்கும்.

முடிவாகச் சொல்லுவது இதுதான்; வேதத்தின் காலம் மிகவும் பழமையானது. அதாவது குறைந்தது 4000 ஆண்டுகளுக்கும் முந்தையது; ஒரு வேளை , சிந்துவெளி நாகரீகமே வேத கால  நாகரீகமாக இருக்க லாம். ஆகையால் வெள்ளைக்காரன் வாதங்களை விலக்கி விட்டு நாம் நமது பண்பாட்டை விளக்குவோமாக

–சுபம் —

tags- கிருத்திகா, சதபத பிராஹ்மண , ‘ரிக் ஷ’, கரடி, ரிஷி 

கவிஞர்களின் வாய்ஜாலம்-1 (Post No.10,727)

picture of P R RAJAM IYER

WRITTEN BY B. Kannan, Delhi
Post No. 10,727
Date uploaded in London – – 9 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கவிஞர்களின் வாய்ஜாலம்-1
Written By B.Kannan, Delhi

அன்புள்ள உலகளாவியத் தமிழ் நெஞ்சங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
தற்போதைய சுற்றுப்புறச் சூழல்கள் தரும் மன அழுத்தத்திலிருந்து விடுபட நாம் சற்று நகைச்சுவையை .ரசிப்போமே வாருங்கள்……

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பெரியோர்களின் அனுபவ வாக்கு. மன இறுக்கத்தைக் களைய அதுவே ஒரு சிறந்த மருந்து. முற் காலத்தில் செல்வச் செழிப்புள்ள ஜமீந்தார்கள், சமஸ்தானாதிபதிகள், மன்னர்கள் எனப் பலரும் தங்களருகில் ஒரு புலவர் குழாமையே வைத்தி ருப்பர். தங்கள் எஜமானரின் மனபாரத்தைக் குறைக்க, சிரித்துச் சிரித்து விலா இற்றுப் போகும் படியானச் சம்பவங்களை நயமுடன் நக்கல் நையாண்டியுடன் சுவைபடக்கூறிக் குஷிபடுத்துவர். பீர்பல், தெனாலிராமன் போன்றவர்களை நாம் மறக்க முடியுமா? தனி மனிதர்களிடமும் இந்த நகைச்சுவை உணர்வு மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது. அப்படிப்பட்ட ஓரிரு நிகழ்வுகளை தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி மொழி இலக்கியங் களிலிருந்து காண்போம்……….

ஶ்ரீமான் வேங்கடரமண ஐயங்கார் கொங்குவள நாட்டில் விசயமங்கலத்திற்கு அண்மையில் உள்ள நடுப்பட்டி எனும் சீனிவாசபுரத்தில் வைணவ அந்தணர் குலத்தில் 1865ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் சதகம் பதிகம் முதலிய பல சிறு நூல்கள் பாடியுள்ளார்.வேடிக்கையாகவுஞ் சிலேடையாகவும் பாடுவதில் வல்லவர். பொதுவாக மக்களால் அதிகம் விமரிசிக்கப்பட்டவர்கள் வக்கீல்கள் என்றால் மிகையாகாது  அவர்கள் சொத்துக்காக வழக்கு தொடுக்கும் கட்சிக் காரர்களிடம் கனிசமான காசை வக்கீல் ஃபீஸாகக் கறந்துவிடுவார்கள்.இதன் பின்னணியில் ஒரு நையாண்டிப் பாடலை ஐயங்கார் அவர்கள் இயற்றியுள் ளார். நாய்களை வக்கீலுக்கு நிகர் என உயர்த்தியப் பாட்டுதான் அது. இவ் வெண்பாவின் கருப் பொருளைப் பாரதியார் மறவன்பாட்டில் விரித்துப் பாடி யுள்ளார்.

எச்சிக் கலையும் எடுத்துப்பீ சாப்பிடலால்
இச்சித் துலாவோ டிருத்தலால் – மெச்சுதுரை
மக்கள்பாற் சென்று வாய்ச்சவடால் ஆடலால்
குக்கலும்வக் கீலெனவே கொள்.

வக்கீல் ஃபீஸ் என்று வாங்கிச் சாப்பிடுவதால், இச்சித்து லாவோடு இருத்தலால்–துரைமார்களுடன் கூடிக் குலாவி இருந்து, வெள்ளையரிடம் வாய்ச்சவடால் ஆடலால்.–ஆங்கிலேயருடன் வம்பளப்பதால் நாய் நாக் கைச் சவட்டி ( வளைத்து )- உண்பது போல் செயல்படுவதால் அவைகளும் வக்கீல் எனக் கொள்ளலாம் என்கிறார். துரை இம்மென்றால் நாய்போலே (குக்கலும்) உழைக்கத் தயாராய் வக்கீல்கள் இருப்பார்கள் என்று பொருள் படவும் நகைச்சுவையுடன் கூறுகிறார்! இம்மாதிரியான வேறு பல ருசிகரச் சம்பவங்களை, கலிவிடம்பனா, மதிமோச விளக்கம் போன்ற நூல்களிலும் படித்து மகிழலாம்!
——————————————————————————–
இன்றைக்கு 129 ஆண்டுகளுக்கு முன்(1893) விவேக சிந்தாமணி சஞ்சிகை யில் வரிக்கு வரி நகைச்சுவைத் ததும்ப விறுவிறுப்பான ஒரு தொடரை எழுதியவர் பி.ஆர். ராஜம் ஐயர். ‘ஆபத்துக் கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித் திரம்’ என்னும் பெயரிலமைந்தத் தொடரை எழுதியவர். இது, தமிழில் வெளியான முதல் நீண்ட தொடர்கதையும், தமிழில் தத்துவம் பற்றிப் பேசிய முதல் நாவலும் ஆகும். இரு தலைப்புகள் கொண்ட ( ஆரணி யாரின் ‘அரசூர் இலட்சு மணன் அல்லது அதியற்புதக் கள்ளன்’, வடுவூராரின் ‘இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி’ நாவல்கள் ஞாபகம் வருகிறதா?) முதல் நாவல் என்பது உட்பட பல்வேறு சிறப்புகளை உடையது. தமிழின் முதல் நாவல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ 1879ல் வெளிவந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்துத் தான் (1896) இந்த நாவல் நூலாக வெளிவந்தது என்றாலும், பாத்திரப் படைப்பிலும், கதை சொல்லும் நேர்த்தியிலும், உருவகத்திலும், நாவல் அமைப்பிலும் இதுவே முதல் நாவலாக இலக்கிய ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இதோ அவரது நகைச்சுவை வண்ணம்….

இந்த நாவலின் ஏழாம் அத்தியாயம் ஒரு தமிழ்ப் பண்டிதரின் பழக்க வழக் கங்களைச் சிரிப்பூட்டும் வகையில் படம் பிடித்துக் காட்டுகிறது.
மதுரையிலிருந்த ஒரு ஜில்லா பள்ளிக்கூடம், அதன் தமிழாசிரியரைப் பற்றிதான் சொல்கிறார். சரியாய்ப் பத்து மணிக்குப் பள்ளியின் மணி அடித் தவுடன் சுமார் 20 மாணவர்கள் ”மெட்ரிக்குலேஷன்’ வகுப்பில் ஆஜராகிறார் கள். அவரவர் மேஜையின் மேல் எழுதுவதற்கு வேண்டிய மைக்கூடு வைக் கப் பட்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் அம்மைத் தழும்புகள் நிறைந்த முகமும், உயரமான கறுத்த நிறமுடைய ஆசிரியர் வந்தார்.

அவர்தான் அம்மையப்ப பிள்ளை எனும் நாமகரணம் கொண்டத் தமிழ்ப் பண்டிதர். ஐந்தாறு வீடுகள், ஒரு புளியமரமும் உள்ளடக்கிய ஒரு பெரிய பட்டணமான ஆடுசாபட்டி அவர் பிறந்த ஊர்! அவர் அசகாய சூரர். எமகம், எதுகை, திரிபு என்று இப்படிப் பாட ஆரம்பித்தாரானால் குரங்குகள் அத்திப் பழத்தை உதிர்ப்பதுபோல் சடசடவென்று உதிர்த்து விடுவார். யாராவது தமிழ் தெரிந்தவன் அவர் கையில் அகப்பட்டுவிட்டால் ராமபாணம் போட் டாற்போல மூச்சு விடுமுன்னே முந்நூறு, நானூறு கணக்காகப் பாட்டுகளை வீசி அவன் காதைச் சல்லடைக் கண்களாகத் தொளைத்துவிடுவார்.

மைக்கூடிலுள்ள மையை ஆசிரியர் மேல் தெறிக்க வைத்து, அதைத் துடைக்கிறேன் பேர்வழி என்று ஒரு மாணவன் வண்ணம் பூசுவது போல் அதை மேலும் சட்டை, முகம் முழுவதும் பூசிவிட,பண்டிதர் திருவிழாவில்

விநோதமாய்ச் சிங்காரித்துக் கொண்ட கோமாளி போல் காட்சியளிக்க, வகுப் பில் மாணவர்கள் அடிக்கும் ரகளை ஒரே களேபரம் தான், போங்கள்!

ஒரு சமயம் தமிழ் தெரியாத ஒரு பைராகிக்கும் ஒரு சாஸ்திரியாருக்கும் சண்டை உண்டாய்விட்டது. பைராகி தன் வசவுகளில் ‘காரே, பூரே’ என்று அபரிமிதமாய் வைய, சாஸ்திரியார் முட்டாள், போக்கிரி என்றிப்படித் தனக்குத் தெரிந்த வசவுகளையெல்லாம் வைது பார்த்தார். அவன் வாயொ டுங்குகிற வழி யாகத் தெரியவில்லை. அய்யர் பழைய வசவுகளுக்கு இவன் கட்டுப்பட மாட்டான் என்று நினைத்து புதுமாதிரியாக, ‘அடா போடா, புஸ்த கமே, சிலேட்டுப் பலகையே, பென்சிலே, ஏர் உழும் கலப்பையே, மோர்க் குழம்பே, ஈயச்சொம்பே, வெண்கலப்பானையே’ என்று இப்படி வாயில் வந்த வார்த் தையை எல்லாம் வசவாக அடுக்கவே, அந்தப் பைராகி வேறு புது வசவுகள் அகப்படாமல் திண்டாடித் தத்தளித்துப் போனான்.

அதுபோல அம்மையப்ப பிள்ளையுடன் ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம் பித்தால் ஆயிரக்கணக்கானப் பாட்டுகளைச் சொல்லி எதிராளி யின் வாயை அடக்கி விடுவார். அந்தப் பாட்டுகள் எடுத்த விஷயத்திற்கு சம்பந்தமில்லா விட்டால் என்ன? அதனுள் என்ன குறைவு? பாட்டுகள் பாட்டுகள்தானே! அதுவும் அவர் பாட ஆரம்பித்தால் அவருக்குச் சரியாக மகா வைத்தியநாதையரால் கூடப் பாட முடியாது.!” எனப் போகிறது விருத்தாந்தம்.

சங்கீத ஞானம், நல்ல சாரீரம், தமிழ்ப் புலமை ஆகியவற்றில் சிறந்து விளங்கியது மட்டுமின்றி நல்ல புத்திமானாகவும் பிள்ளை திகழ்ந்தார். அதற்கு ஒரு தகுந்த எடுத்துக்காட்டு இதோ…….

ஒரு சமயம் அவருக்கும், அம்மாப்பட்டிக் கவிராயருக்கும் இடையே, “நடை அழகுக்குப் பெயர்போன அன்னப்பட்சி உலகில் தற்போது உண்டா? இருக்கு மானால் அது எது?” என்ற வாதம் எழுந்தது. கவிராயர்,”காகம் தான் அன்னம். பட்சிகளுக்குள் நடையில் மற்றவரைக் கவர்வது காக்கையே. ஆதலால் அதுவே அன்னப்புள்ளாதல் வேண்டும்!” என்று ஆதாரங்களைக் காட்டிச் சாதித்தார். பண்டிதரோ, “அல்ல, அல்ல!அன்னம் என்றால் சாதம். அன்னம், சாதம் இரண்டுமே வெள்ளை. அன்னமும் ஒரு பட்சி, சாதத்தையும் நாம் பட்சிக்கிறோம் (சாப்பிடுகிறோம்). தட்டுபவனைத் தட்டான் எனச் சொல்வது போல் சாதத்தையே அன்னமென்று உருவக நவிர்ச்சி அலங்காரத்தில் சொல்லப்பட்டுள்ளது!” என்று ஆரவாரமாய்ப் பல பாட்டுகளை ஆதாரம் காட்டி முழங்கினார்.

இவ்விவாதம் இடைவிடாமல் பத்து நாட்கள் நடக்க, கடைசியில் பிள்ளை அவர்கள் கவிராயரிடம்,” அன்னத்தைக் காக்கை என்று சொன்னீர். அதனால் நீரே காக்கை!” எனப் பரிகசித்தார். விடுவாரா கவிராயர். “அன்னத்தைச் சாதம் என்று சொன்ன நீங்களே சாப்பாட்டு ராமன்!” எனப் பதிலுக்குச் சாடினார். அவர் இவரை, “கவிராயர் குரங்குராயர்!” (கவி=குரங்கு) என்று சீண்ட, இவர் அவரை, “அம்மையப்பப் பிள்ளை என்றால் உமக்கே தகும்!” என அவரது தழும்பு நிறைந்த முகத்தைச் சுட்டியவாறு எக்காள மிட்டார். அடுத்து அடிதடியிலும் இறங்கிவிட்டனர். போலீஸ்காரர் சமாதா னம் செய்யப் பிரிந்தனர். கவிராயர் இரவோடிரவாக ஊர்போய்ச் சேர்ந்தார். அதை ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகே அவரை வாதில்வென்றுவிட்டதாகப் பெருமைப் பேசிக் கொண்டார் பிள்ளை!. அம்மாப்பட்டி யிலோ கவிராயர் பண்டிதரை ஜெயித்து விட்டதாக ஒரே அல்லோலகல்லோலம்!

நடை அழகுக்குப் பெயர் பெற்றது அன்னமோ, காகமோ, பி.ஆர்.ஆரின் சொல்லாடலில் பொதிந்துள்ளத் தமிழ்நடை அழகே, அழகு!
———————————————————————————-
சாமானியர்களான ஐந்து புலவர்கள் எப்படிப் பெரும் கவிஞராகிய ஒட்டக் கூத்தரை நக்கலும், நையாண்டியும் கலந்த பாடல்களால் ‘கலாய்த்தார்’ கள் என்பதைப் பார்ப்போம்……….

பிள்ளைப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் தமிழைப் பிழையாக உரைப்போர் தலையில் குட்டுவானாம். புலவர் வில்லிபுத்தூரார் தன்னுடன் வாதிட வரும் பிற புலவர்கள் அதில் தோற்றால் அவர்களது காதைஅறுத்து விடுவாராம். இவர்களெல்லாம் இன்று நம்மிடையே இல்லாததால் யார் வேண்டுமானாலும் தான் ஒரு கவி என்று கூறிக்கொண்டு விளையாட்டு போல் தமிழில் கவிதை என்று சொல்லி எதை வேண்டுமானாலும் எழுத லாம் என்று கேலியாக இடித்துரைக்கிறது

“குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே””
என்ற செய்யுள்.

தமிழின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்த குலோத்துங்கச் சோழனின் பிரதான அவைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். தான் ஒரு தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் உடனே அவரை சிறையில் அடைத்து விடுவார். அவர்கள் சிறையிலிருந்து மீள வாய்ப் பாக அமைவது ஒட்டக் கூத்தர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் கூறுவது தான். சரியான விடை கூறாதவர்கள் இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார், சோழன் பாண்டிய இளவரசியை மணந்த போது ராணியுடன் புகழேந்திப் புலவரையும் சீதனமாக அனுப்பி வைத் தான் பாண்டிய மன்னன். ஒரு சமயம், தன் பாட் டுக்கு எதிர்ப் பாட்டுரைத்தப் புகழேந்திப் புலவரை எவ்வித விசாரணையு மின்றி ஒட்டக்கூத்தர் சிறையிலடைத்துவிட்டார். புகழேந்திப் புலவர் சிறை யிலிருந்த காலத்தில் தன்னுடன் இருந்த சிலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத் துப் புலமை பெறவைத்தார். அவர்கள் ஒட்டக்கூத்தரைச் சந்திக்கும் சமயம் ஒருநாள் வந்தது.

முதலில் குயவன் முன்னால் வர, அவனை நோக்கி ஒட்டக்கூத்தர், எதுகை மோனை முதலிய நயங்கள் கொண்ட இயல்,இசை,நாடகமெனும் முத்தமி ழான மதங்கொண்ட யானையாகிய என்னை எதிர்ப்பவர் யார்? எனும் பொருள்பட,
“மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன்வந்தெதிர்த்தவன் யாரடா?” என்று கேட்டார். அதற்குக் குயவன் சற்றும் தயங்காமல், நானா? நான் களிமண்ணால் குவளைகள், குடங்கள், சட்டிகள் முதலியவற்றை உருவாக்கும் சிறப்புடைய குயவன், யானையை அடக்கவல்ல அங்குசமும் ஆவேன் எனும் பொருள்பட,

“கூனையுங்குடமும் குண்டு சட்டியும்
பானையும் பண்ணும் அங்குசப்பயல் நான்” என்று பதிலிறுத்தான் (யானையை அடக்க ‘அங்குசப்பயல்,( அங்குசம் ), வேண்டும். குயவனா தலால் அம்+குசப்பயல் என்பதும் பொருள் அவன் பாடலில் தக்க மறுமொழி யிருக்கவும் அவன் விடுதலையானான்.

அடுத்து ஒரு கண் பார்வையற்ற நாவிதன் வர, அவனை நோக்கி, வானில் பறக்கின்ற கொக்கு, பருந்தினைக் கண்டால் எவ்வாறு பயத்தால் நடுநடுங் குமோ அவ்வாறு நடுங்கிக் கொண்டு பதைபதைக்கும் மனத்துடன் என்முன் நிற்பவனே, பொட்டைக் கண்ணா, சொல்வாய் எனும் பொருள்பட,

“விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலக்கப்
புண்பட்ட நெஞ்சொடு மிங்கு நின்றாய் பொட்டையாய் புகலாய்”
என்று ஒட்டக்கூத்தர் மொழிய அதற்குப் பதிலாக, நான் பொட்டைக் கண் உடையவனாக இருப்பினும் நாவிதனாகிய நான் பண்ணில் உயர்ந்த செந் தமிழ்ப் பாடல்களை நீயும் திடுக்கிடும் வண்ணம் பாடும் வல்லமை படைத் தவன் எனும் பொருள்பட,

“கண்பொட்டையாயினும் நாவிதன் நான் கவிவாணர் முன் பண்பட்ட செந் தமிழ் நீயும் திடுக்கிடப் பாடுவனே” என்றான். அவனது பதிலும் முகத்தில் அறைந்தாற்போல் ஆணித்தரமாக இருக்கவே அவனும் விடுதலை செய்யப் பட்டான்.

அடுத்து வந்தான் கொல்லன். அவனிடம் பாடலாகக் கேளாமல் வசன நடையில், “நீ யார்?உன் தகப்பன் பெயர் என்ன? உன் தொழில் என்ன? சொல்வாய் எனக் கேட்டார் ஒட்டக்கூத்தர். அதற்கு அவன், “என் தந்தை பெயர் செல்லப்ப ஆசாரி, என் பெயர் திருவேங்கடாச்சாரி. நான் உலகுக்கே குருவாக விளங்குபவன். கொல்லனாகிய என் கவிதையில் குறை சொன்ன வரை அவரது பல்லைப் பிடுங்கி, ஆட்டிஅலைக்கழித்து அவரது பகைவர்கள் எள்ளி நகையாடும் வண்ணம் என் கவிதையாகிய இருப்பாணியாலேயே
அடிப்பேன் எனும் பொருள்பட,

“செல்வன் புதல்வன் திருவேங்கடவன் செகத்குருவாம்
கொல்லன் கவியைக் குறைசொன்ன பேரைக் குறடுகொண்டு
பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டாம் ஆட்டிப் பகைவர் முன்னே
அல்லும் பகலும் அடிப்பேன் கவியிருப்பாணி கொண்டே”
என்று கூறவே அவனும் விடுவிக்கப் பட்டான்.

அடுத்து வேளாளன் வந்து நிற்க, ” பிரபல கவிஞனான என்முன் வரண்ட பாழ்நிலம் போல் தோற்றமளிக்கும் நீயும் ஒரு கவியோ? என்முன் நிற்கும் தகுதி உனக்குண்டோ? எனக் கூத்தர் ஏளத்துடன் கேட்டார். உடனே அவன் ஒட்டக்கூத்தரையும் மன்னனையும் பார்த்து இப்படிப் பாடினான்

“கோக்கண்டு மன்னவர் குறைகடற் புக்கிலர் கோகனகப்
பூக்கண்டு கொட்டியும் பூவாதொழிந்தில பூதலமேற்
காக்கின்ற மன்னவ, கவியொட்டக் கூத்த நும்
பாக்கண்டொளிப்பர்களோ தமிழ் பாடிய பாவலரே!”
பொருள்: கோக்கண்டு- சக்கரவர்த்தியைக் கண்டு (மற்ற அரசர்கள்), குறைகடல் புக்கிலர்- ஒலிக்கின்றக் கடலுக்குள் ஒளிந்துக் கொள்ளவில்லை, கோக்கனகப் பூக்கண்டு- செந்தாமரை மலரைப் பார்த்து, கொட்டியும்- நீர்க் கொடி வகையும், பூவாதொழிந்தல- மலராமல் இருந்ததில்லை, பூதலமேற்- 7 தீவுகளையும் காக்கின்றச் சோழமன்னனது (அவைப் புலவரான உமது), பாக்கண்டொளிப்பர்களோ- சொல்வண்ணம், பொருள் நயம் அமைந்தப் பாடல்களைக் கண்டு ( மற்ற தமிழ்ப் புலவர்கள்), ஒளிந்துதான் கொள் வார்களோ?

“பல தேசங்களைக் கட்டியாளும் மாமன்னர்களைக் கண்டு சிறு நாடுகளை ஆளும் குறுநில மன்னர்கள் கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொள்ள வில்லை. பூக்களின் அரசனெனப் போற்றப்படும் தாமரைப்பூ மலர்வதனால் அருகிலிருக்கும் சிறு சிறு நீர்க்கொடி வகைகள் பூவாமல் இருப்பதில்லை, உலகைக் காக்கும் மன்னா! கவி ஒட்டக்கூத்தா!உங்கள் பாடல்களைக்கேட்டு பிற புலவர்கள் பாடாமல் இருந்து விடுவார்களா?” என்று பரிகாசம் தொனிக் கக் கேட்கவும் சுற்றியிருந்தோர் ஆரவாரமிட்டனர். தற்பெருமைப் பேசிய கூத்தருக்குக் கிடைத்ததோ சபையோரின் ஏளனப் பார்வையும், கேலிப் பேச்சும் தான்!

பாடலை நக்கலுடன் கூறிய வேளாளனும் விடுதலை செய்யப்பட்டான். ஒட்டக்கூத்தரின் செருக்கு ஓரளவு அடங்கியது.
ஏட்டிக்குப் போட்டி பேசும் தமிழ்ப் புலவர்கள் இருக்கும் வரை பரிகாசம், புன்னகை, கேலி, நக்கல், நகைச்சுவை உணர்வுகளுக்குப் பஞ்சமே இருக்காது!

picture of Ottakuthar

If u dont see pictures here, please go to my other blog swamiindology.blogspot.com

to be continued…………………..
அம்மாப்பட்டிக்கவிராயர் , கவிஞர், வாய்ஜாலம், ஒட்டக்கூத்தர், பிள்ளைப் பாண்டியன் ,அம்மையப்ப பிள்ளை, வேங்கடரமண ஐயங்கார் ,பி.ஆர். ராஜம் ஐயர்

முதல் எழுத்து அலங்காரம் – 1 (Post No.10,726)

Picture of Naguleswaram temple in Sri Lanka

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,726

Date uploaded in London – –     9 MARCH   2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை

முதல் எழுத்து அலங்காரம் – 1

ச.நாகராஜன்

தமிழில் எழுத்து அலங்காரங்களில் மூன்று வகை உண்டு.

முதல் எழுத்து அலங்காரம், நடுவெழுத்து அலங்காரம், கடையெழுத்து அலங்காரம் என இப்படி மூன்று வகைகள்

உண்டு.

முதல் எழுத்து அலங்காரப் பாடல் ஒன்றை இங்கு பார்க்கலாம்.

கூத்திளமை நொய்மை மதி கூருநயம் மங்குலொடே

வாய்த்தசம்பை யென்றேழு மாண்பெயர்க்குஞ் – சார்த்துபதில்

ஏய்ந்தமுன்கள் சேர்ந்துநகு லேச சுவாமியெனா

வாய்ந்தபெய ரென்பாம் வழுத்து.

யாழ்ப்பாணம் க. மயில்வாகனப் பிள்ளை அவர்கள் எழுதிய நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து என்ற நூலில் 53வது பாடலாக இது அமைகிறது.

நகுலேசசுவாமியைத் துதித்துப் பாடும் இப்பாடலில் பல சொற்கள் உள்ளன.

அநதச் சொற்கள் சுட்டிக் காட்டும் அர்த்தமுடைய ஒரு சொல்லைக் கண்டுபிடித்து எடுத்து,

அதன் முதல் எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து முதல் எழுத்துக்களையும் கோர்த்துச் சொல்லாக அமைத்துப் பார்த்தால் நமக்கு பாடலின் பொருள் எளிதில் விளங்கி விடும்.

மேலே உள்ள பாடலைப் பார்ப்போம்.

கூத்து – இது குறிப்பிடும் சொல் (ந)டனம்  (இது பாடலின் முதல் அடியில் முதல் சொல்லாக வருகிறது)

இளமை – இது குறிப்பிடும் சொல் (கு)ழவு (இது பாடலின் முதல் அடியில் இரண்டாம் சொல்லாக வருகிறது)

நொய்மை – இது  குறிப்பிடும் சொல் (லே)சு (இது பாடலின் முதல் அடியில் மூன்றாம் சொல்லாக வருகிறது)

மதி – இது குறிப்பிடும் சொல் (ச)ந்திரன் (இது பாடலின் முதல் அடியில் நான்காம் சொல்லாக வருகிறது)

நயம் – இது குறிப்பிடும் சொல் (சு)கம் (இது பாடலின் முதல் அடியில் ஐந்தாம் சொல்லாக வருகிறது)

மங்குல் – இது குறிப்பிடும் சொல் (வா)னம் (இது பாடலின் முதல் அடியில் ஆறாம் சொல்லாக வருகிறது)

சம்பை – இது குறிப்பிடும் சொல் (மி)ன்னல் (இது பாடலின் இரண்டாம் அடியில் வருகிறது)

கூத்து, இளமை, நொய்மை, மதி, நயம், மங்குல், சம்பை ஆகிய ஏழு சொற்களில் உள்ள (அடைப்புக்குள்

இருக்கும்) எழுத்துக்களை இணைத்துப் பார்த்தால் வருவது நகுலேசசுவாமி.

நகுலேஸ்வரரைத் துதிக்க முதல் எழுத்து அலங்காரப் பாடல் இது.

எப்படி ஒரு எழுத்து அலங்காரம் பாருங்கள்!

இப்படி ஏராளமான முதல் எழுத்து அலங்காரப் பாடல்கள் தமிழில் உள்ளன.

விந்தை மிகு எழுத்தலங்கார மொழி தமிழ் என்பது புலனாகிறது அல்லவா!

***

TAGS–  முதல் எழுத்து, அலங்காரம்

TAMIL KAMAN PANDIKAI/FESTIVAL IN ROME AND GREECE! (Post No.10,725)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,725

Date uploaded in London – –    8 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Not many people knew that the 18 books of Sangam Tamil literature running to nearly 30,000 lines never used the word SIVA, but used Vedic Gods Indra, Vishnu and Varuna. Like Rig Veda the attributes of Lord Shiva are there but not the word SIVA in early Tamil. The word was used only from 7th century CE. Not many people knew that the Tamils say ‘Siva is Rudra and Rudra is Siva’ in 18,000 verses from seventh century CE. Lord Siva’s eight famous violent attacks as Rudra,  form Eight Famous Shrines( Ashta Veerattana Sthalas). So foreign idiots’ attempt to divide Siva and Rudra did not succeed in Tamil Nadu.

xxxx

Tamil month Masi corresponds with March -April in English calendar. It is the month of Holi Festival and Tamil Kaman Pandikai. (Pandikai means festival). In Northern India the Hindus celebrate Holi and throw colours at one another and make fun. Slowly Non Hindus also joined the fun, but still remains mainly a Hindu Festival The story behind it and burning Holika show it is Hindu. Tamils also celebrate it in the name of Kaman (Manmatha) Pandikai. Like Holika burning in the North, Tamils burn Manmatha, God of Love. Lord Shiva, who has the third eye, i.e. Eye Of Wisdom, burns Manmatha. Since Manmatha’s wife Rathi (Cupid) cried and begged for the revival of her beloved husband Manmatha, Lord Shiva agreed but with a big condition. The condition is that he would be living for ever but bodyless (Anangan), visible only to Rathi.

Highly philosophical and psychological principles are embedded in this story. A very big principle is taught to village folk in the simplest way with sexy dances all over the night for 13 days in Tamil Nadu. It was celebrated in Rome/Italy and Greece, but banned or controlled when it went berserk, hysterical and unruly.

Stupid and half -baked idiots compared Lord Shiva with Roman god Bacchus or Greek god Dionysus without understanding the principle behind Hindu festival.

xxx

First look at the simple and grand principle:

Love is blind; sexual feeling or urge is natural; but uncontrolled sex will damage one and the person who wins this base feeling is a saint. The person who can do is like Lord Shiva, with Third Eye, Wisdom Eye.

Ramana Maharishi, Ramakrishna Paramhamsa and very recently Kanchi Shankaracharya (1894-1994) were typical examples of this great feat. But no lay man should avoid sex. So Siva told Rathi God of Love will be there for ever but as An Angan=Less Body= Bodyless. That is the feeling of Kama/amour is abstract, it is not concrete; a woman gives green signal to it. That is why Shiva told Rathi (Cupid) your husband will be visible to you only.

Even if you mad after a woman, that Rathi/woman only can say yes or no and make it or mar it. This is the big philosophy behind this great Holi Festival and Tamil Kaman Pandikai. Both are celebrated at the same spring season when such sexy feelings start blooming. But Tamils start 13 days earlier than Holi (Full Moon Day) and culminates it on Full moon day, like Holi

All major Hindu festivals are celebrated on Full moon days. Millions of people gathered under moon light to celebrate it. A very few like Deepavali are celebrated in the dark but compensated with oil lamps.

Every society finds some excuse to celebrate, but they don’t have high principle behind it. In Kaman and Holi festival, we give he message to the society, please go ahead with your celebrations for two weeks, but at the end when you get wisdom burn the desire like Lord Siva and go higher and higher. This message is lacking in Western Festivals.

Early Greek and Roman writers saw Kaman Festival in the north and compared it to Bacchus Festival, because they did not understand the big message behind our Hindu festival.

Romans were the worst lot in the first few centuries of modern era. They imported Vedic God Mitra via Iran and changed it to Mithra, made it a secret underground festival and slaughtered Bulls indiscriminately. They drunk uncontrollably and had sex with everyone in public. So the Roman government and later Pope banned it. But yet they couldn’t wipe it out. Even today whoever visits Rome can see the Mithra cult temples in the underground chambers. Bacchanalia was for drinking and mixing with other sex

Tamil Kaman Pandikai dances have sexy gestures. It is to attract laymen. Normally village folk dancers dress and disguise like Manmatha, his wife Rathi and Lord Siva with other paraphernalia. They dance in street corners in big cities, but in the grounds or temples in small towns. We cant see unruly scenes. It was orderly.

When I lived in Madurai 45 years ago, while returning from night duty from my newspaper office, I used to stop my cycle and watch it for some time. Yesterday many Tamil newspapers reported Kaman Pandikai happening in many parts of Tamil Nadu. On the last day, lord Siva burns Manmatha. He is in Sangam Tamil literature and Sanskrit literature.

Now a brief description of Roman Bacchus and Greek Dionysus.

xxxx

BACCHUS

Roman god of wine and intoxication

Known period 400 BCE TO 400 CE

Synonyms – Liber, Dionysus / Greek

Centres of cult – throughout Roman empire  .

Literary sources – Aeneid of poet Virgil

Bacchus is modelled closely on the Greek god Dionysus. In Roman Mythology his parents are  Jupiter and  Semele, the daughter of Kadmos, who became deified only after her death by fire on mount  Olympus.

Bacchus is depicted as a youthful figure wearing an ivy or grape crown carrying a wand or thyrsus.

He is riding a chariot pulled by leopards. He was  worshipped extensively in festivals called Liberalia and  Bachchanalia. These posses strongly phallic connotations and on occasions  the god was modelled like a phallus (linga shape). This made the Greek and Roman writers to compare Lord Shiva(linga). But the main aim of Kaman Festival is destroying Kama (Uncontrolled sexual urge); that is completely absent in Greek or Roman festivals. Probably they stole the juicy part of the story and rejected the philosophy behind it.

Kaman Festival have different versions. In short Indra or Daksha asks Manmatha to seduce Lord Siva and he failed in it and was burnt alive. But the abstract idea of love as bodyless Manmatha will be there on earth; no one can wipe out sex.

xxxx

Now to Greece- DIONYSUS

Origin – Greece

God of wine and intoxication

Period – from pre Christian period until 400 CE.

 Synonyms –  Deunysos, Zonnysos, Liber, Bacchus

Centres of cult – Pylos, Ayla, Irini

Art references – Attic wine amphorae dated around sixth century BCE.

Literary sources- Hymns to DIONYSUS

Attributed to Homer/ only fragmentary

It is similar to bacchanalia described above. The festival was celebrated with intoxicated frenzy and carrying gigantic phallus symbol. They attribute it semitic people, not Hindus. Wine drinking and goat sacrificing festivals were also there. This carrying male genital organ (phallus) or  showing it to public through people who disguised as satyrs are not known to Hindus at any period. Semitic means the forefathers of people who founded Judaism, Christianity and Islam.

Seeing all these in their own places, the foreign half baked idiots misinterpreted Hinduism and Indus Valley civilization. Since these people did not know 2000 year old Sangam Tamil literature or later 18,000 Tamil Shiva (Saivite) verses they bluffed and bluffed throughout and said Vedic Rudra is different from Siva. The very word Siva came from Vedic Rudram for the first time in Yajur Veda. In Tamil it came into use only from 600 CE. That is at least 1600 years after Sanskrit Siva! Because Yajur Veda is dated 1000 BCE.

But I would add one more point, before I conclude; there is one SIVA in Rigveda, which Professor Wilson says Lord Siva, but Max muller gang says it is not Siva with capital S, but siva= auspicious. Prof. Wilson dated Rigveda 2000 BCE but Max Muller gang dated it first 1200 BCE later changed it to 1500 BCE or some unknown time before that!

In India if one does not know Tamil and Sanskrit, the person is unfit to write anything about Hinduism. They can only comment within a small circle. The 30, 000 lines written by 400+++ Tamil poets 2000 years ago have lot more on Vedic culture.

xxx

Conclusion

We don’t see any visible display of sex organs like phallus in any old or new Hindu rituals or festivals. Even the God of Love (Kaman) festival gives the message, ‘Destroy Kama through your Third (wisdom) Eye like Lord Siva (individually); but sex would survive Anangan (bodyless) for ever. Anangan is another name of Manmatha in Sanskrit. Manmatha means Mind churning. If one gets that Kama feeling his mind is churned. The Sanskrit word kama is used through out Sanskrit and Sangam Tamil literature. This gave birth to the English word (k)Amorous, amour etc. ( Probably the foreign invasion of North India changed Manmatha burning of Kaman Pandikai into Holika burning in the North).

Long Live Holi and Kaman Pandikai .

—subham—

TAGS – Bacchus, Dionysus, God of Wine, God of Love, Manmathan, Rathi, Cupid, Holi, Kaman Pandikai, Burning, Holika, Bodyless

இந்திய ‘ரிஷி’ கிரீஸில் ‘கரடி’ ஆன கதை!- Part 1 (Post No.10,724)

PICTURE OF SAPTA RISHI STARS WITH VASISTHA AND ARUNDHATI

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,724

Date uploaded in London – –    8 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியாவிலும் மற்ற பூமியின் வட கோளார்த்த நாடுகளில் வசிப்போரும் இரவு நேரத்தில் வானத்தின் வடக்கு திசையில் பார்த்தால் தெரியும் நடசத்திரக்கூட்டத்துக்குப் பெயர் சப்தரிஷி மண்டலம் . இதற்கு வானசாஸ்திர வரைபடத்தில் இன்றும் உள்ள பெயர் – பெருங்கரடி நட்ச த்திரக் (Ursa Major= Great Bear Constellation) கூட்டம். ஹிந்து மத ரிஷி (Rsi) வெளிநாடுகளில் எப்படி கரடி (Rksa= Ursa= Arktos) ஆனார் என்பது பற்றி சுவையா கதை உளது. இந்த சுவையான கதை, நமக்கும் கிரேக்க நாட்டுக்கும், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இடையே வேத காலத்திலேயே தொடர்பு இருந்ததையும் காட்டுகிறது. அலெக்ஸ்சாண்டருக்குப் பின்னரே இந்திய- கிரேக்க தொடர்பு வந்தது என்ற வெள்ளைக்காரன் – கொள்ளைக்காரன் – சித்தாந்தத்தையும் போட்டு உடைக்கிறது.

தமிழில் சப்தரிஷி மண்டலம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இமயம் முதல் குமரிவரை வழிபடப்படும் நடத்திரங்கள் சப்த ரிஷி மண்டலம் என்னும் 7 விண் மீன் களாகும் . அதிலும் குறிப்பாக வசிஷ்ட நடசத்திரத்தைச் சுற்றிவரும் அருந்ததி நட்சத்திரத்தையும் குமரி வரையுள்ள இந்துக்கள் வணங்கி வருகின்றனர்.இந்துக்களின் வாழ்வுடன் வேத காலம் முதல் பின்னிப் பிணைந்தது 7 நக்ஷத்திரங்கள்.

நற்றிணைப் பாடல் 231 :- முதல் சான்று

மையற விளங்கிய மணி நிற விசும்பின்

கைதொழு மரபின் எழுமீன் போலப்

பெருங்கடல் பரப்பின் இரும்புறந்தோயச்

………………………………. (புலவர் இளநாகனார்)

பொருள்

மாசற விளங்கிய நீலமணி போன்ற நிறத்தையுடைய ஆகாயத்தின் கண்ணே தோன்றி உலகத்தாரால் கைதொழப்படும் தகுதி உடைய  முனிவரின் தோற்றமாகிய ஏழு மீன்களைப்போலே  பெய்ய கடற்பரப்பின் கண்ணே ……………………..

இதிலிருந்து சபதரிஷி மண்டல நடசத்திரங்களை வணங்குவது மரபு என்றும் அது நெய்தல் நில காதலன், காதலிக்கும், தோழிக்கும் தெரிந்த உண்மை என்பதும் விளங்கும்.

புலவர் இளநாகனார் சொல்லுவது போல, இருண்ட வானத்தை நீங்கள் அண்ணாந்து பார்த்தால் வடதிசையில் பட்டம் பறப்பது போல 7 நட்சத்திரங்களைக் காணலாம். ஆஸ்திரேலியா , தென் அமெரிக்கா ,  தென் ஆப்ரிக்கா போன்ற தென் கோளார்த்த நாடுகளில் தெரியாது.

இந்தப் பட்டத்தில் 4 நட்சத்திரங்கள் ஒரு சதுரம் போலவும், மீதி 3  பட் டத்தின் ‘வால்’ போலவும்  இருக்கும். வால் பகுதிதான் மிகவும் முக்கியமானது; அதில் கடைசி நட்சத்திரத்துக்கு முந்தைய நட்சத்திரம் வசிஷ்ட மகரிஷி. அதைச் சுற்றிவரும் நட்சத்திரம் அருந்ததி. அது தெரிந்தும் தெரியாமலும் மாறி மாறி தோன்றும். இதைப் பார்ப்பது இந்துக்களின் திருமணச் சடங்கில் அருந்ததி காட்டல் அல்லது  அருந்ததி பார்த்தல் என்று அழைக்கப்படும்.

திருமண நாளன்று முதல் இரவு அறைக்குள் நுழைவதற்கு முன்னர் தமிழர்கள் இதை பார்க்கவேண்டும். உடனே அதைக்ககாட்டும் பிராஹ்மண புரோகிதர் இப்படி இணைபிரியாமல் வாழுங்கள் என்று சொல்லி வாழ்த்துவார் . இது வேதம், மனு ஸ்ம்ருதி, சங்க இலக்கியம், பிற்கால சிலப்பதிகாரம், திருக்குறள் முதலிய நூல்களில் வருகிறது. இதை முன்னரே எழுதியுள்ளேன் . இதோ சுருக்கமாக ..

“இதோ தமிழர்கள் வணங்கிய வடக்கத்திப் பெண் அருந்ததி:—

FROM MY OLD ARTICLE  கட்டுரை எண்:- 1131; தேதி—26 ஜூன் 2014.’அற்புதப் பெண்மணி அருந்ததி!’


1)“வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை” (புறநானூறு 122)
மலையமான் திருமுடிக்காரியின் மனைவி பற்றி கபிலர் பாடிய பாடல் இது. உனது மனைவி வடமீன் (அருந்ததி) போன்று (புரையும்) கற்பிற் சிறந்தவள். (மடமொழி அரிவை= இனிய சொற்களை உடைய பெண்).

2)“அருந்ததி அனைய கற்பின் “(ஐங்குறுநூறு 442, பேயனார் பாடிய பாடல்)


3)விசும்பு வழங்கும் மளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28)
பொருள்:– வான உலகத்தில் திரியும் தெய்வப் பெண்களில் சிறந்தவளான புகழ்மிகு விண்மீன் அருந்ததிக்கு நிகரானவள்.

எந்தக் கற்புக்கரசியைப் புகழ்ந்தாலும் அவளை இப்படி அருந்ததியோடு ஒப்பிடுதல் தமிழர்தம் மரபு.


4)பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையின் கற்பின் நறுநுதல் (பெரும்பாணாற்றுப்படை 302-303)

5)வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலித்தொகை 2—21)

6)கடவுள் ஒருமீன் சாலினி (பரிபாடல் 5).

7)தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் (சிலப்பதிகாரம் 1-27)


8)சாலி ஒருமீன் தகையாளை — (சிலப்பதிகாரம்)


9)அங்கண் விசும்பின் அருந்ததி அன்னாளை (சிலப்பதிகாரம்)
சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வருணிக்கும் இளங்கோ அடிகள், அவளை அருந்ததிக்கு ஒப்பீட்டுப் பாடிய வரிகள் இவை.

இதை கிரேக்கர்கள் ஏன் கரடிகள் என்று அழைத்தனர் ? என்பதைக் காண்போம்

ரிக்ஸ = கரடி – சம்ஸ்க்ருதம்

உர்சா = கரடி – லத்தீன் மொழி (URSA= R/ursa=Rishaya)

ஆர்க்ட்டோஸ் = கரடி = கிரேக்க மொழி

சப் தரிஷி மண்டலம் = URSA MAJOR = GREAT BEAR= DIPPER= CHARLES’ WAIN = HIPPOPOTAMUS = SEVEN OXEN  ETC.

WAIN= WAGON= VAHANA IN SANSKRIT

அலெக்ஸ்சாண்டருக்கு முன்னரே நமக்கும் கிரேக்க நாட்டுக்கும் தொடர்பு உண்டு என்பது  பிதகோரஸ் தியரம் (Pythagoras Theorem) முதலியவற்றில் இருந்து தெரிகிறது. அலெக்ஸ்சாண்டர் இந்தியா வந்த காரணமே ரிஷி முனிவர்களை சந்திக்கத்தான் . அலெக்சாண்டரின் குரு போன்றவர் அரிஸ்டாட்டில்; அவரது குரு பிளாட்டோ; அவரது குரு சாக்ரடீஸ்; அவரது குரு உபநிஷத ரிஷிகள்; ‘உன்னையே நீ அறிவாய்’ என்ற அவரது வாசகம் பகவத் கீதை, உபநிஷத்தில் உள்ள வாசகம்; உபதேசம்

Rishis of Upanishads- Pythagoras- Socrates- Plato- Aristotle- Alexander

மேலும் இந்துக்களை போல 7 நட்சத்திரங்களையும் ஒருசேர கிரேக்கர்கள் , ரோமானியர்கள் பார்க்கவில்லை. 4 வேடர், 2 நாய்கள் அல்லது 3 நாய்கள் அல்லது கரடிகள் –இப்படியெல்லாம் கதை எழுதினர் ; நாம் ஒ ருவர்தான் 7 புனிதர்களின் பெயர் சூட்டி இன்றுவரை நட்சத்திரங்களையும் வணங்குகிறோம். ரிஷிகளையும் வணங்குகிறோம். பிராமணர்கள்  தினமும் 3 வேளை செய்யும் சந்தியாவந்தனத்தில் 7 ரிஷிகள் பெயரையும் சொல்லுவார்கள். அதே வரிசையில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி இலக்கண புஸ்தகத்தில் எழுதியுள்ளார். தமிழ் நாட்டில் 2000 ஆண்டுகளாக சந்தியாவந்தனம் நடைபெறுவதை புறநானூற்றின் 34 ஆவது பாடலில் காலை அந்தி, மாலை அந்தி என்று புலவர் ஆலத்துர் கிழார் பாடுகிறார். இன்ன பிற காரணங்களால், கிரேக்கர்கள் அரைகுறையாகக் காப்பி அடித்த விஷயம்தான் இந்த ரிஷி= கரடி மர்மத்தின் பின்னணி.; விளக்கம் பெற தொடர்ந்து படியுங்கள்

Xxxxxx

தொல்காப்பியத்தில் உள்ள ஓரை (Orai= Hora= Hour) என்ற சொல்லும் கிரேக்க ஹோரா (Hora in Greek is Hour in English)  என்பதிலிருந்து வந்ததே என்று சொல்லி வையாபுரிப்பிள்ளை போன்ற அறிஞர்களும் கூட மதிமயங்கிப் போனார்கள். இதனால் தொல்காப்பிய காலத்தையும் ஜோதிட சாஸ்திரத்தில் ஹோரை குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னரும் வைத்தார். அதுபற்றி விவாதிக்க நான் இப்போது வரவில்லை.

வெள்ளைக்காரன் சித்தாந்தம் என்ன என்பதைச் சொல்லவே அந்த உதாரணம். ஹோமர் எழுதிய கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலியட் அல்லது ஆடிஸி Iliad and Odyssey (சில நாடுகளில் ஒடிஸி என்று உச்சரிப்பர்) காவியங்களில்  ஒரு சம்ஸ்க்ருத  சொல் இருந்து, அதே சொல் அதற்கு முந்தைய ரிக் வேதத்தில் வந்தால் , பார்த்தீர்களா! நாங்கள் அன்றே சொன்னோம்; நாம் அனைவரும் ஒரு காலத்தில் மத்திய ஆசியாவில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தோம். ஆரியர் என்று பெயர் கொண்ட நாடோடிக் கும்பல் கைபர் கணவாய் வழியே இந்தியாவுக்குள் நுழைந்தது. நாங்கள் கோமணத்தோடு ஜெர்மனிக்குள்ளும் கிரேக்கம் முதலிய நாடுகளுக்கும் சென்றோம். அப்போது பயன்படுத்திய சொல்லில் இதுவும் ஒன்று என்பர்.. அதாவது அவர்கள் இந்துக்களிடமிருந்து கடன் வாங்க வில்லையாம்.

ஹோரை போன்ற சொற்கள் முதலில் கிரேக்க மொழியில் வந்து, பின்னர் நமது ஜோதிட சாஸ்திரத்தில் வந்தால் பார்த்தீர்களா, நாங்கள் அன்றே செப்பினோம். இந்துக்களுக்கு கணக்கும் தெரியாது; ஜோதிடமும் தெரியாது. நாங்கள் ஐரோப்பியர்கள்தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தோம் என்று கதைப்பார்கள்.

அவர்கள் கையாளும்  மூன்றாவது தந்திரமும் உண்டு. திடீரென்று இலக்கியம், எழுத்து எதுவும் இல்லாத முண்டா மொழி Munda Language பெயரைச் சொல்லுவார்கள்; பிராஹுய் மொழி என்பார்கள் (அதில் 99 சதம் சம்ஸ்க்ருதம் மூன்றே எண்கள் தமிழ்!!) திடீரென்று அவர்களே குப்தர்  காலத்தில் வந்தவை என்று சொன்ன புராணக் கதைகளை சான்று காட்டுவார்கள். திடீரென்று நமக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்த சாயனர் எழுதிய வேத பாஷ்யத்தைக் காட்டுவர். சாயனர் சொல்லாத ‘ஆரிய’, குமாரில பட்டர் சொல்லாத ‘’திராவிட “இனம் பற்றிக் கதைப்பார்கள், அவர்கள் இருவரும் ஆரிய திராவிட என்ற சொற்களை இனம் என்ற பொருளில் பயன்படுத்தவே இல்லை. திசையைக் குறிக்கவும்,ஒருவர் ‘பண்பாடும் நாகரீகமும் நன்னடத்தையும் உள்ளவர்’ என்பதைக் குறிக்கவே பயன்படுத்தினர். தமிழ் சங்க இலக்கியத்திலும் பாரதியார் பாடல் முழுவதும் ‘ஆரிய’ என்ற சொல் இந்தப் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. சுருங்கச் சொன்னால் அவர்கள் யாதுதானர்கள். வாலமீகியும் ரிக்வேதமும் பயன்படுத்தும் யாதுதானர்களின் பொருள்= வேறு வேறு உரு எடுத்து மயக்கும் ராக்ஷஸர்கள்.

TO BE CONTINUED………………………………..

XXXXXXXXXX

PICTURE OF SRI LANKAN STAMP ON URSA MAJOR

Tags- கரடி, ரிஷி, சப்த ரிஷி, நட்சத்திரம் , எழுமீன் , ஏழு கிரேக்க, லத்தீன் , ஊர்சா,

குவித்த கரங்களில் இருக்கும் மலர்களின் வாசனை! (Post 10,723)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,723
Date uploaded in London – – 8 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதம்
குவித்த கரங்களில் இருக்கும் மலர்களின் வாசனை!
ச.நாகராஜன்

அஞ்சலிஸ்தானி புஷ்பாணி வாஸயந்தி கரத்வயம் |
அஹோ சுமனஸாம் வ்ருத்திர்வாமதக்ஷிணயோ: சமா ||

குவித்த கரங்களில் இருக்கும் மலர்கள் இரு கைகளுக்கும் வாசனையைத் தருகிறது. நல்ல மனமுள்ளவர்களின் அணுகுமுறையும் மலர்களைப் போலவே இடதுபுறம் வலது புறம் ஆகிய இரு புறங்களிலும் இருப்பவர்களுக்கும் சமமாகவே இருக்கும்.

Flowers in folded hands make both the palms fragrant. The attitude of the good minded (flowers and good people) is indeed the same towards both, the left and the right.
*
அநாஹுதா: ஸ்வயம் யாந்தி ரஸாஸ்வாதவிலோலுபா: |
நிவாரிதா ந கச்சந்தி மக்ஷிகா இவ பிக்ஷுகா: ||

நல்ல ருசியுள்ளவற்றில் பேராசை கொண்ட பிச்சைக்காரர்கள் ஈக்களைப் போலவே அழைக்கப்படாவிட்டாலும் கூட மொய்த்துக் கொண்டிருப்பார்கள், விரட்டினாலும் போக மாட்டார்கள்.

Just like flies, beggars greedy for the taste of the tasty things flock even when they are not invited and do not go away even when they are driven out.
*

ப்ராப்ய சலானதிகாரான் ஷத்ருஷு மித்ரேஷு சாத் வித்வத்ஸு |
நாபக்ருதம் நோபக்ருதம் ந சத்க்ருதம் கிம் க்ருதம் தேன ||

(வரும், போகும் என்ற இயல்புடைய) அதிகாரத்தை ஒருவன் அடையும் போது எதிரிகளை விரட்டி, நண்பர்களை ஆதரித்து, வித்வான்களை கௌரவிக்காவிடில் அவன் அடைவது தான் என்ன?

After having gained authority which is transitory (by nature) if on has not hurt enemies, favoured (his) friends and honoured the learned people, what has he achieved?

*
அஹோ கலபுஜங்கஸ்ய விசித்தோயம் வதக்ரம: |
அன்யஸ்ய தஷதி ஸ்ரோத்ரமன்ய: ப்ராணைர்வியுஜ்யதே ||

கெட்டவனாக இருக்கும் பாம்பைப் போன்ற ஒருவனின் விசித்திரமான கொலைச் செய்கை எப்படி இருக்கிறது? அவன் ஒருவனின் காதைக் கடிப்பான், அடுத்தவனின் உயிரையே எடுப்பான்.

What a strange way of killing of the snake in the form of a wicked person? He bites the ear of one person and another is deprived of life.
*

லோபாவிஷ்டோ நரோ வித்தம் வீ க்ஷதே ந ஸ சாபதம் |
துக்தம் பஷ்யதி மார்ஜாரஸ்ததா ந லகுடாஹதிம் ||

பேராசையுள்ள ஒருவன் செல்வத்தைப் பார்க்கிறான், ஆனால் ஆபத்துக்களைப் பார்ப்பதில்லை. ஒரு பூனையானது பாலைப் பார்க்கிறது, ஆனால் தடி கொண்டு அடிப்பதைப் பார்ப்பதில்லை.

A greedy person looks at wealth, he is not (aware) of perils. A cat looks at the milk but not at the beating with cudgel.
(English Translation by Saroja Bhate)


tags- tags- குவித்த கரங்கள் , மலர்கள்,

STARS SHOW INDIA’S  LINK WITH GREECE AND IRAN IN VEDIC PERIOD (Post No.10,722)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,722

Date uploaded in London – –    7 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Hindus must understand the mentality of foreign “scholars”; they are Yatudhanas; Yatudhanas are demons who can take ‘different shapes’ according to Rig Veda and Valmiki Ramayana. If they find something similar in two places, first they will look at the date or period of those two things, then they will say, Look Greek has this word; So, Hindus borrowed it. If they find the word in Rig Veda first and later Homer’s Iliad and Odyssey, then they will say, Look, all of us lived in Central Asia at one time and then you, Aryans (Hindus) entered India via Khyber Pass and we went to Greece.

This migration matter is not found anywhere in Sanskrit or Tamil literature. Both say we are the sons of the soil.

Another trick, the gangs follow is, they will say ‘Sayana said it’, ‘Kumarila Bhatta said It’,  but cunningly put capital A for aryas and capital D for dravidians as if they are two separate races. It is also not in Tamil or Sanskrit literature. They used ARYA to say the Rishis in Himalayas or the language of the Rishis with due respect.

When Sita addressed Rama as Arya!, we know it is ‘Respectful Sir’. When the greatest Tamil poet Bharatiyar used Arya throughout his poems, we know it is a respectful term. So for at least 2000 years in Tamil , ‘ARYA’ is not a racial term. But Max Muller gangs and Caldwell gangs abused and misused the words.

Caldwell did not know anything about the vast and rich Sanskrit literature; so all the Tamil publications add a footnote in his book (Caldwell is wrong; he did not have any knowledge in this field).

The third trick, foreign “scholars”;  particularly linguistic“scholars”  use is, suddenly they quote dateless, period less, unrecognised sources, ‘Look it is a word from Munda language’. Mundas don’t have anything in writing; they have no literature, and they have no script. They might have come in the last few hundred years. And we know all languages change in course of time.

How do we know that foreigners are bluffing or fooling us? One must have a vast knowledge about Hindu scriptures. One must know Tamil Sangam literature; one must know the Sanskrit inscriptions from 1400 BCE at Bogazkoy in Turkey to second century CE Srimaran inscription in Vietnam (Champa); One must know the Dasaratha letters in Egypt and the 4th century CE Sanskrit inscription of Mulavarman in the so called ‘virgin forests’ of Borneo, part of Indonesia.

xxxx

Now let us look at one example.

No one could miss the beautiful Seven Stars in the northern sky. The constellation is called Saptarishi Mandala in Hindu books and Ursa Major (Great Bear in Latin) in Rome and Greece.

The same constellation is called Hippopotamus in Egypt and Seven Oxen in Latin. It is also known as Charles’s Wain (Wagon= Sanskrit Vahana) in Mesopotamia

Read the Etymoonline Description at the end (It shows they have no knowledge about Tamil Poems and Sanskrit Rig Veda)

Tamils not only knew about it but also worshipped it 2000 years ago (See Narrinai verse 231 by Ilanaganar)

The Sapta Rishis are in the Rig Veda which is dated between 1500 BCE and 6000 BCE. Later we find it in Homer’s Iliad dated 800 BCE. Both Hindus and Greeks have one strange story about BEARS becoming RISHIS.

Satapata Brahmana, which is also dated 8th Century BCE have the following story:

“The Krittikas-  Pleiades- are  Agni’s  Naksatra. Other Naksatras have one, two, three or four stars, but they have the most (six) stars; and they do not wander away from the eastern region, whereas all the other Naksatras do wander from the eastern region. They were formerly the wives of  Bears , for indeed, the Seven  Rishis were in earlier times called the bears; but they were prevented from having intercourse, since the  Seven  Rishis rise in the north while they rise in the east”.

We see the word rksas/ bear in the Rigveda for stars as well 1-24-10

Sayana’s commentary says the rksas/bears in this hymn are indeed seven rsis .

Homer in his Iliad 18.487 and Odyssey 5-273 also refers to these stars as Bear, in Greek ‘Arktos’ ( in Latin ‘Ursa’).

Now we have to see who borrowed it from whom. We have Bear as Star even in Rig Veda which is dated well before Homer’s Iliad. Satapata Brahmana gives lot of symbolic stories, strange etymologies for many other things as well.

Moreover, unlike other cultures, Hindus are the only one who treat all the seven stars as one group. It is even in Bhumi Sukta of Atharva Veda, older than Satapata Brahmana. More over Hindus from Kashmir to Kanyakumari worship the seven stars even today from Vedic days. Even 2000 year old Tamil literature refers to it ‘The Worshipful Seven Stars ‘in Narrinai poem. The seven stars are part and parcel of Hindu life; on the wedding day night husband and wife should see Arundhati, the double star system in the Ursa Major. That double star is mentioned even in Tirukkural (as Alakai- Ghost- Alcol in Arabic).

So we know it is evolved in Hindu world and travelled to Western world. Is it possible? Yes we have proof; The horse of Rig Veda is seen only around 1500 BCE in Egypt. Pharaohs married Hindu women from Turkey and the Dasaratha Letters (also known as Amarna letters) prove it. Above all the Sanskrit numerals are in Avestan Gathas and Kikkuli’s Horse Manual in 1300 BCE. So we see very clear westward march of Hindus and Homer comes several hundred years after this.

Even Satapata Brahmana is placed around 3000 BCE on the basis of astronomical references in the work. Westerners’ argument of Eastward migration is proved wrong by another factor as well. According to them Satapata Brahmana and Homer’s Iliad are from 8th century BCE. Why then it is not same in Rig Veda and Atharva Veda. So Greeks borrowed it from us.

xxx

Another Strange Coincidence in Mesopotamia

Khotanese term ‘hauda richa’ also coincides with Sapta Rishi. That shows they borrowed it from the Vedas. All these are dated after Vedas.

In one Rig Vedic hymn they are also called Uksan/Oxen

RV 3-7-7

In Mesopotamia the seven stars were known as chariot or wain. Wain is a Sanskrit word for Vahan. Homer used the term chariot as well for the same stars. This also shows it travelled from Middle East to Greece along with our idea of Seven Rishis/Bears.

Rsi and Rksa are word play for Sanskritwallas. We see lot of word plays, puns etc in Vedas and Brahmanas.

They named North and South with prominent visible stars in the direction. If they say Agastya (Canopus) it is South. If they say Sapta Rishis, it is North. Latin also use septentriones/ Seven Oxen for North. Latin and Greek came several hundred years after Sanskrit.

So we see very clear westward movement of culture, languages, ideas etc.

Even when we put Rig Veda in 1500 BCE, we see a big time gap of 700 year with Homer. If we put Rig Veda in 2000 BCE like Wilson or 4000- 6000 BCE like Herman Jacobi and B G Tilak, the time gap will be bigger.

One must not forget Seven Rishis, Seven Bears, Seven Oxen are in the Vedas, while one or two of these are found very late in Greek or Latin.

Satapata Brahmana 3000 BCE

The Vedic seers changed the names from Rksa to Sapta Rishis is reported in Satapata Brahmana (2-1-2-4). It is dated as 3000 BCE by great scholar S B Dixit. He showed the evidence in the Satapata Brahmana that “Krittikas (Pleiades) do not move from the East” shows the condition of sky in 3000 BCE

All the westerners deliberately ignore the astronomical references in the Vedas, which show very early dates.

Conclusion

Homer copied the idea or the matter about  Seven Stars from the Hindus. The Vedic ideas moved in different directions. From 1500 BCE we see Hinduism in Egypt. From 1000 BCE we see Hindu ideas in Iran; From at least 800 BCE we see them in Greece. From Greece it spread throughout Europe.

–subham—

Attachment from etymoonline

Charles’s Wain (n.)

Old English Carles wægn, a star-group associated in medieval times with Charlemagne, but originally with the nearby bright star Arcturus, which is linked by folk etymology to Latin Arturus “Arthur.” Which places the seven-star asterism at the crux of the legendary association (or confusion) of Arthur and Charlemagne. Evidence from Dutch (cited in Grimm, “Teutonic Mythology”) suggests that it might originally have been Woden’s wagon. More recent names for it are the Plough (by 15c., chiefly British) and the Dipper (1833, chiefly American).

It is called “the Wagon” in a Mesopotamian text from 1700 B.C.E., and it is mentioned in the Biblical Book of Job. The seven bright stars in the modern constellation Ursa Major have borne a dual identity in Western history at least since Homer’s time, being seen as both a wagon and a bear: as in Latin plaustrum “freight-wagon, ox cart” and arctos “bear,” both used of the seven-star pattern, as were equivalent Greek amaxa (Attic hamaxa) and arktos.

The identification with a wagon is easy to see, with four stars as the body and three as the pole. The identification with a bear is more difficult, as the figure has a tail longer than its body. As Allen writes, “The conformation of the seven stars in no way resembles the animal,–indeed the contrary ….” But he suggests the identification “may have arisen from Aristotle’s idea that its prototype was the only creature that dared invade the frozen north.” The seven stars never were below the horizon in the latitude of the Mediterranean in Homeric and classical times (though not today, due to precession of the equinoxes). See also arctic for the identification of the bear and the north in classical times.

A variety of French and English sources from the early colonial period independently note that many native North American tribes in the northeast had long seen the seven-star group as a bear tracked by three hunters (or a hunter and his two dogs).

Among the Teutonic peoples, it seems to have been only a wagon, not a bear. A 10c. Anglo-Saxon astronomy manual uses the Greek-derived Aretos, but mentions that “unlearned men” call it “Charles’s Wain”:

Arheton hatte an tungol on norð dæle, se haefð seofon steorran, & is for ði oþrum naman ge-hatan septemtrio, þone hatað læwede meon carles-wæn. [“Anglo-Saxon Manual of Astronomy”] 

[Septemtrio, the seven oxen, was yet another Roman name.] The star picture was not surely identified as a bear in English before late 14c.

xxxxxxxxxxx

Rishi, Bear, Sapta Rishi, Rksa, Ursa Major, Homer, Satapata Brahmana, Tamil Narrinai 

தொல்காப்பியம் பற்றி கருணாநிதி விட்ட ‘கப்ஸா’! (Post.10,721)

IF U DONT C PICTURES, GO TO MY OTHER BLOG swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,721

Date uploaded in London – –    7 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியப் பூங்கா என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய நூலில் பக்கத்துக்குப் பக்கம் கப்ஸா விட்டிருக்கிறார்; தாவது கதை அளந்து இருக்கிறார். நல்ல வேளை , கப்ஸா அடிப்பதற்கு முன்னர் இளம்பூரண அடிகளும்  நச்சினார்க்கினியரும் (மதுரை பாரத்வாஜ கோத்திரப் பார்ப்பான் ) என்ன சொன்னார்கள் என்று எழுதிவிட்டு தன கருத்தைச் சொல்கிறார். முன்னுரை எழுதிய கருணாநிதி, அன்பழகன் , நன்னன் ஆகியோர் இதுவரை தொல்காப்பியர் பற்றிய கருத்துக்களை நிராகரிக்கின்றனர். ஐந்திரம் என்று ஒன்று இல்லை, அகஸ்தியர் என்ற ஒருவர் இல்லை போன்ற பல பொன்மொழிகள்!

இன்று பாரதியார் போன்றோர் பாடிய பாடல்களில் , அதற்கு முன்னர் கம்பன் பாடிய, பரஞ்சோதி முனிவர் பாடிய பாடல்களில் எல்லாம் அகஸ்தியர்- தமிழ் தொடர்பு பாராட்டப்பட்டுள்ளது. அதையும் கூட சில இடங்களில்  திரித்துக் காட்டியுள்ளனர் இவர்கள் சொல்லாமல் மறைக்கும் விஷயங்கள் அதிகம். ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் தருகிறேன்.

பனம்பாரனார்  பாயிரத்தை ஏற்றுகொள்வோரும் நாலு வேதத்தில் வல்லவரான அதங்கோட்டு ஆச்சாரியார் ஏன் தொல்காப்பியருக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தார் என்பதை விளக்கவில்லை. கருணா நிதியோ எல்லாம் கதை என்று சொல்லி கதை அளக்கிறார்.

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” – என்ற பொருள் அதிகார சூத்திர உரையை மட்டும் எடுத்துக் கொள்வோம் ;

“அய்யர்” என்பது பிராமண புரோகிதர் இல்லை “உயர்ந்தோர்” என்று சொன்னவர் “கரணம்” என்ற சொல் தமிழ் சொல் அல்ல என்பதைச் சொல்லவில்லை. அவர் மறைத்தாரா அல்லது அவருக்கே தெரியாதா என்பதை யாம் அறியோம்.

கரணம் என்பது விதிகள், சடங்கு என்ற பொருளில் திருமண விஷயத்தில் பயன்படுகிறது . இதற்கான காரணம் மஹா பாரதத்தில் உள்ளது. ஒரு ரிஷியின் மனைவியை மற்றோருவர் இழுத்துக் கொண்டுபோனபோது  அவளுடைய மகன் இது என்ன அக்கிரமம் என்று கதறுகிறான். அதற்கு விளக்கம் சொல்கையில் முன்காலத்தில் இப்படி விதிமுறைகள் இல்லாமல் வாழ்க்கை நடந்ததாகவும் பின்னர்தான்  ஊர் அறிய சடங்குகளோடு கல்யாணம் நடத்தும் முறை வந்ததாகவும் மஹாபாரதம் சொல்கிறது. இதைத் தான் தொல்காப்பியர் “பொய்யும் வழுவும்” என்கிறார். அதைக்கட்டுப்படுத்த எழுந்த சடங்கு விதிகள்தான்  “கரணம்” (INSTRUMENT) .

‘கரணம்’ தொல்காப்பிய  பொருள் அதிகாரத்தைத் தவிர பதிற்றுப் பத்து பதிகத்தில் மட்டுமே வருகிறது. பதிகத்தில் வருவதை சங்க இலக்கியப் பகுதியாக ஏற்பது இல்லை

பொருள் அதிகாரம் – 3-140, 141, 142, 143, 144

பின்னர் சிலப்பதிகாரம், மணிமேகலையில் ஓரிரு இடங்களில் வருகிறது.

இதனால் தாமஸ் லெஹ்மான் , தாமஸ் மால்டன் (A Word Index for Cankam Literature by Thomas L and Thomas M) தொகுத்த சொல்லடைவில் “கரணம்” இல்லை

xxxxx

கரணம் – தமிழ்ச் சொல் இல்லை

அய்யர் யாத்தனர் கரணம் , மலர் 48, தொல்காப்பியப் பூங்கா , கலைஞர் மு.கருணாநிதி

மலர் 46-ல் கோவலன்-கண்ணகி கல்யாணம் ஏன் தோற்றுப்போனது என்று காரணம் சொல்கிறார்.

சிலப்பதிகார வரிகள் :- “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து” — திருமணம் நடந்தது

“பார்ப்பனர் ஓதிய மந்திரமும்- கோள் பார்த்துக் குறித்த நல் ஓரையும்  அவர்களைப் (கோவலன்-கண்ணகி) பாதுகாத்திடவில்லை” என்று கருணாநிதி சொல்கிறார்.

xxxx

எனது உரை

தமிழர் காதில் நன்றாகப் பூ சுற்றுகிறார் . எப்படி?

ஐயர் மந்திரம் இல்லாத கல்யாணம் எல்லாம் வெற்றியாம். இதை எழுதியவருக்கு எத்தனை மனைவி என்று அறிக !!!

xxx

இதற்குப்பின்னர் தமிழில் முதல் முதலில் உரை எழுதிய இளம்பூரண அடிகளையும் அவரை அடியொற்றி உரை எழுதிய நச்சினார்க்கினியரையும் குறைகூ றுகிறார் அவர்கள் இருவரும் நால் வருண அடிப்படையில் உரை எழுதினர் என்று கருணாநிதி சொல்கிறார்.

தொல்காப்பிய பொருள் அதிகார சூத்திரம் :

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

-பொருள் அதிகாரம் , கற்பியல் நூற்பா 4

பக்கம் 306-ல் வெள்ளை வாரணார் விளக்கத்தை சேர்த்துள்ளார்

“அய்யர் என்பது சிறப்புடைய பெரியோரைக் குறிக்கும் தமிழ்ச் சொல் ஆகும். ஆர்ய என்பதன் திரிபாக பிறழ உணர்ந்து உரை எழுதியோரும் உண்டு”.

இதற்குப் பின்னர் அடிக்கடி சந்தித்த காதலன் காதலிக்கு  திருமணம் செய்ய முடிவு செய்தவுடன் ஒருவர் ‘அய்யரை அழைப்போம்’ என்றார் ; வேறு குலத்தவர் எதற்காக? என்று ஒருவர் கேட்க “இந்த அய்யர் அறநெறி வகுத்த பெரியவர்” என்ற விளக்கம் வேறு!!!

xxxx

எனது கருத்து

இதில் விளக்கப்படாத விஷயம்  ‘கரணம்’ என்ற சொல். அது தமிழ்ச் சொல் அல்ல .

எப்படி நிரூபிக்க முடியும் ?

தொல்காப்பியத்தைத் தவிர சங்க இலக்கியத்தில் எங்கும் இந்தச் சொல் இல்லை! தமிழில் முழுக்க முழுக்க தமிழர் கல்யாணத்தை விவரிக்கும் இரண்டே பாடல்கள்தான் உண்டு- அக நானூறு 86, 136.

அதிலும்  இச் சொல் இல்லை. மேலும் அங்கும் ரோகிணி (சகடம்) நட்சத்திரத்தில் கல்யாணம் செய்த குறிப்புதான் உளது. அதை வராஹ மிஹிரர் நூல்களிலும் காண்கிறோம். அதுவும் சகடம்/வண்டி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் ( ச- எழுத்தில் சொற்கள் வராது என்பது தொல்காப்பிய  விதி)

தொல்காப்பியம் தவிர கரணம் வரும் இடமெல்லாம் “கரத்தால் செய்யக்கூடிய பணிகளே கரணம்” என்றும் அவை தந்திர கரணம், சித்திர கரணம் , நாட்டிய கரண முத்திரைகள் என்றே சிலப்பதிகாரத்தில் வருகிறது

கரணம் என்பதை நாம் ‘உபகரணம்’ முதலிய இடங்களில் இன்றும் பயன்படுத்துகிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி என்ற சம்ஸ்க்ருத – தமிழ் பேரறிஞர் இது ஹோமச் சடங்கை குறிக்கும் சொல். இது யாக்ஞ வாக்ய ஸ்ம்ருதியில் உளது என்று காட்டுகிறார்.

அக்நவ்கரணம் – யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி 1-150

இது ஒன்றை மட்டும் காட்டினால் நாம் ஒதுக்கித் தள்ளிவிடலாம் அவரோ புறநானூற்றிலும் தொல்காப்பியத்திலும் உள்ள ஏராளமான விஷயங்களை 1946-ல் எழுதிவிட்டார்.

இறுதியாக ஒரு சொல்- “ஐயர் யாத்தனர்” என்று தொல்காப்பியர் சொன்னதே அது “ரிக்- அதாவது செய்யுள் = மந்திரம்” என்றும் விளங்கும். இன்றும் ரிக் வேத கல்யாண மந்திரங்கள் (Rig Veda 10-85) எல்லா பிராமணர்  வீடுகளிலும் முழங்குகிறது. யாத்தல் என்றால் ‘கட்டுதல்’, ‘செய்யுள் இயற்றல்’; யாப்பு- செய்யுள் இலக்கணம்.

மேலும் தமிழர்கள் கல்யாணத்துக்குப் பயன்படுத்தும் வதுவை (திருமணப் பெண், மனைவி) என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொல்லே. ஆக முழு தமிழர் திருமணத்தைக் காட்டும் அகம்.86, 136 பாடல்கள், சம்ஸ்க்ருதத்தில் உள்ள பழக்க வழக்கங்களைக் காட்டுகின்றன (உ.ம் . சகடம்/ரோகிணி நட்சத்திரம், வதுவை)

காதல் (களவு முறைக்) கல்யாணங்களில்  எத்தனை தற்கொலைகள் , எத்தனை கொலைகள், எத்தனை கள்ளத் தொடர்புகள் என்பதை நாள்தோறும் நமக்கு பத்திரிகைகள் அளிக்கின்றன ; அதாவது கருணாநிதி சொல்வது பொய்/ கப்ஸா  என்று  நமக்குக் காட்டுகின்றன ; இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலம் மஹாராஷ்டிரமும் தமிழ்நாடும் தான் என்று நமக்கு கலகைகளஞ்சிய தகவல்களும் சொல்கின்றன. அதில் பெரும்பாலானவை காமம், கள்ளத் தொடர்பு, காதல் என்பதையும் நாளேடுகள் நிரூபிக்கின்றன.

மேலும் காதல் கல்யாணமும்  புதிதல்ல . மனு ஸ்ம்ருதி சொல்லிய எட்டுவகைத் திருமணங்களை அப்படியே தொல்காப்பியர் சொன்னதையும் தமிழ் அறிஞர்கள் அறிவர். உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலம் நாடகம் காதலில் மலர்ந்ததே. சங்க காலத்திலேயே பேகன், DIVORCE டைவர்ஸ் செய்ததையும் ஆங்கே புலவர்கள் சமாதானம் செய்ததையும் சங்க இலக்கியம் செப்புகிறது.

பகவத் கீதை ஸ்லோகத்தில் காமம், க்ரோதம், லோபம் என்ற மூன்றுதான் நரகத்தின் நுழைவாயில்கள் GATE WAYS TO HELL என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதையும் இன்று சிறை ச் சாலைகள் நிரூபிக்கின்றன.

50, 60 ஆண்டுகளாக  திராவிடர்கள் விடும் கப்ஸாக்களை படிப்பதற்கு முன்னர், வை தாமோதரம் பிள்ளை, ந.மு வேங்கடசாமி நாட்டார், வையாபுரிப் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் முதலிய அறிஞர்கள் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும்

xxxxx

1935 ஆனந்த விகடன் தமிழ் அகராதியில் கரணம்

கரணம்

அந்தரித்தியம், அறுதிச் சீட்டு, உபகரணம், எண்ணிக்கை,

எது, ஐம் பொறி , கணிதம், கலவி, காரணம், கூத்து , செய்கை,

கூத்தினோர் விகற்பம், நற்செய்கை, பஞ் சாங்கத்தில் ஒன்று,

விருப்பம், கையாற் செய்யும் தொழில், இந்திரியம், அந்தக்கரணம், மனம்,

விவாகச் சடங்கு, தலை கீழாகப் பாய்கை , கருவி, எண் , சாசனம், கணக்கன்,

கருமாதிச் சடங்குக்கு உரிய பண்டங்கள், உடம்பு, மணச் சடங்கு, நாகவம்,

கி மிஸ்துக்கினம் , கரண காரணம், புணர்ச்சி, சாதகதமம், சாத ன பத்திரம் ,

தத்துவம், துணைக்கருவி, விநோதக்கூத்து ஆறினுள் ஒன்று,சாசனம், புத்தி,

கன்மேந்திரியம், அகம்காரம், பவம் , பாலவம், கவுல வம், வனசை , சகுனி,

பத்திரம், சதுர்பாதம், தைது லை  , கரசை.

xxxx

Sanskrit dictionary

[«previous (K) next»] — Karana in Sanskrit glossary

Source: DDSA: The practical Sanskrit-English dictionary

Karaṇa (करण).—a. [k-lyu]

1) Making, doing, effecting, producing.

2) (Ved.) Clever, skilled; रथं न दस्रा करणा समिन्वथः (ratha na dasrā karaā saminvatha) Rv.1.119.7.

-ṇaḥ 1 (Ved.) An assistant. यमस्य करणः (yamasya karaa) Av.6.46.2.

2) A man of a mixed tribe.

3) A writer, जज्ञे धीमांस्ततस्तस्यां युयुत्सुः करणो नृप (jajñe dhīmāstatastasyā yuyutsu karao npa) Mb.1.115. 43; Ms.1.22.

4) A child. cf. …… करणः शिशौ । शूद्राविशोः सुतेऽपि स्यात् (karaa śiśau | śūdrāviśo sute’pi syāt) Nm.

-ṇam 1) Doing, performing, accomplishing, effecting; परहित°, संध्या°, प्रिय° (parahita°, sadhyā°, priya°) &c.

2) Act, action.

3) Religious action; Y.1.251.

4) Business, trade.

5) An organ of sense; वपुषा करणोज्झि- तेन सा निपतन्ती पतिमप्यपातयत् (vapuā karaojjhi- tena sā nipatantī patimapyapātayat) R.8.38,42; पटुकरणैः प्राणिभिः (paukaraai prāibhi) Me.5; R.14.5.

6) The body; उपमानमभूद्विलासिनां करणं यत्तव कान्तिमत्तया (upamānamabhūdvilāsinā karaa yattava kāntimattayā) Ku.4.5.

7) An instrument or means of an action, न तस्य कार्यं करणं न विद्यते (na tasya kārya karaa na vidyate) Śvet.6.8; करणं च पृथग्विधम् (karaa ca pthagvidham) Bg.18.14.18. उपमितिकरणमुपमानम् (upamitikaraamupamānam) T. S.; तस्य भोगाधिकरणे करणानि निबोध मे (tasya bhogādhikarae karaāni nibodha me) Mb.3.181.19.

8) (In Logic) The instrumental cause which is thus defined :व्यापारवद- साधारणं कारणं करणम् (vyāpāravada- sādhāraa kāraa karaam).

9) A cause or motive (in general).

10) The sense expressed by the instrumental case (in gram.); साधकतमं करणम् (sādhakatama karaam) P.1.4.42; or क्रियायाः परिनिष्पत्तिर्यद्- व्यापारादनन्तरम् । विवक्ष्यते यदा यत्र करणं तत्तदा स्मृतम् (kriyāyā parinipattiryad- vyāpārādanantaram | vivakyate yadā yatra karaa tattadā smtam) ||

11) (In law) A document, a bond, documentary proof; Ms.8.15,52,154.

12) A kind of rhythmical pause, beat of the hand to keep time; अनुगर्जितसंधिग्धाः करणै- र्मुरजस्वनाः (anugarjitasadhigdhā karaai- rmurajasvanā) Ku.6.4.

13) (In Astrol.) A Division of the day; (these Karaṇas are eleven).

-bava, bālava, kaulava, taitila, gara, vaṇija, viṣṭi, śakuni, catuṣpāda, nāga and [rkistughna].

14) The Supreme Being.

15) Pronunciation.

16) The posture of an ascetic.

17) A posture in sexual enjoyment. बोभुज्यते स्म करणेन नरेन्द्रपुत्री (bobhujyate sma karaena narendraputrī) Bil. ch.42. वात्स्यायनोक्तकरणैर्निखिलैर्मनोज्ञै । संभुज्यते कविवरेण नरेन्द्रपुत्री (vātsyāyanoktakaraairnikhilairmanojñai | sabhujyate kavivarea narendraputrī) || Ibid.45.

18) A field.

19) Plastering with the hand.

2) The usage of the writer caste.

21) The Principle of intelligence; दृष्टाः करणाश्रयिणः (dṛṣṭā karaāśrayia) Sāṅ. K.43.

22) (In Astron.) Name of a treatise of Varāhamihira on the motion of planets.

-ṇī 1) A woman of a mixed caste. माहिष्येण करण्यां तु रथकारः प्रजायते (māhiyea karayā tu rathakāra prajāyate) Y.1.95.

2) Absurd or irrational number.

-sutā f. An adopted daughter.

–subham —

Tags- ஐயர் யாத்தனர் கரணம் , தொல்காப்பியம், கருணாநிதி, கப்ஸா , பொய்  உரை , தமிழ் சொல் இல்லை

ச.நாகராஜன் கட்டுரைகள் பிப்ரவரி 2022 (Post No.10,720)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,720
Date uploaded in London – – 7 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் கட்டுரைகள் பிப்ரவரி 2022 INDEX
February 2022 INDEX

1-2-22 10616 14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில்! சம்ஸ்கிருத
விந்தை!!
2-2-22 10619 வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி! நல்லதிலும் தவறு;
கேட்டிலும் உறுதி!
3-2-22 10623 நான் யார்? ரமண மஹரிஷியின் நூல்!
4-2-22 10625 கேளிக்ருஹத்தில் நடக்கும் அந்தரங்கக் காட்சிகளைக் காட்டும்
கவிதை!
5-2-22 10628 ச.நாகராஜன் கட்டுரைகள் ஜனவரி 2022
6-2-22 10633 மஹரிஷி ததீசி – 1
7-2-22 10637 மஹரிஷி ததீசி – 2
8-2-22 10640 அதிர்ச்சியூட்டும் செய்தியும், ஆனந்த செய்தியும்!
9-2-22 10643 தழுவி நின்றொழியான், தரை மேல் வையான்!
10-2-22 10646 மார்பகங்களுக்கேற்ற மார்பு இல்லையே – இளைஞனின் புலம்பல்!

11-2-22 10649 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 2 (ஹெல்த்கேர்
பிப்ரவரி கட்டுரை)
12-2-22 10651 கானகத்தில் புலியும் ஸ்வாமி விவேகானந்தரும்!
13-2-22 10655 டயபடீஸை புரிந்து கொள்ளுங்கள்; அதைத் தீர்க்கும் வழிகள்
தெரியும்!
14-2-22 10657 நமக்குத் தொழில் கவிதை! (காவ்யானுசாஸனம்)
15-2-22 10660 பக்தி எத்தனை வகைப்படும்? நாரதரின் பதில்!
16-2-22 10663 உயிர் காக்க உதவும் ஸ்தோத்திரங்கள்!
17-2-22 10666 ஆற்றைக் கடக்கத் துணையாக வருபவர் யார்?
18-2-22 10668 சிந்தாமணி ப்ரக்ஞா – பகவான் ரமணரின் விளக்கம்!
19-2-22 10671 மஹரிஷி குசத்வஜரின் பெண்ணே, ராவணனின் அழிவுக்குக்
காரணம்!
20-2-22 10674 ஈனர்களை ஒருபோதும் அண்டாதே! (சுபாஷிதம்)

21-2-22 10677 சாதலை நீக்கும் நெல்லிக்கனியை ஔவைக்கு கொடுத்த
அதியமான்! கொங்குமண்டல சதகம் பாடல் 42
22-2-22 10680 வள்ளல்களின் வழக்கம்! தொண்டைமண்டல சதகம் பாடல்கள் 69
& 66
23-2-22 10683 மஹரிஷி ஔத்தாலகியும் யமலோகம் கண்ட நசிகேதனும்!
24-2-22 10686 சம்ஸ்கிருத பஹிராலவ வகை புதிர்க் கவிதைகள்!
25-2-22 10688 உலகின் தாயகம் இந்தியா! அறியுங்கள்!! நேசியுங்கள் !!!
26-2-22 10692 ஸ்ரீநகர்
27-2-22 10695 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66 – பாட்டிடையிட்ட
பாரதியார் சிறுகதைகள் – முதல் தொகுப்பு – இராஜ
முத்திருளாண்டி
28-2-22 10698 சித் பூஜையும், மூர்த்தி பூஜையும் : சிவபிரான் அருளுரை! (யோகவாசிஷ்டம்)


FEBRUARY 2022 LONDON SWAMINATHAN ARTICLES INDEX No.111 (Post No.10,719)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,719

Date uploaded in London – –    6 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DED  1279  ‘KARU’ IS NOT A TAMIL WORD?(Post No.10,700); 28/2

Greek and Roman authors place India’s first king in 6777 BCE; Post 27-2/

SANSKRIT WORDS IN ZEND AVESTA-PART 2 (Post No.10,690);25/2

SANSKRIT WORDS IN ZEND AVESTA-PART 2; 10,697; 10,670; 18/2

SOMA MYSTERY IN IRAN-4  10,687;24/2

SOMA MYSTERY IN IRAN-3  10,684;23/2

SOMA MYSTERY IN IRAN; ZEND AVESTA GIVES WONDERFUL DETAILS -2; 10,682;22/2

SOMA MYSTERY IN IRAN; ZEND AVESTA GIVES WONDERFUL DETAILS -1;10,678; 21/2

HOW DID TAMILS GET AYIRAM FROM SANSKRIT?10681;21/2

VEDIC WORDS SABHA AND SAMITI FOUND AROUND THE WORLD;10,676;20/2

SELF CONFIDENCE OF VEDIC PEOPLE VENI,VIDI,VICI;10,673;19/2

SIMILARITIES BETWEEN BHAGAVAD GITA AND PARSI’S ZEND AVESTA,10,667; 17/2

MYSTERIOUS BRIDGE TO CROSS AFTER DEATH IN HINDU AND PARSI RELIGION,10,665; 16/2

WOMAN’S CHASTITY: VALMIKI AND MANU VERSES IN TIRUKKURAL COUPLET, 10,661; 15/2

KALKI AVATAR IN PARSI LITERATURE; 10,559; 14/2

SOMA YAGA IN INDIA AND IRAN-PART 2; 10,658; 14/2

NO PURDAH IN INDUS VALLEY; GREAT POET AND VEDAS AGAINST PURDAH,10,654;12/2

SOMA YAGA IN INDIA AND IRAN-PART 1; 10,652; 12/2

HINDU GODS IN ZEND AVESTA- 4;10,647;10/2

HINDU GODS IN ZEND AVESTA- 3;10,645;9/2

HINDU GODS IN ZEND AVESTA- 2;10,642;8/2

HINDU GODS IN ZEND AVESTA- 1;10,639;7/2

LINGUISTICS SHOWS THE WAY OF HINDU MIGRATARY ROUTE; 10,644

PYRAMIDS ERODED; VEDAS NEVER ERODED; BEAUTIFUL INTRODUCTION TO RIG VEDA; 10,635; 6/2

A NEW STORY: YAJUR VEDA IN ZOROASTRIAN  ZEND AVESTA-2;10,631;5/2

JANUARY 2022 LONDON SWAMINATHAN ARTICLES INDEX 110; 10,629; 5/2

HINDUS MIGRATED TO IRAN; PERSIANS IN THE RIG VEDA; 10,627; 4/2

FOR MUSIC LOVERS- BHARAT’S GREATEST MUSICIAN BHARAT RATNA BHIMSEN JOSHI; 10,626; 4/2

GIVE US GOLD AND GEMS  HIDDEN IN SECRET PLACES-VEDIC POET;10,622;2/2

XXXXX

TAMIL ARTICLES

‘கரு’ (KARU- CORE-) என்பது தமிழ்ச் சொல் அல்ல (Post No.10,699); 28-2

பகவத் கீதையில்சுவையான சொற்கள் – 7 ரிஷிகள், சப்த ரிஷிகள்; 10697;27/2

பகவத் கீதையில்சுவையான சொற்கள் – வேத வாத ரதாஹா ; 10,694; 26/2

கி.மு.1000 அவெஸ்தன்- தமிழ் தொடர்பு ; 10,691; 25/2

‘ஆயிரம்’ தமிழ் சொல் அல்ல- 10,670; 21/2

கீதை ஸ்லோகத்துடன் முடியும் பூமி சூக்தம்,;10,669; 18/2

கற்பு பற்றி வள்ளுவர், வால்மேகி, கம்பன்,ஷேக்ஸ்பியர் , மநு 10,664;16/2

அவை, சட்டை, சட்ட- தமிழ் சொற்கள் அல்ல; சட்ட மேலவை ஸம்ஸ்க்ருதம்  ; 10656; 13/3

பர்தா ஒழிக – பாரதியார் முழக்கம்; 10653; 12/2

வினி, விடி, விசி – ஜூலியஸ் சீஸரும் அதர்வண வேதமும்;;10650;11/2

ஞானப் படகு , ஞான விளக்கு , ஞானத்  தீ, ஞானக்  கண், ஞான வேள்வி ; 10,648; 10/2;

பெண்கள் எட்டு வகை! அறிந்து கொள்க 10641; 8./2

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் -அதர்வண வேதப் புலவன்;10,636;6/2

மீண்டும் புலவர் புராணம் , 10,632;5/2

பூமியில் புதைந்துள்ள தங்கமும் வைரமும் தருக – புலவன் வேண்டுகோள்;10,624; 3/2

Q & A ஆயிர மாமுக கங்கை என்று தேவாரத்தில் எங்கு வருகிறது? 10,621, 2/2

கல்யாணத்தின் நாலாவது நாள் என்ன நடக்கும்? 10,620;2/2

சங்க இலக்கியத்தில் மர வழிபாடு-2; ;10,618; 1/2

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -41; 1/2; 10,617

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -42; 5/2; 10,630

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -43; 7/2; 10,638

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -44; 15/2; 10,662

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -45; 20/2; 10,675;

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -46; 23/2; 10,685;

–SUBHAM —

TAGS—-    index 111, february 2022, london swaminathan