Tamil Hindu Encyclopaedia- Part 2 அணங்கு ,  சுராங்கனி (Post No.11322)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,332

Date uploaded in London – 7 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Tamils are better Hindus than others. Tiru Valluvar begins his most popular book Tiruk Kural with Bhagavad Gita sloka/couplet. Krishna said ‘Aksharanam Akaarosmi’ (BG 10-33)- ‘Of the letters I am letter ‘A’ (in the alphabet). Valluvar, an ardent Hindu said ,

‘As all alphabets have letter ‘A’ as their first, so as the world Bhagawan(god) for its beginning’.

The things to be noted are the Sanskrit words A-kaaram and Bhagawan in the very first couplet of the most famous Tamil work. He summarised all the 700 slokas of Bhagavad Gita into 140 couplets in his Chapters on Ascetic Virtues.

Let us look at more words from Tamil Sangam works now:

Anangu (அணங்கு)

Anangu அணங்கு means nymphs, spirits that live in  nature. Female deities and personification of nature are portrayed as beautiful maidens. Hindus believe that all the things in Nature have their own spirits. Greeks also followed Hindus and allocated nymphs for lakes, hills, ocean, water, trees etc. They even used Sanskrit word Neer for water in Nereids in Greek. Sanskrit word Neer for water is in the holiest mantra ‘Narayana’ and Rig Veda as well.

Anangu in Mahabharata gave us the best advice in Yaksha Prasna. Hindus call them with various names as Yaksha, Brahma Rakshas (Brahmin Ghosts) etc.

Hindus (Tamils) believed that they will harm us if we interfere in their work or cross their borders. 2000 year old Sangam Tamil Hindus found these spirits in at least 20 places.

xxx

Tamil Hindus sing about Spirits/Nymphs found in the following places:-

Apsaras, Women’s chest,  House, Door steps, Lyre (Yaaz in Tamil), Kadamba tree, Head of the elephant, Cot made up of tusk, Ponds, Ocean, Bathing Ghats, in the middle of the sea, Shark, Lord Skanda (Muruga in Tamil) Goddess (Devi), Ghost etc.

We must understand what they really mean. Hindus believe that everything in Nature is divine , and so use them carefully; give them respect; and if you use them unnecessarily they will harm you. Now science also says that is correct. If you waste water you won’t get good harvest. If you cut all the trees, there won’t be any rain.

Linguistics Research

My research shows that the word Nymph, Anangu in Tamil and Surangani are cognate words. Nangai in Tamil means wife, woman; found only twice in Sangam literature (Paripatal). Surangani (beauty from heaven/ devaloka ) is used in Sinhalese.

The reason for my interpretation is the reference in Tolkappiam, the oldest book in Tamil.

Tolkappiar, the author, says that four things cause fear in people: Anangu, Animals, Thieves and Kings.

The commentators interpreted Anangu as Divine Women such as Suurara Makalir (Suraangani)

Sura/Deva+ Aaaranangu/beauty

அணங்கு , நங்கை, சுராங்கனி (தேவ லோக அழகி, நங்கை)

சுர + ஆரணங்கு= சுராங்கனி

அணங்கே விலங்கே கள்வர் தம் இறை என

பிணங்கல் சாலா அச்சம் நான்கே (தொல்காப்பியம் 1202)

உரை

சூர் அர மகளிர் ஆரணங்கே (சுராங்கனி )- யாப்பருங்கல விருத்தி உரை மேற்கோள்

Xxx

Fear evoking harming elements

In Puram 174, poet Miss Nappasalai praised Mr Sri Krishna (in Tamil Thiru Kannan) singing about the Mahabaharata episode of Krishna causing solar eclipse by his Sudarsana wheel so that Arjuna could slay Jayadratha. It was a real solar eclipse attributed as Krishna’s miracle. There  the poet says Anangudai Avunar /fearful Rakshasas hiding sun and then Mr Black (Anjana Uruvan= collyrium dark person) saving it . Here Anangu means Fearful.

(fighting took place on certain days only during ; they did not fight continuously for 18 days. So one New moon day occurred in between and the solar eclipse can happen only on New moon days/Amavasyai)

xxx

Anangu in Sangam books

As God/Divine in 29 places

As Divine women in 2 places (+ 2 places in Tirukkural)

As harming spirit – 3 places

As on the chest of woman – 5 places

As living in houses 3 places

As part of Lyre/ Yaaz in Tamil – 1

In Kadamba Tree – 1

In the elephant head and tusk – 2

In the water sources – 12 places

(This is in Yaksha Prasna of Mahabharata too)

As trouble causing Skanda (Muruga)- 6 places

Kalidasa also says that women are harmed by Lod Skanda /Muruga. Sangam Tamils also mentioned it in

Natrinai- 47-8; 376-10; 386-6; Puram.299-6; Kali.52-10; Muruku-289

(for abbreviations of Tamil books, please see first part of this article)

Anangu as troubling, fear causing element is used in over 30 places in Sangam literature

In one place ,a ladylove  is compared to  Anangu (Surangani??) – Pari.12-57

(When I was visiting temples from Shirdi to Nasik, in one of the shrines, my wife and other women in our group were not allowed inside Skanda/ Muruga shrine. A big curtain with an announcement said-‘ No women can enter. This is Skanda/ Kartikeya shrine’. In ancient Tamil Nadu love sick women behaved strangely. Immediately their mothers says she is affected by Murugan/Skanda and invited prophesy tellers to drive the love sickness out. They sacrificed goats to the gods during the ceremony.

To be continued……………………..

 Tags- Anangu, Surangani, Tamil, Sangam, literature, Tamil Encyclopedia , Nymphs, Spirits, Yaksha

குட்டிக் கதைகள்! சுட்டிக் காட்டுவதோ சுவையான செய்திகள் (Post.11331)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,331

Date uploaded in London – –    7 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குட்டிக் கதைகள்! சுட்டிக் காட்டுவதோ சுவையான செய்திகள்!

ச.நாகராஜன் 

சில வரிகளில் பெரிய விஷயங்களை விளக்கும் குட்டிக் கதைகளில் தான் எவ்வளவு சுவையான விஷயங்கள் அடங்கி இருக்கிறது! ஒவ்வொன்றையும் படித்தவுடன் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் நாம் அடையும் லாபமோ கணக்கிடமுடியாத அளவில் இருக்கும்! சில குட்டிக் கதைகளைப் பார்போமா?

 முக்தி அடைந்த விதம் 

சாது வேஷம் போட்ட சோம்பேறிகள் சிலர் ஒரு கிராமத்திலிருந்த தோட்டத்தை ஆக்கிரமித்து நன்றாக உண்டு கொழுத்து வந்தனர். ஒரு நாள் பழுத்த பழங்களைப் பறிக்க எண்ணிய ஒரு தொப்பை சந்ந்தியாசி மரத்தின் உச்சியில் உள்ள கிளையின் மீது கிடுகிடுவென்று ஏறினார். அவரது பாரம் தாங்காமல் கிளை முறிய கீழே விழுந்த அவர், இறந்து போனார். அந்தச் சமயத்தில் யோகி ஒருவர் அங்கே வர, கூடவே கிராமமக்களும் கிராம அதிகாரியும் வந்து குழுமி விட்டனர்.

கிராம அதிகாரி (போலி) சாதுக்களைப் பார்த்து இவர் எப்படி இறந்தார் என்று வினவ அவர்கள் முழித்தனர். யோகி, கிராம அதிகாரியை நோக்கி, “அவர் பாரம் தாங்காமல் அவரே முக்தி அடைந்தார்!” என்று பதில் சொன்னார்.

 கருணை புரிய எல்லை எதுவும் இல்லை 

அடர்ந்த இமயமலைக் காடுகளில் பனி பொழிந்திருந்த குளிர் காலக் காலை நேரம். யாருமே இல்லாத வனாந்தர பிரதேசம்! ஒரு சாது அந்தப் பனி மலை பிரதேசத்தில் ஒரு ஒற்றையடிப் பாதை வழியே சென்று கொண்டிருந்தார்.தூரத்திலே ஒரு இளம் தளிர் – ஒரு அடி உயரம் இருக்கும்- சாய்ந்து கிடந்தது. ஓடோடிச் சென்ற அந்த சாது இளம் செடியைப் பார்த்தார். ஐஸ் கட்டி அதன் தண்டின் மேல் விழுந்திருக்கவே கனம் தாங்காது அது சாய்ந்து கிடந்திருந்தது. சாது அந்த ஐஸ் கட்டியை மெதுவாக விலக்கி விட்டார். செடி நிமிர்ந்தது. சாது தன் வழியே போனார்.

 ஞானம் வரும் நேரம்!

 “ஒரு நிமிடத்தில் ஞானம் அடைந்து விட முடியுமா என்ன ?” சிஷ்யன் குருவிடம் சந்தேகத்தோடு கேட்டான்.

“நிச்சயமாக அடைந்து விட முடியும்” என்று குரு பதில் சொன்னார்.

“ஆனால், குருவே, ஒரு நிமிடம் என்பது மிகவும் குறைவான நேரமாக இருக்கிறதே”-சந்தேகம் தீராத சிஷ்யன் மென்று விழுங்கினான்.

“59 விநாடிகள் அதிகமாக இருக்கிறது, அப்பனே!” என்றார் குரு.

மற்ற சிஷ்யர்கள் எல்லோரும் இந்த உரையாடலைக் கேட்டு திகைத்தனர்.

பிறகு குரு கேட்டார்:-“ சந்திரனைப் பார்க்க எவ்வளவு நேரம் பிடிக்கிறது?”

“உடனே பார்க்கலாமே!… அப்படியானால் எல்லோராலும் ஏன் ஞானம் பெற முடியவில்லை? ஆன்மீக சாதனையில் இவ்வளவு காலம் ஏன் செலவிட வேண்டியிருக்கிறது”- சிஷ்யர்கள் வினவினர்.

“கண்களை மூடிக்கொண்டே இருக்கும் ஒருவருக்கு கண்னைத் திறக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்! ஆனால் கண்ணைத் திறந்து விட்டால் க்ஷண மாத்திரத்திலேயே பார்க்க முடியும், இல்லையா!” சாதுவின் விளக்கத்தை சிஷ்யர்கள் புரிந்து கொண்டனர்!

 நெருப்பிடம் விளையாடாதே!

 யோகி ஒருவரின் ஞானத்தைப் பார்த்த அரசன் ஒருவன் அவர் விரும்பாத போதும் கூட வற்புறுத்தி ஒரு மாளிகையை அளித்து அதில் தன்னை நல்வழியில் செலுத்துவதற்காக எப்போதும் கூடவே வசித்து வர பெரிதும் வணங்கி வேண்டினான். 

யோகிக்கு வந்த வாழ்வைக் காணப் பொறுக்காத ஒரு செல்வந்த பிரபு அரசரிடம் ஒரு நாள், “ அரசே! அந்த யோகி ஏராளமாகப் பணத்தையும் தங்க, வெள்ளிக் கட்டிகளையும் சேர்த்து வைத்திருக்கிறார். இவற்றை அதிக வட்டிக்கு வேறு விடுகிறார். அப்படி வட்டிக்குத் தரும் போது அரசன் என்று இறக்கிறானோ அன்று இதைத் திருப்பித் தந்தால் போதும் என்று வேறு சொல்கிறார்.” என்றார்.

 குழம்பிப் போன அரசனுக்கு திரும்பத் திரும்ப இதைச் சொல்லவே அவனுக்கு யோகியின் மீது கோபம் வந்தது.

அரச சபை கூடியிருந்த போது நேரடியாகவே கோபத்துடன் அரசன் அவரிடம் கேட்டான்:-“ என்ன யோகியாரே! பணத்தையும் தங்கம் முதலானவற்றையும் அதிக வட்டிக்கு மக்களுக்கு விடுவதோடு நான் இறக்கும் போது அவற்றை வாங்கிக் கொள்வதாகச் சொல்கிறீர்களாமே, இது உண்மையா?”

 யோகிக்கு செல்வந்தரின் பொறாமையும் சூழ்ச்சியும் புரிந்தது.

மிக மெதுவாக சாந்தமான குரலில், “ ஆமாம், மன்னா! அப்படித் தான் சொல்லிக் கொடுக்கிறேன்!” என்றார்.

சபையிலுள்ளோர் ஆஹா என்று கூவினர். செல்வந்தரோ இன்றோடு யோகியின் அத்தியாயம் முடிந்தது என்று மகிழ்ந்தார்.

அரசர் ஆச்சரியத்தோடு யோகியைப் பார்த்து,” என்ன தைரியம் இருந்தால் இப்படி செய்வீர்கள்; செய்வதை ஒப்புக் கொள்ளவும் செய்வீர்கள்” என்றான்.

 அரசனை நோக்கிய யோகி, “ மன்னரே ! நான் விடும் அகாத வட்டிக்கு எந்தக் குடிமகனானாலும் கூட அசலையும் வட்டியையும் திருப்ப முடியுமா என்ன? அவர்கள் என்ன செய்வார்கள்? அரசன் இறக்கவே கூடாது! நெடு நாள் வாழ வேண்டும். நாங்கள் பணத்தை திருப்பி அளிக்கத் தேவையே இருக்கக் கூடாது என்று இறைவனை தினம் தோறும் பிரார்த்தனை அல்லவா செய்வார்கள். இந்தக் கூட்டுப் பிரார்த்தனையால் அரசர் நெடு நாள் வாழ்ந்து தேசம் சுபிட்சமாக இருக்குமல்லவா! அதனால் அப்படிச் செய்தேன்” என்றார்.

 மனம் குளிர்ந்த அரசன், “யோகியாரே! கஜானாவில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் இன்னும் எடுத்துக் கொள்ளுங்கள்! மக்களை நான் நீண்ட நாள் வாழுமாறு பிரார்த்தனை செய்ய உதவி புரியுங்கள்” என்று வினயமாக வேண்டினான்.

யோகியாரோ, “ அரசரே! இதற்குத் தங்கள் கஜானா பணத்தை எடுக்க வேண்டுமா,என்ன, இதோ இருக்கிறாரே, இந்த செல்வந்தர் இவரிடம் உள்ளதே போதுமே” என்றார்.

எதுவும் பேச முடியாமல் செல்வந்தர் திகைக்க, அரசன் ஆமோதிக்க, மக்கள் மகிழ

யோகியார் செல்வந்தரின் பணம் அனைத்தையும் எடுத்து மிக அதிக வட்டிக்கு ஏழைகளுக்கு வழங்கினார்! அதை தானமாகப் பெற்ற மக்கள் அரசனை வாழ்த்தினர்!      

***

புத்தக அறிமுகம் – 79

ராமாயண வழிகாட்டி! (பாகம் 1) 

நூலில் உள்ள அத்தியாயங்கள் 

பொருளடக்கம் 

முதல் பகுதி

  1. மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?
  2. பொறுமையே அழகு!
  3. கழிந்த இரவு மீண்டும் வராது!
  4. சமுத்திரத்தில் சேரும் இரு கட்டைகள்!
  5. உற்சாகமே உயிர்!
  6. ராமர் போற்றிய மஹாத்மா!
  7. ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள்!
  8. உற்சாகமே பலம்!
  9. உயிரைக் காப்பாற்றிக் கொள்!ஆனந்தம்  உன்னை  வந்து அடையும்!!
  10. சரணடைந்தோரைக் காக்கும் விரதம் கொண்ட அதிசய புருஷன் ராமன்!
  11. அனுமனிடம் சீதை சொன்ன கரடி கதை!
  12. சினம் காக்க!
  13. மனமே அனைத்துப் புலன்களின் இயக்கத்திற்கும் காரணம்!
  14. நாள் அல்ல, உயிரை அறுக்கும் வாள்!                           
  15. ராம ராஜ்யம் – 1                                                    
  16. ராம ராஜ்யம் – 2
  17. ராம ராஜ்யம் – 3                                                        
  18. ராம ராஜ்யம் – 4
  19. சீதை ராமருக்குச் சொன்ன ஆயுதம் பற்றிய கதை!
  20. பாதுகையின் மஹிமை!
  21. ராமம் ஸத்யபராக்ரமம்!
  22. கோசலையின் ஆசீர்வாதம்!
  23. சீதை சொன்ன காகாஸுரன் கதை!
  24. மண்டோதரியின் மாண்பு !
  25. ராமரின் சாஸ்வதமான அனுஷ்டானம்!
  26. முனிவரின் இரக்கம்! ராமாயண உதயம்!!
  27. ராமாயணம் சௌபாக்யம், பாப நாசனம், வேத சமம்!

இரண்டாம் பகுதி

   1. காண்ட, ஸர்க்க, ஸ்லோக எண்ணிக்கை விவரம்       

   2. ஏழு காண்டங்களில் உள்ள ஸர்க்கங்களின் விவரம்      

   3. ராமாயண காலத்தில் பாரத தேசத்தின் வரைபடம் 

*

 இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

 ராமாயணம்…ரகு வம்ச இளவரசரின் வாழ்க்கைப் பயணம். புனித பாரதத்தின் தலைசிறந்த இதிகாசம். வாழ்க்கை வழிகாட்டி. உறவுகளுடனான கடமைகளை வலியுறுத்தும் ஆதி காவியம்! வால்மீகி முனிவரின் செவ்விய மதுரம் சேர்ந்த கூரிய கவிதைகள்… தமிழில் புதிய ஒரு முயற்சியாக, 24,000 சமஸ்கிருத ஸ்லோகங்களில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லோகங்கள் எளிய நடையில், அழகிய தமிழில், உரிய விளக்கங்களுடன் இந்நூலில் தரப்பட்டுள்ளன. அசலின் சுவை எப்பொழுதுமே ஈடு இணையில்லாததுதான்! படித்துத்தான் பாருங்களேன்! 

*இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ராமாயண வழிகாட்டி (பாகம் 1)நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Tamil Hindu Encyclopaedia – Part 1(Post No.11,330)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,330

Date uploaded in London – 6 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 Ancient Tamils were ardent Hindus. They were well versed in Vedas, Itihasas/epics and Puranas/Mythology. Many of their names are in Sanskrit. They reveal lot of new information which are not in Sanskrit; probably we lost them. The oldest book Tolkappiam, talks about Dharma Artha and Kama in many places, surprisingly in the same order. Oldest part of the Sangam corpus, Pura nanuru (naanuuru) also sings about the Dhrama artha kama . The best book in the Tamil is Tirukkural and its real name is Muppaal (three divisions- Dharma, Artha Kama. Moksha is included in the Ascetism chapter.

Many of the Poets’ names are in pure Sanskrit such as Damodaran, Kesavan, Vishnudasan (Vinnanthaayan in Tamil), Kannadasan (kannanthaayan in Tamil), Kaamaakshi (Kaamakkanni in Tamil), Valmiki, Brahma, Sulochana (Miss Nakkannai in Tamil), Raadhaa ( in Tamil Nappinnai= Miss Hair Beauty) Mahadevan (maathevan in Tamil), Rudraksha (Uruththiran kannannaar in Tamil) so on and so forth.

We have references to Raja Suya Yaga and 21 types of Yagas and Yupa sthambas. We have evidence of Eagle shaped Yaga Kunda, and Asvametha Yaga.

In the first part of this Tamil Hindu Encyclopaedia

I will list all the references and in the second part, I will add poems and brief explanation.

Here we go

Sangam Tamil literature is nearly 2000 year old. The oldest part belongs to first century BCE and the latest part belongs to third century CE. But they were made anthology only later, probably in the fourth century CE. We have 18 books running to 27,000 to 30, 000 lines. Since some people don’t consider the ‘in between’ Pathikams, the number of lines differ.

In the eighteen books we have Pathuppattu (paththuppaattu) and Ettuththokai.

Pathuppattau consists of Ten long poems- idylls

Ettuththokai consists of Eight Anthologies

Pathu is Ten and Ettu is Eight in Tamil.

Xxx

1.Shamudrika Lakshnanam

1.Shamudrika Lakshnanam (Science of Body features and their link to behaviour and virtues)

Thaal Thoi Tadakkai- long hands extending to knee- Aajaanu Baahu in Sanskrit

Rama is praised as Ajanubhahu Aravintha lochana/long hands, lotus like eyes in Sanskrit.

xxx

Thaal Thoi Tadakkai- Akananuru 312-11;

Purananuru – 59-2;  90-10;

Kurinjippattu – Line 123

( Akanaanuuru is abbreviated as Akam, Puranaanuuru- Puram, Kurinjippaattu – Kurinji)

Xxx

Three Lines on chest  (Sempori in Tamil)

Some commentators think that it is not three lines but Lakshmi, Goddess of Wealth is mentioned. When the poets described men, particularly kings, they used Sempori.

Sem in Tamil means both Red and Best/Proper

Following are the references:

Puram – 68-5; 161-27;

Pathitruppaththu – 88-30

(Pathitruppaththu is abbreviated as Pathitru)

Kurinji – lines 121-123

Tirumurukaatruppatai – Lines 104-105

(Tirumurukaatruppatai is abbreviated as Muruku)

Xxx

Vishnu with Lakshmi on his chest

Sri Vatsa in Sanskrit and Tamil translation is ‘Tiru Maru Marba’.

Tiru Maru Marba literally means Sri/Lakshmi Emblem/Mole (on) Chest.

It is the name of Vishnu, ‘one who carries Lakshmi on his chest’.

Tiru Maru Maarba is found in

Paripaatal – 1-39 (abbreviation Pari.)

Kalittokai 104-10 (Kali. is abbreviation)

Perumpanatruppatai (perum paanaatrup patai)- line 29 (abbreviation- Perum)

This emblem is found in Jain Tirtankara  (Arukan) statues as well.

Xxx

Lotus Eyed Vishnu /Krishna/Rama

Rama, Krishna and Vishnu are praised as Lotus eyed- Aravinda Lochana

But it is found only in Post Sangam work Tirukkural (5th century CE)

Thaamaraik Kannaan- Tiruk Kural 1103

xxx

Lotus Seated – All the goddesses are lotus seated, but it is mostly used to denote Lakshmi.

Tiru Valluvar used it in Kural – 617

Tamil words used:-

தாள் தோய் தடக்கை மார்பில் செம்பொறி மூன்று வரிகள் தாமரைக் கண்ணான்தாமரையினாள் திரு மறு மார்பன் ஆஜானுபாஹு அரவிந்த லோசனஸ்ரீ வத்ச

To be continued…………………

Tags- Tamil, Hindu, Encyclopaedia, Shamudrika lakshana, Body features

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் -வால்மீகி, பாரதி (Post.11,329)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,329

Date uploaded in London – 6 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 கோபம் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் வால்மீகியும்  , பாரதியும்  மக்களை நன்கு எச்சரிக்கின்றனர். வள்ளுவனும் கோபத்தை வருணிக்கையில் சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பான் .

முதலில் பாரதி சொல்லுவதைக் கேளுங்கள் 

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;

கொடுங்கோபம் பேரதிர்ச்சி:சிறிய கோபம்

ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்;

அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;

தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்.

கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;

கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்

கொல்வதற்கு வழியெனநான் குறித்திட் டேனே.

வள்ளுவன் சொல்லுவதில் நிறைய விஷயங்கள் உள்ளன

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.–குறள் 306

[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]

இந்த சேர்ந்தாரைக் கொல்லி என்பது சம்ஸ்க்ருதத்தில் உள்ள மரபுச் சொற்றொடர்

ஆஸ்ரயாச: = சேர்ந்தாரைக்கொல்லி

அமரகோசம் என்னும் புகழ்பெற்ற சம்ஸ்கிருத நிகண்டில் அக்னி பகவானுக்கு உள்ள 34 பெயர்களில் ஒன்று ஆஸ்ரயாச:. இதன் பொருள் சேர்ந்தாரைக் கொல்லி என்பதாகும். அதாவது தன்னுடன் சேர்ந்தாரையும் சேர்த்து அழிப்பது அக்னி.

இது முதல் முதலில், ரிக்வேதத்தில் அக்கினி பகவான் துதியில் வருகிறது. பெற்ற தாயையே அழிப்பவன் அக்கினி பகவான் என்று அவன் சக்தியைப் போற்றுகிறது வேதம் .

அக்னி பற்றிய பாடலில் வரும் வரிகள் (ரிக்வேதம்:10—79—4)

“இந்தப் புனித விதியை உனக்குச் சொல்கிறேன். பூமியும் வானமும்; –பிறந்த குழந்தை — தந்தை, தாயையே விழுங்கிவிட்டது.

இந்தக் கடவுள் பற்றி முழுதும் நான் அறியேன். நான் சாதரண மானுடன்– ஆனால் அக்னி பகவானுக்குத் தெரியும். அவர் எல்லாம் அறிந்தவர்.”

கம்பன் இதை இன்னும் அழகாக, விரிவாகச் சொல்கிறான்.

மூங்கில் காட்டில் இரண்டு மூங்கில்கள் உராய்ந்து தீ என்னும் குழந்தையைப் பெறுகிறது. அந்த பெற்ற குழந்தை அப்பா, அம்மா மட்டும் இல்லாமல் சுற்றத்தையே அழித்துவிடுகிறது. இதுதான் சேர்ந்தாரைக் கொல்லி.

கம்பராமாயணத்தில்


மூங்கிலிற் பிறந்து முழங்கு தீ மூங்கில்
முதலற முருக்குமாப் போலத்
தாங்கரும் சினத் தீ தன்னுள்ளே பிறந்து
தன்னுறு கிளையெல்லாம் தகிக்கும்;
ஆங்கதன் வெம்மை அறிந்தவர் கமையால்
அதனையுள் அடக்கவும் அடங்காது
ஓங்கிய கோபத்தீயினை ஒக்கும்
உட்பகை உலகில் வேறுண்டோ ?
உத்தரகாண்டம் – இலவிணன் -29

XXX

இப்போது கோபம் பற்றி லெட்சுமணன் வாயிலாக வால்மீகி  கூறுவதைக் காண்போம்

निर्मनुष्यामिमां कृत्स्नामयोध्यां मनुजर्षभ।

करिष्यामि शरैस्तीक्ष्णैर्यदि स्थास्यति विप्रिये।।2.21.10।।

நிர்மனுஷ்யாம் இமாம் க்ருத்ஸ்னாம் அயோத்யாம் மனுஜர்ஷப

 கரிஷ்யாமி சரைஹி தீக்ஷ்ணைஹிர் தி  ஸ்தாஸ்யதி  விப்ரியே

मनुजर्षभ O best among men, विप्रिये against you, स्थास्यति यदि if any one stands up, इमाम् this, कृत्स्नाम् entire, अयोध्याम् Ayodhya, तीक्ष्णैः with sharp, शरैः arrows, निर्मनुष्याम् depopulate, करिष्यामि I shall do.

இந்த அயோத்தி நகரம் முழுதும் உனக்கு எதிராக நின்றாலும் என் கூரிய அம்புகளால் அவர்கள் அனைவரையும் அழித்தொழிப்பேன்.

XXX

प्रोत्साहितोऽयं कैकेय्या स दुष्टो यदि नः पिता।

अमित्रभूतो निस्सङ्गं वध्यतां बध्यतामपि।।2.21.12।।

ப்ரோத் ஸாஹிதஹஅயம் கைகேய்யா   ஸஹ துஷ்டஹ  யதி நஹ  பிதா  அமித்ர பூதஹ   நிஸ்ஸங்கம்  பத்யதாம் பத்யதாமபி

கைகேயியால் தூண்டிவிடப்பட்ட நம்முடைய கெட்டுப்போன தந்தையே எதிரியாக மாறினாலும் , சொந்தபந்தம் பற்றிக் கவலைப் படாமல் அவரைச் சிறைப்படுத்தி கொன்றுவிடுவேன்

कैकेय्या by Kaikeyi, प्रोत्साहितः instigated, सः that, दुष्टः vicious, नः पिता our father, अमित्रभूतः यदि becomes enemy, निस्सङ्गं without caring for any relationship, अयम् I will, बध्यताम् shall be imprisoned, वध्यतामपि also shall be slain.

கோபத்தின் காரணாமாக அயோத்தி மக்கள் அனைவரையும், தந்தையையும் கூட கொன்று குவிப்பேன் என்று முழங்குகிறான் லெட்சுமணன் !

XXXX

ராமனைக் காட்டில் சந்தித்து எப்படியாவது அவனை  மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்று ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பரதன் பெரும் படைகளுடன் வருகிறான். ஆனால் லட்சுமணனின் கோபம் அவனுடைய கண்களை மறைக்கிறது. பரதனை எதிரி என்று நினைத்து குமுறுகிறான் . பரதனையும் படைகளையும் கொன்று, காட்டு மிருகங்களுக்கு இரையாயாக்குவேன் ; அவனுடைய அம்மா கைகேயியையும் கொல்லுவேன் என்று கொந்தளிக்கிறான்.

 அயோத்யா காண்டத்தில் வரும் ஸ்லோகங்கள் இவை

 अद्य पुत्रं हतं संख्ये कैकेयी राज्यकामुका।


मया पश्येत्सुदुःखार्ता हस्तिभग्नमिव द्रुमम्।।2.96.26।।

அத்ய புத்ரம் ஹதம் சங்க்யே  கைகேயீ ராஜ்யகாமுகா

மயாபஸ்யேத்ஸுதுக்கார்தாஹஸ்திமக்னம்இவத்ருமம்


राज्यकामुका greedy for the kingdom, कैकेयी Kaikeyi, अद्य today, संख्ये in a battle, मया by me, हतम् slain, पुत्रम् son, हस्तिभग्नम् felled by an elephant, द्रुमम् इव like a tree, सुदुःखार्ता extremely afflicted, पश्येत् let her see.


ஒரு யானை பெரிய மரத்தை வீழ்த்துவது போலஇன்றைய சண்டையில்  பரதனை வீழ்த்துவேன். அவனுடைய தாய்- பேராசைக் காரியை சோகத்தில் மூழ்கடிப்பேன்

XXX

कैकेयीं च वधिष्यामि सानुबन्धां सबान्धवाम्।

 कलुषेणाद्य महता मेदिनी परिमुच्यताम्।।2.96.27।।

கைகேயீம் ச பதிஷ்யாமி ஸானு பந்தாம் ஸபாந்தவாம்

 கலுஷேன அத்ய மஹதா மேதிநீ   பரிமுச்யதாம்

கைகேயியையும் அவளுடைய உறவினர்களையும் இன்று கொன்று இந்த உலகத்தைப் பாவத்திலிருந்து விடுவிப்பேன்

सानुबन्धाम् with her attendants, सबान्धवाम् with her relations, कैकेयीं च also Kaikeyi, वधिष्यामि will slay, अद्य today, मेदिनी the earth, महता by a great, कलुषेण of the sin, परिमुच्यताम् let it be cleansed.

XXX

நான் அடக்கி வைத்த கோபம் காட்டுத் தீ போல இன்று எதிரிகளின் படைகள் மீது பாய்ந்து அவர்களை மட்டம்தட்டும் 2.96.28।।

XXX

இன்று நான் என் அம்புகளால் , எதிரிகளின் உடல்களைத் துண்டாக்கி சித்ர கூடக் காடுகளை ரத்தத்தால் தெளிப்பேன் 2.96.29।।

XXX

शरैर्निर्भिन्नहृदयान्कुञ्जरांस्तुरगांस्तथा।

श्वापदाः परिकर्षन्तु नरांश्च निहतान्मया।।2.96.30।।

शरैः with arrows, निर्भिन्नहृदयान् with hearts transfixed, कुञ्जरान् elephants, तथा and, तुरगान् horses, मया by me, निहतान् killed, नरांश्च also men, श्वापदाः also wild beasts, परिकर्षन्तु let them drag off.

சரைஹி  நிர்பின்ன ஹ்ருதயான் குஞ்சரான்  துரகான்  ததா

ஸ்வா பதாஹா  பரி கர்ஷந்து   நராம் ஸ் ச நிஹாதான்மயா

என்னுடைய அம்புகள் இருதயத்தில் பாய்ந்து கிடக்கும்போது, காட்டு மிருகங்கள், என்னால் கொல்லப்பட்ட யானைகளையும், குதிரைகளையும் மனிதர்களையும் இழுத்துச் செல்லட்டும்.

Xxx

அயோத்யா காண்டத்தின் 73ஆவது சர்க்கத்தில், பரதனும் தன்னுடைய  தாயாரான கைகேயீ  மீது கோபக் கனலை அள்ளி வீசுகிறான். அவளைத் திட்டுவதற்கு பரதன் வாய் மூலமாக வால்மீகி பயன்படுத்தும் உவமைகளும் குறிப்பிடத்தக்கவை . என் அப்பா தசரதன் உன் அழகில் மயங்கி எரியும் கனலைக் கட்டிக்கொண்டுவிட்டானே ஏ பாவத்தின் மூட்டையே என்று ஏசுகிறான். ராமன் மட்டும் உன்னை அம்மா என்று கருதாமல் இருந்திருந்தால் உன் கதி  சகதி ஆகியிருக்கும் என்று எச்சரிக்கிறான். 27 ஸ்லோகங்களை வால்மீகி பயன்படுத்துகிறார். ஓரிரு சுலோகங்களில் மட்டும் கோபத்தைக் காண்போம் :

दुःखे मे दुःखमकरोर्व्रणे क्षारमिवादधाः।
राजानं प्रेतभावस्थं कृत्वा रामं च तापसम्।।2.73.3।।

राजानम् king, प्रेतभावस्थम् reducing to a corpse, रामं च also Rama, तापसम् as an ascetic, कृत्वा having made, मे to me, दुःखे in one sorrow, दुःखं another sorrow, (मे) अकरोः you have caused, व्रणे in the wound, क्षारम् salt, आदधाः इव like putting.

துக்கே மே  துக்கம்  அகரோஹோ  வ்ரணே  க்ஷரரம் ஆததாஹா இவ

ராஜானம்  ப்ரேத  பாவஸ்தம் க்ருத்வா ராமம் ச  தாபஸம் 

அரசனின் மரணத்துக்கும் ராமனின் சந்நியாசி வாழ்வுக்கும் நீயே காரணம். துக்கத்துக்கு மேல்  துக்கங்களைக் கொண்டு வந்திருக்கிறாய்; வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவிட்டாயே.

Xxx

குலத்தை அழிக்க வந்தவளே ! யமன் போன்ற இருளே ! எரியும் அனலைக் கட்டிக்கொள்வது என் தந்தைக்குத் தெரியவில்லையே !

कुलस्य त्वमभावाय कालरात्रिरिवाऽगता।

अङ्गारमुपगूह्य स्म पिता मे नावबुद्धवान्।।2.73.4।।

குலஸ்யத்வம்  அபாவாய  காலராத்ரிர் இவ ஆகதா 

அங்காரம் உப கூஹ்யஸ்ம   பிதா மே நாவபுத்தவான்

त्वम् you, कुलस्य family’s, अभावाय for destruction, कालरात्रिरिव like a fatal night, आगता have arrived, मे पिता my father, अङ्गारम् a live charcoal, उपगूह्य having embraced, नावबुद्धवान् did not realize.

இவ்வாறு பல இடங்களில் வால்மீகி, நமக்கு கோபத்தி ன் வேகத்தைக் காட்டுகிறார். அப்போது அவர் பயன்படுத்தும் உவமைகள் அதற்குப் பொருத்தமாகவும் அமைகின்றன.

-subam –

Tags- கோபம், சேர்ந்தாரைக் கொல்லி, சினம், வால்மீகி , பரதன், லெட்சுமணன்

பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி? (Post No.11,328)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,328

Date uploaded in London – –    6 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி?

ச.நாகராஜன்

எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் பிரச்சினைகள் நிறைய உண்டு. அவற்றை எப்படித் தான் தீர்ப்பது?!

ஒரு ராஜகுமாரி இருந்தாள். அவளுக்குக் கண்களில் ஒரு பிரச்சினை இருந்தது. கண்களில் ஒரே எரிச்சல்.

ராஜகுமாரி அல்லவா? அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.

ராஜா மிகவும் வருந்தினார்.

ராஜ வைத்தியர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் கண்களுக்கு மருந்தைத் தந்தனர். ஆனால் ராஜகுமாரியோ அதை போட்டுக் கொள்ள மறுத்தாள். தனது கண்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அப்படித் தொடுவது கண்களின் எரிச்சலைக் கூட்டியதோடு புண்ணும் உருவாக ஆரம்பித்தது.

இது தாங்க முடியாமல் போன போது ராஜகுமாரி ஓவென்று கதற ராஜா இதை யார் தீர்க்கிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் பொன் சன்மானம் தருவேன் என்று முரசறிவித்தார்.

பலரும் முயன்றனர். ஒருவராலும் ராஜகுமாரியின் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.

ஒரு நாள் ஒரு இளைஞன் வந்தான். அடுத்த நாட்டிலிருந்து வந்திருப்பதாகவும் தான் மிகப் பெரிய வைத்தியர் என்றும் தெரிவித்தான்.

ராஜா அவனை ராஜகுமாரியைப் பார்க்க அனுப்பினார்.

அவன் ராஜகுமாரியைப் பார்த்தான். அவள் அலறுவதையும் பார்த்தான். அவள் எந்த ஒரு வித  மருந்தையும் எடுத்துக் கொள்ள மறுப்பதோடு தன் கண்களை தானே குத்திக் கொண்டிருப்பதையும் அவன் மற்ற மருத்துவர்களிடமிருந்து கேட்டு அறிந்திருந்தான்.

அவளைப் பத்து நிமிடம் பார்த்து விட்டு, ‘ஹா ஹா’ என்று சிரித்தான்.

ராஜ குமாரி திகைத்தாள்.

“ஏன் இந்த சிரிப்பு” என்று வைத்தியரை அவள் கேட்டாள்.

“ஆஹா! இது ஒரு பிரச்சினையே இல்லையே! கண்கள் சரியாகத் தான் இருக்கிறது. பிரச்சினை வேறு இடத்தில் இருக்கிறது” என்றான் அவன்.


“எந்த இடம்? என்ன பிரச்சினை?” என்று திகைப்புடன் கேட்டாள் ராஜகுமாரி.

“ஐயோ! அதைச் சொல்ல முடியாதே! சொல்லவும் கூடாதே! ராஜா அனுமதி தந்தால் மட்டும் தான், அது பற்றிப் பேசவே முடியும். நான் வருகிறேன்!” என்றான் அவன்.

திகைத்துப் போன ராஜகுமாரி உடனே தன் தந்தையை வரவழைத்து வைத்தியர் கூறியதைச் சொல்ல ராஜா, இளம் வைத்தியரைப் பார்த்து, ”நான் அனுமதி தருகிறேன். பிரச்சினை என்ன?” என்றார்.

“அரசே! ராஜகுமாரியின் கண்களில் ஒரு பிரச்சினையும் இல்லை. பிரச்சினை வேறு இடத்தில் இருக்கிறது. அதுவும் பெரிய பிரச்சினை” என்றான் இளைஞனான அந்த வைத்தியர்.

“என்ன அது?” – ராஜா கேட்டார்.

“அரசே! ராஜகுமாரிக்கு கண்களில் பிரச்சினையே இல்லை. ஆனால் ராஜகுமாரிக்கு ஒரு வால்  முளைக்கப் போகிறது. அது ஒன்பது கஜ நீளம் அளவு பெரிதாக வளரப் போகிறது. ஆனால் அது தோன்றியவுடன் ராஜகுமாரி அதைப் பற்றிச் சொல்லி விட்டால் அதை உடனே என்னால் குணமாக்கி விட முடியும்” என்றான் அவன்..

ராஜகுமாரி பயந்து போனாள். அவள் தனது வாலைப் பற்றி நினைக்க ஆரம்பித்து அது எப்போது தோன்றப் போகிறது என்பதையே நினைத்திருந்தாள்.

சில நாட்கள் கழிந்தன. கண்களைத் தொடவே இல்லை ராஜகுமாரி.

கண்கள் பூரண குணம் அடைந்தன. எரிச்சல் இல்லவே இல்லை.

ராஜாவிடம் வந்த வைத்தியர் ராஜகுமாரியின் கண்கள் எப்படி இருக்கிறது என்று கேட்டான்.

மனமகிழ்ச்சியோடு ராஜா, “கண்கள் பூரண குணம் அடைந்து விட்டன, ஆனால் வால் தான் இன்னும் தோன்றவில்லை” என்றார்.

ராஜகுமாரியும் அதை ஆமோதித்தாள்.

வைத்திய இளைஞன் கூறினான் : “வால் தோன்றவே தோன்றாது. சிறிய பிரச்சினையை ஊதி ஊதி ராஜகுமாரியே வளர்த்து வந்ததால் இப்படிச் சொன்னேன். அழகிய ராஜகுமாரிக்கு வால் எப்படி வரும், வளரும்?” என்ற இளைஞன் சிரித்தான்.

ராஜா அவனுக்கு ஆயிரம் பொன்களை அளித்ததோடு அவனை நிரந்தரமாகத் தன்னுடன் இருக்குமாறு வேண்டினார்.

இந்த புத்தமதக் கதை கூறும் நீதி பெரிய நீதி! அது என்ன?

எப்போதும் நாம் தான் பிரச்சினை இல்லாத ஒன்றை பிரச்சினையாக இனம் காண்கிறோம். தானாகத் தீரக் கூடிய சிறிய பிரச்சினையை ஊதி ஊதி விட்டுப் பெரிய பிரச்சினையாக ஆக்குகிறோம். அப்போது பிரச்சினை மட்டுமே வாழ்க்கையாக ஆகி விடுகிறது.

“எனது பிரச்சினை, என் பிரச்சினைக்கு ஒரு தீர்வு, எனது ஆசை, எனக்கு வேண்டியவை, எனக்குப் பிடிக்காதவை” – இவை நம்மை ஆக்கிரமிக்கும் முன்னர் அவற்றை நாம் இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.

சுயநலத் துடிப்புகளாலும் மறுப்புகளாலும் வாழ்க்கையை நாமே பாழாக்கிக் கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

 பிரச்சினைக்கே பிரச்சினை தந்து அதை அண்டவிடாமல் செய்ய இதுவே சிறந்த வழி!

***

புத்தக அறிமுகம் – 78

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 4)

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

 பொருளடக்கம்

1. பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!

2. தேனீக்களை அழிக்கும் பேப்பர் கப்புகள்!

3. அன்னை பூமியின் உரிமைகளுக்கு ஒரு சட்டம்!

4. காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும்படி காப்போம்!

5. பசுமை இயக்கம் பரவட்டும்!

6. உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!

7. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்போம்!

8. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

9. பவளத்திட்டுகளைப் பாதுகாப்போம்

10. கார்பன் மானாக்ஸைடு தரும் அபாயம்!

11. ஒலி மாசைக் கட்டுப்படுத்துவோம்

12. கடலில் ஏற்படும் ஒலி மாசால் கடல் வாழ் உயிரினங்கள் அழியும்

   அபாயம்!

13. தகிக்கும் வெப்பத்தால் தவிக்கும் பூமி!

14. பசுமையைப் பாதுகாப்போம் ஆற்றலைச் சேமிப்போம்!

15. சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கப் பல வழிகள் உண்டு!

16. காட்டை அழிப்பதால் பெருகும் நோய்கள்!

17. நதிகள், குளங்களின் தூய்மையைக் காப்போம்!

18. கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு!

19 கடலில் கலக்கும் சாத்தான்கள்!

20. நாம் காக்க இருப்பது ஒரே ஒரு பூமி தான்!

21. புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும் மீன் வகைகளும்!

22. புவி வெப்பத்தால் பாதிக்கப்படும் பருவநிலை

23.. அழிந்து வரும் மழைக் காடுகள்!

24. உருகி வரும் பனிப்பாறைகளும் உயரும் கடல் நீர் மட்டமும்!

25. கார்பன் தரும் சவால்!

26. மரங்கள் மடியும் அபாயம்! விழிப்புணர்வு தேவை!!

27. ஒளியீரி விளக்குகளுக்கு மாறுவோம்!

28. காற்றில் மாசை ஏற்படுத்துவது வாகன நச்சுப் புகையே!

29. ஓஸோன் உறை பாதுகாப்பின் அவசியம்

30. ஆர்க்டிக் பனி உருகுகிறது!

31. நான்கு அணுகுண்டுகள் வெளிப்படுத்தும் வெப்பம் அளவு பூமியின்

   வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது!

32. காற்று மாசு இந்தியாவில் ஐந்தாவது பெரும் ஆட்கொல்லி!

33. உரத்தொழிற்சாலைக் கழிவுகள்!

34. வீட்டில் தோட்டம் வளர்க்கலாமே!

35. நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பயங்கர ஒலிகள்!

36. அதிக ஒலியைக் கட்டுப்படுத்துவோம்!

37. இமயமலைக் காடுகளைக் காப்போம்!

38. தட்பவெப்ப மாறுபாட்டினால் சீரழியும் மனித உறவுகள்!

39. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நவீன கண்டுபிடிப்புகள்!

40. பூமி 300 கோடி டன் ஐஸை வருடந்தோறும் இழக்கிறது!

*

இந்த நூலுக்கு மேலாண்மை இயல் பயிற்சியாளரும் எழுத்தாளருமான திரு என்.சி. ஶ்ரீதரன் அவர்கள் அளித்துள்ள  முன்னுரை:

முன்னுரை

திரு. ச. நாகராஜன் அவர்களின் ‘சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் நான்காம் பாகம்’ படித்துப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம்.  இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது நான் எங்கோ படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு கிராமம். அந்த கிராமத்தில் ஒரு வீட்டுத்தலைவன் தன்னுடைய கையில் ஒரு பையுடன் வீட்டுக்குள் நுழைகிறான். வந்தவன் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுக்கிறான். அது என்னவென்று எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அந்தப்பக்கம் போன ஒரு எலியும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவன் வெளியே எடுத்தது ஒரு எலிக்கத்திரி. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த எலி தலைதெரிக்க ஐயோ! இந்த வீட்டில் ஒரு எலிக்கத்திரி இருக்கிறது! இந்த வீட்டில் ஒரு எலிக்கத்திரி இருக்கிறது! என்று கதறியவாறு ஓடியது.  எதிரே வந்த ஒரு கோழியிடம் தான் பார்த்ததைச் சொல்லியது. ஆனால் கோழியோ எலிக்கத்திரி இருந்தால் அது உனக்கு பிரச்சனை. என் நேரத்தை வீணாக்காதே என்று சொல்லியவாறே தன் வேலையைப் பார்க்கப் போனது. அந்த எலி அடுத்து தன் எதிரே வந்த ஆட்டிடம் இதைப் பற்றிச் சொல்லியது. அதற்கு ஆடு நானும் கேள்விப்பட்டேன் எலியாரே. இருந்தாலும் சற்று கவனமாக இரும். நல்ல வேளை இதனால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நான் தப்பித்தேன் என்று  சொல்லியவாறு சிரித்துக்கொண்டே போனது. அதன் பிறகு அந்த எலியின் முன்னால் ஒரு எருமை மாடு வந்தது. எலியை ஒரு மாதிரி பார்த்தவாறே  என்ன எலியாரே, நானும் கேள்விப்பட்டேன். உன் பிரச்சனையைப் பற்றி ஊர் முழுவதும் சொல்லிக்கொண்டு திரிகிறார்களே? என்னுடைய நேரத்தை வீணாக்குவதற்கு முன் நான் கழண்டு கொள்கிறேன் என்று சொல்லியவாறே தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தது. 

ஆக, எலியின் பிரச்சனையைப் பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லை. 

          அன்று நடு இரவு. ‘டப்’ என்று ஒரு சப்தம் கேட்டது. சரி, எலிதான் எலிக்கத்திரியில் மாட்டிக் கொண்டுவிட்டது என்று நினைத்து, அந்தக் குடும்பத்தலைவி, இருட்டில் கண் தெரியாமல் தட்டுத் தடுமாறி விளக்கைப் போட்டாள். எலிக்கத்திரியில் சிக்கியது எலியல்ல. ஒரு விஷப்பாம்பின் வால் பகுதி மட்டும்.  அரைகுறையாக மாட்டிக்கொண்டிருந்தது. வலியால் துடித்துக் கொண்டிந்த அந்தப் பாம்பின் தலைமேல் அந்தக் குடும்பத்தலைவி காலை வைக்க, அது அவள் காலைத் தீண்டியது. குடும்பத்தலைவன் ஒரு நாட்டு வைத்தியரை உடனே அழைத்து வந்தான். விஷம் தலைக்கு ஏறக்கூடாது என்றால் முதல் உதவியாக ஒரு டம்ளர் கோழி சூப் கொடுக்க வேண்டும் என்றார் அவர். குடும்பத்தலைவன் உடனே அந்தக் கோழியை எடுத்துக் கொண்டு ஒரு கையில் கத்தியுடன் சமையலறை நோக்கிச் சென்றான். 

           மறுநாள் அந்தக் குடும்பத்தலைவின் உடல்நிலை மோசமாக, விருந்தினர்கள் அவரைப் பார்க்க வர ஆரம்பித்தனர். அனைவருக்கும் அந்தக் குடும்பத்தலைவன் ஆட்டுக்கறி சமைத்து உபசரித்தான்! சில நாட்களில் அந்தக் குடும்பத்தலைவி இயற்கை எய்தினாள். அவருடைய பதினாறாம் நாள் சடங்கிற்கு அந்த மாடு உணவானது! 

ஆக, ஒருவருக்கு வந்த பிரச்சனை அனைவரையும் பாதிக்கும் என்று கோழியோ, ஆடோ அல்லது மாடோ உணரவில்லை.

இந்தக் கதை நம்முடைய இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தும். காடுகள் அழிவது பற்றியோ, ஓசோன் அடுக்கில் ஓட்டை விழுவது பற்றியோ, நம்முடைய சுற்றுப்புறம் மாசு அடைவது பற்றியோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்தப் பிரச்சனையைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. இது பற்றிய எளிமையான புத்தகங்கள் இல்லை.

இந்தக் குறையை நிவர்த்தி செய்ய வந்துள்ளது என் நீண்ட நாள் நண்பர் திரு. ச. நாகராஜன் அவர்களுடைய இந்தப் புத்தகம். சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பற்றி இவ்வளவு எளிமையான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வேறு யாராலும் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம். ஒவ்வொரு பகுதியிலும் அவர் கொடுத்திருக்கும் விவரங்கள் நம்மைப் பிரம்மிக்க வைக்கிறது. படிப்பவர்கள் மிக மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகம் அனைத்துப் பள்ளியிலும் கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நம்முடைய அடுத்த தலைமுறையாவது சுற்றுப்புறச் சூழலை நாம் எப்படியெல்லாம் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம், இனிமேலும்  நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வார்கள்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை தினமும் பள்ளிகளில் இறை வணக்க கூட்டத்தில் படிக்க வேண்டும்.                   

திரு. ச. நாகராஜன் அவர்கள் இது போன்ற விழிப்புணர்வு புத்தகங்களை மேன்மேலும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 20-3-2014                                                                            திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்

*

இந்த நூலுக்கு நான் அளித்துள்ள என்னுரை

என்னுரை

    சுற்றுப்புறச் சூழ்நிலையை மாசுபடாமல் காக்க வேண்டும் என்பது வேத காலத்திலிருந்து இருந்து வரும் உயர்ந்த சிந்தனையாகும். வேத ரிஷிகள் நாம் வாழும் இந்த பூமியை மாசுறாமல் காக்க வேண்டிய அவசியத்தை இடையறாது வலியுறுத்தி வந்துள்ளனர்.

  இன்றைய வேக யுகத்திலோ இது பற்றி சிந்திப்பதற்கே யாருக்கும் போதிய நேரம் இல்லை. விளைவு, நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. புவியின் வெப்பம் கூடிக் கொண்டே போகிறது.

   இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஆல் இண்டியா ரேடியோவின் வானொலி நிலையங்கள் சுற்றுப் புறச் சூழ்நிலையை மாசின்றிப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அன்றாடம் காலை நேரத்தில் உயரிய சிந்தனைகளை ஒலிபரப்பி வருகின்றன..

   ஆல் இண்டியா ரேடியோவுடனான எனது தொடர்பு முப்பது வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் அற்புதமான ஒரு தொடர்பு. திருச்சி, மதுரை, சென்னை என அகில இந்திய வானொலி நிலையங்களில் எனது நாடகங்கள், அறிவியல் சம்பந்தமான உரைகள், சுற்றுப் புறச் சூழ்நிலையை மேம்படுத்துவதற்கான உரைகள் மற்றும் உரைச் சித்திரம் ஆகியவை அவ்வப்பொழுது ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளன.

  தொலைக்காட்சியின் ஆதிக்கம் அதிகம் நிறைந்துள்ள இந்த நாளிலும் கூட வானொலிக்கு இருக்கும் மதிப்பே தனி என்பதை எனக்குக் கிடைக்கும் பின்னூட்டங்கள் உணர வைத்துள்ளன. வானொலியின் நல்ல தாக்கத்தால் சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்தும் ஏராளமான நல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். இந்த உரைகளை உருவாக்க வாய்ப்பும், ஆக்கமும் ஊக்கமும் தந்த அகில இந்திய வானொலியின் பல்வேறு நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், நிலைய இயக்குநர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

   சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்துவன் அவசியத்தை நாடு, இனம், மதம் என்ற எல்லையைத் தாண்டி அனைவருக்கும் கொண்டு சென்று பூமியைக் காக்க வேண்டிய கடமை நம்மில் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த வகையில் இந்த வானொலி உரைகளை வெளியிட முன் வந்துள்ள லண்டன் நிலா பப்ளிஷர்ஸ் உரிமையாளர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

  இந்த நூலுக்கு நல்லதொரு முன்னுரையை திரு N C ஸ்ரீதரன் அவர்கள் அளித்துள்ளார். திரு ஸ்ரீதரன் ஒரு நல்ல பேச்சாளர், திறமையான நிர்வாகி. பல நூல்களை எழுதியுள்ள நூலாசிரியர். கல்வித் துறையில் பல உன்னதமான சாதனைகளைச் சாதித்து வருபவர். பல்வேறு நிறுவனங்களில் சுய முன்னேற்றம், உற்பத்திப் பெருக்கம் உள்ளிட்ட ஏராளமான முக்கிய விஷயங்கள் பற்றிய பயிற்சி வகுப்புகளைப் பல வருடங்களாக நடத்தி வருபவர். எல்லாவற்றிற்கும் மேலாக எனது இனிய நண்பர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் நட்பு எங்களுடையது.அவர் இந்த நூலுக்கு முன்னுரை அளித்தமைக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   வளமார்ந்த வாழ்க்கையை நம் சந்ததிகளுக்கு உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு.அதற்கு அடித்தளம் நல்ல சுற்றுப்புறச் சூழ்நிலை. இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதைக் காப்பதோடு மேம்படவும் உரிய  முயற்சிகளை மேற்கொள்வார்களேயானால் அதுவே இந்த நூல் படைத்ததன் பயனாக மிளிரும். வாசகர்களுக்கும், இவற்றைக் கேட்டு என்னை ஊக்கிய ஏராள்மான வானொலி நேயர்களுக்கும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

பெங்களூரு                                         ச.நாகராஜன்

20-3-2014                             மின்னஞ்சல் :snagarajans@gmail.com

 இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

To understand and appreciate the pure air and sound, Thoughts on Environment IV has been published in continuation of Part I, II and III. Very thoughtful articles such as “Telling Effects of paper cups on the honey bees”, on “Save green campaign” that helps in keeping environment clean bringing awareness among the readers, on keeping the islands to ensure the safety of fish- culture in the seas, on the dangers that carbon monoxide brings, on the need to protect the society from sound pollution etc. lend color to the book. Other articles on the sufferings of earth due to heat waves, illnesses arising out of de-forestisation, increasing acids in the sea, shrinking vegetation and fishes due to heat on earth, challenge posed by carbon, pollution of the sea through wasted chemicals and bio wastes, need to protect ozone layer and several such illuminating and informative articles lend color and weight to the book.

 மாசற்ற காற்று, ஒலி முதலியவனவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 1, பாகம் 2, பாகம் 3 ஆகியவற்றைத் தொடர்ந்து பாகம் 4 வெளியாகிறது. பூக்களில் அயல்மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும் தேனீக்களை அழிக்கும் பேப்பர் கப்புகள் என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல், சுற்றுப்புறம் தூய்மையாக இருந்திட பசுமை இயக்கம் பரவட்டும் எனச் சுட்டும் விழிப்புணர்வு கட்டுரை, கடலின் மீன்வளத்திற்குப் பெருந்துணையாற்றும் பவளத்திட்டுக்களை பாதுகாப்போம், கார்பன் மோனாக்ஸைடு தரும் அபாயம் மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்துவோம் என்று அறிவுறுத்தும் அற்புதக் கட்டுரைகள் உள்ளடக்கமாக உள்ளன , தகிக்கும் வெப்பத்தால் தவிக்கும் பூமி, காட்டை அழிப்பதால் பெருகும் நோய்கள், கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பு, கடலில் கலக்கும் சாத்தான்கள், புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும் மீன் வகைகளும், கார்பன் தரும் சவால், ஒஸோன் உறை பாதுகாப்பின் அவசியம் என நம் வாழ்வைப் புரட்டிப்போடும் கட்டுரைகள் நிறைந்தது என்றால் மிகையில்லை.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 4 நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

HINDU PURANIC SCENES IN SANGAM TAMIL LITERATURE -4  ( last part)-Post No.11,327

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,327

Date uploaded in London – 5 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Rig Veda and classical Sanskrit literature describe the forest fires. Tamils also described such wild fires in the Sangam literature. But ancient Tamils were better Hindus than many others so that they remember only Mahabharata when they see such a horrible scene

Kabilar in Kurinjik kali ( one of the five chapters in Kalittokai) says in verse 52:

A herd of elephants is caught in a wild fire spreading over mountain. The leader of the herd takes courage and boldly guides others out of the fire and saves them like the hero Bhima (of Mahabharata) who saved his aged mother and brothers when their palace was set fire to by the scheme of their enemy Duryodhana.

 Again, an elephant attacking a tiger with great ferocity with its sharp tusks tearing into pieces is compared to the hero Bhima of the great epic. He fought in the same way with his enemy Duryodhana and cut his thigh with vengeance.

When it (the elephant) returns to its herd in a spirit of joy and pride after killing the tiger, it is compared to Krishna, who killed and crushed the pugilists induced to attack him (Kalittokai 52)

xxx

Sapta Rishi Worship (Great Bear Constellation)

Worshipping Seven Seers known as Sapta Rishis is attested by Panini 2700 years ago.  Brahmins around the world worship 7 seers thrice a day in their Sandhya Vandana ritual. They are seen in the Ursa Major constellation in the northern sky. A Tamil poet by name Ila Nagan (naagan) sang about it  in Natrinai verse 231. He says the sapphire like blue sky has Seven Seers who are worshipped (by the people with their hands ).

Seven stars in Ursa Major (Great Bear) constellation are identified with Seven Seers of Vedas by the Hindus.

Arundhati is considered the most chaste woman by the Hindus. Newly married Hindu couple see this Star in the Ursa Major constellation on the wedding day

We have many references to Aundhati in Tamil:

 Vasishta’s wife Arundhati: Pari 5-44;Pathitru 31-27;89-17;Perum.line 302

Xxx

Crescent Moon Worship

Muslims follow crescent moon to celebrate their festivals such as Ramazan. But crescent moon worship is referred to in Hindu scriptures long before the appearance of Islam.

Sankatahara Chaturthy is an important day for orthodox Hindus, particularly for Ganapathi worshippers. It is observed on the fourth day/Chaturthi after the Full moon day/Purnima. Orthodox Hindus fast in the daytime and eat food only after seeing moon in the evening. Sankata hara means, eliminating difficulties or sorrow. This crescent moon worship is mentioned in Tamil literature too. Sankatahara Chaturthi is from Vinayaka Purana.

Worship of crescent moon: Kuruntokai verses 178;307; Akam. 239; Maduraikanchi- line 193; Puram.60 and Prayer 1;silambu-2—38;

Xxx

Sun Worship

Adi (aadhi) Sankara divided Hindu worship into six main ways. One of the six types is the worship of Sun God (sauram from Suurya). Sun God and his one wheeled chariot with seven horses is also mentioned by Tamil poets

Sun’s one wheel chariot- Akam 360

Suns horses: Akam 363; Pattina. Line 122-124

Xxx

In Hindu Puranas Jupiter or Brihaspati was the teacher of Devas (angels) and Sukracharya (Venus) was the Guru of Asuras. Both these Gurus are Brahmins. Maruthan Ilanagan mentioned both of them as ‘The Two Brahmins’ in Kalittokai verse 99.

Two Brahmins (Jupiter and Venus): Kali-99

xxx

Sati by Monkey

Kuruntokai verse 69 sings about a monkey which committed suicide. Tamil scholar Professor M.Varadarajan described it as ‘Sati’:

Sati is the Hindu custom of chaste wife burning herself with the dead husband during cremation.

“On the death of its loving mate, a female monkey is imagined to hand over its young one to its kith and kin and perform sati by falling down from the top of a hill” (Kuruntokai 69 by Kadunthot Karaveeran).


(Reference: The Treatment of Nature in Sangam Literature by M.Varadarajan)

He is right in describing this as Sati, because the word in the poem is Kaimmai. The monkey did not like the Kaimmaai ( a widow’s life of fasting and rituals). In other poems also we see that Sati was practised by the Tamils where widows did not like Kaimmai  fasting (Puram 246, Sati committed by Pandya queen Bhutapandyan Devi).

— subham—-

Tags- Purana, Sangam Tamil, Poets, Crescent moon, Sapta Rishi, Bhima, Duryodhana

சித்த வைத்தியருக்கு மன்னன் அவுரங்கசீப் எழுதிய கடிதம் (Post.11,326)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,326

Date uploaded in London – 5 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மொகலாய சக்ரவர்த்திகளில் மிகவும் கொடுமைக்காரன் என்றும் மத வெறியன் என்றும் வருணிக்கப்படுபவர் அவுரங்கசீப். இந்துக்களுக்கு ஏராளமான தீங்கிழைத்தவர்.முனைவர் சிவ . பாலகடாட்சம் எழுதிய நூலில்  அவர் பற்றிய சுவையான ஒரு விஷயத்தை ஆங்கில நூல் ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இதோ அதன் விவரம் –

பஞ்சாப் மாநிலத்தில் வாழ்ந்த ஆனந்த நாதர் என்னும் சித்தர் ஒருவருக்கு 1661 அல்லது 1662ல் மொகலாய பேரரசர் அவுரங்கசீப் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. 89 வயது வரை வாழ்ந்த மன்னர், தனது 43 ஆவது வயதில் எழுதி அனுப்பிவைத்த கடிதம் இது.

“வணக்கத்துக்குரிய தங்களின் கடிதமும் கூடவே தாங்கள் அனுப்பிவைத்த இரண்டு தோலா பாதரசமும் கிடைக்கப்பெற்றேன் . எனினும் தாங்கள் எங்களுக்கு விளங்கவைத்த அளவுக்கு இம்மருந்து மிகச் சிறந்ததாயில்லை. தாங்கள் இன்னும் ஒரு முறை மிகக் கவனமுடன் சுத்தி செய்யப்பட பாதரசத்தைத்  தயாரித்து தாமதமின்றி அனுப்பிவைப்பது விரும்பத்  தக்கது. தங்களது மே லாடைக்குத் தேவையான அளவு துணியும்  இருபத்தைந்து ரூபாய் பணமும் காணிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது  அத்துடன் தங்களது பாதுகாப்பை எப்பொழுதும் உறுதிப்படுத்துவது  குறித்து வீரமிக்க பாற்றே சந்துக்கு (Fath Chnad) எழுதப்பட்டுமுள்ளது “.

இந்துக்களை மிகவும் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுபவரும் இஸ்லாத்தில் தீவிர பற்றுடையவருமான அவுரங்கசீப், ஒரு சித்தருக்கு எழுதிய கடிதம் இது என்பதை நம்புவது கடினமாகத்தான் இருக்கும். எனினும் அதுவே உண்மை.பேரரசராலேயே மதிக்கப்பட்ட இந்த சித்தருக்கு பொது மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருந்திரு க்கும்  என்பதை ஊகிப்பது கடினமன்று .

xxx

இத்தாலிய யாத்ரீகர் மார்க்கோ போலோ , (Marco Polo) பிரான்ஸ் நாட்டின் மருத்துவர் பிரான்ஸ்வா பெர்னியர் (Francois Bernier)   ஆகியோர் எழுதிய சுவையான விஷயங்களையும் ஆசிரியர் தந்துள்ளார்.

அக்காலத்தில் இரும்பு, ஈயம்,  செம்பு முதலியவற்றைத் தங்கமாக மாற்றும் ரஸவாதத்திலும், என்றும் சாகாமல் இருக்கச்செய்யும்  காயகல்ப மூலிகையிலும் மக்களுக்கு எவ்வளவு நமபிக்கை இருந்தது என்பதற்கு 18-ம் நூற்றாண்டின்  முற்பகுதியில் வாழ்ந்த தாயுமானவர் பாடலையும் தந்துள்ளார் சிவ  பால கடாட்சம். தாயுமானவர் இதிலுள்ள பேராசையைக் கடிந்துரைக்கின்றார் :-

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி

ஆளினும் கடல் மீதிலே

ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக

அம்பொன் மிக வைத்த பேரும்

நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

நெடுநாளிருந்த பேரும்

நிலையாக வேயினுங் காயகற்பந்தேடி

நெஞ்சு புண்ணானவர் எல்லாம்

பொருள்:-

“ஆசைக்கு ஓர் அளவில்லை. உலகில் உள்ள நாடுகள் அனைத்தையும் கட்டி ஆண்டபோதும் கடலிலும் தமது ஆணையே செல்லவேண்டும் என்று நினைப்பார்கள். குபேரனுக்கு நிகராகப் பொன்னைக் குவித்து வைத்திருப்போரும் (செம்பைப் பொன்னாக்கும்)  இரசவாத வித்தையை அறிந்துகொள்ள அலைவார்கள் . மிகவும் நீண்ட காலம் உயிர் வாழ்ந்துவிட்டோரும் , இன்னும் இறவாமல் இருக்க சாவா மருந்தாகிய காயகல்பத்தைத் தேடித் தேடி  அது கிடைக்காமல் மனம் வருந்துவர்” என்பது இப்பாடலின் பொருள்.

நூலின் பெயர் தமிழர் மருத்துவம்

ஒரு வரலாற்றுப் பார்வை

ஆசிரியர் -முனைவர் பால .சிவ கடாட்சம்

முதல் பதிப்பு – டிசம்பர் 2021

பக்கங்கள் 224, விலை 250 ரூபாய்

வெளியீட்டாளர் – பட்டினம்

SALES OFFICE:- AAZHI PUBLISHERS,

5, K K SALAI, KAVERI RANGAN NAGAR,

SALIGRAMAM , CHENNAI 600 093

aazhipublishers@gmail.com

—subham—

Tags- அவுரங்க சீப், சித்த வைத்தியர், கடிதம், ஆனந்த நாதர்,

எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் (Post No.11,325)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,325

Date uploaded in London – –    5 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் – அடுத்தவரை பலி கொடுத்தாவது!

ச.நாகராஜன்

 ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள தி 48 லாஸ் ஆஃப் பவர் (Robert Greene – The 48 Laws of Power) வெற்றிக்கான விதிகளைச் சொல்லும் புத்தகம்.

 இது சர்ச்சைக்கு உள்ளான புத்தகம்; கடுமையாக விமரிசிக்கப்பட்ட புத்தகம் – இது கூறுகின்ற வழி முறைகளால்! அமெரிக்காவில் சிறைகளில் தடை செய்யப்பட்ட புத்தகமும் கூட.

இப்போது நாம் பார்க்கப் போவது அவர் கூறும் 26வது விதி.

உன் கையைச் சுத்தமாக வைத்துக் கொள் (Keep your hands clean) என்பது அவர் கூறும் விதி.

இதில் அவர் ஒரு நீதிக் கதையை எடுத்துக் காட்டாகக் காட்டுகிறார்.

ஜீன் டீ லா ஃபாண்டேன் (Jean De La Fontaine) கூறுகின்ற கதை இது.

கதை இது தான்:

ஒரு குரங்கும் ஒரு பூனையும் நண்பர்கள். குரங்கின் பெயர் பக்(Pug). பூனையின் பெயர் டாம் (Tom).

வீட்டில் இரண்டும் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இருக்காது.

குறும்புச் செயல்கள் ஏராளம். ஒரு சமயம் எரிகின்ற விறகில் செஸ்ட்நட் வேக வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

வாசனையோ வாசனை.

குரங்கிற்கு அதை சாப்பிட ஆசை. பூனை நண்பனைப் பார்த்தது. பூனையின் அழகிய கைகளை எடுத்துக் கொண்டது. “அடடா! என்ன அழகிய கைகள்!. இந்த வாசனையைப் பார்த்தாயா! இதை இந்த வீட்டுக்காரி நமக்கு தரவா போகிறார். உன் கைகளைக் கொஞ்சம் கொடேன். அதை வைத்து சடக்கென்று இதை எடுத்து விடலாம்.” என்றது.

பூனையின் கையை எரியும் விறகில் விட்டு சடக்கென செஸ்ட்நட்டை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டது. பூனை நெருப்புச் சூட்டால் அலறியது. அந்தச் சமயம் பார்த்து வீட்டுக்காரி அங்கே வர குரங்கு பாய்ந்து வெளியில் ஓடியது. பூனை அடி வாங்கியது.

நீதி : எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் – அடுத்தவரை பலி கொடுத்தாவது!

‘அரசியலில் இதெல்லாம் சகஜம்’ப்பா’ என்ற வசனம் ஞாபகத்திற்கு வருகிறதா?

 சீனாவிற்குப் போவோம். ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் சீனாவில் உள் நாட்டுப் போரால் ஒரே அமளி. 1927இல் சியாங்கே ஷேக் ஒரு முடிவுக்கு வந்தார். எப்பாடு பட்டேனும் எல்லா கம்யூனிஸ்டுகளையும் ஒழித்துக் கட்டுவது என்ற முடிவு. கடைசி கடைசியாக ஒரு கம்யூனிஸ்டு கூட உயிரோடு இருக்கக் கூடாது என்பது அவரது லட்சியம். லேசில் இது முடியவில்லை. வருடங்கள் ஓடின.

1934-35இல் அவர்களை ஒரு வழியாகப் பிடித்து தென்கிழக்கிலிருந்து வடமேற்கிற்கு 6000 மைல்கள் நடக்க வைத்தார்.

லாங் மார்ச்! நீண்ட நடைப் பயணம். இது தாங்காமல் உயிரிழந்தனர் கம்யூனிஸ்டுகள். 1936இல் கடைசி முயற்சியாக அவர்களை ஒரேயடியாக ஒழித்துக் கட்ட நினைத்த போது பெரிய கலகம் மூண்டது.

அவரை அவரது படைவீரர்களே காட்டிக் கொடுத்து விட்டனர்.

மாஸேதுங்கிடம் மாட்டிக் கொண்டார் சியாங்கே ஷேக்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனக்கு தூக்கு தண்டனை நிச்சயம் என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.

அப்போது சீனாவின் பரம்பரை எதிரியான ஜப்பான் சீனா மீது போர் தொடுத்தது.

தனக்கு மரணதண்டனை தான் என்று நினைத்த ஷேக்கிற்கு ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்தது.

மாஸேதுங் அவரிடம் ஜப்பானிற்கு எதிரான போரில் சீனப் படைகளுக்குத் தலைமை தாங்கச் சொன்னார்.

வியப்பில் மூழ்கிய ஷேக் அந்தப் பொறுப்பை ஏற்றார். நீண்ட கொடிய போர் நடந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் ஜப்பானை வெல்ல முடிந்தது.

ஆனால் போர் முடிவில் ஷேக்கின் சேனை பெரும்பாலும் அழிந்து விட்டது – நீண்ட போரால்.

கம்யூனிஸ்டுகள் இந்தப் போரை நேருக்கு நேர் சந்திக்காமல் கொரில்லா முறையில் அவ்வப்பொழுது தாக்கி விட்டு மறைந்தனர்.

ஜப்பான் போர் முடிந்தவுடன் மீண்டும் இப்போது உள்நாட்டுப் போர் துவங்கியது.

படை வலிமையை இழந்த சியாங்கே ஷேக்கை மாஸேதுங் குரங்கு பூனை கையால் செஸ்ட் நட் சாப்பிட்டதைப் போல வலிமை இழந்த ஷேக்கை அகற்றி விட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

மாஸேதுங்கைத் தவிர வேறு யாராவதாக இருந்திருந்தால் ஷேக்கைப் பிடித்த மறுநாளே அவரைத் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் மாஸேதுங் குரங்கு-பூனை நீதிக் கதையை அறிந்த கம்யூனிஸ்ட் போலும்.

எதிரியை வலிமை இழக்கச் செய்தார்; தனது அதிகாரம் நிலை பெறுமாறு அவரைப் பயன்படுத்தியும் கொண்டார்.

ஆகவே வெற்றி பெற 26வது விதி:

எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் – அடுத்தவரை பலி கொடுத்தாவது!.

***

புத்தக அறிமுகம் – 77 

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 3) 

நூலில் உள்ள அத்தியாயங்கள் 

பொருளடக்கம்

1.   மஹாத்மா காந்தியும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பும்  

2.   அனைத்து உயரினங்களுக்கும் தாவர வகைகளும் வாழட்டும்!

3.   சுற்றுப்புறம் மாசுபடும் வகைகள்

4.   தோரோவும் இயற்கைப் பாதுகாப்பும்  

5.   டாக்ஸிக் (நச்சூட்டும்) மாசுகள்   

6.   மரம் நடுவோம்; நம்பிக்கை விதைப்போம்!  

7.   சுற்றுப்புறம் காக்க சிறிய செயலையேனும் செய்வோம்!

8.   மறு சுழற்சிப் பொருள்கள்  

9.   பூமி வெப்பமாவதைத் தடுப்போம்

10.  சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சி பெறுவோம். 

11.  பசுமைக் கட்டிடம்    

12.  மழைக் காடுகள் இனி நம்மைக் காப்பாற்றுமா?   

13.  அரிய செல்வமான அமேஸான் மழைக்காடுகள்!  

14.  கார்பன் சேமிப்பகம்   

15.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் – 1   

16.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் – 2   

17.  மீன் வளம் காப்போம்!

18.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் ஏற்படுத்தும் கேடுகள்-1

19.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் ஏற்படுத்தும் கேடுகள் 2

20.  சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க எளிய வழிகள்!   

21.  நீர் ஆதாரம் காப்போம்

22.  மரங்கள் அளிக்கும் நன்மைகள்  

23.  காற்று மாசுபடக் காரணங்கள்   

24.  மரங்களின் பெருமை 

25.  மாசுக்கான காரணங்கள்    

26.  பூங்காக்களின் சேவை.

27.  ஓஸோனின் துளை   

28.  பேரழிவு அலைகளிலிருந்து காத்த மரங்கள் 

29.  நமது கடமை – நம்மால் என்ன செய்ய முடியும் – 1    

30.  நமது கடமை – நம்மால் என்ன செய்ய முடியும் – 2    

31.  சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாட்டில் நிறுவனங்களின் பங்கு  

32.  வீடுகளில் சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாடு 

33.  காடு வளர்ப்போம் கடனை அடைப்போம்    

34.  ஆபத்தில்லா ரசாயனம் க்ரீன் கெமிஸ்ட்ரி   

35.  சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின்       முயற்சிகள்    

37.  சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்படுத்த பிரசார வழிகள்

38.  சின்னச் சின்ன செயல்கள். 

39.  காட்டுச் செல்வம்

40.  வீடுகளில் மாசு அகற்றுவோம்    

* 

இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:- 

This book contains the third part of the discussion on the topic of environmental awareness, broadcasted on All India Radio. The world is slowly being exposed to the growing dangers of global warming, and this book attempts to create awareness amongst its readers in this regard. The hundreds of essays that spread across the three books on this topic of environmental awareness and protection are not only interesting reads but also wonderful educational tools.

 புவி வெப்பமயமாதலின் தாக்கம் உலகளாவிய வகையில் வெளிப்பட்டு வருகிறது. அதற்கான விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டிய இந்நேரத்தில் வெளிவந்திருக்கிறது இந்த முக்கியமான நூல்! சென்னை வானொலி நிலைய நேயர்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூன்றாம் பாகம் இது! முந்தைய பாகங்களையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பு ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று!

 இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 3 நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

HINDU PURANIC SCENES IN SANGAM TAMIL LITERATURE -3 (Post No.11,324)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,324

Date uploaded in London – 4 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Let us continue with more Purana episodes in 2000 year old Sangam Tamil literature: –

Hindus are nature lovers. They believe in optimum use of everything in Nature. As soon as they get up from the bed in the early morning, they recite a sloka saying ‘Oh Ye Earth , please forgive me for putting my feet on you’. When they start farming they call the king to start it and he comes with a golden plough and starts farming, where he also says mantras praising the earth. This is an annual ceremony. On one of those occasions, several thousand years ago, Emperor Janaka of Videha Country, found Sita Devi in the field and brought her to Mithila, capital of Videha.

Whenever Hindus construct a house or a bridge or a temple, they first do Bhumi Puja (Bhoomi poojaa), saluting the earth. All the Tamils do it even today. Even Christians and Muslims do it following Hindus.

So, no wonder that a Tamil poet of Sangam period described Five Trees as Five Gods.

Two thousand years ago poet Perum Katunko saw five trees on the banks of River Vaigai in Madurai. At once he remembered five personalities from the Puranas and Mahabharata itihasa (itihaasa= history).

The reason for such a description is that they had different sized trunks and variety of colourful flowers.

What he said was

Maraa maram/tree  looked like Balarama (raamaa);

Serunthi –  looked like the Sun God;

Kanchi (kaanchi) – tree  looked like Fish bannered Kama (kaama, God of Love, Manmatha);

Gnaazal – tree  looked like Manmathan’s brother Sama (saama);

Ilavu – tree  looked like Bull bannered Lord Shiva.

xxx

Lord Shiva and his son Skanda( Murugan in Tamil) are always portrayed Red in colour as we see them in the Vedas Rudra=Red= Reddish face with anger.

The beauty is ancient Tamils were so well versed in Hindu Puranas that they always mentioned the colours or the flags or the mounts/vahanas of Gods throughout their poems. Nakkirar in his Purananuru verse 56 described four gods with Vaahanaas and flags. This shows that there was huge bulk of devotional literature at that time. Though we lost all those ancient books, modern Tamil poets in the last few centuries composed several thousands of verses about 18 Puranas .

Before going into details of those modern Tamil Puranas, I will give what Nakkirar (nakkeerar) said in Purananuru verse 56, which is the oldest part of Sangam Tamil corpus.

First, he described four Hindu gods in detail and compared them to the Pandya king Nanmaran (nan maaran).

Siva has Bull flag (Rishaba); he has flame red hair; he has a blue throat; he has a weapon called Kanichchi.

All these are in Siva purana and each has a story. Flags and Vaahanaas (mounts) of gods are interchangeable. Hindus were the one who gave the world Flags, Symbols, Emblems, Ambassadors, Spies etc.

Siva drank poison to save the humanity (both devas and asuras- angels and demons); his wife Uma/Parvati got alerted and stopped it in his throat; so, he became blue throated. Tamil poetess Avvaaiyar also said it in another verse in the same book.

Tiru Valluvar in his Tirukkural also mentioned how Siva saved the world (Kural 580) by drinking poison. It was in Sangam book Natrinai verse 355. Also in Manikkavasagar’s Tiruvasagam. (maanikka vaasagar, tiru vaasagam)

xxx

Then Nakkirar described Baladeva or Balarama. He looked white like the conch shell in the ocean; he has plough.

Baladeva, krishna’s brother was a practical man; he was not interested in Pandava -Kaurava politics; he was so honest that he opposed all crooked plans of Lord Krishna. But Krishna believed in the concept of ‘All is Well that Ends Well’, ‘Ends are more important than Means’; Baladeva alias Balarama took plough on his shoulder and spread agriculture throughout India, while the Pandavas and Kauravas fought in the battlefield at Kurukshetra (modern Haryana). We have hundreds of references to agriculture in the Rig Veda, the oldest book in the world (6000 BCE according to Herman Jacobi and Bala Gangadhara Tilak).

Nakkirar added one more detail about Balarama; he had Palmyra flag. This is in the oldest Tamil book Tolkappiam as well. Palmyra flag is not found anywhere in the world except India in such a remote period.

Xxx

Thirdly, Nakkirar portrayed Vishnu as Eagle bannered and bluish black in colour. Vishnu’s association with Garuda/eagle is in all the Puranas. Now even America (USA) has this emblem.

Hindus were so colour conscious that they called even their favourite God Mr Black (Krishna) and the most beautiful woman in the Mahabharata Miss Black (Krishnaa = Draupadi) and the most prolific writer as Mr Black Islander (Krishna Dvaipaayana Vyaasa).

They even allocated differently coloured seats in the theatre for different castes according to Bharata’s Natya Shastra (naatya, saastra).

Even today they sing in Bhajans “Oh Krishna, you Yellow clad, Oh Balarama, you Blue clad” (Piitaambhara/yellow clothed; Neelaambhara/ blue clothed).

They allocated colours for Yugas, Directions, Siva’s five faces etc, which Mayans of South America and Buddhists copied.

Xxx

Fourthly Nakkirar sketched Lord Muruga (Skanda, Kartikeya in Sanskrit); he is peacock bannered and peacock mounted ; some commentators described elephant mounted.

Then the poet goes on attributing the virtues of these gods to the Pandya king.

Nakkirar did not stop there. His poem on Lord Muruga/Skanda is called Tiru Murukatrup patai, part of Sangam literature. This book has hundreds of references from the Puranas.

To be continued…………………….

Tags- Purana, Sangam literature, Nakkirar, Siva, Balarama, colour, blue throat, Flags, Banners, Bull, Rishaba, peacock, Muruga

September 2022 London Swaminathan Article (INDEX No.118) – Post No.11,323

Picture- London swaminathan with famous actor Kamalahasan in London

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,323

Date uploaded in London – 4 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

September 2022 London Swaminathan Article (INDEX No.118)

MY VISIT TO ROYAL PALACE IN MADRID IN SPAIN (Post No.11,231) 1/9/2022

MADRID CITY TOUR – HELPFUL TIPS (Post No.11,236) 3/9/ 2022

MEDICINE WOMEN & MEDICINE MEN IN PRAKRIT GSS (Post No.11,240) 5/9

August  2022 London Swaminathan Article (INDEX No.117)  6/9

Glory of Womanhood: Bharati in English (Post No.11256) 10/9

Interesting Story of Prakrit Poet Haribhadra Suri (Post No.11,260) 12/9

‘SANSKRIT IS MALE, PRAKRIT IS FEMALE; PRAKRIT IS SWEETER THAN SANSKRIT’ (Post No.11,263) 13/9

MORE ABOUT SCIENTIFIC STUDY OF BODY FEATURES (SAMUDRIKA LAKSHANA)- Post No.11,27819/9

MORE ABOUT TAMIL’S STRANGE LIZARD ASTROLOGY/ OMENS (Post No.11,295) 25/9

Sadhu Vaswani Quotations – OCTOBER 2022 CALENDAR (Post No.11,308) 29/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS: FESTIVALS AND BELEIFS- Part 1 (Post No.11,246)7/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS…… PART 2 (Post No.11,248) 8/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS……. PART 3 (Post No.11,250) 9/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS- PART 4 (Post No.11,253) 10/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS- 5 (Post No.11,257) 11/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS-6 (Post No.1,259) 12/9

‘Kari’ for Elephant is Not a Tamil Word?-1 (Post No.11,282) 20/9

KARI for Elephant is Not a Tamil Word? Part 2 (Post No.11,285) 21/9

KARI for Elephant is Not a Tamil Word-3 (Post No.11,287) 22/9

KARI for Elephant is Not a Tamil Word-4 (Post No.11,289) 23/9

KARI for Elephant is Not a Tamil Word- part 5 (Post No.11,292) 24/9

KARI for Elephant is Not a Tamil Word? -Part 6 (Post No.11,294) 25/9

KARI for Elephant is Not a Tamil Word? -Part 7 (Post No.11,297) 26/9

KARI for Elephant is Not a Tamil Word? -Part 8 (Last Part) Post No.11,300 27/9

LONDON HARE KRISHNA RATHA YATRA 4-9-2022 (Post No.11,273) 17/9

Q & A – ETYMOLOGY OF PAAL பால் FOR MILK IN TAMIL, 14/9

Xxx

picture- london swaminathan with famous writer Jayamohan in London

TAMIL ARTICLES IN SEPTEMBER 2022

நான் கண்ட ஸ்பானிய அரண்மனை (Post No.11,233) 2/9

யா யா யா யா யா யா யா யா (32 தடவை ) – கவிதை (Post.11,234) 2/9

500 ஆண்டு வரலாறு கூறும் அற்புத ருத்ரதாமன் கல்வெட்டு! (Post No.11,238) 4/9

பிராகிருத நூலில் மருத்துவச் செய்திகள் -1 (Post No.11,242) 6/9

பிராகிருத நூலில் மருத்துவச் செய்திகள் – PART 2 (Post No.11,245) 7/9

தாததோ துத்த துத்தாதீ தாததோ தூததீத தோ-கிருஷ்ணன் கவிதை (Post No.11,251) 9/9

மேலும் சில விந்தைக் கவிதைகள் (Post No.11254) 10/9

யானை விரட்டிய கர்வம் பிடித்த கவிஞர் மனம் மாறிய கதை (Post 11,262)13/9

பிராக்ருத மொழியின் ஐம்பெரும் காப்பியங்கள் (Post No.11,265) 14/9

திருவிளையாடல் புராணத்தில் 32 சாமுத்ரிகா லக்ஷணம் (Post No.11,281) 20/9

சிவன் ஏன் பிச்சை எடுக்கிறார் ? (Post.11,291) 24/9

யாளி என்னும் அதிசய மிருகம்! (Post No.11,298) 26/9

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள்-1 (Post No.11,301) 27/9

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள் -2 (Post No.11,304) 28/9

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள்- Part 3 (Post No.11,307) 29/9

31 திருக்குறளில் இந்துமதம்: அக்டோபர் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post.11,311)30/9/2022

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்-1 (Post No.11,268) 15/9

வால்மீகி  ராமாயணத்தில் பெண்கள் – 2 (Post.11,270) 16/9

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 3 (Post No.11,272) 17/9

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -4 (Post No.11,275) 18/9

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -5 (Post No.11,277) 19/9

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்- 6 (Post No.11,280) 20/9

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -7 (இறுதிப் பகுதி)- Post No.11284 21/7

—subham—-

Tags- article index 118, London swaminathan, September 2022,