QUIZ மருந்துப் பத்து QUIZ (Post No.12,171)

picture of கரிசலாங்கண்ணி 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,171

Date uploaded in London – –  22 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1. திரி கடுகம் என்று தமிழ் நூலுக்கு மருந்தின் பெயர் இட்டது ஏன்

2. சிறு பஞ்ச மூலம் என்ற நூலின் பெயரில் உள்ள 5 வேர்கள் என்ன ?

3. ஏலாதி என்பன என்ன?

4.அஷ்ட சூர்ணத்தில் உள்ள எட்டு மருந்துச் சரக்குகளை சொல்ல முடியுமா?

5. திரிபலா சூர்ணம் என்பது என்ன ?

6.ரோஜா இதழ்களை வைத்து தயாரிக்கும் சாப்பிடக்கூடிய பண்டம் எது?

7.நெல்லிக்காயை வைத்து தயாரிக்கப்படும் லேகியத்தின்  பெயர் என்ன?

8.கரிசலாங்கண்ணி மூலிகை என்ன நோய்க்குச் சிறந்த மருந்து ?

9.பாம்பின் பெயருள்ள இருதய நோய் சிகிச்சை மூலிகையின் பெயர்  என்ன ?

10.மருத்துவத்தின் தந்தை ஹிப்பாக்ரடீஸ் என்ற கிரேக்கர் என்பர் மேலை நாட்டினர். ஆனால் இந்துக்கள் சொல்லும் மருத்துவத் தந்தை யார் ?

Xxxxxx

picture: .ஸர்ப்பகந்தி (Rauvolfia serpentina, the Indian snakeroot)

Answers

1.திரி கடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகும்;அவை வியாதிகளைப் போக்குவது போல தீமைகளை அகற்ற , ஒவ்வொரு பாடலிலும் 3 வழி களைக் குருகிறது இந்த நீதி நூல்.. திரிகடுகம் நூலாசிரியர் நல்லதனார்

2. சிறு பஞ்ச மூலம் என்ற நூலில்  உள்ள 5 வேர்கள் :கண்டங்கத்திரி, சிறுவழு துணை , சிறு மல்லி, பெரு மல்லி,நெருஞ்சில் செடிகளின் வேர்கள் ஆகும்.இவை எப்படி உடலுக்கு நன்மை செய்கின்றனவோ அது போல  மனிதனுக்கு நன்மை செய்யும் நீதிகள் இந்த நூலில் உள்ளன . ஆசிரியர் காரியாசான்.

3. நீதிகளைக் கூறும் தமிழ் நூலுக்கு ஏலாதி  என்று நூலாசிரியர் கணி மேதாவியார் பெயரிட்டார். ஈழம், சிறு நாவற் பூ, மிளகு, திப்பிலி, சுக்கு போன்றவை காலத்தை மருந்துபி போட்டிகள் எப்படி உடலுக்கு நன் மை பயக்குமோ அப்படி ஒவ்வொரு பாடலிலும் 6 நீதிகளை வழங்குகிறார்.

4.அஷ்ட சூரணம்: சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம்.

5.நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம்.

6. ரோஜா குல்கந்து

7. சியவன பிராஷ்

8.கல்லீரல் நோய்கள் , குறிப்பாக மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும்.

9.ஸர்ப்பகந்தி (Rauvolfia serpentina, the Indian snakeroot) ரத்த அழுத்தம், பாம்புக்கடி விஷம் நீங்க உதவும்

10. மருத்துவத்தின் தந்தை தன்வந்திரி

 —-  subham  ——

 Tags-  மருந்து, பத்து, Quiz

Leave a comment

Leave a comment