
Post No. 12,255
Date uploaded in London – – 10 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்துக் கடவுளரில் அதிகம் அடி வாங்கியவர் சிவன்தான் என்று மதுரைத் தமிழ் அறிஞர் .சொ சொ மீ சுந்தரம் இன்று ஆதாரங்களுடன் குறிப்பிட்டார் துர்க்கை அம்மன் குறித்து உரை நிகழ்த்திகையில் இதையும் குறிப்பிட்டார். எளிதில் வசப்படும் சிவன், , கருணை காரணமாக எல்லோருக்கும் உடனே வரம் தருகிறார்.
பாசுபதம் பெறச் சென்றபோது அர்ஜுனன் வில்லால் அடித்தான். கண்ணப்பன் செருப்போடு அவர் மீது காலை வைத்தான். மாணிக்கவாசகர் முதுகில் பாண்டியன் அடித்த போது அந்த அடியையும் வாங்கினார் என்றார்
(இத்தோடு சாக்கிய நாயனார் கல்லால் அடித்ததையும், .தருமி பொற்கிழி வழக்கில் சிவனை நக்கீரர் சொல்லால் அடித்ததையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம் )
சொ சொ மீ சுந்தரம் , 51 ஆண்டுகளுக்கு சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசித்தவர் .மூன்று முறை கயிலை சென்று தரிசனம் செய்தவர்..
போகாத கோவில் இல்லை; பேசாத நாள் இல்லை ..
பட்டி மன்றம் புகழ், மதுரைத் தமிழ் அறிஞர் .சொ சொ மீ சுந்தரம் லண்டனுக்கு வருகை புரிந்துள்ளார் .
இன்று 10-7-2023 அன்று லண்டன் ஈலிங் பகுதியில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோவில், லண் டன் கனக துர்க்கை அம்மன் கோவில் வரலாறுகளை அழகுபடச் சொன்னார்
(மதுரை தினமணி அலுவலத்தில் எனது தந்தை ஆண்டுதோறும் நடத்தீய பட்டி மன்றங்களில் சுமார் 40 , 50 ஆண்டுகளுக்கு முன்னர் சொ சொ மீ சுந்தரம் பேசியது இன்றும் நினைவில் நிற்கிறது )
தான் ஆஸ்திரேலியா சென்றாலும் அங்கும் யாழ்ப்பாணத் தமிழர் கோவில்களையே கண்டதாகவும் அவர்களுடைய இந்து மத சேவையை வணங்குவதாகவும் சொ சொ மீ சுந்தரம் குறிப்பிட்டார்.
லண்டன் கனக துர்க்கை வழிபாடு 1991ல் துவங்கி, முதல் கும்பாபிஷேகம் 1999லும் , இரண்டாவது கும்பாபிஷேகம் 2011 ஆம் ஆண்டிலும், இப்போது மூன்றாவது கும்பாபிஷேகம் சென்ற ஜூன் மாதத்திலும் நடந்ததை எடுத்துரைத்ததார் .
முன்னதாக பட்டர் பேசுகையில் இன்று ஆலயத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை என்பதை அறிவித்தார் . அதைக் குறிப்பிட்டும் பேசிய சொ சொ மீ சுந்தரம் , இத்தகைய குருபூஜைகள் தமிழ்நாட்டுக் கோவில்களில் அரிதாகிவிட்டது என்றார்.. சுந்தரர்– ஏயர்கோன் கலிக்காம நாயனார் மோதல் பற்றியும் பின்னர் சிவ பெருமானின் கருணைக்கு அவர் ஆளானதையும் சுவைபட விளக்கினார்
18-7-2023 வரை காலை 11 மணிக்கும், மாலை 7 மணிக்கும் 60 நிமிட சொற்பொழிவுகளை சொ சொ மீ சுந்தரம் வழங்குகிறார்.
அனைவரும் வருக.
—subham—-
Tags– அடி வாங்கியவர், சிவன்,சொ சொ மீ சுந்தரம்