அக்டோபர் 2023 காலண்டர்- பர்த்ருஹரி பொன்மொழிகள் (Post No.12,528)

Translated  BY LONDON SWAMINATHAN

Post No. 12,528

Date uploaded in London – –  26 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பண்டிகை நாட்கள் – அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி; 14- மஹாளய அமாவாசை; 15- நவராத்ரி ஆரம்பம்; 23- சரஸ்வதி பூஜை; 24- விஜயதசமி; 28- சந்திர கிரஹணம்

அமாவாசை –  14; பெளர்ணமி – 28/ சந்திர கிரஹணம்

ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 10, 24

சுப முகூர்த்த நாட்கள்– 18, 20, 27

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து எடுக்கப்பட்ட 31 பொன்மொழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை

கல்வி என்பது திருடர்களால் காணமுடியாதது;

எப்போதும் பேரின்பம் நல்குவது;

கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும் 1-16

xxx

அக்டோபர் 2 திங்கட்  கிழமை

யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.

மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.

அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்1-17

xxx

அக்டோபர் 3 செவ்வாய்க்  கிழமை

எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை

அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாதுமத நீர்ச் செறிவால்

முகம் கருத்த யானைகளை    தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?

xxx

அக்டோபர் 4 புதன்  கிழமை  

பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.1-18

xxx

அக்டோபர் 5 வியாழக்  கிழமை

மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;

நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.

நீர் முழுக்கோசந்தனப் பூச்சோ,பூக்களோசிகை அலங்காரமோ

ஒருவனுக்கு அழகு அல்லபண்பட்ட பேச்சே அழகு தரும்.

xxx

அக்டோபர் 6 வெள்ளிக்  கிழமை

ஏனைய எல்லாம் வாடி வதங்கும்உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.

நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.1-19

xxxx

அக்டோபர் 7 சனிக்  கிழமை 

கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;

அவனுடைய ரஹஸிய செல்வம் அது;

வளமும்மகிழ்ச்சியும்புகழும் நல்குவது 1-20

xxx

 அக்டோபர் 8 ஞாயிற்றுக் கிழமை .

குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;

வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்1-20

xxx

அக்டோபர் 9 திங்கட்  கிழமை

கல்வியே உயர்ந்த கடவுள்.

மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லைஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு. 1-20

xxx

அக்டோபர் 10 செவ்வாய்க்  கிழமை……………………………………….

Pleease continue in

swamiindology.blogspot.com

Leave a comment

Leave a comment