
Ganesh in Japan
Post No. 12,538
Date uploaded in London – – 30 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 13
24.நல்லூர் கயிலாய நாத பிள்ளையார் கோவில்
பிள்ளையார், கணபதி, கணேசர், விநாயகர் , யானை முகன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பிள்ளையார் கயிலாயம் முதல் இலங்கையின் தென் கோடியில் உள்ள கண்டி நகர் வரை எங்கும் காட்சி தருகிறார். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் எல்லா நாடுகளிலும் பிள்ளையார் விக்கிரகங்கள் கிடைத்துள்ளன. இத்தாலி நாட்டுத் தலைநகர் ரோமாபுரியில் கணேஷ் என்பதை ஜானேஷ் (Janus) என்று வழிபட்டனர் ; ஜப்பானிலும் பிள்ளையார் கோவில்கள் உண்டு
சங்க இலக்கியத்தில் பதிகப் பகுதியில் மட்டும் பிள்ளையார் பற்றிய ஒரு குறிப்பு இருப்பதைப் பலரும் பிற்காலச் சேர்க்கை என்பர். ஆயினும் எனது ஆராய்ச்சியில் கபிலர் என்ற பிராமணப் புலவர் பெயரே பிள்ளையார் பெயர் என்பதைக் காட்டியுள்ளேன் . அந்தப் பார்ப்பனர்தான் சங்க இலக்கியத்தில் அதிகப் பாடல்கள இயற்றியவர். அவர் தனது புறநானுற்றுப் பாடலில் புல் , எருக்கம் , இலை , நீரைக் கொடுத்தாலும் இறைவன் மறுப்பதில்லை என்று பாடுகிறார்.
புறநானூறு பாடல் 106
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே.
இது பகவத் கீதையின் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் — என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு என்பதும் அவர் குறிப்பிடும் புல் இலை எருக்கம் என்பது விநாயகர் வழிபாட்டில் மட்டுமே பயன்படும் அருகம்புல் எருக்கம் இலை , பூ என்பதும் நான் ஆராய்ச்சியில் கண்ட விஷயங்கள் ஆகும்.
மேலும் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்த அப்பரும் சம்பந்தரும் தேவாரத்தில் பிள்ளையாரைப் பல இடங்களில்……………………..
Please continue in swamiindology.blogspot.com