சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார்- இலங்கைத் தீவின் ஆலயங்கள்—19 (Post No.12,558)

Urumpirai Temple Picture  from Wikipedia

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,558

Date uploaded in London – –  –  6 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxx 

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 19 

36.யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார் கோயில்

யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் கல்வளையிலிருக்கும் பிள்ளையார் கோயில், இன்னும் ஒரு புகழ்பெற்ற விநாயகர் ஆவார் . இவருடைய சிறப்பு என்னவென்றால் 200 ஆண்டுகளுக்கு முன்னரே அந்தாதிப் பாடல் பெற்றதாகும். யாழ்ப்பாணத்தை  ஹாலந்து  நாட்டு டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில் சின்னத் தம்பி புலவர் வாழ்ந்து வந்தார். அவர் இந்தப் பிள்ளையார் மீது அந்தாதி இயற்றியுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் மத்தியில் கல்வளை நடுவக்குறிச்சி  என்று இரண்டு கிராமங்கள் உள்ளன. கல்வளையில் பிள்ளையார் வடிவக் கல் கிடைத்தவுடன் அதை கணபதியாக வழிபடத் துவங்கினார்கள்.

நல்லூரில் கல்வியாலும், வாரி வழங்கும் வள்ளல்தன்மையாலும் கீர்த்திபெற்று விளங்கியவர் வில்லவராய முதலியார் ஆவார் . அவருடைய புதல்வர்தான் சின்னத் தம்பிப் புலவர் யாழ்ப்பாணத் தமிழர்களின் சம்பிரதாயம், சட்ட திட்டங்களைக் கூறும் நூல் “தேச வழமை” எனப்படும்; அந்த நூலை காலத்துக்கு ஏற்றபடி எழுதித்தர டச்சு அரசாங்கம் 12 பேரை நியமித்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் வில்லவராய முதலியார் .  1707-ம் ஆண்டில் நூல் முழுமை பெற்றது அவரது வீட்டில் இரவு நேரத்தில் கூழங்கைத் தம்பிரான் சமயச் சொற் பொழிவு  ஆற்றிவந்தார். அதைகேட்டுக் கேட்டு  கவிகள் புனையும் ஆற்றலைப் பெற்றார் சின்னத்தம்பி;  அவர் இந்தியாவில் உள்ள சைவத்திருத் தலங்களையும் தரிசித்தார். இறைவன் மீதும், வள்ளல்கள் மீதும் கவி பாடினார் அவர் இயற்றிய நூல்கள் –மறைசையந்தாதி , கல்வளையந்தாதி , பறாளை விநாயகர் பள்ளு (சுழிபுரம், பறாளை) , நாலு மந்திரி கும்மி, கரவை வேலன் கோவை (கரவெட்டி).

கல்வளை அந்தாதியை 1934-ம் ஆண்டில் சைவ பரிபாலன சபை வெளியிட்டது ; இதில் அவர் பிள்ளையார் பெருமைகளைக் கூறி, என்ன  பலன் கிடைக்கும் என்றும் பாடியுள்ளார்.

தற்காலத்தில் கற்பக விநாயகர் மட்டுமின்றி பைரவர் கோவிலும்  உள்ளது .

இந்த வட்டாரத்தில் இப்போது பல கோவில்கள் பிரபலமாகிவிட்டன . அவை —

சீரணி நாகபூசணி அம்மன் கோவில்

சண்டிலிப்பாய் விசுவநாதீசுவரர் கோவில்

சண்டிலிப்பாய் ஐயனார் கோவில்

இரட்டைப்புலம் வைரவர் கோவில்

முருகமூர்த்தி கோவில்

ராஜராஜேசுவரி கோவில்,

பத்திரகாளி அம்மன் கோவில்

XXXXX

37. ஓமந்தை பிள்ளையார் கோவில்,  வவுனியா, Omanthai Pillaiyar Kovil

இந்தப் பிள்ளையார் கோவில் ஓமந்தை, கொந்தக்காரன்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

வவுனியாவுக்கு பத்து மைல் தொலைவில் , யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் வழியில், ஓமந்தை கிராமம் இருக்கிறது. கோ மந்தை – மாடுகள் மேயும் இடம் — என்பது ஓமந்தையாக மருவி இருக்கலாம் .

பிள்ளையார் கோவில் மூலமாக இப்போது இது பிரசித்தமானாலும் ஒரு காலத்தில் வன்னி தளபதிகள் இங்கே வசித்தனர். ஊருக்கு அருகில் பாழடைந்த சிவன் கோவில் இருப்பது இதன் பழமையைக் காட்டுகிறது. இந்தத் தகவல்களை புராதன யாழ்ப்பாணம் என்ற ஆங்கில நூலில்  ராஜநாயகம் கூறுகிறார். அந்தக் காலத்தில் ஜம்புகோவலத்தில்  இறங்கிய அரச மரம் ஊர்வலமாக அனுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது , ஓமந்தையில் தங்கிச் சென்றதாம்.

இங்குள்ள பிள்ளையார் கோவில் , சாலை ஓரமாக ஒரு கொட்டகையில் இருந்தது . பிற்காலத்தில் கல் கட்டிடமாக மாறியது. சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர், ரயில் பாதை அமைக்க சர்வே எடுக்க வந்தவர்கள் , பொங்கல் வைத்து 100 கொழுக்கட்டை செய்து வழிபட்டனர் . ரயில் பாதையும் எளிதில் அமைந்தது . எல்லாம் பிள்ளையார் அருள் என்று பக்தர்கள் மகிழ்ந்தனர்.

XXX

38.அரியாலை பிள்ளையார் கோவில்

அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளையார்  கோவில்களில் பழமையானதும்……………………………. PLEASE CONTINUE READING IN

swamiindology.blogspot.com

Leave a comment

Leave a comment