
Post No. 12,624
Date uploaded in London – 23 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
அருங்கலச் செப்பு – கவின் மிகு சொற்கள்!
ச.நாகராஜன்
ஜைன சமயச் சான்றோரால் இயற்றப்பட்டது.
சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)
பாடல்கள் 181.
S.ராஜம், சென்னை வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.
1. நற்காட்சி, நன் ஞானம், நல் ஒழுக்கம் -இம்மூன்றும் தொக்க
அறச்சொல் பொருள் (பாடல் 2)
2. மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்று உரைப்பர் – எப்பொருளும்
கண்டுணர்ந்தார். (பாடல் 3)
3. தலைமகனும், நூலும், முனியும் – இம்மூன்று நிலைமையவாகும்
பொருள். (பாடல் 4)
4. பசி, வேர்ப்பு, நீர் வேட்கை, பற்று, ஆர்வம், செற்றம், கசிவினோடு
இல்லான் இறை (பாடல் 7)
5. கடை இல் அறிவு, இன்பம், வீரியம், காட்சி உடையான் – உலகுக்கு
இறை (பாடல் 7)
6. மெய்ப்பொருள் காட்டி, உயிர்கட்கு அரண் ஆகி, துக்கம் கெடுப்பது
நூல் (பாடல் 10)
7. இந்தியத்தை வென்றான், தொடர்ப்பாட்டோடு ஆரம்பம் முந்து
துறந்தான் முனி (பாடல் 11)
8. பிறப்பு, குலம், வலி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம், உணர்வோடு
எட்டு (பாடல் 34)
9. குறளை, மறைவிரி, இல்லடை வௌவல், புறவுரை, பொய் ஓலை,
கேடு (பாடல் 70)
10. மயக்கம் கொலை அஞ்சி, கள்ளும் மதுவும் துயக்கில் துய்க்கப்படும்
(பாடல் 100)
11. தீயவை எல்லாம் இனிச் செய்யேன் (பாடல் 114)
12. பிறர் கண் வருத்தமும் சாக்காடும் கேடும் மறந்தும் நினையாமை
நன்று (பாடல் 117)
13. பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு – நான்கும் அறுத்தல் அறத்தின் பயன்
(பாடல் 155)
14. அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார் ஒருங்கு அடையும்
மாண்பு திரு (பாடல் 175)
15. காமம், வெகுளி, மயக்கம் – இவை மூன்றன் நாமம் கெடக் கெடும்
நோய் (பாடல் 178)
16. தீரா வினை தீர்க்கும், சித்தி பதம் உண்டாக்கும்; பாராய் –
அருங்கலச் செப்பு (பாடல் 180)
17. நச்சரவு, அணி, நிழல் பச்சை மாமலை தனை நிச்சலும்
நினைப்பவர்க்கு அச்சம் இல்லையே! (பாடல் 181)
***