Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 9 (Post No.12,673)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,673

Date uploaded in London – –  –  4 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

SLOKA 25

क्षुत्क्षामो‌உपि जराकृशो‌உपि शिथिलप्राणो‌உपि कष्टां दशाम्
आपन्नो‌உपि विपन्नदीधितिरिति प्राणेषु नश्यत्स्वपि ।
मत्तेभेन्द्रविभिन्नकुम्भपिशितग्रासैकबद्धस्पृहः
किं जीर्णं तृणम् अत्ति मानमहताम् अग्रेसरः केसरी ॥ 1.25 ॥

சிங்கம் புல்லைத் தின்னுமா?

க்ஷுத்க்ஷாமோஅபி ஜராக்ருசோபி சிதிலப்ராணோபி கஷ்டாம் தசா

மாபன்னோபி விபன்னதீதிரபிப்ராணேஷு நஸ்யஸ்வபி

மத்தேபேந்த்ர விபின்னகும்பபிசிதக்ராஸைகபத்தஸ்ப்ருஹஹ

கிம் ஜீர்ணம் த்ருணமத்தி மானமஹதாமக்ரேஸரஹ கேஸரீ 1-25

சிங்கத்துக்கு பசியால் வாட்டம்ஆனால் கிழடுஉடலில் பலம் குன்றிவிட்டதுஉடல் ஊனம்பலஹீனம்மனத் தளர்ச்சிகாம்பீர்யம் போய் மரணப் படுக்கையில் இருந்தாலும் மதம்பிடித்த யானையின் மீது பாய்ந்து அதை உண்ணவே எண்ணும். அப்பேற்பட்டவர்களே மஹத்தான சாதனையாளர். சிங்கம் என்றாவது புல்லைத் தின்னுமா?  

சிங்கம் பசித்தாலும் தீரவிளைத் தோய்ந்தாலும்

மங்கியுடல் வாடி மடிந்தாலும் — பொங்குமத  யானையையே

கொல்லவெண்ணும்  அன்றி யுலர் வைக்கோலைத்

தீனியென தின்னுமோ சென்று – 25

25. Even when weak with hunger, thin due to old age, largely unsteady and in a pitiable condition, with his lustre and vitality lost, will the lion, foremost among the proud and great, eat dry grass? His desire is fixed on devouring mouthfuls from the crown of a rutting elephant split open (by himself.)–25

Xxx

SLOKA 26

स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसम् अप्यस्थि गोः
श्वा लब्ध्वा परितोषम् एति न तु तत्तस्य क्षुधाशान्तये ।
सिंहो जम्बुकम् अङ्कम् आगतम् अपि त्यक्त्वा निहन्ति द्विपं
सर्वः कृच्छ्रगतो‌உपि वाञ्छन्ति जनः सत्त्वानुरूपं फलम् ॥ 26

 ஸ்வல்பஸ்னாயுவஸாவ சேஷமலினம் நிர்மாம்ஸமப்யஸ்திகோஹோ

ஸ்வா லப்த்வா பரிதோஷமேதி ந ச தத்தஸ்ய  க்ஷுதாசாந்தயே

ஸிம்ஹோ ஜம்புகமங்கமாகதமபி  த்யக்த்வா நிஹந்தி த்விபம்

ஸர்வஹ க்ருச்ரகதோபி வாஞ்சந்தி ஜனஹ ஸத்வானுரூபம் பலம் 1-26

சதைப்பற்று இல்லாத எலும்பைக் கண்டாலும் நாய் சந்தோஷப்படும்ஆயினும் அது அதன் பசியைத் தீர்க்காது. சிங்கமோ தன் பிடியில் ஒரு முயலே சிக்கினாலும் அதை விட்டுவிட்டு பலம் பொருந்திய யானையயே கொல்ல விழையும். பெரியவர்கள் தங்கள் பெருமைக்கேற்ற செயலைச் செய்தே குறிக்கோளை அடைவர்.

 சாரமிலா வெள்ளெலும்பைத் தான் கண்டு சந்தோஷம்

கூரு நாய் கொண்டதனால் பசிதீராது

சேர நரி வாழ்ந்தாலும் சிங்கம் அதைவிட்டுத்

தூரவன  மதனில்  தூங்கும் மதயானைதனைக் 

கோர நகத்தால் கொல்லும்  அது போல ,

பார வறுமைபல பாய்ந்தாலும் மாந்தர் தந்

தார தம்மியப் படி தக்க பலன் வேட்பதன்றி

ஆற வேறொன்றை எண்ணார் –26

A dog gets satisfaction with a small bone, with a little fat and muscle on it, even if it is fleshless and not enough to satiate its hunger. A lion rejects a jackal available at hand, and kills an elephant. Everyone desires a goal matching his strength, even if he has to go through difficulty.–26

கோப்பெருஞ்சோழன் செப்புவது 1-26

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்…………….

–புறம் 214, கோப்பெருஞ்சோழன்

யானை வேட்டைக்குப் போனவன் யானையை பெறலாம். ஆனால் குறும்பூழ் பறவையைப் பிடிக்கப் போனவன் வெறும் கையுடனும் வரக்கூடும்; ஆகையால் உயர்ந்த குறிக்கோளுடன் செல்க.

Xxxxx

SLOKA 27

लाङ्गूलचालनम् अधश्चरणावपातं
भूमौ निपत्य वदनोदरदर्शनं च ।
श्वा पिण्डदस्य कुरुते गजपुङ्गवस्तु
धीरं विलोकयति चाटुशतैश्च भुङ्क्ते ॥ 27॥

லாங்கூலசாலநமதஸ்சரணாவபாதம்

பூமௌ நிபத்ய வதனோதரதர்சனம் ச

ஸ்வாபிண்டதஸ்ய  குருதே கஜபுங்கவஸ்து

தீரம் விலோகயதி சாடுசதைஸ்ச புங்தே- 27

நாய் வாலை ஆட்டும்எவன் ரொட்டித் துண்டுபோட்டாலும் அவன் காலடியில் விழும். அது கீழே புரண்டு வயிற்றையும் வாயையும் காட்டி மேலும் உணவு பெற முயலும். ஆனால் பெரிய பலம் மிக்க யானையோ இனிமையான வார்த்தைகள் சொல்லி அழைத்தாலும்கூட உணவைப் பற்றி கவலைப்படுவதுமில்லைஅதை ஏற்பதுமில்லை.–27

கவள மிடுகின்றவனைக்  காணு நாய்  வாலைத்

துவள மிக வாட்டுந் துள்ளுந் தவள நிறப்

பல்லைவயிற்றைக்காட்டும் – பார்மேல் விழுமெழும்

எல்லையிலா ஏழ்மை இயற்றுமே – சொல்லரிய

யானை மதங்கொண்டதனால் யாரையு ம் பாராமலே

மான முடன் வீரமுடன் மாவோட்டி தானளிக்கும்

பெருங்கவலளந் தின்று பெருமையாய் வாழும்

இரும் புவியின் தன்மை இது  — 27

27. A dog wags his tail, falls at his feet and rolls on the ground displaying its maw, to its feeder. A majestic elephant looks calmly (at the feeder) and eats only after many persuasive words.–27

xxxx

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

வள்ளவனும் கண்ணனும் புகல்வது யாதெனின்

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

xxxxx   subham   xxx

tags—Bhartruhari, 4 languages, part 9

Leave a comment

Leave a comment