தவறான மொழிபெயர்ப்பால் போடப்பட்ட அணுகுண்டு! (Post No.12,799)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,799

Date uploaded in London –  –  5 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!

அத்தியாயம் 19

தவறான மொழிபெயர்ப்பால் போடப்பட்ட அணுகுண்டு!

ச.நாகராஜன்

பகுதி 22

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகர்களின் மீது போடப்பட்ட அணுகுண்டால்!

லக்ஷக்கணக்கான மக்கள் அழிந்து பட்டனர்; அதன் பின் விளைவுகளால் லக்ஷக்கணக்கான மக்கள் அவதியுற்றனர்.

உலகம் தாங்க முடியாத அணுகுண்டை அமெரிக்கா ஜப்பானிய நகர்களின் மீது வீசியது ஒரு தவறான மொழிபெயர்ப்பால் தான் என்றால் ஆச்சரியமாக இல்லை?

உண்மை அது தான்!

மொகுசட்சு (mokusatsuஇந்த ஒரே ஒரு வார்த்தை தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் அணுகுண்டு போடப்பட்டது.          1945இல் ஜப்பான் மிகவும் பலஹீனமாகி விட்டது. அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், சோவியத் யூனியன், சைனா ஆகிய ஐந்து பெரும் சக்திகளும் ஒன்றாக இணைந்து கொண்டன.                      இவை அனைத்தும் ஜப்பானிய பிரதம மந்திரியாக இருந்த கண்டாரோ சுசுகிக்கு (Kantaro Suzuki) மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தன.

ஜப்பான் நிபந்தனைகளுக்கு உட்படாவிடில் “ தகுந்த கடுமையான அழிவை” (prompt and utter destruction) அது சந்திக்க நேரிடும் என்று சொல்லப்பட்டது.

இதற்கான தகுந்த பதிலை அமெரிக்கா எதிர்பார்த்துக் காத்திருந்தது.

பத்திரிகையாளர்கள் ஜப்பானிய பிரதம மந்திரியை இது. குறித்துக் கேட்ட போது அவர், “இன்னும் ஒரு இறுதி முடிவுக்கு தான் வரவில்லை” என்றார். “இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை” என்றார்.                                                    மொகுசட்சு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். இந்த வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உண்டு. ‘இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை’ என்று ஒரு அர்த்தம்; “கமெண்டை நிறுத்தி வைத்திருக்கிறேன்” என்று இன்னொரு அர்த்தம்.                அதாவது இது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன் என்பது தான் உண்மையான அர்த்தம்.                                   இந்த வார்த்தை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களிடம் அனுப்பப்பட்டபோது அவர்கள், “இதை அவமதித்து ஒதுக்குகிறேன்” என்று ஜப்பானிய பிரதம மந்திரி சொல்வதாக மொழிபெயர்த்தனர்.

இந்த வார்த்தைகளை அப்படியே அமெரிக்க ஊடகங்கள் பிரசுரித்தன. அமெரிக்கா முழுவதும் பொங்கியது. பத்து நாட்கள் கழித்து ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது.

அணுகுண்டு போட்டு அழிவை உண்டாக்கி உலகப்போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவை முடிவெடுக்க வைத்தது மொகுசட்சு.

ஸ்டாலின், சர்ச்சில், ட்ரூமன், சியாங் கே ஷெய்க் ஆகியோர் ஜப்பான் சரணாகதி அடைந்து விடும் என்றே நம்பினார் ஆனால் அவரது பதிலால அவர்கள் வெகுண்டனர். அணுகுண்டு வீசப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

ஒரே ஒரு வார்த்தை தவறாக மொழிபெயர்க்கப்பட்டதே அணுகுண்டு போடப்பட்டு சுமார் 80,000 பேர்கள் ஒரு க்ஷணத்தில் அழிவதற்கான காரணமாக அமைந்தது!

***

Leave a comment

Leave a comment