
Post No. 12,876
Date uploaded in London – – – 2 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லங்கணம் பரமௌஷதம்!
ச. நாகராஜன்
லக்ஷ்மிவந்தோ ந ஜானந்தி ப்ராயேண பரவேதனாம் |
தனவந்தர்கள் மற்றவர்கள் படும் வேதனையைப் பொதுவாக புரிந்து கொள்வதில்லை.
லக்ஷ்யதே ந கதி: சம்யக் தனஸ்ய ச தனஸ்ய ச |
செல்வத்தின் போக்கையும் மேகத்தின் போக்கையும் ஒருவரால் பார்க்க முடிவதில்லை.
லங்கணம் பரமௌஷதம் |
உபவாசம் சிறந்த மருந்து.
லோபஸ்சேதகுணேன கிம் |
பேராசையை விட மோசமான கெட்டகுணம் வேறில்லை.
லொபாவிஷ்டோ நரோ ஹந்தி ஸ்வாமினம் வா சஹோதரம் |
பேராசையின் தூண்டுதலினால் ஒருவன் தனது எஜமானனையும் தனது சகோதரனையும் கூடக் கொல்வான்.
வசனே கா தரித்ரதா |
வார்த்தைகளில் எதற்கு தரித்திரம்?
வனே புஷ்பபலாகீர்ணே புரிஷமிவ ஷூக்ர: |
மலர்களும் பழங்களும் நிறைந்துள்ள வனத்தில் பன்றியானது மலத்தையே தேடுகிறது.
வரம் வேஷ்யா பத்னீ ந புனரவிநீதா குலவது: |
அடாவடியான மனைவியை விட ஒரு வேசியே சிறந்தவள்.
வர்த்தமானேன காலேன வர்த்தயந்தி விசக்ஷணா: |
புத்திசாலிகள் காலத்தையொட்டி தற்காலத்தில் இருப்பவர்களுடனேயே செல்கின்றனர்.
வித்யா ரூபம் குரூபாணாம் |
அழகற்ற குரூபிகளுக்கு கல்வியே சிறந்த கவர்ச்சி.
வித்வான்குலீனோ ந கரோதி கர்வம் |
வித்தையில் சிறந்த வித்வான்கள் கர்வம் கொள்ள மாட்டார்கள்.
விநாசகாலே விபரீதபுத்தி: |
அழியப்போகும் காலத்தில் விபரீத புத்தி தோன்றும்.
விநாஷ்ரயா ந ஷோபந்தே பண்டிதா வனிதா லதா: |
தக்க ஆதரவின்றி பண்டிதர்களும், பெண்களும், கொடிகளும் சோபிப்பதில்லை.
விரக்தஸ்ய த்ருணம் ஜகத் |
விரக்தி அடைந்தவனுக்கு உலகம் புல்லுக்குச் சமானம்.
விஸ்வாஸ்ய வஞ்சயந்தே தூர்தரஸ்சத்வாபிரீஸ்வரா: |
எஜமானனின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் ரௌடிகள் அவர்களுக்குத் துரோகம் இழைக்கிறார்கள்.
வீரபோக்யா வசுந்தரா |
இந்த உலகம் வீரர்களாலேயே அனுபவிக்கப்படுகிறது.
வ்ருத்திம் சோபத்ரவாம் த்யஜேத் |
தொந்தரவு தரும் தொழிலை ஒருவன் விலக்க வேண்டும்.
வ்யவஹாரேண மித்ராணி ஜாயந்தே ரிபவஸ்ததா |
ஒருவரது நடத்தையினாலேயே நண்பர்களும் எதிரிகளும் உருவாக்கப்படுகிறார்கள்.
வ்யாபாரே வஸதே லக்ஷ்மி: |
வியாபாரத்தின் விளைவே செல்வம்.
சரணமுபேதோ ந ஹாதவ்ய: |
சரணமடைந்தவர்களை நிராகரிக்கக் கூடாது.
சரீரமாத்ரம் கலு தர்மசாதனம் |
உடலே நல்ல தர்மம் செய்வதற்கான முதல் தேவையாகும்.
சீலம் பூஷயதே குலம் |
நல்லொழுக்கம் குலத்தை அலங்கரிக்கிறது.
சுக: ஸ்லோகான் வக்தும் பரவதி ந காக: க்வசிதபி |
கிளியானது ஒரு ஸ்லோகத்தைச் சொல்லும்; ஆனால் காகமோ அதை ஒருபோதும் செய்ய முடியாது.
சுபஸ்ய சீக்ரமசுபஸ்ய காலஹரணம் |
சுபகாரியங்களை உடனே செய்ய வேண்டும். அசுபமானவற்றைக் காலம் தாழ்த்தவேண்டும்.
ஸ்ரேயசி கேன த்ருப்யதே |
ஏற்கனவே அடைந்த புகழில் யார் தான் திருப்தி அடைகிறார்கள்!
***