‘பை’ – விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதை!(Post No.12,885)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,885

Date uploaded in London –  –  –   5  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பை – விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதை!

ச.நாகராஜன் 

விஸ்லாவா சிம்போர்ஸ்கா (Wisława Szymborska) என்ற பெண்மணி போலந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞர். (தோற்றம் 2-7-1923 மறைவு 1-2-2012)

தத்துவம், அறநெறி, ஒழுக்கம் பற்றிய இவரது கவிதைகள் பிரபலமானவை. இவர் 1996ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்காக நோபல் பரிசைப் பெற்றார்.

அவரது பை (PI) என்ற இந்தக் கவிதை உலக மக்களைக் கவர்ந்த ஒன்று:

The admirable number pi:


three point one four one.


All the following digits are also initial,


five nine two because it never ends.


It can’t be comprehended six five three five at a glance,


eight nine by calculation,


seven nine or imagination,


not even three two three eight by wit, that is, by comparison


four six to anything else


two six four three in the world.


The longest snake on earth calls it quits at about forty feet.


Likewise, snakes of myth and legend, though they may hold out a bit longer.


The pageant of digits comprising the number pi


doesn’t stop at the page’s edge.


It goes on across the table, through the air,


over a wall, a leaf, a bird’s nest, clouds, straight into the sky,


through all the bottomless, bloated heavens.


Oh how brief – a mouse tail, a pigtail – is the tail of a comet!


How feeble the star’s ray, bent by bumping up against space!


While here we have two three fifteen three hundred nineteen


my phone number your shirt size the year


nineteen hundred and seventy-three the sixth floor


the number of inhabitants sixty-five cents


hip measurement two fingers a charade, a code,


in which we find hail to thee, blithe spirit, bird thou never wert


alongside ladies and gentlemen, no cause for alarm,


as well as heaven and earth shall pass away,


but not the number pi, oh no, nothing doing,


it keeps right on with its rather remarkable five,


its uncommonly fine eight,


its far from final seven,


nudging, always nudging a sluggish eternity


to continue.

பை என்பது கணிதத்தில் சிக்கலான ஒரு நிலை எண். ஒரு வட்டத்தில் சுற்றளவிற்கும் அதன் குறுக்களவிற்கும் இடையே உள்ள தொடர்பை அது குறிக்கிறது

2πr என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உதவும் சூத்திரம். R என்பது ஆரம்.

 Π என்பது 3.142.

இந்தக் கவிதையில் அது எல்லையற்ற தன்மையையும் நமக்குத் தெரியாத ஒன்றையும் பற்றி உருவகமாகக் குறிப்பிட கவிஞரால் பயன்படுத்தப்படுகிறது.

மனித அறிவின் எல்லையை இந்தக் கவிதை மூலம் அளக்கிறார் கவிஞர். பிரபஞ்சத்தின் மர்மத்தையும் கூடவே விளக்குகிறார்.

இந்தக் கவிதை கணிதத்தின் அழகையும் நுட்பத்தையும் அதில் நிறைந்திருக்கும் சிக்கலான தத்துவத்தையும் குறிக்கிறது. இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டியது நிறைய இருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.

பை என்ற கணித நிலை எண்ணை எடுத்துக் கொண்டு அதன் மூலம் பிரபஞ்ச மர்மத்தை உணர்த்த முற்படுகிறார் கவிஞர்.

பை என்பதில் உள்ள மர்மங்கள் ஏராளம். உலகெங்கும் மார்ச் 14 பை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மார்ச் – 3; 14 – 14 அதாவது 3.14 என்பதைக் குறிக்கிறது.

¾ என்பது 0.75. அவ்வளவு தான்.

1/3 என்பது 0.333333. அவ்வளவு தான்.

ஆனால் பை-யோ மாறிக் கொண்டே வரும் எண்களைக் கொண்டது.

பை 3.142 என்று ஆரம்பித்தாலும் அது எல்லையற்ற தன்மையில் நீண்டு சென்று கொண்டே இருக்கும்.

பை- யின் முதல் நூறு எண்களை இதோ பாருங்கள்:

3.1415926535897932384626433832795028841971693993751058209749445923078164062862089986280348253421170679

எண்கள் மாறிக் கொண்டே இருக்கிறது இல்லையா. Πயில் இதுவரை 100 டிரில்லியன் எண்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் நவீன கணினி உத்தியைக் கொண்டு. (ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பின் 12 பூஜ்யங்களைக் கொண்ட எண். அதாவது ஓராயிரம் பில்லியன். ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி. அதாவது ஒரு டிரில்லியன் என்பது ஓராயிரம் நூறு கோடி.

பை- ஐ வைத்து ஏராளமான ஜோக்குகள் உண்டு. சிக்கலான கணிதங்கள் உண்டு.

ஆனால் அதை வைத்து பிரபஞ்ச மர்மத்தைச் சுட்டிக் காட்டும் கவிதை

விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதை தான்!

***

Part 12 with Ayyanar, Saivite, Puri, Konark, Bhuvaneswar Temples; Rare Pictures from 1928 book (Post No.12,884)

Picture of Shiva Devotee

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,884

Date uploaded in London – –   4 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 12 from the book.

In part TWELVE, rare pictures of Ayyanar, Saivite, Puri, Konark, Bhuvaneswar Temples, Sun Temple, Stone Chariot  are given below.

xxxx

There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

 Picture of Tibetan Lama

Ayyaanar

Krishna, Balabhadra, Subhadra of Puri Jagannatha Temple.

Puri Jagannath Temple Plan

World Famous Sun Temple in Konark, Orissa/Odisha 

—subham—

Tags- rare pictures, , part 12, 1928 German book, with Ayyanar, Saivite, Puri, Konark, Bhuvaneswar Temples, Sun Temple, Stone Chariot

கேரளத்தில் அதிசய சிவன்,  வெங்கடாசலபதி கோவில்கள்-47 (Post No.12,883)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,883

Date uploaded in London – –   4 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 47

கோவில் எண்கள் –7172737475

கேரளத்தில் வெங்கடாசலபதி கோவில்கள் – 47

71. எர்ணாகுளம் வெங்கடாசலபதி கோவில்

ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி பாலாஜி என்று போற்றப்படும் வெங்கடாசலபதி கோவிலுக்கு தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் கோடிக் கணக்கில் பக்தர்கள் இருக்கிறார்கள். அவருக்கு கேரளத்திலும் கோவில்களும் பக்தர்களும் இருப்பது பலருக்கும் தெரியாது .

எர்ணாகுளம் நகருக்குள்ளேயே வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது . கெளட சரஸ்வதி பிராமணர்களுக்கு இவர் கண்கண்ட தெய்வம்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில்  எட்டு நாட்களுக்கு விழா நடக்கும். ஒவ்வொருநாள் காலையிலும் 3 யானைகளுடன் பெருமாள் பவனி வருகிறார். 5, 6, 7 ஆவது நாட்களில் சப்பரத்தில் பவனி நடக்கும்.

கடைசி நாள் மதியத்தில் வஞ்சியெடுப்பு நடக்கும். இதில் படகுகளின் மாதிரிகள் கொண்டுவரப்படும். இந்த ஊர்வலம் கோவில் குளத்தில் முடிவுபெறும். இரவில் கருட வாகன தர்சனத்தைப் பல்லாயிரக்கணக்கான பக்த்ர்கள்  காண்பர் . பெருமாள், ரதத்தில் பவனி வருவார்.. மறுநாள் அதிகாலையில் தெப்போற்சவம் நடக்கும்.

மட்டாஞ்சேரி  பகுதியில் கோவில்; உள்ளது . இது ஒரு பெரிய கோவில்; கருவறைக்கு வெளியே நாலம்பலம் இருக்கிறது கோவில் குளத்தின் நடுவில் செப்பு/ தாமிரக் கூரை வேயப்பட்ட மண்டபம்  இருக்கிறது .மேல் அடுக்கு சுழலும்  வகையில் அற்புதமாக அமைந்துள்ளது

கோவிலின் வாசல் 70 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும்.மூன்று நிலை கிழக்கு கோபுரமும் கவர்ச்சிமிக்கது .

இந்தக் கோவிலில் உள்ள வெண்கல மணி இந்தியக்  கோவில்களில் உள்ள மிகப்பெரிய மணிகளில் ஒன்றாகும்.

xxxx

72.வடக்கு பாரூர் வெங்கடாசலபதி கோவில்

இந்தக் கோவிலில் ஏப்ரலில் 6 நாள் உற்சவம் நடக்கிறது.3,4 ஆவது நாட்களில் திக் விஜயம் நடக்கும். பல்லக்கில் பெருமாளை எழுந்தருளச் செய்து கோவிலைச் சுற்றி எடுத்துவருவார்கள் ஐந்தாம் நாள் பள்ளி வேட்டை நடக்கும்.

ஆராட்டு , தெப்போற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.

xxxx

73.பல்லுருத்தி வெங்கடாசலபதி கோவில்

எர்ணாகுளத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் பல்லுருத்தி இருக்கிறது. சிவராத்திரி காலத்தில் பெருமாளுக்கு விழா எடுப்பது குறிப்பிடத் தக்கது. 5 நாள் விழாவுக்கு பல்லக்கு பிரதட்சிணம் என்று பெயர்.. பல்லக்கில் பெருமாள் பவனி வருகிறார் .

மேற் கூறிய எல்லா விழாக்களிலும் கேரளத்துக்கே உரித்தான கொட்டு மேளங்களும் தமிழ்நாட்டு நாதஸ்வரமும் இருக்கும்.

xxxx

74.ஆல்வாய் சிவன் கோவில்

எர்ணாகுளம் நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் பெரியாற்றங்கரையில் அமைந்த ஆல்வாய் சிவன் கோவில்  பல சிறப்புகளை உடையது.   சிவலிங்கம் கருவறையில் இல்லாது ஆற்றங் கரையில் நிற்கிறது . சிவராத்ரி உற்சவம் மிகப்பெரிய அளவில் நடக்கும். மறு நாளன்று முன்னோர்களுக்கு வாவுபலி கொடுப்பார்கள் .

உற்சவ காலத்தில் 14 நாட்களுக்கு சந்தை, கண்காட்சிகள் இடம்பெறும்.

xxxxx

75. உளியனூர் மஹாதேவர் கோவில்பொறியியல் அதிசயம்!!

ஆலவாயிலிருந்து 2 கி.மீ தொலைவில் பெரியாற்றங்கரையில் அமைந்த கோவில் இது .

இதே ஊரைச் சேர்ந்த பெருந்தச்சன் கட்டிய கோவில் ஆகும் . கேரளத்தின் மிகப்பெரிய கட்டட சிற்பி பெருந்தச்சன்.

இந்தக் கோவில் பொறியியல் கலையின் அதிசயம். ஸ்ரீ கோவில் என்னும் கருவறை 42 மீட்டர் சுற்றளவு கொண்டது;   கிழக்கு நோக்கி சிவ பெருமானும் மேற்கு நோக்கி பார்வதியும் காட்சி அளிக்கிறார்கள்.

கூரையில் இருக்கும் இறை வாரக்கை,கைமரம்,அல்லது உத்தரங்கள் எண்ணிக்கை 64; இந்து மத நூல்களில் 64 என்பது சிறப்புடைத்து; மதுரை சிவ மெருமானின் திருவிளையாடல்கள் 64. வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தில் பெண்கள் கற்க வேண்டிய 64 கலைகளின் பட்டியல் (FIRST WOMAN’S SYLLABUS IN THE WORLD)  உள்ளது. ஆய கலைகள் 64-கையும் தருபவள் சரஸ்வதி என்கிறது தமிழ்ப்பாடல்  இந்தக் கோவிலின் 64 இறைவாரக்கைக்கையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில் நுட்பமாகக் கட்டப்பட்டுள்ளது .

கருவறையில் உள்ள 4 வாசல்களும் 4 வேதங்களைக் காட்டி நிற்கின்றன..

பிரதான கோவிலிலிருந்து சிறிது தூரத்தில் மேலும் ஒரு சிவன் கோவில் உள்ளது;.பரசுராமர் ஸ்தாபித்த சிவலிங்கம் என்பது ஐதீகம். கேரளத்தை உண்டாக்கியவர் பரசுராமர் என்பதால் அவர் சம்பந்தம் எல்லா இடத்திலும் இருக்கும் . இந்தியாவில் உள்ள பழைய சிவலிங்கங்களில் இதுதான் பெரியது என்பது மக்கள் நம்பிக்கை. தஞ்சாவூரில் ராஜ ராஜ சோழன் எழுப்பிய பெருவுடையார் என்னும் மிகப்பெரிய லிங்கம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதிஷ்டை ஆனது. இங்குள்ள சிவலிங்கமோ அதற்கும் முந்தியது என்பது நம்பிக்கை. தற்காலத்தில் உலகம் முழுதும் மிகப்பெரிய சிவலிங்கங்கள் நிறுவப்படுவதை பத்திரிக்கைகளில்  படிக்கிறோம் .

மஹா கணபதி கோவிலையும்  புதிதாக எழுப்பியுள்ளனர் .

சிவன் கோவில் விழா  ஆண்டுதோறும் ஜனவரியில் 10 நாட்களுக்கு நடைபெறும் .

–SUBHAM—

TAGS- பொறியியல் அதிசயம், உளியனூர் மஹாதேவர் கோவில், வெங்கடாசலபதி கோவில்கள், PART 47, கேரள கோவில்கள்- 47, பெருந்தச்சன்

S Nagarajan Article Index : DECEMBER  2023 (Post No.12,882)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,882

Date uploaded in London –  –  –   4  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

SNR Article Index : DECEMBER  2023

DECEMBER  2023

1-12-23 12785 கொங்குமண்டல சதகம் –  பாடல்கள் 6 & 7                             

2-12-23 12789 SNR Article Index : NOVEMBER  2023                                                                    3-12-23 12792 நிறைகுடம் தளும்பாது!                                                                                      4-12-23 12795 இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! – அத் 18 – ஹிட்லர்       அழைத்த விஸ்வநாத சாஸ்திரி!                                                                                                5-12-23 12799 இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! -அத் 19 தவறான      

                             மொழிபெயர்ப்பால் போடப்பட்ட அணுகுண்டு!                            6-12-23 12803 வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்!  – ஒரு வரி 

                             சுபாஷிதங்கள்                                                                                                   7-12-23 12806  நடாஷா  டெம்கினா – அதீத உளவியலும் அதிசயங்கள்     

                               கண்ட அறிஞர்களும்! – 2                                                                            8-12-23 12812 சுந்தரருக்கு விருந்து கொடுத்த வரலாறு – கொங்குமண்டல

                             சதகம் பாடல் 21                                                                                                                       9-12-23 12814 தமிழுக்காகக் கொதிநெய்யில் கையை விட்டு சத்தியம்

                     செய்த ஆணூர்ச் சர்க்கரை! -கொங்குமண்டல சதகம் பாடல் 52.                   10-12-23 12817 பாலஸ்தீனம் என்று ஒரு இடமே கிடையாது!                                   11-12-23 12820  முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயர் பெற்ற வீரன் –

                                கொங்குமண்டல சதகம் பாடல் 74.                                                 12-12-23 12825 லவ குசரின் ஜன்ம பூமி சீரமைக்கப்படும்!                            13-12-23 12827 நோய், சிகிச்சை, வைத்தியர், நோயாளி பற்றி ஆயுர்வேதம்

                                தெரிவிக்கும் அடிப்படை உண்மைகள்! ஹெல்த்கேர்  

                               டிசம்பர் 2023 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை.             14-12-23 12831 அப்பர் கூறும் நரிவிருத்தக் கதை! – தேவாரச் செல்வம்       15-12-23 12836 ஆசார்யர், தந்தை,  தாய், சகோதரன், சகோதரன் பெருமை!  16-12-23 12840 ஊக்கம் தர ஒரு புலவன் பாரதி அடா!                                         17-12-23 12843 பலரது பார்வையில் அரை கிளாஸ் நீர்!                                                   25-12-23 12846  லட்சம் பேரை ஊக்குவித்தவர்; ஆயிரக்கணக்கானோர் வாழ்வு

                                   வளம் பெற வழி வகுத்தவர்! – 1, 2 and 3                                                                                   26-12-23 12848 நிகோலா டெஸ்லா – ஏழு அறிவுரைகள்!                                      27-12-23 12852 காளத்தீ கண்டத்தே, நெற்றியிலே, கரத்திலே, அங்கமெங்கும்

                                சிவனே!                                                                                                             28-12-23 12856 அநிருத்தனைக் காப்பாற்றிய ஶ்ரீ கிருஷ்ணர்!                                  29-12-23 12860 மனிதனின் பற்றுக்கும் முக்திக்கும் மனமே காரணம்!                

30-12-23 12864 சமயக் குரவர் நால்வரின் வயது, நட்சத்திரம், அவதாரச்

                                 சிறப்பு!                                                                                                              31-12-23 12868 அநேக சாஸ்த்ரம் பஹு வேதிதவ்யம்!

***

Part 11 with Mahabalipuram, Kanchipuram and Ellora caves; Rare Pictures from 1928 book (Post No.12,881)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,881

Date uploaded in London – –   3  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 11 from the book.

In part eleven, rare pictures of Mahabalipuram, Kanchipuram temples are shown. Ellora Cave sculptures are given below.

xxxx

There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

River Ganga descending from sky

above images are from Mahabalipuram

xxxx

Indra in Ellora

Kanchipuram Temple

—subham—

Tags- rare pictures, Mahabalipuram, Ellora caves, Kanchipuram, part 11, 1928 German book

எர்ணாகுளம், ஆல்வாய் வட்டாரக் கோவில்கள் – 46 (Post No.12,880)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,880

Date uploaded in London – –   3  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 46

கோவில் எண்கள் –67,68,69,70

கேரள மாநிலத்தில், தென்  திசையை நோக்கி வர வர , திருவனந்தபுரம் வரை ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களைக்  காணலாம் . மாநிலம் முழுதுமுள்ள முக்கியக் கோவில்களை முதல் 40 பகுதி கட்டுரைகளில் கண்டோம். ஏனையவை விழாக்கள் மூலம் நிறைய பக்தர்களை இழுக்கின்றன. பகவதி , ஐயப்பன் , சிவன் விஷ்ணு கோவில் இல்லாத இடம் இல்லை . பல இடங்களில் சுப்ரமண்யர், மாரியம்மன் , பேச்சியம்மன் கோவில்களும் இருப்பது தமிழ்நாட்டின் தாக்கத்தைக் காட்டுகிறது . காலடி, சோட்டாணிக்கரா , த்ரிபுனித்துரா , த்ரிகக்காரா , எர்ணாகுளம் கோவில்களைக் கண்டோம் .மாதிரிக்காக மேலும் சில கோவில்களைக் காண்போம்.

67.கக்கூர் காளவயல் மாட்டுவண்டி ரேஸ்

எர்ணாகுளத்திலிருந்து 45 கி.மீ., பிரவம் என்னும் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் காளை வயல் என்னும் அறுவடைத் திருவிழா பிப்ரவரி மாதம் நடக்கும். இதன் சிறப்பு என்னெவென்றால் மாட்டுவண்டி பந்தயமும் இரண்டு கோவில் அம்மன்கள் சந்திப்பும் ஆகும்.

எடப்பாரா , அம்பசேரி என்னும் இரண்டு ஊர்களில் கோவில் கொண்டுள்ள தேவிகள் விழாவன்று

கக்கூர் காளவயலில் சந்திப்பார்கள்; அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கும்ப மாதத்தில் 4 நாட்களுக்கு விழா நடக்கும்.. மூன்றாம் நாள் விழாவில் தேவியர் சந்திப்பு நடக்கும். இரண்டு அம்மன்களும் பஞ்சவாத்யம், நாகஸ்வரம் முழக்கத்துடன் யானை மீது பவனி வருவார்கள்.பின்னர் அம்பசேரி கோவிலில் எழுந்தருளுவார்கள் ; மறுநாள் இரவில் அவரவர் கோவிலுக்குத் திரும்பிப் போவார்கள்.

பிரவம் மாட்டுவண்டி ரேஸ்

இந்த விழாவினை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி  ரிஷப வாஹனம் என்ற பெயரில் ஊர்வலமாக வரும். நிறைய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் . முக்கியமாக 40 மாட்டு வண்டிகள் பங்கேற்கும் பந்தயம்/ ரேஸ்  நடைபெறும் . அத்தோடு ஐந்து நாட்களுக்கு விவசாயக் கண்காட்சியும் நடக்கும்.

68.பேச்சியம்மன், மாரியம்மன் கோவில்கள்

எர்ணாகுளம் மத்திய பஸ் நிலையத்துக்கு அருகில் ..பேச்சியம்மன் கோவில் இருக்கிறது (மதுரையிலும் வைகை ஆற்றங்கரைக்குச் செல்லும் வழியில் .பேச்சியம்மன் கோவில் இருக்கிறது. அந்தப் படித்துறைக்கே அம்மனின் பெயர்தான் ). 

ஆண்டுதோறும் எட்டுநாள் விழா நடக்கும் கடைசி நாள் விழாவில் வளஞ்சசம்பலம்  தேவி கோவிலிலிருந்து நையாண்டி மேளம், உடுக்கு இசையுடன் ஊர்வலம் புறப்படும்; அதி காலையில் கோவிலை அடையும்  தீ மிதித்தல் அல்லது பூக்குழி இறங்குதல் எனும் அக்கினிப்பிரவேசம் முக்கிய சடங்கு ஆகும் . நிறைய நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் பங்கேற்பது தனிச் சிறப்பு ஆகும்

எர்ணாகுளம் திவான் ரோடு மாரியம்மன்- பத்ர காளி கோவில் நகரின் முக்கியக் கோவில்களில் ஒன்று. ஒரே கருவறையில் மாரியம்மனும் பத்ரகாளியும் இருப்பது தனித்துவம் மிக்கது.

ஆண்டுதோறும் 5 நாள் விழா நடக்கிறது கடைசி நாளன்று இரண்டு அம்மன்களும் இரண்டு யானைகளில் இரவு முழுதும் பவனி வருவார்கள். நையாண்டி மேளம், நாகஸ்வரம், பஞ்ச்ச வாத்யம் வாசிப்போர் தம் திறமையைக் காட்டுவார்கள். இரவில் பெண்கள் தட்டுகளை ஏந்தி வரும் தாளம்  வரவு நடக்கும் கதகளி, ஓட்டந்துள்ளல் நடனங்கள் இடம்பெறும்.

எடப்பள்ளி மாரியம்மன் கோவில் 8 கிமீ தொலைவில் இருக்கிறது எட்டு நாள் விழாவில் 7ஆவது நாள் நடக்கும் கனலாட்டம் குறிப்பிடத்தக்கது. விரதம் அனுஷ்டிக்கும் மாரியம்மன் பக்தர்கள் தீ மீது நடனம் ஆடுவார்கள் அவர்கள் ஆவேசத்துடன் நடனம் ஆடுவது பார்ப்போர் மனதில் அச் சத்தையும்  பக்தியையும் உண்டாக்கும்.  மாலையில் நடக்கும் காவடியாட்டத்தில் அம்மன் குடம், கரகம் முதலியனவும் சேரும்.

69.சுப்ரமண்ய சுவாமி கோவில்கள்

எர்ணாகுளம் குமரேஸ்வர சுப்ரமண்ய சுவாமி கோவில், பஸ்  நிலையம் அருகில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் ஒரு நாள் விழாவில் காவடியாட்டம், கரகாட்டம் இடம்பெறும். யானைகள் பவனியும் உண்டு

எர்ணாகுளம் நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள வைத்திலா .சுப்ரமண்ய சுவாமி கோவிலில் மூன்று கர்ப்பகிரகங்கள் இருக்கின்றன. ஆங்கு .சுப்ரமண்ய சுவாமி , சிவ பெருமான், ஐயப்பன் தரிசனம் தருகிறார்கள். எட்டு நாள் விழா ஆராட்டுடன் நிறைவுபெறும். அப்போது 2 யானைகள் ஜெண்டை மேளம், பஞ்சவாத்யம் முழக்கத்துடன் ஆற்றுக்குச் செல்லும் .

தைப்பூசம் நாளன்று முருகனுக்கு விழா எடுப்பார்கள்; .மாலை முதல் நள்ளிரவு வரை காவடி ஆட்டம் நடக்கும் .

எர்ணாகுளத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் கும்பலாவில் ஒரு சுப்ரமணிய சுவாமி கோவில் இருக்கிறது.

அதன் பெயர் குமராலயம் கோவில் ஆண்டுதோறும் நடக்கும் ஆறு நாள் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தோளில் காவடி சுமந்து ஆடும் ஆட்டம் கண்கொள்ளாக் காட்சி ஆகும். மூன்று யானைகள் புடை சூழ காவடி ஆட்டக்காரர்கள் ஊர்வலமாகச் செல்லுவார்கள். 24 மணி நேரத்துக்கு விரதம் அனுஷ்டிப்போர் மட்டுமே காவடிகளை சுமக்கலாம் என்ற விதி இருக்கிறது.

பொன்னாக்கரா சுப்ரமண்ய சுவாமி கோவில் எர்ணாகுளம் அருகில் இருக்கிறது. ஆறு நாள் விழாவில் முக்கிய அம்சம் சூலந் தூக்கல் ஆகும். முருக பக்தர்கள் நாவிலும், கன்னத்திலும் காதுகளிலும் வேல் வடிவிலான சூலத்தைக் குத்திக்கொள்ளுவார்கள்  முதல் இரண்டு நாட்களில் களமெழுத்துப்பாட்டும் கடைசி 4 நாட்களில் ஓட்டந்துள்ளல்  நடனமும் நடக்கும். கரகம் காவடியாட்டம் முதலியன இடம்பெறும்.

கொச்சி கோட்டை ஸ்ரீ கார்த்திகேய கோவில், எடகொச்சி பரமேஸ்வர குமாரமங்கலம் கோவில் , மூவாட்டுப்புழா குமார பஜன தேவஸ்வம், இளம்குன்னபுழா  சுப்ரமண்ய சுவாமி கோவில்களிலும் காவடியாட்டம் முதலியன நடக்கின்றன .

70.கொத்தமங்கலம் த்ரிகாரியூர் மஹாதேவ கோவில்

கொத்தமங்கலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது  பரசுராமர் உண்டாக்கிய கேரள சாம்ராஜ்யத்தில் 64 பகுதிகள் இருந்தன. அவற்றில் ஒன்றான தளி வட்டாரம் கி.பி. 800 முதல் 1100 வரை கேரளத்தின் தலைநகராக இருந்தது . இந்தப் பழைய சிவன் கோவிலில் பத்து நாள் விழா நடக்கும்.. முதல் 3 நாட்களுக்கு குறத்தியாட்டம் நடக்கும்;   சாக்யர் கூத்து, பாடகம் ஆகியவையும் விழாவில் உண்டு. கடைசி மூன்று நாட்களில் இன்னிசை வாத்ய முழக்கத்துடன் யானை மீது சிவன் வலம் வருவார் .

–சுபம் —

Tags – கொத்தமங்கலம் ,த்ரிகாரியூர், மஹாதேவ, கோவில், சுப்ரமண்ய சுவாமி , பேச்சியம்மன், மாரியம்மன் கோவில்கள் , காளவயல், மாட்டுவண்டி ரேஸ் ,

யானையைப் பரிசாகப் பெற்ற புலவர் வீரராகவ முதலியார்! (Post.12,879)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,879

Date uploaded in London –  –  –   3  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

யானையைப் பரிசாகப் பெற்ற புலவர் வீரராகவ முதலியார்!

ச.நாகராஜன்

இராமன் என்றொரு வள்ளல் வாழ்ந்து வந்தார். அவரைச் சந்தித்தார் கவி வீரராகவ முதலியார்.

அவரைப் பாடிப் புகழ்ந்தவுடன் ராமன் அவருக்கு பரிசாக ஒரு யானையைக் கொடுத்தார்.

யானையை வீட்டிற்குக் கொண்டு வந்தார் புலவர்.

வீட்டில் பாணி (பாடினியானவள்) அவரை நோக்கி, “பாணரே! இராமன் என்ற வள்ளலைப் பார்க்கச் சென்றிருந்தீரே! அவர் என்ன கொடுத்தார்? என்ன கொண்டு வந்தீர்” என்று கேட்டாள்.

அதற்குப் புலவர் பிரான் தான் கொண்டு வந்தது யானை என்று சொல்லாமல் யானைக்கு பரியாயப் பெயர்களான மாற்றுப் பெயர்களைக் கூறினார்.

ஒவ்வொரு பெயருக்கும் அதன் உண்மைப் பொருள் புரியாத அவரது மனைவி அவரைக் கிண்டல் செய்தாள்.

அது தான் இந்தப் பாடல்:

இம்பர்வா நெல் லையிரா மனையே பாடி

   என்கொணர்ந்தாய் பாணாநீ யென்றாள் பாணி

வம்பதாங் களபமென்றேன் பூசு மென்றாள்

   மாதங்க மென்றேன்யாம் வாழ்ந்தே மென்றாள்

பம்புசீர் வேழமென்றேன் றின்னு மென்றாள்

   பகடென்றே னுழுமென்றாள் பழனந் தன்னைக்

கம்பமா வென்றெனற் களியா மென்றாள்

   கைம்மாவென் றேன்சும்மா கலங்கினாளே

பாடலின் பொருள் :

பாணி – பாடினியானவள் (புலவரின் மனைவியானவள்)

பாணா – பாணனே

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி – இவ்வுலகமும் அவ்வுலகமும் தன் புகழின் எல்லைகளாகக் கொண்டு விளங்கும் இராமன் என்பவனைப் பாடி

நீ என் கொணர்ந்தாய் – நீ என்ன பொருள் கொண்டு வந்தாய்?

என்றாள் – என்று என்னை நோக்கி வினவினாள்

(அதற்கு விடையாக நான்)

வம்பது ஆம் களபம் என்றேன் – புதுமையாகிய களபம் என்றேன்

அதற்கு அவள்

பூசும் என்றாள் – அதைப் பூசுவீர் என்றாள்.

மாதங்கம் என்றேன் – மாதங்கம் என்று சொன்னேன்

நாம் வாழ்ந்தோம் என்றாள் – நாம் வாழ்ந்தோம் என்றாள்

பம்புசீர் வேழம் என்றேன் – மிக்க சிறப்பினை உடைய வேழம் என்று சொன்னேன்

தின்னும் என்றாள் – அதைத் தின்னுவீர் என்றாள்

பகடு என்றேன் – பகடு என்று சொன்னேன்

பழனம் தன்னை உழும் என்றாள் – வயலை உழுவீர் என்று சொன்னாள்

கம்பமா என்றேன் – கம்பமா என்று சொன்னேன்

நல் களி ஆம் என்றாள் – நல்ல களியைக் கிளறலாம் என்றாள்

கைம்மா என்றேன் – கைம்மா என்று சொன்னேன்

அதன் பொருள் தெரியாததால்

சும்மா கலங்கினாள் – சும்மா கலங்கி நின்றாள்

பாடலில் வரும் சொற்களுக்கு இரு பொருள் உண்டு. வரிசையாகப் பார்ப்போம்.

களபம் என்றாள் யானை. ஆனால் பாடினி புரிந்து கொண்டதோ களபச் சந்தனம் என்று. ஆகவே இவ்வளவு தானா, அதை எடுத்துப் பூசும் என்றாள் அவள்.

உடனே புலவர் மாதங்கம் என்று யானையைச் சொன்னார்.  மா தங்கம் என்று புரிந்து கொண்ட பாடினி உயர்ந்த பொன்னையா கொண்டு வந்தீர் நாம் வாழ்ந்தோம் என்றாள்.

புலவர் வேழம் என்றார். வேழத்திற்குக் கரும்பு என்று பொருள் கொண்ட பாடினி அதைத் தின்னும் என்றாள்.

புலவர் பகடு என்று யானையைக் கூறினார். பகடுக்கு எருமை என்ற பொருள் கொண்ட பாடினி அதனால் வயலை நன்கு உழுவீர் என்றாள்.

புலவர் கம்பமா என்றார். கம்பமா என்பதற்கு கம்பை அரைத்துச் செய்த மா என்று பொருள் கொண்ட அதை வைத்து நன்கு களி கிளறலாம் என்றாள்.

கடைசியாக புலவர் கைம்மா என்று கூறினார்.

கைம்மாவிற்குப் பொருள் விளங்காத மனைவி சும்மா கலங்கி நின்றாள்.

பின்னர் புலவர் யானையைக் காண்பிக்க மனைவி மகிழ்ந்தாள்.

இன்னொரு வள்ளல் அவருக்குத் தானன் என்று பெயர். அவரும் புலவருக்கு ஒரு யானையைப் பரிசாகத் தந்தார்.

புலவர் பாடினார்:

இல்லெனுஞ் சொல் லறியாத சீகையில் வாழ் தானனைப் போயாழ்பாணன் யான்,

பல்லை விரித் திரந்தக்கால் வெண்சோறும் பழந் தூசும் பாலியாமல்

கொல்ல நினைந் தேதனது நால்வாயைப் பரிசென்று கொடுத்தான் பார்க்குள்,

தொல்லையென தொருவாய்க்கு நால்வாய்க்கு மிரையெங்கே துரப்புவனே.

பாடலின் பொருள் :

இல் என்னும் சொல் அறியாத – இல்லையென்று சொல்லும் சொல்லை அறியாத

சீகையில் வாழ்த் தானனை – சீகை என்னும் ஊரில் வாழும் தானன் என்பவனை

பாணன் யான் போய் – பாணனாகிய நான் போய்

பல்லை விரித்து இரந்தக்கால் – பல்லைக் காட்டி யாசித்தபோது

வெண்சோறும்  – வெண்மையாகிய அன்னத்தையும்

பழம் தூசும் – பழைய வஸ்திரத்தையும்

பாலியாமல் – கொடுக்காமல்

கொல்ல நினைந்து – (என்னைக்) கொல்ல எண்ணி

தனது நால்வாயை – தனது நால்வாயினை

பரிசென்றே கொடுத்தான் – எனக்குப் பரிசு என்று கொடுத்தான்

பார்க்குள் – உலகத்தில்

தொல்லை எனது ஒரு வாய்க்கும் – பழைய எனது ஒரு வாய்க்கும்

நால்வாய்க்கும் – (இப்போது பெற்ற) நால்வாய்க்கும்

இரை எங்கே துரப்புவேன் – உணவு எங்கே கொண்டு வந்து நிறைப்பேன்?

நால்வாய் என்றால் நான்கு வாய் என்றும் தொங்குகின்ற வாயினை உடைய யானை என்றும் பொருள்.

ஆக ஒரு வாய்க்கு இரை பெறாத நான் ஐந்து வாய்க்கு (அல்லது எனக்கும் யானைக்கும்) எப்படி உணவைச் சம்பாதித்துக் கொடுப்பேன் என்று பொருள் அமைகிறது.

கவி வீரராகவ முதலியாரின் கவித் திறமையை விளக்கும் பலத் தனிப்பாடல்கள் உண்டு. அனைத்துமே அருமையானவை!

***

tags-வீரராகவ முதலியார்

Part 10 with Thanjavur, Trichy, Srirangam, Chidambaram, Kumbakonam; Rare Pictures from 1928 book (Post No.12,878)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,878

Date uploaded in London – –   2  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 10 from the book.

In part ten, rare pictures of Thanjavur, Srirangam temples, Trichy Rockfort, Jambukeswaram and Kumabakonam temples are shown. Chidambaram temple, tank and mandap are pictured

xxxx

There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

above pictures are from Thanjavur temple 

 above are from Chidambaram Temple

above pictures are from Trichy, Srirangam and Jambukeswaram Temples

Tiruvannamalai towers

Kumbakonam Temple

—subham—

Tags- rare pictures, Thanjavur, Chidambaram, Trichy, Srirangam, Kumbakonam, part 10, 1928 German book

முதலையால் பிரசித்தமான காசர்கோடு கோவில் -45 (Post No.12,877)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,877

Date uploaded in London – –   2 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 45

கோவில் எண்கள் –63,64,65, 66

63.அனந்த பத்மநாப சுவாமி கோவில் முதலை

காசர்கோடு மாவட்டம் கும்பளா பகுதியில் – அனந்தபுரத்தில்  அனந்த பத்மநாபசுவாமி கோயில் உள்ளது.

அங்குள்ள குளத்தில் பபியா என்ற பெயருள்ள முதலை 75 ஆண்டுகளாக சைவ முதலையாக வசித்து இறந்தவுடன் உலகம் முழுதும் அந்தச் செய்தி பரவியது. ஏனெனில் சாதாரணமாக முதலைகள் மாமிச உணவையே உண்ணும். அந்த முதலையோ கோவிலில் அர்ச்சகர் தரும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்தது. அதே குளத்தில் சரியாக ஓராண்டுக்குப் பின்னர் நவம்பர் 2023-ல் மேலும் ஒரு முதலை தோன்றியவுடன் மேலும் அதிசயச் செய்திகள் பரவின. ஏனெனில் சாதாரணமாக முதலைகள் வசிக்காத வட்டாரம் அது

கோவிலில் சயன கோலத்தில் பாம்பு மீது விஷ்ணு அறிதுயில் செய்வதைக் காணலாம் .

ஆண்டுதோறும் மார்ச்மாதம் தெப்பத்  திருவிழா நடக்கும் ; இரவில் கர்நாடக யக்ஷகானம் நடைபெறும் .

கர்நாடக எல்லையில் உள்ள மாவட்டம்  . காசர்கோடு

64.பார்த்தசாரதி-கிருஷ்ண தேவ கோவில்

கும்பலா நகரிலிருந்து 5 கி.மீ .தொலைவில் பார்த்தசாரதி கோவில் இருக்கிறது அர்ஜுனனுக்கு தேரோட்டிய கிருஷ்ணனை பார்த்த சாரதி= டிரைவர் கிருஷ்ணா என்கிறோம்.

இங்கு பிப்ரவரி மாததத்தில் 7 நாள் விழா நடக்கும். அப்போது கர்நாடக யக்ஷகான கலைஞர்கள் புராண இதிஹாஸக் காட்சிகளை நாட்டிய நாடகமாகக் காட்டுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் துலா மாதப்பிறப்பில்  நடக்கும் விழாவுக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் ; இரவு முழுதும் யக்ஷகானத்தைக் கண்டு களிப்பார்கள் .

65.மதூர் விநாயகர் கோவில் Madhur Sree Madanantheshwara-Siddhivinayaka Temple i

காசர்கோடு நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் மதுவாகினி நதிக்கரையில் சிவன் கோவில் இருக்கிறது. கோவில் சிவனுக்குகானதாக இருந்தாலும் அங்குள்ள விநாயகர் மூலமே கோவில் பிரபலம் ஆகியுள்ளது

சிவ பெருமானின் பெயர் மதானந்தேஸ்வரர். அதாவது மதமாச்ச்ர்யங்களை வென்ற இறைவன்.

சிவபெருமானின் கருவறைக்குள், பார்வதி தேவியும் வீற்றிருக்கிறார். கருவறைக்கு தெற்கே அமைந்துள்ள சித்தி விநாயகர் மிகவும் வரப்பிரசாதம் உடையவர் ; நினைத்த வரங்களை அருளுவதால் அப்பாவை வீட பிள்ளைக்கு—பிள்ளையாருக்கு,  பெருமை

குன்றுகளும் நெல் வயல்களும் தோப்பு துறவுகளும் நிறைந்த வட்டாரத்தில் கோபுரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது கூரையை செப்புத தகடுகளால் வேய்ந்துள்ளனர்.

கேரள- கர்நாடக கட்டிடக்கலை  பின்னிப் பிணைந்த அமைப்பினைக் கண்டு ரசிக்கலாம். இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் கண்கவரும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கேரள கோவிலுக்குப் புறம்பான சடங்குகளையே கோவிலில் பின்பற்றுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் 5 நாள்  விழா நடக்கும் . நாலாம் நாள் விழாவில் இறைவன் உருவம் கொண்ட திடம்பு ஒன்றரை மைல் தொலைவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் . பல்ல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் விழாவில் அருகாமை மாநிலமான கர்நாடக யக்ஷகான இசைக்கலைஞர்கள் நாட்டிய நாடகங்களை நடித்துக் காட்டுவார்கள்.

66.காஞ்சங்காடு கோவில்கள், ஆஸ்ரமம் ANANDASHRAMAM, KANHANGAD

ஆனந்தாசிரமம், என்னும் புகழ்பெற்ற ஆஸ்ரமம் 1931ம் ஆண்டில் சுவாமி பாப்பா ராமதாஸால் துவக்கப்பட்டது. காஞ்சங்காடு நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு சந்திப்பில் அமைந்துள்ளது. அவருடன் கிருஷ்ணாபாய் என்ற அன்னையும் இருந்து அருளுரை ஆற்றி வந்தனர் .காஞ்ஞங்காடு அல்லது காஞ்சங்காடு என்று அழைக்கப்படும் ஊர் கேரள- கர்நாடக எல்லையில் இருக்கிறது .

ஆசிரமத்தின் துவக்க விழாவின் போது, சுவாமி ராம்தாஸ் ஆசிரமத்தின் நோக்கத்தை விவரிக்கும் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார்: “ஆசிரமத்தின் இலட்சியமானது உலகளாவிய அன்பும் சேவையுமே ஆகும். இது உலகின் அனைத்து உயிர்களிலும் தெய்வீகப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது . இங்கே ஆண், பெண், குழந்தை என அனைவரும் எந்த சமயத்தை சாதியையும் சேர்தவர்களாக இருந்தாலும் அனுமதிக்கபடுவர். பரஸ்பரம் அன்பு, சேவை உணர்வு போன்றவற்றை வளர்ப்பதற்கு முயலும் இடமாக இருக்கும், இதன் மூலம் இதன் எல்லைக்குள் உணரப்படுவது வெளி உலகில் மனித வாழ்க்கைக்கு சரியான ஒரு நடத்தைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் (this para is from Wikipedia).

மடியன் கோவிலகம்

நகரில் மடியன் கோவிலகம் இருக்கிறது .அங்கு க்ஷேத்ர பாலகனும் காளராத்ரி அம்மா என்னும் பத்ரகாளியும் உறைகின்றனர்; பாட்டுற்சவம் என்ற 9 நாள் ஆண்டு உற்சவம் கலை நிகழ்ச்சிகளுடன் நடக்கும் . கோவிலில் மதியத்தில் பிராமணரும் மற்ற நேரங்களில் பிராமணர் அல்லாதோரும் பூஜிக்கும் வினோத வழக்கம்  இங்கு பின்பற்றப்படுகிறது . 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய கோவில் இது.

மண்டியோட்டு தேவாலயம்

ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள  மண்டியோட்டு தேவாலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடக்கின்றன. 4 நாள் விழாவில் 7 வகை தெய்யம் நடனங்களில் 7 தெய்வங்களைக் காட்டி ஆடுவது இந்தக் கோவிலில் சிறப்பு .

9 நாள் நடக்கும் விழாவில் பூரக்களி நடனம் நடக்கும். ஜனவரி, மார்ச் மாதங்களில் இவை நடக்கின்றன.

காசர்கோடு நகரில் இருக்கும் மல்லிகார்ஜுன சிவன் கோவிலும்காஞ்சன் காட்டு அணியல் தெரு பகவதி கோவிலும் இந்த வட்டாரத்திலுள்ள மேலும் இரண்டு முக்கியக் கோவில்கள்.

–SUBHAM—

Tags- அனந்த பத்மநாப சுவாமி கோவில், முதலை ,பார்த்தசாரதி, கிருஷ்ண தேவ கோவில் , மதூர் விநாயகர் கோவில் ,காஞ்சங்காடு, ஆஸ்ரமம், காசர்கோடு

லங்கணம் பரமௌஷதம்! (Post No.12,876)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,876

Date uploaded in London –  –  –   2  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லங்கணம் பரமௌஷதம்!

ச. நாகராஜன்

லக்ஷ்மிவந்தோ ந ஜானந்தி ப்ராயேண பரவேதனாம் |

தனவந்தர்கள் மற்றவர்கள் படும் வேதனையைப் பொதுவாக புரிந்து கொள்வதில்லை.

லக்ஷ்யதே ந கதி: சம்யக் தனஸ்ய ச தனஸ்ய ச |

செல்வத்தின் போக்கையும் மேகத்தின் போக்கையும் ஒருவரால் பார்க்க முடிவதில்லை.

லங்கணம் பரமௌஷதம் |

உபவாசம் சிறந்த மருந்து.

லோபஸ்சேதகுணேன கிம் |

பேராசையை விட மோசமான கெட்டகுணம் வேறில்லை.

லொபாவிஷ்டோ நரோ ஹந்தி ஸ்வாமினம் வா சஹோதரம் |

பேராசையின் தூண்டுதலினால் ஒருவன் தனது எஜமானனையும் தனது சகோதரனையும் கூடக் கொல்வான்.

வசனே கா தரித்ரதா |

வார்த்தைகளில் எதற்கு தரித்திரம்?

வனே புஷ்பபலாகீர்ணே புரிஷமிவ ஷூக்ர: |

மலர்களும் பழங்களும் நிறைந்துள்ள வனத்தில் பன்றியானது மலத்தையே தேடுகிறது.

வரம் வேஷ்யா பத்னீ ந புனரவிநீதா குலவது: |

அடாவடியான மனைவியை விட ஒரு வேசியே சிறந்தவள்.

வர்த்தமானேன காலேன வர்த்தயந்தி விசக்ஷணா: |

புத்திசாலிகள் காலத்தையொட்டி தற்காலத்தில் இருப்பவர்களுடனேயே செல்கின்றனர்.

வித்யா ரூபம் குரூபாணாம் |

அழகற்ற குரூபிகளுக்கு கல்வியே சிறந்த கவர்ச்சி.

வித்வான்குலீனோ ந கரோதி கர்வம் |

வித்தையில் சிறந்த வித்வான்கள் கர்வம் கொள்ள மாட்டார்கள்.

விநாசகாலே விபரீதபுத்தி: |

அழியப்போகும் காலத்தில் விபரீத புத்தி தோன்றும்.

விநாஷ்ரயா ந ஷோபந்தே பண்டிதா வனிதா லதா: |

தக்க ஆதரவின்றி பண்டிதர்களும், பெண்களும், கொடிகளும் சோபிப்பதில்லை.

விரக்தஸ்ய த்ருணம் ஜகத் |
விரக்தி அடைந்தவனுக்கு உலகம் புல்லுக்குச் சமானம்.

விஸ்வாஸ்ய வஞ்சயந்தே தூர்தரஸ்சத்வாபிரீஸ்வரா: |

எஜமானனின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் ரௌடிகள் அவர்களுக்குத் துரோகம் இழைக்கிறார்கள்.

வீரபோக்யா வசுந்தரா |

இந்த உலகம் வீரர்களாலேயே அனுபவிக்கப்படுகிறது.

வ்ருத்திம் சோபத்ரவாம் த்யஜேத் |

தொந்தரவு தரும் தொழிலை ஒருவன் விலக்க வேண்டும்.

வ்யவஹாரேண மித்ராணி ஜாயந்தே ரிபவஸ்ததா |

ஒருவரது நடத்தையினாலேயே நண்பர்களும் எதிரிகளும் உருவாக்கப்படுகிறார்கள்.

வ்யாபாரே வஸதே லக்ஷ்மி: |

வியாபாரத்தின் விளைவே செல்வம்.

சரணமுபேதோ ந ஹாதவ்ய: |

சரணமடைந்தவர்களை நிராகரிக்கக் கூடாது.

சரீரமாத்ரம் கலு தர்மசாதனம் |

உடலே நல்ல தர்மம் செய்வதற்கான முதல் தேவையாகும்.

சீலம் பூஷயதே குலம் |

நல்லொழுக்கம் குலத்தை அலங்கரிக்கிறது.

சுக: ஸ்லோகான் வக்தும் பரவதி ந காக: க்வசிதபி |

கிளியானது ஒரு ஸ்லோகத்தைச் சொல்லும்; ஆனால் காகமோ அதை ஒருபோதும் செய்ய முடியாது.

சுபஸ்ய சீக்ரமசுபஸ்ய காலஹரணம் |

சுபகாரியங்களை உடனே செய்ய வேண்டும். அசுபமானவற்றைக் காலம் தாழ்த்தவேண்டும்.

ஸ்ரேயசி கேன த்ருப்யதே |

ஏற்கனவே அடைந்த புகழில் யார் தான் திருப்தி அடைகிறார்கள்!

***