
Date uploaded in London – – 17 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
QUIZ SERIAL No.111
1.குயில்- காகம் பற்றிய பிரபல சம்ஸ்க்ருத சுபாஷிதம் என்ன சொல்கிறது ?
XXXX
2.இந்தப் பாடலுக்கு (சம்ஸ்க்ருத சுபாஷிதம்) காரணம் என்ன ?
XXXX
3.இந்தியாவின் கவிக்குயில் யார் ?
XXXX
4.சங்க இலக்கியத்தில் குயில் எங்கெங்கு வருகிறது ?
XXXX
5.குயில் பத்து பாடிய சைவப் பெரியார் யார் ?
XXXX
6.மயில் அகவும் காகம் கரையும் குயில் என்ன செய்யும் ?
XXXX
7.குயில் பழமொழிகள் -பூர்த்தி செய்யுங்கள்
………….. இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வேணும்.
………… இடக் காகம் கண்டு களிக்க.
………….. கூவுகிறான்.
XXXX
8.குயில் பாட்டு எழுதிய தமிழ்க் கவிஞன் யார் ?
XXXX
9.குயில் என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தியவர் யார் ?
XXXX
10.குயிலுக்குள்ள தமிழ், ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்ன ?
XXXX


விடைகள்
1.काकः कृष्णः पिकः कृष्णः कः भेदः पिककाकयो ।
वसंत समये प्राप्ते काकः काकः पिकः पिकः ।
காகமும் கருப்பு குயிலும் கருப்பு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்
வசந்தகாலம் வந்துவிட்டால் காகம் ரகம்தான் ; கையில் குயில்தான்
வசந்த காலம் வந்துவிட்டால் காகம் கரையும்; குயில் கூவும் ; அப்போது சாயம் வெளுத்துவிடும்!
XXXX
2.குயிலுக்கு முட்டையிடத் தெரியும் ஆனால் முட்டையை அடைகாத்து குஞ்சசுபொரிக்கத் தெரியாது .ஆகையால் காக்கையின் கூட்டில் முட்டையிடும். காக்கைக்கு வேறுபாடு தெரியாதாகையால் அதை காக்கும் ; குஞ்ச்சுகள் வெளியே வந்தபோதுதான் குரல் ஓசை வித்தியாசத்தால் உண்மை வெளிப்படும்; நிறத்தைப் பொறுத்தமட்டில் இரண்டும் கருப்புதான்.
xxxx
3.சரோஜினி சட்டோபாத்தியாயா என்ற வங்காளி பிராமணப் பெண் கவிஞர்; பின்னர் முத்யாலா கோவிந்தராஜுலு நாயுடுவைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டதால் சரோஜினி நாயுடு என்று அழைக்கப்பட்டார். சுதந்திர போராட்ட தியாகி; கவிதைகள் இயற்றியதால் இந்தியாவின் கவிக்குயில் என்று அவரை அழைத்தனர்.
XXXX
4.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் சுமார் 35 இடங்களில் குயில் பற்றிக் கவிஞர்கள் பாடியுள்ளனர்
XXXX
5.மாணிக்க வாசகர்
XXXX
6.குயில் கூவும் .
xxxx
7.குயில் போலப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வேணும்.
குயில் முட்டை இடக் காகம் கண்டு களிக்க.
குயிலைப் போலக் கூவுகிறான்.
XXXX
8.தேசீய கவி சுப்பிரமணிய பாரதியார்.
XXXX
9.பாரதிதாசன் ; பின்னர் தேச விரோதக் கருத்துக்கள் காரணமாக தடை செய்யயப்பட்டது .
XXXX
10.கோகிலம் ,களகண்டம், கோரகை , பிகம், பரபுட்டம் அந்நியம்
—subham—
Tags- குயில் பத்து, குயில் பாட்டு, கோகிலம்