முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 9 (Post No. 13,017)

உத்தாமணி

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,017

Date uploaded in London – –   18 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Part 9 

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார் 

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

சென்ற பகுதியில் 80  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

 xxx

81 .பித்த சுரத்திற்கு

ஈச்சங்குத்து- வெட்டிவேர்- கோவைக்கிழங்கு -விளாமிச்சம் வேர்- வில்வம் வேர்- சித்தாமுட்டி-  தாமரைக்கிழங்கு- சந்தனத்தூள்- இலுப்பைப்பூ- இவை சமன்கொண்டு இரண்டுபடி தண்ணீர் வைத்து கால்படியாக கிஷாயம் வடித்து இருவேளை கொடுக்க எப்படிப்பட்ட பித்தமும் சாந்தியாகும்; சுரம் தணியும்

XXXXX

82.கண் சதை வளர்த்திக்கு

ஈருள்ளியும் குறிஞ்சாநிலையும் சமயிடை எடுத்து சிதைத்து கண்ணில் 4-5 துளி பிழியவும். இப்படி இரு இரண்டோரு  வேளை பிழியத் தீரும்.

XXXX

83 .வைசூரியினால் மலஜலம்காட்டினால்

ருள்ளி- கற்கண்டு- வகைக்கு விராகனிடை 5 இவை இரண்டும் அரைத்து அரைக்கால் படி  ஆமணக்கெண்ணெயில் கலக்கி  கொஞ்சம் கொஞ்சம் உட்கொண்டு வந்தால் மலஜலக்கட்டு உப்பிசம் இவை தீரும்

XXXX

84 .கணக்கழிச்சலுக்கு

ஈருள்ளி பத்து திரி – கருவேப்பிலை ஈர்க்கு- ஒரு  பிடி – சீரகம் விராகநிடை  1 வெந்தயம் விராகநிடை 2 – இவைகளை வறுத்துக் கிஷாயம் வைத்துக் கொடுக்கவும் தீரும்

XXXX

85 . வைசூரியினால் ரத்த பேதி கண்டால்

ஈருள்ளியை ஆவின் நெய்யில் வேகவைத்துக் கொடுத்தால் நிவர்த்தியாகும் .தேக திடமறிந்து 3-4 வேளை வரை நிதானமாய் கொடுக்கவேண்டியது .

இதுவுமது

ஈருள்ளிச்சாறும் பசு நெய்யும் சமனாய்க் கலந்து வீசம்படி வீதம் மூன்று பொழுது கொடுத்தால் , கடுப்பு- இரத்தம்- சீதம் இவை நிவர்த்தியாகும்

XXXX

86 . க்ஷயத்திற்கு

ஈனாத எருமைக்கிடாவின் சாணிப்பாலை வடிகட்டி ஆவின் பாலும் நெய்யும் சமன் கலந்து அரைக்கால்படி வீதம் அந்தி சந்தி கொடுத்துவர தீரும். க்ஷயம் 96 -ம்  சாந்தியாகும் . பத்தியம் புளி தள்ளவும் .

XXXX

87 .நேத்திரபேதி

ஈனாத எருமை சாணிப்பாலில் சித்தாமணக்குப் பருப்பை இழைத்து கண்ணில் தடவ துர்நீர் யாவும் நீங்கிவிடும்; நேத்திரம் சுத்தியாகும்

XXXXX

உ 

88 .ஆமைகணத்துக்கு 

உத்தாமணி – பாவட்டை- காவட்டை- சங்கு- முருங்கை- துனா- பொடுதலை — இவைகளின் ஈர்க்கு வகைக்கு ஒரு  பிடியிடித்து  ஒரு படி தண்ணீர் விட்டு- ஓமம் -திப்பிலி- வசம்பு- ஆமையோடு- கருஞ்  சீரகம் – ஓர் நிரையாய் அறைத்து துணியில் முடிந்து கூடப்போட்டு எட்டொன்றாய் வற்றக்காய்ச்சி மேற்படி மருந்தையெடுத்து அந்த கிஷாயத்தினால் அறைத்து கழச்சிக்காயளவு மூன்று வேளை கொடுத்துவர தீரும்.

இதுவுமது

உத்தாமணிக் கொழுந்து- வசம்பு- உள்ளி– விளாம் ஓடு –ஓமம்- ஆமையோடு- வகைக்கு  இருகளஞ்சி எடுத்து இடித்து வறுத்து  விளாங்காய்ப் பிரமாணம் வெண்ணெயில் போட்டுக் காய்ச்சிக் கொடுக்கத் தீரும் .

இதுவுமது 

உத்தாமணி- சங்கு- தூதுவளை- கொடும்பை – இவைகளின் வேர் வகைக்கு ஒரு பிடி நறுக்கி ஒரு படி தண்ணியில் போட்டு பொடுதலை- ஓமம்- திப்பிலி- வசம்பு- மிளகு- பூண்டு- ஆமையோடு ஓர் நிறையாய்  இடித்து துணியில் முடிந்து போட்டுக் காய்ச்சி மேற்படி மருந்தை அறைத்துக் கொடுத்து வந்தால் ஆமை கணம் சுரம் தீரும் .

XXXXX

89.பிள்ளைகள் கழிச்சல் வாந்திக்கு

உத்தாமணிச் சாறு- எருமை வெண்ணெய் – வகைக்கு கால் படி- கருஞ்சீரகம்-  ஒரு களஞ்சி அறைத்துப் போட்டு காய்ச்சி மேற்படி மருந்தை  அறைத்துக் கொடுத்துவரத் தீரும் .

XXXX

90 .மாந்தக் கழிச்சலுக்கு

உத்தாமணி வேளை, நாய் வேளை, குப்பைமேனி -இவைகளைத் தட்டி  சாறு வாங்கி துட்டு இடை உள்ளுக்குள் கொடுத்து மேலுக்கு துவாலையிடவும்

சுபம்—

Tags- உத்தாமணி, முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்-, part 9

Leave a comment

Leave a comment