ஜரா சாம்னே தோ ஆவோ சலியே! (Post No.13,028)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.028

Date uploaded in London – — 22 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜரா சாம்னே தோ ஆவோ சலியே! 

ச.நாகராஜன் 

ஹிந்தி திரைப்படப் பாடல்கள் மக்கள் அனைவரையும் கவர்ந்த அந்தக் காலத்தில் ஓர் பாடல்!

எழுதியவர் கவிஞர் பரத் வியாஸ்.

படம் : ஜனம் ஜனம் கே பேரே (Janam Janam Ke Phere)

1957ஆம் ஆண்டு வெளி வந்த படம்

பாடியவர்கள் : முஹம்மத் ரஃபி, லதா மங்கேஷ்கர்

இசை அமைத்தது : எஸ்.என். த்ரிபாதி


பாடல் இது தான்:

 ज़रा सामने तो आओ छलिये

छुप छुप छलने में क्या राज़ है

यूँ छुप ना सकेगा परमात्मा

मेरी आत्मा की ये आवाज़ है

ज़रा सामने …

हम तुम्हें चाहे तुम नहीं चाहो

ऐसा कभी नहीं हो सकता

पिता अपने बालक से बिछुड़ से

सुख से कभी नहीं सो सकता

हमें डरने की जग में क्या बात है

जब हाथ में तिहारे मेरी लाज है

यूँ छुप ना सकेगा परमात्मा

मेरी आत्मा की ये आवाज़ है

ज़रा सामने …

प्रेम की है ये आग सजन जो

इधर उठे और उधर लगे

प्यार का है ये क़रार जिया अब

इधर सजे और उधर सजे

तेरी प्रीत पे बड़ा हमें नाज़ है

मेरे सर का तू ही सरताज है

यूँ छुप ना सकेगा परमात्मा

ஜரா சாம்னே தோ ஆவோ சலியே

சுப் சுப் சல்னே மே க்யா ராஜ் ஹை

யூ சுப் நா சகே கா பரமாத்மா

மேரி ஆத்மா கி யே ஆவாஜ் ஹை

ஹம் தும்ஹே சாஹோ தும் நஹி சாவோ

ஐஸா கபி நஹி ஹோ சக்தா

பிதா அப்னே பாலக் சே பிசுட் சே

சுக் சே கபி நஹி சோ சக்தா

ஹமே டர்னே கே ஜக் மே க்யா பாத் ஹை

ஜப் ஹாத் மே திஹாரே மேரி லாஜ் ஹை

யூ சுப் நா சகேகா பரமாத்மா

மேரி ஆத்மா கி யே ஆவாஜ் ஹை

ப்ரேம் கீ ஹை யே ஆக் சஜன் ஜோ

இதர் உடே அவுர் உதர் லகே

ப்யார் கா ஹை யே கரார் ஜியா அப்

இதர் சஜே அவுர் உதர் சஜே

தேரி ப்ரீத் பே படா ஹமே நாஜ் ஹை

மேரே சர் கா து ஹீ சர்தாஜ் ஹை

யே சுப் நா சகேகா பரமா

zaraa saamane to aao chhaliye

chhup chhup chhalane me.n kyA rAz hai

yU.N chhup nA sakegA paramAtmA

merI AtmA kI ye AvAz hai

zarA sAmane …

ham tumhe.n chAhe tum nahI.n chAho

aisA kabhI nahI.n ho sakatA

pitA apane bAlak se bichhu.D se

sukh se kabhI nahI.n so sakatA

hame.n Darane kI jag me.n kyA bAt hai

jab hAth me.n tihAre merI lAj hai

yU.N chhup nA sakegA paramAtmA

merI AtmA kI ye AvAz hai

zarA sAmane …

prem kI hai ye Ag sajan jo

idhar uThe aur udhar lage

pyAr kA hai ye qarAr jiyA ab

idhar saje aur udhar saje

terI prIt pe ba.DA hame.n nAz hai

mere sar kA tU hI saratAj hai

yU.N chhup nA sakegA paramAtmA

merI AtmA kI ye AvAz hai

zarA sAmane …

கவிஞர் பரத் வியாஸ் 1918ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி பிகானீரில் புஷ்கரண பிராமணர் வகுப்பில் பிறந்தார். கல்கத்தாவில் பி.காம். தேர்வில் வெற்றி பெற்ற அவர் பம்பாய்க்கு வந்தார். 1943இல் துஹாய் என்ற படத்திற்கு முதன்முதலாக பாடலை எழுதினார்.

சுத்தமான ஹிந்தியில் பாடலை எழுதும் கவிஞர் அவர். 1941இல் ஆரம்பித்த அவரது கவிதா பிரவாகம் 1980 வரை நீடித்தது.

சதி சாவித்திரி, மஹரிஷி துளஸி உள்ளிட்ட ஆன்மீகப்படங்கள் அவர் பெயரை என்றும் சொல்லும்.

யே மாலிக் தேரே பந்தே ஹம் என்ற புகழ் பெற்ற பாடலையும் ஆதா ஹை சந்த்ர மா ராத் ஆதி பாடலையும் யாருமே மறக்க முடியாது.

ஹிந்தி படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

ஜரா சாம்னே தோ ஆவோ சலியே என்ற அவரது இந்தப் பாடலை ஒட்டிய உருக்கமான சம்பவம் ஒன்று உண்டு.

. சியாம் சுந்தர் வியாஸ் என்று பரத் வியாஸிற்கு ஒரு மகன். ஒரு நாள் ஏதோ ஒரு காரணமாக பரத் வியாஸ் பையனை கடிந்து கொண்டார்.

அவ்வளவு தான், கோபமடைந்த பையன் வீட்டை விட்டு வெளியேறினான்.

ஒரு நாள், இரண்டு நாள், ஒரு மாதம் என நாட்கள் ஓடின. பையன் வீடு திரும்பவில்லை.

பரத் வியாஸும் அவர் மனைவியும் சோகத்தால் துடித்தனர்.

இந்த சோகம் அவரது கவித்வத்தையும் பாதித்தது. படத்திற்கு பாடல் எழுதுவதையே நிறுத்தி விட்டார்.

எவ்வளவோ பேர் ஆறுதல் கூறி பாடல்களை மீண்டும் எழுதுமாறு கூறினர். அவர் மறுத்து விட்டார்.

ஒரு நாள் சுபாஷ் தேசாய் மற்றும் மன்மோகன் தேசாய் ஆகிய இருவரும் அவரை சந்தித்து தாங்கள் எடுக்கப்போகும் ஜனம் ஜனம் கே பேரே என்ற படத்திற்கு பாடல் எழுதுமாறு வேண்டினர்.

அவரது சகோதரரும் மனைவியும் பரத் வியாஸை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர்.

உள்ளத்தில் இத்தனை நாளும் இருந்த சோகம் கவிதை வடிவத்தில் பொங்கியது.

என் கண் முன்னால் வரமாட்டாயா?. உன் மேல் எனக்கு எவ்வளவு பிரியம், உன்னைப் பிரிந்ததால் உறக்கமே வரவில்லையே என புலம்பலாகப் பாடினார்.

ஆனால் பையன் வரவில்லை.

இந்தப் பாடல் ஆன்மீக தாபத்தை எழுப்புவதாக எண்ணிய பக்தர்கள் இதை ஆன்மீகப் பாடல் வரிசையில் சேர்த்து விட்டனர்.

அடுத்து ராணி ரூப்மதி என்ற திரைப்படம் வந்தது.

அதில் திரும்பி வாயேன் என்ற பாடலை எழுதினார் அவர்.

song lyric from Rani Rupmati.

Laut ke aa
Laut ke aa
Laut ke aaja
Aa laut ke aaja mere meet
Aa laut ke aaja mere meet
Tujhe mere geet bulate hain
Aa laut ke aaja mere meet
Tujhe mere geet bulate hain
Mera soona padha re sangeet
Mera soona padha re sangeet
Tujhe mere geet bulate hain
Aa laut ke aaja mere meet

Barse gagan mere barse nayan
Dekho tarse hai man ab to aaja
Barse gagan mere barse nayan
Dekho tarse hai man ab to aaja
Sheetal pavan yeh lagaye agan
O sajan ab to mukhada dikha ja
Toone bhali re nibhai preet
Toone bhali re nibhai preet
Tujhe mere geet bulate hain
Aa laut ke aaja mere meet

Ek pal hai hasna ek pal hai rona
Kaisa hai jeevan ka khela
Ek pal hai hasna ek pal hai rona
Kaisa hai jeevan ka khela
Ek pal hai milna ek pal bichhadna
Duniya hai do din ka mela
Tujhe mere geet bulate hain
Mera soona padha re sangeet
Mera soona padha re sangeet
Tujhe mere geet bulate hain
Yeh ghadi na jaye beet
Tujhe mere geet bulate hain
Aa laut ke aaja mere meet
Aa laut ke aaja mere meet.

எனது அன்பே, திரும்பி வா.

எனது பாடல்கள் உன்னை அழைக்கின்றன!

எனது பாடல் வெறுமையாகி விட்டது, தனிமையாக இருக்கிறது!

ஓ, வானம்  மழையைப் பொழிகிறது, ஓ, பாரேன், திரும்பி வா!

ஒரு நாள் சிரிக்கிறோம், இன்னொரு நாள் அழுகிறோம்.

இந்த உலகமே இருநாள் நடக்கும் உற்சவம் தான்!

ஒரு நாள் சேர்வோம், இன்னொரு நாள் பிரிவோம்.

ஆ, திரும்பி வாயேன், என்னை வந்து பாரேன்!

உன்னை எனது கீதம் அழைக்கிறது!

உருக்கமான பாடல்!

என்ன நடந்தது?

12 வருடங்களுக்குப் பிறகு பையன் திரும்பி வந்தான்; தந்தை தாயைப் பார்த்தான், குடும்பத்துடன் சேர்ந்தான்.

பம்பாய் வாழ்க்கை பிடிக்காமல் போன பரத் வியாஸ் சில காலம் சென்னையில் வசித்தார்.

64வது வயதில் 1982ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி  அவர் மறைந்தார். அவரது இறுதிக் காலத்தில் ராமாயணத்தை கவிதா வடிவத்தில் உருவாக்கிக் கொண்டிருந்தார்.

மறக்க முடியாத ஒரு  கவிஞர் பரத் வியாஸ்! அவரது பாடல்கள் காலத்தை வென்று இன்றும் நிலைத்து நிற்கின்றன.

(பாடல்கள் அனைத்தையும் யூ டியூபில் கேட்கலாம்)

***

Leave a comment

Leave a comment