WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.106
Date uploaded in London – — 19 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரு வரி சுபாஷிதங்கள்
கோதி பார: சமர்தானாம்?
ச.நாகராஜன்
அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ள சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் மேலும் சில இதோ:
1. ஹஸன்னபி ந்ருபோ ஹந்தி மான்யன்னபி துர்ஜன: |
அவன் சிரித்தாலும் கூட அரசன் அவனைக் கொன்று விடுவான். ஒரு ரௌடி கூட நமக்கு மரியாதை காட்டிக் கொண்டே அதே மாதிரி செய்து விடுவான்.
2. ஹாஸ்யாத்ருதே கிமன்யத்ஸ்யாததிலௌல்யவதாம் பலம் |
அலைபாயும் மனமுள்ளவனுக்கு விளைவும் விசித்திரமாகத்தான் இருக்கும்.
3. ஹிதம் மனோஹாரி ச துர்லபம் வச: |
மகிழ்ச்சியை அளித்து ஒருவரைக் கவரக் கூடிய வார்த்தைகள் துர்லபம் தான்.
4. ஹேலா ச்யாத்கார்யநாஷாய புத்திநாஷாய நிர்தனம் |
விளையாட்டு குறிக்கோளை நாசம் செய்யும். வறுமையானது புத்தியை நாசம் செய்யும்.
5. ஹ்ரோகோ குண: கலு நிஹந்தி சமஸ்ததோஷான் |
ஒரு நல்ல குணமானது அனைத்து குற்றங்களையும் நீக்கி விடும்.
6. ஏகஸ்சார்தான்ன சிந்தயேத் |
செல்வத்தைப் பற்றி ஒருவன் சிந்திக்கக்கூடாது.
7. ஏகா க்ரியா த்வயர்தகாரி ப்ரசித்தா |
ஒரே ஒரு செயலானது இரண்டு விஷயங்களை நடத்தி விடும்.
8. ஏததேவ ஹி பாண்டித்யம் யதாயான்னாதிகோ வ்யய: |
வருவாய்க்கு அதிகமாகச் செலவழிக்கக் கூடாது என்பது (சாதாரண) உலகியல் அறிவாகும்.
9. கன்யானாம் மஹத் துக்கம் திகஹோ மஹதாமபி |
பெரிய மனிதர்கள் கூட கன்னிப் பெண்களை பெரும் சுமையாகவே கருதுகிறார்கள்.
10. கரதலகதமபி நஷ்யதி யஸ்ய ஹி பவிதவ்யதா நாஸ்தி |
ஒருவனுக்கு நல்ல விதி இல்லையென்றால் கையில் இருப்பது கூட நழுவி விடும்.
11. கர்ம சமஸ்தம் குரு சோத்சாஹம் |
உற்சாகத்துடன் ஒருவன் வேலை முழுவதையும் செய்ய வேண்டும்.
12. காதரா ஏவ ஜல்பந்தி யத்பாவ்யம் தத்பவிஷ்யதி |
நடப்பது என்னவானாலும் நடக்கட்டும் என்று பலஹீனனே கூறுவான்.
13. காமம் வ்யசனவ்ருக்ஷஸ்ய மூலம் துர்ஜனசங்கதி: |
துன்பம் என்ற மரத்தின் அடியானது நிச்சயமாக துர்ஜனங்களோடு சகவாசம் கொள்வதேயாம்.
14. கார்யகாலே யதா சக்தி குர்யான்னது விசாரயேத் |
சோதனைக்காலம் வரும் போது ஒருவன் அதிகம் சிந்திக்காமல் தனது வலிமை எவ்வளவோ அவ்வளவைக் கொண்டு செயல்பட வேண்டும்.
15. கிஞ்சித்காலோபபோக்யாநி யௌவனானி தனானி ச |
இளமையும் செல்வமும் எல்லைக்குட்பட்ட காலத்தில் மட்டுமே அனுபவிக்க முடியும்.
16. கிம் தூரம் வ்யவசாயினாம் |
தொழில் முனைப்புள்ளவனுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல.
17. கிமப்யாஸே ஹி துஷ்கரம் |
ஒருவன் மறுபடியும் ஒரு செயலைச் செய்ய விழைந்து விட்டான் எனில் எதுவுமே முடியாதது கிடையாது.
18. குபுத்ரோ ஜாயேத் க்வசிதபி குமாதா ந பவதி |
ஒரு கெட்ட பிள்ளையைப் பெறலாம் ஆனால் ஒரு கெட்ட தாயாரை பெற்று விடக் கூடாது.
19. க்ருதந்தே நாஸ்தி நிஷ்க்ருதி: |
நன்றி கெட்டவனுக்கு விடுதலையே கிடையாது.
20. க்ருஷே கஸ்யாஸ்தி சௌஹ்ருதம் |
பலமற்றவனுடன் எந்த ஒருவன் தான் நட்பு கொள்ள முடியும்?
21. கைரஜீர்ணபயாத் ப்ராத போஜனம் பரிஹீயதே |
ஓ! சகோதரா! ஜீரணமாகாது என்ற பயத்தினால் எவன் தான் சாப்பாட்டை தவிர்ப்பான்?
22. கோதிபார: சமர்தானாம் |
சமர்த்தனுக்கு எது தான் அவனது திறனைத் தாண்டி இருக்க முடியும்?
23. கோ ந யாதி வஷம் லோகே முகே பிண்டேன பூரித: |
ஒரு கவளம் உணவு வாயை நிரப்பி விட்டால் எவன் தான் தூண்டப்படாமல் இருப்பான்?
24. கோ ஹி ஸ்வார்தமுபேக்ஷதே |
எவன் தான் சொந்த லாபத்தை புறக்கணிப்பான்?
25. க்வாபி ந கச்சேத்நாஹூத: |
துணையின்றி ஒருவர் எங்கும் செல்லக்கூடாது.
**