My Research Notes on V C -3 Three things are Rare! (Post No.13,408)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,408

Date uploaded in London – 4 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

VC= Viveka Chudamani

Let us see what Bharatiyar, Tiru Valluvar and Tirumular say!

दुर्लभं त्रयमेवैतद्देवानुग्रहहेतुकम् ।
मनुष्यत्वं मुमुक्षुत्वं महापुरुषसंश्रयः ॥ ३ ॥ -Viveka Chudamani (V C )

durlabhaṃ trayamevaitaddevānugrahahetukam |
manuṣyatvaṃ mumukṣutvaṃ mahāpuruṣasaṃśrayaḥ || 3 ||

3. There are three things which are rare indeed and are due to the grace of God –namely, a human birth, the longing for Liberation, and the protecting care of a perfected sage.

Rare Three: Human Birth, Longing for Liberation and Guru’s grace

लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं
तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम् ।
यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः
स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात् ॥ ४ ॥

labdhvā kathaṃcinnarajanma durlabhaṃ
tatrāpi puṃstvaṃ śrutipāradarśanam |
yastvātmamuktau na yateta mūḍhadhīḥ
sa hyātmahā svaṃ vinihantyasadgrahāt || 4 ||

4. The man who, having by some means obtained a human birth, with a male body and mastery of the Vedas to boot, is foolish enough not to exert himself for self-liberation, verily commits suicide, for he kills himself by clinging to things unreal.

After getting the Rare Three, Don’t Cling to Unreal; that amounts to suicide.

इतः को न्वस्ति मूढात्मा यस्तु स्वार्थे प्रमाद्यति ।
दुर्लभं मानुषं देहं प्राप्य तत्रापि पौरुषम् ॥ ५ ॥

itaḥ ko nvasti mūḍhātmā yastu svārthe pramādyati |
durlabhaṃ mānuṣaṃ dehaṃ prāpya tatrāpi pauruṣam || 5 ||

5. What greater fool is there than the man who having obtained a rare human body, and a masculine body too, neglects to achieve the real end of this life?

You are a Fool, if you don’t use your Rare Things

xxx

TIRUMULAR in TIRU MANTHIRAM

Tamil saint of eighth century CE, Tirumular also said it:

2090 Human Birth is Rare; Yet They Seek Not Lord’s Feet

Rare is human birth,

Yet they seek not Lord’s Feet,

So rare to reach;

They attained the rare human birth,

Yet missed this Treasure Rare,

They are but crawling creatures, indeed.

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்

பெறுதற்கு அரிய பிரானடி பேணார்

பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்

பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 

2089 They Pursue not the Way of Bliss

Born in bliss, grown in bliss

Steeped in thoughts of bliss

This way, they forget;

Instead,

Hankering after food and raiment

In sorrow steeped they are;

And in sorrow steeped, they insensible slumber.

2089. இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து

இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து

துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று

துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. 6

xxxx

Valluvar says

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.- குறள் 2:

Transliteration(Tamil to English):

Katradhanaal aaya Payanen kol VaalaRivan
natraal Thozhaaar enin

Meaning

Learning and scholarship are of no avail if they do not lead

One to worship at the wise one’s divine feet- Tiruk Kural 2

Or

Of what avail is a man’s learning if he does not pray to God- Kural 2

Or

What use is lore, if the learned will not bow

Before the feet of Him – the All Wise One?- Kural 2

0r

No fruit have men of all their studied lore,
Save they the ‘Purely Wise One’s’ feet adore- Kural 2

xxxx

Krishna in Bhagavad Gita says

Bhagavad Gita 2-61

तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्पर: |
वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता || 2-61||

tāni sarvāi sanyamya yukta āsīta mat-para
va
śhe hi yasyendriyāi tasya prajñā pratihhitā

BG 2.61: They are established in perfect knowledge, who subdue their senses and keep their minds ever absorbed in Me.

xxxx

Subrahmanya Bharati says

Bharatiyar, Greatest of the Tamil Poets of Modern Age, sang about Liberation from British Rule. The same poem fits very well in the Liberation of Soul:

Liberty

Those that set their brave hearts on liberty

Will they take aught else thereafter?

Thirsting for the nectar of Gods,

Would they think of today?- 1

Dharma alone lives; All else is transient.

Those that have seen this truth,

Would they seek to live thereafter

In servitude dishonourable? – 2

Everyone that is born must surely dies;

Those that have realised this law,

Would they deem to pleasure to live,

Disregarding honour and duty? – 3

To be born as man is rarest privilege:

Those that have realised this truth;

Would they agree to enslave their souls,

Even if their bodies be thrown into fire?- 4

Would you barter the sun that shines in the sky

For a glow worm to play with?

Losing freedom dearer then eyesight

Can you live in servitude bowing? – 5

Thinking to enjoy comforts

Would you give up freedom?

is it not foolish to buy a picture,

selling both your eyes for the price? – 6

Having said Vande Matarm and bowed to the Mother

Can you offer worship to Maya?

How can you ever forget that Vande Matarm

Is the true song of salvation? – 7

Translated by C Rajagopalachariar (Rajaji, First Governor General of India)

(maayaa= illusion, unreal)

My comments

Bharatiyar was influenced by the Upanishads and teachings of Sri Adi Sankara. He himself praised Sankara in another poem.

Personal note:

My father V Santanam, News Editor of Dinamani, Madurai was arrested by the British police in Madras during the Independence Struggle. My mother used to tell us, he along with other freedom fighters, went in procession along the Mount Road Madras, singing this song Veera Suthanthiram………. When the police found a note on my father that ‘Kill the British Rulers’, he was arrested in Marina Beach and sent to Vellore Jail. He was there with Freedom fighter K Kamaraj for six months. India became free in 1947. in the 1960s when Kamaraj came to Madurai , he wrote two lines on a paper saying that Thiru Santanam was with me in Vellore Jail. When it was shown to the Collector of Madurai , he gave my father a copper plate meant for Thyaagis. That enabled my father to get a monthly pension for freedom fighters. After my father’s death my mother received the pension. After her death my sister is receiving it till this day.

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ?-என்றும்

ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்

அறிவைச் செலுத்துவாரோ? (வீர)

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்எவறும்

கொய்யென்று கண்டா ரேல்-அவர்

இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு

இச்சையுற் றிருப்பாரோ? (வீர)

பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்

பெற்றியை அறிந்தா ரேல்-மானம்

துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது

சுகமென்று மதிப்பாரோ? (வீர)

மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்

வாய்மையை உயர்ந்தா ரேல்-அவர்

ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற

உடன்படு மாறுள தோ? (வீர)

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்

மின்மினி கொள்வா ரோ?

கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்

கைகட்டிப் பிழைப்பா ரோ? (வீர)

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்

மாண்பினை யிழப்பாரோ?

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்

கைகொட்டிச் சிரியாரோ! (வீர)

வந்தே மாதரம் என்று வணங்கியபின்

மாயத்தை வணங்குவ ரோ?

வந்தே மாதரம் ஒன்றே தாரகம்

என்பதை மறப்பாரோ? (வீர)

 —பாரதியார்

To be contined…………………….

Tags- Research Notes, Viveka Chudamani, Part 3, Human birth, Bharati, Tirumular, Valluvar, Veera Suthanthiram song, My father, V Santanam, Vellore Jail, K Kamaraj

வடக்கில் அடங்கிய வையகம்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 32 (Post No.13,407)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,407

Date uploaded in London – 4 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 32

ஒரு அதிசயத்தை நீங்களே காணலாம். தேசப்பட வரைபடத்தை எடுங்கள் ‘ அதை உற்று நோக்குங்கள். எல்லா கண்டங்களும் கீழே செல்லச் செல்ல குறுகிக் கொண்டே போகும். தலை கீழ் முக்கோண வடிவில் செல்லும். மேலே, அதாவது வடபகுதி முழுதும், நிலப்பரப்பும் தென் பகுதி முழுதும் கடலும் இருக்கும்! ஏன் ? எந்த என்சைக்ளோபீடியாவிலும் பதில் இராது .

காம்பஸ் என்னும் திசை அறியும் கருவியை எடுங்கள். அதன் முள் எப்போதும் வடதிசையையே காட்டிக்கொண்டு இருக்கும். ஏன் கிழக்கு திசையைக்  காட்டக்கூடாது ? அதுவல்லவோ சூரியன் உதிக்கும் முக்கிய திசை?

தொல்காப்பியம் புஸ்தகத்தை எடுங்கள் . தமிழ்நாட்டின் எல்லையைச் சொல்லவந்த பாயிரம் வட வேங்கடம் முதல் தென் குமரி ……………………………. என்கிறது. ஏன் தென் குமரி முதல் வட வேங்கடம் என்று சொல்லவில்லை.?

புறநானூற்றை எடுங்கள்.  வடக்கிலுள்ள இமயம் முதல் குமரி வரையே பாடுகின்றனர் . ஏன் தெற்கேயுள்ள குமரி முதல் இமயம் வரை என்று சொல்லவில்லை ? இந்தக் கேள்வியை எழுப்பி அதற்குப் பதிலையும் கொடுத்து இருக்கிறார்கள் பழைய உரைகாரர்கள்

வீட்டில் அம்மாவும் பாட்டியும் வடக்கே தலை வைத்துப்  படுக்காதே என்று குழந்தைகளைத் திட்டுவது ஏன்?

மாடுகள் மேயும் போது வட தென் திசையாக மட்டும் நின்று மேய்வது ஏன் ?

கடைசி கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது மாடுகளின் தலையில் காந்தம்  இருப்பதால் அதுவும் காம்பஸ் போல இயங்குகிறது  (இது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை விஞ்ஞானப் பத்திரிக்கையிலிருந்து எடுத்து இங்கு வெளியிட்டேன்)

எல்லா வற்றுக்கும் சுருக்கமான பதில் : வட திசையில்  உள்ள காந்த சக்தியே . அது சரி. கண்டங்கள் பிரிந்தது பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர். அவை ஏன் வடக்குப் பக்கம் அதிகம் சென்று தெற்குப்பக்கத்தைக் கடலுக்கு ஒதுக்கியது ? யாருக்கும் விடை தெரியாது

இதெல்லாம் திருமூலருக்கு தெரிந்திருக்கிறது. அவர் அலுத்துக் கொள்கிறார் :

ஏனப்பா ! எப்போது பார்த்தாலும் வடக்கு வடக்கு ; அதுதான் புண்ணிய திசை என்று கதைக்கிறீர்கள் ? இறைவனை நாடுவோனுக்கு எல்லா திசையும் ஒன்றுதான். இறைவன் இல்லாத இடம் ஏது? என்ற தொனியில் பாடுகிறார்.

இதில் நான் கவனித்த முக்கிய விஷயம் வடக்கில் அடங்கிய வையகம்  என்ற வரிதான்.

வடக்கிலுள்ள புனித  இமய மலை , வடக்கிலுள்ள கேதார்நாத், கைலாஷ், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி  என்றெல்லாம் சொல்லாமல் வையகம் என்று சொல்கிறார். அதாவது நிலப்பரப்பு அங்கே அதிகம் என்பதை உணர்ந்து, கண்ணால் பார்த்து, வையகம்= பூமி என்ற சொல்லைப் போட்டுப் பாடி இருக்கிறார்.

வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!

வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!

ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே

சூழ்க! வையகமும் துயர் தீர்கவே! — சம்பந்தர்   1

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு இது. சம்பந்தர் பாடிய இந்த தேவார பாடலில் வையகம் வருகிறது; அதாவது இந்த பூமியில் உள்ள எல்லோரும் சுகமாக வாழவேண்டும்.. வையகம் என்பது பெரு நிலப்பரப்பு மற்றும் அதில் வாழும் மக்களி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,க் குறிக்கும்

திருமூலர் எப்படி தேச வரைபடத்தை — உலக அட்லஸை WORLD ATLAS  பார்த்தார்? எப்படி அவருக்கு நிலப்பரப்பு வடக்கில் அதிகம் இருப்பது தெரிந்தது? 1200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கையில் உலக வரைபடம் ATLAS  இருந்ததா?

இருந்தது ; அதுவெள்ளைக்காரர்களுக்குத் தெரியாததால் அவன் கண்டுபிடித்தான், இவன் கண்டு பிடித்தான் என்று எழுதிவிட்டு 1600 ஆம் ஆண்டு படத்தை மட்டும் போடுகிறார்கள். திருமூலரோ நமக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் .!

எது எப்படியாகிலும் போகட்டும்.. வடக்கு நோக்கி நிலப்பரப்பு சென்ற  ஏன் என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை


வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானம் இல்லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.

தென்னாட்டிலுள்ள சிறப்புகள் பலவும் நிறைய மக்களுக்குத் தெரிவதில்லை .இத்தகையோரே சிவஞானமில்லாதவராவர். வடக்கின்கண் அடங்கிய உலகமெல்லாம் அகத்தின்கண் அடங்கும். அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் என்னும் முறைமை பற்றி யாகும். அம் முறைமை திருவடியுணர்வுடையார்க்கே தெரியும். கயிலைக் காட்சியினைத் திருவையாற்றில் கண்டு திருநாவுக்கரையர் பாடியருளினர்  

சிவன்- உமை  திருமணத்தை அகத்தியர் தென்னாட்டிலேயே காண சிவன் அருள்புரிந்தார். அவருக்காக கேபிள் இல்லாத டெலிவிஷனை லைவ் LIVE TELECAST FOR AGASTYA THROUGH SATELLITE TVஆக சிவன் ஏற்பாடு செய்தார்!

 

2070 Acquire True Jnana

“North, North” they say;

Nothing there in the north is;

Northward they walk,

Of Jnana bereft;

All the world in the north,

Is in their heart contained,

For those that knowledge truly possess.

தமிழ் மன்னர்கள் வடக்கு நோக்கி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததும் அதில் பிசிராந்தையார் முதலிய  புலவர்கள் கலந்துகொண்டு உயிர்த் தியாகம் செய்ததும் புற நானூற்றில் பாடப்பட்டுள்ளது . பாண்டவர்கள் வடதிசை நோக்கி நடந்து ஒவ்வொருவராக கீழே விழுந்து இறந்த செய்தியும் யுதிஷ்டிரன் மட்டும் ஒரு நாயை அழைத்துக்கொண்டு சொர்க்கத்துக்குச் சென்ற செய்தியும் மஹாபாரதத்தில் உள்ளது. அதை திருமூலரும் பாடியதை மேலே காணலாம்

xxxx

என்னுடைய பழைய கட்டுரைகள்

வடக்கே தலை வைக்காதே!

வடக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று இந்து மத சாத்திர நூல்கள் கூறுகின்றன. சதாசாரம் என்னும் நூல் நாம் அன்றாடம் பின்பற்றவேண்டிய பழக்க வழக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. மற்ற திசைகளில் தலை வைத்துப் படுக்கலாம். இந்த சாத்திர விதிக்கு ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உண்டா என்று கேட்டால் “உண்டு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

காம்பஸ் என்னும் திசை காட்டும் கருவியை நாம் அறிவோம். அதன் ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டிக் கொண்டிருக்கும்

புல் மேயப் போகும் மாடுகளும் காட்டில் திரியும் மான்களும் ஒரே திசையை நோக்கி நின்றுகொண்டு புல் மேய்வதைக் கண்ட விஞ்ஞானிகள் ஆச்சரியப் பட்டார்கள். அவை ஏன் இப்படி நின்று புல் மேய்கின்றன என்பது நீண்ட காலமாகப் புரியாத புதிராகவே இருந்தது. இப்போழுது கூகுள் விண்கல புகைப்படங்களை வைத்து ஆராய்ந்ததில் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த மாட்டு மந்தையோ மான்கள் கூட்டமோ உயர் அழுத்த மின்சாரம் (High Voltage Pwer lines) செல்லும் கம்பிகளுக்குக் கீழாக வந்தால் இப்படி ஒரே திசையில் நிற்காமல் வெவ்வேறு திசையை நோக்கி நிற்பதும் கூகுள் படங்கள் மூலம் தெரியவந்தது. பெரும்பாலும் அவை வடக்கு தெற்கு அச்சுக்கு அணுசரனையாகவே நிற்கும். ஆனால் மின்சார கம்பிகளுக்கு 30 மீட்டருக்குக் கீழாக வந்தால் இது மாறிவிடுகிறது. இதற்கு என்ன காரணம்?

மாடுகள், மான்கள் மற்றும் வௌவால் போன்ற பல பிராணிகளின் உடலிலும் பறவைகளின் மூக்கிலும் காந்தம் (magnetite) இருப்பது தெரிகிறது. இந்த காந்த துருவங்கள் மின்சாரக் கம்பிகள் வெளிவிடும் அலைகள் மூலமாக extremely low-frequency magnetic fields” (ELFMFs) திசை மாறும் என்பது தெரிந்ததே.

பூமி என்பது மிகப் பெரிய காந்தம். இப்போது நாம் மனிதர்களை நினைத்துப் பார்ப்போம். நம் உடம்பிலும் காந்தம் இருக்கிறது. நாம் தூங்கும் போது நம்முடைய தலையை வடக்கே வைத்தால் அது நம்மை பாதிக்கும். எப்படி என்றால் தலையை காந்தத்தின் வடதுருவம் என்று வைத்துக் கொண்டால் கால்கள் தென் துருவம் ஆகும்.

இயற்பியல் படித்தவர்களுக்குத் தெரியும் “ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று தள்ளிவிடும், மாற்று துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்/கவரும்”.. (Like poles repel each other, unlike poles attract) ஆக நம் உடல் என்னும் காந்தம் வடக்கைத் தவிர எந்தப் பக்கத்தில் தலை வைத்தாலும் பாதிக்காது.

கண்டங்கள் உருவானது எப்படி?

இந்த பூமியானது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தனித்தனி கண்டமாக இல்லாமல் ஒரே நிலப் (Pangaea) பகுதியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக (Continental Drift) விலகி இப்போதைய நிலக்கு வந்துள்ளன. இன்னும் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் பார்த்தால் ஆப்பிரிக்கா ,அமெரிக்கா ஆகிய கண்டங்கள் இப்போதைய நிலையில் இருக்காது. ஆனால் உலகப் படத்தைப் பார்த்தீர்களானால் ஒரு வியப்பான விஷயத்தைக் கவனிக்கலாம். ஒரே நிலப் பரப்பு விலகி விலகி சென்றபோது ஏன் வடக்கே மட்டும் அதிக நிலப்பரப்பு (land mass) போயின? தெற்கே ஏன் அதிகம் கடற்பரப்பு (oceans) வந்தன? ஏன் எல்லா கண்டங்களும் கீழே குறுகியும் மேலே பருத்தும் இருக்கின்றன. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா ஆகிய நிலப் பரப்பைப் பாருங்கள். வடக்கில் பெரிய நிலப் பரப்பும் தெற்கில் சுருங்கி தீபகற்பமாகவும் (peninsular) இருக்கும். ஏன் இப்படி வந்தது என்றால் இதுவரை யாரும் விடை சொல்ல முடியவில்லை.

பூமியில் வடக்கில் காந்த சக்தி அதிகம் இருந்ததால் கண்டங்களை இப்படி மேல் நோக்கி இழுத்தனவா? அல்லது தன்னிச்சையாக வடக்கில் நிலப் பரப்பு கூடியதாலங்கே காந்த சக்தி அதிகரித்ததா? இதற்கு விடை கிடைத்தாலும் விடை கிடைக்காவிட்டாலும் வடக்கில் நிலப் பரப்பு குவிந்திருப்பதை யாரும் காணலாம்.

ஆக பூமி என்னும் காந்த உருண்டைக்கு மதிப்பு கொடுத்து அதனுடன் மோதாமல் இருக்க வேண்டுமானால் வடக்கைத் தவிர வேறு திசையில் தலை வைத்தும் உறங்கலாம். கிழக்கு திசையிலோ தெற்கு திசையிலோ தலைவைத்துப் படுப்பது உத்தமம்.

புனித திசை வடக்கு

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி,
    …. பிணையொடு வதியும்
    வடதிசை யதுவே வான்தோய் இமயம்-            (புற: 132)

இந்துக்களுக்கு வட திசை மீது மதிப்பும் மரியாதையும் அதிகம். கையிலாயமும் மேருவும் இருக்கும் புனித திசை அது. உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க விரும்புவோர் வட திசை நோக்கி அமர்ந்து உயிர் விடுவர். சங்க இலக்கிய நூல்கள் பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் உண்ணாநோன்பு இருந்ததை வடக்கிருத்தல் என்றே அழைப்பர். மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் வட திசைப் பயணம் நோக்கிப் பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர்விட்டதையும் படித்திருப்பீர்கள். இதை மஹா பிரஸ்தானம் என்று அழைப்பர்.

நூறாண்டுக் காலம் வாழ்க! நோய் நொடி இல்லாமல் வாழ்க என்று வேதம் கூறுகிறது (பஸ்யேம சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம், ப்ரப்ரவாம சரதஸ் சதம்). தீர்க்காயுஷ்மான் பவ:

தொல்காப்பியத்தில் வட திசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?–1 (Post.8760)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8760

Date uploaded in London – –1 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியம் என்னும்  பழந்தமிழ் நூலுக்கு — முதல் தமிழ் நூலுக்கு– பாயிரம் எழுதியவர் பனம்பாரனார் .

“வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுல   கத்து

வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்

…………………………”

இந்தப் பாயிரம் நமக்கு அரிய பெரிய செய்திகளை வழங்குகிறது.

முதல் செய்தி —

தமிழனுக்கும் சிந்து-ஸரஸ்வதி  நதி தீர நாகரீகத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. ஏனெனில் தமிழ் பேசிய பகுதிகள் தென்  குமரி முதல் வடவேங்கடம் வரைதான். திருப்பதிக்கு அப்பால் வேறு மொழிகள் வழங்கின. இதைப் பனம்பாரனார் மட்டும் சொல்லவில்லை; தொல்காப்பியத்துக்குப் பின்னர் 2000 ஆண்டுகளாக வந்த அத்தனை உரைகாரர்களும் சொல்கின்றனர் . அதுமட்டுமல்ல. 30,000 வரிகளைக் கொண்ட சங்கத் தமிழ் நூல்கள் பதினெட்டிலும் கங்கை, இமயம், அருந்ததி, சப்த ரிஷிக்கள் முதலிய குறிப்புகள் உள . ஆனால் சிந்து நதி , சமவெளி பற்றிய குறிப்பே இல்லை. சிலர் இந்தியாவின் வடமேற்கில் வசித்த யவனர் பற்ரிய குறிப்புள்ளதே எனலாம். யவனர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு. ஆயினும் இஃது ரோமானியர்களையே குறிக்கிறது என்பதை பல அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.

இரண்டாவது செய்தி

வடதிசை புனிதமானது !

கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் முதலியோர் வட திசை நோக்கி அமர்ந்து, உண்ணா விரதம் இருந்து, உயிர் துறந்ததை புறநாநூறு செப்பும்.

பாண்டவர் ஐவரும்  வட திசை நோக்கி பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர் துறந்ததை மஹாபாரதம்  செப்பும்.

வடதிசை கயிலை நோக்கி சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தி சுவாமிகள் சென்றதை பெரிய புராணம் செப்பும்.

பனம்பாரனாரும் ‘வட’வேங்கடம் என்ற சொல்லை முதலில் வைத்ததற்கு அதன் புனிதத் தன்மையே காரணம் என்று உரைகாரர்கள் புகல்வது படித்து இன்புறத்த தக்கது. அதில் இந்தியாவை அரச இலையின் வடிவத்துக்கு ஒப்பிடுவதும் இமயம் முதல் குமரி வரை புனித நிலப்பரப்பு என்று நவில்வதையும் படிக்கையில் ஆனந்தம் பொங்கும். வெள்ளைக்காரன் வந்து இந்திய ஒருமைப்பாட்டினை நமக்குக் கற்பித்தான் என்று உளறும் அரை வேக்காடுகளின் தலையின் பாறை இடி கொடுக்கும்.

இதோ உரைகாரர்களின் விளக்கம். சிவஞான முனிவரின் ‘தொல்காப்பிய விருத்தி’ நூலுக்கு திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் எழுதிய விளக்கவுரையிலிருந்து எடுக்கப்பட்டது —

1

தமிழ் நாட்டிற்கு வடக்கட் பிறவெல்லையும்  உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் . அகத்தியனார்க்குத் தமிழைச் செவி அறிவுறுத்த செந்தமிழ் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி என்பது . தெற்கட்  குமரியாறாகலின் , அதுவே எல்லையாயிற்று . கிழக்கு, மேற்கு கடல் எல்லையாகலின் , வேறெல்லை கூறா ராயினர் .

“வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத்

தென்திசை யுள்ளிட்  டெஞ்சிய மூன்றும்

வரைமருள் புணரியொடு பொருதுகிடந்த

நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண்

யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே”

என்று சிறுகாக்கைப்பாடினியார் தெற்குங் கடலெல்லை கூறியது , குமரியாறு கடல்கொண்ட பிற்காலத்துச் செய்ததென அறிக

ஈண்டு வடக்கை முற் கூறியதற்கும் , வேங்கட முதலிய இடங்களைக் குறித்தமைக்கும் ஆசிரியர்களால் காரணங்கள் தனித்தனியே  கூறப் பெறுகின்றன–

சிவஞான முனிவர் —

வேங்கடம் வடக்கின் கண்ணுள்ளது என்பதும்  குமரி தெற்கின்  கண்ணுள்ளது என்பதும் உலகறிந்ததொன்று . அவற்றைத் திசையுடன் சேர்த்து வடவேங்கடம் தென் குமரி என்றதற்குக்  காரணம் திசை கூறி எல்லை கூறுதலே முறைமையாதலின் என்க.

நச்சினார்க்கினியர் —

மங்கல மரபிற் காரியஞ் செய்வார்  வடக்கும் கிழக்கும் நோக்கியும் சிந்தித்தும் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசை முற் கூறப்பட்டது என்பர் .

(இங்கே நமக்கு ஒரு முக்கிய செய்தி கிடைக்கிறது; சுப காரியங்களை முடிவு செய்கையில் நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு முடிவு செய்ய வேண்டும்.)

அரசஞ்சண்முகனார் —

வடக்கு எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தன்னோடு ஏனைத்திசையையும் உணர்த்தற்குத் தானே காரணமாய்நிற்கும் மங்கலத் திசையாகலின்  தம்பாயிரமும் நூலும் நின்று நிலவுதல் வேண்டி முற்கூறப்பட்டது . மற்றும் என்றும் மாறாத துருவ நட்சத்திரத்தை அடையாளமாகக் கொண்டு அறியப்படுத்தலானும் இற்றைய விஞ்ஞான திசையறி கருவி எ ஞஞான்றும் வடக்கையே காட்டலானும் கூறினார்  எனவும் உரைப்பர் .

உலக வழக்கில் தென்வடல் , கீழ்மேல் எனவே எல்லை கூறும் வழி ஆடசியுண்மையானும் யாண்டும் வடக்குத்தெற்கு -மேல் கீழ் என்ற வழக்காறிண்மையானும்

“இரு திசை புணரின் ஏயிடைவருமே “

என்னும் சூத்திரத்தினும் ‘தெற்கே வடக்கு கிழக்கே மேற்கு’ என்ற வழக்குண்மையே எடுத்துக் காட்டப் பெறுதலானும் , இக்கூறிய இவைகளேயன்றிப் பிற காரணங்களும் உளவாதல் வேண்டும். . அவை – திசைகளுள்  வடக்கும் தெற்கும் பெருந்திசைகளாக, இமயம் முதல்  குமரி வரையுள்ள  நிலப்பரப்பைக் கொண்டு உணரப்பெற்று வந்தன .

‘திரிபு வேறு கிளப்பின் ‘ என்னுஞ் சூத்திரத்துக்குப் பெருந்திசைகளோடு கோணத்  திசைகள் புணரின்  என்று உரையெழுதப்பெறுவதும்  ‘பெருந்திசை’ என்ற வழக்குண்மையை வலியுறுக்கும் .

அரச இலை = இந்தியா !

இமயமுதல் குமரி வரையுள்ள நிலப்பரப்பு ஓரரசிலைபோல்வது .அதன் அடிப்பகுதி வடக்கு; அகன்று பரந்து கிடப்பது. அதன் நுனி போல நீண்டு ஒடி வளைந்த பகுதி தெற்கு. ஆதலால் அகன்று பரந்த வடபகுதியை முற்கூறி , நீண்டு பரந்த தென் பகுதியைப் பிற்  கூறினார் எனலுமாம். . காந்த மலையும் வடவைத் தீயும் இருத்தலிற் கூறினார் என்றலுமாம் .

புறநானுற்றில்  இமயம் !

இங்ஙனமே புறத்தினும்

‘வடா அது பனி படு நெடுவரை வடக்கும் – தெனாஅது  உருகெழு குமரியின் தெற்கும்’  எனவும், சிகண்டியார்

‘வேங்கடங்குமரி   தீம்புனற் பவ்வமன்று – இந்நான் கெல்லை  தமிழது வழக்கே ‘ எனவும் , காக்கைபாடினியார்

‘வடக்குந் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடங் குமரி கீழ் புனற் பவ்வமமென் – றன் நான்கெல்லை  யகவயிற் கிடந்த நூல் ‘ எனவும் வழங்குதலான் உணர்க.

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி,
    …. பிணையொடு வதியும்
    வடதிசை யதுவே வான்தோய் இமயம்-            (புற: 132)

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் நச்சி. சொல்லும் ஒரு அரிய செய்தி எகிப்திய நாகரீகத்திலும் உள்ளதைக் காண்போம்.

–subham– 

tags– வட திசை, வடவேங்கடம், தென்குமரி, மாடுகள், வடக்கே, தலை வைக்காதே, புனித திசை , வையகம், ஆராய்ச்சிக் கட்டுரை 32, திருமந்திரம், திருமூலர் 

இமயமும் இராமாயணமும்! – 2 (Post No.13,406)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.406

Date uploaded in London – 4 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 6-6-2024 தேதியிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷல் Supplemnt-ஆக வெளிவந்த இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை. இங்கு மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது. 

இமயமும் இராமாயணமும்! – 2 

ச .நாகராஜன்

லக்ஷ்மணனை உயிர்ப்பித்த சஞ்சீவனி மூலிகை 

ராமாயணத்தில் வரும் ஒரு முக்கிய கட்டம் ராம-ராவண யுத்தத்தில் லக்ஷ்மணன் மூர்ச்சை அடைந்து விழுவதாகும். லக்ஷ்மணன் இந்திரஜித்தின் பாணத்தால் மயக்கமடைந்ததைக் கண்ட ராமன் வருத்தம் மேலிட்டுப் புலம்ப அந்த மயக்கத்தை நீக்க சஞ்சீவனி மூலிகையைக் கொண்டு வர அனுமான் புறப்படுகிறார்.

துரோணகிரி பர்வதத்தை நோக்கி அதி விரைவாக ஆகாயத்தில் பறந்த அனுமார் எந்த மூலிகை சஞ்சீவனி மூலிகை என்று தெரியாமல் திகைக்கிறார்.

ஆகவே அங்கிருந்த மலையை அப்படியே அடியோடு தூக்கி வருகிறார்.

சஞ்சீவனி மூலிகை மூலம் லக்ஷ்மணன் மயக்கம் நீங்க ராமர் மகிழ்கிறார் போர் தொடர்கிறது.

இந்த வரலாற்றை மையமாக வைத்து இமயமலைப் பகுதியில் ஏராளமான இடங்கள் உள்ளன.

முதலில் இங்குள்ள ஹேம்குண்ட் மிகவும் பிரபலமான ஒரு இடம். லக்ஷ்மண் குண்ட் என்றும் இது அழைக்கப்படுகிறது.

 இங்குள்ள ஏரிக்கரையில் தான் லக்ஷ்மணன் வெகு காலம் தியானம் செய்தார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

இன்னொரு வரலாறும் உண்டு. ராம- ராவண யுத்தத்தில் மூர்ச்சையாகி விழுந்த லக்ஷ்மணன் இங்கு கொண்டு வரப்பட்டார். லக்ஷ்மணனின் மனைவியான ஊர்மிளா தனது கணவன் உயிர் பிழைக்க ஒரு விரதத்தை மேற்கொண்டார். அவரது விரதத்தின் காரணமாகவே அனுமார் துரோணகிரியைக் கண்டுபிடிக்க முடிந்தது. சஞ்சீவனி மூலிகை கொண்டு வரப்படவே லக்ஷ்மணன் உயிர் பிழைக்கிறார்.

தேவர்கள் பூமாரி சொரியவே அந்த மலர்கள் இன்றும் உத்தர்காண்டில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

 நீதி மற்றும்  போடியா பழங்குடி மக்கள் இந்த இடத்திற்கு வந்து தரிசித்தால் தங்கள் கணவன்மார் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள் என்று நம்புகின்றனர். அவர்களில் ஏராளமானோர் இங்கு வருவது இன்றும் நடைபெறும் ஒன்று.

தங்கள் காலணிகளைக் கழற்றி விட்டு 8 கிலோ மீட்டர் அவர்கள் பனிப்பாறைகளின் இடையே நடந்து யாத்திரையை மேற்கொள்வது நெகிழ வைக்கும் ஒரு யாத்திரையாகும்.

லக்ஷ்மணனை அவர்கள் சிவனின் அவதாரமாகக் கருதுகின்றனர். இங்குள்ள பிரதேசம் வழியே பாயும் நதிக்கு லக்ஷ்மணன் கங்கா என்று பெயர்.

சபரியால் வந்த சஞ்சீவனி

அடுத்து இந்த சம்பவத்தை ஒட்டிய இன்னொரு சுவையான வரலாறும் இமயமலைப் பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது.

ராமபிரானின் அணுக்க பக்தை சபரி. வனவாசத்தின் போது ராமரைக் கண்ட மகிழ்ச்சியில் சபரி ஒவ்வொரு இலந்தைப் பழமாகக் கடித்துப் பார்த்து ராமருக்கு அர்ப்பணிக்கிறாள். ஏனெனில் அந்தப் பழம் சுவையாக இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தினால் அவள் அதை முதலில் கடித்துப் பார்த்து அதன் சுவையை உறுதி செய்து கொண்டு அர்ப்பணிக்கிறாள். ராமர் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார். ஆனால் இது லக்ஷ்மணனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. இப்படியா எச்சில்படுத்திப் பழங்களைத் தருவது என்று எண்ணிய லக்ஷ்மணன் அவற்றை ஏற்க மறுத்து விடுகிறான்.

சபரியின் பக்தியின் தீவிரம் காரணமாகவே அவள் எச்சில் படுத்திப் போட்ட பழங்கள் சஞ்சீவனி மூலிகையாக வளர்கின்றன.

ராம ராவண யுத்தத்தில் லக்ஷ்மணன் அடிபட்டு மூர்ச்சையாகவே அவனை உத்தர்காண்டில் லோக்பால் ஏரி அருகே கொண்டு வருகின்றனர். ஏராளமான மூலிகைகள் தரப்பட்டும் பயனில்லை. ஊர்மிளா கணவன் உயிர் பிழைக்க விரதத்தை மேற்கொள்கிறாள். அனுமார் பல இடங்களில் சஞ்சீவனி மூலிகையைத் தேடி அலைகிறார்.

யமுனை நதிப் பள்ளத்தாக்கு மற்றும் கங்கோத்ரி அருகே உள்ள ஹனுமான் டிப்பா ஆகிய இடங்களில் ,மூலிகையைத் தேடிய அனுமார் ஹனுமான் கட்டி என்று அழைக்கப்படும் விஷ்ணு கங்கா மற்றும் காசி கங்கா இணையும் இடமான பத்ரிநாத்திற்கு அருகே வருகிறார். அங்கே தான் அவருக்கு சஞ்சீவனி மூலிகை துரோணகிரியில் இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

குண்ட் கால் கணவாய் என்ற கணவாய் வழியே பாய்ந்து சென்ற அனுமார் துரோணகிரியை அடைகிறார். மூலிகையை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் மலையையே தூக்கி எடுத்து வருகிறார். சஞ்சீவனி மூலிகையால் லக்ஷ்மணன் உயிர் பிழைக்கிறார்.

சபரியினால் உருவான மூலிகையே லக்ஷ்மணனின் உயிரைக் காத்தது என்பதால் அவன் கர்வம் அழிகிறது. அனுமனின் பக்தியால் மூலிகை கொண்டு வரப்பட,. சதி ஊர்மிளாவின் விரதத்தால் கணவன் காப்பாற்றப்படுகிறான். இதனால் தேவர்கள் புஷ்ப மாரி சொரிகின்றனர்.

அந்த மலர்களே இன்றும் அங்கு காணப்படும் அழகிய மலர்கள்! இந்த விசேஷமான மலர்கள் உள்ள பகுதியே இன்று அனைவராலும் அழைக்கப்படும் நந்தன் கனான் என்னும் பகுதியாகும்.

இதைப் பெருமையுடன் சொல்லும் இமயமலைப் பகுதி மக்கள் லக்ஷ்மணன் எந்த இடத்தில் கிடத்தப்பட்டு மீண்டும் மூர்ச்சை தெளிந்தானோ அந்த இடத்தில் லக்ஷ்மணன் ஆலயத்தை நிறுவியுள்ளனர். அதுவே இன்று ஹேம்குண்ட் என்று அழைக்கப்படுகிறது.

 உத்தர்காண்டில் சமோலி மாவட்டத்தில் துரோணகிரி அமைந்துள்ளது. மலை ஏறும் ட்ரெக்கிங்கை மேற்கொள்வோர் மே முதல் ஜூன் மாதம் இங்கு செல்லலாம். இதுவே உகந்த காலமாகும். ‘கார்வால் இமயப் பகுதி’ எனப்படும் இப்பகுதிக்குச் செல்வோர் இப்போது அதிகமாகி வருகிறது.

அனுமார் கொண்டு வந்த மூலிகைகள் நான்கு என்று கூறப்படுகிறது.

1.        ம்ரித சஞ்சீவனி (இறந்தவரை உயிர் பிழைக்க வைக்கும் மூலிகை)

2.        விஷல்யாகரணீ (உடலில் இருக்கும் ஆயுதங்களை எடுத்து விட்டு அங்கு ஏற்பட்டுள்ள காயங்களை ஆற வைக்கும் மூலிகை)

3.        சுவர்ணகரணீ (உடலைப் பழைய பொலிவுடன் ஆக்கும் மூலிகை)

4.        சந்தாணி (உடைந்த அங்கங்களையும் எலும்புகளையும் ஒன்றாக இணைக்கும் பெரும் மூலிகை)

அனுமன் சென்ற வேகம் மனோஜவம் என்று குறிப்பிடப்படுகிறது. மனம் ஒரு இடத்தை மனதிலே நினைக்கும் வேகத்தை விட இது அதிகமாம்.

பந்தர் பூஞ்ச்

பந்தர் என்றால் குரங்கு என்று பொருள். பூஞ்ச் என்றால் வால் என்று பொருள். பந்தர் பூஞ்ச் என்ற இமயமலைச் சாரலின் ஒரு பகுதியான அழகிய தொடர் கங்க்நானி என்ற இடத்திலிருந்து பார்க்க முடியும்.

இதற்கு பந்தர் பூஞ்ச் தொடர் என்று ஏன் பெயர் வந்தது?

ராமாயண கதாபாத்திரமான அனுமார் சஞ்சீவனி மூலிகையைத் தேடி இப்பகுதியில் அலைந்தார், அதனால் இது அந்தப் பெயரைப் பெற்றது.

இங்கு ஒரு அதிசயம் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரே ஒரு குரங்கு இங்கு வருகிறது. மலையின் உச்சிக்குச் சென்று ஆண்டு முழுவதும் அங்கு வசிக்கிறது. அடுத்த குரங்கு வந்தவுடன் இது இறங்கிச் செல்கிறது. இந்த அதிசயம் வருடா வருடம் நடைபெறும் ஒன்று!

-to be continued…………………….

Avvaiyar and Adi Sankara :My Research Notes on Viveka Cudamani-2 (Post No.13,405)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,405

Date uploaded in London – 3 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 Avvaiyar and Adi Sankara :My Research Notes on Viveka Cudamani-2 (Post No.13,405)

जन्तूनां नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता
तस्माद्वैदिकधर्ममार्गपरता विद्वत्त्वमस्मात्परम् ।
आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थितिः
मुक्तिर्नो शतजन्मकोटिसुकृतैः पुण्यैर्विना लभ्यते ॥ २ ॥

jantūnāṃ narajanma durlabhamataḥ puṃstvaṃ tato vipratā
tasmādvaidikadharmamārgaparatā vidvattvamasmātparam |
ātmānātmavivecanaṃ svanubhavo brahmātmanā saṃsthitiḥ
muktirno śatajanmakoṭisukṛtaiḥ puṇyairvinā labhyate || 2 ||

2. For all beings a human birth is difficult to obtain, more so is a male body; rarer than that is Brahmin-hood; rarer still is the attachment to the path of Vedic religion; higher than this is erudition in the scriptures; discrimination between the Self and not-Self, Realisation, and continuing in a state of identity with Brahman – these come next in order. (This kind of) Mukti (Liberation) is not to be attained except through the well-earned merits of a hundred crore of births.

(Sloka taken from wisdomlib.org)

xxxx

(pronunciation guide : aadi Sankara, avvaiyaar, viveka choodaamani, maanikkavaasagar)

Part two of my research notes

“Narajanma durlabathah”

I compare this with the greatest Tamil poetess Avvaiyaar’s poem and the Tamil hymn of Saint Manikkavasagar.

Tamil literature explains the same thing in a beautiful way. One of the five Tamil epics is Jeevaka Chintamani which gives the story of Udayana and Vasavadatta. The author Thiruththakka devar says human birth is rare. It is like one yoke floating in southern sea coming next to another yoke floating in northern sea and a pole is inserted into it. Human birth is rarer than this.

xxxx

Avvaiyar answers Lord Skanda’s question


Another famous episode in Tamil is about the grand old lady of Tamil literature Avvaiyar meeting Lord Skanda. Skanda asked her several thought-provoking questions just to enjoy her beautiful Tamil. He asked her what is bigger, sweeter, crueler and rarer. When she answered his question about rarer things in the world she says human birth is rarer. Let us look at the beautiful Tamil poem in full:

“ Rare is human birth, Vadivel (Skanda/Subramanya)! Rarer is birth as a male with perfect limbs and with full use of all the senses. Rarer still is attainment of knowledge and wisdom. Rarer than this is the tendency to give and serve; and rarest of all is a life dedicated to spiritual enlightenment, for when one reaches the end, the heavens will open to welcome that person—the perfect of all human beings”.


Avvaiyar’s poem in Tamil

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.

I consider this as an echo of Adi Shankara’s three slokas 2, 3 and 4 of Viveka Cudamani. It is not uncommon to see the same thoughts in all saints of India whether they speak Tamil or Sanskrit. Great men think alike. We see the same thought in all the hymns of Thevaram, Thiruvasagam and Divya Prabandham.
Seven types and Four Types of living beings

Even before Darwin gave the world the Theory of Evolution, even before the Linnaean classification of botanical species came into practice, even before Aristotle gave his theory, Hindus divided the living beings in to four types and seven types in two different classifications:


Type 1
1.Andajam: that which came from the eggs
2.Jarayutham: mammals
3.Udbhijam: that which comes out of seeds, roots
4.Swethajam: that which grows from sweat like liquids, i.e. germs etc

Type 2 Classification
1.Devas: supermen
2.Human beings
3.Animals
4.Birds
5.Reptiles
6.Fishes and other marine animals
7.Plant kingdom

xxxx

Great Tamil saint Manikkavasagar gives a list of all the births one can get before realising God:

“Grass was I, shrub was I, worm, tree,
Full many a kind of beast, bird, snake,
Stone, man and demon. ’Midst Thy hosts I served.
The form of mighty Asuras, ascetics, Gods I bore.
Within this immobile and mobile forms of life,
In every species born, weary I have grown, great Lord!

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லரசுராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்ற தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
சிவ புராணம்திருவாசகம் (மாணிக்கவாசகர்)

xxxx

Swami Vivekananda on Human Birth

Man is the highest being in creation, because he attains freedom.

Man is the nearest approach to Brahman (God).

Man is the best mirror, and the purer the man, the more clearly he can reflect god.

Man is a compound of animality, humanity and divinity.

The perfect man sees nothing but God.

Manushya is a being with manas/mind. Man is a creature who thinks.

Man is the only animal that naturally looks upward; every other animal naturally looks down

We are all called man, because we are all progeny of Manu .

Man alone attains to perfection, not even the Devas. Angels or gods, whatever you may call them, have all to become men, if they want to become perfect.

Know it for certain that there is no greater tirtha/ holy spot than the body of man.

(There are more quotations on man in the book Pearls of Wisdom– Swami Vivekananda, The Ramakrishna Mission, Kolkata)

xxxx

Also note the number1000 million births in the Sloka. Hindus only know highest numbers and use them. This shows that they have good idea of Universe and living beings . One must also know that Hindus say these things after counting the number of different living beings on earth. They say 84 lakh different living things are on earth.

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்

மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்

பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்

கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.- Tirumanthiram

He Pervades All Creation as Life Within

And so,

Through creations four and eighty lakhs of species

He filled as life within;

Then men who in doubt ask: How is it?

Are verily to enveloping darkness condemned.

(From Tirumnathiram of Tirumular)

–subham—

Tags- Avvaiyar and Adi Sankara , My Research Notes on Viveka Cudamani-2 , Manikkavasagar, living beings, Tirumular, 84 lakh, Types of births, “Narajanma durlabathah”

14 instances of ancient idols being unearthed since last 2 years in Bharat

Representative picture

14 instances of ancient idols being unearthed since last 2 years in Bharat

July 3, 2024

Taken from Hindu post;

Jamadagnya

In the recent years, there have been several reports of ancient Devata murtis being unearthed and discovered under miraculous circumstances across Bharat. Being at the cusp of a cultural rejuvenation with historic moments such as the Rama Janmabhoomi reclamation, Hindu society is at a crucial juncture. At this point of time, these instance of miraculous discovery and appearance of murtis show a positive affirmation of the continued and perennial blessings and strength bestowed upon by the Devi/Devatas on Hindu civilization. This article lists such recent instances of ancient murtis being unearthed in last 2 years in Bharat.

1. A murti of Sri Hari Vishnu was found by ASI on June 24, 2024, at Bhojshala Mandir in the Dhar District of Madhya Pradesh (MP). The ASI team had earlier discovered murtis of Sri Krishna, Bhagwan Bholenath, and the seven-faced Bhagwan Basukinathi from the same area of Bhojshala, according to a Hindu petitioner named Gopal Sharma. On March 22, the ASI started surveying the Bhojshala/Kamal Maula Mosque complex in Madhya Pradesh’s tribal-dominated Dhar region, preparing to employ carbon-dating equipment. The Muslim community refers to this medieval-era structure as the Kamal Maula Mosque, while Hindus see it as a temple honoring Devi Vagdevi (Saraswati).

2. On June 23, 2024, a rare metal murti of Bhagwan Vishnu was discovered in a miraculous find while building a house in the Thiruvarur region of Tamil Nadu, close to Mannargudi.

3. An ancient Bhagwan Sheshshayi Vishnu murti was discovered by the Archaeological Survey of India (ASI) in Buldhana, Maharashtra, on June 20, 2024. According to an official announcement, the ASI discovered an elaborate and detailed Sheshshayi Vishnu murti during an excavation in Sindkhed Raja town, Maharashtra’s Buldhana district.

4. On June 16, 2024, a treasure trove of rare Panchaloha murtis and relics from the legendary Chola era were discovered during a building project in Kolirayanpettai hamlet, near Papanasam, Thanjavur district.

5. In Dhilki village, near Chopta in Sirsa, Haryana, murtis of the eighth-century Tirthankara Mahavira were found on June 5, 2024, while a field was being leveled. There were a lot of Jain residents in the area, according to the Archaeology Department. These murtis might have been made at some point in the past and buried beneath the earth.

6. On 3 June 2024, Vijayanagara Ujjivana Charitable Trust took to X on June 3 to announce the discovery of the ancient Vitthala Murti in Maharashtra’s Pandharpur town. The trust said that the four-armed form of Vitthala sporting a Sri Vaishnava-style tilak appeared in a secret chamber of the Pandharpur temple just when the trust started demanding the reconsecration of the temples in Hampi. Saying so, Vijayanagara Ujjivana Charitable Trust urged PMO and Maharashtra and Karnataka CMOs to ensure its consecration in Hampi.

7. In Baghanki village, Manesar, Haryana, three ancient bronze murtis portraying Bhagwan Vishnu and Ma Lakshmi were discovered on April 24, 2024. The discovery of the murtis, which are thought to be over 400 years old, during excavation for a new home foundation opened up an intriguing new chapter in the area’s archeological history.

8. An ancient Nataraja murti was discovered in Sriperumbudur, Tamil Nadu, on March 20, 2024. It was discovered during excavations conducted by the Archeology Department at the Siva Kulundeswarar Temple in Sivan Koodal Village, which is close to Sriperumbudur. After the murti was delivered to the Chennai Archaeology Department, the officials there estimated that it was over a millennium old and composed of panchaloha.

9. On March 9, 2024, a local named Marimuthu made an amazing discovery while laying the foundation for his home in Perumalakaram, Thiruvarur district. He discovered a priceless antique murti of Bhagwan Ram, approximately two feet tall and crafted from the 5-metal alloy known as Aimpon, buried five feet below the surface. A headband, a chain for hanging the lamp, and a string lamp were discovered next to the murti. The proprietor of a flower shop on Koradacherry market street, close to Perumal Temple, Marimuthu, expressed her overwhelming happiness and gratitude. This revelation, incidentally, originates from Thiruvarur, the home district of the late DMK patriarch Karunanidhi, who had frequently ridiculed Bhagwan Ram.

10. A professor-led team of archeology students discovered a 1000-year-old murti of Tirthankara Mahavira on February 13, 2024, while conducting a field research in the Manavarayanendal area near Thiruchuzhi in the Virudhunagar district of Tamil Nadu.

11. A historic murti of Bhagwan Vishnu and “Shivling” was discovered on February 8, 2024, while building a bridge at Shakti Nagar in Raichur, Karnataka. It was discovered in the Krishna River bed. These objects, which date to the eleventh century, are thought to be from the Kalyana Chalukyas dynasty. The intentional submersion of the murtis in the river, according to renowned historian Padmaja, may have originated as a calculated tactic during interfaith conflicts. This action might have been taken during times of conflict to protect the artifacts from possible threats.

12. In Pilibhit, Uttar Pradesh, on November 2, 2023, a gold murti of Bhagwan Vishnu was discovered during the excavation of a water tank. The discovery drew a sizable throng of residents anxious to get a look.

13. A 12th-century murti depicting Bhagwan Krishna playing the flute was discovered in a hole on February 13, 2023, when a home was being built in Khedmakta village, in Brahmapuri taluk of Chandrapur district, some 121 kilometers from Nagpur.

The murti of Bhagwan Krishna discovered in Nagpur

14. A 1,000-year-old Shiva Lingam was discovered on October 30, 2023, in Tamil Nadu, on an agricultural area close to the meeting point of the Kudakanaru and Amaravathy rivers. According to media reports, a Shiva temple formerly stood on this location years ago, but natural disasters caused it to collapse beneath the surface. Generation after generation had passed down the message that there was a temple in the ancestral land, and the family continued to make pujas even though they were unaware of the location of the temple. Nandi Bhagwan’s murti and the five-foot-tall Shiva Linga with its base were discovered together. Hindus were overjoyed that this occurred on Deepavali and flocked to the location to worship the Lingam and do pujas for it. Officers of revenue and archaeology were notified in accordance with protocol, and the murtis were removed for analysis and study. It is hoped they are returned soon and are worshipped as the devotees desire.

Hindu society needs to pay heed to these numerous positive signs revealed by the Devi/Devatas about the urgent need for a Dharmic resurgence in all spheres of life across Bharat. It also indicates the huge responsibility on the shoulders of present a future generations of Hindus to protect, preserve and strengthen the Dharmic ethos and religious traditions of this sacred land of Bharat.

–SUBHAM—

SATI STONE INSCRIPTION  FROM TAMIL NADU

Pandya-era ‘Satikal’ and ‘Nadukal’ found in TN’s Kallakurichi

He further noted the rarity of this discovery, as both the ‘Satikal’ and ‘Nadukal’ were made from a single stone for a couple.

June 20 ,2024

KALLAKURICHI: A team of researchers have discovered a ‘Satikal’ of a woman and a ‘Nadukal’ of her husband carved from a single stone near a Shiva temple at Aviriyur near Rishivandhiyam in Kallakurichi district.
The team led by T Ramesh, assistant professor of the history department at Aringar Anna Government Arts College in Villupuram, along with Tamil Nadu Department of Archaeology research scholars R Mohanraj and Thanithamizhan E Nehru, were conducting an inspection at the temple and its surroundings for several days when they found a pillar-like stone with carved sculptures and inscriptions.

“By reading the inscription, we found that the single stone is a ‘Nadukal’ for a warrior and ‘Satikal’ for his wife. It stated that during the rule of  Pandian king Veerapandian in 1311 AD, in the Thulukar (Muslim) war, a soldier named Adaa Thella Raguthar lost his life, and his wife Mallanna Devi died by self-immolation, known as Sati,” said Ramesh.

He further clarified, “King Alauddin Khalji’s prominent General Malik Kafur came to Tamil Nadu to support Sundarajan Pandian in the war between heirs of the Pandian dynasty. Raguthar was killed in this war and this is mentioned in the inscription. Many inscriptions in the Shiva Temple at Thiruvamathur mention the Thulukar War. These are all evidence of Malik Kafur’s invasion.”

“At the top of the stone pillar, the sun and moon are carved while on the left side, Raguthar is depicted standing with a sword in his right hand and his left hand is pointing towards the ground. On the right side, his wife is shown standing with her right hand towards the ground and her left hand pointing towards the sky. A Shiva Lingam is seen between them,” Ramesh added.

He further noted the rarity of this discovery, as both the ‘Satikal’ and ‘Nadukal’ were made from a single stone for a couple.

Tags- 14 discoveries, idols, murtis, discovered, Hindu post, statues, SATI stone, inscription, Pandya period

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-14  (Post.13,404)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,404

Date uploaded in London – 3 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-14  (Post.13,404)

க்ஷோபன — நாம எண் 374

படைப்பு நடந்த காலத்தில் பிரக்ருதியையும் புருஷனையும் உட்புகுந்து கலக்குபவர் என்று விஷ்ணு புராணம் சொல்கிறது.

ப்ரக்ருதிம் புருஷம் சைவ பிரவிஸ்யாத்மேச்சயா  ஹரிஹி

க்ஷோபயாமாச பகவான் சர்க்க காலே வ்யயாவ்ய செள

இதை 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்த மாபெரும் பிரபஞ்ச  வெடிப்புடன் ஒப்பிடலாம் .

பிக் பேங் (BIG BANG ) என்பதை விளக்கும் விஞ்ஞானிகள் அது ஏன் ஏற்பட்டது என்பதை விளக்க முடியவில்லை

xxx 

இன்னும் ஒரு அற்புத விளக்கம்

ஸனாத் – நாம எண்   896

அநாதியான கால ரூபியாக இருப்பவர்

இது நீண்ட காலத்தைக் குறிக்கும் என்கிறார் சங்கரர். இதுவும் இறைவனின் ஒரு அம்சம்

விஷ்ணு புராணம் 1-2-15 சொல்கிறது –

பரஸ்ய ப்ரஹ்மனோ ரூபம் புருஷஹ பிரதமம் த்விஜ

வ்யக்தா வ்யக்தே ததைவான்யே  ரூபே கால்சத்ததா பரம்

பொருள்

ஓ முனிபுங்கவர்களே !பரம்பொருளின் முதல் வடிவம் புருஷன்.; ஏனைய அனைத்தும் அதிலிருந்து உண்டானவையே . காலம் என்பதும் அதன் ஒரு வடிவமே

இதில் பெரிய அதிசயம் என்னவென்றால் 2000  ஆண்டுகளுக்கு முந்தைய விஷ்ணு புராணம் காலம் பற்றிப் பேசுவதாகும் . உலகில் எந்த சமய இலக்கியமும் மிகப் பெரிய எண்ணான யுகம் – 4,32,0000 ஆண்டுகள் — பற்றிப் பேசுவதில்லை ; இந்து மதமோ சஹஸ்ர கோடி யுகங்கள் பற்றிப் பேசுகிறது. மேலை உலகில் காலம் பற்றி விளக்கிய ஐன்ஸ்டைன் , காலம் என்பது நாலாவது பரிமாணம் என்று சொல்லி நீள , அகல, உயரத்துடன் காலத்தையும் சேர்த்தே பேச முடியும்; அதைப்பிரிக்க முடியாது என்கிறார் எங்கே இருக்கிறீர்கள் என்பதை எப்போது இருக்கிறீர்கள் என்று சேர்த்தே சொல்லமுடியம் என்றார் . இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துமதம் சொல்லிவிட்டது. அதி உயத்தில் ஆகாசத்தில் மிதக்கும்  ஸ்பேஸ் ஸ்டேஷன் SPACE STATION பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்; அங்கு இரவு பகல் என்பதே கிடையாது ; நம்முடைய நாள், கிழமை, தேதி ஆகியவையும் செல்லாது. ஏனெனில் பூமியை ஒரே நாளில் பலமுறை வலம் வந்து விடுவார்கள் அவர்கள் கிழமை பற்றி என்ன சொல் முடியும் ?

சந்திரனில் ஒருவர் வீடு கட்டி வசித்தால் நம்முடைய காலண்டர்கள், பஞ்சாங்கங்களால்  அவருக்குப் பயன் இல்லை; அவர் இருக்கும் இடத்தைச் சேர்த்துச் சொன்னால்தான் நாம் அவரை அறிந்து கொள்ளமுடியும். காலம் என்பது பிரிக்க முடியாத நாலாவது பரிமாணம்

xxxx

காலஹ —  நாம எண் 418

எல்லாவற்றையும் எண்ணுகிறவர் ; காலஹ கலயதா-மஹம் – கீதை 10-30

அதாவது எல்லாவற்றையும் அளந்து அதற்கு வரையறை நிர்ணயிப்பர்.

நானே காலம் என்றும் கிருஷ்ணன் சொல்கிறார்

ப்ரஹ்லாதஸ்சாஸ்மி தைத்யாநாம் கால: கலயதாமஹம்

ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோஹம் வைநதேயஸ்ச பக்ஷிணாம் —பகவத் கீதை 10-30

 பொருள் : அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்..

 அண்டங்களும் அவைகளில் உள்ள அனைத்தும் தோன்றி, நிலைத்திருந்து, மறைவதைக் காலம் முறையாக அளந்துகொண்டே இருக்கிறது. ஆதலால் எண்ணிக்கை எடுப்பவர்களில் காலம் முதன்மை பெறுகிறது. அத்தகைய காலமாய் இருப்பது தாமே என்று பகவான் பகர்கிறார்.

காலம் பற்றி சிந்திப்பதும் அதை சங்கரர் போன்றோர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விளக்குவதும் அறிவியல் முன்னேற்றத்தைக் காட்டுகிறது .

xxxxx

கேசவஹ — இந்த நாமம்  இரு முறை வருகிறது- எண் 23 மற்றும் 648

நல்ல அழகிய கேஸம் / தலை முடியுள்ளவர் என்பது எல்லோரும் அறிந்த விளக்கம்;  சங்கரர் வேறு ஒரு அற்புத விளக்கத்தையும் தருகிறார் .

க -என்னும் பிரம்மனும், அ -என்னும் விஷ்ணுவும் ஈச என்னும் ருத்ரனும் எவருக்கு வசமாகியவர்களோ அவர்தான் கேசவர்.

அல்லது கேசி என்னும் அரக்கியைக் கொன்றதால் கேசவர்..

648–க்கு சங்கரர் சொல்லும் விளக்கம்-

சூரியன் முதலானவர்களிடமுள்ள கிரணங்களுக்கு உரியவர்

கேஸ சம்ஜ்னிதா ஸூர்யாதி ஸங்க்ராந்தா அம்ஸவஸ் தத்வ த்தயா கேஸவ .

மஹாபாரதம் சாந்தி பர்வம் 341-46 சொல்வதாவது,

அம்ஹாவோ ஏ ப்ராகாஸந்தே சா  மாமா தே கேச சம்ஜ்நீ னிதாஹா

சர்வஞாஹா  கேஸவம் தஸ்மான் மாம் ஆஹுர் த்விஜசத்தமாஹா—

, பொருள்

என்னுடைய ஒளிவீசும் அங்கமெல்லாம் கேசம் எனப்படும். இதை அறிந்த புனிதர்கள் என்னை கேஸவ என்று அழைக்கிறார்கள்.

மஹா பாரதம், அதன் பிற்சேர்க்கையான ஹரிவம்சம் மற்றும் வேதத்திலிருந்து சங்கரர் மேற்கோள்களை எடுத்துக்காட்டுகிறார் . கூகுள் இன்டெர்னட் GOOGLE or INTERNET வசதிகள் இல்லாத காலத்தே ஒரு லட்சம் ஸ்லோகங்களுக்கு மேற்பட்ட மஹாபாரதம் முதலியவற்றிலிருந்தும்  எட்டு லட்சம் ஸ்லோகங்களுக்கு  மேற்பட்ட 18 புராணங்களிலிருந்தும்  சங்கரர்  எடுத்துக்காட்டுவது அபார ஞாபக சக்தியைக் காட்டுகிறது .

(நான் இங்கு எல்லா ஸ்லோககங்களையும் தரவில்லை)

–sunbham–

tags- விஷ்ணு சஹஸ்ரநாம , அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-14 

இமயமும் இராமாயணமும்! – 1 (Post No.13,403)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.403

Date uploaded in London – 3 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-6-2024 தேதியிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷல் Supplemnt-ஆக வெளிவந்த இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை. இங்கு மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

 இமயமும் இராமாயணமும்! – 1 

ச .நாகராஜன் 

“மன்னும் இமயமலை எங்கள் மலையே

மாநில மீதிது போல் பிறிதிலையே”

என்று மகாகவி பாரதியார் பெருமிதத்துடன் பாடிப் புகழும் இமயமலை உலகின் ஆகப் பெரும் பெரிய மலைத் தொடர். குமார சம்பவத்தில் மகாகவி காளிதாஸன் ‘மானதண்டம்’ என்று பூமியை அளக்கும் அளவு கோல் என்ற பொருளில் கூறிப் புகழ்கிறான்.

2500 கிலோமீட்டர் நீளமும் 350 கிலோமீட்டர் அகலமும் கொண்டது இமயமலைத் தொடர். உலகின் உயரமான சிகரத்தைக் கொண்டது இமயம்.  17 பெரிய கணவாய்களைக் கொண்டது இமயத் தொடர். 16500 அடி முதல் 18800 அடி உயரம் வரை இவை அமைந்துள்ளன!

பாரத தேசத்தின், அறநூல்கள் புகழும் இந்த மலை ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது.

ராமாயணத்தின் முக்கிய பாத்திரங்களான ராமர், சீதை, ஜனகர், லஷ்மணன், வசிஷ்டர், ராவணன், அனுமார், ஊர்மிளை என ஏராளமான பாத்திரங்களுடன் தொடர்பு கொண்டது இமயம்.

அனைத்தையும் பார்க்க முடியாவிட்டாலும் சில சம்பவங்களையும் இடங்களையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

சீதா தேவி அவதரித்த மிதிலை

மிதிலா நகரம் வேத காலத்தைத் தொடக்கமாகக் கொண்ட பழம் பெரும் நகரம். நேபாளத்தின் தெற்கே கமலா நதிக்கரையில் எழில் கொஞ்சும் இமயமலை சுற்றி வடக்கில் இருக்க தெற்கே கங்கா நதி ஓட அமைந்துள்ள நகரம் இது. இப்போது பீஹார் மற்றும் நேபாளப் பகுதிகளைக் கொண்ட இடம் மிதிலா நகரம். பிரிட்டிஷார் அரசாண்ட காலத்தில் இது இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்ததாகப் பிரிக்கப்பட்டது.

மைதிலி மக்கள் வாழும் இடம் இது என்றும் இவர்கள் மொழி  மைதிலி என்றும் அறியப்படும்.

இப்போதைய இந்தியப் பகுதியில் மதுபானி, கிழக்கு மற்றும் மேற்கு சம்பாரன் சீதாமதி உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன.

72 கோடி ரூபாய் மதிப்பில் சீதை அவதரித்த இடமான சீதாமர்ஹியில் ஒரு பெரும் ஆலயம் அமைப்பதற்கான திட்டத்தை பீஹார் அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

மிதி என்ற அரசன் மிதிலாபுரியைத் தோற்றுவித்தான் என்றும் அவன் தனது தந்தையின் உடலிலிருந்து தோன்றியதால் ஜனகன் என்றும் அழைக்கப்பட்டான் என்றும் புராதன நூல்கள் தெரிவிக்கின்றன. இதை விதேகம் என்று யஜூர்வேத சம்ஹிதை குறிப்பிடுகிறது. மிதிலை என்று ராமாயணமும் மஹாபாரதமும் குறிப்பிடுகிறது.

ராமாயண இதிஹாஸம் கூறும் சீதையின் அவதார தோற்றம் அனைவரும் அறிந்ததே.

மிதிலையை ஆண்ட ஜனக  மன்னன் ஒரு நாள் பூமியில் புதைந்திருந்த பெட்டியைக் கண்டெடுக்க அதில் இருந்த சீதையைக் கண்டு சீதையை வளர்க்க ஆரம்பித்தார். உரிய பருவத்தில் சிவ தனுசை விஸ்வாமித்திர மஹரிஷியுடன் வந்த ராமர் முறிக்கவே சீதையை மணம் புரிந்தார்.

சீதைக்கு ஜனகரின் மகள் என்பதால் ஜானகி என்ற பெயரும் மிதிலையில் பிறந்ததால் மைதிலி என்ற பெயரும் விதேக தேசத்து ராஜகுமாரி என்பதால் வைதேகி என்றும் பூமியில் அவதரித்ததால் பூமிஜா என்ற பெயரும் இப்படிப் பல பெயர்கள் உண்டு.

சீதையின் சரித்திரம் சொல்லும் மகத்தான இதிஹாஸம் ‘சீதாயா சரிதம்’ என்று கூறப்படும். அனைவரும் அறிந்த பெயர் ராமாயணம்.

சீதா தேவி பிறந்த இடமாக பக்தர்கள் இரு இடங்களைக் குறிப்பிட்டு வழிபட்டு வருகின்றனர்.

ஒன்று நேபாளத்தில் உள்ள ஜனக்பூர். இங்குள்ள ஜானகி மந்திர் மிகவும் பிரசித்தமானது. சீதை தோன்றிய இடமாக கருதப்படும் இந்த இடத்தில் மிகப் பெரும் ஆலயமாக ஜானகி மந்திர் திகழ்கிறது. ராம நவமி உள்ளிட்ட விழா நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு கூடி வழிபடுகின்றனர்.

அடுத்து ராமருக்கும் சீதைக்கும் விவாகம் நடந்த இடமாக உள்ள  ராம-ஜானகி விவாஹ் மண்டபத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். விவாஹ பஞ்சமி அன்று (நவம்பர் – டிசம்பரில் வருகின்ற சுக்ல பக்ஷ ஐந்தாம் நாள்) ஏராளமானோர் இங்கு வந்து வழிபடுகின்றனர். அற்புதமான வேலைப்பாடு கொண்ட மண்டபம் இது.

பீஹாரில் உள்ள சீதாமர்ஹியும்  சீதையின் பிறந்த இடமாக கருதப்படுவதால் இங்கும் பக்தர்கள் ஏராளமாகத் திரள்கின்றனர்.

ஶ்ரீ நகரில் உள்ள கமலேஷ்வர் ஆலயம்

ஶ்ரீ நகரில் உள்ள கமலேஷ்வர் மஹாதேவர் ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயம். இதைப் பற்றிய தல வரலாறு ஒன்று உண்டு. ராம-ராவண யுத்தம் முடிந்த பின்னர் அயோத்தி திரும்பிய ராமர் போரில் இறந்தவர்களுக்காக பிராத்தனை புரிய இங்கு வந்தார். ஆயிரம் தாமரை மலர்களால் இங்குள்ள சிவனை அவர் தினமும் அர்ச்சிக்க ஆரம்பித்தார். ராமரை சோதிக்க எண்ணிய சிவபிரான் ஒரு நாள் ஒரு தாமரை மலரை மறைந்து போகச் செய்தார். ராமர் மனம் தளரவில்லை. தனது ஒரு கண்ணை மலருக்குப் பதிலாக அர்ச்சிக்க எண்ணினார். கண்களை எடுக்க இருந்த தருணத்தில் தோன்றிய சிவபிரான் அவரைத் தடுத்து ஆட்கொண்டார். இந்தக் கணம் முதல் ராமரை கமலநயனன் – தாமரைக் கண்ணன் என்று உலகம் போற்றி அழைக்க ஆரம்பித்தது. இந்தக் கோவிலில் இன்றும் அனைத்து பக்தர்களும் ஒன்று கூடி வழிபடுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

குமாவோன்

இமயமலைப் பகுதியில் உள்ள வியக்க வைக்கும் பிரதேசம் குமாவோன்.

குமோவான் காடுகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஜிம் கார்பெட் (பிறப்பு 25-7-1875 மறைவு 19-4-19550 என்ற பிரபல எழுத்தாளர் அருமையாக நூல்களில் எழுதியுள்ளார்.

குமாவோன் என்ற பெயரே ஆமை என்ற பொருள் கொண்ட கூர்ம என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். விஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எடுத்ததை நினவு படுத்தும் இடம் இது.

ராவணனின் சகோதரனான கும்பகர்ணனின் தலையை அறுத்த ராமர் அந்தத் தலையை குமாவோனுக்கு அனுமன் மூலமாக அனுப்பி விட்டார்.  அதை அனுமன் சம்பாவத் என்ற இடத்தின் அருகே விட்டு விட்டார்.

அந்தத் தலை நீரால் நிரம்ப அது ஒரு ஏரியாகப் பரிணமித்தது. எட்டு கிலோமீட்டர் அகலம் கொண்ட ஏரி இது.  தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்தில் அர்க்கர்களை விஷ்ணு கூர்ம வடிவம் எடுத்து கொன்று இந்த ஏரியில் தள்ளினார். இந்த யுத்தம் நடந்த இடம் கூர்மாஞ்சல் என்று அழைக்கப்படுகிறது. மறத்தின் மீது அறம் கொண்ட வெற்றியைக் குறிக்கும் இடம் இது என்று இன்றும் போற்றப்படுகிறது.

இந்த கூர்மாஞ்சலே காலப் போக்கில் குமாவோன் என்று பெயர் மாறியதாக இங்குள்ள மக்களும் அறிஞர்களும் கூறுகின்றனர். மூன்று யுகங்கள் கடந்தும் இருந்த இந்த ஏரி மஹாபாரத காலத்தில் விசேஷ வரலாற்றை கடோத்கஜன் மூலமாகப் பெற்றது.

இமயமலைப் பகுதியில் உள்ள தாரஸ் பழங்குடி மக்கள் தங்களை ராமரின் பக்கம் போர் புரிந்தவர்கள் என்று கூறி இன்றும் பெருமைப்படுகின்றனர். ராம- ராவண யுத்தம் மிக கோரமாக நடந்ததால் அதில் பங்கேற்ற இவர்கள் நடுநடுங்கிப் போனார்களாம். இதற்கான வார்த்தை தார்த்தராயா என்பதாகும். அதிலிருந்து இந்த தாரஸ் என்ற குடிப் பெயர் வந்ததாம். இங்குள்ள பெண்கள் ஆண்களை விட மிக அதிகமாக மதிக்கப்பட்டு அதிகாரத்துடன் திகழ்கிறார்கள்.

திரிவேணி சங்கமம்

 கங்கை, குப்த சரஸ்வதி, யமுனா ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமம் மிகவும் புண்யமயமானது.  இங்கு ஸ்நானம் செய்வது அனைத்து பாவங்களையும் போக்கி விடும் என்பது ஐதீகம். வனவாசம் செல்வதற்கு முன்னர் இங்கு தான் ரிஷி குண்டத்தில் ராமர் ஸ்நானம் செய்து தன் வனவாசத்தை ஆரம்பித்தார்.

 இங்கு அருகில் உள்ள ஸ்வர்க்க ஆஸ்ரமத்தில் உள்ள சத்ருக்கன் ஆலயம் சத்ருக்கனனுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு புகழ் பெற்ற ஆலயம் ஆகும்.

தேவ ப்ரயாகத்தில் உள்ள ரகுநாதர் ஆலயம் ராமருக்கென உரித்தான ஆலயமாகத் திகழ்கிறது. ரிஷிகேச யாத்திரையை மேற்கொள்வோர் அனைவரும் இந்த ஆலயங்களைத் தரிசிப்பது மரபாகும்.

To be continued…………………….

My Research Notes on Viveka Chudamani- 1(Post No.13,402)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,402

Date uploaded in London – 2 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Adi Sankara’s Viveka Chudamani and Tamil Poems

Viveka Chuudaamani , Crest Jewel of Discrimination, is a master piece on Advaita Vedanta. Aadi Sankara gives the gist of the Upanishads and Bhagavad Gita in 581 slokas/couplets. I read it in 1994 and scribbled some notes on the margin of  slokas. My approach is not the approach of a philosopher. Great many scholars have already written commentaries. Most of them were saints like Swami Chinmayaananda and Swami Sri Maadhavaananda of Advaita Ashrama ,Calcutta.

Like I did with Vishnu Sahasranama, I approached it as a nature lover, science student and a linguistic researcher. I have compared it with some TAMIL poems which other scholars did not do. So, my notes are no commentary but just a comparative study of a layman.

Wisdomlib.org gives all the slokas with meaning.

सर्ववेदान्तसिद्धान्तगोचरं तमगोचरम् ।
गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम् ॥ १ ॥

sarvavedāntasiddhāntagocaraṃ tamagocaram |
govindaṃ paramānandaṃ sadguruṃ praṇato’smyaham || 1 ||

1. I bow to Govinda, whose nature is Bliss Supreme, who is the Satguru, who can be known only from the import of all Vedanta, and who is beyond the reach of speech and mind.

Viveka =discrimination

Cuudaa=crest; swami Chinmayananda used a different spelling- choodaa

Mani = jewel.

Here the name Govinda has two interpretations

1.     Lord Govinda

2.     Sankara’s Guru- Sankaracharya was the disciple of Sri Govindapada who is the disciple of Gaudapada. So Sankara has saluted his Guru and God, we may say.

I have noted three interesting points:

a)     Sankara has the name Govinda in another famous hymn Bhaja Govindam.

b)     Though he is a great devotee of Lord Siva, he did not see any difference between Lord Siva and Vishnu. This has an implication on his age. Most of the scholars placed him around 732 CE. That was the time when Saivites and Vaishnavites fought vehemently with each other. Each one claimed superiority of their own god in Tevaram and Divy Prabandham in Tamil.

This supports the argument of Kanchi Paramacharya Sri Chandra Sekhara Indra Sarasvati (1894-1994). He placed Sankara in BCE period. There was no fight between Vishnu Bhaktas and Siva Bhaktas then. So no one can place him in 732 CE.

He also said there was no fight with Jains and Buddhists in 732 CE. By that time they were weakened or defeated in South India.

I am going to give another point later about Sankara’s cliché Snake and Rope.

But one argument put forth by me in my research article Sankara’s Age  is not acceptable to any Sankara Mutt. We all know there were two Sankarachryas who looked similar in many aspects. The second Sankara was called Abhi Nava Sankara (once again a New Sankara). He did whatever Aadi Sankara did. Most of the simple slokas were probably done by the second Sankara.  But all mutts are scared to accept it. One it is accepted it would open the Pandora’s box, they fear. Everything done by Aadi Sankara would be doubted.

Another interesting point in the very first sloka is Govinda. I mentioned there are two interpretations.

I compare it with the very first Kural of Tiruvalluvar. Iin the Tamil Veda Tirukkural the first couplet/Kural has two Sanskrit words. Addhi Bhagavan.

Dravidians are scared to accept it as Sanskrit. They said it was the name of his Mother Aadhi and Father Bhagavan. We wouldn’t think that Valluvar was so mean to bring his family in the very first couplet. But like Sankara’s Govinda this is also debated till this day.

Here is the first Kural

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.-1

Tamil Transliteration
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Bagavan Mudhatre Ulaku.

A, as its first of letters, every speech maintains;
The “Primal Deity” is first through all the world’s domains

Aadhi Bhagavan= primal deity.

This is accepted by most of the commentators.

Summary

Sankara saw Brahman (god) in Vishnu/Govinda and Siva. It is evident in his other hymn Bhaja Govindam. So we cant place him 732 CE He belongs to an ancient period. We have to consider two similar Sankaras to solve the problems.

–subham—

Tags Viveka Chudamani, Adi Sankara, Sloka 1, Govinda, Kural , Adi Bhagavan

கனக துர்க்கை அம்மன் கோவில், விஜயவாடா (Post No.13,401)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,401

Date uploaded in London – 2 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆந்திர மாநிலத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் – 2

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா  நகரத்தின் காவல் தெய்வம் கனக துர்க்கை ஆவார். ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்களை கவர்ந்திழுக்கும் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். சபரிமலை ஐயப்பன் கோவில் போலவே இங்கும் பக்கதர்கள் தீட்சை மாலை  பெற்று மீண்டும் கோவிலுக்கு வந்து தீட்சை விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள் .

இந்தக் கோவில் கிருஷ்ணா நதியின் கரையில், இந்திர நீலாத்ரி/  கீலாத்ரி குன்றின் மீது அமைந்துள்ளது. கோவிலை அடைய 260 படிகள் ஏறவேண்டும். மூலஸ்தானத்தின் மேல் தங்கக் கூரை போடப்பட்டுள்ளது. 

எல்லா இந்துப் பண்டிகை நாளும் கொண்டாடப்பட்டாலும் நவராத்ரியும், முடிவு தினமான தசராவும் வெகு விமரிசையாக நடைபெறும். தசராவின் போது  துர்கையம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதருவார்.. கூட்டம் அதிகம் வருவதால் தொலைவிலிருந்து பார்க்க வசதியும் செய்து வருகிறார்கள்.

இங்குள்ள சிவலிங்கத்தை அகஸ்திய முனிவர் ஸ்தாபித்ததாக ஐதீகம் இதனால் இந்த இடம் மல்லேஸ்வரம் என்ற  பெயர்பெற்றது.        இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது; ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டையான இடம்

கீலா என்ற அசுரன், அம்மனை வேண்டி தவம் செய்து வரம்பெற்றதால் கீலாத்ரி என்று இந்தக் குன்று பெயர்பெற்றது.

மகிஷன் என்ற அசுரனை வதம் செய்ததால் மகிஷாசுர மர்த்தினி  என்று அழைக்கப்படுகிறாள் அந்தக் கோலத்தில் இங்கு வாசம் செய்கிறாள் கனக துர்கா  தேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயதங்கள் உள்ளன 4 அடி உயர அம்மன்.

ஒரு காலத்தில் கனக (தங்கம்) மழை பெய்ய வைத்ததால் கனக துர்க்கை என்று பெயர் ஏற்பட்டது.

நவராத்ரி காலத்தில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு  மகாலெட்சுமி, சரஸ்வதி, லலிதா திரிபுர சுந்தரி, மகிஷாசுர மர்த்தனி, துர்கா தேவி, ராஜா ராஜேஸ்வரி அலங்காரங்கள் செய்யப்படும் விஜயதசமி/ தசரா நாளன்று அம்மனை அன்னப்  பறவை  வடிவிலான படகில் வைத்து கிருஷ்ணா நதியில் தெப்போத்சவம் நடத்துகிறார்கள்.

பவானி தீட்சை

சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டிக்கொண்டு , விரதம் இருந்து , யாத்திரை செய்து, தரிசனம் செய்வது போல ஆந்திர மக்கள் பவானி தீட்ச்சை பெற்று கனக துர்க்கையை தரிசிக்கின்றனர் 21 அல்லது 41 நாட்கள் விரதம் இருந்து சிவப்பு ஆடை அணிந்து யாத்திரை வருகின்றனர்.. கிருஷ்ணா நதியில் குளித்து விட்டு சிவப்பு ஆடை அணிந்து கோவிலுக்குச் சென்று  தீட்சை மாலை  பெறுவார்கள்; விரதம் முடிந்த பின்னர் மீண்டும் கோவிலுக்கு வந்து தீட்சையை முடிக்கிறார்கள். ஐயப்ப பக்தர்கள் போலவே தினமும் குளித்து விரத உணவை மட்டும் உண்டு, பெண்களைத் தொடாமல்  புலனடக்கத்துடன் விரதம் இருப்பது மரபு. பெண்களும் விரதம் இருந்து வருகிறார்கள். பெண்களாக இருந்தால் மாதத் தீட்டு ஏற்படாத 21 நாட்களில் விரதம் இருப்பார்கள். நவம்பர்- டிசம்பர் மாதங்களில் விரதம் எடுக்கிறார்கள்.

கனக துர்க்கை அம்மன் கோவில் விஜயவாடா நகரின் மையத்தில் உள்ளது. பஸ்  நிலையம் அல்லது  ரயில் நிலையத்திலிருந்து நடந்தே செல்லலாம் .இதனருகில் அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில் உள்ளது.

சாகம்பரி உற்சவம்

ஆண்டுதோறும் ஆஷாட மாதத்தில் மூன்று நாள் சாகம்பரி  உற்சவம் நடக்கும் சுக்ல பட்ச திரயோதசி முதல் பெளர்ணமி வரை நடக்கும் அந்த நாட்களில் அம்மன், சாகம்பரி அல்லது வன சங்கரி ரூபத்தை எடுப்பதாக ஐதீகம்; அப்போது நடக்கும் பூஜையால் காய்கறிகள், பயிர்கள் செழித்து வளரும் என்பது நம்பிக்கை; மூன்று நாட்களும் கோவிலை காய்கறிகள் பழங்களால் அலங்கரிப்பர்; தேவியும் பழம், காய்களால் அலங்கரிக்கப்படுவாள் ; இரண்டு லட்சம்பேர் வரை தரிசனத்துக்கு வருகிறார்கள் வறட்சி நீங்கி மழை  பெய்து வளம் பெறுக, மக்கள் சாகம்பரி தேவியை வணங்குகின்றனர்.

சாகம்பரியின் கோவில் ஒன்று உத்தர பிரதேச ஸஹ்ரான்பூரில் இருக்கிறது .

கோவிலில் உள்ள சிவனை பிரம்மா, மல்லிகை மலரால் அர்ச்சனை செய்ததால் அவரை மல்லிகேசா என்று அழைக்கின்றனர். அர்ஜுனனும் இங்கு தவம் செய்ததாக தல புராணம் சொல்லும்.  கோவிலின் நீண்ட வரலாறு மற்றும் பூஜை/ சேவை வசதிகள் எல்லாம் கோவிலின் வெப்சைட்டில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது Sri Durga Malleswara Swamy Varla Devasthanam, https://kanakadurgamma.org/en-in/about/the-temple-history/the-history

சீனப் பயணி யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பு

1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த சீனப்பயணி யுவான் சுவாங், தனது பயணக் குறிப்புகளில் கனக துர்க்கையம்மன் கோவில் குறித்து எழுதி வைத்துள்ளார். கோவில் அருகே கல்வெட்டுகள் இருந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

–subham–

Tags- ஆந்திர மாநில, புகழ்பெற்ற கோவில்கள்-2, கனக துர்க்கை, அம்மன் கோவில், விஜயவாடா

திருமூலரும் தீர்க்கரேகையும்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை -31 (Post No.13,400)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,400

Date uploaded in London – 2 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Amarnatha Cave in Kashmir; Ice Lingam is appaeraing every year.

LONGITUDE OF FAMOUS SIVA TEMPLES (Nearly on the same line)

75.5041° E AMARNATH அமர்நாத் பனிலிங்கம்

79.6912° E CHIDAMBARAM சிதம்பரம் நடராஜர் கோவில்

79.8394° E PUTTALAM முன்னேஸ்வரம் சிவன் கோவில்

79.0669° E KEDARNATH  கேதார்நாத் சிவன் கோவில்

81.3119° E MOUNT KAILASH கயிலாயம்

XXX

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 31

இந்தக்கட்டுரை 1990-ம் ஆண்டுகளில் லண்டனிலிருந்து வெளியான மேகம் பத்திரிகையில் என்னால் எழுதப்பட்டது. அந்த மாதப் பத்திரிகையில் எழுதிய 40 கட்டுரைகளை தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள் என்ற தலைப்பில் நாகப்பா பதிப்பகம், சென்னை மூலம்  2009 டிசம்பரில் வெளியிட்டேன். அண்மையில் புஸ்தக .கோ .இன்  மூலம் மீண்டும் வெளியானது. அதில் திருமூலரும் தீர்க்க ரேகையும் என்ற கட்டுரையும் ப்ஞ்சை எரிக்கும் லென்ஸ் பற்றி திருமுலர் என்ற கட்டுரையும் திருமந்திரம் பற்றியது . 1990ம் ஆண்டு கட்டுரை இதோ :

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்

சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ

டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.- 2701

xxx

இடைபிங் கலையிம வானோ டிலங்கை,

நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை

கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்,

படர்வொன்றி யென்றும்  பரமாம்பரமே“- 2708

நாம் வாழும் பூமியை , புவியியல் அறிஞர்கள்,  கற்பனைக் கோடுகளால் பிரிப்பார்கள். பூமியை 360 பாகைகளாகப் பிரிக்கும் நெடுங்கோடுகளை தீர்க்க ரேகை LONGITUDE என்றும் படுக்கைவாட்டில் பிரிக்கும் 180 கோடுகளை அட்ச ரேகை LATITUDE என்றும் பிரிப்பார்கள்.

தீர்க்க ரேகையை 180 கிழக்குக் கோடுகளாகவும் 180 மேற்குக் கோடுகளாகவும் பிரித்து  லண்டன் அருகிலுள்ள கிரீனிச்சில் பூஜ்ய டிகிரியில் துவங்குவதாகச் சொல்லுவார்கள் இதே போல படுக்கைக்கோடுகளை 90 வட கோடுகளாகவும்  ,90 தென்  கோடுகளாகவும்  பிரிக்கிறார்கள். பூமியின் நடுவில் செல்லும் கோட்டை பூமத்திய ரேகை அல்லது நில நடுக்கோடு (Equator) என்று அழைக்கிறோம்.

இவைகளில் அட்ச ரேகைகளை முதல் முதலில் எகிப்திய வான நூல் அறிஞர் டாலமியின் வரைபடத்தில் காண்கிறோம். கி.பி 150-ல் வாழ்ந்தவர் அவர். ஆனால் தீர்க்க ரேகைகளை 18-ஆவது  நூற்றாண்டில்தான்  காண்கிறோம். இதில் வியப்பு என்னவென்றால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருமூலர் இவற்றை அறிந்திருக்கிறார்.

அவர் இரண்டு திருமந்திர பாடல்களில் மேரு, தில்லை (சிதம்பரம்), இலங்கை மூன்றும் ஒரே நேர் கோட்டில்  இருப்பதாகப் பாடுகிறார்.

திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று ஒரு ஐதீகம் உண்டு. ஆனால் அவர் எழுதிய திருமந்திர பாடல்களை மொழியியல் ரீதியில் ஆராய்ந்தால் ஏழாவது அல்லது எட்டாவது நூற்றாண்டுCE ) என்றுதான் காலம் கற்பிக்கமுடியும்.. அப்போது இந்தியாவின் வரைபடம் கிடையாது. ஆயினும் மேரு, தில்லை, இலங்கை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை அவர் ஞானக் கண்களால் கண்டிருக்கிறார். ஒருவேளை அந்தக் காலத்தில் ஒலைச் சுவடி அல்லது மரவுரியில் தேசப் படம் இருந்ததோ என்றும் என்ன வேண்டியிருக்கிறது .

திருமந்திரப் பாடல் 2708க்கு சுவாச சாஸ்திர விளக்கமும் உண்டு. அதாவது, மேரு, தில்லை, இலங்கை ஆகிய மூன்றும் மூக்கில் சுவாசம் ஓடும் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் என்றும் விளக்குவர் .ஆனால் அவர் இந்தப்பாடலை இரு பொருள் தொனிக்கப்  பாடியிருக்கிறார் என்பது மற்றோர்  திருமந்திரப் பாடலால் தெரிகிறது. அந்தப் பாடலில் இந்த மூன்று சொற்களையும் நிலவியல் ரீதியிலேயே பாடியிருக்கிறார். அடுத்த பாடலில் காவிரி, கன்யாகுமரி, தென் திசை, ஏழு மலைகள் , ஒன்பது தீர்த்தங்கள் பற்றிப்பாடுகிறார்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவையும் இலங்கையையும் இணைத்துப் பாடி தமிழர்தம் ஒற்றுமையை உணர்த்திய பெருமையும் திருமூலரையே சாரும்.

Chidambaram= Thillai Temple

இந்திய வரை படத்தை விரித்து வைத்துக் கொண்டு ஒரு நூலையோ குச்சியையோ வைத்து மேரு,சிதம்பரம், இலங்கையை இணைத்தால் அவை, ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் இருப்பதைக் காணலாம். இதோ இந்த உண்மையயை  விளக்கும் பாடல்கள்

இடைபிங் கலையிம வானோ டிலங்கை,

நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை

கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்,

படர்வொன்றி யென்றும்  பரமாம்பரமே“

இந்தப் பாட்டில்  இடகலை/ இடது நாசி, பிங்கலை/வலது நாசி என்பன இமயத்திற்கும் இலங்கைக்கும் ஒப்பிடப்படுகின்றன. சுழுமுனை எனப்படும் நாடு நாசி தில்லைக்கு ஒப்பாகும். (நாசி= மூக்கு; இந்த ஸம்ஸ்க்ருத்ச் சொல்லிலிருந்துதான் NOSE நோஸ் என்ற ஆங்கிலச் சொல்பிறந்தது)

2701. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்

சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ

டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.

இடகலை, பிங்கலை,  சுழுமுனை என்ற சுவாசம் பற்றிய சொற்களுக்கு  இமயம், , இலங்கை  சிதம்பரம் என்ற மூன்று இடங்களின் பெயர்களை பயன்பட்டுயத்தியது ஏன்  என்று யோசித்தால் எனது விளக்கம்  நன்றாகப் புரியும்.

மேரு= இமய மலை = புனித மலை

தமிழ் நாட்டில் இந்த தீர்க்கரேகைக் கோடு LONGITUDE தொடும் இடத்தில் மிகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்  கோவில் உள்ளது

இலங்கையில் இந்தக் கோடு தொடும் இடத்தில் மிகப் பழமையான முன்னேஸ்வரம் சிவன் கோவில் உள்ளது

இமயத்தில் இந்தக்கோடு செல்லும் இடங்களில் கயிலாயம், அமர்நாத் பனிலிங்கம் உள்பட பல சிவ ஸ்தலங்கள் இருக்கின்றன.

LONGITUDE OF FAMOUS SIVA TEMPLES

75.5041° E AMARNATH அமர்நாத் பனிலிங்கம்

79.6912° E CHIDAMBARAM சிதம்பரம் நடராஜர் கோவில்

79.8394° E PUTTALAM முன்னேஸ்வரம் சிவன் கோவில்

81.3119° E MOUNT KAILASH கயிலாயம்

(கொழும்பு, நீர்க்கொழும்புக்கு மேல்  புத்தளம் உள்ளதைக் கவனிக்கவும். அதன் அருகில் முன்னேஸ்வரம் சிவன் கோவில் உள்ளது)

XXX

தற்போதைய விளக்கம் 2-7-2024

என்சைக்ளோபீடியா அல்லது பல வெப்சைட்டுகளில் பார்த்தால் டாலமி வரைந்தார், அதற்கு முன் கிரேக்கர்கள் சொன்னார் என்றெல்லாம் படிப்பீர்கள். அவை இன்றைய மேப்/ வரை படம் அல்ல. இந்த இடத்திற்கு அடுத்தார் போல இந்தப் பிரதேசம் அல்லது தேசம் இருக்கும் என்ற குத்து மதிப்பான விவரம்தான். நாம் இன்று பார்க்கும் வரைபடத்தின் மூலம் 1600-ம் ஆண்டு முதல் கிடைக்கிறது ; அதாவது 400 ஆண்டுகளுக்கு முன். திருமூலரோ அதற்கும் முன்னால் வாழ்ந்தார்.

இமயம் எங்கே இருக்கிறது, குமரி எங்கே இருக்கிறது என்பதெல்லாம் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலேயே இருக்கிறது. அதற்கு முந்தைய புராணங்களோ உலகத்தையே ஏழு கண்டங்களாகப் பிரித்திருக்கிறது . அதை இன்றும் பிராமணர்கள் பூஜைக்கு  முந்திய சங்கல்பத்தில் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்ல புராணம் என்பதற்கான பஞ்ச இலக்கணங்களில் ஒன்று வரலாறு இன்னொன்று புவியியல். உலகத்திலேயே இவைகளை சமயப் புத்தகத்தில் சேர்த்தது இந்து மதம் மட்டுமே. உலகில் வேறு எந்த மதப் புஸ்தகத்திலும் வரலாற்றையும் பூகோளத்தையும் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று சொல்லவில்லை. இந்து மத்தில் எல்லா புராணங்களிலும் இவை இருக்கும்.  அந்தக் காலத்திலேயே  நாம் வரலாறு , புவியியல் அறிவு பற்றி சிந்தித்ததை இது காட்டுகிறது

கங்கை கோதாவரி காவிரி பற்றி ஒரே பாடலில் அப்பர் பாடுகிறார். இடையே உள்ள தூரம் 700 காதம் என்று கல்வெட்டு கணக்கைக் கூட சொல்கிறது !

XXXX

பழைய உரை  (எனது விளக்கத்திலிருந்து மாறுபட்டது)

2701. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்

சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ

டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.

2747: Siva’s Spheres of Dance Within

The central spinal column that is Meru

The Nadis, Ida (Left) and Pingala (Right),

The Jiva’s delta-shaped Muladhara

The Sushumna Cavity that is unto Tillai Forest

Where the cool (southerly) breeze from Mount Malaya wafts

All these alike are Siva’s Spheres of Dance.

(ப. இ.) அண்டத்தின் நடுவாகப் பொன்மலையாகிய மேரு விளங்குகின்றது. இதுபோல் பிண்டமாகிய உடம்பகத்து நடுநாடி விளங்குகின்றது. நடுநாடியினைச் சுழுமுனை என்ப. மேருவினை நிலத்தின் நடுக்கோடு என்ப. நடுக்கோட்டின் வடபாலும் தென்பாலுமுள்ள கோடுகளை வழிக்கோடுகள் என்ப. அதுபோல் உடம்பகத்து இடப்பால் நாடி வலப்பால் நாடி என்பன உள்ளன. இடப்பால் நாடி இடைகலை எனவும் வலப்பால் நாடி பிங்கலை எனவும் கூறப்படும். சொல்லப்படும் இவ் வான வெளியில் நடுக்கோட்டின் நிலையினை இலங்கை எனக் கூறுப. இவ் விலங்கைக் கோட்டுடன் தில்லைத் திருச்சிற்றம்பலக்கோடும் பொருந்தியிருக்கின்றது. தில்லைக்கும் பொதியின் மலைக்கும் ஊடாகச் செல்லும் நாடி நடுநாடியாகும். இவையே தென்னாட்டுச் சிவபூமியாகும். இம் முறை சிறப்பு முறையாகும். பொதுமுறையான் நோக்கும் வழி இலங்கைக்கும் பொன்மலைக்கும் நடுவின்கண் உள்ளது தில்லை. இவ் விரண்டற்கும் இடைப்பட்டது சிவபூமியாகும். திருத்தொண்டர் புராணத்துள் ‘மாதவஞ் செய் தென்றிசையின்’ மாண்புரைக்குங்கால் பெரும்பற்றப் புலியூர், திருஆரூர், திருக்காஞ்சி, திருவையாறு, திருத்தோணிபுரம் முதலிய சிவ வழிபாட்டிடங்கள் பல என அருளியதூஉங் காண்க.

(அ. சி.) மேரு நடுநாடி – அண்டத்துள் நடுரேகையும் (Equator), பிண்டத்துள் சுழுமுனையும். அண்டத்துள் இதன் வட அயன வரை

களும் பிண்டத்துள் இடைகலை பிங்கலை நாடிகளுமாகும். இலங்கைக் குறியுறும் – இலங்கையில் மேருவின் குறியைப் பார்க்கலாம். (இதனால் மேருமலை திருமூலர் காலத்திலேயே அழிவெய்திவிட்டது என்பது போதருகின்றது.) மேரு – சுமேரு – குமேரு – என மூன்றாம். மேரு – பூமத்தியரேகையும் – பூமியின் அச்சரேகையும் கூடும் இடம்; அதுதான் இலங்கை. சுமேரு -வடதுருவம் (N. pole). குமேரு – தென்துருவம் (S. pole). தில்லைவனம் – மலயம் இவை பூமியின் நடுநாடி (Axis) யில் இருக்கின்றன என்பதை இம் மந்திரம் குறிக்கின்றது.

XXXX

“இடைபிங் கலையிம வானோ டிலங்கை, நடுநின்ற மேரு

                                   நடுவாஞ் சுழுனை

கடவுந் திலைவனங் கைகண்ட மூலம், படர்வொன்றி யென்றும்

                                     பரமாம்பரமே

2754: Pervasive Dance in the Mystic Centers

Idakalai,* Pingalai,*

The delta-shaped Muladhara

The Central spinal column Meru,

Where (Kundalini) Sakti is

The Sushumna cavity within

That is unto the Tillai Forest

-In all these the Primal One pervaded,

He that is Paraparam.

அடுத்த பாட்டிலேயே திருமூலர் உண்மையான புவி இயல் பற்றிச் சொல்வதைக் கவனிக்கவும்

ஈறான கன்னி குமரியே காவிரி

வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்

பேறான வேதா கமமே பிறத்தலான்

மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 34

                2755: South the Holy Land

At the Land’s End is KanyaKumari;

And then the Kaveri

And other holy waters

The nine “theerthas” comprise;

And the seven sacred hills too;

In that land are born the Veda-Agamas;

Thus blessed,

The South is the Holy Land indeed.

—SUBHAM—

TAGS-திருமூலர், தீர்க்கரேகை, ஒரே கோட்டில் , சிவன் கோவில்கள், மேரு, இலங்கை, சிதம்பரம் , திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 31