ஏப்ரல் 2025 காலண்டர்- மீராபாய் மேற்கோள்கள் (Post No.14,326)

Written by London Swaminathan

Post No. 14,326

Date uploaded in London –  30 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பண்டிகைகள்:–  ராமநவமி- 6; மஹாவீரர் ஜெயந்தி -10; பங்குனி உத்தரம் – 11/12; ஹனுமான் ஜெயந்தி -12;  தமிழ் புத்தாண்டு – 14; அக்ஷய திருதியை – 30

கிறிஸ்தவப் பண்டிகை= புனித வெள்ளி – 18; ஈஸ்டர் ஞாயிறு -20; ஈஸ்டர் திங்கள் -21

ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்- 8, 24;

பூர்ணிமா -12;  அமாவாசை – 27.

சுப முகூர்த்த தினங்கள்

ஏப்ரல்  4, 7, 9, 11, 16, 18, 23, 25, 30

ஏப்ரல் 1 செவ்வாய்க்கிழமை

துகிலில் வர்ணம் வீசு-என்

துணியில் வர்ணம் பூசு!

முகில்வண்ணா!உன்நிறமென்

துகிலில் நன்றாய்ப்பூசு!

****

ஏப்ரல் 2 புதன்கிழமை

1 )ஆயுள் பூராவும் வண்ணான்

அடித்துத் தோய்த்தாலும்,

ஒட்டிய உன் வண்ணம்

விட்டுவிடாதவண்ணம் (துகிலில்………..)

****

ஏப்ரல் 3 வியாழக்கிழமை

2 )செவ்வண்ணம் வேண்டாம் ;

பச்சைநிறமும்  வேண்டாம் ;

உந்தன் முகில் வண்ணத்தையே

என் துகிலில் பூசு!என்னன்புக்கண்ணனே!(துகிலில்)

****

ஏப்ரல் 4 வெள்ளிக்கிழமை

3 ) வாழ்நாளெல்லாமென்னைக்

காத்திருக்கவைத்தாலும்

வர்ணம் பூசிக் கொள்ளாமல்

வீடு செல்லமாட்டேன்!(துகிலில்)

****

ஏப்ரல் 5 சனிக்கிழமை

நீரினும் நுண்ணியது எது?

பூமியினும் பாரமானது  எது?

தீயினும் வெம்மையானது  எது?

மையினும் கருமையானது எது?

****

ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை

நீரினும் நுண்ணியது ஞானம்!

பூமியினும் பாரமானது பாபம்!

தீயினும் வெம்மையானது க்ரோதம்!

மையினும் கறுமையானது களங்கம்!(துகிலில்)

****

ஏப்ரல் 7 திங்கட்கிழமை

மீராவின் கிரி தரன் சரணத்திலே,

பிரபு சரணத்திலே,அரிசரணத்திலே,

ஷ்யாம் சரணத்திலே

இணைந்ததென்னிதயம் (துகிலில்)

****

ஏப்ரல் 8 செவ்வாய்க்கிழமை

எழுந்திரு அன்பே  எழுந்திரு அன்பே

கையில் குழலுடன் காதலனே எழுந்திரு

இரவும் முடிந்ததே விடியலும் வந்ததே

கதவும் திறந்ததே வீடுகள் விழித்தனவே

****

ஏப்ரல் 9 புதன்கிழமை

கோபியர் கைவளை குலுங்க தயிர் கடைய

காலைப் பொழுது வந்ததே காளையனே எழுந்திரு

****

ஏப்ரல் 10 வியாழக்கிழமை

வாசலில் தேவதைகள் வந்து காத்திருக்க

ஆசையுடன் யாதவர் கையிலே கொண்டாரே

வெண்ணைப் பண்டம் உனக்காக தருவாரே

மண்ணிலே பசுவைக் காக்கும் பாலகனே

*****

ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை

மீராவின் காதலனே உன்னையே நாடி வந்தேன்

என்னையும் காப்பாயே அடைக்கலம் தருவாயே

****

ஏப்ரல் 12 சனிக்கிழமை

காலில் கொலுசுடன் ஆடுவேனே மீரா ஆடுவேனே

தாளில் பணிந்த பணியாளாய் ஆனேனே  என் நாராயணன்

தாளில் பணிந்த பணியாளாய் ஆனேனே

****

ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை

இராணா அனுப்பிய விஷமும் குடித்தேனே

தானாக சிரித்தபடி குடித்தேனே நானும்

தானாக சிரித்தபடி குடித்தேனே

****

ஏப்ரல் 14 திங்கட்கிழமை

உலகம் முட்டாளென சொல்லுமே

சுலபத்தில் ஏளனம் செய்யுமே

சுலபத்தில் ஏளனம் செய்யுமே

****

ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமை

கலகம் செய்து குடும்பம் அழிப்பாளென்று

உலகில் சொல்லும்  உறவுகளே

உலகில்  சொல்லும்  உறவுகளே

****

ஏப்ரல் 16 புதன்கிழமை

இல்லத்தில் இருப்பானே இல்லாது மறைவானே

உள்ளபடி காட்டிலே உல்லாசமாய் திரிவானே

இராதை உடனே இராசத்தில் இருப்பானே

பாதை காட்டியே பாவையுடன் வருவானே

****

ஏப்ரல் 17 வியாழக்கிழமை

மீரா கொண்டேன் அழியா உறவே

கோவர்த்தன கிரிதாரியுடன்

மீரா கொண்டேன் அழியா உறவே

****

ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை

நீ துக்கங்களை அறவே களைவாயே

நீ துக்கங்களை அறவே களைவாயே

அன்று அழகாய் சேலைகள் தந்தாயே

நின்று திரௌபதி மானம் காத்தாயே

****

ஏப்ரல் 19 சனிக்கிழமை

பக்தனைக் காக்க உருமாறி வந்தாயே

தக்க தருணத்தில் நரஹரியாய்  வந்தாயே

நரசிம்ம கோலத்தில் நரனை அழித்தாயே

வரங்கள் வாங்கியவனை வாகாய் பிளந்தாயே

****

ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை

ஆதி மூலமாய் முதலை வாயிலிருந்து காத்தாயே

ஜோதியாய் கஜேந்திரனுக்கு சுகம் அளித்தாயே

****

ஏப்ரல் 21 திங்கட்கிழமை

ஓ மீராவின் கிரிதாரி

துக்கம் என்னை சூழ்ந்திருக்க காக்க வைப்பாயோ

வருவாயே  வருவாயே என்னை விடுவிப்பாயே 

*****

ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை

உன் காரணமாக உலக சுகம் விட்டேனே  என்னைக் காக்க வை ப்பது ஏநோ

கருநீல அழகனுக்கு காணிக்கை  தந்தேன்; காதலுடன் என் வாழ்னவ காலடியில் தந்தேன்

****

ஏப்ரல் 23 புதன்கிழமை

ஹரி குணம் பாடி நான் ஆடுவேனே  பிரபு குணம் பாடி நான் ஆடுவேனே

என் மனக் கோவிலில் இருப்பேனே

நான் கீதை, பாகவதம்  படிப்பேனே

****

ஏப்ரல் 24 வியாழக்கிழமை

எழுந்திரு அன்பே   எழுந்திரு அன்பே   னகயில் குழலுடன் காதலனே எழுந்திரு

இரவும் முடிந்ததே  விடியலும் வந்ததே  கதவும் திறந்ததே வீடுகள் விழித்தனவே

****

ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை

கோபியர் கைவளை குலுங்க தயிர் கடைய

காலைப் பொழுது வந்ததே காளையனே எழுந்திரு

****

ஏப்ரல் 26 சனிக்கிழமை

வாசலில் தேவதைகள் வந்து காத்திருக்க

ஆசையுடன் யாதவர் கையிலே கொண்டாரே

****

ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை

வெண்ணைப் பண்டம் உனக்காக தருவாரே

மண்ணிலே பசுவைக் காக்கும் பாலகனே

மீராவின் காதலனே உன்னையே நாடி வந்தேன்

என்னையும் காப்பாயே அடைக்கலம் தருவாயே

****

ஏப்ரல் 28 திங்கட்கிழமை

உன் பணியாளாய் 

வைத்துக் கொள்  lஎன்னை உன் பணியாளாய் 

வைத்துக் கொள்

****

ஏப்ரல் 29 செவ்வாய்க்கிழமை

கோவிந்தனை என்னுடன் கூட்டியே  வந்தேனே

பேரமும்பேசி அன்னையே போற்றியே பெற்றேனே

****

ஏப்ரல் 30 புதன்கிழமை

மலிவென்று சிலரும் மகத்தென்று சிலரும்

கலியிலே கூறவே கருத்திலே  எடைபோட்டேனே

கருநிறம் என்பாரே கடல்வெண்மை என்பாரே

கருத்தினில் நிறைந்தவனுக்கு ஒரு நிறம் இல்லையே

Please note that i have taken Tamil translations of Mirabai from the websites; thanks.

—-subham—-

Tags- மீராபாய் , ஏப்ரல் 2025 காலண்டர்- மீராபாய் மேற்கோள்கள்

Leave a comment

Leave a comment