ரத யாத்திரை/ தேரோட்டம்  பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் 100 மார்க்! (Post.14,709)

Written by London Swaminathan

Post No. 14,709

Date uploaded in London –  30 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரத யாத்திரை அல்லது தேரோட்டம்  என்று சொன்னவுடன்  உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS)  சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ) ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள்.

****

SAMPLE ANSWER –Ten Marks

விடைகள்— 1.ஊர் கூடி தேர் இழுப்பார்கள்; ஜாதி மத இன வேறுபாடுகள் கிடையாது  — பத்து மார்க்குகள்

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………

****

விடைகள்—

1.ஊர் கூடி தேர் இழுப்பார்கள்; ஜாதி மத இன வேறுபாடுகள் கிடையாது  — பத்து மார்க்குகள்.

2.வடம் பிடித்தால் புண்ணியம்; வடக் கயிற்றைத் தொட்டாலே  போதும். — பத்து மார்க்குகள்.

3.தேரை நிலைக்கு கொண்டு சேர்க்கவேண்டும்– பத்து மார்க்குகள்.

4. தேர் கவிழாமல் இருக்க முட்டுக்கட்டை போட வேண்டும் ; வாழ்க்கையில் எவ்வளவு முட்டுக்கட்டைகள் வந்தாலும் இறுதியில் தேர் நிலையை அடைவது போல நாம் இறுதி வெற்றி அடைவோம் என்பது இதன் தத்துவம். — பத்து மார்க்குகள்.

5. திருவாரூரின் ஆழித் தேர்தான் பெரியது அல்லது உலகம் மு ழுதும் தெரி ந்த ரத யாத்திரை புரி ரத யாத்திரை  – அல்லது மதுரைத் தேரோட்டம்; இவை மூன்றும், லட்சக் கணக்கில் மக்களை ஈர்க்கும் பண்டிகைகள்– பத்து மார்க்குகள்.

6.தமிழர்களும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரும் இன்று உலகின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் ரத யாத்திரை நடத்துகின்றனர் — பத்து மார்க்குகள்.

7. தேர்த் திருவிழா என்றவுடன் பெருங்க்கூட்டமும் சிறுவர்களுக்கான மிட்டாய், பொம்மைகள் விற்பனையும், ராட்டினம் முதலியவையும் வந்து விடும்– பத்து மார்க்குகள்.

8.இந்துக்களின் மகத்தான கண்டுபிடிப்பு இது; சைவர்களும் வைணவர்களும் நடத்தும் விழா ;சுவாமியைத் தரிசிக்க கோவிலுக்குச் செல்ல முடியாதோருக்கு சுவாமியே வந்து தரிசனம் தாரும் அற்புத ஏற்பாடு இது — பத்து மார்க்குகள்.

9.தேர் விழா பொதுவாக கடைசி நாள் கோவில் விழாவாக இருக்கும் ஆயினும் மறுநாள் சுவாமி தடம் பார்க்க வருவார் என்று சொல்லி மீண்டும் வருவார் — பத்து மார்க்குகள்.

10.இந்த விழா மக்கள் அனைவரும் சமம் என்பதைக் காட்டுவதோடு அந்தக் காலத்தில் பிரம்மாண்டமான ராட்சதத்    தேர்களைத் தாங்கும் வகையில் சாலை அமைப்புகள் அகலமாகவும் வலுவானதாகவும் இருந்ததைக் காட்டுகிறது — பத்து மார்க்குகள்.

.

–subham—

Tags–ரத யாத்திரை, தேரோட்டம், பத்து விஷயங்கள்., 100 மார்க், 

Leave a comment

Leave a comment