MODI JI IN G K PURAM HINDU TEMPLE

DIKSHITAS WITH MODIJI 

GANGA KONDA CHOZA PURAM TEMPLE VISIT BY PM NARENDRA MODI.

சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று – மோடி பேச்சு

JULY 27,2025

உலகம் முழுவதும் பேசப்படும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று. தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்றார்.கங்கை கொண்ட சோழப்புரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டார். அப்போது இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கேட்ட பிரதமர் மோடி, சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது;வணக்கம் சோழ மண்டலம். சிவனின் தரிசனமும், இளையராஜாவின் இசையும் என் ஆன்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது. பாரத நாட்டின் வளர்ச்சிக்காக என் வேண்டுதலை சிவனிடம் வைத்தேன். 1000 ஆண்டுகள் நிறைவுசெய்த பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை தரிசித்த பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் குறித்த கண்காட்சியை கண்டு வியந்தேன். சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது. சோழர்களின் சாதனைகள் இந்தியாவின் பலத்திற்கு எடுத்துக்காட்டு. ராஜராஜன், ராஜேந்திர சோழன் இரு பெயர்களும் பாரதத்தின் அடையாளங்கள்.

“நமசிவாய வாழ்க… நாதன் தாள் வாழ்க… இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க…” எனும் சிவபெருமானை வாழ்த்திப் போற்றும் பாடலை பாடியவர், சிவனின் தரிசனமும், சிவ முவக்கத்தையும், இளையராஜாவின் இசையும், ஓதுவார்களின் பாடல்களும் எனது ஆன்மாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சிவனை வணங்குபவன் சிவனிலேயே கரைந்து விடுகிறான்

சிவனை வணங்குபவன் சிவனிலேயே கரைந்து விடுகிறான். நாட்டின் வளர்ச்சிக்காக, 140 கோடி மக்களின் நலனுக்காக சிவனிடம் எனது வேண்டுதலை வைத்தேன். ஆயிரம் ஆண்டுகள் நிறைவு செய்த பிரகதீஸ்வரர் கோயிலில் இறைவனை தரிசித்த பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. கங்கைகொண்ட சோழப்புரம் கண்காட்சியை கண்டு வியந்தேன். சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. சோழர்களின் கண்காட்சியை பார்த்து பிரமத்தேந். சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று. தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்.

சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது. சோழர்களின் சாதனைகள் இந்தியாவின் பலத்திற்கான எடுத்துக்காட்டு. ராஜராஜன், ராஜேந்திர சோழ இரு பெயர்களும் நாட்டின் அடையாளங்கள். பிரிட்டனுக்கு முன்பே ஜனநாயகத்துக்கு முன்னோடி சோழராட்சி. ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை நிகழ்ந்தது. சோழர் ஆட்சிக்காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடந்தன. ராஜேந்திர சோழனிந் அடையாளம் புனித கங்கை நீரை கொண்டு வந்ததோடு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

****

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

27 JULY 2025

கங்கை நீரைக் கொண்டு வந்தது மூலம் பிரதமர் மோடி வரலாற்றில் இடம் பிடித்ததாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கங்கை நதியின் புனித நீரை, கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பிரகதீஸ்வரருக்குக் கொண்டு வந்ததன் மூலம், மாமன்னர் ராஜேந்திர சோழனின் போற்றுதலுக்குரிய மரபை, நமது  பாரதப் பிரதமர் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்.

 வாரணாசியிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினை நினைவுபடுத்தியது மூலம், நமது  பாரதப் பிரதமர் மோடி வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்.

தமிழகத்தின் மகத்தான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பினைப் போற்றும், மற்றுமொரு உன்னதமான தருணம் இது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

******

ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலைகள்: மோடி அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “ராஜராஜ சோழன், அவரது மைந்தன் ராஜேந்திர சோழன் இருவருக்கும் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

ராஜேந்திர சோழனின் 1,005-வது பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத்தொடங்கிய 1000-வது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச்சென்ற 1000-வது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, சோழா்கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை (ஜூலை 23) மாலை தொடங்கியது.

–SUBHAM—

TAGS- ராஜேந்திர சோழன், சிலைகள்: சோழ சாம்ராஜ்யம், பொற்காலம் மோடி பேச்சு

Leave a comment

Leave a comment