சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
Post No. 14,924
Date uploaded in London – 31 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are takn from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலு கெனவா= shame on you ;சுராங்கனி = apsaras; divine beauty!
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
Part 3
அந்தக — குமார -13-7;14-1, 8;15-1, 50;17-40;
ஜம்ப —- குமார -13-33;15-3;
தாரக — குமார 12-39;,44;13-13,46;14-1;155;17-16,54
(எட்டு சர்க்கங்களுக்கு மேலுள்ள குமார சம்பவ சர்க்கங்கள் பிற்காலத்தில் வேறு புலவர்களால் சேர்க்கப்பட்டது என்பது அறிஞர்களின் கூற்று . ஆயினும் நான் மேலே கொடுத்துள்ளேன்.)
Sura/Deva+ Aaaranangu/beauty
அணங்கு , நங்கை, சுராங்கனி (தேவ லோக அழகி, நங்கை)
சுர + ஆரணங்கு= சுராங்கனி
அணங்கே விலங்கே கள்வர் தம் இறை என
பிணங்கல் சாலா அச்சம் நான்கே (தொல்காப்பியம் 1202)
உரை
சூர் அர மகளிர் ஆரணங்கே (சுராங்கனி )- யாப்பருங்கல விருத்தி உரை மேற்கோள்
***
अमुम्सहासप्रहितेक्षणानि
व्याजार्धसंदर्शितमेखलानि।
नालम्विकर्तुम्जनितेन्द्रशङ्कम्
सुराङ्गनाविभ्रमचेष्टितानि॥ १३-४२ ரகுவம்சம்
சுதீக்க்ஷ்ண முனிவரின் தவத்தைக் கலைக்க இந்திரன் சுராங்கணாக்களை அனுப்பினான். அவர்கள் புண் சிரிப்புடன் பார்த்தனர் இடையில் உள்ள மேகலைகள் நழுவுவது போல பாவனை செய்து இடையைக்காட்டினர் அப்படியும் அந்த சுராங்கணாக்கள் / அணங்குகள் முனிவரின் தவத்தை கலைக்க முடியவில்லை .
amumsahāsaprahitekṣaṇāni
vyājārdhasaṁdarśitamekhalāni |
nālamvikartumjanitendraśaṅkam
surāṅganāvibhramaceṣṭitāni || 13-42
*****
चरतः किल दुश्चरम् तपस्तृणबिन्दोः परिशङ्कितः पुरा|
प्रजिघाय समाधिभेदिनीम् हरिरस्मै हरिणीम् सुराङ्गनाम्॥ ८-७९
முன்னொரு காலத்தில் த்ருணபிந்து என்ற முனிவர் செய்தற்கரிய தவத்தைச் செய்தார். முனிவரின் தவத்தைக் கலைக்க இந்திரன் ஹரிணீம் என்ற சுராங்கணாவை அனுப்பினான்.
carataḥ kila duścaram tapastṛṇabindoḥ pariśaṅkitaḥ purā|
prajighāya samādhibhedinīm harirasmai hariṇīm surāṅganām || 8-79 raghuvamsam
***
அணங்கு என்ற சொல் சங்க இலக்கியத்தில் எண்ணற்று இடங்களில் வருகிறது ; கடல், மலை, நீர் நிலைகள், இசைக்கருவிகள் முதலியவற்றில் வருத்தத்தைத் தரக்கூடிய அணங்குகள் வசிப்பதாக சங்கத் தமிழர்கள் நம்பினார்கள் . இவர்களை தேவ லோக நங்கைகளுடன்தான் ஒப்பிட முடியும்
மதுரை மருதை ஆவது போல குதிரை குருதை ஆவது போல அங்கணா, அணங்கு ஆகும்
அங்க என்பது நங்கை, அணங்கு என்றும் மாறி இருக்கலாம்
எடுத்துக்கட்டாக சுரா= தேவலோக ;அங்கணி = அழகி= சுரா ங்கணி என்று காளிதாசரும் சிங்கள மக்களும் பயன்படுத்துகின்றனர்.
***
பாட்டு
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
சுராங்கனி
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா
சுராங்கனி என்றால் தேவ லோக அப்சரஸ் போன்று அழகுடைய பெண்; .இதைத் தமிழில் அர மகளிர் அல்லது சூரர மகளிர் என்று பயன்படுத்தியுள்ளனர் காளிதாசன் அப்படியே சுராங்கனி என்று பயன்படுத்தியுள்ளான்.
அவுணர் – KURU-1, THIRU 59;PATHI 11-4; PARI 5-7; 8-8; PURAM 174,; MADU 590; PARI 3-56; KALI 2-3
அரக்கர் –புறம் 378-19
அரமகளிர்- AINK255-2; 418-3;191-4; 204-2;
KALI-40-23;
THIRU.41;117;
KURU.53-7
KURIN.197;
AKAM.32-7;162-25;342-12;
MALAI-190, 294
வானவ மகளிர் – மது .582
ராவணன் – KALI 38-1/5;
முப்புரம் எரித்தது – கலி 150-1;கலி .2-1/8;பரி .5-22/7;கலி .38-1;புறம் .55-1/4;பரி .திரட்டு 1-75/8;
***
கின்னரமுரலு மணங்குடைச் சாரல் -பெரு 494
இந்த வரிக்குப் பொருள் எழுதிய உ வே சா சொல்லுவதாவது ,
இனிய காலத்திலே கின்னரம் என்னும் பறவைகள் பாடும் தெய்வங்களையுடைய சாரலிடத்து ………………..
கின்னர மிதுனங்கள் பாராய் – என்ற கம்பராமாயண சித்திரகூடப் படல பாடலையும் உ வே சா எடுத்துக்காட்டுகிறார்
கின்னரர்கள் = ஆகாயத்தில் பாடும் தேவர்கள்
****
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.= குறுந்தொகை 1
அவுணர் = அரக்கர்
போர்க்களம் இரத்தத்தால் சிவக்கும்படி அசுரர்களைக் கொன்று அழித்த சிவந்த திரண்ட அம்பையும், சிவந்த கொம்புகளை உடைய யானையையும், வீரவளையலையும் உடைய முருகனுக்குரிய இம்மலையானது இரத்தம்போல் சிவந்த காந்தட்பூக்களின் குலைகளை உடையது..
***
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே.
அணங்குதல் = வருத்துதல்; சூரரமகளிர் /சுராங்கனி = தெய்வமகளிர்
****
சங்க நூல்களில் அணங்கு
கடவுள் என்ற பொருளில் 29 இடங்கள்
தெய்வ ப்பெண்கள் -2 இடங்கள்
வருத்தும் தேவிகள் – 3 இடங்கள்
பெண்ணின் மார்பகத்தில் அணங்கு –5 இடங்கள்
வீடுகளில் வசிக்கும் அணங்கு –3 இடங்கள்
யாழில் , கடம்ப மரத்தில் ஒவ்வொரு இடம்
யானைத் தந்தத்தில் 2 இ டங்கள்
நீர்நிலைகளில் – 12 இ டங்கள்
மஹாபாரத்திலும் நீர் நிலையில் இருந்த பேய் யுதிஷ்டிரனிடம் கேட்ட கேள்வி யக்ஷப்ரச்னம் என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற கேள்வி- பதில் சம்பவமாக வந்துள்ளது
முருகன் என்ற கடவுளாக பெண்களுக்குத் தொல்லை கொடுத்த அணங்கு – 6 இடங்கள்
இதை காளிதாசனும் சொல்கிறான்
சங்க நூல்களில் முருகன் என்னும் அணங்கு :–
நற்றிணை – 47-8; 376-10; 386-6; புறம் .299-6; கலி .52-10; முறுக்கு -289
மொத்தம் முப்பது இடங்களில் வருத்தும் / துன்பம் தரும் தேவதையாக வருகிறது
காதலி ஒரு அணங்காக வருகிறாள் – பரி 12-57
****
MY OLD ARTICLES: ––
அரக்கர்கள்,அசுரர்கள் யார்?, Research paper written by London Swaminathan, Research article No.1395; Dated 7th November 2014
இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள், ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1399; தேதி 9 நவம்பர், 2014.
அசுரர்கள், அரக்கர்கள் அகராதி, ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1365; தேதி அக்டோபர் 23, 2014.
அரக்கர்கள் யார்? கம்பன் தரும் உண்மைத் தகவல்! (Post No.3066) 16 -8-2016
அரக்கர்கள்,அசுரர்கள் யார்? (நவம்பர் 7, 2014)
அசுரர்கள், அரக்கர்கள் அகராதி (அக்டோபர் 23, 2014)
திராவிடர்கள் யார்?
அகத்தியரை நியூசிலாந்து மக்கள் வணங்குவது ஏன்?
–subham—
சுராங்கனி, காளிதாசன், சிங்கள பாட்டு, அணங்கு , அவுணர், அரக்கர், சங்க நூல்களில் அணங்கு