பீஷ்ம,
Post No. 15,088
Date uploaded in London – 14 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part Thirteen
நேற்று வெளியான படங்களில் உள்ளோர் கதைச் சுருக்கம் :
இந்தோனேஷியா நாட்டின் வயங் பொம்மலாலட்டத்தில் மகாபாரதம்:–
பராசர, சத்யவதி, வேத வியாச, திருத ராஷ்ட்ர , பாண்டு
***
, குந்தி
கர்ணன்
யுதிஷ்டிர (தர்மன்)
பீம
அர்ஜுனன்
பராசரர்
வசிஷ்டரின் பேரர்; சக்திக்கும் அதஷ்யந்தி என்ற பெண்ணுக்கும் பிறந்த ரிஷி. யமுனை நதியைக் கடக்க சத்யவதி என்ற படகோட்டி உதவியபோது அவள் மீது தீராக்காதல் கொண்டார் ; அதன் விளைவாகப் பிறந்தவரே மஹாபாரதத்தை எழுதிய வியாச மகரிஷி; சத்யவதியின் கன்னித்தன்மை போகாது, நீங்காது என்றும் பராசரர் வரம் அளித்தார்.
மஹாபாரதத்தில் ஜாதிவிட்டு ஜாதியில் கலப்பு மணம் செய்ததும் கடத்தல் திருமணம் செய்ததும் பல கதைகளில் வருகிறது. . இது தவிர பெண்களுக்கு சுயம்வரம் மூலம் கணவனைத் தெரிந்தெடுக்கும் சுதந்திர உரிமையும் இருந்தது.
****
சத்யவதி
இந்த மீனவப் பெண்ணின் வேறு பெயர்கள்- மத்ஸ்ய கந்தா /மீனின் நாற்றம்; யோஜனகந்தா – தொலைதூரம் நாறும் பெண்மணி !
உபரிசாரன் என்ற மன்னனுக்கும் அத்ரிகா என்ற தேவ லோக அழகிக்கும் பிறந்த பேரழகி; ஆனால் தசராஜா என்ற மீனவனால் வளர்க்கப்பட்டாள்; சந்தனு மஹாராஜனுக்கு படகோட்டியபோது யமுனை நதிக்கரையில் காதல் தீ மூண்டது; அவளை மணக்க , சந்தனுவுக்கு காதல் பைத்தியம் பிடித்தது. திருமணம் செய்ய விரும்பியபோது எனக்குப் பிறக்கும் மகன்தான் நாட்டை ஆளவேண்டும் என்று நிபந்தனை போட்டாள்; உண்மையான தகுதி சந்தனுவின் புதல்வன் தேவ விரதனுக்கு இருந்தது; தந்தையின் காதல் பைத்தியத்தையும் சத்யவதியின் குடும்ப நிபந்தனையையும் அறிந்த தேவ விரதன் நான் வாழ் நாள் முழுதும் பிரம்மச்சர்யம் அனுஷ்டிப்பேன்; எனக்கோ இனி வரும் என் சந்ததிக்கோ நாடாளும் உரிமை வேண்டாம் என்று சபதம் செய்தார். ஈரேழு உலகமும் அந்த மகத்தான தியாகத்தைக் கண்டு பீஷ்ம பீஷ்ம என்று ஆனந்தக் கூச்சலிட்டனர். அதி பயங்கர அற்புதம் என்று அந்தச் சொல்லுக்குப் பொருள். அதிலிருந்து அவருக்குப் பீஷ்மர் என்ற பெயரே நிலைத்தது .
சத்யவதிக்கு விசித்திர வீரியன், சித்ராங்கதன் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தனர்; இருவரும் குழந்தை இல்லாமல் இறந்தனர். அந்தக் காலத்தில் வம்ச விருத்திக்காக மற்றவர்களுடன் குழந்தைபெற்று ராஜ்யத்தை நடத்தும் வழக்கம் இருந்தது. அதன்படி விசித்திர வீர்யனின் மனைவி அம்பாலிகா மற்றும் அம்பிகா மூலம் பாண்டு திருதராஷ்ட்ரன் பிறந்தனர் ;ராஜ மாதாவாக காலம் கடத்திய சத்யவதி, வானப்பிரஸ்த வாழ்க்கைக்காக அம்பிகா, அம்பாலிகாவுடன் கானகம் சென்று உயிர்நீத்தார்
SATYAVATI
Smelly fisher woman; though born to King Uparichara and Apsaras beauty Adrika, she was brought up by Fishermen leader Dashraja. Though terribly smelly, she was a beauty. When she helped King Shantanu, to cross River Yamuna Shantanu madly fell in love and wanted to marry her. Like any clever woman, she put a condition that her son only must rule the kingdom. Devavrata, Shantanu’s son was the legal heir; Knowing his father’s predicament he declared publicly that he would never marry and remain a Brahmachari. Whole world was wonder struck on hearing his vow; they shouted in ecstasy Bhishma! Bhishma! Meaning Terrific, Wonderful vow!
Satyavati gave birth to two sons Vichitraveeya and Chitrangatha; both died without children. In those days queens or princesses are allowed to produce children through Brahmins or Rishis just to continue the Vamsa/lineage. Thus Ambalika gave birth to Pandu and Ambika to Dhritarashtra through Vyasa.
Satyavati was Rajamata for a long time and went to forest with Ambika and Ambalika to spend her last days.
****
பாண்டு
பஞ்ச பாண்டவர்களின் தந்தை; விசித்திர வீர்யன் இறந்த பிறகு அவருடைய மனைவி அம்பாலிகாவுக்கும் வியாசருக்கும் பிறந்தவர் . தாத்தா சந்தனுவுக்குப் பின்னர் ஹஸ்தினாபுரத்தை ஆண்டார்; குந்தி, மாத்ரி என்ற இருவரை மணந்து காலம் கடத்துகையில் காட்டில் மான் தோல் அணிந்த கிண்டம ரிஷியையையும் அவரது மனைவியையும் தவறுதலாகக் கொன்றார்; தன்னைப்போல கலவி இன்பம் அனுபவித்தால் அவர் இறந்துவிடுவார் என்று கிண்டம ரிஷி சபித்தார். இதனால் வருத்தமுற்ற பாண்டு கானக வாழ்க்கையை நடத்துவதற்கு காட்டிற்குச் சென்றார். பிராமண ரிஷிகள் மூலம் அவர்கள் இருவரும் குழந்தை பெற்று வம்ஸத்தை விருத்தி செய்யவேண்டும் என்று பாண்டு சொன்னபோது குந்திக்குத் துர்வாச முனிவர் அளித்த வரங்கள் நினைவுக்கு வந்தன அந்த மந்திரம் மூலம் யமன், வாயு, இந்திரன் ஆகியோரை வரவழைத்து அவர்கள் மூலம் தர்மன் என்னும் யுதிஷ்டிரன் பீமன், அர்ஜுனன் ஆகியோரைப் பெற்றாள்; மாத்ரிக்கும் மந்திரத்தைச் சொல்லித் தரவே அவள், அஸ்வினி குமாரர் என்ற இரட்டையர் மூலம் நகுல சகாதேவன் என்னும் இரட்டையரைப் பெற்றாள் .இதற்குப் பின்னர் ஒரு நாள் மாத்ரியை நெருங்கி இன்பம் துய்க்க முயன்றபோது கிண்டம ரிஷியின் சாபத்தை மாத்ரி நினைவுபடுத்தியும் கூட பாண்டு கலவியில் ஈடுபடவே இறந்தார்.
PANDU
Born to Ambalika and Vyasa , Pandu ruled Hasinapuram for a long time. During a hunting expedition he killed Kindama Rishi and his wife mistaking them for mating deer. Kindama cursed Pandu that he would also die the moment he attempted to enjoy conjugal bliss.
Pandu felt very sad and went to forest to lead a Vanaprastha life. Kunti and Madri his two wives accompanied him. Both of them used the boon given by Durvasa and produced Five Children – Pandavas Yuthisthira, Bhima, Arjuna, twins Nakula, Sahadeva–through Yama, Vayu, Indra and Ashvini Devas.
One day he wanted to enjoy conjugal bliss with Madri, in spite of her warning about Kindama’s curse. But he did not listen to her and died.
****
திருதராஷ்டிரன்
பிறவியிலேயே குருடர்; அவரை மணந்த ஆப்கானிஸ்தான் நாட்டு காண்டஹார் நகர பெண் காந்தாரியும் வாழ்நாள் முழுதும் கண்களைக் கட்டிக்கொண்டு வாழ்க்கையைத் தியாகம் செய்தார் .அவர்களுக்கு துரியோதணன் முதலிய 99 பிள்ளைகளும் துஸ் சலா என்ற பெண்ணும் பிறந்தனர். அவர்கள் அனைவரும் பொறாமையின் சின்னமாக விளங்கினர் அதைத் தாயும் தந்தையும் தடுக்காததால் குலமே போரில் நாசம் அடைந்தது
அம்பிகாவுக்கும் வியாசருக்கும் பிறந்தவர்; பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் ஆகிய இருவரில், பாண்டு ராஜ்யத்தை ஆண்டார் ; அந்தகர் என்பதால் திருதராஷ்டிரன் ஆளமுடியவில்லை. தனது இறந்த மகன்களை ஒரு முறையாவது காணவேண்டும் என்று ஆவல் தெரிவித்தவுடன் வியாசர் அவருக்கு ஒரு நொடி நேரம் கண் களைக் கொடுத்தார் போருக்குப் பின்னர், யுதிஷ்டிரர் ஆண்ட காலத்தில், அவருக்கு சகல மரியாதையும் கிடைத்தது. இறுதியில் அந்தக் கால வழக்கப்படி வானப்பிரஸ்தம் என்னும் கானக வாழ்வினை ஏற்க குந்தி, காந்தாரி, திருத ராஷ்டிரன் ஆகிய மூவரும் காட்டுக்குச் சென்றனர்; அங்கு ஏற்பட்ட பயங்கரத் தீயில் தப்பி ஓடாமல் மூவரும் ஒருவர் ஒருவரின் கையைப் பிடித்துக்கொண்டு ஆனந்தமாக தீயில் கருகி உயிர் நீத்தனர். அவர்களுடன் சென்ற சஞ்சயன் மட்டும் ஒடிப்போய் உயிர்தப்பினார்.
***
Dhritarashtra
Dhritarashtra born to Ambika and Vyasa was blind from his birth. He married Gandhari from Afghanistan and she also lived like a blind folded woman throughout her life. Pandu ruled the kingdom because of his brother’s blindness. Gandhari gave birth to 99 sons and one daughter. All of them were symbol of jealousy. Both Dhritarashtra and Gandhari never corrected their mistakes and thus they brought their own destruction in the Mahabharata war. After the war he wanted to see his dead sons. Vyasa gave him momentary eyesight to see Duryodhana and his brothers. After the war, Yuthisthira ruled Hastinapura for 36 years. Both Gandhari and Dhritarashtra were looked after well. When they were very old accompanied by Kunti they went to the forest for Vanaprasta life. There they died in big forest fire. They joined hands with one another and died happily in the roaring fire. Sanjaya escaped from the forest fire.
துஷ்சாசனன்
****
துஷ்சாசனன்
துரியோதண சகோதரர்களில் மூத்தவர்; சகுனி, கர்ணனுடன் சேர்ந்து பாண்டவர்களை எதிரிகளாகப்ப் பாவித்தார் ; சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களின் மனைவியான திரெளபதியின் புடவையை சபையில் உருவ முயன்றார் ; திரெளபதியைக் கண்ணன் காப்பாற்றினார். துரியோதனன் தோல்வியில் துவண்டபோது தற்கொலை செய்துகொள்ள இருந்ததைத் தடுத்தார். மகாபாரத யுத்தத்தில் பீமன் அவரைக் கொடுரமாகக் கொன்றார். துஷ்சாசனனின் கையைப் பிய்த்து அதனாலேயே அடித்துக்கொன்று இருதயத்தைப் பிடுங்கி எறிந்தார். ஒரு பெண்ணின் மீது பட்ட துஷ்சாசனனின் கரம் அவ்வளவு சித்திரவதைக்கு உள்ளானது!!
DUSHASANA
Dushasan -Eldest of the Gandhari’s sons. They were called Kauravas. With the bad company of Shakuni , he spoiled all peace attempts between the Kauravas and Pandavas. He dragged Draupadi, wife of five Pandavas in the assembly and publicly disrobed her. But Lord Krishna with his magical power made her garment a never ending longer and longer garment. In the war Bhima cut that hand and with that hand beat him to death. He used the same hand to pluck out his hearth and threw I out. It served as a lesson to trouble makers
துரியோதன
,நகுல, சஹாதேவ
To be continued………………………
Tags- Hinduism through 500 Pictures , Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம், கற்போம்-13, வயங் பொம்மலாலட்டம், மகாபாரதம் , பராசர, சத்யவதி, வேத வியாச, திருத ராஷ்ட்ர, பாண்டு, , நகுல, சஹாதேவ ,கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் , குந்தி