ஜனவரி காலண்டர் 2026- ஆதி சங்கரரின் பொன்மொழிகள் (Post.15,309)

Written by London Swaminathan

Post No. 15,309

Date uploaded in London –  26 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கடந்த மூன்று  மாத காலண்டர்களில் ஆதிசங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் உள்ள பொன்மொழிகளைக் கண்டோம்; அதன் தொடர்ச்சியை இந்த ஜனவரி  மாதக் காலண்டரில் காண்போம். இது அந்த நூலின் க்டைசி பகுதியாகும்

***

ஜனவரி 2026  பண்டிகைகள்

3-திருவாதிரை; 14-போகிப் பண்டிகை; 15-பொங்கல்/ மகர சங்கராந்தி; 16-கணுப்பொங்கல்/மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்; 26-குடியரசு தினம்; 7-திருவையாறு தியாகராஜர் ஆராதனை;

25-ரதசப்தமி;  26- குடியரசு தினம் பீஷ்ம அஷ்டமி; 18- தை அமாவாசை;30- காந்திஜி  நினைவு தினம்.

ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்-14,29; அமாவாசை-18 பெளர்ணமி-3;

முகூர்த்த தினங்கள்- ஜனவரி 14;

***

ஜனவரி 1 வியாழக்கிழமை

வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளை அடைந்த தன்யன் யார் ?

சந்நியாசி /துறவி

***

ஜனவரி 2 வெள்ளிக்கிழமை

எல்லோருடைய மதிப்பையும் பெறும் மான்யன் யார்

கல்வி அறிவோடு துறவி போல் வாழ் பவன்  மான்யன் ஆவான்

***

ஜனவரி 3 சனிக்கிழமை

யாருக்கு சேவை செய்ய வேண்டும்?

தர்மம் செய்வோனுக்கு .

***

ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமை

யாரை வாரிவழங்குவோன் என்று சொல்லலாம்?

யாசிப்பவரைத் திருப்தி செய்வோனை.

***

ஜனவரி 5 திங்கட் கிழமை

ஒருவனுக்கு கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியம் என்ன ?

ஒருவனின் உடல் ஆரோக்கியம்.

***

ஜனவரி 6 செவ்வாய்க்கிழமை

யார் பலன்களை அனுபவிப்பவன்?

உழுதுண்டு வாழ்வோன்.

***

ஜனவரி 7 புதன் கிழமை

பாவம் ஒட்டாதவன் யார் ?

ஜபம் செய்வோனை பாவங்கள் பீடிக்காது.

***

ஜனவரி 8 வியாழக்கிழமை

பூரணமானவன் யார் ?

குழந்தைகள் உடையவன் முழு  மனிதன்

***

ஜனவரி 9 வெள்ளிக்கிழமை

மனிதர்களுக்கு மிகவும் கடினமான காரியம் எது?

மனத்தைக் கட்டுப்படுத்துவதே.

***

ஜனவரி 10 சனிக்கிழமை

யார் பிரம்மச்சாரி ?

பெண்களை நினைக்காமல் /நாடாமல்/ தனது சக்தியை சேமித்துவைப்பவன் பிரம்மச்சாரி

***

ஜனவரி 11 ஞாயிற்று க்கிழமை

இந்த உலகத்துக்கு ஆதாரமாக இருப்பவன்  யார் ?

சூரியன்.

***

ஜனவரி 12 திங்கட் கிழமை

எல்லோருக்கும் வாழ்வினை அளிப்பது எது?

மழை.

***

ஜனவரி 13 செவ்வாய்க்கிழமை

வீரன் யார் ?

பயந்தவர்களைக் காப்பவன்

***

ஜனவரி 14  புதன் கிழமை

பாதுகாப்பு தருவோன் யார் ?

ஆன்மீக குரு

***

ஜனவரி 15 வியாழக்கிழமை

ஜகத் குரு யார் ?

சிவா பெருமான்

***

ஜனவரி 16 வெள்ளிக்கிழமை

அவித்யை என்பது என்ன ?

நான் யார் என்பதை மறந்து விடுவது (தன்னை அறியாமல் இருப்பது.)

***

ஜனவரி 17 சனிக்கிழமை

யாருக்குத் துன்பமே வராது?

கோபப்படாதவனுக்கு.

***

ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை

சந்தோசம் என்பது என்ன?

திருப்தியுடன் வாழ்வது (போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து)

***

ஜனவரி 19 திங்கட் கிழமை

அரசன் என்பவன் யார்?

தன குடிமக்களை மகிழ்ச்சியாக வாழவைப்பவன்.

***

ஜனவரி 20 செவ்வாய் க்கிழமை

நாய் என்று யாரைச் சொல்லலாம்?

கீழ்மக்களுக்கு தொண்டு செய்ப்பவனை.

***

ஜனவரி 21  புதன் கிழமை

இந்திர ஜாலம் என்று எதைச் சொல்லலாம் ?

இந்தப் பிரபஞ்சத்தை.

***

ஜனவரி 22 வியாழக்கிழமை

எது சத்தியம் ?

பிரம்மம்  (இறைவன்)

***

ஜனவரி 23 வெள்ளிக்கிழமை

உயர்ந்த லட்சியம் எது ?

அத்வைதம்

***

ஜனவரி 24 சனிக்கிழமை

இறைவனுக்கு சமமானவர் யார் ?

தாய் – அன்னை

***

ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை

வணங்கத்தக்கவரும்  குரு போன்றவரும் யார்?

தந்தை.

***

ஜனவரி 26 திங்கட் கிழமை

யாருடைய வார்த்தை எப்போதும் பொய்க்காது?

எவர் ஒருவர் உண்மை பேசுபவராகவும் மவுனம்/நாவடக்கம்  கடைப்பிடிப்பபவராகவும் இருக்கிறாரோ அவர் வார்த்தை பொய்க்காது.

***

ஜனவரி 27 செவ்வாய்க்கிழமை

நாம் மீண்டும் மீண்டும் பிறப்பது ஏன் ?

புலன்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதால்

***

ஜனவரி 28  புதன் கிழமை

யாருக்கு அன்னம் இட வேண்டும் ?

எவன் ஒருவன் பசியுடன் உள்ளானோ அவனுக்கு.

***

ஜனவரி 29 வியாழக்கிழமை

பகவான் யார் ?

ஹரியும் சிவனும் இணைந்த கடவுள்; சங்கர நாராயணன்.

***

ஜனவரி 30 வெள்ளிக்கிழமை

வேதங்களுக்கு எல்லாம் மூலம் எது?

ஓம்காரம்

***

ஜனவரி 31 சனிக்கிழமை

முக்தி என்பது என்ன ?

அறியாமை / அவித்யையிலிருந்து விடுபடுவதே முக்தி/ மோட்சம்

–subham—

Tags- ஜனவரி காலண்டர், ஆதிசங்கரர், பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா, கடைசி பகுதி 

Leave a comment

Leave a comment