Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கஸ்மாலம்- பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்டும்போது, கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பயன்படுத்திய சொல்; சென்னை ஆட்டோக்காரர்களின் வாயில் சர்வ சாதாரணமாகப் புழங்கும் ஸம்ஸ்கிருதச் சொல்; பொருள் :கஸ்மலம் = அழுக்கான, தூய்மையற்ற,பலவீனமான
Date: 29 December 2018: Post No. 5852
****
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கஸ்மாலம் வசவு பற்றி எழுதினேன் ; நேற்றிரவு அருணகிரிநாதரின் திருப் புகழைப் படித்த பொழுது அவர்தான் சென்னைக்காரர்களுக்கு இந்த வசை மொழியைச் சொல்லிக் கொடுத்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது .
கண்ண பரமாத்மா 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இதை ஸம்ஸ்க்ருதத்தில்தான் சொன்னார். மதராஸ்/ சென்னை காய்கறி வியாபாரிகள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் , பிச்சைக்காரர்கள் வாயில் புழங்க யாரோ ஒருவர் தமிழில் சொல்லியிருக்க வேண்டும் இதோ அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலில் வரும் சொற்கள்:
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்
கனவாலங் கூர்விழி மாதர்கள்
மனசாலஞ் சால்பழி காரிகள்
கனபோகம் போருக மாமிணை …… முலைமீதே
கசிவாருங் கீறுகி ளாலுறு
வசைகாணுங் காளிம வீணிகள்
களிகூரும் பேயமு தூணிடு …… கசுமாலர்
மனவேலங் கீலக லாவிகள்
மயமாயங் கீதவி நோதிகள்
மருளாருங் காதலர் மேல்விழு …… மகளீர்வில்
மதிமாடம் வானிகழ் வார்மிசை
மகிழ்கூரும் பாழ்மன மாமுன
மலர்பேணுந் தாளுன வேயரு …… ளருளாயோ
தனதானந் தானன தானன
எனவேதங் கூறுசொல் மீறளி
ததைசேர்தண் பூமண மாலிகை …… யணிமார்பா
தகரேறங் காரச மேவிய
குகவீரம் பாகும ராமிகு
தகைசாலன் பாரடி யார்மகிழ் …… பெருவாழ்வே
தினமாமன் பாபுன மேவிய
தனிமானின் தோளுட னாடிய
தினைமாவின் பாவுயர் தேவர்கள் …… தலைவாமா
திகழ்வேடங் காளியொ டாடிய
ஜெகதீசங் கேசந டேசுரர்
திருவாலங் காடினில் வீறிய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள் …
பெருத்த, கொடிய விஷம் மிக்குள்ள கண்களை உடைய விலைமாதர்கள்,
மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பு வண்ணம் மிகுந்த பழிகாரிகள்.
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே கசிவு
ஆரும் கீறுகி(ள்)ளால் உறு வசை காணும் காளிம வீணிகள் …
மிகுந்த போக சுகத்தைத் தரக் கூடியதும், தாமரை மொட்டுக்கு
ஒப்பதானதுமான மார்பின் மீதே அன்பு மிகுதிக்கு அடையாளமாக
கீறல்களாலும் கிள்ளுதலின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும்
களிம்பைத் தடவும் வீணிகள்.
களி கூறும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் மனம் ஏல் அம்
பகவத் கீதை 2.2 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதருமை அர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தை கொடுக்கின்றன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
part 40
item 246
Akanānūru verse 26 by Pāndiyan Kānapēreyil Thantha Ukkira Peruvazhuthi is the king who compiled Aka naanuuru . That means he was one of the last kings of Sangam Age. He has a Sanskrit name UGRA which is found in Tiru Vilaiyaadal Puranam as well. He is a contemporary of Rajasuyam Yaga performer ; also contemporary of Avvaiyar who was also present in the Rajasuyam Yaga. This king’s name helps us to calculate the periods of other kings.
247
Verse 26 has the usual stuff of Tamil men visiting prostitutes and the wives getting angry and then reaching a compromise through their children.
Pandyan king used one notable simile in the poem:
I softened like fine soil
which had been rained on heavily and ploughed
many times.
***
248
Akanānūru verse 27 by Mathurai Kanakkāyanār compares the pearls from Korkai with the teeth of a heroine/ woman in the poem. Whenever Pandyas are or their country are mentioned, poets always add pearls from the Pandya country. And there is some colour contrast in the poem too. Woman’s lips are coral red, teeth are like shining white pearls, her eyes with kohl have black lining, the elephants of Pandya king have white tusk and her eyes are like blue lily flowers.
…. your smile with bright teeth
in your coral-coloured mouth,
resembling pearls from the wide
shores of Korkai town that is
protected well by brave battling
Pandiyans who got white-tusked
elephants from the northern
Vēnkadam Hills.
How will they let him go? Your
kohl-lined eyes, that have ruined
the beauty of blue waterlily flowers
வெண்கோட்டு யானை – elephant with white tusks, அறத்தின் காக்கும் கொற்கை – Korkai city that they protect with justice, அம் பெருந்துறை முத்தின் அன்ன – like the pearls from its wide shores teeth ,இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – red mouth with bright teeth, coral-like red mouth with bright teeth, the beauty of (eyes) blue waterlily flowers
***
249
Akanānūru verse 28 composed by Pandiyan king Arivudainampi shows that Pandya kings were also good poets. Among the kings mentioned in the Sangam age , Pandya kings composed more poems than Chera and Choza kings. One must remember Pandyas were the kings who patronised the Tamil language in Madurai Academy. More poets have Madurai as prefix than any other town.
***
250
Akanānūru 29 composed by Vellādiyanār has two notable similes
Eyes like cut tiny mango eyes that bring happiness when seen, ……….beautiful like the two pieces of a ……….fragrant tiny mango cut with a knife,
***
251
Elephant- Mirage- Boat on ground without water
……..where an elephant that became thin, not knowing where to find water to drink, runs to a mirage only to find no water and lies down with sorrow, looking like a boat on land without water
……………….
***
252
Akanānūru 30 by Mudangik Kidantha Neduncheralāthan has some interesting lines that are appreciated by Tamil scholars
Will your pride be ruined if you come to the fragrant seashore grove where punnai tree buds look like unwashed pearls and ask us about our beauty and then leave?
பெருமை என்பது கெடுமோ, ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங்கானல் வந்து, நும்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே?
***
253
Mystery about name!முடங்கிக் கிடந்த
Neduncheralāthan is one of the most famous Chera kings. We don’t know why he was given an epithet Mudangi Kidantha! It is a strange epithet. In other places he was praised as one who had conquered lands up to Himalaya.
The meaning of Mudangi Kidantha முடங்கிக் கிடந்த is “lie with knees drawn up and arms close to the body”. Did he compose this at the ripe old age? Or was he afflicted with rheumatism? No one has explained it properly as far as I know. Maybe it is a different Neduncheralathan.
To be continued………………………………..
Tags- Ancient Tamil Encyclopaedia ,Part 40, One Thousand Interesting Facts, item 253, Neduncheralathan, Pearl, Korkai, Ugra, Sanskrit word
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
3-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
சித்தர்களின் அஷ்டமா சித்திகள்! நிஜமாகவே சாத்தியமா? பிரெஞ்சுக்காரர் நேரில் கண்ட அற்புதம்!
ச. நாகராஜன்
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் மஹரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம் உலகெங்கும் ஒரு பெரிய பேசு பொருளானது.
அவரது தியான முறை மூலம் தரையிலிருந்து எழும்பி மேலே சென்றதாகப் பலரும் கூறினர். ஆனால் இதற்கான வலுவான ஆதாரங்கள் தாம் இல்லை.
ஆனால் பாரத தேசத்தின் சித்தர்களுக்கோ இது ஒரு எளிய கை வந்த கலையாகும்.
இதை நேரில் பார்த்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், பேச்சாளரும், பாரிஸ்டரும் நீதிபதியுமான லூயிஸ் ஜாகொல்லியட் (LOUIS JACOLLIOT) என்பவர் அந்தச் சம்பவத்தைத் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
சாரொல்லஸ் என்ற பிரான்ஸ் நாட்டு நகரில் 1837ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதியன்று ஜாகொல்லியட் பிறந்தார். பிரெஞ்சு காலனிகளில் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றினார்.
வேதம்,உபநிடதம் ஆகிய எல்லாவற்றையும் படித்த அவருக்கு யோகா மீதும் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. சம்ஸ்கிருதத்தைப் படிக்க ஆரம்பித்தார். இந்தியாவின் மீது பெரும் மதிப்பைக் கொண்ட அவருக்கு
இந்தியா வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 1865 முதல் 1869 முடிய அவர் இந்தியாவில் இருந்தார்.
1866ம் ஆண்டு இந்தியாவில் அவருக்கு ஒரு நூதன அனுபவம் ஏற்பட்டது.
கோவிந்தசாமி என்ற ஒரு சித்தரை அவர் சந்தித்தார். இருவரும் யோகா சம்பந்தமாக பேசுவது வழக்கமானது.
ஒரு நாள் கோவிந்தசாமி ஜாகொல்லியட் உட்கார்ந்திருந்த வாரந்தாவிற்கு வந்தார். அப்போது வாயில் கதவுக்கு அருகே வந்து நின்றார் அவர்.
கைகளை மடித்து வைத்துக் கொண்ட அவர் ஒரு நிமிடம் யோசித்தார். பின்னர் மெதுவாக அவர் மேலே எழும்பினார். ஒரு அடி தூரம் அவர் மேலே எழும்பியதை ஜாகொல்லியட்டால் சரியாக அளக்க முடிந்தது.
கோவிந்தசாமிக்குப் பின்னால் பட்டு ரிப்பன்கள் சிவப்பு, தங்க நிறம், வெள்ளை நிறத்துடன் தொங்கிக் கொண்டிருந்தன. அவர் ரிப்பன்களில் ஆறாவது ரிப்பன் அளவு உயர்ந்தார். ஆகவே சரியாக ஒரு அடி என்பதை ஜாகொல்லியட்டால் நிர்ணயிக்க முடிந்தது.
கோவிந்தசாமி மேலே எழும்ப ஆரம்பித்தவுடன் சரியாக தனது கடிகாரத்தில் மணியைப் பார்த்தார் ஜாகொல்லியட். அந்தரத்தில் பத்து நிமிடம் நின்று கொண்டிருந்தார் கோவிந்தசாமி. ஐந்து நிமிடங்கள் அவர் அசைவற்று சிலை போல இருந்தார்.
பிறகு கீழே மெதுவாக இறங்கினார் அவர்.
இதை அகல்ட் ஸயின்ஸ் இன் இந்தியா (OCCULT SCINCE IN INDIA) என்ற தனது நூலில் எழுதியுள்ளார் ஜாகொல்லியட். இவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. உலகில் ஏராளமானோர் விரும்பிப் படிக்கும் நூல்களாக விற்பனையில் சக்கை போடு போட்டன.
ரஷியாவில் இவரது நூல்கள் பிரபலமாயின. இவரது நூல்கள் 18 தொகுதிகளாக ரஷியாவில் 1910ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டன. ஆனால் கம்யூனிஸ அரசு ரஷியாவில் அமைந்ததிலிருந்து இவை தடை செய்யப்பட்டன. 1928 முதல் 1989 முடிய இவரது நூல்கள் அங்கு கிடைக்கவில்லை.
சம்ஸ்கிருத ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட ஜாகொல்லியட் கிருஷ்ணாவுக்கும் ஏசுவுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை எடுத்துக் காட்டினார்.
‘கிறிஸ்ணா’ என்பது கிறிஸ்து என்பதாக மாறியது. ‘கிறிஸ்னா’ என்பது கிருஷ்ணர் என்ற வார்த்தையை ஒட்டிப் பிறந்த சொல் தான் என்றார் இவர். பைபிளுக்கும் இந்திய புராண இதிஹாஸங்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை இவர் விவரித்தார்.
மனு ஸ்மிருதியை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவரது குறிப்பிடத்தகுந்த நூல்களில் முக்கியமான ஒன்று திருக்குறள். பல முக்கியமான குறள்களை இவர் மொழிபெயத்து வெளியிட்டார்.
1890ம் ஆண்டு அக்டோபர் 30ம் நாளன்று அவர் பிரான்ஸில் உள்ள செயின்ட் திபால்ட் – டெஸ்- விக்னஸ் என்ற இடத்தில் மறைந்தார்.
இந்திய யோகிகளைப் பற்றி அதிகார பூர்வமாக ஆவணப்படுத்திய மேலை நாட்டோரில் குறிப்பிடத் தகுந்தவர் ஜாகொல்லியட்!
Every few years, deep in the mountains of Himachal Pradesh, the forests receive a visitor – not a forest officer, not a government team, but a deity carried on the shoulders of the people. Nearly 100 kilometres from Shimla, in a village named Bhog in the tehsil Theog, hundreds of villagers gathered as ‘Dodru Devta’, affectionately known as ‘Dev Nanu’, begin a month-long journey.
This sacred procession is far more than a religious ritual; it is an ancient ‘Environmental Audit’ in which damaged trees, polluted waterbodies or neglected cattle are noticed not through human inspection, but a divine power. For generations, this system has quietly upheld ecological discipline long before modern conservation laws took form.
Once every three years, villagers escort the deity across forests, grazing lands and farms, retracing the boundaries of their natural resources. According to tradition, the palanquin moves smoothly only when the environment is healthy. If a tree has been cut without permission, a stream polluted or a pasture overused, the palanquin halts. This pause indicates a violation of the deity’s nature rules. The violators responsible for the damage receive a symbolic punishment—‘dand’—reinforcing the belief and rules that the maintenance of the landscape is a shared duty.
Sangam Age Tamils called the spirits as ANANGU
These practices may seem unusual and unbelievable to many who might witness from outside, but for the Himachal culture and people, this tradition is an unwritten code deeply embedded in the state. Across Himachal Pradesh, ‘devtas’ are regarded not only as spiritual guides but as custodians of land, water and forests. (TAMIL- ANANGU) For generations, communities have followed these environmental norms set by their deities. These may include simple rules like offering the first harvest to birds, protecting water sources, protecting forests and not abandoning livestock. These customs evolved long before environmental laws and remain firmly upheld today.
Eighty-six-year-old Jamana Devi, one of Bhog’s oldest residents, has witnessed this tradition for more than eight decades. For her, the belief system is not just a festival but a lifeline. “Through these visits, the ‘Devta’ reminds us that he is always with us,” she said.
She recalled one of the earliest rules the ‘Devta’ set to protect the village’s drinking water. At a time when water was scarce and people often stepped into the community wearing slippers, the ‘Devta’ issued a strict command that no one would be allowed near the well with slippers, and the prasad would be prepared only with water drawn from that well. Gradually, the condition of the well improved, reinforcing the message of collective responsibility.
Jamana Devi also remembered how, in her childhood, any family or village dispute—no matter how small or serious—was taken to the ‘Devta’ for resolution.
As the procession begins, each household must send at least one member for the month-long yatra. Participation is non-negotiable. Throughout the journey, villagers arrange food and shelter for the ‘kardars’ and everyone accompanying the ‘Devta’. Neglecting these responsibilities, they believe, could anger the deity.
‘Dodru Devta’ is placed only on land considered sacred, marked by an old tree dedicated to him. Each village hosts the deity for a night, during which the ‘gur’, or medium, shares warnings and guidance. Villagers listen intently, trusting the deity to protect them from illness, calamities and misfortune—and to safeguard their forests. Even today, no one cuts a tree for house construction without seeking the permission of ‘Devta’.
Digvijay Singh Thakur, the ‘Adhisthak’ (who ensures rules are followed) of ‘Dodru Devta’, explained that the deity is viewed as the protector of natural resources. “The fields, forests and water sources flourish because of his blessings,” he said. The Devta travels with ‘gana’ (followers) named ‘Tunda’ and ‘Rakashan’, the latter believed to ward off evil forces.
village well
Historian Dr Surat Thakur noted that this practice extends across Himachal Pradesh. “From sacred lakes in Mandi to forest groves in Kullu and serpent shrines in Sirmaur, ‘Devta’ culture has created community-led conservation systems that have survived for centuries,” he said. At a time when the Himalayas face growing threats from construction, tourism and climate change, these traditions show how faith can sustain ecological balance.
In 2013, the World Wide Fund for Nature (WWF) and the G.B. Pant Institute of Himalayan Environment and Development, Almora, studied the role of religion in preserving local ecology and culture. Their documentation recorded 514 sacred groves. These groves—commonly known as Devata Vans—are protected spaces where no activity is permitted without the deity’s consent. These untouched forest patches hold old-growth trees and rare species, safeguarded for generations through faith rather than formal enforcement.
Speaking to The Statesman, Principal Chief Conservator of Forests Sanjay Sood said, “If it were possible, I would declare all forests as ‘Dev Vans’. People are remarkably sincere about this tradition, and we have never received complaints of illegal activity from these areas.”
He added that the traditional folklore surrounding ‘devis’ and ‘devtas’ has naturally woven ecological conservation into daily community life. During customary eco-visits, the deities are believed to inspect their territories, while villagers perform simple but meaningful rituals to honour water bodies, trees and forested land.
In these villages, the guardians of nature are not distant officials or modern policies, but the very gods who walk the land with their people. Through faith, reverence, fear and tradition, communities continue to protect forests in ways that modern conservation efforts often struggle to achieve.
(This article is an outcome of the Stories of Hope Media Fellowship by IUCN India under the Himalaya for the Future initiative.)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
DA words
டமருகம்
சிவன் கையில் உள்ள உடுக்கை ; இந்த உடுக்கை ஒளியிலிருந்து சம்ஸ்க்ருத தமிழ் ஒலிகள் பிறந்ததாகக் கூறுவார்கள்.
DAMARUKA
Kettle Drum of Lord Siva ; it is believed that Mahesvara Sutras came from the sound of Siva; they are the basic letters of Sanskrit language.
***
தனு
தானவர்கள் தாய் ; தானவர்களும் தைத்யர்களும் அசுரர்கள்
DANU
Mother of Danavas (demons)
***
தசக்ரீவன்
பத்து தலை ராவணனின் பெயர் ; க்ரீவ என்றால் கழுத்து .
DAS/A GREEVA
Ten Necked (Ten headed); Ravana of Lanka.
***
சுவாமி தயானந்த சரஸ்வதி (1824–1883),
குஜராத்தில் பிறந்தார் ; பெயர் மூல சங்கரர் ; துறவறத்தை ஏற்று இந்து சமாஜத்தைத்ச் சீர்திருத்துவதற்காக ஆர்ய சமாஜத்தைத் துவங்கினார் ; வேதங்களே அடிப்படையானவை; ஆகையால் உருவ வழிபாடு தேவையில்லை என்றார் ; ஜாதி முறையை எதிர்த்தார்; சடங்குகள், யாத்திரை போன்றவை தேவை இல்லை என்றார் நாட்டின் விடுதலைக்கும் குரல் கொடுத்தார் இவரது போதனைகள் சத்யார்த்தப் பிரகாசம் என்ற நூலில் உள்ளன .
Swami Dayanand Saraswati (1824–1883)
Founder of Arya Samaj (aarya samaajam). Born as Mula Sankara in Gujarat, he mastered Vedas and became an ascetic. He is one of the reformers of the Hindu society. His teachings are Belief in One Formless God (Ishwar),Vedas are the eternal, infallible source of knowledge, denounced the caste system based on birth, untouchability, and social discrimination. He condemned meaningless rituals, animal sacrifices and pilgrimages. Dayananda’s views were published in his famous work, Satyarth Prakash (The True Exposition). He was a patriot and inspired leaders like Lala Rajpat Rai.
***
DE words
தேவரிஷி
தேவலோகத்தில் வாழும் ரிஷிகள் ; நாரதர் அவர்களில் ஒருவர். பூலோகத்தில் முழு அளவுக்கு ஞானம் பெற்ற ரிஷி முனிவர்கள் இந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறரர்கள்
DEVA,DEVARISHI
Seers living in the Devaloka, that is the celestial region. Those seers who attained perfection are elevated to Deva loka. Narada is one of the Deva Rishis.
***
தேவகி
கிருஷ்ண பரமாத்மாவின் தாயார்; வசுதேவரின் மனைவி; கம்சனின் உறவினர்; இவளுக்குப் பிறக்கும் குழந்தை கம்சனைக் கொல்வான் என்ற ஆரூடம் இருந்ததால் கம்சன் , அவனுக்குப் பிறந்த குழந்தைகளையெல்லாம் கொன்றான். அவளை சிறையில் அடைத்தான். கிருஷ்ணர் பிறந்தபோது பல அற்புதங்கள் நடந்தன. அவரை வாசுதேவன் பாதுகாப்பாக யசோதாவிடம் ஒப்படைத்தான் ; கிருஷ்ணனைக் கொல்ல பல அசுரர்களைக் கம்சன் ஏவினான்; அவை வெற்றிபெறவில்லை
Devaki
Lord Krishna’s mother.
Daughter of Devaka and wife of Vasudeva . she gave birth to Krishna inside a prison . Kamsa, cousin of Devaki put her in jail because there was a prediction that her child would take away his life. But when Krishna was born he was taken to another place of safety to escape from the enraged Kamsa. All the attempts of Kamsa to kill Krishna failed and at the end Krishna himself killed Kamsa.
***
தேவவிரத
பீஷ்மரின் பெயர் (காண்க- பீஷ்மர்)
Devavrata
Another name of Bhisma.
***
தேவயானி
மகாபாரதம், ஆதி பருவத்திலும் மத்ஸ்ய புராணத்திலும் உள்ள ஒரு காதல் கதை. அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியார் அமிர்தசஞ்சீவனி என்ற உயிர் காக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருந்தார். அதன் மூலம் இறந்தவர்களை மீண்டும் உயிர் பெறச்செய்ய முடியும். தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதிக்கு இந்த வித்தை தெரியவில்லை. இதனால் தேவர்கள் ,பிரகஸ்பதியின் மகனான கச்சன் என்பவனை சுக்கிராச்சாரியரிடம் சீடனாகச் சேரும்படி அனுப்பினார்கள். கச்சன், சுக்கிராச்சாரியாரிடம் சென்றான். சுக்கிராச்சாரியருடைய மக்கள் தேவயானி கச்சன் மீது காதல் கொண்டாள். அவன் தங்கள் எதிரியான பிரகஸ்பதியின் மகன் என அறிந்து கொண்ட அசுரர்கள் கச்சனைக் கொன்று அவனது உடலை புலிகளுக்கு உணவாகக் கொடுத்து விட்டார்கள். கச்சன் வராததைக் கண்ட தேவயானி தந்தை சுக்கிராச்சாரியரிடம் சென்று முறையிட்டாள். சுக்கிராச்சாரியார் தனது மந்திர சக்தியினால் கச்சனை உயிர் பெறச் செய்தார். மீண்டும் ஒரு முறை , அசுரர்கள் அவனைக் கொன்று, அவன் உடலை எரித்து அந்த சாம்பலை ஒரு பானத்தில் கரைத்து சுக்கிராச்சாரியர் அருந்தக் கொடுத்தார்கள். . தேவயானி மீண்டும் தந்தையிடம் முறையிட்டாள். தன் சக்தியினால் கச்சன் தன் வயிற்றில் இருப்பதை சுக்கிராச்சாரியர் அறிந்து கொண்டார். சுக்கிராச்சாரியார் யோசித்தார். அவர் தனது வயிற்றுக்குள் இருக்கும் கச்சனுக்கு அமிர்தசஞ்சீவனி மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். பின்னர் அந்த மந்திர சக்தியினால் அவனை உயிர் பெறச் செய்தார். கச்சன் அவரது உடலைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். கச்சன் அமிர்தசஞ்சீவனி மந்திரத்தைச் சொல்லி அவரை மீண்டும் உயிர் பெறச் செய்தான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தேவயானி அவனிடம் கேட்டாள். அதற்கு அவன் “நீ என் குருவின் மகள். மேலும் நான் உன் தந்தை வயிற்றிலிருந்து வந்தேன். ஆகவே நீ எனக்கு சகோதரி போன்றவள். எனவே திருமணம் செய்ய முடியாது” என்று சொன்னான். நீ கற்றுக்கொண்ட வித்தை உனக்குச் சமயத்தில் மறந்து போகும்” எனச் சாபமிட்டாள். கச்சன் அவளிடம் “நீ தேவையில்லாமல் சாபம் போட்டுவிட்டாய். உன்னை ஒரு பிராமணனும் திருமணம் செய்ய மாட்டான். நீ நினைத்த எதுவும் வாழ்வில் நடக்காது” எனப் பதில் சாபம் போட்டான். இதற்கிடையில் தேவயானியை அரசனின் மகள் ஷர்மிஷ்டா , ஒரு வாக்குவாதம் முற்றவே, கிணற்றில் தள்ளிவிட்டாள் . அவ்வழியாக வந்த மன்னன் யயாதி அவளைக் கரம் பிடித்து வெளியே எடுத்தான். இதனால் அவனையே திருமணம் செய்துகொண்டாள்.
Devayani
Daughter of the brahmin priest Sukra. He was the teacher of Asuras/demons. He was the Guru of Danavas at the court of Vrishaparva. She fell in love with her father’s pupil Kacha. It was because of her that Sukracharya was obliged to teach him, Sanjivani Mantra through which the dead could be restored to life once again. Asuras, knowing that Kacha was Deva Guru Brihaspati’s son killed him twice, but he was restored to life by Sukracharya. One time he had to come out of Guru Sukracharya’s stomach with the help of Mrta Sanjivani mantra. When Devayani told him that she wanted to marry him, he refused saying that he was like a sister for him. Both parted but cursing each other. Meanwhile, Devayani had a quarrel with Sharmishta, king’s daughter. As a result, she was pushed into a well by Sharmistha. Yayati, King of another country, passed by the well and rescued her; later she became a legal wife of Yayati
***
தீபாராதனை
இறைவனுக்குத் தீபத்தைக் காட்டும் சடங்கு. பூஜைகளின் முடிவிலும்,யாக யக்ஞங்களின் முடிவிலும் கடவுளுக்கு நெய் தீபத்தைக் கட்டி உபசரிக்கும் சடங்கு இது; முன்னர் சூடத்தைக் காட்டி வந்தனர். தற்போது நெய் தீபம் மட்டுமே காட்டப்படுகிறது. தமிழ் நாட்டுக் கோவில்களில் காலையிலும் மாலையிலும் இது மிக விரிவாக நடைபெறுகிறது. பலவகையான தீபங்களைக் காட்டுவார்கள்; அவை பல வித வடிவங்களில் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள திரிகளுடன் ஒளிரும். முடிவில் அந்த தீபாராதனைத் தட்டினை பக்தர்களுக்குக் காட்டி பிரசாதமும் வழங்குவர். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இது நடைபெறும்.
DEEPA/ARADHANA
At the end of Pujas, Yaga, Yajnas, Arti with a lamp is shown to God. This is called Deepaaraadhanaa. Deepa is lamp. In the olden days camphor was used, nowadays only Ghee Lamp is shown in temples. In South Indian temples it is an elaborate ceremony in the morning and in the evening with bells ringing loudly. The temples have different types of lamps. They are not only differently shaped but also have more wicks. At the end it is shown to assembled devotees and Prasad is distributed.
***
DH words
தர்ம சாஸ்திரங்கள்
இந்து மத சட்ட புஸ்தகங்கள் ; எவைகளைச் செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்ற விதிகளைக் கூறும் நூல்கள்; இவை காலத்துக்கு காலம் மாறும்; தேசத்துக்குத் தேசம் மாறும்; ஆகையால் பல ரிஷிகள் இவைகளை வெவ்வேறு கால கட்டங்களில் எழுதினார்கள் .ஸ்ம்ருதி என்று சம்ஸ்க்ருதத்தில் பெயர்; அதாவது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை மனு, யாக்ஞவல்க்யர் உள்பட சுமார் இருபது ரிஷிகள் இவைகளை எழுதியுள்ளனர். ஆசார விதிகள், சட்டங்கள்; பிராயச்சித்தம் முதலியவற்றை விளக்குகின்றன
Dharma Sastra (saastra)
Hindu Law Books; also known as Smritis. Laws change according to time and place of living. So Hindus have over twenty popular Smritis; most popular is Manu Smriti; all kings declare that they rule according to Manu’s rule. These books say the Dos and Don’t’s for Hindus; They guide Hindus regarding performing rituals. Famous Law books- Manu Smriti; Yajnavalkya Smriti.
Generally they have three parts: 1.Achara (aachaara)-Rules of conduct and practice; 2.Vyavahaara- Judicature; 3.Praayachitta- Penance, atonement (exit strategy)
–subham—
Tags- Devayani, Dharma Sastras, Deva Rishi, தேவகி , கச்ச தேவயானி கதை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 7- ம் தேதி , 2025-ம் ஆண்டு.
***
முதலில் தேசீயச் செய்திகள்
அதிபர் புடினுக்கு பகவத் கீதையின் ரஷ்ய பதிப்பை பரிசளித்த மோடி
இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு, பகவத் கீதையில் ரஷ்ய பதிப்பை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருநாள் அரசுமுறை பயணமாக டில்லி வந்தடைந்தார். பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புடினுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், ரஷ்ய அதிபர் புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்று, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் புடின் பங்கேற்றார். பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுக்கு பகவத் கீதையில் ரஷ்ய பதிப்பை பரிசாக வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை அதிபர் புடினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
***
காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டு விழா துவக்கம்:
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நான்காவது பதிப்பு டிசம்பர் 2 ஆம் தேதி துவங்கியது.. மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை இதை நடத்துகிறது. இதன் கருப்பொருளாக ‘ தமிழ் கற்கலாம்’ என அறிவிக்கப்பட்டு உள்ளது.
துவக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் தமிழக கவர்னர் ரவி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து நடத்தும் இவ்விழாவில் முதல் கட்டமாகத் தமிழ்நாட்டில் இருந்து 7 குழுக்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்டமாகத் தமிழ்நாட்டில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து தமிழ் மொழியை கற்க உள்ளனர்.
***
வேத உலகில் சாதனை படைத்த இளைஞர்:
வேதமூர்த்தி தேவவ்ரத மகேஷ் ரேகே 19 வயது இளைஞர், காசியில் சுக்ல யஜுர் வேதத்தை தண்டக்ரம முறையில் பாராயணம் செய்து சாதனை புரிந்துள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரைப் பாராட்டி விருதுகள் வழங்கினார் ;பிரதமர் மோடியும் தனது நிகழ்ச்சி ஒன்றில் அவரைப் பாராட்டினார் .
தண்டக்ரம முறை பாராயணம் என்பது கடினமான முறை.
தண்டக்ரம பாராயணத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான ஸ்லோகங்களைத் நினைவில் கொண்டு பிழையின்றி தொடர்ந்து 50 நாள்களுக்கு மேல் முழுவதையும் சொல்லி முடித்துள்ளார்.
இது மாபெரும் சாதனையென்று வேதமறிந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். தெய்வீக திறமை, உண்மையான தபஸ், மற்றும் நமது குரு பரம்பரையின் காலத்தால் அழியாத வலிமைக்கு இது ஒரு சான்று. என்று அவர்கள் பாராட்டினர்.
***
Hindu Front Leader
Ram in Goa
19 year old Vedic Scholar
கோவிலில் தங்கப் பல்லியை திருட முயற்சி; ஐகோர்ட்டில் வழக்கு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பழமையான தங்கப்பல்லி சிற்பத்தின் தங்கக் கவசத்தை திருட நடந்த முயற்சி தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தின் உத்தரத்தில், தங்கப்பல்லி, தங்கச்சந்திரன், தங்கச்சூரியன், வெள்ளிப்பல்லி ஆகிய சிற்பங்கள் உள்ளன.
கோவிலில் பல நுாற்றாண்டுகளாக உள்ள இந்த சிற்பங்களின் தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள், சிலைகளை கோவில் அர்ச்சகர்களுடன் சேர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் திருட முயற்சித்துள்ளனர். ஏற்கனவே உள்ள சிலைகளை அகற்றிவிட்டு, அதே போன்ற சிலைகளை வைக்கவும் முயன்றுள்ளனர்.
Golden Lizard in Kanchii Temple Stolen
எவ்வித அனுமதியும் பெறாமல், இதுபோல சிலைகளை மாற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது. பழங்கால பொருட்களை, உரிய அனுமதியின்றி அகற்ற அறநிலையத்துறை சட்டம் தடை விதிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, “மனுதாரரின் புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது.
‘ ‘விசாரணையில், சிலை திருட்டு ஏதும் நடக்கவில்லை என தெரியவந்தது. அதையடுத்து, புகார் முடித்து வைக்கப்பட்டது. அதுகுறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,” என்றார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், ‘முழு விசாரணை நடத்தாமல் புகாரை முடித்து வைத்ததற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளேன்.
அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு மாறாக, சிலைகளை மாற்றி உள்ளனர்’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
****
திருக்கார்த்திகை தீபத் திருவிழா
டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி புதன்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது திருவண்ணாமலையில் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது . தீபத்திற்கான 300 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் 1500 மீட்டர் திரி,4500 கிலோ நெய் ஆகியவையும் மலை மீது முதல் நாளன்றே கொண்டு செல்லப்பட்டது.
.அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு மட்டுமே உண்டு. இவர்கள் பரம்பரை பரம்பரையாக தலைமுறை தலைமுறையாக இந்த புனிதமான பணியை செய்து வருகின்றனர். பர்வத ராஜகுலத்தினர் பார்வதி தேவி அவதரித்த மரபில் வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொள்பவர்கள். ஆகையால், இவர்கள் மீனவர்கள் என்றும் செம்படவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
****
தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; டிசம்பர்.9 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை, டிச.,9க்கு ஒத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை இன்று (டிச.,05) காலை 10.45 மணிக்கு மீண்டும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமி நாதன் வழக்கு விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
***
தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு
தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விஷயத்தில், மேல்முறையீடு என்ற பெயரில் இந்த அரசு இரட்டை வேடம் போடுகிறது.
தி.மு.க., ஆட்சியில், 158 கோவில்களை இடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது; 200 கோவிலுக்கு மேல் வரும் என்று நினைக்கிறோம். ஹிந்துக்கள் மீது, இந்த அரசுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்த அரசு இப்படி செயல்படுகிறது.
மதசார்பற்ற அரசு என்று கூறுபவர்கள், தீபம் ஏற்ற அனுமதி அளித்திருக்க வேண்டும். இவ்விஷயத்தை எல்லாம் கண்டித்து, தமிழகம் முழுதும் போராட்டம் நடத்த உள்ளோம் என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.
*****
சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ எடுக்க தடை
சபரிமலையில் போட்டோ எடுக்கவும், அய்யப்பன் சிலைகளை கொண்டு செல்லவும் தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் பூஜாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில், பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
***
இருமுடியை சோதனையிடாமல்விமானத்தில் எடுத்து செல்லலாம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர்.
வழக்கமான சோதனை எதுவும் இல்லாமல் விமானத்துக்குள் எடுத்து செல்ல இருமுடிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமான துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் ஜன. 20-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
****
பாகிஸ்தானில் 37 ஹிந்து கோவில்கள், குருத்வாராக்கள் மட்டுமே செயல்படுகின்றன: அதிர்ச்சி தரும் செய்தி
பாகிஸ்தானில் மொத்தமுள்ள 1817 ஹிந்து கோயில்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டு தலங்களில் 37 மட்டுமே செயல்பட்டு வருகிறது என அந்நாட்டு பார்லிமென்ட் குழு முன்பு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த குழு தலைவர் டானேஷ்குமார் கூறியதாவது: சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு அரசியலமைப்பு அளித்த வாக்குறுதியை பார்லிமென்ட் குழுவானது நிறைவேற்ற வேண்டும். எனக்கூறினார்.
ரமேஷ்குமார் வன்க்வானி என்ற எம்பி கூறியதாவது: சொத்து மீட்பு குழுவானது, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களை கவனிப்பதை கைவிட்டுவிட்டது. இந்த குழுவின் தலைமைப்பதவியை முஸ்லிம் அல்லாத நபரிடம் வழங்க வேண்டும். அப்போது தான் புறக்கணிக்கப்பட்ட மத சொத்துகளை மறுசீரமைத்து முறையாக பராமரிக்க முடியும். என்றார்.
கேசோ மால் கேல் தாஸ் என்ற எம்பி கூறுகையில், நாடு பிரிவினைக்கு பிறகு பெரும்பாலான கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் கைவிடப்பட்டன. உள்ளூரில் வசித்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர் என்றார்.
***
சென்ற வாரச் செய்திகள்
சென்ற ஞாயிற்றுக்கிழமை நமது ஒலிபரப்பு நடக்காததால் அந்த வாரத்தில் நடந்த மூன்று முக்கிய விழாக்களை சுருக்கமாகக் காண்போம்
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அன்று ராமர் கோவிலின் உச்சியில் தர்ம கொடியை ஏற்றி வைத்தார்
22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட இந்த காவி நிறக் கொடி, பாராசூட் தர துணியால் ஆனது. இது ஒரு தடிமனான நைலான் கயிற்றைக் கொண்டு கோவிலின் உச்சியில் ஏற்றப்பட்டுள்ளது. இது 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. கொடியில் சூரியன் சின்னம் உள்ளது. இது ராமர் பகவானின் சூர்ய வம்சத்தைக் குறிக்கிறது. மேலும், ஓம் மற்றும் கோவிதாரா மரத்தின் சின்னங்களும் உள்ளன. கோவிதாரா மரம், ராம் ராஜ்யத்தின் மாநில மரமாக விவரிக்கப்படுகிறது.
****
குருக்ஷேத்ரத்தில் சங்கு சின்னம் திறப்பு
பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறப்பான சங்கை வைத்திருந்தனர். அதற்குத் தனியான பெயரும் உண்டு. அதே போல கிருஷ்ண பரமாத்மாவும் கையில் சங்கு வைத்திருப்பார் ; கிருஷ்ணனின் சங்கின் பெயர் ‘பாஞ்சஜன்யம்’
முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவுப்படி சிரச்சேதம் செய்யப்பட்ட ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆம் ஆண்டு உயிா்த் தியாக நினைவு தினத்தையொட்டி, ஹரியாணாவின் குருக்ஷேத்ரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.
அப்போது மஹாபாரத வளாகத்தில் கிருஷ்ணனின் பாஞ்சஜன்ய சங்குச் சின்னதத்தைத் திறந்து வைத்தார் அதன் எடை சுமார் 5 டன். அது ஐந்து மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது;
மஹாபாரத காட்சிகளைச் சித்தரிக்கும் புதிய வளாகம் குருக்ஷேத்ரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
***
77அடி வெண்கல ராமர் சிலை திறப்பு
கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில், 77 அடி உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மேலும் மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவை முன்னிட்டு பத்ரிநாத்திலிருந்து கோவா வரை ஒரு பிரமாண்டமான ஸ்ரீ ராம யாத்திரை நடைபெற்றது. விழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
***
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு டிசம்பர் 14 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
7-12-2025 அன்று நடைபெற்ற ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!
ஆலயம் அறிவோம்
வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
மின் உலாவிய சடையினர், விடையினர்,
மிளிர்தரும் அரவோடும்
பன் உலாவிய மறை ஒலி நாவினர்,
கறை அணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றை அம் தாரினர்,,
புகழ் மிகு கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை
ஓடிட, வீடு ஆமே
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான கீழ் வேளூர் திருத்தலமாகும். இத்தலம் திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
வேளூர் என்ற பெயரில் பல தலங்கள் உள்ளன. கிழக்கே இந்தத் தலம் அமைந்துள்ளதால், “கீழ் வேளூர்” என்ற பெயரைப் பெற்றது.
, இறைவன் : கேடிலியப்பர், அக்ஷயலிங்க ஸ்வாமி
அம்மன் – வனமுலை அம்மன், சுந்தர குஜாம்பாள்
தல விருக்ஷம் – பத்ரி, இலந்தை
தீர்த்தம் – சரவண பொய்கை, அக்னி தீர்த்தம்,, சேஷ தீர்த்தம், ப்ரம்ம தீர்த்தம், சந்திர மற்றும் குபேர தீர்த்தங்கள்
புராதனமான இந்தக் கோவிலைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
படைப்பு தெய்வமான பிரம்மா தனது படைப்பாற்றல் குறைவுபட்டதால் இங்கு வடக்கு கோபுர வாயிலின் எதிரே பிரம்ம தீர்த்தத்தை உருவாக்கி அதில் மூழ்கி அக்ஷயலிங்க ஸ்வாமியை வேண்டி வழிபட்டார். உடனே அவருக்கு மீண்டும் படைக்கும் ஆற்றல் வந்தது.
இங்கு அமைந்துள்ள திருமஞ்சனக் குளம் தோஷ நிவர்த்தியை ஏற்படுத்தும் குளமாகும். நிருதி மூலையில் உள்ள இந்தக் குளத்தில் நீராடி இந்திரன் தன் சாபம் நீங்கப் பெற்றான். அக்னி தீர்த்தம் தெற்கு மூலையில் உள்ளது. இதில் நீராடினால் சரும வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்.
இன்னொரு புராண வரலாறும் உண்டு.
சூரபத்மனை வதம் செய்த சுப்ரமண்யர் தனக்கு கொலையினால் ஏற்பட்ட பாவம் போவதற்காக சிவ பிரானை வழிபட்டார். கொலைபாதகங்கள் வீரஹத்தி என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் தொல்லையிலிருந்து விடுபட சிவபிரான் முருகனை நோக்கி “நீ பத்ரிவனம் எனப்படும் கீழ்வேளூர் சென்று எம்மை வழிபடுக” என்று அருள் பாலித்தார். அப்படியே முருகபிரானும் கீழ்வேளூர் வந்தார். கோவிலின் முன்னால் தன் வேலாயுதத்தால் குத்த சரவண தீர்த்தம் என்ற குளம் உருவானது. அதில் நீராடி கேடிலியப்பர் என்னும் அக்ஷயலிங்க ஸ்வாமியை அவர் வழிபடலானார். ஆனால் அப்போதும் வீரஹத்திகள் அவரைச் சூழ்ந்து தொல்லை கொடுத்தன. அன்னை பராசக்தி முருகன் படும் கஷ்டத்தைக் கண்டு வீர ஹத்திகளின் மீது கோபம் கொண்டு அனைவரும் அஞ்சும்படியான கோர ரூபத்தை எடுத்தாள். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளுடன் ஆகாயத்தையும் சேர்த்து ஐந்து இடங்களிலும் வட்டமாகப் பரவி நின்றாள். அஞ்சுவட்டத்து அம்மன் ஆகி முருகனின் தவத்திற்கு
இடையூறு ஏற்படாத வண்ணம் காத்தாள்.
பார்வதியின் கோர உருவத்தைக் கண்ட வீர ஹத்திகள் அஞ்சி ஓடின. தவம் முற்றுப் பெறவே முருகபிரான் முன்னர் சிவன் காட்சி அளித்து ஆசி வழங்கினார். அவரது நெற்றிக் கண் சுடரினால் வீரஹத்திகள் அழிந்தனர்.
நிலையாக இங்கிருந்து பக்தர்களுக்கு அருள் புரிவாயாக என்ற சிவபிரானின் வாக்கை ஏற்று அம்மனும் அஞ்சுவட்டத்து அம்மன் என்ற பெயருடன் இங்கு நிலை பெற்று அனைவருக்கும் அருள்பாலிக்கலானாள்.
இந்த தலத்தைப் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.
சிங்கத்வஜன் என்னும் ஒரு அரசன் காட்டில் வேட்டையாடி களைப்படைந்தான். தாகம் தணிப்பதற்காக ஒரு முனிவரது ஆசிரம் சென்று ஆணவத்துடன் தண்ணீர் கொண்டு வருமாறு கத்தினான். தியானத்தில் இருந்த முனிவர் இதனால் கோபம் கொண்டு, “கழுதை போலக் கத்தும் நீ ஒரு கழுதை ஆகக் கடவது” என்று சபிக்க அவன் கழுதை ஆனான்.
இன்னொரு அரசன் விந்திய மலையில் தவம் புரிந்த அகத்திய முனிவரை தரிசனம் செய்யச் சென்றோரை துன்புறுத்தி வந்தான். இதனால் அவனை அகத்தியர் கழுதையாகும் படி சபித்தார்.
இந்த இரண்டு கழுதைகளையும் வணிகன் ஒருவன் துணி மூட்டைகளைச் சுமக்கப் பயன்படுத்தலானான். ஒரு நாள் இரு கழுதைகளும் அக்ஷயலிங்க கோவிலில் இருந்த பிரம்மதீர்த்தத்தில் நீரைப் பருகின. உடனே அக்ஷயலிங்க ஸ்வாமி அருளால் அவைகளுக்கு முந்தைய ஜன்மம் நினைவுக்கு வர அவைகள் மனிதர் பேசும் மொழியில் பேச ஆரம்பித்தன. இவை பேசுவதைக் கேட்ட வணிகன் அவற்றை விட்டு ஓடி விட்டான். இரு கழுதைகளும் கோயிலை வலம் வந்தன. ஆடி மாதம் பௌர்ணமி முதல் சதுர்த்தி வரையில் பிரம்மதீர்த்தத்தில் நீர் அருந்தினால் நீங்கள் மீண்டும் மனித உருவை அடைவீர்கள் என்று அசரீரி ஒன்று ஒலித்தது. அதன் படியே அவை நீர் அருந்த மனித வடிவத்தைப் பெற்றன.
இன்னொரு வரலாற்றின் படி மார்க்கண்டேயர் தம் நித்ய பூஜையைத் வழக்கம் போலத் தொடங்கினார். அப்போது பிரம்மகற்பம் முடிந்து கடல் பொங்கி அண்டங்கள் அழிய ஆரம்பித்தன. “என்றும் அழியாத தென் இலந்தை வனம் சென்று கீழ்வேளூர் கேடிலியை வணங்குவாயாக” என்று அசரீரி ஒன்று ஒலித்தது. அவரும் உடனே அக்ஷயலிங்க ஸ்வாமியை வழிபட கீழ் வேளூர் வந்தார்; வழிபட்டார். ஆகவே உலகம் அழியும் காலத்திலும் அழியாத தலம் கீழ்வேளூர் என்பது விளங்குகிறது.
மூலவர் அக்ஷயலிங்க ஸ்வாமி என்ற கேடிலியப்பர் ஸ்வயம்பு மூர்த்தி. அம்மன் வனமுலை அம்மன் என்றும் சுந்தர குஜாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளது. சந்நிதி கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. இரண்டு பிரகாரங்கள் இங்கு உள்ளன. உள் பிரகாரத்தில் முருகன், பத்ரகாளி, நடராஜர், ஸோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி, அகஸ்தியர், விஸ்வநாதர், கைலாஸநாதர், பிரஹதீஸ்வரர். அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
முருகப் பெருமானுக்கும் குபேரனுக்கும் தனித்தனியாக மிகப் பெரிய சந்நிதிகள் உள்ளன.
இங்குள்ள விநாயகர் பத்ரி விநாயகர் என்ற திருநாமத்தைக் கொண்டுள்ளார்.
இங்குள்ள நடராஜர் இடது பாதத்தை ஊன்றி வலது பாதம் தூக்கிய நிலையில் பத்து திருக்கரங்களுடன் அகத்திய முனிவருக்குக் காட்சி அளித்து அருள் பாலித்தார்.
கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களில் இந்தக் கோவிலும் ஒன்று.
இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும் திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடி அருளியுள்ளனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கேடிலியப்பரும் வனமுலை அம்மனும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
மூளைக்கும் பிரார்த்தனைக்கும் உள்ள தொடர்பை நிரூபித்து பிரசாரம் செய்யும் அதிசய டாக்டர் ஆர்லீன் டெய்லர்!
ச.நாகராஜன்
“More Things Are Wrought by Prayer Than This World Dreams Of”
இந்த உலகம் கனவில் காண்பதை விட அதிகமதிகம் பிரார்த்தனையால்பெறப்படுகிறது – கவிஞர் டெனிஸன்
மூளைக்கும் பிரார்த்தனைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று தனது லாபரட்டரி சோதனைகளால் உறுதிப் படுத்தியிருக்கிறார் ஒரு மூளை இயல் நிபுணர் என்பதால் உலகம் சற்றுப் பரபரப்பை அடைந்திருக்கிறது.
ஆர்லீன் டெய்லர் (Arlene R. Taylor, PhD) என்ற அதிசயப் பெண்மணி ஒரு மூளை இயல் நிபுணர், எழுத்தாளர். ஆற்றல் மிகுந்த பேச்சாளர்.
இவரை உலகம் இப்போது ‘ப்ரெய்ன் குரு’ என்று பாராட்டுகிறது.
“நாம் பிரார்த்தனை செய்யும் போது மூளை மின்னலைத் துடிப்புகளை வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் கடவுள் இருப்பதை நான் நம்புகிறேன். அவரிடம் மிகப் பெரிய கம்ப்யூட்டர் ஒன்று இருக்கிறது. பெரிய திரையும் இருக்கிறது. அவரால் எல்லா பிரார்த்தனைகளையும் கேட்க முடிகிறது. அவரால் என்னுடன் தொடர்பு கொள்ளவும் முடிகிறது” என்று கூறும் டெய்லர் மேலும் இது பற்றி விளக்குகிறார் இப்படி:
Arlene R. Taylor, PhD
“இவை எல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்ன சிகிச்சை அல்லது மருந்துகளைப் பெறுகிறார் என்று அறிய முடியாதபடி செய்யும் ப்ளைண்ட் ஸ்டடி (BLIND STUDY) ஆகும். இதில் எலக்ட்ரோடுகளை உங்கள் தலையில் பொருத்தி ஆர்லாண்டோவில் உள்ள மருத்துவ மனையிலோ அல்லது வேறெங்கோ இருக்கும் ஒருவருக்காகப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்கள். பிரக்ஞையற்று இருக்கும் அந்த நோயாளிக்கும் இது தெரியாது. உங்களுக்கும் நடப்பது என்ன என்று தெரியாது. ஆனால் பிரார்த்தனையைச் செய்ய ஆரம்பித்த அந்தக் கணமே அவருடைய மூளையில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்படுகிறது.
இது ஒரு மர்மமான சக்தி. இது தான் பிரார்த்தனையின் வலிமை.” என்கிறார் டெய்லர்.
ஒரு நாளைக்கு 12 நிமிடங்கள் வழக்கமாக விடாது பிரார்த்தனை செய்யும் ஒருவர் அல்ஜெமிர் வியாதியிலிருந்து மீண்டு வர முடியும் என்பது டெய்லரின் சோதனை முடிவுகளால் தெரிய வருகிறது. இது இப்போது அறிவியலால் ஆமோதிக்கப்பட்டு விட்டது.
உலகெங்கும் டெய்லரின் புத்தகங்கள் அமோக விற்பனையாகி சக்கைப் போடு போடுகின்றன.
இவர் சிறந்த பேச்சாளர் என்பதால் மீண்டும் மீண்டும் இவரைப் பேச அழைக்கின்றனர்.
மூளை என்பது நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்திற்குமான வன்பொருள் (Hardware); மனம் என்பது நுண்மையான மென்பொருள் (Software). நமது எண்ணங்கள், நம்பிக்கைகள், பார்வைகள், உணர்ச்சிகள் ஆகிய அனைத்தும் வன்பொருளில் ஓடுகிறதுஎன்று கணினி பாஷையில் விளக்குகிறார் டெய்லர்.
மூளையின் எச்சரிக்கை அமைப்பான அமிக்தலாவை பிரார்த்தனை அமைதிப்படுத்துவதால் மன அழுத்தம், கவலை, பயம் ஆகியவை பிரார்த்தனை செய்வோரைப் பாதிப்பதில்லை.
அது மட்டுமல்ல, நியூரோபிளாஸ்டிசிடி என்ற மூளையின் அதிசயிக்கத்தக்க தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் சக்தியை பிரார்த்தனை தருகிறது.
ஒருமுனைப்பட்ட கவனத்துடன் தீவிர தியானமானது, ப்ரீ ஃப்ரண்டல் கார்டெக்ஸ் என்னும் மூளைப் பகுதியை ஆக்கபூர்வமாக ஊக்குவிக்கிறது. இதைத் தொடர்ந்து ஊக்குவிப்பதால் அதிக கவனமும், அன்றாட வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடும் உண்டாகிறாது.
பிரார்த்தனை இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. வளர்சிதை மாற்றத்தை மெதுவாக ஆக்கி அமைதியையும் அதிகத் திறனையும் தருகிறது. வலி இருந்தால் அதைப் போக்குகிறது.
அமிக்தலா செயல்படுவதை மெதுவாக ஆக்குவதால் பயம், மன அழுத்தம் ஏற்படுவதில்லை.
எதிர்மறை எண்ணங்கள், மனச் சோர்வு ஆகியவை குறைகிறது.
நன்றி உணர்வு, இரக்கம் ஆகியவை மேம்படுகிறது.
பக்கம் பக்கமாக பிரார்த்தனையின் சக்தியை 32 புத்தகங்களில் டெய்லர் விளக்குகையில் நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.
அவரது உரைகள் பலவற்றை யூடியூபிலும் கேட்கலாம்.
அறிவியல் பூர்வமாக BLIND STUDY சோதனைகள் மூலம் பிரார்த்தனையின் பலன்கள் விளக்கப்படுவதால் இந்த பிரார்த்தனை டாக்டரை அனைவரும் பாராட்டுகின்றனர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
DISCUSSION ON DR JEYAMOHAN’S WORKS IN LONDON
London Swaminathan adorning Dr Jeyamohan with a shawl
Panelists
Welcome address by Prabhu
Giridharan
Krivisha
Dhanraj
Rajesh
Aditya
Ajeendran was adorned with a shawl
Ananya
Famous Tamil writer Dr Jeyamohan has visited Britain to attend many meetings and seminars organised to felicitate him and to discuss his translated stories and novels. His books have been translated into many South Indian languages. Recently he has been awarded an honorary doctorate for his contribution in literature.
The first meeting was held in London on sixth December 2025 at October Gallery in Central London. Over 100 people attended the meeting. His translated works in Malayalam, Telugu, and Kannada were taken for discussion. a panel of scholars including Dr Prameela, Pawan and Giridharan took part in the discussion. The panel discussion was coordinated by Dhanraj. Rajesh compered the whole programme. Meeting began with a prayer by little girl Krivisha.
Meeting was organised by Giridharan Rajagopalan, Dhanraj, Sivakumar, Muthu, Prabhu, Rajesh and many other volunteers.
Earlier young readers Aditya and Ananya analysed his works as found in translation. London Swaminathan former BBC broadcaster, former University Tamil Tutor and author of 154 books was invited to adorn Dr Jeyamohan with a shawl. He was presented a statue of Goddess Sarasvati Devi.
Following the panel discussion Dr Jeyamohan answered the questions from the audience. He dealt with problems in translations, and selling English books in Tamil Nadu. He felt that the South Indian authors are not given due importance in the western world. Their works are seldom translated. To redress such grievances, he is planning to bring together all the famous writers from South India. He said that two big conferences are planned for 2026 and 2027. First such conference of South Indian writers will be held in America next year and another conference in London in 2027. He also said translations of South Indian fiction will be done with the consultation of English writers to make it more appealing to the westerners. Already annual Vishnupuram meetings invite authors from Kannada, Telugu and Malayalam languages.
Prabhu welcomed the participants and Giridharan proposed a vote of thanks.
Towards the end of the meeting, the author was adorned with more shawls on behalf of many South Indian and Sri Lankan organisations based in London.
Ajithan, Dr Jayamohan’s son, who is also an author was felicitated. Both will be attending many more meetings in the north of England and Scotland.
–subham—
Tags – Tamil writer Jeyamohan, Panel discussion, Translated works, Giridharan., London meeting, 6 12 2025