சமாதி என்றால் என்ன? சிவனிடம் பார்வதி கேட்ட கேள்வி! (கட்டுரை எண்: 2334)

samadhi

Compiled  by London swaminathan

Date: 16 November 2015

POST No. 2334

Time uploaded in London :– 9-49 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல்:-

பார்வதி: நாதா! அடிக்கடி என்னை கயிலாயத்தில் விட்டுவிட்டுப் போய்விடுகிறீர்கள். சுடுகாட்டுக்குச் சென்று சாம்பலைப் பூசியும் ஆனந்தமாக இருக்கிறீர்கள். எனக்குப் பிரிவு துயர் தாங்கவில்லை. என் மனதை சாந்தப்படுத்த எனக்கும் தியானம், சமாதி நிலை முதலியவற்றை கற்றுத் தரக்கூடாதா?

சிவன்: அன்பே! ஆருயிரே! நீ இல்லாமல் இவ்வுலகம் இயங்கமுடியாதே. சக்தி இல்லையேல் சிவன் இல்லை. வா, உனக்குக் கற்றுத் தருகிறேன். இதோ இப்படி பத்மாசனத்தில் அமர். கண்களை மூடு. தியானத்தைத் துவங்கு. மனதை உள்முகமாகத் திருப்பு.

என்ன தெரிகிறது?

பார்வதி: உங்கள் உருவம்தான் தெரிகிறது.

சிவன்: அதையும் தாண்டிச் செல். இப்போது என்ன தெரிகிறது?

பார்: மிகப் பெரிய ஜோதி (ஒளி) தெரிகிறது.

சிவன்: நல்லது.இன்னும் மேலே செல். என்ன காண்கிறாய்?

பார்: ஓம்கார நாதம் என் காதில் ஒலிக்கிறது.

சிவன்: அந்த நாதத்தையும் தாண்டிச் செல்வாயாக! இப்போது என்ன அனுபவம் ஏற்படுகிறது?

பார்: ! ! ! ! !

சிவனுடைய கடைசி கேள்விகு பார்வதி பதிலே சொல்லவில்லை. அவள் பிரம்மத்தில் (கடவுளிடம்) ஐக்கியமாகிவிட்டாள். அங்கே கேட்பவரும் இல்லை, கேள்வியும் இல்லை. காண்பவருமில்லை, காணப்படும் பொருளுமில்லை.எல்லாம் பிரம்மாண்டசக்தியில், மூலமுதற் பொருளில் கரைந்து விட்டது. மாறுதலற்ற, உருவமற்ற ஒரே பொருள்தான் அங்கே உண்டு.

திடீரென பார்வதியின் சன்னமான, ஆனந்தமயமான குரல் ஒலித்தது.

அஹம் பிரம்மாஸ்மி

நானே பிரம்மம் (இறைவன்)!

இதையே அருணகிரிநாதர் சும்ம இருப்பதே சுகமென்பார். சும்மா இரு! சொல்  அற! என்பார்.

இது வட கேரள காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி ராமதாஸ் சொன்ன கதை! மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன். இது தொடர்பாக நான் முன்னர் எழுதிய நான்கு கதைகளை இதுவரை படித்திராவிடில் தொடருங்கள்………….

Deepak-Osho

கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!!

சம்ஸ்கிருத, தமிழ் மொழி உப்பு பொம்மை கதைகள்

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:947 , தேதி ஏப்ரல் 1, 2014.

கல்லூரியில் ‘கெமிஸ்ட்ரீ’ படிக்கும் மாணவர்களுக்கு இரசாயன (வேதியியல்) பரிசோதனைக் கூடத்தில் உப்பு பரிசோதனைகள் நிறைய வரும். இந்தப் பரிசோதனை களைத் துவக்கிவத்தவர்கள் உபநிஷத ரிஷிகள். பெரிய கருத்துக்களை சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது போல உபநிஷதங்கள் கற்பிக்கின்றன. ஒரு மாணவனை ஒரு கைப்பிடி உப்பைக் கொண்டுவரச் சொன்னார் ஒரு ரிஷி. அவனையே விட்டு ஒரு கோப்பை நீரில் போடச் சொன்னார். அது கரைந்த பின்னர் உப்பு எங்கே போனது என்று கேள்வி கேட்டு, உப்பு நீரை சுவைக்கச் சொல்லி இன்னும் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு பிரம்மம் பற்றிப் பாடம் நடத்துகிறார். பிற்காலத்தில் எல்லோரும் இந்த உவமைகளைப் பயன்படுத்தத் துவங்கினர்.

இதே கருத்தைச் சொல்லும் ஒரு சித்தர் பாடல்:

நாழி உப்பும் நாழி அப்பும்/ என்ற பாடலை “சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி” என்ற தலைப்பில் ஏற்கனவே கொடுத்துள்ளேன்:

நாழி அப்பும் நாழி உப்பும் நாழியான வாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்
ஏறில் ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே.

அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு என்னும் கிராமியப் பழமொழியை விளக்க உப்பு- நீர் உவமையைப் பயன்படுத்துகிறார் சிவவாக்கியர் என்னும் சித்தர். உப்பு – எல்லோருக்கும் தெரிந்த சொல். அப்பு என்றால் தண்ணீர் என்று பொருள்.

கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க முடியாது. அவ்வளவு மகிமை நிறைந்தவர். வருணனைகளுக்கு அப்பாற்பட்டவர். கண்டவர் விண்டிலர்.

யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். அதவது விண்டவர் கண்டிலர். இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சில கதைகளைச் சொல்கிறார். அதே விஷயங்களை சித்தர்களும் தமிழ் அடியார்களும் சொல்லுகின்றனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இந்த உவமை இருக்கிறது!!

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ—என்று மாணிக்கவாசகர் பாடினார்.

RK

நான்கு சுவையான கதைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் மிகவும் பிரபலமானவை; எல்லோரும் கேட்டிருப்பார்கள் ஆகவே சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் அடியார்களின் பாடல்களைக் காண்போம்.

கதை 1:–

ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மன் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.

ice1

கதை 2:

புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மமனைக் கண்டவர் நிலையும் இதே. அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.

கதை 3:-

ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். அவன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.

ice2

கதை 4:

நான்கு நண்பர்கள் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட ஒரு உயரமான கட்டிடத்தைப் பார்த்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய நால்வருக்கும் ஒரே ஆசை. முதல் ஆள் உயர ஏறிப் போய் எட்டிப் பார்த்தான். ஆ! ஆ! ஆ! என்று குரல் மட்டுமே வந்தது. உள்ளே குதித்து விட்டான். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது ஆள் ஒவ்வொருவனாகப் போனார்கள். அவர்களுக்கும் இதே கதிதான். பிரம்மத்தை அறிந்தவர்கள் வெளியே வரவும் மாட்டார்கள், பிரம்மத்தினது குண இயல்புகளை வருணிக்கவும் மாட்டார்கள். வருணிக்கவும் முடியாது. ஆனந்தக் கடலில் நீந்தத் துவங்கிவிடுவார்கள்.

-சுபம்-

பாகற்காயின் தீர்த்த யாத்திரை: ஒரு சுவையான சம்பவம்!

ashta vinayak

அஷ்ட சித்தி விநாயக ஸ்தலங்கள், மஹாராஷ்டிரம்.

Article Written by London swaminathan

Date: 6 November 2015

Post No:2304

Time uploaded in London :– 6-12  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?

கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?

ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்?

எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே. (5-99-2 அப்பர் தேவாரம்)

புனித யாத்திரை போவது அவசியம்தான். ஆனால் அதை அர்த்தமில்லாத சடங்காகவோ, சுற்றுலாவாகவோ நடத்தக் கூடாது. காசி, கயிலாயம், பத்ரிநாத், கேதார்நாத், திருப்பதி, சபரிமலை, கன்யாகுமரி என்று யாத்திரை போவோரை நினைத்து அப்பர் பாடிய தேவாரத்தை மேலே கண்டோம். துகாராம் சுவாமிகளின் கதை ஒன்றைக் காண்போம்.

நிவ்ருத்தி, ஞானதேவ், சோபான, முக்தாபாய், ஏகநாத், நாம்தேவ், துகாராம், சமர்த்த ராமதாஸ் என்போர் மகாராஷ்டிர பூமியை பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்த பெரியோர்களாவர்.

இவர்களில் ஒருவரான துகாராம் செய்வித்த “பாகற்காய் யாத்திரை” கதையைக் கேளுங்கள். ஒரு முறை கிராம மக்கள் எல்லோரும் தீர்த்த யாத்திரை செய்ய முடிவு செய்தனர். துக்காராம் சுவாமிகளிடம் சென்று அவரும் வரவேண்டுமென்று வேண்டினர். அவர் தான் வரமுடியாதென்றும் ஆனால் தன் கொடுக்கும் பாகற்காய்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று ஆறு, குளம், கடலில் நீராடும்போது அவைகளையும் குளிப்பாட்டி, கோவில்களுக்குச் செல்கையில் பாகற்காய்களையும் தரிசினம் செய்விக்கும்படி செய்யவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.

கிராம மக்கள் ஆகையால் ஏன், எதற்காக என்று கேட்காமல் அப்படியே பாகற்காய்களை அவரிடம் பெற்று  தாங்கள் சென்ற எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றனர்; புனித நீராடச் செய்தனர். கடவுளரை தரிசினம் செய்யும் போதெல்லாம் அதையும் சந்நிதியில் வைத்தனர்.

ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் யாத்திரை முடிந்தது. எல்லோரும் பரம திருப்தியுடன் ஊருக்குத் திரும்பி துகாராம் சுவாமிகளின் காலில் விழுந்து நம்ஸ்கரித்துவிட்டு பாகற்காய்களையும் பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் சொன்னார்:

bitter gourd

நீங்கள் எல்லோரும் நான் சொன்னபடி செய்து பாகற்காய்களையும் கொண்டு வந்துவிட்டீர்கள். எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்கள் அனைவருக்கும் விருந்து தர விரும்புகிறேன். வருகின்ற வெள்ளிக் கிழமை எல்லோரும் என்னுடைய ஆசிரமத்துக்கு வாருங்கள் என்றார்.

அனைவரும் அறுசுவை விருந்துக்கு ஆசைப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமையன்று சந்தித்தனர். வடை, பாயசம், அப்பளம், பொறியலுடன் அறுசுவை உண்டி படைக்கப்பட்டது. அப்பொழுது துகாராம் சுவாமிகள், யாத்திரைக்குப் போன பாகற்காயையும் பொறியலாகச் செய்து அனைவர்க்கும் இது பிரசாதம் என்று பரிமாறினார். அனைவரும் அதை வாயில் வைத்த அடுத்த கனமே “மகா கசப்பு” என்று முகம் சுழித்தனர்.

துகாராம் சுவாமிகள், வியப்புடன், கசக்கிறதா? என்ன அதிசயம்? எத்தனை புனிதத் தலங்களுக்கு எடுத்துச் சென்றீர்கள்! எத்தனை புனித நீர் நிலைகளில்  நீராட்டினீர்கள்! இன்னும் அதன் பிறவிக்குணமான கசப்பு மாறவில்லையா? என்று வியந்தார். எல்லோருக்கும் சுவாமிகளின் உட்கருத்து விளங்கியது. பின்னர் சொன்னார்: உள்ளன்போடும் தூய்மையோடும் இறைவனை நினைத்துக் கொண்டு செய்வதே தீர்த்த யாத்திரை. அது உல்லாசப் பயணம் இல்லை. மனதில் மாற்றமில்லாமல் செய்யும் யாத்திரை பாகற்காய் யாத்திரை போன கதை போலத்தான் என்றார்.

—சுவாமி ராமதாஸ் சொன்ன கதை

12 jyotirlinga

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன உவமை

பசுவினிடமுள்ள பாலானது, வாஸ்தவத்தில் அதன் சரீர முழுவதிலும் ரத்த ரூபமாய் பரவியுள்ளது என்றாலும் அப்பசுவின் காதுகளையோ கொம்புகளையோ பிசைந்தால் பால் வராது. அதற்கு அதன் முலைக் காம்புகளைப் பிடித்துத்தான் கறக்க வேண்டும் அதுபோல ஈசுவரன் இவ்வுலகில் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறான். ஆயினும் எல்லா இடத்திலும் அவனை உன்னால் காண முடியாது. பூர்வ பக்தர்களுடைய குண விசேஷம் நிரம்பிய புண்யஸ்தலங்களாகிய கோவில்களில்தான் அவன் சுலபமாய்த் தென்படுகிறான்.

வயிறு நிறைய புல்லைத் தின்ற ஒரு பசு ஓரிடத்தில் சாந்தமாகப் படுத்துக்கொண்டு அசைபோடுவதைப் போல, தீர்த்த யாத்திரைக்கு நீ போய் வந்தால், அந்தந்த திவ்ய ஸ்தலத்தில் உன் மனத்தில் எழுந்த தூய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனியிடத்தில் உட்கார்ந்து அவற்றிடையே ஆழ்ந்து போக வேண்டும். அவ்வாறின்றி அங்கிருந்து வந்ததும், அவ்வெண்ணங்கள் உன் மனத்தைவிட்டு அகன்று போகும்படி, நீ உலக விவகாரங்களில் தலையிட்டுக் கொள்ளக்கூடாது

பூமியின் நான்கு திக்குகளிலும் பிரயாணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காணமாட்டாய். இருப்பதெல்லாம் உன் உள்ளத்திலேயே இருக்கிறது.

கங்கையில் குளிப்பதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமென்றால், கங்கை நதியில் வசிக்கும் மீன்களெல்லாம் மோட்சத்துக்குப் போய்விடுமே!

–ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி.

காலம் என்னும் மர்மம்! – 3

Written  by S NAGARAJAN

Date: 2 November 2015

Post No:2293

Time uploaded in London :–  5-13 am

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஹிந்து தத்துவ விளக்கம்

காலம் என்னும் மர்மம்! – 3

.நாகராஜன்

8

தேவர் உலக கால அளவுகள்

தேவர் உலகில் உத்தராயணம் அதாவது 6 மாதம் ஒரு பகலாகவும், தக்ஷிணாயனம், அதாவது இன்னொரு 6 மாதம் இரவாகவும் ஆகிறது. அதாவது மனித மாதங்கள் பன்னிரெண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது.

பிரம்மாவின் ஆயுள்

அதிகமான ஆயுளுடன் இருப்பவர் பிரம்மா.

தேவர் கால அளவில் தேவர்களின் ஒரு நாள் என்பது மனிதர்களி  360 நாள் என்று பார்த்தோம்.

12,000 தேவ வருடங்கள் ஒரு சதுர் யுகம் எனப்படுகிறது.

ஒரு சதுர் யுகத்தில் கிருத யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம் என நான்கு யுகங்கள் உள்ளன.

கிருத யுகம் 4000 தேவ வருடங்களையும் திரேதா யுகம் 3000 தேவ வருடங்களையும் த்வாபர யுகம் 2000 தேவ வருடங்களையும் கலியுகம் 1000 தேவ வருடங்களையும் கொண்டிருக்கிறது.

இந்த வருடங்கள் யுகத்தின் சரியான காலமாகும்.

என்றாலும் யுக ஆரம்பத்திற்கு முன் ‘சந்தி’ என்ற காலமும் யுகத்திற்குப் பின் ‘சந்தி அம்சம்’ என ஒரு கால அளவும் உள்ளது.

இதன் படி கிருத யுகத்திற்கு சந்தி அளவு 400 தேவ வருடமும் சந்தி அம்சம் 400 தேவ வருடமும் ஆகிறது.

இதே போல திரேதா யுகத்திற்கு சந்தி அளவு 300 தேவ வருடமும் சந்தி அம்சம் 300 தேவ வருடமும் ஆகிறது.

ஆக, திரேதா யுகத்தின்  மொத்த வருடம் 3600. இதே போல த்வாபர யுகத்தின் மொத்த வருடம் 2400. கலி யுகத்தின் மொத்த வருடம் 1200.

ஆக சதுர் யுகங்களின் – நான்கு யுகங்களின் மொத்த காலம் 12000 தேவ வருடம். அதாவது 43,20,000 மனித வருடம்.

கலியுகம், 1200 x 360 = 4,32,000 மனித வருடம்.

த்வாபர யுகம் கலி யுகத்தைப் போல இரு மடங்கு. அதாவது 8,64,000 மனித வருடம்.

திரேதா யுகம் 12,96,000 மனித வருடம். கிருத யுகம் 17,28,000 மனித வருடம்.

ஆக மொத்தம் ஒரு சதுர் யுகத்தின் கால அளவு 43,20,000  மனித வருடம்.

இது போன்ற ஆயிரம் சதுர் யுகங்கள் – அதாவது 432 கோடி மனித வருடமே பிரம்மாவிற்கு ஒரு பகலாகும்.

இந்த பிரம்மாவின் ஒரு பகலே ‘கல்ப’ம் எனப்படுகிறது.

பிரம்மாவின் இரவுக்கு இன்னொரு இன்னொரு 432 கோடி மனித வருடம்.

ஆக, பிரம்மாவின் ஒரு பகலும் இரவும் சேர்ந்தால் 864 கோடி மனித வருடங்களுக்குச் சமமாகும்.

பிரம்மாவின் ஆயுள் 100 வருடமாகும். அவருக்கும் ஒரு முடிவு. உண்டு. அவர் ஆயுளுக்கும் எல்லை இப்படி இருக்கிறது என்பது தெளிவு.

பிரம்மாவின் முழு ஆயுளைக் கணக்கிட்டால் 31.54 x 10 to the power 13  மனித வருடங்களாகிறது!

இதே போன்ற பிரம்மாக்கள் ஏராளமானோர் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பர்.

இது தான் காலத்தின் எல்லையற்ற எல்லை!

மனக் கற்பனைக்கு அப்பாற்பட்ட உண்மை!!

மனித ஆயுளை இப்போது ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தனை சிறிது! ‘காய கல்பம்’ என ஆயுளை நீடிக்க வைக்கும் வித்தையைச் சொல்கிறார்கள்.

ஒரு கல்பம் அளவு – பிரம்மாவின் ஒரு நாள் அளவு – அதாவது 432 கோடி மனித வருடம் வாழ்கின்ற சித்தராகவே நீங்கள் இருந்தாலும் எல்லயற்ற கால வெள்ளத்தில் நீங்கள் ஒரு சிறு துளி தான்!

ஆயுள் ‘குறைவாக’ உள்ள மற்ற தேவர்களும் இருக்கிறார்கள்.

“தெய்வீக நிர்வாகத்தில்” அவரவர்க்கு உரிய பணியைச் செய்யும் இந்திரன், அக்னி, சூரியன், வருணன் ஆகிய தேவர்களின் ஆயுள் மனிதரின் கால அளவை விட மிகப் பெரியது. என்றாலும் பிரம்மாவின் ஆயுளுடன் ஒப்பிடும் போது அது மிகக் குறைவே!

Konark_Sun_Temple_Wheel

SUN TEMPLE, KONARK, ORISSA

9

ஆன்மீக உயர் நிலையை எட்டி மேலே சொன்ன தேவ நிலையை மனிதர்கள் அடையலாம்.

கடோபநிஷத்தில் – யமன் – இறப்பிறகு அதிபதி – இதை விளக்குகிறார்.

தவத்தின் மூலம் பிரம்ம நிலையை எய்துதற்கு முடியும். என்றாலும் அவன் இந்த நிலைக்கு மட்டுமே வர முடிந்தது என விவரிக்கிறான்.

பிரம்ம நிலையை எய்துவதே மனிதனின் இலட்சியம்.

தைத்ரியோபநிஷத் பேரின்ப நிலைகளை வரிசையாகக் குறிப்பிடும் போது (இன்பமான, லட்சிய) மனித இன்பம், கந்தர்வர், பிதிர், தேவர், இந்திரன், பிரஹஸ்பதி, பிரஜாபதி, பிரம்மா எனக் குறிப்பிடுகிறது.

ஆயுளும் இதே வரிசையில் கூடுகிறது.

சில ரிஷிகள் – முனிவர்கள் – ஒரு கல்ப காலம் ஆயுளை உடையவர்களாக இருக்கின்றனர். மற்ற சிலரோ ஒரு மன்வந்தரமே ஆயுள் உடையவர்களாக இருக்கின்றனர்.

பெரும் தவ சிரேஷ்டர்கள் பிரம்மாவின் ஆயுள் எல்லையையும் தாண்டி வாழ்கின்றனர்!

மன்வந்தரம் என்பது கல்பத்தில் ஒரு பகுதி. 14 மன்வந்தரம் கொண்டது ஒரு கல்பம். ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு உண்டு.

நாம் இப்போது இருக்கும் கல்பத்தின் பெயர் ஸ்வேத வராஹ கல்பம்.

நாம் இப்போது இருக்கும் மன்வந்தரத்தின் பெயர் வைவஸ்வத மன்வந்தரம். வைவஸ்வத மனு என்பவரின் பெயரைக் கொண்டது இது!

அதாவது ஒரு மன்வந்தரம் சுமார் 31 கோடி மனித வருடங்களைக் கொண்டது. ((துல்லியமாக வேண்டுமெனில் கல்பத்தை 14ஆல் வகுத்துச் சரியாகவும் கணக்கிட்டுக் கொள்ளலாம்)

ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இந்திரன், அக்னி, சில ரிஷிகள் மாறலாம். ஆனால் அவர்களின் பணிகள் புதிய பெயரிலேயே நடந்து கொண்டே தான் இருக்கும்.

சப்த ரிஷிகளின் பெயர்கள் பல்வேறு விதமாகக் கூறப்படுவதால் குழப்பம் அடைவதாகப் பலரும் சொல்வர்.

அனைத்துப் பெயர்களும் சரியே! எந்த மன்வந்தரத்து சப்த ரிஷிகள் என்று கேட்டால் குழப்பம் நீங்கி விடும்!

நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கும் துல்லியமான கால அளவுகளைப் போல உலகின் வேறு எந்த மதமும், நாகரிகமும் வகுத்து வைத்திருக்கவில்லை.

அதனால் தான் காஸ்மாஸ் தொடரை தொலைக்காட்சி சீரியலாக தயாரித்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் உலகின் எந்த மதம் அல்லது நாகரிகம் எல்லையற்ற கால அளவைச் சரியாகச் சொல்லி இருக்கிறது என ஆராய ஆரம்பித்தார்.

ஹிந்து மதத்தின் இந்த கால அளவுகளைக் கண்டு அவர் பிரமித்தார். உடனே இந்தியாவிற்கு வந்து சிதம்பரம் சென்றார்.

அவர், தன் தொடரில் நடராஜரை முதலில் காட்டியது இதனால் தான்!

நமது அறிவுத் திறனுக்கும் மூளை ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட காலம் பற்றிய சரியான விவரணம் தருவது –

ஹிந்து மதமே!

  • தொடரும்

குறிப்பு: காலம் பற்றிய இந்த தொடர் எழுதப்பட்ட நாள் 14-7-1996. பழைய கைப்பிரதிகளை கிழிக்க முற்பட்ட போது இது என் கையில் அகப்பட்டது. ஆஹா, எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இதை முழுத் தொடராக்குகிறேன்.

 

விரைந்து செய்ய வேண்டிய மூன்று செயல்கள்!

coin valluvar

Written  by S NAGARAJAN

Post No.2261

Date: 21 October 2015

Time uploaded in London: 7-50 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

குறள் தெளிவு

வள்ளுவர் அறிவுறுத்தும் விரைந்து செய்ய வேண்டிய மூன்று செயல்கள்!

.நாகராஜன்

மூன்றை விரைந்து செய்!

முடிந்த போதெல்லாம் விரைந்து செய்ய வேண்டிய செயல்கள் மூன்று என்கிறார் வள்ளுவர்.

இதற்கு அவர் பயன்படுத்தும் சொல் – ‘ஒல்லும்’

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே                                 

செல்லும் வாயெல்லாஞ் செயல்    (குறள் 33)

தர்மத்தை இடைவிடாமல் செய்ய வேண்டும். தன்னால் இயன்ற அளவு செய்ய வேண்டும். செய்யக் கூடிய வழியில் எல்லாம் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் செய்ய வேண்டும்.

valluvar gold

ஒல்லும் வாயெல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்                       

செல்லும் வாய் நோக்கிச் செயல்     (குறள் 673)

செய்து முடிக்கக் கூடிய இடத்தில் எல்லாம் ஒரு காரியத்தை உடனே செய்து முடிப்பது நல்லது. அப்படிச் செய்ய ஒரு வேளை முடியவில்லை என்றால்  செல்லும் வாய் நோக்கி – ஏற்ற இடம் நோக்கிச் செய்து விடு.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி                     

  ஒல்லும் வாய் ஊன்றும் நிலை         (குறள் 789)

நட்பிற்குச் சிறந்த நிலை யாது? எனில், மாறுபாடு இல்லாமல் முடிந்த இடமெல்லாம் உதவி செய்து தாங்குகின்ற நிலையாகும்.

தர்மத்தைத் தள்ளிப் போடாதே! உடல் அழியும் காலத்தில் அழியாமல் உடன் வந்து காக்கும் துணை அறம் ஒன்றே. பொன்றுங்கால் பொன்றாத் துணை அறம். ஆகவே மெல்லச் செய்து கொள்ளலாம் (அன்றறிவாம் என்னாது)  என்றில்லாமல் உடனே செய்!

எந்த ஒரு காரியத்தையும் தள்ளிப் போடாதே!

நட்புக்காக முடிந்த போதெல்லாம் உதவி செய்!

இடைவிடாது செய்ய வேண்டியவை அறவினை புரிதல், வினை முடித்தல், நட்பைத் தாங்குதல்.

ஒன்றால் இம்மைக்கும் மறுமைக்கும் வழியைக் காட்டினார். அடுத்ததால் இவ்வுலக வாழ்க்கையின் வெற்றிக்கு வழியைக் காட்டினார். மூன்றாவதன் மூலம் நமக்கு என்றும் இருக்கும் துணையை உறுதி செய்து பலன் பன் மடங்கு வரும் என்பதை தெரிவிக்கிறார். ஏனெனில் பயன் தெரிவார் தினைத் துணை உதவியையும் பனைத் துணையாக் கொள்வார் அல்லவா!

வள்ளுவரின் சொற்களின் ஆழம் லேசுப்பட்டதா, என்ன? தோண்டத் தோண்ட மணற் கேணி போல அர்த்தம் ஊறிக் கொண்டே இருக்கும்!

சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!

om tamil

Compiled  by S NAGARAJAN

Post No.2256

Date: 19 October 2015

Time uploaded in London: 8-07 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

ரகசியத் தெளிவு

சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!

 

.நாகராஜன்

 OM red filter

சொல்லில் இருக்குது அனைத்துமே

 

இரகசியங்களைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் ஒரே மாதிரியான அறிவுரைகளையே சொல்கின்றன. யூதம், ஹிந்து என்றெல்லாம் இதில் வேறுபாடு கிடையாது. ஏனெனில் அடிப்படை உண்மைகள் சாஸ்வதமானவை!

தேவி பாகவதத்தில் அம்பிகையின் முன்னர் ஆகப் பெரும் மஹரிஷிகள் வாயைப் பொத்தி மௌனம் அனுஷ்டிக்கிறார்களாம்! ஏனெனில் வாயைத் திறந்தால் சொல் குற்றம் வந்து விடுமோ என்று!

 

யூத மதத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சொற்களை ஜாக்கிரதையாகப் பிரயோகம் செய் என்றே கூறுகிறது. அதிலும் பிரார்த்தனை புரிவதில் சொல்லுக்குள்ளே ஜோதியைக் காணுங்கள் என்கிறது!

லிக்விடிம் எக்வாரிம் (தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான முத்துக்கள்) தொகுப்பில் முக்கியமான ரகசியம் சொல்லப்படுகிறது இப்படி:-

 

EACH MORNING A NEW CREATION

Take special care to guard your tongue                                            

 Before the morning prayer.

Even greeting your fellowman, we are told.                                    

Can be harmful at that hour.
A person who wakes up in the morning is                                     

Like a new creation

Begin your day with unkind words,                                                  

Or even trivial matters –

Even though you may later turn to prayer,                                      

You have not been true to your Creation

All of your words each day                                                         

Are related to one another

All of them are rooted                                                           

 In the first words that you speak                     

                                                LIQQUTIM YEQARIM

MAHALAKSHMI LAMPS

உனது நாவைக் காப்பதில் விசேஷ கவனம் எடு                               

காலை பிரார்த்தனைக்கு முன்னர்

உங்கள் சக மனிதருக்கு வணக்கம் செலுத்துவது கூட,                            

அந்த நேரத்தில் தீமை பயக்கக்கூடும் என்று எங்களுக்குச் சொல்லப்படுகிறது

காலையில் கண் விழிக்கும் ஒரு மனிதன்                                           

ஒரு புதிய படைப்பு போல

 

அன்பில்லாத வார்த்தைகளுடன் உங்கள் நாளை ஆரம்பியுங்கள்,                      

அல்லது அல்ப விஷயங்களுடன் துவங்குங்கள்

பின்னால் நீங்கள் பிரார்த்தனை புரியத் தொடங்கினாலும் கூட,                          

உங்கள் படைப்புக்கு நீங்கள் உண்மையானவராக இல்லை

ஒவ்வொரு நாளும் உங்களின் எல்லாச் சொற்களும்                               

ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டிருக்கின்றன

 

அந்த அனைத்துமே நீங்கள் பேசும் முதல் வார்த்தைகளை                          

வேராகக் கொண்டிருக்கின்றன

                                                             லிக்விடிம் எக்வாரிம்

 

 

பிரம்மாண்டமான ஒரு ரகசியம் மிக எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஹிந்து தத்துவத்தில் காலை எழுந்தவுடன்

 

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கர மத்யே சரஸ்வதி                                            

கர மூலேது கோவிந்த: ப்ரபாதே கர தர்ஸனம்

 

என்று நல்ல சொற்கள் மூலம் திருமகள், கலைமகள், கோவிந்தன் ஆகியோரை நமஸ்கரித்து நாளை நல்ல நாளாக்கி நமது நாளாக்குகிறோம்.

ஒரு நாளைக்கு 100 ஆசீர் வசனம் ஓதுங்கள்

 

கடவுள் நம்மிடம் எதை விரும்புகிறார் என்பதை யூத மதத்து ராபி மெய்ர் (Rabbi Meir) அருமையாக விளக்கிக் கூறுகிறார். மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இறையாளர் இவர்.

 

தால்முட்இல் வரும் செய்யுளுக்கு இவர் அற்புத விளக்கம் ஒன்றைத் தருகிறார். அது Mah என்ற வார்த்தையைக் கூறுகிறது. இதன் பொருள் என்னஎன்பதாகும். ஆனால் மெய்ரோ அந்த உச்சரிப்பை அதே போன்று உள்ள Meah என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இதன் பொருள் 100 என்பதாகும். அதாவது கடவுள் நம்மை தினமும் 100 Blessings (100 ஆசீர் வசனங்கள்ஓத வேண்டும் என்று விரும்புகிறார் என்றார்.

 

தினமும் நூறு நல்ல வார்த்தைகளைப் பேசும் ஒருவனுக்கு என்றைக்கேனும் கெடுதி விளையுமா? நிச்சயம் ஒரு கெடுதியும் வராது. ரகசியங்களை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது.

அனைத்தும் பொருள் பொதிந்தவை.

 IMG_4438

சொல் ஒன்று வேண்டும்

 

மஹாகவி பாரதியார் பாடிய சொல் என்ற பாடல் அற்புதமான பாடல்.

சொல் ஒன்று வேண்டும் தேவசக்திகளை நம்முள்ளே                             

நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்

மின்னல் அனைய திறல் ஓங்குமேஉயிர்                                             

வெள்ளம் கடை அடங்கிப் பாயுமே                                                     

தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு                                    

செய்கை  அதனில் வெற்றி ஏறுமே

 

என்று சொல்லின் பெருமை கூறும் அவரது பாடலை முழுவதுமாகப் படிக்கும் போது யூதர்களின் வேதம் கூறும் சொல்லுக்குள் ஜோதி காணும் அனுபவம் கை கூடும், இல்லையா!

பேசுகின்ற வார்த்தைகள் பலவற்றை நம்மிடம் அன்றாடம் சேர்க்கின்றன. இவற்றில் நாளைத் துவக்கும் போது பேசுபவை அன்றைய போக்கை உருவாக்குகின்றன. ஆகவே பேசுவதைச் சரியாகப் பேசு; சரியான சொற்களைத் தேர்ந்தெடு என்பதே அறநூல்களின் அறிவுரை.

 

இதை ஒரு சோதனையாகக் கூடச் செய்து பார்க்கலாம்; விளைவுகள் பிரம்மாண்டமான அளவில் நலம் பயப்பதைக் கண்டு நாமே பிரமித்து விடுவோம்!

 

*****************

 

வெல்லும் சிவ சக்தி!

SIVA ON TIGER SKIN

Written by S NAGARAJAN

Post No.2253

Date: 18 October 2015

Time uploaded in London: 9-38 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 

தேவார சுகம்

வெகுண்டெழுந்த அப்பர் விரட்டுவது எவற்றை?

.நாகராஜன்

 

சாது மிரண்டால்!

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி.

அருளாளரான அப்பரே விரட்டுகிறார் என்றால், அதில் இருக்கும் விஷயம் பொருள் பொதிந்த ரகசிய விஷயமாகத் தானே இருக்க வேண்டும்!

கெடுவீர்காள் (நீங்கள் கெட்டு அழிந்தொழிவீர்கள்) எனக் கடுமையாக எச்சரிக்கிறார்!

தருக்கேன்மின்னே, நீர் நடமின்களே (கர்வப் படாதீர்கள், விட்டுப் போய்த் தொலையுங்கள்) என்று விரட்டுகிறார்!

ஈங்கு அலையேன்மின் (இங்கு கிடந்து அலையாதீர்கள் எனத் திருப்பித் திருப்பிச் சொல்கிறார்?

என்ன விஷயம்? உலகைப் படாத படுத்தும் மாய சக்திகளைப் பட்டியலிடுகிறார் அவர், அது தான் ரகசியம். அவற்றை அழைத்து, என்னிடம் வராதீர்கள்; வந்தால் அழிந்து ஒழிவீர்கள்; நான் சிவனின் பக்தன் என்று கூறி அவற்றை விரட்டுகிறார்!

அதன் மூலம் மாய சக்திகளை நமக்கு இனம் காட்டி நம்மை ஜாக்கிரதையாக இருக்குமாறு ரகசிய அறிவுரை தருகிறார்!

nata from siva

ஓடுங்கள், மாய சக்திகளே!

புண்ணியங்களே! தீவினைகளே! திருவே! இம்மாயக் கடலை அரித்துத் தின்னும் உங்களுக்கு என்னிடம் இடம் கிடையாது. நல் ஆரூர் தடங்கடலை, சிவபிரானின் திருவடியைப் பற்றித் தொடர்கின்றேன், எனக்கு இடர் தந்தால் கெட்டு ஒழிவீர்கள்! (ஜாக்கிரதை!)

ஐம்பெரும் மா பூதங்களே! இந்த பூமி எல்லாம் உம் வசமாக்க வல்ல திறனை உடையவர்கள் நீங்கள்! ஆனால் நீங்கள் என்னை நுகர்ந்து போகம் அனுபவிக்க விட மாட்டேன். நான் ஆரூர் அமிர்த வள்ளலின் அடியவன். உங்கள் தருக்கை விட்டு விடுங்கள்! (என்னிடம் அது செல்லாது)

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும் ஐந்து புலன்களே! ஐயோ! உங்களுக்கு இந்த வையகமே போதாதே! ஆரூர் சிவக் கொழுந்து என் சிந்தையில் உள்ளான். ஆகவே உங்கள் கர்வம் என்னிடம் செல்லாது!

வெற்றியுடன் சோர்வு படுத்தும் சூழ்ச்சியே! உங்களிடம் உலகம் எல்லாம் உழறும். ஆனால் என்னிடமோ உங்கள் ஆட்டம் பலிக்காது. எம்பெருமானை அடைந்தவன் நான்! இங்கு வந்து வீணே அலையாதீர்கள்!

பொங்கு மதமே, மானமே! ஆர்வமே! செற்றமே! குரோதமே! லோபமே! பொறையே!

துன்பமே! பாவமே ஆசையே வெறுப்பே! வறுமையே! செல்வமே! பொல்லா வெருட்சியே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள் இந்த பூமியையே அரித்துத் தின்று விடுவீர்கள்! ஆனால் நீங்கள் நுகரும் போகம் நான் அல்ல! என்னிடம் உங்கள் வேலை பலிக்காது! நான் கற்பகத்தை, தற்பரத்தை, ஆரூர் பரஞ்சோதியை நாடி வந்து விட்டேன். ஓடிப் போங்கள்!

சுருக்கமே! பெருக்கமே! காலநிலையே! செல்வமே! வறுமையே! இந்த உலகைச் சுற்றி உங்கள் ஆட்சியைச் செலுத்துவது போதாதா? எம்பிரான் பாதம் பற்றிய என்னிடம் வந்தால் கெட்டு அழிவீர்கள்!

இப்படி வெகுண்டு சக்தி வாய்ந்த சொற்களால் அப்பர் விரட்டுகிறார் என்றால் அந்த உலக மாயைகள் எப்படிப் பட்ட வல்லமை படைத்தவையாக இருக்க வேண்டும்.

கண்ணெதிரே தான் காண்கிறோமே, தினசரி அன்றாட வாழ்க்கையில்.

இவை ஒவ்வொன்றும் படுத்தும் பாடு, அடடா என்ன பாடு படுகிறது இந்த உலகம்! – 750 கோடி உலக மக்களை – எண்ணற்ற கோடி விதங்களில் என்ன பாடு படுத்துகிறது.

rishikesh siva

வெல்லும் சிவ சக்தி

இவை அனைத்தையும் எதிர்கொண்டு விரட்டவும் வெல்லவும் ஒரே சக்தி, சிவ சக்தி தான்!

அது இருக்கும் போது எதுவும் நம்மிடம் பலிக்காது.

திருஆரூர்ப் பூங்கோயிலில் அப்பர் அருளிய “பொய் மாயப் பெருங்கடலில்” எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடுவோர்க்கு மேலே சொன்ன மாயைகளின் ஜால வேலைகள் பலிக்கவே பலிக்காது. அவரே, “கெடுவீர்காள்! இடறேன்மின்னே” என்று எச்சரித்து விட்ட போது நமக்கு என்ன பயம்!

பத்துப் பாடல்களில் அப்பர் வரிசையாக இனம் காட்டும் மாயைகள்:

புண்ணியம், பாவம், ஐம்பெரும் பூதங்கள், ஐம்புலன்கள், சோர்வு படு சூட்சியம் (வஞ்சனைகள்), செருக்கு, மானம், காமம், பகை, கோபம், கஞ்சத்தனம், பொறை, துன்பங்கள், தீவினை, வேட்கை, வெறுப்பு, வறுமை, செல்வம், கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு, ஐம்பொறிகளாகிய காக்கைகள், சுருக்கம், பெருக்கம், காலநிலை, செல்வம், வறுமை ஆகியவை (அவர் சொன்ன வரிசைப்படி!)

 

ஆறாம் திருமுறைதிருவாரூர்ப் பதிகம்

 

பாடல்களில் சிலவற்றைப் பார்ப்போம் (மீதியையும் தேடிப் படிக்கும் ஆர்வம் நிச்சயம் எழும்!):-

பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
    புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்
    கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
    தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்
    இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே

ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
    றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க்
    கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமா யூழியுமா யுலகே ழாகி
    ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன் 
    தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே

 

உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
    துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ
    வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
    புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத்
    தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே

 

துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
    சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பனையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
    உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யென்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
    மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
    ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே

 

பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்
    குரோதமே யுலோபமே பொறையே நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தி னெல்லை யெல்லாம்
    உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்
அங்கமலத் தயனொடுமா லாகி மற்று
    மதற்கப்பா லொன்றாகி யறிய வொண்ணாச்
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை யாரூர்ச்
    செல்வனைச்சேர் வேன்நும்மாற் செலுத்து ணேனே

 

இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
    வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்
குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்
    குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
    அமரர்கள்தம் பெருமானை யரனை ஆரூர்
உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா
    லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே


siva is pillar
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
    வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரைந்தோடி மாநிலத்தை யரித்துத் தின்பீர்க்
    கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை யமுது செய்த
    கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்நும் பண்பிற்
    பரிந்தோடி யோட்டந்து பகட்டன் மின்னே

 

சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித்
    துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்
செருக்கிமிகை செலுத்தியும செய்கை வைகல்
    செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகந்
    தளரவடி யெடுத்தவன்றன் பாடல் கேட்டு
இரக்கமெழுந் தருளியஎம் பெருமான் பாதத்
    திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே

 

செல்வம், வறுமை, காம, க்ரோதம், மத, லோபம், புண்ணியம், பாவம், சுருக்கம், பெருக்கம், காலநிலை உள்ளிட்ட ஏராளமான மாய சக்திகள் தம் தம் வேலையை இதை ஓதுபவரிடம் காட்ட முன் வருமா, என்ன? வரவே வராது!

 

பாடலை நிறுத்தி மனதில் சுவைத்து பக்தியுடன் பாராயணம் செய்வோம்; பரமனின் அருளைப் பெறுவோம்.

**************

தலாய் லாமாவிடம் ஒரு திடுக்கிடும் கேள்வி கேட்ட விஞ்ஞானி!

File photo dated 18/04/13 of the Dalai Lama, as Glastonbury has announced he is going to make a guest appearance at the famous festival. PRESS ASSOCIATION Photo. Issue date: Thursday June 25, 2015. The exiled Tibetan spiritual leader will visit the event on Sunday as part of a UK visit which will also take in Aldershot. See PA story SHOWBIZ Glastonbury. Photo credit should read: Paul Faith/PA Wire

Written by ச.நாகராஜன்

Post No.2250

Date: 17 October 2015

Time uploaded in London: 8-49 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

பாக்யா வார இதழில் வெளியாகும் அறிவியல் துளிகள் தொடரில் 243வது அத்தியாயமாக 16-10-2015 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

தலாய் லாமாவிடம் ஒரு திடுக்கிடும் கேள்வி கேட்ட விஞ்ஞானி!

.நாகராஜன்

நான் ஹிந்து இல்லை. ஆனால் அவர்களின் கொள்கையான மறுபிறப்பை நான் ஆதரிக்கிறேன். அது ஈடு இணையற்றது. பகுத்தறிவுக்கு ஒத்தது. சமயப் பற்றுள்ளது. மனிதர்களைத் தீய காரியம் செய்ய விடாமல் தடுப்பது.

                                          –  வில்லியம் ஜோன்ஸ்

dalai1

உலகிலுள்ள கோடிக்கணக்கான புத்த மதத்தினரின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா. இன்று உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரான இவரது ஒரு பெரும் சிறப்பு, விஞ்ஞானிகளுடன் இவர் அடிக்கடி அளவளாவுவது தான்! விஞ்ஞானிகளுக்கு இவரைக் கண்டால் மிகவும் பிடிக்கும்.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் சொல்வதுடன் அவர்களைக் கேள்விகள் கேட்டு திகைக்கவும் வைப்பார். 1999ஆம் ஆண்டில் இந்தியாவில் இவர் தங்கி இருக்கும் தர்மஸ்தலாவில் 30க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை அழைத்து ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஒருங்கிணைப்பதற்கான கலந்துரையாடல் கூடிய ஒரு கருத்தரங்கத்தை இவர் ஏற்பாடு செய்தார்.

ஒரு விஞ்ஞானி இவரது தாராளமான அணுகுமுறையைப் பயன்படுத்த நினைத்தாரோ என்னவோ, திடீரென்று வெடிகுண்டு போல ஒரு கேள்வியை அவர் மீது தூக்கிப் போட்டார்.

தலாய் லாமா அவர்களே! புத்தமதத்தை நீங்களே விட்டு விடும் வகையில் ஏதேனும் அறிவியல் கொள்கை இருக்கிறதா? அப்படி ஒன்று ஏற்படுமா?”

அனைவரும் திகைத்து விட்டனர். உலகின் புத்தமதத்தினரின் குருவைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி! கேட்கலாமா? கேட்பது முறை தானா?

தலாய் லாமா கோபப்படவில்லை.

dalai2

மெல்லிய குரலில் இனிமையாகப் பதில் கூறினார்:-“இதுவரை அப்படி ஒரு கொள்கையும் இல்லை. ஒருவேளை விஞ்ஞானிகள் மறுபிறப்பு என்பதே இல்லை என்று நிரூபித்தால் நான் புத்த மதத்தைத் துறப்பது பற்றி மறு சிந்தனை செய்யக் கூடும்!”

எப்படிப்பட்ட அருமையான பதில்! விஞ்ஞானிகள் வாயடைத்துத் திகைத்து நின்றனர்.

இன்றைய விஞ்ஞானத்தால் பதில் கூற முடியாத ஆயிரக் கணக்கான கேள்விகள் உள்ளன? பல கோடி அண்ட பிரபஞ்சங்கள் உள்ள படைப்பின் நோக்கம் என்ன? படைத்தவர் யார்? உயிர் எப்படி கருவை எந்த சமயத்தில் அடைகிறது? எப்படி மனிதனை விட்டு உயிர் பிரிகிறது? உணர்வு எப்படி உருவாகிறது? மனத்தின் மாண்புகள் என்னென்ன? மனிதன் இறந்த பின் மீண்டும் பிறக்கிறானா? மூளையின் சிக்கலான அமைப்பையும் மனத்தையும் பகுத்தறிவையும் கொண்ட ஒரு ரொபாட்டை அமைக்க முடியுமா? இப்படி ஆயிரக் கணக்கான கேள்விகள் உள்ளன.

ஆனால் தலாய் லாமா சிக்கலான பெரிய விஷயங்களில் விஞ்ஞானிகளைத் ஒரு தட்டு தட்டுவது போல மறு பிறப்பு பற்றி மட்டும் சுட்டிக் காட்டினார். அதற்கு அவ்வளவு முக்கியத்துவத்தைத் தந்தார்.

இன்றைய விஞ்ஞான உலகில் மறு பிறப்பு பற்றிய ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. கிடைக்கும் தகவல்கள் விஞ்ஞானிகளையே பிரமிக்க வைக்கின்றன.

லிடியா ஜான்ஸன் என்ற அமெரிக்கப் பெண்மணியின் கேஸ் வியப்பூட்டும் ஒன்று. பிலடெல்பியாவில் வாழ்ந்து வந்த முப்பத்தேழே வயதான அந்தப் பெண்மணிக்கு ஜென்ஸன் ஜாகோபி என்ற மனிதனைப் பற்றிய அனைத்து நினைவுகளும் வந்தன. இதில் திகைப்பூட்டும் ஒரு விஷயம் ஜாகோபி என்பவர் ஸ்வீடனில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நபர். அந்தக் கால ஸ்வீடிஷ் பாஷையில் அந்தப் பெயரை யென்ஸன் எக்கோபி என்று அவர் உச்சரித்தார். அவரைப் பற்றி கேள்விகள் கேட்ட போது பழைய கால ஸ்வீடிஷ் மொழியில் சரளமாகப் பேசலானார்.

அமெரிக்கப் பெண்மணிக்கு 17ஆம் நூற்றாண்டு ஸ்வீடன் மொழி எப்படித் தெரியும்? சரளமாக அதில் ஒரு நொடி நேரத்திற்குள் எப்படி உரையாட ஆரம்பிக்க முடியும்? 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல ஸ்வீடன் தேசத்துப் பொருள்களை மட்டும் தனியே அவரால் பிரித்தெடுக்க முடிந்தது.

மகாத்மா காந்திஜியின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்த சாந்தி தேவி பற்றிய சம்பவம் உலகில் மறுபிறப்பு ஆய்வில் முக்கிய பங்கை வகிக்கிறது. 1926ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் பிறந்த சாந்தி தேவி திடீரென்று தன் முந்தைய பிறப்பைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள். தனது ஊரான மதுராவைப் பற்றி விவரித்த அவள் தனது (முந்தைய ஜென்ம) கணவரான  கேதார் நாத் சௌபே பற்றி விவரிக்கலானாள். ஆர்வம் தாளாத ஒரு தலைமை ஆசிரியர் அந்த கிராமத்தில் சாந்தி தேவி குறிப்பிட்ட முகவரிக்கு கேதார் நாத் பெயரில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். பதில் வந்ததுகேதார்நாத்திடமிருந்தே!

 ஒன்பது வயதுச் சிறுமி தன்னைத் தனது கிராமத்திற்கே அழைத்துச் செல்ல வற்புறுத்தினாள். அங்கு அவள் அழைத்துச் செல்லப்பட்ட போது தனது முன் ஜென்ம உறவினர்களை மறக்காமல் அடையாளம் கண்டு அளவளாவினாள். தனது முந்தைய வீட்டிற்குச் சென்ற அவள் க்ளைமாக்ஸான ஒரு காரியத்தை அனைவரும் வியக்கும்படி செய்தாள்.

dalai time

தான் ஒரு டின் பெட்டியில் காசை வைத்து ஒரு மூலையில் புதைத்து வைத்திருப்பதாகவும் அதை எடுக்க வேண்டும் என்றும் அவள் கூறிய போது அனைவரும் வியந்தனர். அவள் சொன்ன மூலையைத் தோண்டிய போது டின் பெட்டியில் பணம் இருந்தது.

உலகளாவிய விதத்தில் பரபரப்பூட்டிய சிறுமி சாந்தி தேவி மறு ஜென்ம ஆய்வாளர்களுக்கு ஒரு முக்கிய கேஸ் ஆனாள். மகாத்மாவோ ஒரு குழுவை அனுப்பி அனைத்து விவரங்களையும் சரி பார்க்கச் செய்து திருப்தி அடைந்தார்.

காந்திஜி மறுபிறப்பு கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். டால்ஸ்டாயின் ஒரு நூலின் பகுதியை வெளியிட அவர் அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை அவருக்கு எழுதிய காந்திஜி அதில் மறுஜென்மம் இல்லை என்று டால்ஸ்டாய் கூறி இருக்கும் பகுதியை மட்டும் தான் எடுத்து விட விரும்புவதாகவும் இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே தனது நாட்டு மக்களை எழுப்பி உத்வேகம் ஊட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார். டால்ஸ்டாயும் காந்திஜியின் விருப்பப்படியே அப்பகுதியை நீக்க ஒப்புதலும் அளித்தார்!

இனி மறு பிறப்பைத் தீவிரமாக ஆராய்ந்த ஒரு விஞ்ஞானியைப் பார்ப்போம்!

Percy Shelley bio docstoc.com

அறிவியல் அறிஞர் வாழ்வில்

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான ஷெல்லிக்கு இரசாயன பாடத்தின் மீது அளவற்ற ஆவல். அவர் முதலில் படித்த பள்ளியான ஸயான் ஹவுஸில் (Sion House) இருந்த ஒரு ஆசிரியர் அவரிடம் இந்த ஆர்வத்தைத் தூண்டி விட்டார். ஆனால் அவர் ஈட்டனில் உள்ள பள்ளியில் படிக்க வந்த போது இரசாயனம் படிக்கக் கூடாதென்று அவருக்கு தடை போடப்பட்டது. இதனால் எல்லா சோதனைகளையும் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் செய்து மகிழ்ந்தார்.

ஒரு நாள் அவருக்குப் பாடம் கற்பிக்க வரும் ஆசிரியரான பெத்தல் (Mr Bethel) ஷெல்லியின் அறையிலிருந்து விசித்திரமான ஒலிகள் வருவதைக் கேட்டுத் திகைத்தார்.

என்ன செய்கிறாய், ஷெல்லி?” என்று கேட்டவாறே அவர் ஷெல்லியின் அறைக்குள் நுழைந்தார். அங்கு அவர் பார்த்த காட்சி அவரைத் திகைக்க வைத்தது. நீல நிற ஜுவாலை எரிய புகை நடுவே ஷெல்லி இருந்தார்.

என்ன செய்கிறாய், நீஎன்று அலறினார் ஆசிரியர்.

நான் பிசாசை எழுப்பிக் கொண்டிருக்கிறேன்என்றார் ஷெல்லி.

ஷெல்லியின் முன்னால் ஒரு கண்ணாடி ஜாடி இருந்தது. அதன் பெயர் லெய்டன் ஜார் (Leyden Jar) இரண்டு எலக்ட்ரோடுகளை வைத்து எளிய வழி மூலம் மின்சாரம் செய்வதற்கான ஜாடி அது.

அது என்ன என்று பார்க்க ஜாடியின் மீது கை வைத்தார் ஆசிரியர் பெத்தல். ஜாடியைத் தொட்டதால் ஷாக் அடிக்கவே ஐயோ என்று கத்தியவாறே அங்கிருந்து வெளியில் ஓடினார் அவர்.

சோதனை ஜாடியின் மூலம் மின்சக்தியை வெளிப்படுத்திய கவிஞர் ஷெல்லி, பின்னால் கவிதை மூலமாகவும் துடிக்க வைக்கும் மின் ஆற்றலை வெளிப்படுத்தியது பொருத்தம் தானே!

*******************

வேப்ப மர மகிமை!!!

neem leaves

எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல;

ஆன்மீகக் கட்டுரை!!!

Compiled by london swaminathan

Post No.2248

 

Date: 16 October 2015

Time uploaded in London: 13-26

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Neem-Tree

ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் கணவன் மனைவி வசித்து வந்தனர். பொழுது விடிந்தால் சண்டைதான். மனைவி ஏதாவது பேசத் துவங்கினால் கணவன் சொல்லுவான்: “வாயை மூடு, இன்னும் ஒரு வார்த்தை பேசினால் நான் வீட்டைவிட்டு வெளியேறி சன்னியாசம் வாங்கிவிடுவேன்.” இதைக் கேட்டவுடன் அவளும் பயந்து வாயை மூடி விடுவாள்! பாவம் அந்தப் பதிவிரதை! ஒன்றும் செய்ய இயலாமல் விழித்தாள், முழித்தாள், தன்னையே பழித்தாள், நாட்களைக் கழித்தாள்!

ஒரு நாள் அவளுடைய கணவன் வெளியூர் வேலையாகப் போனார். அந்தப் பெண்மணியின் புத்தி வேலை செய்யத் துவங்கியது. தன்னுடைய கணவர் அடிக்கடி போய் தரிசித்துவரும் ஒரு துறவி கிராமத்துக்கு வெளியே ஒரு எளிமையான குடிலில் வசிப்பது அவளுக்குத் தெரியும். ஓடினாள், ஓடினாள், ஊரின் எல்லைக்கே ஓடினாள்!

குடிலில் வசிக்கும் குருநாதர் காலில் விழுந்தாள். சுவாமி! காப்பாற்றுங்கள். உங்களை வந்து தரிசித்துப் போகும் என் கணவர் காரணமே இல்லாமல் தினமும் கோபிக்கிறார். நியாயம் சொன்னால் சந்யாசம் வாங்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். நீங்கள்தான் வழி காட்டவேண்டும்” – என்றாள்.

குருநாதர் சொன்னார், “தாயே! அஞ்சற்க. அடுத்த முறை சந்நியாசி ஆவேன் என்று சொன்னால், “அன்பரே , போய்வாருங்கள். எனக்கு ஒன்றும் கவலை இல்லை” என்று சொல்லி கதவையும் திறந்து வெளியே அனுப்பிவிடுங்கள். என்னிடம் வரட்டும். அருள் மழை பொழிகிறேன் – என்றார்.

Neem-Tree (1)

மறு நாளும் வந்தது. சூரியன் உதிக்கத் தவறினாலும் தவறுவான். கணவன் சண்டைபோடத் தவறுவதில்லை! வழக்கமான பல்லவியை ஆரம்பித்தான். நீ ஏதேனும் சொன்னால் நான் வீட்டைவிட்டு வெளியேறுவேன். சந்யாசம் வாங்குவேன் – என்று மிரட்டினான்.

அவள் சொன்னாள், “ அன்பரே! போய் வாரும். உமக்கும் நல்லது, எமக்கும் நல்லது; எனக்கு இகலோக சௌக்கியம் கிட்டட்டும் உமக்கு பரலோக சாம்ராஜ்யம் கிடைக்கட்டும்” – என்று ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’– என்னும் பாணியில் சொல்லிவிட்டு வாசல் கதவையும் திறந்து வைத்தாள்.

அவன் ஆண் மகனல்லவா! வீராப்போடு வெளியேறினான். துறவியின் குடிலுக்கு வந்தான். “ஸ்வாமி! ஒரு நற்செய்தி. இன்று முதல் பந்த பாசங்களை வேரறுத்து விட்டேன். இனி எமக்கு எவ்வித உறவுமில்லை. வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம்; இனி உங்கள் பணியிலேயே வாழ்நாளைக் கழிக்கப் போகிறேன். குருவருள் இருந்தால் திருவருள் கிட்டுமன்றோ என்றான்.

குரு சொன்னார், “ வா மகனே! வா! உனக்காக இவ்வளவு நாளாகக் காத்திருந்தேன். என் காலடியில் அமர்க—என்றார்.

சற்று நேரத்தில், “சிஷ்யர்களே ஓடிவாருங்கள் ஞான திருஷ்டியில் கண்டுபிடித்த அற்புத உண்மையை நவில்வேன்! செவி மடுங்கள்!! என்றார். எல்லா சிஷ்யர்களும் வந்தனர். ஒரு சீடனை அழைத்து, சீடனே! வேப்பமரத்திலுள்ள எல்லா இலைகளையும் பறித்து வா. உதவிக்கு இன்னும் பலரை அழைத்துக் கொள் என்றார். அவனும் சிறிது நேரத்தில் வேப்ப மரத்தையே ஒடித்து வந்து நின்றான். அனைவரும் இந்த இலையை அரைத்து லட்டு போல உருட்டுங்கள் என்றார். எல்லோரும் வேப்பிலை லட்டு செய்தனர். இன்று முதல் நமது பிரதான உணவு இதுதான். இதனால் ஆரோக்கியம் பெருகும்; பிரம்மசர்ய சக்தி வளரும் என்றார். உடனே சிஷ்யர்கள், ஆளுக்கு பத்து, இருபது என்று வேப்பிலைக் கட்டிகளை – லட்டுகளை—பார்சல் கட்டிக் கொண்டனர். மனைவியை விட்டுப் புதிதாக வந்த சீடனும் அவ்வாறே செய்தான்.

காலை உணவு , மதிய உணவு, இரவு உணவு, மறு நாள் உணவு – என்று அல்லும் பகலும் அனவரதமும் வேப்பிலைக் கட்டி உணவுதான். திடீரென புது சிஷ்யன் மறைந்து விட்டார்! குருநாதர் ரகசியமாக ஒரு சீடனை உளவு பார்க்க அனுப்பினார். மனைவியை விட்டு ஆஸ்ரமத்துக்கு வந்த அந்த ஆசாமி, மீண்டும் வீட்டுக்கே திரும்பிப் போய்விட்டார் என்றும் வீட்டில் நல்ல சமையல் விருந்து மணம் வீசுகிறது என்றும் உளவாளி கண்டுபிடித்து வந்து குருநாதரிடம் சொன்னார்.

neem

திரும்பிவந்த கணவனுக்கு விருந்துச் சாப்பாடு. அவனும் வாய் திறக்கவில்லை. அந்த வீட்டில் அப்புறம் சண்டை சத்தமே இல்லை. வேப்பிலை ரகசியம் அந்த மனைவிக்கும் குருநாதருக்கும் மட்டுமே தெரியும்!

–சுபம்–

இறைவன் ஏமாந்தான்!

siva, jabalpur

திருவாசக சுகம்

இறைவன் ஏமாந்தான்! சதுரன் யார்? மணிவாசகரின் ஹஹ்ஹா!

 

Written by S Nagarajan

Post No.2242

Date: 14 October 2015

Time uploaded in London:  7-47 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog it at least for a week.

 

.நாகராஜன்

 

தன் பெண் ஒருவனைக் காதலிப்பதை அறிந்த தாய் ஒருத்தி பதறிப் போனாள். தன் கணவருக்கு மட்டும் அது தெரிந்தால் ..?

ஆனால் பெண் அம்மாவிடம் தீர்க்கமாகப் பேசினாள். அந்தப் பையன் நல்லவன், சாமர்த்தியமானவன் என்றும் மணந்தால் அவனையே மணப்பேன் என்றும் உறுதிபடக் கூறியதோடு அப்பாவிடம் நல்ல விதமாக எடுத்துச் சொல்ல தூதும் அனுப்பினாள்.

விஷயத்தைக் கேட்ட தந்தை திகைத்துப் போனார். சரி, பையனை வந்து என்னை பார்க்கச் சொல் என்றார்.

பையனும் வந்து பவ்யமாக நின்றான்.

 

 

காதலிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். படிக்கின்ற வயது. நல்ல காலேஜில் இடம் கிடைக்க வழி செய்ய வேண்டும். அங்கு கேட்கப்படும் நிறைய ஃபீஸைத் தர வேண்டும். இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

தந்தை தொடர்ந்தார்: படிப்பு முடிந்தவுடன் நல்ல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும்? எப்படிக் கிடைக்கும்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

 

 

அது சரி, கல்யாண செலவு வேறு நிறைய ஆகும். பின்னர் குடும்பம் என்று வந்தால் குழந்தை குட்டி என்று வேறு செலவு இருக்கும். ஒரு வீடு, கார் எல்லாம் வாங்க வேண்டாமா? அதற்கு என்ன செய்யப் போகிறாய்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

பையனை அனுப்பி விட்டார் தந்தை. அதுவரை தள்ளி இருந்த தாய் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளூம் ஆவலுடன் ஓடி வந்தாள். “எப்படிங்க பையன்?”

என்றாள்.

நிறைய கேள்வி கேட்டேன். நல்லாத் தான் பதில் சொல்றான். ஆனால் என்னைக் கடவுளா நினைக்கிறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு!” என்றார் தந்தை!

*

 

 IMG_6892 (2)

படம்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

எப்போதுமே வணிக பேரத்தில் சாமர்த்தியமாக ஈடுபட்டுநரியைப் பரியாக்கிய புகழ்மணி வாசகர் இப்போது கடவுளிடமே தன் பேரத்தைக் காட்டி விட்டார்.

ஒன்று கொடுத்தார்; ஒன்றை வாங்கினார்.

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை!”

இப்போது அவருடைய சாமர்த்தியம் வெளிப்படுகிறது. இதில் திறமைசாலி யார்?

யார் கொலோ சதுரர்?

எனக்குக் கிடைத்ததோ Never ending Bliss – அந்தம் ஒன்றில்லா ஆனந்தம்!

உனக்கு என்ன கிடைத்தது, என்னிடம்?

 

 

நானோ பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன். எனக்கு செம்மையே ஆய சிவபதம் அல்லவா அளித்து விட்டாய்!

நம்மில் யார் சதுரன்? உன்னைப் பிடித்த பிடி விட மாட்டேன். சிக்கெனப் பிடித்து விட்டேன்!

கோயில் திருப்பதிகம் பாடலைப் பாருங்கள்:

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை

சங்கரா ஆர் கொலோ சதுரர்?

அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றதொன்று என்பால்?!

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந்துறை சிவனே!

எந்தையே ஈசா! உடலிடம் கொண்டாய்

யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!

*

 

 siva head

தந்தையிடம் பேசிய பையனை எடுத்துக் கொள்வோம், யார் சதுரர்? தந்தையா, பையனா?

இங்கே மணிவாசகரா, சிவபிரானா!

இப்படிப்பட்ட நிகழ்வுகள், பேரங்கள்,(டீல்) எப்படி நடைபெறுகின்றன?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிஎன்பது தான் பதில்!

எதற்கும் அவன் அருள் இருக்க வேண்டும். அப்போது தான் அவனுடைய நினைவை ஊட்டும் இந்தக் கட்டுரை கூட உங்கள் பார்வையில் படும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

சிவாய நம் என்றிருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை!

–சுபம்–

ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் !!

The AGNI-III (Strategic System) passes through the Rajpath during the 60th Republic Day Parade-2009, in New Delhi on January 26, 2009.

The AGNI-III (Strategic System) passes through the Rajpath during the 60th Republic Day Parade-2009, in New Delhi on January 26, 2009.

Research Article  by S NAGARAJAN

Post No.2240

Date: 13 October 2015

Time uploaded in London: காலை 9-34

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 

ரிஷிகள் சரித்திரம்

 

ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் ஆகியவற்றை துரோணர் யாரிடமிருந்து பெற்றார்?

.நாகராஜன்

 

ராமாயணம், மஹா பாரதம் ஆகிய இதிஹாஸங்களும் நமது புராணங்களும் ஏராளமான ரிஷிகளின் சரித்திரத்தைக் குறிப்பிடுகின்றன.

மஹாபாரதத்தில் ஆதி பர்வம் மற்றும் சல்ய பர்வத்தில் வரும் இரு ரிஷிகளைப் பற்றிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

 

 

அக்னிவேசர்

இவர் அக்னியிலிருந்து ஜனித்தவர். இவர் தவ சக்தியுள்ள ஒரு ரிஷி. பரத்வாஜருடைய சிஷ்யர். இவர் சூத்திரம் இயற்றியவரில் ஒருவர்.

பரத்வாஜரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட ஆக்னேயாஸ்திர மந்திரத்தை பரத்வாஜருடைய புத்திரரும், தம்முடைய சீடருமான துரோணாசாரியாருக்கு இவர் உபதேசம் செய்தார்.

அதே போல, சாதாரண மனிதர்கள் மேல் பிரயோக்கிக்கக் கூடாததும், உலகையெல்லாம் அழிக்கக் கூடியதும், எப்போது பிரயோகித்தாலும் வீண் போகாததுமான “பிரம்மசிரஸ்” என்ற அபூர்வமான தேவாஸ்திரத்தையும் துரோணருக்குக் கொடுத்தார்.

Agni-II_missile

அதை துரோணர் அர்ஜுனனுக்குக் கொடுத்தார்.

அர்ஜுனனுக்கு மட்டும் துரோணர் இதை ஏன் கொடுக்க வேண்டும்? அதற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.

ஒரு நாள் அனைத்து சிஷ்யர்களுடனும் கங்கையில் குளிப்பதற்காக துரோணாசாரியர் சென்றார். குளிக்கும் போது, பலமான முதலை ஒன்று அவரது கணுக்காலைப் பிடித்தது. தன்னை விடுவித்துக் கொள்ளும் சக்தி அவருக்கு உண்டு என்றாலும் அவர் அப்படிச் செய்யவில்லை. “முதலை என்னைப் பிடித்து விட்டது. காப்பாற்றுங்கள்’ என்று கூக்குரலிட்டார். மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் அங்கும் இங்குமாக ஓடினர். அர்ஜுனனோ ஐந்து அம்புகளை வீசி நீருக்குள் இருந்த முதலையைக் கொன்று துரோணரை விடுவித்தான்.

இதனால் துரோணர் மகிழ்ந்தார்.

அர்ஜுனனுடைய திறமையை அனைவரும் அறிய வேண்டும் என்று எண்ணிய துரோணர், அனைத்து சிஷ்யர்களையும் அழைத்தார்.

துரியோதனன், சித்திரஸேனன், துச்சாஸனன்,விவிம்சதி, அர்ஜுனன், அஸ்வத்தாமா ஆகியோரை முன்னே வரச் சொல்லி, மண்ணால் ஒரு குழந்தையைச் செய்து அதை  சிஷ்யர்கள் பார்க்கும் போதே கங்கையில் போட்டார். அனைவரின் கண்களையும் துணிகளால் கட்டி, வில்லைக் கொடுத்தார். “கண் கட்டியிருக்கும்படியே ஜலத்தில் இருக்கும் பொம்மைக் குழந்தையை அடியுங்கள்” என்றார்.

மற்றவர்கள் பேசாமல் இருக்க, அர்ஜுனன் மட்டும் 15 பாணங்களினால் நீருக்குள் மூழ்கி இருந்த அந்த பொம்மையை அடித்தான்.

அனைவரிலும் அர்ஜுனனே திறமைசாலி என்ற முடிவுக்கு வந்த துரோணர் ‘பிரம்ம சிரஸ்’ என்ற அஸ்திரத்தை உபதேசித்தார். அஸ்திரம் விடுவது, திருப்பி வாங்குவது, அதன் சொரூப நிர்ணயம் ஆகிய மூன்றையும் விதிப்படி அர்ஜுனன் கற்றுக் கொண்டான். அர்ஜுனனிடம், “மனிதர்கள், அற்ப சக்தியுள்ளவர்கள் மேல் இதை பிரயோகிக்காதே! மனிதரல்லாத தேவர் முதலியோர் உன்னை வருத்துவாரானால் இதை நீ பிரயோகிக்கலாம்” என்றார் துரோணர். “உலகில் உன்னைப் போன்ற ஒரு வில்லாளி இன்னொருவன் இனிமேல் இல்லை” என்று புகழாரமும் சூட்டினார். (சல்ய பர்வம் 143வது அத்தியாயம்)

(மஹா பாரதம், ஆதி பர்வம், 140வது, 143வது அத்தியாயம்)

saras2

அரிஷ்டஸேனர் அல்லது ஆர்ஷ்டிஸேனர்

முன்னொரு காலத்தில் பிரம்மா தமது சக்தியால் “லோகாலோகம்” என்ற பர்வதத்தைப் படைத்து அருளினார். அங்கே ஒரு சிறந்த புண்ணீய தீர்த்தம் இருக்கிறது.

அந்த இடத்தில் அரிஷ்டஸேனர் என்னும் பெரும் முனிவர் கடுமையான தவம் செய்து பிராமணர் என்னும் உயர் பதவியை அடைந்தார்.

இவரைப் பற்றிய இன்னொரு செய்தி மஹாபாரதம் சல்ய பர்வத்தில் நாற்பத்தோராவது அத்தியாயத்தில் வருகிறது:

ஆதி காலத்தில் கிருத யுகத்தில் அரிஷ்டஸேனர் என்ற ஒருவர் இருந்தார். அவர் தனது குருவின் வீட்டில் இருந்து கொண்டு கல்வி கற்று வந்தார்.

அவ்வாறு வெகு காலம் கற்றும், குருகுலத்தில் இருந்தும், அவரது வித்தை ஒரு முடிவுக்கு வரவில்லை. வேதங்களும் முடிவு பெறவில்லை. பிறகு கவலையுடன் அவர் பெரும் தவம் புரிந்தார். அந்த தவத்தின் மூலம் வேதங்களை அறிந்தார்.

அவ்வாறு சிறந்த கல்வியையும், வேத ஞானத்தையும் அடைந்து மேலே சொன்ன தீர்த்தத்தில் இருந்து கொண்டு பெரும் பயனைப் பெற்றார்.

அவர் பிறகு அந்தப் புண்ணிய தீர்த்தத்திற்கு மூன்று வரங்களை அளித்தார்.

இன்று  முதல் சரஸ்வதி நதியினுடைய இந்த தீர்த்தத்தில் குளிப்பவன் அசுவமேத யாகம் செய்த பெரும் பயனை அடைவான்.

இன்று முதல் இந்த தீர்த்தத்தில் குளிப்பவர்களுக்கு பாம்புகளாலும், காட்டு மிருகங்களாலும் எவ்வித அபாயமும் நேரிடாது.

சிறிய முயற்சிகளைச் செய்பவனும் கூட இவ்விடத்தில் பெரும் பயனை அடைவான்.”

 

இந்த மூன்று வரங்களையும் கொடுத்து விட்டு அரிஷ்ட ஸேனர் சுவர்க்கத்தை அடைந்தார்.

 

                            (மகா பாரதம், சல்ய பர்வம் அத்தியாயம் 41)

 

சுபம்–

***